Sunday, September 30, 2018
ரஃபேல் ஊழல்
இந்தியா
உலகில் நான்காவது மிகப்பெரிய ராணுவம் என்று பேசப்பட்டு வருகிற நிலையில் நேற்றைய தினம் ஆலந்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன பேசுகிறார் என்று யாருக்குமே புரியவில்லை... கோபம் தவிர அவரது பேச்சில் எதுவுமே புரியவில்லை
அது மட்டுமல்லாமல் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட எந்த துப்பாக்கிகளுக்கும் தோட்டாக்கள் இல்லையாம். ராணுவ டேங்கர்களுக்கு பயன்படுத்த குண்டுகள் இல்லையாம்.
ஹெலிக்காப்டர் உள்ளது. ஆனால் பயன்படுத்த குண்டுகள் இல்லை என்று வெளிப்படையாகவே பேசிக்கொண்டு இருக்கிறார்... தளவாடங்கள் பற்றாக்குறை என்ற செய்தி முன்பே கசிந்ததென்றாலும் அதை பகிரங்கமாக ராணுவ அமைச்சரே வெளியிடுவது நமது பலவீனத்தை காட்டும் என்ற பொது அறிவுகூட இல்லை.. சர்வசாதரணமாக ஊறுகாய் இல்லையென்பதைப் போல பேசுகிறார் காங்கிரஸ் கட்சி தான் இது போன்ற குறைபாடுகளுக்கு காரணம் என்று கூறுகிற நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் கட்சியை குறை கூறவேண்டும் என்ற நோக்கில் தேசத்தை காட்டி தருகின்ற தேசபக்தி தேவைதானா ? என்று சமூக வலைத்தளங்களில் குரல் எழுகிறது...
..
HAL ஊழியர்கள் அதிகாரிகள் நிர்மலா மீது கோவத்தில் இருப்பதாக செய்திகள் வெளியிட்டிருக்கிறது (Free press )
..
..Engineers and other staff of the Hindustan Aeronautics Limited are upset over Defence Minister Nirmala Sitharaman rubbishing the capability of her own ministry’s public sector undertaking in trying to justify the Modi government in the Rafale aircraft deal.
..
மற்றொரு பேட்டியில்
ராகுலும் பிரான்ஸ் முன்னாள் அதிபரும் ரபேல் ஊழலை பெரிதாக்குவதாக அதை வைத்து அரசியல் செய்வதாக சொல்கிறார்.. ஏற்கனவே திவாலான ஒரு கம்பெனியை ₹9000 கோடி கடன் வைத்திருந்ததை வாங்கிய அனில் அம்பானி.. வெறும் ₹5 லட்சம் முதலீடு செய்து ₹30,000 கோடி ரூபாய் அரசு ஒப்பந்தத்தை பெற முடிகிறதே அது எப்படி என்ற கேள்விக்கு பதில்தராமல் ..பிரதமரின் நண்பராக இருந்தால் 5லட்ச முதலீட்டில் 30,000 கோடிக்கு முன் அனுபவமில்லாமல் எதையும் செய்யமுடியும் வசமாக மாட்டிக்கொண்டது நிர்மலா சீதாராமன் பேச்சில் தெரிகிறது ..
எந்த அனுபவமும் இல்லாமல் அரசின் உயர்பதவிக்கு வர முடிந்த அவரால் இதிலிருந்து உருவ முடியவில்லை .. தெளிவற்ற குழப்பத்தில் இருப்பதை அவரின் பேச்சு காட்டிக்கொடுக்கிறது ..
..
பாஜகவின் ஊழல் உலகறிய செய்ததில் ராகுல் வெற்றிப்பெற்றிருக்கிறார் ..மோடி என்ற மாயை கலைந்துபோனது ..
..
ஆலஞ்சியார்
Thursday, September 27, 2018
நெறிக்குறவர்கள்
கானா பாடலால் தமிழ் சிதைகிறது தாய் மொழியை நரிக்குறவ மொழியாக ஆக்கிடாதீங்க : சீமான்..
..
முதலில் நரிக்குறவர்கள் என்றழைப்பதே தவறு அவர்கள் நெறிக்குறவர்கள் என்கிறார் ஆய்வாளர் ராஜேந்திரன் .. அவர்கள் வாழ்வியல் முறை நெறிபடுத்தபட்டதென்று தன் ஆய்வின் முடிவில் சொல்கிறார்.. ஆம் ..
அவர்கள் தங்களுக்குள் ஒரு வட்டத்தை வரைந்துக்கொண்டு வாழ்பவர்கள் சேர்ந்தே வாழும் பழக்கமும் .. இரவு எத்தனை மணி ஆனாலும் தங்கள் வசிப்பிடத்திற்கு வந்துவிடவேண்டும் .. அதிலும் பெண்கள் அந்திமயங்கும் நேரத்திற்குள் வந்துவிடவேண்டும் ..மீறினால் கூட்டத்திலிருந்து விலக்கிவிடுவார்களென நிறைய சேதிகளை சொல்கிறார்.. சேர்ந்து வாழ்தல், பகிர்ந்துண்ணல், நாடோடி வாழ்க்கை முறையை .. உடை உணவு பழக்கவழங்களில்
தனித்துவமாய் தெரிதல் நம்பிக்கையோடு வாழ்தல் பழைமை சிதைக்காமல் நேர்மையோடு நாணயமான.. தங்களுக்கென்ற நெறிமுறைகளை வகுத்து அதன்படி வாழ்பவர்கள்
அவர்கள் நெறி குறவர்களே தவிர நரிக்குறவர்கள் அல்ல..
அவர்கள் ஒரே இடத்தில் தங்காமல் அடிக்கடி இடம்பெயர்வதால் அரசின் திட்டங்களும் ..சலுகைகள் கிடைப்பதில்லை இப்போதுதான் கொஞ்சம் மாறி குழந்தைகளை கல்விக்காகவும் தங்களின் உரிமைகளை உணர்ந்து நகர்தலை நிறுத்தி ஒரே இடத்தில் வாழ தொடங்கியிருக்கிறார்கள்..
..
நரிக்குறவர்கள் மொழியை தீண்டதகாததைப் போல நினைக்கிறார் அவர்கள் பல இடங்களில் தங்கி பலமொழி கலப்பில் பேசி புதிய மொழிவழங்கத்தை கொண்டிருக்கிறார்கள் எந்தமொழியையும் தாழ்வாக எண்ணுகிற மனநிலை என்பது கூட தரங்தாழ்ந்தது பைத்தியக்காரத்தனம் .. கானா பாடல்கள் அந்த வட்டார /பகுதி மக்களின் மொழியில் பேச பாடபடுவது .. இப்போதும் கூட சில கிராமிய பாடல்களில் விரசங்களும் ஏன் பேச்சுவழக்கில் கூட வந்து விழும் படுகொச்சையான வார்த்தைகளும் அந்த மொழியை கெடுப்பதில்லை .. அது மிகப்பெரிய தாக்குதலை மொழி மீது செலுத்துவதில்லை
கர்நாடக இசை தமிழிசையை சிதைத்ததைப்போல கிராமப்பாடல்களும் Folk songs, கானா பாடல்களும் செய்யவில்லை.. நெறிக்கட்டத்தனமாக நாளொரு பொய்யை பேசி திரியும் செபஸ்டினின் உளறல் இது .. தமிழுக்கு முழு காப்பிரேட் வாங்கி வந்திருக்கிறாரா.. முதலில் தன்னோடு வந்திருக்கிற அரைக்குறைகள் தெளிவாக தவறின்றி தமிழில் எழுத பேச பயிற்சி தரட்டும் பிறகு மற்றவர்களைப் பற்றி கவலைப் படலாம்
...
அதுசரி இவரின் முப்பாட்டன் முருகனின்..?
வள்ளி யார் 😋
..
ஆலஞ்சியார்
Wednesday, September 26, 2018
இனம்
நண்பர் ஒருவர் இனத்தின் அடையாளம் மொழி என்றார்.. இல்லை ஒரு இனத்தின் அடையாளங்களில் பிரதான பங்கை மொழி வகிக்கிறது..
மொழி என்பது ஊடகம் அல்லது தொடர்புக்கானது..
ஒரு இனத்தில் பல்வேறு மொழி பேசுகிறவர்களை வரலாற்று நெடுக காணமுடியும் ஆனால் இனத்தால் அவர்கள் தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கிறார்கள்..
..
யூத இனத்தை எடுத்துக்கொண்டால்.. யூதர்கள் பாலஸ்தீனியர்கள் சாமாரித்தர்கள் இவர்கள் யாவரும் யூத இனத்தை சேர்ந்தவர்கள்.. இப்போது கூட பிரதான எதிரியாக இருக்கிற பாலஸ்தீனியர்களும் யூதர்களும் தங்களை யஹூத் என்றே அறியப்படுகிறார்கள்.. ஆனால் அவர்களின் மொழி வழக்கம் வெவ்வேறாக இருக்கும்.. யூதமொழியை அறிந்தவர்களாக ஆனால் அரேபிய மொழியை ஏற்றுக்கொண்டவர்களாக இருப்பார்கள் அவர்கள் மதநம்பிக்கையும் அவர்களை வெவ்வேறாக்கியது.. இப்போது கூட சில ஆய்வாளர்கள் யூதர்களின் வழிதோன்றல்கள் தான் ஆரியர் எனச் சொல்கிறார்கள்.. அதற்கவர்கள் சொல்லும் பிரதான காரணம்.. யூதர்களின் புனிதநூல் என அறிய படுகிற தோரா விலும் கிருஸ்துவர்களின் பழைய ஏற்பாடாகவும் யூதர்களின் நூலாகவும் இருந்த ஏபிரேய விவிலியம்
ஏன் இஸ்லாமியர்களின் வேதநூலான குர்ஆனிலும் யூத இனத்தை மேன்மையானவர்கள் என்கிறது.. அதைதான் யஜூர் வேதமும் ஆரியர்களை மேன்மையானவர் என சொல்லி வர்ணத்தை தருகிறது.. தலையில் பிறந்ததாக சொல்லப்படுகிறது.. மனிதனை ஏற்றதாழ்வானாக போதிக்கிறது .. இந்திய சமவெளியை நோக்கி ஆடுகளை மேய்க்க
வந்த வந்தேறி கூட்டம் இங்கு பரப்பியதே மதம்.. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் இயற்கையை போற்றிய வழிபாடு இருந்ததாகவும் ஆரிய வரவிற்கு பிறகு அடுக்குமுறை வர்ண கோட்பாடு வந்ததாகவும் நிறைய ஆய்வுகளில் சொல்லபடுகிறது ஆனால் சிலர் (மறுக்கபட்டதும் உண்டு) காஷ்மீரில் இருந்து வந்ததே இந்துமதமென்றும் ஒரு நம்பிக்கை உண்டு அதைதான் இப்போதைய
சமய வழிபாட்டாளர்கள் சொல்லி வருகிறார்கள் .. உமாபாரதி போன்றவர்கள் சொல்லும் விடயம் இது..
..
சரி..
நம் விடயத்திற்கு வருவோம்
இனத்தின் நிறைய மொழிகளில் ஆதிக்கம் உண்டு
பார்ஸி இனத்தில் கூட பார்ஸி மொழி பேசுகிறவர்களும் தாரி மொழி மற்றும் அரபு பேசுகிறவர்களும் உண்டு.. ஆனால் அவர்கள் இனத்தால் பார்ஸிகள் என்றே அழைக்கப்படுகிறார்கள்.. இங்கே திராவிடர்களை குறிப்பிட வேண்டும் திராவிடர்கள் இயற்கை வணங்கிகள் என்றும் உலகின் முதல் இன தோன்றல் என்றும் சொல்லப்படுகிறது பழைமை நாகரீகம் என அறியபடுகிற சிந்து சமவெளி நாகரீகமே திராவிட நாகரீகம் என்றும் அங்கு வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் தமிழர்கள் என நிறைய ஆய்வு முடிவுகள் பறைசாற்றுகிறது..
திராவிடத்தின் மூலமொழியாக தமிழே இருந்தது என்றும் .. பின் வட்டார வழக்கு சொற்களால்..பிரிந்து கன்னடம் தெலுங்கு மலையாளம் ஒரிய என பல்வேறு மொழி ஒலி வடிவங்களை பெற்றதாக சொல்லப்படுகிறது..
..
உலகின் ஒவ்வொரு இனமும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எடுக்கும் முதல் ஆயுதம் கலாச்சாரம் என்கிறார் இலங்கை சேர்ந்த பண்பாட்டு செயல்பாட்டாளர்
டாக்டர்.சி.சிவமோகன் ..
ஆம்..ஒரு இனத்தின் அடையாளம் என்பது அவர்களின் வாழ்வு முறை கலாச்சாரம் பண்பாடு அவர்களின் பழமையான பழக்கவழக்கங்கள் அவர்களது நாகரீகம் இவைகளே அதோடு அவர்களின் வழக்கு மொழியும் பிரதான பங்கை வகிக்கும்..
..
#இனம்_ஒருமனிதனின்அடையாளம்..
..
ஆலஞ்சியார்
Tuesday, September 25, 2018
தமிழ்..
ஒரு இனத்தின் மீதான தாக்குதலுக்கும் ஒரு மொழியின் மீதான தாக்குதலுக்கும் இடையே மெல்லியதாய் கோடு மட்டுமே தென்படும்.. இனத்தின் மீதான தாக்குதலை புரிந்துக்கொள்ள நீண்டநாட்கள் தேவைப்படும் ஆனால் மொழி மீதான தாக்குதலை சட்டென்று உணர்ந்துவிடுவீர்..
மொழியியல் ஆய்வாளர் ரிச்சர்ட் மெடோ இனத்தின் மீதான தாக்குதல் நீண்டகால போர்முறை என்றும் ..
மொழியின் மீதான தாக்குதல் திடீர் தாக்குதலைப்போல நிலைக்குலைய செய்யுமென்றும் சொல்கிறார்
..
ஒரு இனத்தை அழித்தொழிக்க வேண்டுமெனில் அதற்கு நீண்டகால திட்டமிடல் அவசியம்.. இங்கே திராவிட இனத்தின் மீதான தாக்குதலை ஆய்வு செய்தால் இது புலப்படும்.. இன்றைக்கு நேற்றல்ல ஏறக்குறைய பலநூற்றுாண்டுக்களுக்கு முன்பாகவே இனத்தின் மீதான மௌனப்போர் நடந்துவருகிறது.. சில ஆய்வாளர்கள் (யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சிவ சுப்ரமணியன் போன்றோர்) ஈராயிரம் வருடங்களுக்கு மேல் என்கிறார்கள்.. இதில் சுவாரஸ்யமே இனத்தின் மீதான போரை மொழிவளத்தை மெல்ல அழிப்பதில் தொடங்குகிறது.. மொழியறிவு அந்த இனத்திடமிருந்து பிடுங்கியெறியது என்பது மொத்த இனத்தின் ஆணிவேரையே அசைக்கிற செயல்..
..
ஆம்..
ஆரியர்கள் தங்களை திராவிட இனத்தின் தாய்மொழியான தமிழை கற்றுணர்ந்து தங்களை தமிழர்களாகவே அடையாளம் படுத்தினார்கள்..
இன்னும் சொல்லப்போனால் பண்டிதர்களாக தங்களை நிலைநிறுத்தினார்கள்..மெல்ல சமஸ்கிருத சொற்களை திணித்து தமிழை இரண்டாம் நிலை மொழி/சொற்களாக்கினார்கள்..
இப்போது மொழி மீதான தாக்குதலில் நேரடியாகவே இறங்க தொடங்கிவிட்டார்கள்..
சில பள்ளிகளில் தமிழ் மொழியே இல்லை விருப்பபாடமாககூட மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை இதை ஆட்சியாளர்களும் உணரவில்லையென்பதுதான் பெரும்சோகம்..
நவோதயா பள்ளிகளின் வருகையில்
மொழி மீதான வன்மமிருப்பதாக உணர்கிறேன்
தரம் உயர்ந்த பள்ளிகளைப்போல பிம்பத்தை ஏற்படுத்தி தாய்மொழிப்பள்ளிகள் தரம் குறைந்தவை அல்லது இந்த அகண்ட தேசத்தில் போட்டியிட முடியாது அதற்கான வலிமை இல்லை என்பதைப்போல பிரச்சாரங்கள் மேற்கொள்ளபடுகிறது.. அது தவறான செயல் தாய்மொழி வழி கல்வியே சிறந்த புரிதலை தரும்..
..
ஒருவரின் அடையாளம் மதமோ பிரிவோ ஜாதியோ அல்ல மாறாக ஒருவரை இனம்கொள்ள அவரின் இனம் மொழி முக்கியம்.. ஒரு இனத்தில் பல்வேறு மொழிவடிவங்கள் காணப்படலாம் ஆனால் இனம் மட்டுமே ஒருவரின் அடையாளம்..
ஒருவரின் அடையாளத்தை அழிப்பதென்பது இனயொழிப்பேயாகும்..
..
ஆரம்பம் தொட்டே தமிழ் மொழி மீதான தாக்குதல்களை மிக கச்சிதமாக செய்துவந்திருக்கிறார்கள்.. அவர்கள் பேசுகிற எழுதுகிற மொழியாக அதாவது வழக்குமொழியாக தமிழை கொண்டிருந்தாலும் அதை நீசபாஷை எனச்சொல்லி தங்களின் இனப்பற்றை முன்னெடுத்தார்கள்.. இயற்கையை மட்டுமே வணங்கி வாழ்ந்த ஒரு இனத்தின் மீது விக்ரஹ வழிபாடு எனச்சொல்லி கடவுளை புகுத்தி அவனிடம் பேசுகிற /சொல்கிற மொழியாக தங்களின் இனமொழியை கொண்டுவந்தார்கள்..
..
அவர்களின் நோக்கம் இதுதான் அது நீண்டகால போர்முறையில் இனத்தின் மீதான தாக்குதல் ..அது கடைசியில் இனத்தின் தாய்மொழி மீது கொண்டு சேர்க்கும்.. இப்போது தமிழை இரண்டாம்தர மொழியாக்க அல்லது பிறமொழியை திணிக்க செய்கிற வழிகள் எல்லாம் இனத்தின் மீதான தாக்குதலாகவே இருக்கும்..
..
இப்போது புரிந்திருக்கும்.. தமிழ்மொழி மீதான தாக்குதல் எவ்வளவு வலிமையானதென்று.. ஒரு மொழியின் வளத்தை அழிக்க அவர்களின் கலாச்சாரத்தை அழித்தொழிக்க அல்லது பிற கலாச்சாரத்தை திணிக்கவேண்டும்.. அவர்களின் பண்பாட்டு மரபுகளில் இடைசொருகல்களை நிகழ்த்தி புதிய பண்பாட்டு சுவடுகளை உருவாக்கினால் மெல்ல இனத்தின் மீதான தாக்குதலை அது தானே செய்துக்கொள்ளும்..
..
மொழி இனத்தின் மீதான தாக்குதல் ஒருவனின் முகத்தையே மாற்றிவிடும்..
..
#இனம்_மொழிகாப்போம்_உணர்வுகொள்வோம்..
ஆலஞ்சியார்
Monday, September 24, 2018
தலைவர்
தேர்தலுக்கு பிறகும்,பாஜகவோடு கூட்டணி வைக்கமாட்டோம்.. திமுக தலைவர் தளபதி.ஸ்டாலின்..
..
தெளிவான எங்கள் சித்தாந்த எதிரியை இனங்கண்டு .. வீழ்த்தபடவேண்டிய பாசிச கூட்டத்தை அடையாளப்படுத்தியிருக்கிறார்.. தீண்டதகாத கட்சியல்ல என்ற துரைமுருகனின் பேச்சிற்கும் சேர்த்தே இந்த பதில் .. ஒட்டகத்தை கழுத்தை நிமிர்த்துவிடலாமென்று எண்ணி ஏமாந்தேன் என்ற திராவிடப் பெருந்தலைவர் கலைஞரின் பதிலை ஒட்டி.. எந்தகாலத்திலும் நிமிர்க்க முடியாதென்ற தெளிவு எம் தலைவரின் பதில்..
..
பாசிச பாஜக
ஆர்எஸ்எஸின் தேர்தல் அரசியலுக்காக பார்பனர்களின் நலன் என்ற ஒற்றை குறிக்கோளோடு .. இந்த மண்ணில் சாதி மத வேற்றுமையை ஊதி பெரிதாக்கி அதில் குளிர்காய்கிற குள்ளநரிகூட்டம் அது.. பன்முகம் கொண்ட இந்திய ஒன்றியத்தை ஒருமுகமாக அதுவும் பார்பனீய முகமாக மாற்ற நினைக்கும் பாசிச சிந்தனையுடைய கட்சியை.. மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து .. வேற்றுமையில் ஒற்றுமையென்று வாழும் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி மக்கள் பலபிரிவுகளையாய் தங்களுக்குள் அடித்துக்கொண்டால் அதன் முழுபலனையும் நாமே அனுபவிக்கலாமென்ற ஒற்றை சிந்தனையோடு நடத்தபடும் கட்சியை இந்திய ஒன்றியத்திலிருந்தே துடைத்தெறிய வேண்டும்,
..
மக்களை துன்புறுத்தி.. கார்ப்பரேட்டுகளுக்கு வழிவகை செய்து நாட்டையே சுரண்டுகிற கட்சி ..எதிர்க்கட்சிகளின் மீது பழிசுமத்திய போது எதையெல்லாம் குற்றசாட்டாக சொன்னதோ அதெல்லாம் மிக சாதாரணமாக நடக்கிறது பெட்ரோல் விலை உயர்வுக்கு நாங்கள் பொறுப்பில்லை என்கிறார்கள் .. எரிவாயு விலையேற்றத்திற்கு போராட்டம் நடத்தியவர்கள் இன்று வாய்மூடி கிடக்கிறார்கள்.. தலித்கள் அம்மணமாக விரட்டபடும் கொடுமை .. சாதீய தீயை எரித்து அதில் குளிர்காய்கிற கொடூரம்.. மாட்டிற்காக மனிதனை கொல்கிற அநீதி.. மக்களின் கடைசி நம்பிக்கையான
நீதிமன்றங்களில் ஆர்எஸ்எஸ் பிடியில் .. ஜனநாயகத்தின் நம்பிக்கையாய் திகழ்ந்த தேர்தல் ஆணையம் பார்பனீய பாசிச சொற்படி ஆடுகிற கொடுமை ..சமநீதியற்ற .. பார்பனுக்கு வால்பிடிக்கிற காவல்துறை சூத்திரனை துரத்தியடிக்கிறது .. ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்புகளும் கவலைக்கிடமாய்.. இனியும் விட்டுவைத்தால் ஜனநாயகம் படுகுழியில் .. சர்வாதிகார ஆட்சியை மக்களை அடைக்கி ஆள்கிற கொடுமை அரங்கேறும் .. ஏழைகளுக்கு நீதி மறுக்கபடும் ..முதலாளிகள் செழிப்போடும் பாட்டாளிகள் பட்டினியோடும் அலைகிற சூழல் உருவாகும்..
..
இந்த பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்த ஓரணியில் திரள்வோம்.. ஊடகங்கள் திரித்து வாய்க்குவந்ததை உளறிவைப்பதை மறுத்து எக்காலத்திற்கும் ஏற்றதல்ல பாஜகவின் செயல்பாடு என்பதை தெளிவுபடுத்தி.. திமுக பாதை மிக தெளிவாக .. திடமான கொள்கையோடு பயணிக்கிறது என்று உறுதியளிப்பதே தலைவரின் தேர்தலுக்கு பிறகும் பாஜகவோடு கூட்டணி இல்லை..
சில விசமிகளின் அவதூறுகளுக்கு பதிலாகவும் அமைகிறது.
தலைவருக்கு நன்றி ..
..
ஆலஞ்சியார்
Sunday, September 23, 2018
கருணாஸ்
ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒருசட்டம்; கருணாஸ்க்கு ஒரு சட்டமா?
திமுக தலைவர் திரு.ஸ்டாலின் கேள்வி..
கருணாஸின் கைதும் அது சொல்லும் பாடமும் புரிந்தால் திராவிடத்தை ஏன் தூக்கிப்பிடிக்கவேண்டுமென்ற அவசியத்தை உணர்த்தும்..
..
கருணாஸின் பேச்சு அப்பட்டமான ஜாதிவெறி என்றாலும் அதில் மறைந்துள்ள உண்மையை மறுக்க ஆட்சியாளர்களால் முடியாது .. கவுண்டர் ஜாதியை சேர்ந்தவரை எங்கள் சின்னம்மா தான் முதல்வராக்கினார் என்ற கருத்தை மறுக்கமுடியுமா.. இன்று மார்தட்டும் கவுண்டர் .. அன்று நாயைப்போல தவழ்ந்து சசிகலா காலை தொட்டு எழுந்ததை நாடு பார்க்கவில்லையா..
அன்றைக்கு கௌரவமெல்லாம் எங்கே போனது .. பதவி வேண்டுமென்பதற்காக யார் காலையும் பிடிக்கலாமென்ற நிலையை அதிமுகவில் எல்லா ஜாதி மதத்தை சேர்ந்தவரும்
எடுத்திருக்கிறார்கள் பதவி வந்தவுடன் முதுகில் குத்திய வரலாறு.. மகோரா காலத்திலிருந்தே உண்டு .. முதல்வரைப் பற்றி தவறாக பேசினார் என்று கருணாஸை கைது செய்த காவல்துறை..
impotent ஆண்மையற்ற என்ற குருமூர்த்தியை ஏன் கைது செய்யவில்லை வழக்கு கூட பதிவு செய்யவில்லையே ஏன்..
..
கருணாஸை விட மிக மோசமாக பேசிய எச்.ராசாவை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை காரணம் அவர்கள் தயவில் ஆட்சி நடக்கிறது அதைவிட அவாள்கள் பேசவே இல்லையென்று மறுப்பார்கள் கடைசியில் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிடுவார்கள்
அது சாவர்க்கர் கோல்வார்கர் போன்ற ஆர்எஸ்எஸ் முன்னோடிகள் கற்றுதந்தது மன்னிப்பு கடிதம் கொடுத்து தேசத்தை காட்டிக்கொடுக்கிற பின்னணி அவர்களுடையது ..ஆனால் கருணாஸ் நான் தான் பேசினேன் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாதென்று சொல்கிற திமிர் இது தமிழனுக்கே உரியது ..
..
எச்.ராசாவால் ராமதாஸ் கருவறைக்குள் நுழையமுடியுமா கருவறுத்துவிடுவோமென பேசிவிட்டு நடமாட முடிகிறதென்றால் அதுவும் காவலர்கள் பாதுகாப்பில் வலம்வர முடிகிறதென்றால் புரிந்துக்கொள்ளுங்கள் இந்த கேடுகெட்ட ஆட்சியின் லட்சணம் ..
கருணாஸை அவசரமாக கைது செய்து 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமுருகன் காந்தி மீது உஃபா சட்டம் வரை பதிவு செய்யப்பட்டது.மன்சூர் அலி கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பொதுமக்கள் பலர் இன்று வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாஜக ஒழிக என்று கூறியதற்காக சோபியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உடனடியாக கைதுசெய்யப்பட்டார். பேராசிரியர் ஜெயராமன் , திவ்யா , வளர்மதி போன்றவர்கள் ஆட்சிக்கெதிராக போராடினார்கள் என்பதற்காக கைது நடவடிக்கை எடுக்கபட்டது ..
ஆனால் ஹெச்.ராஜா வும் , எஸ் வி சேகரும் தனிமனித தாக்குதல் , இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை கட்டிக்காக்கும் நீதிமன்றத்தை மிகவும் இழிவான முறையில் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த போதும் எந்த விதத்திலும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல் மிகவும் பாதுகாப்பான முறையில் வலம் வருகிறார்கள் ..
இதை தான் எதிர்க்கட்சி தலைவர் தளபதி.ஸ்டாலின் கேட்கிறார்
பார்பனனுக்கு ஒரு நீதி..
சூத்திரனுக்கு ஒரு நீதியா
..
ஆலஞ்சியார்
Friday, September 21, 2018
திமுக..
கேவலமான செயலை மிக லாவகமாக சொல்கிறார் கருணாஸ்.. கூவத்தூர் ஒன்றிருப்பதே யாருக்கும் தெரியாது மூன்றுபக்கமும் கடல் சூழ்ந்த ஒரேயொரு வழிபாதை தான் யாரும் தப்பிக்கமுடியாது என்று நான் தான் சொன்னேன் .. அதோடு அவர்களுக்கு நான் தான் தண்ணீ சப்ளை செய்தேன் என்கிறார் திருவாடானை மக்களுக்கு மிக்க நன்றி!..
இவரைப் போன்றவர்களை தேர்ந்தெடுத்தனுப்பி இவர்கள் எப்படிபட்டவர்கள் என்ற உண்மையை உணர்த்தியமைக்கு!..
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கலைக்கபட்டிருக்க வேண்டிய அரசை தங்களின் சுயலாபத்திற்காக தங்களின் நீண்டகால ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் போனதை .. சமூகநீதி என்ற பெயரில் பார்பனர்களின் வாழ்வின் ஒளிமயத்தை பறித்ததை இனி எத்தனை ஆண்டுகளானாலும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியாதென்பதை அறிந்து சொன்னதை கேட்கும் கிளிப்பிள்ளையை போல இந்த கோமாளிகளை வைத்து நிழல் அரசு நடத்தலாமென்ற ஒற்றை திட்டத்தோடு மத்தியில் ஆளும் பாஜக அரசு பெரும்பான்மை இல்லையென்ற நிலையிலும் காத்து நிற்கிறது ..
..
கூவத்தூர் தமிழக அரசியல் வரலாற்றில் அசிங்கம் பிடித்த பக்கம் அங்கு நடந்ததும் அதை ஊடகங்களும் ஊகங்களும் சொன்னதும் மது மாதுவென அவர்களை ஒருவித மயக்கத்திலேயே வைத்திருந்து இந்திய ஜனநாயகத்தை கேலிக்குரியாக்கி .. சசிகலாவை முதல்வராக்க கூடாதென்று அதுவரை கிடப்பில் போடபட்டிருந்த ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்கி .. நாடகங்களை நிறைவேற்றி ஒரு பொம்மை அரசை நிறுவியதின் உண்மை இப்போது தன் கோர முகத்தை மக்களுக்கு காட்டுகிறது .. கேவலமான செயல்களாலும் ஒரு அரசை நிலைநிறுத்த முடியுமென்ற கசப்பான உண்மைகள் வெளிவருகிறது ..
..
இவை அனைத்தும் திமுக அதிகாரத்திற்கு வருவதை காலதாமதப்படுத்த வேண்டுமென்ற நோக்கை தவிர வேறில்லை .. தொடர்ந்து எல்லா அமைச்சர்களும் தங்களின் சௌகரியம் போல் கொள்ளையடிக்கிறார்கள் யாரும் முதல்வருக்கு கட்டுபடுவதில்லை கேட்டால் நீ யோக்கியமா என்னை கைது செய்தால் உண்மையை வெளியே சொல்லவேண்டிவருமென பகிரங்கமாக மிரட்டுகிறார்கள்.. ஒவ்வொரு அமைச்சரும் நாளுக்கொரு பொன்மொழியை..? உதிர்க்கிறார்கள் அவை அனைத்தும் எந்தளவிற்கு அறிவிலத்தனமானவர்களாக விவரகேடுகளாக இருந்திருக்கிறார்களென்பதை எடுத்துகாட்டுகிறது .. இவர்களின் ஒட்டுமொத்த ஊழலை பட்டியலிட்டு போராட்டம் நடத்தினால் பதிலுக்கு திமுகவை எதிர்த்து போராட்டமாம் அது ஈழப்போரின் திமுகவின் நிலைபாட்டை சுட்டிகாட்டி ..பாவம் இலங்கையின் தற்போதைய சூழலும் அவர்களின் ஜனநாயக அரசியல்பாதைக்கு வந்ததும் தெரியாமல் கூத்தடிக்கிறார்கள் .. கூத்தாடிகளின் நிழலில் வளர்ந்த அறிவிலிகளிடத்தில் வேறெதை எதிர்பார்பது .. இவர்கள் முகம் மக்கள் முன் தோலுரிக்கபடவேண்டும்
..
திமுக தலைவர் தளபதி. ஸ்டாலின்
”அ.தி.மு.க அரசின்
"Collection - Commission - Corruption"
விவரங்களை பொதுமக்களுக்கு எடுத்துச்சொல்ல தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து நகராட்சிகளிலும் ,
அக்டோபர் 3 மற்றும் 4 தேதிகளில்
தொடர் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்..
..
மக்கள் தெளிவான சிந்தையோடு நல்லதொரு மாற்றத்தை அது திமுகவால் மட்டுமே,தரமுடியுமென நம்பி காத்திருக்கிறார்கள் ..
..
#கதிரவனின்_வரவிற்கு_காத்திருக்கிறது_தமிழகம்…
..
ஆலஞ்சியார்
Thursday, September 20, 2018
ஸ்டாலின்
ஸ்டாலின் அரசியலில் நிலை பெறவில்லை என்று பாஜக ஆதரவு நிலைபாட்டுடைய ரவீந்திரன் ஊடகவியலாளர் Sa Sufiyan க்கு அளித்த பேட்டியில் சொல்கிறார் ..
தமிழக அரசியலை சரியாக ஆய்வுசெய்திருந்தால் இந்த கருத்தை சொல்லியிருக்கமாட்டார் .. மோடியை சந்தித்த பிறகு எப்படியேனும் திமுகவின் வெற்றியை தடுப்பதற்கான முயற்சி செய்கிறார்..
வெளிப்படையாக மக்களின் மனஓட்டத்தில் இன்றைய அரசின் அவலட்சணங்களும் .. ஆள்போர் மீதான அதிருப்தியும் அதற்கான மாற்று திமுகழகம் தான் என்று அடிப்படை அரசியல் அறியாதவர்கள் கூட சொல்வார்கள் ..
மடைமாற்றி வாக்குகளை பிரித்ததனால் ஏற்பட்ட கேவலமான ஆட்சியை மக்கள் உணர்ந்து இனி அந்த தவறை அதாவது வாக்கை பிரிக்க நினைப்போரை கவனித்தில் கொள்வார்கள்..
..
நிறைய முயற்சிகள் அரிதாரம் பூசியவர்களை கொண்டுவந்து நிறுத்த முயன்று ஆற்றில் ஒருகால் சேற்றில் கால் என்ற நிலைபாட்டால் மக்களின் கோபமும் படம் தோல்வியுமாய் நிலைத்துநிற்க முடியாமல் திணறுவதை காண்கிறோம் .. ஜாதீய கட்சிகளை முன்னெடுத்தால் கலவரமும் கொலையுமே வருமென்பென்பதும் ஒருசாராரை திருப்திபடுத்தினால் மற்றவர்கள் வாக்குகள் கிடைக்காமல் போகுமென்றறிந்து அடக்கி வாசிக்கிறார்கள் .. உதிரிகட்சிகளின் நிலைபாடும் ஆளும் கட்சியின் நிலையும் யாருக்கும் பயன்தராதென்று அறிந்து இன்றைக்கு மக்களின் கடைசி நம்பிக்கையாய் திமுக திகழ்கிறது .. மதவாதிக்களுக்கு இங்கு இடமில்லை என்று தெளிவாக பொட்டில் அடித்தாற்ப்போல் ஒவ்வொருமுறை சொல்கிறார்கள் மக்கள் ..
..
தளபதி.ஸ்டாலின்
திமுக தலைவராக பொறுப்பேற்றப்பின் அவரது அணுகுமுறையில் நிறைய மாற்றங்களை செய்கிறார் அவர் தன் பொறுப்பை உணர்ந்து மக்களும் கட்சியும் தம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கேற்ப செயலாற்றுகிறார் ..நிறைய அழுத்தம் தந்தும் அழகிரி விடயத்தில் அவர்காட்டிய உறுதி.. கடைக்கோடி தொண்டனின் தவறுக்காக வருந்துவது.. மாவட்ட செயலர்கள் தொடங்கி அடிமட்ட தொண்டன் வரை நான் தவறுசெய்தாலிம் கேட்கலாம் என உறுதி தந்தது என கவனமாக இருக்கிறார் ..
கடும் உழைப்பாளி .. 2ஜி எனும் மாய எண் தந்த படுதோல்வியில் இருந்து கட்சியை மீட்டு மிகப்பெரிய எதிர்க்கட்சியாக நிலைநிறுத்தியதும் கலைஞர் மறைவிற்கு பிறகு புதியதொரு தொடக்கமாய் கட்சியை குறிப்பாக இளைஞர்களின் கையில் கொண்டுபோய் சேர்த்தவிதமும், எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசை வீழ்த்துவோம் மதவாதத்தை வேரறுப்போம் பெரியாரையும் அண்ணாவையும் கலைஞரின் பாதையில் முன்னெடுப்போமென சூளுரைத்து செயல்படுகிறார்..
..
மக்கள் விரும்புகிற தலைவர் .. எதிரிகள் யாரென்று அறிந்து திராவிடத்திற்கெதிரான தமிழர்களுக்கு தமிழ்நாட்டிற்கு எதிரானவர்கள் அடையாளம் காட்டி .. களமறிந்து செயல்படுகிறார் எது தேவை என்பதை அறிந்து அரசியல் செய்யும் ஆற்றலை கலைஞரிடமிருந்து கற்று தேர்ந்தவராய் நிற்கிறார் நாடு விரும்புகிற இனம் அடையாளம் கண்டு தந்த.. காலம் தேர்வு செய்த நல்ல தலைவராய் .. நிமிர்ந்து நிற்கிறார்
அவர் விரல் காட்டும் வெற்றியின் இலக்கு ..
தொடர்வதற்கு தமிழகமே தயார்..
..
நாளை இந்த விரல்கள் இடும் உத்தரவே தமிழகத்தை எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
விரலைசைவே.. தமிழகம்
..
ஆலஞ்சியார்
Wednesday, September 19, 2018
வீணர்கள் வீழ்வர்
வாய் தவறி சொல்லியதை பெரிதாக்காதீர்கள்
பொன்னர்.. சரி பொன்னரே இந்த வாய் அடிக்கடி தவறாய் அல்ல தப்பாய் பேசுகிறதே
ஒன்று திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்க நினைக்கிறார் .. அல்லது மனநலம் பிறழ்ந்து வந்ததை பேசுகிறார் .. இதைவிட கொடுமை சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை கலவரத்தில் போலீஸை காட்டிக்கொடுக்காதற்கு நன்றிகடன் வேண்டாமா என்கிறார்..
என்னை கைது செய்தால் அடுத்த நொடி இந்த அரசு கவிழும் என்கிறார் எச்.ராசா ..
இதெற்கெல்லாம் என்ன பொருள்..
வாய்தவறியதல்ல திட்டமிடுகிறீர் .. ஒரு உளறல்காரனை வைத்து முடிந்தவரை பார்க்கிறீர் ஆனால் இந்த மண்ணில் உங்கள் செயல் எடுபடவில்லை என்ன காரணம் இங்கே அறிவுக்கொண்டு சிந்தி என #பெருங்கிழவன் எம்மை பழக்கிவிட்டு போயிருக்கிறான் ..
நீங்கள் நடத்துகிற அராஜகசெயல்கள் எல்லாம் உங்களையே திருப்பி தாக்குகிறது .. சோபியாவின் பேச்சு உலகமே திருப்பி சொன்னது பாசிசபாஜக ஒழிக ..
இதோ நந்தினியின் இரு சக்கர வாகனத்தில் மோடி நாட்டுக்கு கேடு வாசகத்தை போலீஸை துணைக்கழைத்து கிழித்து போட்டால் சரியாகிபோகுமா .. இனி நிறைய பதாகைகள் இருசக்கரங்களை அலங்கரிக்கும்..
நந்தினியை கொல்வோம் என மிரட்டுவதாக தொலைப்பேசி மூலம் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார்..நந்தினி உயிருக்கு பாதுகாப்பு தரவேண்டியது தமிழக அரசின் கடமை .. பாஜகவின் வெறியாட்டம் கட்டுக்கடங்காமல் போவதற்கு காரணம் தமிழக அரசுதான் .. ராசா போன்றவர்களை குண்டர் சட்டத்தில் போட்டால் தான் அடங்குவார்கள் .. பெரியார் சிலை மீது செருப்பு வீசிய சூத்தரனை குண்டாஸில் போடும் போது பொது அமைதிக்கு பங்கம் செய்கிற ராசாவையும் போடலாம்
..
யாராக இருந்தாலும்
எந்த கருத்தை உள்வாங்க பழகிகொள்ளுங்கள் மாற்று கருத்தை அறிவோடு எதிர்க்கொள்ளுங்கள் மதமெனும் கிறுக்கு பிடித்தாட்டினால் செய்வதெல்லாம் தமிழகத்தில் கேளிக்கையாக பார்க்கபடும் என்பதை உணருங்கள் ..
..
அதிமுக அரசை கைப்பாவையாய் வைத்துக்கொண்டு ஆடுகிற ஆட்டம் ஓய்கிறபோது தரும் வலியை தாங்கமாட்டீர்கள்
இதே எச்.ராசாவோ சேகரோ திமுக ஆட்சியில் இதுபோல பேசமுடியுமா நாகரீகமில்லாத கலவரத்தை செய்ய ..ஒரு கும்பலை வன்முறைக்கு தூண்டுகிற செயலை செய்ய முடியுமா.. எதை செய்தாலும் பாண்டியராஜன் போல கைக்கூலிகளை வைத்து பேச வைக்கலாம் .. எதற்கு தலையாட்டுகிற பயத்தின் பீதியில் தொடைநடுங்கி கிடக்கிற அடிமைகளை வைத்துக்கொண்டி
பெரியதொரு கலவரத்தை நடத்தினால் பழியை அரசின் மீது போட்டுவிட்டு தப்பிக்கலாம் என்ற எண்ணம் தமிழகத்தில் ஈடேறாது .. இப்போது நடத்துகிற கூத்திற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வெகுவிரைவில் வரும் .. இவர்களின் அராஜகத்தை அடக்க/ஒடுக்க திமுகவை அறியணையேற்றுவதுதான் ஒரே வழி..
வழிபிறக்கும் ..வீணர்கள் வீழ்வர்
..
ஆலஞ்சியார்
Tuesday, September 18, 2018
பெரியார்
#பெரியார்..
தந்தை பெரியார் பொதுவாழ்வில் மிக தூய்மையானவராக இருந்தார்.. தன் பூர்வீக சொத்திலிருந்து வரும் வருவாயைதான் தன் செலவுக்கு எடுத்துக்கொண்டார் தனக்கு தருகிற பணம் மற்றும் பொருளை டிரஸ்ட்டுக்கே தந்தார் ..
அதிலிருந்து நயாபைசாகூட செலவிற்கு எடுத்துக்கொள்ளாதவர்..
பதவி தன்னை தேடிவந்த போது கூட அதை மறுத்தார் 1940 மற்றும் 42 கவர்னர்ஜெனரல் வீடுதேடி வந்து சென்னை மகான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற போது மறுத்தவர் பெரியார்..
"நெருப்பு குச்சிகூட குளிர்ச்சிதரலாம்
வேப்பெண்ணை கூட தேன் ஆகலாம்... பதவிக்கு வந்தவன் யோக்கியனாக இருக்கமுடியாது /இருக்கவிடாது இந்த சமூக கட்டமைப்பு"என்றார் ..
..
மற்றவர்களை மரியாதை செய்ய தவறியதில்லை வயதில் சிறியவர்களை கூட வாங்க என்றுதான் அழைப்பார்.. இன்றைக்கு சிலர் மிக மோசமாக விமர்சிக்கிறார்கள்..நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடினால் எழுந்துநிற்பார் குங்குமம் திருநீறு கொடுத்தால் கூட வாங்கிக்கொள்ளும் பழக்கம் உடையவர்.. மற்றவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பவர்.. நான் எதிர்ப்பது அவரது கொள்கையே தவிர அவர்களை அல்ல என்றவர்..
..
கடவுள் மறுப்பு எனது கொள்கையல்ல ஜாதிய ஒழிப்பே எனது பிரதான கொள்கை ..ஜாதிய ஒழிக்க வழிதேடியபோது அது மதத்திற்கு உட்பட்டதை கண்டேன் மதத்தை ஒழிக்கலாமென்றால் அது வேதத்திற்கு உட்பட்தென்றார்.. வேதம் கடவுள் அருளியதென்றார் அதனால் தான் கடவுளை எதிர்த்தேன்.. ஜாதி மரக்கிளையை போன்றது அதைவெட்டி பிரயோசனமில்லைஅதனால்தான் மரத்தின் ஆணிவேரான கடவுளை எதிர்த்தேன்.. எனக்கும் உங்கள் கடவுளுக்கும் வேறேதும் பகையில்லை என்றார்.. கடவுள் பெயரைச்சொல்லி உன்னையும் என்னையும் பிரிக்கும் ஆரியத்தை எதிர்க்கிறேன்..
ஜாதியை ஒழிக்க எவையெல்லாம் தடையோ அதையெல்லாம் எதிர்ப்பேன் மனிதனை சமமாக நடத்திட வேண்டும் மானமுள்ள அறிவுள்ளவனாக மாற்றவேண்டுமென்பதே எனது நோக்கம்/கொள்கையென்றார்..
..
தன்னை பற்றி நானொன்றும் யோக்கியனில்லை
மைனர் வாழ்வு வாழ்ந்தவன் தான் .. மதுஅருந்ததில்லை பிறருக்கு வாங்கி கொடுத்திருக்கிறேன் .. வியாபாரியாக இருந்தபோது பொய் பேசியிருக்கிறேன் ஆனால் பொதுவாழ்விற்கு வந்தபிறகு #பொய்பேசியதில்லை என்று வெளிப்படையாகவே பேசியவர்..
..
பெரியார் திறந்த புத்தகம்..
அறிவுச்சோலை .. இன்றைக்கு கொஞ்சமேனும் மரியாதையோடு இந்த தமிழ்சமூகமும் நாடும் இருக்கிறதென்றால் அதற்கு பெரியார் மட்டுமே காரணம்.. இல்லையெனில் பீகாரைப்போல உ.பி.யை போல ஆரியர்களுக்கு அடிமையாகளாகதான் வாழவேண்டியிருக்கும்..
..
பெரியார் சிலையின் மீது செருப்பெறிகிறார்.. பெரியார் மீதே செருப்பு எறிந்த காலம் உண்டு பொதுவாழ்விற்கு வந்துவிட்டால் எல்லாவற்றையும் தாங்கும் மனபலம் வேண்டும் இன்றைக்கு எறிந்தவன் வழக்கறிஞராம் .. ஒருமுறை நீதிமன்றத்தில் நேர்நிற்க பெரியார் வருகிறார் பின்னால் நிறைய வழக்கறிஞர்கள்.. திரும்பி பார்த்து நம்மாளுங்க இவ்வளவுபேர் வக்கீலாகிவிட்டார்களா என்று பெருமைப்பட்டார் கல்வி ஒரு சமூகத்தினருக்கு மட்டுமே என்ற மநுநீதியை எதிரித்தவர்.. சூத்திரன் கல்வி கேட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்ற பிராமனீயத்திற்கு எதிராக போராடியவர்..
இன்று எறிந்தவன் அப்பனும் தாத்தனும் என்னவாகியிருந்தார்களென சிந்தித்தால் இந்த கேடுகெட்ட செயலை செய்திருக்கமாட்டார்..
..
எதற்கும் அஞ்சாத மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்
ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் தட்டிபறித்த உரிமைகளை மீட்டு தந்தவர் ..
வரையறைக்குள் அடைக்க முடியாதவர்..
..
The prophet of the New age (UNESCO)
#பெரியார்_மாபெரும்மனிதர்..
..
ஆலஞ்சியார்
Monday, September 17, 2018
பெரியார்
பெரியார்..
இரண்டு விடயங்களை மிக கடுமையாக எதிர்த்தார் .. ஒன்று சாதிய அடுக்கு மற்றொன்று ஆணாதிக்கம்.. இரண்டுமே பெண்களுக்கெதிரானது .. சாதிய கொடுமை ஆண்களை மட்டுமல்ல பெண்களை மிக கடுமையாக கையாண்டது மதமெனும் போர்வையில் உயர்ஜாதி பெண்கள் கூட வரையறைக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருந்தது .. சாஸ்திரங்கள் என்ற பெயரில் பெண்களுக்கெதிரான செயல்களை நியாயபடுத்தியது .. ஜகத்குருக்கென்று தங்களை அடையாளபடுத்திக்கொண்டவர்கள் தெய்வத்தின் குரலாய் .. பெண்களின் மீதான அடக்குமுறையை சொன்னார்கள்.. வேலைக்கு போகும் பெண்களை விபச்சாரியென்று பேசினார்கள் மாதவிடாய் பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கஷ்டபடுகிறதென்று மகாபெருசுகள் உளறிவைத்தன.. பெண்களை போதை பொருளாகவே சமூகம் பார்த்தது .. ஆண்களை விட எல்லாவற்றிலும் தகுதி குறைந்தவளென்றே எல்லா மதமும் சொன்னது பெண்களை ஆண்களுக்காகவே படைக்க பட்டிருப்பதாக தெய்வ செய்திகளை கொண்டுவந்தவர்கள்..? கூட சொன்னார்கள் ..
சமைத்து போடுவதற்கும் தங்களின் குல வாரிசை சுமைக்க.. களைத்துப்போய் வந்தால் கால் அமுக்கிவிட.. சம்பளமில்லாத வேலைக்காரியாக நினைத்தார்கள்..பெண்களை தங்களின் சுகத்திற்காக சந்தோசத்திற்காக படைக்கபட்டதாக நினைத்தார்கள்..
..
பெரியார் தான் பெண்களின் கல்வியின் அவசியத்தை சொன்னார் ..ஆண்குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள் அதற்கான வசதி உங்கள் ஊரில் இல்லையென்றால் வெளியூர் சென்று கூலி வேலை செய்தாவது படிக்கவையுங்கள் என்றார்.. பெண்களுக்கு ஆண்களுக்கு உள்ளதுபோல சகல உரிமையும் உள்ளதென்றார்
பூர்வீக சொத்தில் பங்கு கொடுக்கவேண்டுமென்றார்... (இதே கருத்தை அண்ணல் அம்பேத்கர் சட்டமாக்க முற்பட்டு மசோதா தாக்கல் செய்தபோது
உயர்ஜாதியினர் கடுமையாக எதிர்த்து மசோதாவை தோற்கடித்தனர்.. பின்னர் கலைஞர்தான் இந்தியாவிற்கே வழிகாட்டி தமிழகத்தில் கொண்டுவந்து சட்டமியற்றினார் )..
பெண்களுக்கு சொத்து கொடுத்தால் குடும்ப உறவுகள் சீரழிந்துபோகுமென்று ஜகத்குருக்கள் சொன்னார்கள்..
..
பெண்கள் எல்லாதுறையிலும் வரவேண்டும் என்று ஆசைபட்டவர் .. ஆண்கள் செய்யும் அனைத்தும் பெண்களாலும் செய்யமுடியும் என்றார்.. ஆண்களை போல உடையணியுங்கள்
பெண்கள் கையிலிருந்த கரண்டியை பிடிங்கிவிட்டு புத்தகத்தை கொடுங்கள் ..
மாற்றம் தானாய் வரும் .. எவ்வளவு தீர்க்கதரிசன பார்வை.. இன்றைக்கு மருத்துவர் பொறியாளர் .. வழக்கறிஞர் அரசு ஊழியர்.. அரசு அதிகாரிகள்..இந்திய அரசுப்பணி.. உயரத்தில் பறக்கும் விமானி.. என்னைப்போன்ற சாமானியனின் வீட்டுப்பெண்கள் நீதிபதியாய் வர முடிந்தது இவையனைத்திற்கும் தொடக்கம் குறித்தவர்
பெரியார்.. ஆம் பிள்ளையார் சுழியெல்லாம் போடாதீர்கள் மடமை..பெரியார் கைத்தடியை போடுங்கள் அதுவே அறிவுடைமை..
..
1938ல் பெண்களெல்லாம் ஒன்று கூடி "பெரியார்" என்றழைத்தார்கள் ..ஆம் பெண்களின் நலனுக்காகவே அதிகம் உழைத்தவர் .. பெண்களால் மட்டுமே சமூதாயத்தில் மாற்றத்தை புரட்சியை நடத்திக்காட்டமுடியும்.. என நம்பியவர் .. அவரின் முயற்சி திராவிட ஆட்சியால் முடிந்தது .. இந்நாளில் திராவிட பெருந்தலைவர் கலைஞரையும் நினைவுகூர்வோம்..
..
பெண்ணடிமைத்தனத்தை வேரறுத்த எம் பெரியாருக்கு #வீரவணக்கம்..
#HBDPeriyar140
..
ஆலஞ்சியார்
Sunday, September 16, 2018
ஓடியொளிகிறான்
குரல் என்னுடையதல்ல
..
எப்போதுமே திரைமறைவில் நின்றுக்கொண்டே கலவரபடுத்தும் பார்பனீயம் யாரோடு யாரை மோதவிட்டால் பலன் நமக்கென்று திட்டம் தீட்டி சூத்திரனையும் தலித்தையும் மோதவிட்டு அது சரியாக போனியாகாததால் மத கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அவாளுக்கு நன்மை கிடைக்குமா என்றே எதிர்பார்க்கும் ..
புறமிருந்தே ஏவி பழக்கபட்டவர்கள் யார் எய்ததென்று அறிந்தும் மௌனமாய் கடந்தே நமக்கு பழக்கமாகி விட்டது .. ஆனால் பாருங்கள் நேரடியாகவே இப்போது தூண்டி விடும் செயலை ஒருவித பதட்டத்தோடு மக்களை வைத்திட எண்ணி களமிறங்கி செயலாற்றி .. இந்துக்களின் தூதுவன் ..வாய்தவறியல்ல கோபம் தலைக்கேறி உளறிவைத்துவிட்டார் ..
களம் பதட்டத்தில் தான் யார் .. மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் தேசிய செயலர் என்பதெல்லாம் மறந்து நிஜ முகம் வெளிப்பட்டது ..
மசிராவது மண்ணாகட்டியாவது ..
..
வேண்டுமென்றே கலவரத்தை தூண்டிவிட அவர் உபயோகித்த வார்த்தைதான் அது உடனடிபலனை தராதவாறு தமிழகம் அமைதி காத்து ..பாஜவை திருப்பி அடிக்கிறது.. இந்துக்களே வீதிக்கு வாருங்களென்ற அழைத்தபோது ..ஏற்கனவே பாஜகவிற்கு வாக்களித்து வீதியில் நிற்கிறோம் .. எங்களே வேண்டுமானால் கருவறைக்குள் அழைத்து செல்லமுடியுமா என கேட்க விழிபிதுங்கி நின்றனர் .. எத்தனையோ இந்து மத பண்டிகைகள் உற்சாகத்தோடு மக்கள் பெருங்கூட்டமாய் கலந்துக்கொள்கிறார்கள் ..அப்போதெல்லாம் கலவரம் வருவதில்லை .. ஆனால் விநாயகருக்கு மட்டும் ஏன் வருகிறது ..அதெல்லாம் இந்துக்களாலும் விநாயகர் சதூர்த்தி மட்டும் காவிகளாலும் நடத்தபடுவதே காரணம்.. விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள் கலந்துக்கொள்வதில்லை என்பதை கவனித்தால் உண்மை புரியும்..
..
ராசா தான் பேசவில்லை என்கிறார் ..கைதுக்கு பயந்து அவர் பொய் சொல்வது தெரிகிறது..
நிர்மலா கூட நான் பேசவில்லையென்று சொல்லவில்லை ஆனாலும் குரல் சோதனையில் மாற்றி பேசி கடைசியில் உண்மையான குரல் வெளியானது.. அதைப்போல இந்த பார்பன வெறியனை கைதுசெய்து சிறையில் அடைத்து பிறகு குரல் சோதனை செய்யவேண்டும்..இவர் போன்றவர்கள் வெளியில் நடமாடுவது பொது அமைதிக்கு இடையூறாகும்,..அமைதி கெட்டுபோகும் குஜராத்தைப்போல மிகப்பெரிய கலவரத்திற்குவித்திட்டார்கள்...எதிர்தரப்பு மிகவும் அமைதியாக இதை கையாண்டது ..மாவட்ட ஆட்சியரே நேரில் வந்து நன்றி தெரிவிக்கிறார்..கலவரத்தில் 10 வயது சிறுவர்கள் கூட கலந்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது .. கைது நீதிமன்றம் என அவர்களின் வாழ்க்கை பாதிக்கும்.. சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்ப்பது கூட அவர்களின் எதிர்காலத்தில் ரௌடியாக வர வழிவகுக்கும் .. இப்படி சிறுவர்களை தூண்டிவிட்டவர்கள் குண்டாஸில் கைது செய்யபடவேண்டும்
..
நீதிபதி கர்ணன் நீதிமன்றத்தை விமர்சித்ததை ஏற்க மறுத்து .. அவரை கைது செய்து சிறையில் அடைத்தது ..உயர்நீதிமன்ற நீதிபதி என்றும் பாராமல் கைது செய்த போது ஆஹா என புகழ்ந்தவர்கள் இன்று எச்.ராசாவை கைது செய்வார்களா
ஒடுக்கபட்டவனுக்கு இவனுக்கு உள்ள வித்தியாசம் புரிந்தால்போதும்..
எது வீரம் நேர்மை தெரியுமா .. ஆம் நான் மன்னிப்பெல்லாம் கேட்கமுடியாது பாசிச பாஜக ஒழிக என்று உரக்க சொன்னது வீரம்..
..
ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு முடிந்துவிடவில்லை தமிழ் மண்ணில் குரோதத்தை விதைக்க நினைக்கும் மூடனை சிறையில் அடைக்க வேண்டும்,.. சூத்திரன் உயிர் பார்பன் மயிருக்கு சமமென்று எண்ணுகிற.. திறக்கப்படாத கதவுகளுக்குள் அரசியல் செய்கிற ஈனர்களை வெளிச்சம் போட்டு காட்டுவோம்,..
..
ஆலஞ்சியார்
Saturday, September 15, 2018
எம் அண்ணா
எம் அண்ணா..
திராவிடத்தை அறியணையேற்றிய அணையா விளக்கு .. ஆரியமே உன் சூதை இங்கே காட்டாதே என்ற பெருமகன் .. ஆரியத்தை எழவே முடியாமல் ஆழப்புதைத்தவர்
“நமஸ்காரத்தை வணக்கமென்று மாற்றியவர்
விவாகத்தை மணவிழா என்றும்,
காரியாலயம் அலுவலகம் என்றும் ..சத்யமேவ ஜெயதே வாய்மையே வெல்லும் என்று மாற்றிகாட்டியவர்.. வடமொழி கலப்பை வீழ்த்தி இன்பதமிழில் பெயரிட்டு அழைத்தவர்..
..
சமூகமேநம்பாட்டிற்காக உழைத்தால் போதும்
ஆட்சி அதிகாரமெல்லாம் வேண்டாம் என்றிருந்த நிலையை மாற்றி அதிகாரத்திற்கு வந்தால் தான் நாம் செய்ய நினைப்பதை செய்ய முடியும் தவிர்க்க எண்ணுவதை தவிர்க்க இயலுமென அறிந்திருந்த அறிஞர் ..
சுயமரியாதை திருமணத்தை உச்சநீதிமன்றம் தகாத உறவென்று தீர்ப்பு தந்த போதுதான் அதிகாரம் வேண்டும் என்று தோன்றியது .. சட்டம் இயற்றுகிற இடத்தில் அருமை புரிந்தது தேர்தல் அரசியல் தேவையென்று உணர்ந்து தி.மு.கழகத்தை தோற்றுவித்தார்.. மக்கள் பேராதரவோடு வென்றார்
ஆட்சிக்கு வந்தவுடன் சுயமரியாதை திருமணத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்தது..
..
அண்ணா மிக சிறந்த ராஜதந்திரி..
67 ல் ராஜாஜியோடு சேர்ந்து தேர்தலை சந்திக்கிறார் .. பெரியார் மிக கடுமையாக எதிர்த்த போதும் களத்தில் ராஜாஜியோடுதான் இருந்தார்.. வெற்றி செய்தி மெல்ல வரதொடங்கியது .. ராஜாஜி அண்ணாவை சந்தித்து Mr. அண்ணாதுரை யார் முதல்வரென்பதை முடிவு செய்துவிடுவோமா என்ற போது அருகில் இருந்த கலைஞர் திமுக அறுதிப்பெரும்பான்மை பெறும் அண்ணாதான் முதல்வர் என்கிறார் அமைதியாக இருந்த ராஜகோபாலச்சாரி உங்களுக்கு அனுபவம் இல்லை கோப்புகளை என் பார்வைக்கு அனுப்புங்கள் நான் பார்த்துவிட்டு சொல்கிறேன் அப்புறம் கையெழுத்திடலாம் என்றார் ..அண்ணா சொன்னார் உங்களுக்கு தெரியாததா ரகசியகாப்பை உறுதிமொழியை மீற முடியாது என்று சொன்னார்..வெற்றி பெற்றவுடனேயே நேராக பெரியாரை சந்தித்து இந்த வெற்றியை காணிக்கையாக்கிறேன் என்றார்.. அப்போது ராஜாஜி என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என்றபோது காலங்காலமாய் எங்கள் இனத்தையே ஏமாற்றிவருகிறீர்களே நான் சில தினங்கள் ஏமாற்ற கூடாதா என்றார் ..
தேன்நிலவு முடிந்துவிட்டதென்றதற்கு இனி இல்லறம் இனிதே தொடங்கும் என்றார்
..
அண்ணாவின் வாசிப்பு பிரமிக்க வைக்கும் அறுவைசிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கிறார் ..டாக்டரிடம் அறுவை சிகிச்சையை இரண்டுதினங்கள் தள்ளிவைக்க முடியுமா என்கிறார் அண்ணா .. ஏன் நல்ல நாள் பார்க்கிறீர்களா என்றபோது .. ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறேன் இரண்டுநாளில் முடித்துவிடுவேன் அதற்கு எப்போதுவேண்டுமானாலும் அறுவைசிகிச்சையை வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்... அந்தளவு புத்தங்களோடு நெருக்கமாக இருந்தார்.. எங்கள் அறிஞர் பெருமகன்
..
சுயமரியாதை திருமணத்தை சட்டபூர்வமாக்கிவிட்டேன் .. மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்று மாற்றிவிட்டேன் இனி தமிழகத்தை யாராண்டால் என்ன இந்த அண்ணாதுரை ஆள்வதாகதான் அர்த்தம் ..
..
கலைஞரின் கவிதை..
“ஏறுகின்றார் அண்ணா
மேடை என்றால்
அது மகுடி நாதம்.
எழுதுகிறார் ஏட்டில் என்றால்
அது தமிழர் வேதம்.
எதிரிகளின் தலையெல்லாம்
முற்றிய கதிர்போல சாய்வதற்கு
எம் அண்ணன் கற்றிருந்தார்
முத்தமிழை ஆள்வதற்கு!
பொங்கு கடல் நடையும்
பூவையரின் மென்நடையும்-தன்
புதுத்தமிழ் நடையில் காட்டியவர்.
பாக்குக்கும் வெற்றிலை சுண்ணாம்புக்கும்
அவர் வாய் சிவக்கும்
தாக்குதற்குத் தமிழைப்
பிறமொழி பெருகி வந்தால்
அவர் கண் சிவக்கும்.”
..
கடமை கண்ணியம் கட்டுப்பாடு...
Duty Dignity Discipline...
வாழ்க.. அண்ணா
வாழ்க!.. அண்ணாவின் புகழ்...
#அண்ணா110
..
ஆலஞ்சியார்
Thursday, September 13, 2018
கோ.சி.மணி
கோ.சி.மணி..
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட செயலர் திராவிட முன்னேற்ற கழக சோழமண்டல தளகர்தகர்களில் ஒருவர்.. கட்சியின் தொண்டன் எப்படி செயலாற்ற வேண்டுமென்பதற்கு ..மாவட்ட செயலாளர்கள் எப்படி சுழன்று பணியாற்ற வேண்டுமென்பதற்கு சிறந்த உதாரணம் அண்ணன் கோ.சி.மணி அவர்கள்..
..
கட்சியின் இக்கட்டான நேரங்களில் கலைஞருக்கு உறுதுணையாக இருந்தவர் பொதுக்குழுவில் தலைமைக்கெதிராக சிலர் பேசுவார்கள் இவர் கூட பேசுவார் அது சரியான நடைமுறையில்லையென்று பேசுவார் .. ஒருகட்டத்தில் நிலைமையை சரிச்செய்ய வேண்டுமெனில் கலைஞரின் கண்கள் மணியை தான் தேடும் .. கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் மணியை கலைஞர் பார்ப்பார்.. புரிந்துக்கொண்டு மேலே வந்து கலைஞர் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறது நமது கருத்துகளை சொல்லிவிட்டோம்,.. தலைவரின் முடிவே இறுதியானதென்று முடித்துவிடுவார்..
..
வைகோ திமுகவிலிருந்து விலகிய நேரம் .. பொதுக்குழு உறுப்பினர்கள் சிலரும் ஒன்பது மாவட்ட செயலாளர்களும் அவர் பின்னே போய்விட்ட பிறகு கட்சியின் உரிமையை கோருகிறார்கள் ..பொதுக்குழுவை கூட்டி பலத்தை காட்டவேண்டிய கட்டாயம் எங்கே நடத்துவதென பேராசியர் கேட்டபோது கொஞ்சமும் யோசிக்காமல் தஞ்சையிலே கூட்டலாம் அதுதான் பாதுகாப்பானது மணி பார்த்துக்கொள்வான் என்றார் தலைவர் கலைஞர்.. அந்தளவிற்கு நம்பிக்கையை பெற்றிருந்தார் .. அவர் மந்திரியாக இருந்த போதுதான் அழுக்கு நகரம் என்ற அவப்பெயரை மாற்றி கும்பகோணத்திற்கு புதிய முகம் தந்தார்
கும்பேஸ்வரன் கோவிலைச் சுற்றி சாக்கடைகள் மழைக்காலம் வந்தால் அவ்வளவுதான் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும் யானைக்கால் நோயால் கும்பகோணத்தை சுற்றி உள்ளவர்கள் அதிகம் பாதிக்கபட்டார்கள் .. பாதாள சாக்கடையை கொண்டுவந்து கும்பகோணத்தையே சிங்காரித்தவர் .. கலைஞர் கூட சிங்காரித்து வைத்திருக்கிறார் என்றார் ..
..
தளபதி ஸ்டாலின் உள்ளாச்சித்துறை அமைச்சர் அப்போதுதான் கோ.சி.மணி அவர்களின் துணைவியார் மரணமடைந்தார்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த தளபதி அவர்கள் வந்தார்கள் அவரை அழைத்து கும்பகோணத்தில தேரோட்டம் வருது சாலைகள் வழிதடங்களில் விளக்குகளையெல்லாம் சரிபார்க்க சொல்லு அது உன் டிபார்ட்மெண்ட்ல தான் வருது சீக்கிரம் முடிக்க சொல்லு என்றார் ..மனைவி மரணத்திற்கு வந்தவரிடத்தில் தொகுதி நலன் குறித்து பேச முடிகிறது பாருங்கள் அதுதான் மணி அண்ணன் .. எப்படி செயல்படவேண்டும் என்பதை உணர்த்தியவர் பொதுவாழ்விற்கு வந்தபிறகு எல்லாவற்றையும் மறந்து பொதுப்பணி என்ற சிந்தனையில் இருக்கவேண்டும் என உணர்த்தியவர்..
..
விவசாயிகள் பிரச்சனைப்பற்றி துள்ளியமாய் அறிந்தவர் பேரறிஞர் அண்ணா கூட காவிரி கடைமடை பிரச்சனையென்றால் மணியை கூப்பிடு அவனுக்குதான் எல்லாம் தெரியும் என்பார் கலைஞரும் காவிரி பிரச்சனையில் மணியிடம் தான் கேட்பார்..கட்சி விடயத்தில் விட்டுகொடுப்பதென்பதே இவரிடமில்லை..
ஒவ்வொரு கிளைச் செயலாளர் பெயரை அறிந்து வைத்திருந்தார்.. அவர்களோடு கட்சிப்பணியில் இரண்டற கலந்திருந்தார்
ஓயாத உழைப்பாளி.. கட்சிக்கெதிராக யார் வந்தாலும் முகம் பார்க்க மாட்டார்..
"மேக்கிரி மங்கலத்து போக்கிரி" என அண்ணாவே அழைத்தார்..
மணி அண்ணன் மரணித்த போது கலைஞர் இரங்கலில் இப்படிதான் சொன்னார்.மணி இல்லாத தஞ்சையை நினைத்து பார்க்க என் குலைநடுங்குகிறதே என்றார் ..
உடல்நலியுற்றிருந்த நிலையிலும் தன் தலைவரின் பிறந்தாளுக்கு காண வரிசையில் வருகிறார் .. அவரது கையைப் பற்றிபிடித்துக்கொண்டு சில நிமிடங்கள் கலைஞர் இருந்தார் அது பல விடயங்களை சொன்னது.. தொண்டனுக்கும் தலைவனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை சொன்னது..
..
மணி அண்ணன் போன்றோர்களால் தான் திராவிடம் இயக்கம் இன்றைக்கும் அசைக்கமுடியாததாக .. வலுவோடு இருக்கிறது இந்த பிறந்தநாளின் வீரவணக்கத்தை செலுத்துவோம்..
..
ஆலஞ்சியார்
Wednesday, September 12, 2018
ஆளுரார்
ஆளூர் ஷாநவாஸ்..
வி.சி.க துணைப்பொதுசெயலர் ஆளுராருக்கெதிராக சில இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டனம் ஆர்பார்ட்டம் என வரிசை கட்டுகிறார்கள்..
அப்படி என்ன பேசிவிட்டார் இஸ்லாமிய பெண் ஒருவர் மதம்மாறி மாற்றுமதத்தவரை திருமணம் செய்தார் அவரை விமர்சிப்பதாக
"விபச்சாரம்" என்கிற சொற்சொடரை பயன்படுத்தி கீழ்தரமாக கருத்திட்டதை கண்டித்தார் .. அவ்வளவுதான்
கடுமையான வார்த்தைகளால் அறிக்கைகளை தருகிறார்கள் நாளை அவரை இஸ்லாமிய விலக்கு கூட செய்யலாம்..
..
அவரின் கருத்து இதோ..
முஸ்லிம் பெண் ஒருவர் நரகத்தின் எரிப்பொருள் ஆவதை தடுக்கவே ஜமாத் அறிக்கை வெளியிட்டதாக சொன்னதை.. இதே அளவுகோலை ஏன் ஆண்களுக்கு கடைபிடிக்கவில்லை .. நாடாளுமன்ற உறுப்பினரின் மகனுக்காக ஜமாத் கதவுகளை தட்டியபோது ஏன் திறக்கவில்லை என்று சாடியிருக்கிறார்.. சம்பந்தபட்ட பெண்ணின் திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடைபெறாத போது ஏன் பத்வா கொடுக்கவேண்டும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பெண்ணை இஸ்லாமிய சட்டம் கட்டுபடுத்தாதென்று அறிக்கை விட்டது உலமாக்களை சூடாக்கி இருக்கிறது .. குவைத் தமிழ் உலமாக்கள் கண்டன ஆர்பார்ட்டத்தை நாளை நடத்துகிறார்கள்..
..
முதலில் தனி ஒருவரின் திருமண விடயத்தில் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் திருமண வயதை எட்டிய ஒரு பெண் அரசியல் அமைப்பு அவருக்கு வழங்கிய உரிமையில் அவர் சுயமாக எடுத்த முடிவை ஒட்டுமொத்த சமூதாயத்திற்கே கேட்டை போல சித்தரித்தது அறிவிலித்தனம்
அவரின் குடும்பத்தார் பல முறை எடுத்துச் சொல்லியும் அவரைதான் திருமணம் முடிப்பேன் என்று சென்றுவிட்ட பிறகு அதை பெரிதாக்க ஒன்றுமில்லை ..அதை இஸ்லாமிய அமைப்புகளும் இந்து அமைப்புகளும் கையிலெடுக்க வேண்டியதே இல்லை.. இதில் மதரீதியாக அணுகியதே தவறு .. ஒரு பெண் முஸ்லீமாக மதமாறி திருமணம் செய்தால் அதில் தவறில்லை என்கிற போது இதுவும் தவறில்லை என்றாகிறது இதை தான் ஆளூரார் அவரது அறிக்கையில் சொல்லியிருக்கிறார் ..
..
உடனே ஆளூர் ஷாநாவாஸ் எதிராக "பசு தோல்போர்த்திய புலி" என்றெல்லாம் வசனமெழுத தேவையில்லை இஸ்லாமிய இயக்கத்தில் இல்லையென்பதற்காக அவரை சாடுவதும் கொச்சைப்படுத்தி பேசுவதும் தேவையில்லாதது .. சொர்க்கத்தின் டிக்கட் இவர்கள்தான் மொத்தமாக விநியோகம் செய்கிறார்களா என்றும் தெரியவில்லை
ஆளுரார் அறிக்கையில் தவறிருந்தால் அதை விளக்கலாம் அதை விடுத்து ஆர்பாட்டம் கண்டனம் என்பதெல்லாம் சிறுப்பிள்ளைத்தனம்
அதோடு அவரை கல்யாணராமன் போன்ற அரைகுறைகளோடு/மதவெறியர்களோடு ஒப்பிடுவதும் சரியானதல்ல.. அவர் மதம்சார்ந்து இயக்கத்தில் இல்லாமல் விசிக போன்ற சமூகநீதிக்காக போராடுகிற இயக்கத்தில் இருப்பதையும் தொடர்ந்து பல்வேறு விவாதங்களில் காவிக்கெதிராக ஆணியடித்துவருவதை கருத்தில் கொள்ளவேண்டும் இப்போது அவர் கூறிய கருத்தில் கூட எந்தவித தவறுமிருப்பதாக தெரியவில்லை வேண்டாம் என்று உதறிதள்ளிவிட்டு போன பெண்ணை ஏன் விமர்சனம் செய்கிறீர் என்கிறார்..அது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எரிச்சலை தந்திருக்கிறது .. தொடர்ந்து சிறுபான்மை சமூகத்திற்காக குரல் கொடுப்பவர் சமூதாயத்தை தாக்க வரும் பகைக்கெதிரே போராடுகிறவர்.. தன் சமூகத்தின் பீடாதிபதிகளை பார்த்து
சகதியில் கால் வைத்துவிட்டீர்கள் "நரகலில்" வைத்த காலை கழுவுங்களென சொன்னது குற்றமா..? என்ன .. ஆளுர் ஷாநவாஸின் கருத்தின் தவறிருப்பதாக தெரியவில்லை.. மதமேறி கிடப்பவர்களுக்கு அது புரியாது
எக்காரணம் கொண்டும் ஆளுர் ஷாநவாஸை விட்டுகொடுக்க முடியாது..
..
#Isupportaloorshanavas
..
ஆலஞ்சியார்
Tuesday, September 11, 2018
மன்மோகன் சிங்
மத்திய பாஜக அரசு தனது எல்லைகளை கடந்து சென்று கொண்டு உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராடவேண்டிய நேரமாகும். தேசத்திற்கு விரோதமான பல்வேறு காரியங்களில் மோடி அரசு ஈடுபட்டு வருகின்றது. இந்த அரசை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
டாக்டர் மன்மோகன் சிங் ..
..
மிகவும் எளிமையாக பேசகூடியவர் நாகரீகமாக கோபம் கொள்ளாத சொல்லாடலை பயன்படுத்தும் திரு.மன்மோகன் சிங் போன்றவர்கள் கூட கவலைகொள்ளும் நிலையில் நாடு இருப்பதை கண்டு பதறுகிறார்கள் எல்லாதுறையிலும் செயல்பாட்டிலும் தோல்வியை தழுவிய அரசாய் மோடியின் அரசு இந்தியாவின் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவதாக சொல்லி ..கடும் வீழ்ச்சியை தந்திருக்கிறது .. மக்கள் மீது சுமத்தபடும் வரிசுமைகள் தாங்கமுடியாதவாறு இருப்பதும் நடுத்தர மக்கள் சிரமபடுவதும் ..வெளியில் சொல்லமுடியாமல் தவிப்பதும் இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்துகாட்டுகிறது..
..
அத்தியாவசியப் பொருட்களின் விலை சாமானியனின் குரல்வலையை நெரிக்கிறது
உலகில் பெட்ரோல்விலை பாரத தேசத்தில் தான் அதிகம் .. எரிவாயு விலை நானுறை தொட்டபோது வானத்திற்கும் பூமிக்கும் ர்கள் இப்போது எதுவும் எங்கள் கையில் என்கிறது பாஜக அரசு ..
..
முற்போக்காளர்கள் நாட்டின் நலன் நாடுவோர் ..
கல்வியலாளர்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை இந்த அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என்பதோடு காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை கொண்டுவந்தமைக்கு
ஒருவித குற்றவுணர்வை பதிகிறார்கள்..
மதவெறியை தவிர .. வேறொன்றும் சாதித்தாக தெரியவில்லை ஒட்டுமொத்தமாக அறிவிலிகளும் பொய்யர்களும் பித்தலாட்டகாரர்களும் என பாஜகவினரின் செயல்பாடுகள் இருக்கின்றன
பொய்களால் கட்டியெழுப்பட்ட ஆட்சி ஆட்டம் காண தொடங்கியிருக்கிறது ..
விரைவில் வீழும்..
..
ஆலஞ்சியார்
Monday, September 10, 2018
மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு..
..
பெரியார்
இந்த சமூகத்தை புரையோடி போயிருந்த மூடத்தை துடைத்தெறிய வந்தவர் எதையும் தொலைநோக்கோடு பார்த்தவர் சாதி மதத்திற்கெதிரே ஆணியடித்தவர் பிற்போக்குத்தனத்தை பெண்ணடிமையை தகர்த்தவர் எதையும் ஆழ்ந்தறிந்து கவனத்தோடு இந்த மனித குலத்திற்கு பொருந்துமா என பார்த்தவர் ..அவரை ஒரு கட்டுக்குள்,அடைத்துவிட முடியாது ..
..
யாரிந்த பெரியார் ..
மதத்திற்கு எதிரானவரா.. சாதிய கட்டுபாட்டை தகர்க்க வந்தவரா ஏன் கடவுள் நம்பிக்கையை மட்டும் சாடினார் .. அவரே சொல்கிறார் .. கடவுள்கள் மீது எனக்கென்ன கோபமா..
மக்களை பிரித்து ஏற்றதாழ்வை கொண்டுவந்த சாதிய கட்டமைப்பை கலைய வேண்டுமென்றேன் அது வேதம் சொன்னதென்றார் அப்படியெனில் வேதத்தை கொளுத்துவோமென்றேன் வேதம் கடவுள் அருளியதென்றார் அந்த கடவுளையே மறுத்தேன் என்கிறார்.. பெரியாரை கடவுள் மறுப்பாளர் என்ற வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது ..
..
பெரியார் அதிகம் பேசியது பெண்களுக்காக என்றே எண்ணுகிறேன்.. பெண் கல்வி விடயத்தில் மிக அதிகம் கவலைபட்டவரும் அவர்தான் .. பெண்கள் கையில் உள்ள கரண்டியை பிடிங்கிக்கொண்டு புத்தகத்தை கொடுங்கள் என்றவர் .. இன்னும் சற்று அதிகமாகவே.. உங்கள் ஆண் குழந்தைகளை படிக்க வைக்காவிட்டாலும் பெண்குழந்தை படிக்கவையுங்கள் என்றார் அதற்கான வசதி உங்கள் ஊரில் இல்லையென்றால் வெளியூர் சென்றாவது படிக்க வையுங்கள் .. கூலி வேலை செய்தாவது படிக்கவையுங்களென்றார் .. பெண்கள் கல்வி அறிவு ஒன்றே இந்த சமூக மாற்றத்திற்கு வழிவகுக்குமென்று நம்பினார்
பெண்கள் கல்வி அறிவு தன்னம்பிக்கையை தருமென்றார் .. ஒரு தலைமுறையையே அறிவின் பாதையின் செலுத்துமென்று நம்பினார்.. ஆண்கள் பெண்களை புகழ்வதெல்லாம் அவர்களை அடிமைபடுத்தவே என்றார்.. பெண்களுக்கு சொத்தில் சமஉரிமையை தரவேண்டுமென்று பேசியவர் .. அப்போது அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது
அது இந்து குடும்ப அமைப்பையே சிதறடித்துவிடுமென்று ஆச்சாரியார்கள் கடும் எதிர்ப்பை தந்தனர்.. ஆனால் அதை இந்தியாவிற்கு வழிகாட்டுதலாய் தமிழகத்தில் சட்டமியற்றி நடைமுறைப்படுத்தினார் பெரியாரின் பெருஞ்சீடர் கலைஞர் பெருமகன்..
..
பெரியார் எதையும் தொலைநோக்கோடு அணுகினார் எந்தவொரு விடயத்தை அவரிடத்தில் கொண்டு சென்றாலும் சரியான தீர்வையே தந்தார்.. குலக்கல்விக்கெதிராக கடும் எதிர்ப்பை பதிவு செய்தவர் அக்ரஹாரத்தையே கொளுத்த நேரிடும் என எச்சரித்தார் ஆதிக்கசாதியினரிடமிருந்து அதிகாரத்தை பிடிங்கினால் தான் தீர்வு வருமென எண்ணி காங்கிரஸில் பார்பனரல்லாத தலைவரை கொண்டு வர காரணமானார் அப்படிதான் காமராஜர் முதல்வரானதும்.. ஆதிதிராவிடரான பரமேஸ்வரன் அறநிலையத்துறை அமைச்சரானதும் .. அன்று தொடங்கிய திராவிடர்கள் அதிகாரம் இன்றும் தொடர்கிறது
பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் மாறுபட்டு முன்னேற்றத்தை பெற்று இருக்கிறதெனில் அது பெரியாரெனும் பேரறிவால் பெற்றது..
..
பெரியார் சமூக விஞ்ஞானி ..மனிதனை தொட்டால் தீட்டென்றவனை சாதீய வர்ணம் கொண்டு பிரித்து ஏற்றதாழ்வென்றவனை சம்மட்டி அடிகொடுத்தவர் ..இன்றைக்கும் பிற மாநிலங்கள் தமிழகத்தை பார்த்து ..விழிப்புணர்வு பெறுகிறதே அதற்கு காரணம் பெரியார் ஆற்றிய பெருந்தொண்டு ..
இங்கே ஒடுக்கபட்ட விளிம்புநிலை மக்கள் சுயமரியாதையோடு நடத்தபடுகிறார்களே அதற்கு இந்த பெருங்கிழவன் ஊட்டிய சுயமரியாதைதான் காரணம் .. வடமாநிலங்களில் தலித்துகள் பொது குளத்தில் தண்ணீர் அள்ளி குடித்தற்கே அம்மணமாக்கி அடித்து கொல்கிற சூழல் விஞ்ஞான வளர்ச்சியிலும் முற்போக்கு பேசி திரியும் காலத்திலும் இது போன்ற கொடுமைகள் நிகழதான் செய்கிறது ..
..
பெரியார் ஏன் தனித்துவமாக தெரிகிறார் மறைந்து 45 ஆண்டுகளாகியும் இன்னமும் பேசபடுகிறாரே.. இன்னமும் தேவைபடுகிறாரே.. பாசிச வர்க்கத்தினர் இவர் பெயரை கேட்டாலே அஞ்சுகிறார்களே.. இவரை பேசாமல் தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாமல் இருக்கிறதே..இவரை சுற்றியே இந்திய அரசியல்தன்மை செயல்பட துவங்கியிருக்கிறதே ..ஏன் .. பெரியார் மட்டுமே யதாரித்தத்தை நமக்கு உணர்த்தினார் மனம் சொல்வதை விடுத்து அறிவு கொண்டு பார்க்க சொன்னார் எதையும் தீர்க்கமான பார்வையோடு பார்த்தார் ..மூடநம்பிக்கைகள் மனிதனை அடிமைபடுத்துமென்றார் .. சாதி மத கட்டமைப்பு மனிதகுல விரோதமென்றார்..
..
இறுதியாய்..
இ்ந்த மண்ணில் நிறைய அறிஞர்கள் விஞ்ஞானிகள் அறிவியலாளர்கள் தத்துவஞானிகள் மாபெரும் தலைவர்கள் சான்றோர்கள் ஆன்றோர்கள் ..மதம் பேசியோர் மார்க்கம் பேசியோர்.. வேதம் சொன்னவர்கள் ..வந்தார்கள் ..நல்லதையும் சொன்னார்கள் காலபோக்கில் சிலவை நல்லதாகவும் ..மானிட சமூகத்திற்கு கேட்டையும் கூட விளைவித்தது.. ஆனால் எல்லோருமே ஒன்றில் ஒற்றுமையாக இருந்தார்கள் தாங்கள் சொல்வது சரி என்றார்கள் .. ஆனால் பேராசான் தந்தை பெரியார் மட்டும் தான் ..நான் சொல்வதை அப்படியே ஏற்கவேண்டுமென்பதில்லை உன் அறிவேற்றால் மட்டும் ஏற்றுக்கொள் என்றார் ..
ஆம் ..
யார் சொன்னாலும் எதைப் பற்றி சொன்னாலும்,
ஏன் நானே சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே என்றார் ..
எதையும்,உள்வாங்க சொன்னார் உன் அறிவோடு கதைக்க சொன்னார் சிந்தித்து தெளிவு பெறு என்றார்..கடவுள் மதம் சாதி வர்ணாசிரம கோட்பாடு ஏற்றதாழ்வு தொட்டால் தீட்டு என்பதெல்லாம் ஆரியர்கள் ஏற்படுத்தியது
வேதங்கள் சாஸ்திரங்கள் எல்லாம் அவர்களின் பிழைப்பிற்காக ஏற்படுத்தபட்டவை என்றார்..
எந்த மதத்திற்காகவோ அல்லது இனத்திற்காகவோ அவர் உழைக்கவில்லை மாறாக ஒட்டுமொத்த மானிட சமூக மேம்பாடு அதை நோக்கிய நகர்வே அவரது வாழ்வாக இருந்தது .. பெண்களின் முன்னேற்றமே சமூக சீர்த்திருத்திற்கு அடிகோலாக அமையுமென்பதில் உறுதியாக இருந்தார் இந்த ஆணாதிக்க சமூக சூழலை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எதிரித்தார் .. பெண்கள் தங்கள் சொந்தகாலில் நிற்க வேண்டுமென்று விரும்பினார் பெண்கள் ஆண்களை போல எல்லாதுறைகளிலும் பணியாற்ற வேண்டும்
அதற்கு மதங்களும் சாதிய கட்டமைப்பும் தடையாக இருக்கிறதென்றார்.. காலம் கடந்தும் பெரியார் தேவைபடுகிறாரெனில் இந்த சமூக சூழல் எந்தளவிற்கு அவரின் தேவையை உணர்த்துகிறதென்பதை அறியலாம்
..
பெரியார் இந்த நூற்றாண்டில் மிக சிறந்த மனிதர் .. மனிதனை மானமுள்ள சுயமரியாதைகாரனாக .. யாருக்கும் எவரும் குறைந்தவரில்லையென்ற நிலைபாட்டை கடைசிவரை வலியுறுத்தியவர் ..
ஆம் மானமும் அறிவுமே மனிதர்க்கு அழகு
மானிடம் கண்ட மகத்தான தலைவர்
..
பிழைக்க ஒர் மார்க்கம்
புதிய ஜமாத் தோற்றம்..
நாளுக்கொரு ஆளுக்கொரு ஜமாத் துவக்கபடுவது அவரவர் இருப்பை பலமாக்கிக்கொள்ளவே தவிர இந்த சிறுபான்மை சமூதாயத்திற்கு நலன்பயக்க அல்ல.. இப்போது இது நல்ல வியாபாரமாகிவிட்டது கொஞ்சம் மார்க்கஅறிவு ,பேசும்திறன் ..பொய்யை யாருமறியாமல் சேர்க்கும் கலை .. கட்டாயம் தாடி நெற்றியில் தளும்பு .. கூடவே சில அரைகுறை கிறுக்கர்கள் பயணம் எளிதாகும்..
..
எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம்.. உங்களுரில் ஒரு மாநாடு நடத்த திட்டமிடுங்கள் உடனே தலைமை உங்க ஊரில் உள்ள வங்கியில் கணக்கை திறக்க சொல்வார்கள் .. மாநாட்டிற்கு எவ்வளவு செலவாகுமென கேட்பார்கள்.. சொன்னவுடன் .. சமுக சொந்தங்களே..மார்க்கத்தை சத்தியத்தை..? எடுத்துவைத்து சமூதாய மக்களிடையே புறையோடிபோயிருக்கிற மூடத்தை விரட்டி ..சம்பூர்ண மார்க்கத்தைப் பற்றிய அறிவை பெற அனைவரும் வாருங்கள்.. உங்களால் முடிந்த உதவியை நேரடியாக வங்கி கணக்கிற்கே அனுப்புங்களென பிரச்சாரம் செய்வார்கள்.. அல்லாவின் பாதையில் செலவு செய்யுங்கள் ஒவ்வொரு காசுக்கும் அல்லாவிடத்தில் நன்மை பெறுங்கள்.. நீங்கள் அனுப்பும் நிதி வங்கி மூலம் வருவதால் கணக்குவழக்குகளை நேர்மையாக இருக்கும் என்பார்கள் ..வெளிநாடுகளில் இருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் பணம் கொட்டும்
செலவு போக மீதி தலைமைக்கு அனுப்படும் .. இதில் தணிக்கை எல்லாம் கிடையாது .. 20 விழுக்காடு வரை சாப்பிட சட்டம் அனுமதிக்கிறது
முதலே இல்லாமல் கொள்ளை லாபம் அடிக்கலாம் ..
..
குறிப்பாக பிற்போக்குத்தனமான ..அல்லது சட்டென்று உணர்ச்சிவயபடுகிற எதையும் ஆய்ந்தறியாமல் நம்பிவிடுகிற மூளைச்சலவை செய்யப்பட்ட கழுதைகளைப்போல பொதி சுமப்பவர்கள் இருக்கும் வரை மத வியாபாரிகளின் வாழ்வு வளப்படும் .. என் சிற்றறிவுக்குபட்டவரை தமிழகத்தில் தான் அதிகளவில் இஸ்லாமிய ஜமாத் /கட்சிகள்அமைப்புகள் இருப்பதாக நினைக்கிறேன் .. வளம்கொழிக்க நல்வாய்ப்பாய் சமுதாயம் தந்த பாதை புதிய பாதையிது .. உண்மையில் இஸ்லாமிய அடிப்படை சித்தாந்தத்தை /கருத்தியலை அறியாதவர்கள் இவர்கள்
ஒற்றுமையை வளர்க்கிற போதிக்கிற பிற சமூகத்தின் உரிமையில் கூட தலையிட கூடாதென்கிற உபதேசத்தை தருகிற தனிமனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டுமென்று எச்சரிக்கிற மத/மார்க்கத்தில் இருந்துக்கொண்டே இஸ்லாமியர்களிடையே பிரிவினையை உணடாக்கி பகையை வளர்த்து ..
ஒருவித மதபோதையோடு அலையவிடுகிற செயல் மிக கொடுமையானது.. குடும்ப உறவுகளில் கூட அல்லாவின் பெயரைச்சொல்லி மனகசப்பை பெற்றவர்களிடம் கூட காட்டுகிற கயமைத்தனம்
ஒன்றுபட்டு கிடத்த ஜமாத்துகளை பிரித்து அடக்குமிடம் வரை அடித்துக்கொள்கிற கேடுகெட்ட நிலைக்கு காரணியாக விளங்குவது
இந்த தவ்ஹீத் ஜமாத்கள்..
..
புதிய உதயம்
முந்துவோருக்கு சிறப்பு சலுகைகள் வசூலாகும் பணத்தில் அதிக விழுக்காடு ஒதுக்கபடும் .. வளமான வாழ்விற்கு உத்தரவாதம் .. சத்தியமார்க்கத்தில் இணையுங்கள்..
பெண்களை மோகபொருளாக பார்க்கும் அயோக்கியர்களுக்கு வரபிரசாதமாக அமையும்.. சிறப்பு வகுப்புகள் என இளைஞர்களை சிறுவர்களை மூளைச்சலவை செய்து ஒருவித வெறுப்புணர்ச்சியை விதைத்து .. சொந்தங்களுக்கு முன்பே பகைமை பேசி எல்லாம் அறிந்தவர்கள் போல செயல்பட தூன்டுவார்கள்.. ஒற்றுமையை சிதைப்பதொன்றே இவர்களால் நடந்தேறியதே தவிர.. சமுதாயம் அடைந்த பலன் எதுவுமில்லை.. சிறுவர்கள் விளங்காதவர்கள் சிறைச்சென்றதை தவிர..
ஆனால் தலைவர்கள் சொகுசாக உடல் வளையாமல் தின்று கொழுத்திருக்கிறார்கள்
நல்ல வியாபாராம்.. களைகட்டுகிறது..
புதியதோர் உதயம்
(த.மு.த.ஜ)
தமிழ்நாடு முற்போக்கு தவ்ஹீத் ஜமாத்.
..
பிழைக்க ஒரு மார்க்கம்
இனிய மார்க்கம் ..
..
ஆலஞ்சியார்
Sunday, September 9, 2018
ஊழல் அரசுகளை.. விரட்டுவோம்
குட்கா ..
எடப்பாடி அரசிற்கு தலைவலியாக குட்கா விவகாரம் தலையெடுத்திருக்கிறது விஜயபாஸ்கர் மத்திய புலனாய்வின் வட்டத்திற்குள் கொண்டுவரபடலாம் .. ஆனால் முதல்வர் எடப்பாடி பழநிசாமி பதவி விலக சொல்லியும் மறுத்திருக்கிறார் என செய்திகள் வருகின்றன..
அதிமுகவின் அடித்தளத்தையே அசைத்து ஒன்றுமில்லாதாக்கும் செயலில் பாஜக இறங்கியிருப்பதாக அறியமுடிகிறது .. ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஊழலில் திளைத்து செழுமையாக இருக்கிறார்கள்..
..
இந்தியாவிலேயே முதல்வராக இருக்கும் போதே கொள்ளையடித்தற்காக .. திருடியென முத்திரை குத்தி சிறைவைக்கப்பட்ட சரித்திர பின்னணி கொண்ட தலைவியின் வழிநடப்போரிடம் வேறெதை எதிர்பார்க்கமுடியும் .. முதல்வரே தன் சம்பந்திக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை ஒற்றைசாளர முறையில் ஒதுக்குவதும் .. அது சட்டவிரோதமென்று திமுக தலைவர் உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியும் .. ஏன் நீதிமன்றத்தில் திமுக வழக்கை பதிவு செய்தும் .. ஊடகங்களில் விவாதங்கள் நடைபெறவில்லை.. மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்காததால்..
முன்பு கொள்ளையடித்த ஜெயலலிதாவை தியாகியாக்கி .. அரசே புகழ்மாலை செலுத்துவதால் .. அரசுபணத்தை கொள்ளையடிப்பதும்.. ஊழல் செய்வதும் சட்டப்படி தவறில்லையோ என அதிமுகவை சேர்ந்தவர்கள் அமைச்சர்கள் கருதிவிட்டார்கள் போலும்.
..
ஊழலுக்கெதிராக செயல்படுவதாக சொல்லிக்கொள்ளும் மத்திய அரசு விநோதமான முறையில் கொள்ளையடிப்பதும் பாஜகவை சேர்ந்தவர்கள் மீதே குற்றசாட்டுகள் வருவதும் பிரதமர் மீதே உச்சநீதிமன்றத்தில் ரபேல் விமான ஊழல் குற்றசாட்டு பதிய வழக்குகள் வருவதும் விடுதலை இந்தியாவின் புதிய பரிணாமம் .. இவர்கள் தான் ஊழலை ஒழிக்கவந்தவர்களென நம்ப வேண்டுமாம்.. தமிழகத்தின் முதல்வர் மீதே,குற்றம் நிரூபிக்கபட்ட பிறகு அதிகாரம் மிக்க மத்திய அமைச்சர்.. தலைமை திருடியை சந்தித்து வழக்கை நீர்த்துபோக செய்தது அதன் தொடர்ச்சிதான் குற்றவாளிக்கு நினைவு மண்டபம் வரை வந்து நிற்கிறது .. இதே ஜெயலலிதாவின் விழுதுகள் ஊழலில் கரைகண்டவர்கள் .. ஏனடா திருடினாய் என கேட்டால் ஆசியாவின் பணக்காரன் என்றெல்லாம் திசை திருப்புவார்கள் ..முடிந்தால் நிரூபி என்றால் ஒருவரையும் காணோம் .. அதிமுகவினரை ஊழல்வாதிகளை நாடறிந்த கொள்ளையர்களை
மத்திய பாசிசபாஜக அரசே ஊக்குவிக்குகிறது..
..
அறுபதாண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் நாடு சந்திக்காத துயரங்களை அறுபது மாத பாசிச பாஜகவின் ஆட்சி மோடி ஆட்சி நமக்கு தந்திருக்கிறது .. கார்ப்பரேட் தொழில் அதிபர்கள் வளத்திற்காக இயற்கை வளங்கள் சுரண்டபடுவதும்,.. மக்களைப்பற்றி கவலைக் கொள்ளாமல் விலையேற்றத்தை தடுத்த நிறுத்த தவறியதும் .. பெட்ரோல் விலை உலகிலேயே இந்தியாவில் அதிகமாக வரிவிதித்து விற்கபடுவதும் .. ஒட்டுமொத்த பொருளாதாரமும் வீழ்ந்து உலகளவில் இந்திய முகம் கேலியாக பார்க்கபடுவதுமே மோடியின் சாதனை.. ஊழலை இவர்கள் ஆட்சியில் புதிய காரண பெயரிட்டு அழைக்கும் விநோதம் கருப்புப்பணம் ..முதலீடாகிறது ..கணக்கு தணிக்கை அறிக்கையெல்லாம் இழப்பாகிறது...காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்தான் இதெல்லாமே ஊழல் என்று பெயர் மாற்றம் செய்யபடும்..
..
ஊழலை ஆதரிக்கிற ஊழலோடு கைகோர்க்கிற
இந்த ஆட்சிக்கு எதிரே மக்கள் வெகுண்டெழுந்து போராட வேண்டும் மத்திய மாநில அரசுகள் செயலிழந்து நிற்கின்றன ஒன்றையொன்று சார்ந்து .. மக்கள் புறக்கணிக்கும் தொடக்கமே..
நாளைய பாரத பந்த்
..
பாஜக அதிமுக அரசுகளை...தூக்கியெறிவோம்..
Saturday, September 8, 2018
இந்தி ..
இந்துத்துவா சித்தாந்தத்தின் எதிரான அடையாளம் தான் தந்தை பெரியார். ஆகவே , பெரியாரை ஆதரிக்கும் அனைவரும் அவர்களை பொருத்தவரை தேசத் துரோகிகள் தான். பெரியார் எமது அடையாளம்.
ஹிந்தியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்கிறார் பிரதமர் மோடி. ஹிந்தி படித்தால் வேலை கிடைத்து விடுமா என்ன ? அப்படி என்றால் ஹிந்தி பேசுபவர்கள் ஏன் சரவண பவன் ஹோட்டலில் தோசை சுட்டு கொண்டு இருக்க வேண்டும் . ஹிந்தி பேசுபவர்கள் ஏன் தமிழ் நாட்டிற்கு இடம் பெயர்ந்து தொழில் தேட வேண்டும்.
#மானமிகு_கனிமொழி ..
..
நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல இன்னும் சொல்லப்போனால் எந்தவொரு மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல..
பன்முக தேசத்தில் ஒரு மொழியை அதுவும் 1825 பிறகு உருவாக்கப்பட்ட மொழியை தனக்கென்று ஒரு இலக்கணமில்லாத .. உருது மற்றும்,ஹிப்ளு மொழி இலக்கணத்தை தன்னகத்தே கொண்ட கலப்பு மொழியை இந்தியாவின் பன்முக இனத்தின் மீது திணிப்பதை அதையே பிரதமர் மறைமுகமாக செய்ய நினைப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்..
"தினமும் உரையாடல் மூலம் ஹிந்தி மொழியை பரப்ப வேண்டும். ஹிந்தி மொழியின் மூலம் நாம் உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள முடியும். ஹிந்தி பேசும் போது சாதாரண வார்த்தைகளை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். தொழில் நுட்ப வாதத்தைகளை பயன்படுத்தி பேச வேண்டாம் என பாரத பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருப்பதை ஏற்க முடியாது இது ஒருவகை சர்வாதிகாரத்தனம்
நேருவின் உறுதிமொழிக்கெதிரானது..
தென்னாட்டின் மீதான கலைச்சார தாக்குதல் இது..
..
பிரதமருக்கு நிறைய வேலை இருக்கிறது அதைவிடுத்து பல்வேறு இனங்களின் மீதான கலாச்சார யுத்தத்தை மௌனமாக செய்வதென்பதை ஏற்கமுடியாது .. எங்கிருந்தோ வந்த மொழியின் வளர்ச்சிக்காக ..120 கோடி பேர் வாழும் நாட்டில் சில ஆயிரம் பேர்கள் மட்டுமே பேசுகிற ..ஏறக்குறைய செத்த மொழியை சிங்காரிப்பதும்,.. அது பயன்தராதென்ற நிலை வந்ததும் இந்தியை முதன்மைபடுத்த நினைக்கிறது மத்திய பாசிசபாஜக அரசு.. தொன்மையான உலகின் மூத்த மொழியை கொண்ட இனம் வாழும் நாட்டில் .. உலகிற்கே மொழியின் மூலஇலக்கணத்தை கலாச்சாரத்தை தந்த இனம் வாழும் நாட்டில்.. திராவிடர்கள் பேசிய மொழி தமிழென்று ஆய்வுகளும் தரவுகளும் அகழ்வு ஆராய்ச்சிகளும் .. இந்தியாவில் வாழ்ந்த மூத்த குடி திராவிட இனத்தை சேர்ந்ததென்றும் ஆதாரங்கள் கிடைக்க பெறுகிற காலகட்டத்தில் இந்திய துணைகண்டத்தின் மொழி தமிழென்ற உண்மையை மறைக்க அல்லது தடுக்க மிக வேகமாக அவசர அவரசமாக இந்தியை திணிக்க முற்படுகிறார்கள்.
இந்தியர்களின் பூர்வீக மொழியை
புறக்கணிக்கவேண்டுமென்பதற்காகவே இந்தி திணிப்பை செய்ய துடிக்கிறது பாசிபாஜக அரசு
..
எந்தவொரு மொழியும் வளமான இலக்கண கட்டமைப்போடு இல்லையெனில் காலபோக்கில் அழிந்துவிடும் .. தெய்வத்தின் பாஷை என்று
சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கும் ..
எந்தவொரு திணிப்பும் மக்களால் சமூகத்தால் புறக்கணிக்கபட்டதாகதான் வரலாறு..
உணர்தல் நலம்
..
மொழிகளின் தாய் எமது தமிழ்..
..
ஆலஞ்சியார்
Friday, September 7, 2018
பெரியார் அம்பேத்கர்
இந்த காலத்திற்கு தந்தை பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கதக்கதல்ல.. @கிருஷ்ணசாமி
..
எது சரியில்லையென்கிறார் சகமனிதனை மதிக்க கூடாதென்கிறாரா .. ஏற்றதாழ்வோடு தாழ்ந்தவன் உயர்சாதிக்காரன் என பேதம் கொண்டு துண்டை கக்கத்தி வைத்துக்கொண்டு கும்பிடுறேன் சாமி என சொல்வதுதான் சரியென்கிறாரா.. இவர் அப்பன் பாட்டன் போல செருப்பை கையில் தூக்கிக்கொண்டு ஜாதி தெருக்களில் செல்ல தயாரென்கிறாரா.. இவரும் இவர் குழந்தையும் இடஒதுக்கீட்டில் படித்து முன்னேறிவிட்டு .. இவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் உட்பட யாரும் இடஒதுக்கீட்டில் படிக்காமல் உயர்ஜாதிகாரன் பணம் படைத்தவன் மட்டும் உயர்கல்வியை பெறுவதுதான் சரி என்கிறாரா..
..
தான் கட்டும் மருத்துவக்கல்லூரிக்காக எந்த இடைஞ்சலும் வரகூடாதென்று பாசிசத்தின் காலில் விழுந்து கிடக்கிறவர் தன் சமூகத்தையே பள்ளத்தில் தள்ளிவிட நினைக்கிற கேடுகெட்ட எண்ணம் இவரை இப்படி பேச வைக்கிறது பாவம் யாருமே கண்டுக்கொள்வதில்லை ஆனாலும் எதாவது உளறிக்கொண்டே இருப்பார்
பெரியாரின் கொள்கைகள் வேண்டாமாம்.. பார்பணீயத்திற்கெதிராக .. வர்ணம் கொண்டு பிரித்து தன்னை உயர்ந்தவனாய் காட்டி .. எல்லாருடைய உரிமைகளையும் பறித்து அனுபவித்து வந்ததை தடுத்து அனைவருக்கும் எல்லா கிடைக்கவேண்டும் கல்வி வேலைவாய்ப்பில் அவனுக்குரிய இடங்களை உறுதி செய்யவேண்டுமென்று பாடுபட்ட பெரியாரும் அம்பேத்கரும் வேண்டாம் .. குலக்கல்வி திட்டத்தோடு இந்த சமூகத்தில் சாக்கடை அள்ளுகிறவனின் மகன் அதே தொழிலை செய்தால் போதும் அவனும் உயர்பதவிக்கெல்லாம் வரகூடாதென்று நினைக்கிற எண்ணம் கொண்டோரோடு சேர்ந்ததால் சகதி உருளும் பன்றியாகிப்போனார்..
..
பெரியாரின் கொள்கைகள் நடப்பிலாக்கபட்டதால் தான் இன்றைக்கு கிருஷ்ணசாமியும் மகளும் டாக்டராக முடிந்தது ..
சமுகநீதி நிலைநாட்டபட்டது .. 69 விழுக்காடு ஒதுக்கீடு தமிழகத்தில் இருப்பதும், எல்லாதுறைகளிலும்,தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட விளிம்புநிலை மக்களும் வேலைவாய்ப்பு பெறுவதை உறுதி செய்தது
தலித்மக்களின் பாதுகாப்பாக வாழ இன்னும் சொல்லபோனால் மரியாதையாக வாழ முடிந்தது..
..
நன்றிக்கெட்டவனாக கூட இருந்துவிட்டுபோ.. ஆனால் துரோகியாய் காட்டிகொடுத்து பிழைக்காதே..
..
ஆலஞ்சியார்
Thursday, September 6, 2018
தளபதி
சென்னையில் அழகிரி கூட்டிய அமைதிபேரணி அனைவரையும் திரும்பிபார்க்க வைத்தது.. பொன்.ராதா..
பாவம் அவர் என்ன செய்வார் காலி சேர்களையே பார்த்து பழகிய கண்களுக்கு ஆயிரம்பேரை பார்த்தாலே பிரமிப்பாதான் இருக்கும் .. கண்ணில் ஆனந்தகண்ணீர் வந்திருக்குமே...
..
அழகிரியை விடுங்கள் இந்த பாசிச கூட்டம் எப்படி ஆசைபடுகிறதென்பதை அவர்கள் நடவடிக்கைகள் காட்டி கொடுத்துவிடுகின்றன என்ன செய்தாலும் அதை மக்கள் கேவலபடுத்திவிடுகிறார்கள்.. திமுகவின் இருப்பு இவர்களை பதறவைக்கிறது .. திராவிடத்தை வீழ்த்திவிடலாமென்ற கனவில் .. ஜாதிவெறியை தூண்டி.. மக்களை மதத்தின் பெயரில் பிரித்து மொழியென்றும் தமிழ் தேசியமென்றும் உட்பகையை ஊட்டி குளிர்காய நினைத்தார்கள்.. கலைஞர்பெருமகனோடு தீராதபகைகாட்டி ..அவரோடு திராவிடத்தை இல்லாதாக்கிவிடலாம் என்று நினைத்ததெல்லாம் தலைகீழாய் போனது.. பெரும் எழுச்சியோடு குறிப்பாக இளைஞர்களிடையே திராவிடத்தை எத்திவைக்கும் பெரும்பணியை .. திராவிடகட்சிகளால் பயன்பெற்றவர்கள் பெரும்படையோடு களமிறங்கி .. கருத்தரங்கங்கள் விவாதமென பட்டையை கிளப்புகிறார்கள்.. திமுகவை கலைஞரை இப்போதுதான் சரியாக புரிந்து திமுகதான் நமக்கு பாதுகாப்பென தமிழக மக்கள் உணர தொடங்கியிருப்பது.. பாசிசபாஜகவிற்கு பீதியை தந்திருக்கிறது..
அதனால் தான் அரிதாரங்கள் கொண்டுவந்து நிறுத்தி அது எடுபடாதென்று அறிந்து யாரெல்லாம் திமுகவோடு பிணங்கி நிற்கிறார்களோ அவர்களை கொம்புசீவும் வேலையை பாஜக செய்கிறது..
..
கலைஞர் ஓய்விடத்தில் போய் தமிழனத்திற்கு எதிரானவர் இங்கே உறங்குகிறார் என சொன்னால் அது கருத்து சுதந்திரத்தில் வராதா என ஒரு பார்பனன் கேட்கிறான்.. போய் சொல்லிபாரும் மக்களின் reaction எதிர்வினையை அப்போது உணர்வீர்கள்.. கருத்து சுதந்திரம் என்பது தனிநபர் பகையல்ல
கலைஞர் மீது எந்தளவு வன்மம் இருந்தால் இப்படி பேச சொல்லும் .. தமிழிசையை தனிப்பட்ட முறையில் யாரும் எதிர்க்கவில்லை மாறாக அவர் சார்ந்த கட்சியின் செயல்பாட்டால் விரக்தியின் எல்லைக்கே சென்றதன் விளைவு பாசிச பாஜக ஒழிக என்ற கோசம் அது இந்த பாசிச அரசிற்கெதிரானது..இதெல்லாம் புரியாமல் இல்லை எங்கே எழமுடியாமல் போய்விடுமோ என்று அதாவது
வாய்க்குவந்ததை பேசி அசிங்கபடுகிறார்கள்..
..
இங்கே பார்பனர் மற்றும் அவர்களுக்கு ஒத்தூதுகிறவனை தவிர மற்றவர்களை ஏதோ தீண்டதகாதவர்களைப்போலவும் .. இவர்கள் மட்டுமே தேசபிமானிகள் போலவும் பேசுவதும் செயல்படுவதும் தொடர்ந்து நடந்தேறுகிறது .. தமிழகத்தில் ஏன் தென்னாட்டில் பாசிசத்தின் கோரப்பற்கள் பிடிங்கெறியபடுவதால் தீராத வன்மத்தோடு அடிமைகள் இனதுரோகிகளை சாதிமதவெறியர்களை வைத்து ஆட்டம்போடுகிறார்கள்..ஆனால்
அவர்கள் எண்ணம் ஈடேறாது.. திராவிட இயக்கத்தை வழிநடத்த கலைஞர் பெருமகன் தளபதியை செதுக்கி தந்திருக்கிறார்..
#தளபதி_தமிழர்களின்_எதிர்காலம்
..
ஆலஞ்சியார்
Wednesday, September 5, 2018
அழகிரி..
தன் பலம் அறிதல் வேண்டும் அதினும் பெரிது எதிராளியைப்பற்றி அறிந்திருத்தல் வேண்டும்..
..
கலைஞரின் விதையொன்று சொத்தையாய் போனதில் வருத்தமுண்டு.. யாரை எதிர்க்கவேண்டுமென்று தெரியாமல் அரசியலின் நாடிதுடிப்பை உணராமல் .. தன்நிலையறியாது கூட இருந்தவர்களின் கூச்சலில் முகம் தொலைந்து நிற்பது பரிதாபகரமாக இருக்கிறது .. எதை பேசவேண்டும் எப்போது பேசவேண்டுமென்று என்ற அறியாதுபோனார் ..
இந்த நேரத்தில் தலைவர் தளபதியை பாராட்டவேண்டும் .. கண்டுக்கொள்ளாமல் எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் எதிரியை நிலைகுலைய செய்யும் கலைஞரின் வித்தையை கையிலெடுத்தார்.. கட்சிக்கொடியை பயன்படுத்த கூடாதென்று வழக்கு தொடர்ந்தால் கூட போதும் .. அதையே பிடித்துக்கொண்டு மேலேறி வந்துவிடுவார்கள்.. ஆம் கலைஞர்
"இருவர்" படத்தின் போது எம்ஜிஆர் கலைஞர் கதையை எடுத்திருப்பதால் தடைசெய்ய சொல்லலாமென்று கூட இருந்தவர் சொன்னபோது .. பிடித்தால் பாருங்கள் இல்லையென்றால் விடுங்களென்றார் .. படம் மிகப்பெரிய ப்ளாப்..
மணிரத்னம் கலைஞரை நேரில் சந்தித்து படத்தை பார்க்க வரவேண்டுமென்று கேட்ட போது புன்னகையோடு மறுத்தார்.. இந்த நேரத்தில் மற்றொன்றையும் பதிவு செய்யவேண்டும் .. ரோஜா படம் முதல் வாரம் கொட்டகை காலியாகதான் இருந்தது பிற்போக்குத்தனமான இஸ்லாமிய அமைப்புகள்
எதிர்க்க .. படம் சூடுபிடித்து பெரிய வெற்றியை தந்தது .. திமுக தலைவர் தளபதி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அழகிரியின் முகத்தை ஊரறிய செய்துவிட்டார்
காலமறிந்து தவிர்த்ததால் எதிராளி மிகவும் பலவீனமடைந்ததை ஊரறிந்தது..
..
எனது ஒற்றை கோரிக்கை என்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதே தவிர வேறு ஒன்றும் இல்லை. நான் கட்சியில் சேர்ந்தால் மு க ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்வேன்.ஏனெனில் அவர் தான் தலைவர். எனக்கும் மு க ஸ்டாலினுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஊடகங்கள் தான் அவ்வாறு பெரிதுப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகிறது. எங்க குடும்பத்தில் நாங்கள் ஒற்றுமையுடன் தான் உள்ளோம்.அரசியலில் தான் எனக்கும் ஸ்டாலினுக்கும் போட்டியே தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை..மு. க.அழகிரி ( ஆங்கில செய்தி பத்திரிக்கை ஒன்றுக்கு சற்று முன் அளித்த பேட்டி )..
நிற்க.. அவரின் பேட்டியிலேயே அவரது இயலாமை தெரிகிறது.. அவரை ஏன் சேர்க்ககூடாதென்று சிலர் வினவலாம் .. கலைஞர் இருக்கும் போதே கலகம் செய்தவர் நாளை நிச்சயம் பிரச்சனையாக உருவெடுப்பாரே வரும் முன் காப்பதே நல்லது..
நாவலர் நெடுஞ்செழியன் அதிமுகவில் உதிர்ந்த ரோமமாய் நின்ற போது கலைஞருக்கு தூது அனுப்பி நான் திமுகவில் சேர்ந்துக்கொள்கிறேன் என்றார் .. கலைஞர் அவரை சேர்த்தால் அவருக்குரிய மரியாதை தர இயலாது ..இரண்டாவது இடம் அன்பகழனுக்குரியது அதில் பிரச்சனை வரும் சிலர் நாவலருக்கு தரலாம் அண்ணாவோடு இருந்தவர் என்றெல்லாம் பேசுவார்கள் என அவரை சேர்க்கவில்லை கடைசியில் சுயமிழந்து கட்டிவச்சகாசை (டெபாசிட்) இழந்து நின்றார் ஏனோ நாவலர் நினைப்பு வந்தது.. மூடிவைக்கிறவரைதான் மதிப்பு இது புரியாமல் போனது..
..
மூடிய கைகளை திறந்ததால் ஊருக்கு தெரிந்தது
இவர்களின் இருப்பு..
..
ஆலஞ்சியார்
Tuesday, September 4, 2018
தமிழிசை...
சோபியா..
கருத்துசுதந்திரம் எதுவென்பதை நாம் உணரவேண்டும் ஆளும் பாஜக எதிராக பேசுவது மட்டும் அல்ல எதிர்வினையை களமறிந்தாற்ற வேண்டும்
பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்பதில் எந்தவித சமரசமும் இல்லை ஆனால் அது தனிநபரின் மீதான தாக்குதலாக இருக்க கூடாது ..ஒருவரின் தனிப்பட்ட நிகழ்வில் நாம் சென்று ஒருவித கலவரத்தை செய்வதும் தவறு ..
..
ஒட்டுமொத்த இந்தியாவும் பாசிச பாஜகஆட்சி ஒழிகவென்று சொல்ல வைத்ததில் திமுக வெற்றி கண்டிருக்கிறது ..திமுக தலைவர் தளபதியின் விரைந்து செயலாற்றியதும் அதை தொடர்ந்து அது உலகம் முழுவதுமான செய்தியாய் போனது .. திமுக சரியாக பயணிக்கிறதென்று நினைக்கிறேன் .. உடனுக்குடன் பதிலடி தருவதென்பது அவசியமாகிறது .,.
பாவம் தமிழிசை எந்தவொரு விடயத்தையும் எப்படி கையாள்வதென்று தெரியாமல் ஊதி பெருசாக்கிவிட்டார் .. தமிழசை தன்னை ஆரிய சித்தாந்தி என எண்ணிக்கொள்கிறார் பாவம் அவர் உணரவில்லை அவருக்கு சேர்த்துதான் திராவிட இயக்கம் உழைத்துக்கொண்டிருக்கிறது .. சோபியாவின் பின்னால் மட்டுமல்ல .. தமிழிசை போன்றோருக்கும் நாளை துணை நிற்கும்,..
..
அதிகாரத்தில் இருக்கிறோமென்ற திமிர் அவரை அப்படி நடந்துக்கொள்ள வைத்திருக்கிறது சமீபகாலமாக தமிழக பாஜவினரின் உடல்மொழியில் ஒருவித தெனாவட்டை காணலாம் அது அறிவின் செருக்கிலோ அல்லது சரியான செயல்பாட்டிலோ உண்மையின் மீது நின்று கதைப்பதாலோ வந்ததில்லை மாறாக தமிழகத்தில் தலையாட்டும் "சர்க்கார்" .. ஊழலில் திளைத்து சுருட்டியதை பாதுகாக்க
எதைச் சொன்னாலும் கிளைப்பிள்ளையைப்போல் சொல்லும் அடிமைகள் அரசு இருப்பதால் இவர்களின் ஆட்டம் அதிகரித்திருக்கிறது..ஆனால் தமிழகம் ஒவ்வொரு முறையும் காரி உமிழ்கிறது .. துடைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் அதையை செய்கிறார்கள் தமிழிசை பொன்னர் வகையறாக்கள்..
..
கருத்து சுதந்திரம் .. எதிர்ப்பை காட்டுதல் என்பது தன்மானமுள்ளவர்கள் செயல் .. திமுக மீது எத்தனை விமர்சனங்கள் அவையெல்லாம் பொருட்படுத்தாமல் அதேவேளை எமது பணியை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறோம்.. இன்னும் சொல்லப்போனால் தனிநபர் தாக்குதல் கூட அதிகம் சந்தித்தவர் கலைஞர் பெருமகன் .. எல்லை மீறும் போது மட்டும் பதிலடி தருவார் ..
திரு.ஸ்டாலின் மெட்ரோ ரயிலில் தாக்கினாரே என்று தமிழிசை கேட்கிறார் .. அங்கு நடந்தது வேறு பெண்கள் மீது இடித்து நின்று கொண்டிருந்து இடைஞ்சல் தந்தவரை தள்ளிவிட்டார் .. எதைஎதோடு ஒப்பிட வேண்டுமென்று கூட தெரியவில்லை.. தமிழிசை முன்னே பாஜகவினர் சோபியாவை தரம்தாழ்ந்த சொற்களை பயன்படுத்தியதாக அவரது தந்தையே எழுத்துபூர்வமாக புகார் அளித்திருக்கிறாரே அதற்கு தமிழிசையின் பதில் என்ன.. தமிழிசையின் சமீபத்திய செயல்கள் சகிக்கவில்லை சகவாசத்தால் வந்தது .. மோடி ஆட்சியை விமர்சிக்கலாமென்கிறார் இவர்களோ ஆடுகிறார்கள் ..
..
சமூகஅநீதிக்கு எதிராக பொங்கி எழுந்தால்
அது எப்படி தவறாகும்.. மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு சிலநேரம் காட்டாற்று வெள்ளம் போல உடைத்துகொண்டு போகும் என்பதை பாசிசபாஜகவின் தமிழிசை உணரவேண்டும்..
..
#பாசிசபாஜகஆட்சிஒழிக
..
ஆலஞ்சியார்
Monday, September 3, 2018
திமுகவிற்கு எச்சரிக்கையாம்..
மகா உத்தமர் வெளியில் வந்து நானுமிருக்கிறேன் என்று சொல்லிபார்த்து..
நான் யோக்கியனப்பா என கெஞ்சிபார்த்து யாருமே கண்டுக்கொள்ளாமல் போக ..
தன் நிலைநிறுப்பை காட்ட யாராவது கவனிக்கமாட்டார்களா என்ற நிலைக்கு தள்ளபட்டு.. கடைசியில் திமுகவை சொறிகிறார்
திமுகவிற்கு எச்சரிக்கையாம்
..
ஒருவரின் தனிபட்ட விடயங்களை நாம் பேசுவதில்லை அது அவரும் அவரோடு சம்பந்தபட்டவரின் குடும்பம் சார்ந்தது அவர் முஸ்லிம்களிடம் மரியாதை
இழந்து நிற்கிறார் .. இஸ்லாமிய சமூகத்தில் ஒரு பகுதிவரை ஆதிக்க செலுத்தி மூளைச்சலவை செய்து .. தன்னை உத்தமனாய் காட்டிக்கொண்டு.. தான் பேசுவது மட்டுமே உண்மை .. தனக்கு மட்டுமே இஸ்லாம் தெரியும் .. தான் சொல்லும் வழி தான் இஸ்லாம் இனிய மார்க்கமென்று அரைகுறை அறிவோடையோரை .. தனிமையில் ஒருவித மன வெறுமையில் வெளிநாடுகளில் வாழும் இஸ்லாமிய இளைஞர்களை .. வழிகெடுத்து உற்றார் உறவினர் சேர்ந்துவாழ்ந்த சமூகத்தில் .. எல்லாதளத்திலும் வேறுபாட்டை கொண்டுவந்து பிரித்து ஒற்றுமையை சிதைத்து இஸ்லாமிய இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் செலுத்தி.. வருடக்கணக்கில் சிறைகளில் வாழ வைத்ததை தவிர வேறென்ன சாதித்தார்..
..
திமுக இதை செய்யவில்லை திமுக ஆட்சியில்தான் முஸ்லிம் இளைஞர்கள் மீது வழக்கு பாய்ந்தது எனச் சொல்லி தாங்கள் செய்த தவறை நியாயபடுத்த நினைத்து.. பழியை தொடர்ந்து திமுக மீது சுமத்தி காழிபுணர்ச்சியை வளர்த்ததை தவிர வேறென்ன சாதித்தார்.. சிறையில் வாடும் குடும்பங்களுக்கு நிதிவசூல் செய்து அதிலும் கமிஷன் பார்த்து சொகுசாக வாழ்கிறார்கள் .. யோசிக்க மறந்தவன் ..சிறையில் சிறுநீரகம் செயலிழந்து வாழ்வை தொலைத்து வாடுகிறான்.. பாவம் அவன் குடும்பம் மகன் வளர்ந்து நம் குடும்பத்தை காப்பான் என்ற கனவு சிதைந்து அவனை வெளியே எடுக்க சொத்தையெல்லாம் இழந்து நிற்கிறார்கள்..
சொந்த சமூகத்திற்கு இளைஞர்களை வழிகெடுத்தவர் .. யோக்கியத்தைப்பற்றி பேசுவது ஏமாற்றுவேலை..
..
திமுக மீதான விமர்சனங்களை எப்போதுமே எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் அது உண்மையானதாக சரியானதாக இருந்தால் அதற்கு விளக்கம் தர தயாராக இருக்கிறோம்
ஆனால் தங்களின் நிலைநிறுப்பிற்காக திமுகவை சாடுவதென்பதைஏற்க முடியாது ..
திமுக இஸ்லாமிய சமூகத்திற்காக செய்தவைகள்.ஏராளம் . கல்வி வேலைவாய்ப்பில் பின்தங்கியதை கருத்தில் கொண்டு பிற்படுத்தபட்டோர் பிரிவில் உள் இடஒதுக்கீட்டை கொண்டுவந்தது..சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக.. திமுகவை குறைகூறுவதை விடுத்து வேறுவேலையை செய்யலாம்..
..
ஆலஞ்சியார்
Sunday, September 2, 2018
கலைஞர்
மெரினாவிற்கு போய்விட்டு வந்தால் குளிச்சிட்டு பூணூலை மாத்திக்கணும் என்ற ஆரியர்களின் கிண்டலுக்கெதிராக .. பிறந்த குழந்தைகளை கூட கலைஞரின் காலடியில் வைத்து மிகப்பெரிய ஆரியத்திற்கெதிரான கலகத்தை மக்கள் மௌனமாய் செய்கிறார்கள். ..
குடியரசு இதழில் #தீட்டாயிடுத்து என்று கட்டுரை தீட்டியவர் ஓய்வெடுக்க சென்ற பிறகும் மிகப்பெரிய புரட்சியை அமைதியாய் செய்துக்கொண்டிருக்கிறார்..
..
வணங்குதல் அல்ல வழிபாடு முறையல்ல மாறாக நன்றி நவிழ்தல் தன் இன மேம்பாட்டிற்காக உழைத்தவரை.. இந்த மனிதசமூகத்தின் .. மூட புரட்டுகளுக்கெதிராக ஆணியடித்தவரை .. வாழும் வரை ஒரு போராளியாய் இந்த சமூகத்தின் புரையோடி போயிருந்த நாற்றமடித்த சாதி மத வேற்றுமையை கலைந்து சமத்துவபுரம் கண்ட புரட்சியாளரை.. ஏழைகளுக்கு எட்டாத உயர்கல்வியை .. முதல் தலைமுறை பட்டதாரிக்கு இலவசமாய் அரசு செலவில் உயர்கல்வி தந்த கல்விகண் தந்த கோமானை ..
வரும் புதிய தலைமுறைக்கு எடுத்து சொல்லும் செயலாய் பிறந்த குழந்தைக்கு தாய்பாலைப்போல தமிழுக்கு தொண்டு செய்ய முத்தமிழின் மடியில் கிடத்துகிறார்கள்..
..
இதுவரை எத்தனையோ தலைவர்கள் வந்தார்கள் வாழ்ந்தார்கள் ..நாட்டிற்கு உழைத்தார்கள் மறைந்தார்கள்.. ஆனால் கலைஞரை இந்த சமூகம் நன்றியோடு காலமெல்லாம் நினைவு கூறும் ..மிக கடுமையான விடயமென நாம் எண்ணிக்கொண்டிருந்தவைகளை ஒன்றுமே இல்லாமல் உடைத்துபோட்டு போய்விட்டார்.. வரலாற்றில் எந்தபக்கம் திருப்பினாலும் .. அரைநூற்றாண்டில் கலைஞர் செய்ததின் வினை ... இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தும் ஆற்றிக்கொண்டே இருக்கும்...
..
ஆம்
கலைஞரைப்பற்றி நீ அறிய முற்படுகிறபோதுதான் உன்னையே நீ யாரென்று உணர முடியும் எந்தளவிற்கு உன்னை உயர்த்தி பிடித்திருக்கிறாரென்று தெரியும்,.. கலைஞரின் வாழ்வியல் தெளிவான திறந்த புத்தகம் அவர் ஆற்றிய அளவிலா நன்மைகள் வரும் தலைமுறைக்கும் நல்லதையே செய்து கொண்டிருக்கும்.. பகுத்தறிவு பகலவனின் சொல்லில் அண்ணா தந்த பாதையில் அவர் நடத்திய ராஜபார்ட்டை .. எவராலும் ஈடுசெய்ய முடியாது ...
கலைஞர் தனி மனிதரல்ல .. சமூகநீதியின் முகம் சமூகநீதி தத்துவம்
..
கலைஞர் தமிழரின் தவம்
..
ஆலஞ்சியார்
Saturday, September 1, 2018
கலைஞர் புகழ் வணக்கம்
கலைஞருக்கு புகழ் வணக்கம்..
எந்த தலைவருக்கும் கிடைக்காத மரியாதையாய்
பல்வேறு துறை சார்ந்தவர்கள்,இந்த தலைவனை புகழ்கிறார்கள். .. அரசியல் இயக்கத்தை சார்ந்தவர்கள் மறைந்த அரசியல் தலைவருக்கு புகழஞ்சலி செலுத்துவதென்பது நாம் கண்டதுதான் அந்த கட்சியை சார்ந்தவர்கள் அவரது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அவரை புகழ்வதை நாம் கண்டும் கேட்டுமிருக்கிறோம்.. தேசிய தலைவர்களில் ஒரு சிலரை புகழ்ந்து வரலாற்றில் படித்திருக்கிறோம் .. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு மனிதரை புகழ்கிறது ..பல்வேறு துறைசார்ந்த சான்றோர்கள் விருப்புவெறுப்பின்றி கலைஞரின் சாதனைகளை பேசுகிறார்கள் .. தனி மனிதனால் அதுவும் அதிகம் வெளிச்சம் வராத சிற்றூரின் பின்னணியில் வளர்ந்து மிகவும் பின்தங்கிய சமூகத்திலிருந்து ஒருவர் நவீன இந்தியாவின் சிற்பிகளுள் ஒருவராக திகழ முடிந்ததெப்படி என வியக்கிறார்கள்..
எத்தனை சோதனைகள் எவ்வளவு பொய் பிரச்சாரங்கள் தனிமனித தாக்குதல்கள் .. பொய் குற்றசாட்டுகள் இவை அனைத்தையும் .. கடந்து "அறம் வெல்லும்" என்ற நம்பிக்கையோடு ஒரு சமூக போராளியாக .. இந்த இந்திய சமூகத்தின் வர்ணாசரம கோட்பாடுகளால் அடக்கி ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களை ஏற்றிவிட தன் வாழ்நாள் முழுவதும் சிந்தித்து வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் செயல்படுத்தி அவர்கள் தம் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட ஒரு மனிதர்.. யாராலும் அடையமுடியாத சாதனைகளை ..செய்து காட்டிய ஓய்வில்லாத உழைப்பை இந்த நாடே போற்றி புகழ்ந்து தன் நன்றிதனை செய்கிறது..
..
இந்த மா மனிதரை தரம்தாழ்ந்து விமர்சித்தும் ஊழல் அளவிற்கதிகமாக சொத்தை சேர்த்துவிட்டார் .. உலகமே காண ஊழல்புகார் சுமத்திய இவரது குடும்ப உறுப்பினர்களை ஏதோ கொள்ளைக்காரர்கள் போல ஊடகங்களின் மூலம் செய்திகள் பரப்பி.. ஆட்சி அதிகாரத்திற்கு வரவிடாமல் செய்தால் ..ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளை தடுக்கலாம் என்றெண்ணி .. அடுக்கடுக்காக விமர்சனங்கள் .. ஆனால் உண்மையை என்றைக்கும் ஆழ புதைத்தாலும் அது விதையைப்போல கிழித்து வெளிவரும் என்ற உண்மை இப்போது மக்கள் உணர தொடங்கியிருக்கிறார்கள் .. எத்தனை குற்றசாட்டுகள் ஒன்றில் கூட இவரையோ இவர் சார்ந்த இயக்கத்தையோ சட்டத்தின் முன் குற்றவாளியென்று நிரூபிக்க முடியவில்லை அவர் மீது தொடுக்கபட்ட வழக்குகளெல்லாம் பொய்யால் குரோதத்தால் எப்படியும் அவரை வீழ்த்திட வேண்டுமென்று சொல்லபட்டவை .. அறம் வெல்லுமென்று அமைதி காத்து கடைசியில் எல்லா பொய்களையும் சூழ்ச்சிகளையும் வென்றார்..
..
இன்றைக்கு சாதி மதம் பார்க்காமல் மொழி இனம் பார்க்காமல் இந்தியா முழுவதும் கொண்டாடபடுகிற .. எங்கள் மண்ணில் இப்படியொரு மனிதர் .. அரசியல்வாதி கலைஞர் சமூகநீதி காப்பாளர் பிறக்கவில்லையே .. இப்போது நாங்கள் யோசித்து செயல்படுத்த நினைக்கும் விடயங்களை திட்டங்களை முப்பது வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி அதை வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டியிருக்கிறார் இந்த தொலைநோக்கு சிந்தனையாளரென வியக்கிறார்கள்.. நீதியரசர்கள் திறந்த மனதோடு எந்தளவிற்கு சமூகநீதிக்காக பாடுபட்டவர் எத்தனை அழகாக சட்டங்களை இயற்றி இடஒதுக்கீடு போன்ற விடயங்களில் தெளிவான பாதையை வகுத்து .. நீதிமன்றங்களால் தடைபோட முடியாத அளவிற்கு சட்டமியற்றியதை புகழ்ந்திருக்கிறார்கள் .. பிற மாநிலங்களில் இடஒதுக்கீடு தந்த சட்டங்கள் நீர்த்து போனபோதும் தமிழகத்தில் அதை வெற்றிகரமாக செயல்படுத்தி சட்டசிக்கல்களை கலைந்து செயல்படுத்தியதை வியந்து போற்றுகிறார்கள்.. நீதியரசர் அக்பர் அலி இஸ்லாமிய சமுதாய மக்களின் உள்ளுணர்வை மிக தெளிவாக பதிவு செய்தார் இன்றைக்கு இஸ்லாமிய சமூகத்தில் பரவி கிடக்கும் கலைஞரைப்பற்றிய அறியாமை ஒருவித கசப்பு விலகும்.. நீதியரசர் மோகன் கோகுலகிருஷ்ணன் போன்ற சமூகநீதியரசர்கள் புகழ்மாலை தமிழரிடையே ஏற்பட்டிருக்கிற தெளிவின்மைக்கு விளக்கமாக அமையும்
..
தமிழக மக்கள் இப்போதுதான் கலைஞரை சரியாக புரிந்து .. இந்த மாபெரும் தலைவனை சில விவரகேடுகளின் பேச்சை பொய் பிரச்சாரத்தை நம்பி அதிகாரத்திலிருந்து சிலகாலம் அகற்றி நிறுத்தினோமே என வருந்துகிறார்கள் .. தொடர்ந்து வாய்ப்பை வழங்கியிருந்தால் தமிழகம் மிக சிறந்த மாநிலமாக திகழ்ந்திருக்கும் .. கிடைத்த குறைந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி சமூகநீதியை நிலைநாட்டி ..மண்,கலாச்சாரம், மொழி,இனம் என்ற பல்வேறு தளங்களிலும் தனிமுத்திரை பதித்து யாருமே செய்ய முடியாத சாதனையை எட்டமுடியாத உயரத்தை தொட்ட மாபெரும் தலைவருக்கு ..
நாடும் இனமும் என்றைக்கும் நன்றி மறவாமல் புகழ்பாடும்...
..
வாழ்க! கலைஞர் புகழ்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Posts (Atom)