Friday, October 26, 2018
விடுதலை வேண்டும்
வரலாற்று ஆவணமாகும் இந்த புகைப்படம்..
திரு.ராகுல் கைதாகி காவல்நிலையத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இன்று உலகம் முழுதும் வைரலாகிறது .. நுணுக்கமாக இந்த படத்தின் அரசியல் அறம் பேசுகிறது பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்தில் காங்கிரஸ்காரர்கள் கைதான நிகழ்வை போல இந்நிகழ்வு வரலாற்றில் பேசபடும் .. இந்த பாசிச ஆட்சிக்கெதிராக சர்வாதிகாரத்தனத்தோடு செயல்படும் மோடி அரசிற்கெதிரான ஆயுதமாக பேசபடும் புகைப்படம் இது..
..
சிபிஐ இயக்குனரை மாற்றியதற்கும் ரஃபேல் விமான ஊழலை விசாரணையை தன் விருப்பத்திற்கேற்ப நடத்தவே இயக்குனர் மாற்றபட்டிருக்கிறாரென்று சிபிஐ அலுவலகம் முற்றுகையை அடுத்து ராகுல் கைதானர் .. உச்சநீதிமன்றம் கூட தன் கவலையை பதிவு செய்திருக்கிறது.. சிபிஐ ஒரு தன்னாட்சி புலனாய்வு அமைப்பு (நாம் அப்படிதான் நம்பவேண்டும்) இயக்குனர் நியமனத்திற்கு சில விதிமுறைகள் உண்டு ஐந்து பேர் கொண்டு கமிட்டி பரிந்துரையும் தேர்வுநிலையில் உள்ள தகுதியும் அடிப்படையாக கொண்ட பரிந்துரையை உள்துறை அமைச்சகம் பரிசிலித்து அளிக்கும் .. சிபிஐ இயக்குனரை நீக்க அரசிற்கு அதிகாரமில்லை அதையும் உள்துறை அமைச்சக பரிந்துரையும் ஐந்துபேர் கொண்ட கமிட்டி முடிவும் முக்கியம் இங்கே சர்வாதிகாரமாக இந்த முடிவை எடுத்திருக்கிறார் என சுப்ரமணிய சுவாமி கூட எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.. நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா..
..
ராகுல் மிக நிதானமாக சிறப்பாக செயல்படுகிறார் இந்த பாசிச ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதில் உறுதியோடு இருக்கிறார் இந்திய பன்முகதன்மைக்கெதிராக ஆர்எஸ்எஸ் கும்பல் நடத்தும் யுத்தத்தை வென்று காட்டவேண்டுமென்ற வேட்கையோடு .. எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பை உறுதி செய்ய சில விட்டுகொடுத்தல் என்ற நிலைக்கும் தயாராக இருக்கிறார்.. எல்லா மாநிலங்களிலும் பாஜக மீதான எதிர்ப்பை ஒருங்கிணைத்தல் அவசியமாகிறது பாஜக ஆளும் மாநிலங்களிலும் கூட மக்கள் பாசிச பாஜக அரசின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் மக்களை சுரண்டி கார்ப்பரேட் முதலாளிகளின் காலில் கொண்டுப்போய் கொட்டுகிற இந்த அரசை விரட்ட காலம்பார்த்த காத்திருக்கிறார்கள் .. பணமதிப்பிழப்பு என்ற கோமாளித்தனத்தால் இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் சிரிக்கிறது .. விலைவாசியோ விண்ணை தொடுகிறது விடுதலை இந்தியாவில் மிக மோசமான காலகட்டத்தில் இருக்கிறோம் ..
..
இன்றைய ஒரே நம்பிக்கையாய் திர. ராகுல் தெரிகிறார் ..நாட்டின் நலன் கருதி சில சமரசங்களை ஏற்று விட்டுகொடுத்தாயினும் இந்த பாசிச பாஜக அரசை வீழ்த்த முனைவோம்..
..
புதிய விடுதலைப்போருக்கு தயாராவோம்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment