Sunday, October 21, 2018
அதிமுக மடையர்கள்
ஆயிரம் அறிவாளிகளோடு விவாதிக்கலாம் ஆனால் ஒரு மடையனோடு போராடுவது சிரமம்..
மொத்தமும் மடையனாக இருந்தால் என்ன செய்வது .. நானும் ராஜூவும் கையெழுத்திட்டு பெரும்பாவம் செய்துவிட்டோம் உதயகுமார் கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்ய அநுமதித்தாராம்,.. ஊழல் வழக்குகள் என திமுக தொடர்ந்து அடித்தாடுவதால் என்ன பேசுகிறோமென தெரியாமல் ஏதேதோ பேச தொடங்கியிருக்கிறார்கள் இந்த மரமண்டைகள்..
மாநில அரசு மறுத்து நீதிமன்றத்தில் பார்பனர்களின் பேச்சை கேட்டு வாதாடி குருமூர்த்தி வகையறாக்களை மகிழ்விக்க எண்ணி .. கடைசியில் மானங்கெட்டு போனீர்..
நீதிமன்றம் உத்தரவிட்டு அனுமதிபெற்றோமே,தவிர யாருடைய தயவும் இல்லை .. ஆட்சி அதிகாரம் இருக்கிறதென்பதற்காக முறைபடி கேட்டோம் தர மறுத்ததும் உடனே நீதிமன்றத்தை நாடி வெற்றி பெற்று .. மரணத்திலும் போராடி பெற்றவர் என்ற பெருமையோடு ஒய்வெடுக்கிறார் கலைஞர்..
..
அரைகுறைகள் கூட சொல்லியும் கேட்டும் தங்களை திருத்திக்கொள்வார்கள் இவர்கள் அடிமடையர்களாக இருக்கிறார்கள்.. இவர்கள் யாரிடமாவது அடிமையாக இருக்கவேண்டும் ..ஜெயலலிதா சசிகலா இப்போது பாஜகவின் மோடி .. என்ன பேசுகிறோமென்று தெரியவில்லை வகிக்க பதவியின் மாண்பு புரியவில்லை நல்வாய்ப்பில் தீடீரென கிடைத்தது யாரால் என்று கூட புரியாமல் பதவியை காத்துக்கொள்ள எதையும் செய்யும் ஈனபிறவிகள் தளபதியை குறைகூறுகிறார்கள்.. திமுக ஊழல் கட்சியாம் இதுவரை திமுகவை சேர்ந்தவர்கள் யாராவது ஊழலுக்காக தண்டிக்கபட்டிருக்கிறார்களா என்றால் இல்லை ஆனால் அதிமுககாரர்கள் மருங்காபுரி பேராசிரியர் பொன்னுசாமி நாகூர்பிச்சை .. ஏன் அதிமுக தலைமை ஜெயலலிதா இருமுறை முதல்வராக இருந்தபோது நீதிமன்றத்தால் தண்டிக்கபட்டு பதவி பறிக்கபட்டார் .. முதல்வராக சென்றவர் .. நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு சென்றவர் ஜெயலலிதாதான் ..
இப்போது உயிரோடிருந்திருந்தால் சிறையில் சசிகலாவோடு இருந்திருப்பார்..
..
தன்மானம் இழந்து பாசிச பாஜகவின் சொல்படி ஆடுகிற அதிமுகவினர் தங்கள் அடையாளத்தை இழப்பதோடு வெகுவிரைவில் சிறைக்கு செல்லபோகிறார்கள் .. திமுக தொடர்ந்த ஒவ்வொரு வழக்குகளும் உயர்நீதுமன்றம் ஏற்றுகொள்வதோடு .. சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டதும் எடப்பாடி செய்வதறியாது சம்பந்தி இரத்தசம்பந்தமில்லாதவர் என்று உளறி தன் உறவினருக்கு ஒப்பந்தம் வழங்கியதை அவரே ஒப்புகொள்கிறார்.. அதிமுகவின் ஒவ்வொரு அசைவும் பாஜகவின் திட்டமிடுதலோடு செல்வதை அறியாமல் அழிவின் பாதைக்கு கொண்டு கட்சியை கொண்டு செல்கிறார்கள்.. அதிமுகவை அழித்துவிட்டு பாஜக வர முயற்சிப்பது அறியாமல் இந்த அடிமைகள் தலையாட்டி பொம்மைகளாக இருக்கிறார்கள்..
..
இப்போதிருக்கிறவர்களுக்கு திமுகவையோ தலைவர் தளபதியையோ பேசவோ விமர்சிக்கவே தகுதி இல்லை..
எங்கள் எதிரியாய் இருப்பதற்கு கூட தகுதிவேண்டும் நிச்சயமாய் இன்றைய அடிமை அதிமுகவினர்க்கு இல்லை..
..
அஞ்சாமை திராவிடர் குணம்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment