Monday, October 29, 2018
சாதிமத பேதமற்ற ..
திமுக அதிமுக தவிர்த்து மற்ற கட்சிகளோடு கூட்டணி.. அன்புமணி ராமதாஸ்
ஏற்கனவே யாரும் சீண்டவில்லை ராமதாஸ் முயன்றும் யாரும் முன்வராமல் போனது பழங்கதை.. ஏன் யாரும் பாமகவை கண்டுக்கொள்வதில்லை என்ற கேள்விக்கு விடை ராமதாஸ் என்ற வன்னியருக்கு தெரியும்
தன்னை சமூகநீதிக்காரனாக .. எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தலைவராக வடிவமைக்க மறந்து போனார்.. தான் சார்ந்த சாதிய நிழலைவிட்டு வெளியே அவர் முயற்சித்ததே இல்லை .. அன்புமணியை தர்மபுரியில் நிறுத்தவேண்டும் பொன்னரகத்தில் நிறுத்த தோன்றிவருக்கு .. வன்னியர் அதிகமில்லாத ஏதாவது ஒரு தொகுதியில் நிறுத்தி தான் சாதி சங்கத்தை நம்பி இல்லை என சொல்லியிருக்கவேண்டும் .. தோற்று போயிருப்பார் ஆனாலும் சாதிய சாயலிலிருந்து மீள நினைக்கிறாரென்ற தோணல் மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கும்.. எப்போதெல்லாம் தங்கள் பலமிழக்கிறார்களோ அப்போதெல்லாம் சாதிய சண்டைகளும் மோதல்களும் கலவரமும் கொலைகளும் நடக்கின்றன் ..ஏறக்குறைய பாசிசபாஜகவின் அஜந்தா இது தான் ..எப்போது எதிரணியில் இருக்கிறதோ அப்போதெல்லாம் பாகிஸ்தான் சதி என்பார்கள்.. குண்டுவெடிப்பு நிகழும் மதமோதல்கள் நடக்கும்
..
சாதிய சங்கங்களும் மதத்தை முன்னெடுக்கிற அமைப்புகளும் இதுவரை சாதித்ததென்ன .. மதரீதியாக மக்களை பிரிப்பது அல்லது மதத்திற்குள் சாதி ரீதியாக பிரிப்பது ..இவர்களால் தங்கள் வளையத்தை தாண்டி எப்போதுமே வர முடியாது இவர்கள் அடித்தளம் சாதி மதத்தால் ஆனது .. அதேபோல் இன்றைக்கு நிறைய இஸ்லாமிய அமைப்புகள் தோன்றியதன் நோக்கமும் செயலும் நிறைவேறியிருக்கிறதா என்றால் இல்லை பெரிய கட்சிகளிடம் பேரம் பேச மறுத்தால் சிறு சிறு குழுக்களாக வாக்குகளை பிரிக்க உதவியிருக்கிறதே தவிர இவர்கள் சார்ந்த சமுதாயத்திற்கோ/ சமூகத்திற்கோ பயன் ஏற்பட்டிருக்கிறதா ..இந்த நிலை இந்திய அளவில் பாசிசத்திற்கு பலனளித்திருக்கிறது .. பாஜக வெற்றிப்பெற்ற பல தொகுதிகளில் சில சாதீய மத அமைப்புகள் வாக்குகளை பிரித்து பாசிச பாஜகவிற்கு உதவி/துணை புரிந்திருக்கிறது ..
..
தமிழகத்தில் சாதீய கட்சிகளை வளர்த்ததில் பெரும் பங்கு திராவிட கட்சிகளுக்கு உண்டு என்பதை மறுக்கவில்லை வாக்கு அரசியலில் இது தவிர்க்க முடியாதென்றாலும் கட்டுக்குள் வைத்திருக்கிறது .. அதனால் தான் சாதீய/ மத நிலைபாடு கொண்டவர்களால் பேரம் பேச முடியவில்லை வருங்காலங்களில் சாதீய/மத ரீதியாக செயல்படும் அமைப்புகளை புறந்தள்ளி வேண்டும் .. திமுகவின் மிகப்பெரிய சவாலாக இது இருக்குமென எண்ணுகிறேன் நிறைய எண்ணிக்கையில் போட்டியிடுதல் மிக முக்கியம் .. பேரம் பேசும் தந்திரங்களை இனங்கண்டு ஆரம்பத்திலேயே விலக்கி வைக்கவேண்டும் அதேவேளை அந்தந்த சமூக/சமுதாயத்தின் நலன்கள் அவர்கள் உரிமைகள் சம உரிமைக்கான சமூகநீதிக்கான வரைமுறைகளை கருத்தில் கொள்ளல் வேண்டும் .. அரசியல் வியாபாரிகளிடமும் சமூகத்தை அடகுவைப்போரிடமும் கவனமாக இருக்கவேண்டும் .. எல்லோருமே தங்களை சமூக/சமுதாய பிரதிநிதி என சொல்லிக்கொண்டாலும் .. வாய்ப்பளிக்க வேண்டுமெனில் திராவிட இயக்கத்திலேயே அதற்கான பிரிதித்துவம் உண்டென கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பை தரலாம் ..
..
கொள்கையிலிருந்து மாறி சமரசம் என்ற பெயரில் விட்டுகொடுத்தால் அது பேரியக்கத்தின் கொள்கை வீழ்ச்சியாகவே அது முடியும் .. தமிழகத்தின் எதிர்காலத்தை நல்லதொரு சமுக சூழலுக்கானதாக சாதி மத பேதமற்றதொரு விடியலுக்கானதாக மாற்ற திமுகவால் மட்டுமே முடியும் ..
..
சாதி மதம் பேசுவோரை புறந்தள்ளுவோம்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment