Saturday, October 27, 2018

தளபதி.ஸ்டாலின்

தளபதி.ஸ்டாலின் தலைவராவதை தடுக்க ரஜினியால் மட்டுமே முடியும் .. கேட்கும் போது சிரிப்பு வருகிறது .. இதுவரை களமே சந்திக்காத ஒருவரை திமுகவோடு சரிக்குமே சமமாக பேசுவது கூட ஒருவகை அயோக்கியத்தனம் .. கிறுக்கன் கூட சொல்ல மறுப்பதை அரசியலில் ஆயிரம் வாக்குகள் கூட வாங்க முடியாதவர்கள் சொல்வதை கேட்டு கருத்துகேட்கிறது ஊடகங்கள் .. உண்மையான நிலவரம் மக்களின் மனநிலை என்ன என்பதை அறிந்துக்கொண்டே குட்டையை குழப்புகிறது .. .. இந்தியா டுடே கருத்துகணிப்பில் கூட கடைசி இரண்டாவது இடத்தை (6% விழுக்காடு)பிடித்திருப்பவரோடு 41% விழுக்காடு பெற்று முதல் இடத்தில் இருப்பவரோடு போட்டியாக கருதவேண்டியிருக்கிறதெனில் மூளைகோளாறை தவிர வேறேதும் இல்லை.. காந்தியின் பெயர் சொல்லி பிழைக்கும் பாஜக அனுதாபி மணியன் .. பக்கத்து வீட்டுகாரனுக்கு கூட தெரியாத ஆள் இவரையெல்லாம் கருத்து சொல்ல வைப்பதும் அதை விவாதப் பொருளாக்குவதும் மகா கேவலம் .. .. இன்றைய சூழலில் தமிழகத்தின் மிக நம்பிக்கையுடைய அரசியல் தலைவராக நேர்மையான அரசியலை அறம் சார்ந்து நிற்பதே ஜனநாயகத்தின் உயிர்நாடியென நம்பி வாய்ப்புகள் நிறைய வந்தபோதும் கூட .. மக்கள் செல்வாக்கோடு அவர்களின் நேரடி தேர்வின் மூலமே அதிகாரத்தை அடைய வேண்டுமென்ற பிடிவாதத்தோடு எல்லா நேரங்களில் மக்கள் பணியே தன் தலையாய வேலையென சுழன்றுக்கொண்டிருக்கும் தளபதி அவர்களோடு .. அரசியல் அரிச்சுவடியே தெரியாத அரிதார நம்பிக்கையோடு முகம் மாற்றி ஏமாற்று வித்தை புரிவோரை சமன்படுத்தி பேசுவதை எப்படி ஏற்க முடியும் .. எழுபதுகளில் தமிழனை ஆட்கொண்டிருந்த சினிமா மாயை / கவர்ச்சி இப்போதில்லை ஒருவித போதையோடிருந்த சினிமாவின் நிழல் ஏற்படுத்திய அழுத்தம் தமிழ் சமூகத்தில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தன் அடர்த்தியை இழந்து சுயமிழந்து .. ரசிப்போம் கைதட்டுவோம் திரையரங்கை விட்டு வெளியே வரும் போதே களைந்துவிடுமோமென்ற தெளிவு பெற்றிருக்கிறது .. சினிமாகாரர்கள் அரசியல் பேசினாலோ செயல்பட்டாலோ ஒருவகை நகைச்சுவையோடு கடந்து போக தெரிந்திருக்கிறது திரையரங்களில் அரசியல் தலைமையை தேடிய காலம் மலையேறிவிட்டது.. களம் காண வேண்டும் களப்பணிகளில் தீவிரம் காட்டவேண்டும் அரிதாரம் கலைந்து நீண்ட அரசியல் பயணம் வேண்டும் மக்கள் இன்னல்களை கவலையோடு கண்டு அதற்கான தீர்வை தர முடியுமென்ற நம்பிக்கையை விதைக்கவேண்டும் .. அதைவிட மக்களிடம் நன்மதிப்பை இவன் வந்தால் நல்லதை செய்வானென்ற நம்பிக்கை பெற்றிருக்கவேண்டும்.. இவையாவும் தளபதியை தவிர இங்கே தமிழகத்தில் யாரிடமும் இல்லை அதைதான் தமிழகத்தை ஆய்வுசெய்கிற அரசியல் விமர்சகர்கள் .. கணிப்பு நடத்துகிற ஊடகங்கள்/இயக்கங்கள் வெளிப்படையாகவே ஒருமித்த குரலில் சொல்கின்றன.. .. தமிழர்களின் ஒருமித்த குரல் தளபதி தமிழதத்தை ஆளவேண்டும் .. நடக்கும் நடந்தே தீரும் .. வெளுக்கும் விடிந்தே தீரும்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment