Saturday, October 20, 2018

மதவெறி அரசியல்

நழுவல்.. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன் அதே வேளை ஐதீகத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.. ரஜினி.. உச்சநீதிமன்ற தீர்ப்பை மக்கள் ஏற்கவில்லை.. அதே வேளை நான் சபரிமலைக்கு செல்லாததால் கருத்துகூற விரும்பவில்லை கமல்... உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது பாஜக .. முஸ்லிம் பெண் ரெஹானா எப்படி வரலாம்.. .. சபரிமலையை வைத்து பாஜக காலூன்ற நினைப்பதும் அதை தேசிய அரசியலாக்க முயல்வதும் தெரிகிறது பெண்கள் நீண்டகாலமாக போராடி பெற்ற உரிமையை மதத்தை காரணம்காட்டி கலவரத்தை உண்டாக்க நினைக்கிற கேடுகெட்ட செயலை கைரளியர்கள் புரிந்துக்கொண்டிருக்கிறார்கள் அதனால் தான் மதமாறிய பெண் வீண்சர்ச்சைகளை கையிலெடுத்து வெளிச்சம் காண்கிறவரென்றும் இந்துபெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி பெற்றதை தடுக்க கருவியாக செயல்படுவதும் கேரள தொலைகாட்சிகள் விவாதித்து முகத்தை கிழித்தெறிகிறது .. .. சில நடிகர்கள் தங்கள் கருத்தை சொல்லியிருக்கிறாக்கள் போவது சரி என்கிறவரை அல்லது தவறென்கிறவரை நம்பலாம் இவர்கள் குழப்பவாதிகள் தெளிவற்றவர்கள் அடுத்தவர் நம்பிக்கை தலையிட கூடாதென்றால் அடுத்தவர் உரிமையிலும் தலையிட கூடாதென்கிற அடிப்படை அறிவுகூட இல்லாமல் கதைக்கிறார்கள் .. ஐதீகம் என்பது காலத்திற்கேற்ற வகையில் மாறுதலுக்கு உட்பட்டிருக்கிறது முன்பு பிராமணன் என்பவன் பிச்சையெடுத்துதான் உண்ணவேண்டுமென்றிருந்த ஐதீகம் மாறவில்லையா .. பிராமணனை தவிர கருவறைக்குள் யாரும் நுழைய கூடாதென்ற விதிகள் மாறவில்லையா.. ஒரு சில குடும்பங்களே நிர்வகிக்கவேண்டும் அவர்கள் தான் சாமிசிலையை தலையில் சுமக்கவேண்டுமென்ற ஐதீக நிலைபாடு மாறவில்லையா.. ஏன் விதிகளும் மரபுகளும் ஐதீகங்களும் காலம் செய்த மாற்றங்களில் மாறியே வந்திருக்கிறது .. கருவறைக்குள்ளேயே கசமுசா செய்கிற போது.. எங்கே போனது ஆச்சாரம் தீட்டென்று சொல்லி வீட்டுக்குவெளியே அமரவைத்த காலமெல்லாம் கரையேறிவிட்டது .. .. அங்கொரு காலும் இங்கொரு காலும் வைத்து அரசியலில் பயணிக்கமுடியாது ..அரிதாரங்கள் தங்களை அரசியல் அரைகுறையாக காட்டிக்கொள்கிறார்கள்.. உச்சநீதிமன்றத்திற்கு தெரியாதா.. ஆகமவிதிகள் ஆச்சாரங்கள் ஐதீகங்கள் எல்லாம் கால ஓட்டத்தில் அடித்துச்செல்லபட்டிருக்கிறதென்ற உண்மை.. மதநம்பிக்கையில் தலையிட கூடாதென்றால் அதைவைத்து அரசியல் செய்வது கூடுமா.. வாக்கு அரசியலுக்காக அதிகாரபோதைக்காக .. குறிப்பிட்ட சாதியினரை தூண்டி வேல் கம்போடு தெருவில் நிறுத்தி பதட்டத்தை உண்டாக்குகிற செயல் பக்கா அயோக்கியத்தனம் .. மதம் பேசும் அரசியல் மானிடர்க்கு ஆபத்தை தரும்.. கடவுள் பக்தி எல்லாம் வீடுகளுக்குள் உங்கள் மனங்களுக்குள் இருக்கட்டும் பன்மை முகத்தோடு பழகும் கலாச்சாரம் நம்முடையது .. மனிதம் காப்போம்,.. மடையர்கள் இனங்கண்டு புறக்கணிப்போம் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment