Thursday, October 18, 2018
மனிதம் காப்போம்
லவ் ஜிஹாத் என்று ஒன்றும் இல்லை. கேரளாவில் விசாரணை செய்த பிறகு தேசிய புலனாய்வு விசாரணை குழு அமைத்த விசாரணை முடிவில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாதியா வழக்கு உட்பட 11 வழக்குகளை ஆய்வு செய்த பிறகு இந்த அறிவிப்பை தேசிய புலனாய்வு குழு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தாங்களாகவே விருப்பத்திற்குரிய ஒருவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டார்களே அல்லாமல் லவ் ஜிஹாத் போன்ற எந்த ஒரு காரணமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
..
லவ்ஜிஹாத்.. கலவரத்தை உண்டாக்க மதமோதலை வெறுப்பை மக்களிடையே விதைக்க ஆர்எஸ்எஸ் என்ற மனிதகுல விரோத சக்திகள் கிளப்பிவிட்டதே லவ்ஜிஹாத்..ஒரு பெண் மதம் மாறுகிறாள் அதற்கு பிறகு தான் விரும்பியவரை திருமணம் செய்கிறார் ..இதில் இந்து முஸ்லிமாக மாறினாலோ அல்லது முஸ்லிம் இந்துவாக மாறினாலோ யாருக்கு என்ன..? சம்பந்தப்பட்டவர்கள் தெளிவாக இருந்தால் இந்த பாசிச சக்திகளால் எதுவும் செய்துவிட முடியாது .. ஹாதியா வழக்கில் அவரின் தந்தை இந்துத்துவாவை துணைக்கழைத்ததும் லவ்ஜிஹாத் என்று பெயரிட்டழைத்ததும் பெரும் சர்ச்சையை உருவாக்கி .. கேரள உயர்நீதிமன்றம் இவர்களுது திருமண உறவை ரத்து செய்தும் விடாபிடியாக தொடர்ந்து போராடி உச்தநீதிமன்றத்தில் திருமணம் ரத்துசெய்தது செல்லாதென்று தீர்ப்பை பெற்றும் அவர் மீதான விசாரணை தொடர்ந்தது .. மத்திய தேசிய புலானாய்வு துறை ஆய்வுமேற்கொள்ளவேண்டுமென உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து இப்போது அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது..
..
எந்த வடிவிலாவது கலவரத்தை மததுவேசத்தை நுழைத்து இந்த மண்ணை கலவர பூமியாக்கி இந்துவும் முஸ்லிம் அடித்துக்கொண்டு இருதரப்பினரும் வழக்கு சிறையென்று சென்றுவிட்டால் நாம் சொகுசாக வாழ வழிசெய்யுமென பார்பன ஆர்எஸ்எஸ் கும்பல் தொடர்ந்து திட்டம்தீட்டி செயல்படுகிறது ..மதம் தலைக்கேறினால் என்ன செய்கிறோமென தெரியாமல் குற்றசெயலில் ஈடுபட்டு சிறையில் வாடுகிற நிலை .. குறிப்பாக இளைஞர் சமூகத்தை வழிகெடுத்து குளிர்காய்கிற கூட்டம் இந்த பாசிசம்.. தனிநபரின் விருப்புவெறுப்பில் மதமோ சாதியோ அரசியல்கட்சியோ தலையிட கூடாது மதத்தை சாதியை வைத்து அரசியல் செய்கிற கேடுகெட்டவர்களை அடையாளம் கண்டு துரத்தியடிப்போம்..
மதம் தலைக்கேறினால் மனிதம் போகும்
..
#மனிதம்காப்போம்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment