Tuesday, July 31, 2018
பேரதிசயம்
பேரதிசயம்..
நாங்கள் தான் முன்னமே சொன்னோமே..
கலைஞர்.. பூமி கிழிந்து வந்த வினையென்று..
எதிர்ப்பிலேயே வாழ்ந்து .. எதிரிகளை ஒவ்வொன்று வீழ்த்தி நெஞ்சரத்தோடு வாழும் பேரதிசயம்.. கலைஞர்
நீங்கள் நினைப்பதைப்போல வெந்ததை தின்று விதிவந்தால் செத்து போககூடியவரா..
எப்போது எங்கே எதை எப்படி கையாளவேண்டுமென்று அறிந்தவரை..
இறப்பு என்ன செய்துவிடமுடியும்
..
இந்திய துணைகண்டம் கண்ட தன்னிகரில்லா தலைவர்.. இவரைப்போல வாழ்ந்தவர் யாருமில்லை அழிந்தார் அழிந்தது என்று கூக்குரலிட்டபோதும் கூட.. வீறுக்கொண்டு எழுந்த தன்னையும் தான் சார்ந்த இயக்கத்தையும் காத்தவர்.. முடிந்தது திராவிடம் என்றவர்களுக்கெல்லாம் முடிவுரை எழுதி தன்னை பெரியாரின் உண்மையான சீடனென காட்டியவர்.. வெற்றின் இறுமாப்போடு சிலர் வாழ்ந்திருக்கிறாரகள் அவர்களுக்கு தோல்வி வந்தால் சட்டென்று விழுந்து இடம்தெரியாமல் போய்விடுவர்.. ஆனால் தோல்விகளை உரமாக்கி.. வென்றுகாட்டவேண்டுமென்ற வேட்கையோடு
வாழ்பவர்கள் சிலரே அவர்களில் தோல்விகளிலும் தம்மை சுற்றியே நகர்வை அமைக்கும் ஆற்றல் பெற்றவர்கள் இல்லை ஆனால் கலைஞர் தன்னைச் சுற்றியே தமிழக அரசியலை இயங்கவைத்த #பேரதிசயம்..
..
போராளிகள் நிறைய வந்தார்கள்.. பெரியாரைவிடவா சிறந்த போராளி வேண்டும் .. ஆனால் அதிகாரத்தை அடையாமல் எதையும் சாதித்துவிட முடியாதென்ற உண்மையை உணர்ந்து தான் அண்ணா தேர்தல் அரசியலை கையிலெடுத்தார் ஆம்..
சாதி மறுப்பு சுயமரியாதை திருமணங்களை தகாத உறவென உசிசநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதுதான் சட்டபாதுகாப்பு தேவையென்பதை உணர்ந்து அதை இயற்றும் இடத்திற்கு நாம் வரவேண்டுமென்று திமுக உதயமானது.. காலம் அண்ணாவிற்கு கனியாமல் போனது.. அண்ணாவிற்கு பிறகு கலைஞரை தவிர்த்து யார் திமுக தலைமையை ஏற்றிருந்தாலும் திமுகவையே இல்லாமல் செய்திருப்பார்கள்.. கலைஞரின் தலைமை பகையிலிருந்து காத்ததோடு.. பெரியார் கண்ட கனவை நடப்பிலாக்கியது.. பெண்களுக்கு சொத்துரிமை .. அனைத்துசாதியினரும் அர்ச்சகராகலாம் இப்படி... 1970 லேயே அனைத்துசாதியினரும் அர்ச்சகராக சட்டமியற்றியும் உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்தது மீண்டும்
நீண்டநெடிய சட்டபோராட்டம்..அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியை தொடங்கி பயிறிசியளித்து 214 பேர் தேர்வாகிய நேரத்தில் திமுகவிடம்
அதிகாரமில்லாமல் போனதும் ..ஜெயலலிதா கிடப்பில் போட்டார்.. காலம் கடந்தேனும் பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்தாகிவிட்டது..
(தெய்வத்தைப் பார்ப்பனர் அர்ச்சிக்கும் நாட்டில் பஞ்சமும் நோயும் பெருகும் - திருமூலர்)
..
கலைஞரை பொய் வழக்குகளால் சாய்த்துவிடலாமென்ற ஆரிய சூழ்ச்சி .. சர்க்காரியா தொடங்கி.. 2ஜி வரை .. எல்லாவற்றையும் சட்டத்தின் துணைக்கொண்டு வென்று #அறம்வெல்லும் என்பதை நிரூபித்து அசைக்கமுடியாத வலிமையோடு நிற்கிறார்..
போராட்டமே வாழ்வியலாக கொண்ட கலைஞர்
ஒவ்வொருமுறையும் அதிசயக்கதக்க முறையில் மீண்டு ..இயக்கத்தை மீட்டெடுத்திருக்கிறார்..அதிகாரத்தில் இருந்த 19 ஆண்டுகளில் மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள்.. காலம்கடந்து பேசபடுவதாகவே இருக்கிறது.. இவர் முப்பதாண்டுகளுக்கு முன்பே கொண்டுவந்த திட்டங்கள் இப்போதுதான் வடமாநிலங்களில் கொண்டுவருகிறார்கள்..
இந்திய அரசியலில் பொதுவாழ்வில் அதிசயதக்க மனிதர்.. நெஞ்சுரமும் நேர்வழியும் வீழ்ந்துவிடாது காத்துநிற்கிறது..
இதுவரை கலைஞரைப் பற்றி கட்டிசமைத்த குற்றசாட்டுகள் பொய்யென .. கட்டியவர்களே களைய தொடங்கியிருக்கிறார்கள்.. குறிப்பாக இளைஞர்கள் கலைஞரை அறிய தொடங்கியிருக்கிறார்கள்.. கலைஞர் மட்டும் இல்லையெனில் வடமாநிலத்தை போல தமிழகம் தாழ்நிலையில் இருந்திருக்குமென உணர்கிறார்கள்.. இந்த கிழவனின் இருப்பு எப்படி பகைவர்களை அச்சம் கொள்ளவைக்கிறதென்று அறிகிறார்கள்..
எழுவருடமாய் ஆட்சியில் இல்லை இரண்டுவருடமாய் பேசுவதில்லை ஆனால் கலைஞரின் பெயர் உச்சரிக்காமல் பொழுது விடிவதுமில்லை சாய்வதுமில்லை..
..
#தமிழின_கண்ட_பேரதிசயம் ..
..
ஆலஞ்சியார்
Monday, July 30, 2018
கலைஞர்..
கலைஞர்..
இப்போது கலைஞரின் இருப்பை மக்கள் அறிய/ விரும்ப தொடங்கியிருக்கிறார்கள்.. தனி ஒருவனாய் இந்த சமுதாய ஏற்றதாழ்வை களைந்து.. பள்ளத்தில் இருந்தவனை ஏற்றிவிட்டவர் என்ற சான்றுகள்.. வீதிகளில் இரவில் உறங்குவது கண்டு.. இந்த மனிதன் ஏதோ செய்திருக்கிறான் இல்லையெனில் .. கொட்டும் மழையிலும் நள்ளிரவில் வீதியில் காத்துநிற்க இளைஞர்கள்.. முதல்பட்டதாரிக்கு முன்னுரிமையில் படித்து வந்தவன்.. ஏக்கத்தோடு நிற்கிறான்.. இனத்தை காத்த காவல்தெய்வம் மரணத்தோடு போராடுவது கண்டு அடிவயிற்றில் ஏதோ கலங்குவது கண்டு திகைத்துநிற்கிறான்..
..
ஆம்
பெரியாரின் சிந்தனையை செயலாக்க கலைஞரெனும் மாமனிதன் கிட்டாமல் போயிருந்தால் இன்று குலத்தொழிலோடு மல்லுக்கட்டிகொண்டிருப்பார்கள்..
தொலைநோக்கோடு கலைஞர் பெருமகன் தீட்டிய திட்டங்கள் இன்று கற்சிலையோடு பேசும் அதிகாரம் பெற்றான்.. வர்ணத்தை சொல்லி வாசலில் நிறுத்திய பார்பன சதியை .. சட்டம் கொண்டே முறியடித்து கருவறைக்குள்ளும் நுழைய காரணியாய் இருந்த பெருவுடையார் எம்மான் கலைஞர்..
இன்று மானமுள்ள தமிழர் நெஞ்சம் நேற்று எழுந்து வா என்ற குரலாய் ஒலித்ததே.. காவிரியின் கதவை துளைத்து கலைஞரின் காதுகளில் இசைத்ததே.. போராடி போராடி வென்ற வாழ்வில் இன்னமும் போராட்டம் ..
..
கலைஞர்..எனும் சொல் தமிழகத்தின் வரலாறு.. தமிழகத்தின் வளர்ச்சி..தமிழகத்தின் முன்னேற்றம்.. கலைஞர் சிந்தனையில் உதித்தவையெல்லாம் தொலைநோக்கோடு..
தமிழகம் வளம் பெற மக்களின் நலன் பெற அமைத்தது..
#பெரியாரை நினைத்ததை .. #அண்ணா முயன்றதை செய்து காட்டியவர் எம் பெருவுடைபெருமகன் கலைஞர் .. காலம் தந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி.. பெரியாரை உள்வாங்கி ..சமநீதியை நிலைநாட்டி சமூகத்தின் நீதியை காத்து.. ஒடுக்கபட்டவர்களை உயரத்தில் ஏற்றி.. பிற்படுத்தபட்டவரின் உரிமைகளை சில உயர்வகுப்பினர் பறிப்பதை தடுத்து .. கல்வி வேலைவாய்ப்பில் அனைத்துதரப்பினரின் உரிமையை உறுதிசெய்து.. சமத்துவ சமுதாயம் சமைத்தவர்..
..
தமிழகத்தில் ஒவ்வொருவரும் கலைஞரால் பயன்பட்டிருக்கிறார்கள் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ .. கலைஞரின் திட்டங்களால் பலனை அனுபவித்திருக்கிறார்கள்.. தத்தளித்த படகை கரைசேர்த்ததைப்போல கலைஞர் ஒவ்வொரு குடும்பத்தின் முன்னேற்றத்திலும் அக்கறை காட்டிருக்கிறார்.. இன்னும் செய்திருக்கலாம் .. ஆம் அதற்கான வாய்ப்பை தமிழர்கள் தொடர்ந்து வழங்காமல் போனதால் .. தொடர்ந்து வந்தவர்களின் காழ்ப்புணர்ச்சியால் காலதாமதமாகியிருக்கிறது.. தமிழக வரலாற்றில் எந்த தலைவரும் செய்யமுடியாததை செய்திருக்கிறார்.. எட்டாவது படித்தால் ஆசிரியர் பணி என்று அறிவித்தார் காமராஜர் ஆனால் படித்து வருவதற்குள் பிறகு வந்த பெரியவர் பக்தவச்சலம் நடப்பிலாக்காமல் போனார் அதை கலைஞர் தான் நடைமுறைபடுத்தினார்.. உயர்கல்வி சலுகைகள் தந்ததால் தான் இன்று இல்லம்தோறும் பட்டதாரிகள்.. இந்திய வரலாற்றிலேயே கலைஞர் அளவிற்கு திட்டங்களை செயலாக்கியவர்கள் யாருமே இல்லை..
..
கடைசியாக..
இன்றைய தேதியில் மத்திய சர்க்கார் அதிகாரம் இல்லாத மாநில சர்கார் பணியாளர்களிலும் உயரதிகாரிகளிலும் 70% பிரமாணன் அல்லாதவர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் கலைஞர் தான்..
இது பலநூறு ஆண்டுகள், ஏன் ஆயிரம் ஆண்டுகளாக இங்கு நடக்காத விஷயம். பல நூறு ஆண்டுகளாக அதிகாரம் அவர்கள் பிராமணர் கையில் இருந்தது
அதை மீட்டெடுத்தது திமுக அரசு என்பதில் பெருமை அடைகின்றேன்.. கருணாநிதி அரசுக்கு வலுசேர்க்கும் அவசியமும் கடமையும் நம் எல்லோருக்கும் இருக்கின்றது" என்றார் பெரியார்../1972ல்
..
தெம்பூட்டும்
கலைதோட்ட தேம்பாவனி..
அவர் பெருவாழ்வே
தமிழ்நாட்டின் வரலாறு இனி!!
..
#கலைஞர்_நிகரில்லா_தலைவர்..
..
ஆலஞ்சியார்
Sunday, July 29, 2018
கேடுகெட்டவர்கள்
கோழைகளே உங்கள் மீது கோபம் எல்லாம் இல்லை.. கலைஞரை உங்களையெல்லாம் மறந்து மன்னித்தாரே என்ற ஆதங்கம் தான்..
தியாகு போன்று நிறைய பேரை பார்த்திருக்கிறோம் என்ன.. அவர்களின் சிலர் கலைஞர் தெளிவாக பேசிக்கொண்டிருந்த போது விமர்சித்தார்கள் கலைஞர் அவர்களுக்கு விளக்கம் தந்தார்..
..
தியாகு.. கலைஞர் பேசாமல் இருக்கும் போது குற்றம் சாட்டுகிறார்..
கலைஞர் பதவிக்காக எதையும் செய்வார்.. அவரின் குற்றசாட்டை முழுமையாக தள்ளிவிடலாம் .. பதவி ஒன்றே குறிக்கோளாய் இருந்தால் காமராஜரை சிறையில் வைத்து இந்திராவோடு கைக்கோர்த்து ஜனநாயகத்தை ஆழ புதைத்திருக்கலாம் .. முதல்வர் பதவி போனாலும் பரவாயில்லையென காமராஜர் கைது செய்ய மறுத்ததோடு ஜார்ஸ் பெர்னாட்டஸ் போன்றோருக்கு அடைக்கலமும் தந்தார்.. நெருக்கடிகாலத்தில் இந்திராவை எதிர்த்த கலைஞர் ஏன் திரும்பவும் சேர்ந்தீர் என்கிறார்.. ஜனதாவால் நிலையான ஆட்சியை தரமுடியாமல் போனதும்.. நாட்டின் நலன் கருதி நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக என்றார்.. இதில் என்ன தவறு .. அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை நோக்கிய நகர்வைதானே விரும்பும் ..இலங்கை பிரச்சனையில் திமுகவின் இழப்புகளை யாருமே கருத்தில் கொள்வதில்லை.. திமுக வெற்றிபெற வேண்டிய தேர்தலில் .. பிரச்சாரத்திற்கு வந்த இந்த பிரதமராக இருந்தவரை கொலை செய்து அதன் பலியை திமுக மீது விழுந்ததும் .. காரணம் யார்..? அன்றைக்கு ஜெயலலிதாதானே பலன்பெற்றார் அதனால் தொடர்ந்து தமிழகம் சந்தித்த சந்தித்துக்கொண்டிருக்கிற துயரங்கள் இவ்வளவையும் மீறி ராஜீவ் கொலையாளிகளுக்கு வழக்கறிஞர் ஏற்பாடு செய்தது இன்றைக்கு விமர்சிப்போரல்ல.
..
ராஜமன்னார் குழு பரிந்துரையான தமிழை தேசிய மொழிக்கா என்ன நடவடிக்கையெடுத்தது என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது திமுக தான் தமிழை மட்டுமல்ல பிற மொழிகளையும் தேசிய மொழிக்காக தனி தீர்மானம் கொண்டுவந்ததும் திமுக தான் .. இன்றைக்கு பாராளுமன்றத்தில் அனைத்துமொழிகளிலும் பேசலாமென்ற உரிமையை பெற்று தந்ததும் திமுகதான்.. எல்லாவற்றையும் சில கால ஆட்சி அதிகாரத்திற்குள் கொண்டுவரவோ செய்துகாட்டவோ முடியாது .. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கலைஞர் தன்னால் இயன்றதை போராடி பெற்று தந்திருக்கிறார் .. தமிழக தலைவர்களில் யாருமே செய்திடாத சாதனைகளை செய்திருக்கிறார்..
..
தமிழ்தேசிய பேசுவோரை சிறையில் அடைத்தாரென குற்றசாட்டை ஏற்க முடியாது தமிழ்தேசியம் என்ற பெயரில் அராஜகம் செய்வோரை போதைமருத்து கடத்த பயன்படுத்துவோரை ..துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபடுவோரை கொஞ்சிக்கொண்டிருக்கமுடியாது..
இவ்வளவு பேசும் தமிழ் தேசி தியாகு.. யாராவது ஒரு ஈழ அகதிக்கு எதாவது செய்திருக்கிறாரா.. அகதிகளாய் வந்திறங்கிய சொந்தங்களை வாரி அணைத்தவர்கள் திமுகவினர்கள் தான்..
திமுக ஆட்சியில் தான் மருத்துவ பொறியியல் இடங்களை ஒதுக்கியும் ..இலவச கல்வியை வழங்கியும் ஈழ சொந்தங்களை அரவணைத்தது திரும்ப வந்த ஜெயலலிதா அதையெல்லாம் சத்தமில்லாமல் ரத்து செய்தார்.. ஆட்சி பொறுப்பேற்ற சில தினங்களில் சென்னையில் வைத்து பத்மநாபாவை கொன்று திமுக ஆட்சிக்கு தீராத கலங்கத்தையும் பெரும் நெருக்கடியையும் தந்தவர்களை அப்போதே தீவிரவாதிகள்/பயங்கரவாதிகளென ஜெயலலிதா போல் கூறியிருந்தால் ஒருவேளை கலைஞரை புகழ்ந்திருப்பீர்கள்.
..
இன்றைக்கு தியாகு நடமாடுகிறாரென்றால் அது கலைஞர் இட்ட பிச்சை.. தூக்குகயிற்றிலிருந்து கருணையோடு காப்பாற்றி .. ஆயுளாக்கி அதையும் குறைத்து விடுத்ததால் இந்த நவீன தமிழ் தேசி கலைஞரை பதவிக்காக எதையும் செய்பவரென்கிறார்.. கலைஞரை விமர்சிக்களவிற்கு தகுதியில்லாதவர்
..
#கேடுகெட்டவர்கள்
..
ஆலஞ்சியார்
Saturday, July 28, 2018
கலைஞரெனும் பெருமகன்
கலைஞரை விமர்சிப்போர் .. சாக சொல்லி பேசுவோர் துரோகமிழைத்ததாக சொல்வோர் யாரென்று பாருங்கள்.. ஈழத்தழிழனுக்காக துரும்பை கூட கிள்ளாதவன்.. மாறாய் சொந்த மண்ணை சிங்களனிடம் விற்றுவிட்டு அகதிகளாய் ஐரோப்பா நாடுகளில் குடியேறி தப்பித்தோமென ஓடியவனிடம் காசை வாங்கி இங்கே குரைத்துக்கொண்டிருக்கிறான்..
பாவம் காசில்லாதவன் அகதியாய் மண்டபத்திலும் கோடியக்கரையிலும் வந்திறங்கிய போது சொந்த நிலத்தில் தங்கவைத்தும் சொந்த காசை சிலவு செய்தும் பிழைப்பிற்கு வழி செய்தவன் திமுககாரன்
..
ஈழத்தமிழர் விவகாரத்தில் கலைஞரைப்போல கவலைபட்டவர் எவருமில்லை .. எம்ஜிஆர் பிரபாகரனை கைது செய்தபோதுகூட .. ஏன் கீழ்தஞ்சை ..மற்றும் கடலோர மாவட்டத்தில் செக்போஸ்ட் போட்டு சிரமம் தந்தபோது கூட திமுககாரன்தான் எல்லாவற்றையும் சுமந்தவன் .. ஜெயலலிதா ஆட்சியில் பிரபாவை பிடித்து வந்து தூக்கிலிட வேண்டும் என்ற போதும் ராஜீவ் கொலையில் திமுகதான் காரணமென்ற போதும்.. இன்றைக்கு கலைஞரை விமர்சிப்போர் எங்கிருந்தார்கள்..ராஜீவ் கொலை வழக்கில் யாருமே வழக்காட முன்வராத போது வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்தது திராவிட இயக்கங்கள் தான்..
..
இறுதிப்போரில் கலைஞர் எதுவுமே செய்யவில்லை என்போரே.. யார் அன்றைக்கு ஆட்சியிலிருந்தாலும் எதுவுமே,செய்திருக்கமுடியாது .. சார்க் மாநாட்டில் இலங்கை எங்கள் நாட்டில் பலஆண்டுகளாக நடைபெற்று வரும் தீவிரவாதத்தை வேரறுக்க சார்க் நாடுகள் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டு ஒப்புதல் பெறப்பட்டபோதே. விவேகத்தோடு காய்நகர்த்தாமல் .. சொந்த நாட்டு மக்களை மனித கேடயமாக பயன்படுத்தி பல்லாயிரமானோர் சாக காரணமாக இருந்து கடைசியில் தானும் கொடூரமாக கொல்லபட்டதற்கு திமுக எப்படி பொறுப்பாகுமென சிந்திக்க வேண்டும் .. கலைஞரின் ஆலோசனைகளை புறந்தள்ளி விவேகமற்ற அறிவிலிகளை உணர்ச்சிமிகு பேச்சை நம்பியதால் வந்த வினை .. ப.சிதம்பரம் அன்றைக்கே போரை நிறுத்துங்கள் தேர்தல் முடிந்தபிறகு பேசி தீர்க்கலாமென்ற போதும்.. கேட்காமல் வாஜ்பாய் வந்துவிடுவாரென நம்பியதும்.. கடைசிவரை தோக்கு (துப்பாக்கி) கைகொடுக்காது விவேகமான பேச்சுவார்த்தைதான் சுதந்திரத்தை பெற்று தருமென்ற வரலாறை மறந்ததுதான் காரணமே தவிர கலைஞரல்ல..
..
சாவு எல்லோருக்கும் வரும் .. இன்றைக்கு வயதுமூப்பின் காரணமாய் போராடிக்கொண்டிருக்கிற மனிதனின் சேவைகள் .. அவர் தந்த உழைப்பு .. செய்த பணிகள் அதனால் பயன்பெற்றோர் எதிர் அரசியல் புரிந்தவன் கூட வாழவேண்டுமென ஆசைபடுகிறான் .. சில அரைகுறை அறிதலோடு எச்சைகளாய் திரிபோர் சாக வேண்டுமென்கிறார்கள்.. கலைஞருக்கு இறப்பில்லை அவரால் பயன்பட்டவன் .. அவரின் முயற்சியால் தொடர்ந்து பயன்பெற போகும் சமுதாயம் இருக்குவரை .. காலமாய் இருப்பார்..
நீங்கள் கத்தி கத்தி கடைசியில் செத்துபோவீர் யாருமற்ற ..கேட்க ஆளில்லாமல் போவீர்கள்..
..
மௌனமாய் இருத்கும் இந்த பெருமகனின் இருப்பே சிலருக்கு எரிகிறதென்றால் .. இந்த தமிழினத்தின் மீதான தாக்குதலை இந்த மனிதனை எப்படி தடுத்திருப்பார் இன எதிரிக்கு சிம்மசொப்பனமாய் இருந்திருப்பார்.. பெரியாரும் அண்ணாவும் கண்ட கனவை நடைமுறையாக்கி .. மிகவும் தாழ்ந்திருந்த தமிழனின் நிலை உயர காலமெல்லாம் பாடுபட்டவரை ..சிலரின் ஏச்சுகள் என்ன செய்யும்..
ஒரு நாத்திகருக்காக லட்சபோலட்ச மக்கள் பிராரத்தனை செய்கிறார்கள்..
இதைவிடவா சிறப்பு வேண்டும்..
..
#சூரியனுக்கு_ஏது_கறை
..
ஆலஞ்சியார்
Friday, July 27, 2018
தமிழர் செய்த தவம்
ஒரு தனிமனிதனின் சாதனைகள்.
உலகில் எவருக்குமே கிட்டாத இனி கிடைக்காத சாதனைகள் கலைஞருக்கு மட்டும் எப்படி கைவந்தது.. பொதுவாழ்வில் வைரவிழா.. சட்டமன்ற உறுப்பினராய் மணிவிழா கட்சித்தலைவராய் பொன்விழா.. தொடர்ந்து தேர்ந்தெடுக்கபட்ட வரலாறு.. கலை இலக்கியம் பேச்சாற்றல் எழுத்து .. திரைக்கலை.. நாடகம் .. தொட்டதெல்லாம் தனிமுத்திரையோடு வெற்றி..
அரசியலில் ஆழ்ந்த தெளிந்த துணிவாக விரைவான முடிவுகள் ..செயல்படுத்திய திட்டங்கள் காலங்கடந்தும் இந்திய துணைக்கண்டத்திற்கே வழி காட்டுகிறதே ..
எதிர்த்தவனும் .. இவரை கண்டால் இசைந்ததாய் தான் வரலாறு .. இவரை சுற்றியே தமிழக அரசியல் அறுபதாண்டாய் இயங்குகிறதே..
இவர் பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் இதுவரை எவரும் அரசியல் செய்ததில்லை..
அப்பப்பா.. இவரை தாக்கியவர்கள் தளர்ந்துபோய் விழுந்து மண்ணாகிவிட்டார்கள்..
அரசியலின் அரிச்சுவடியை இவரிடம் கற்கிறார்கள்
..
எப்படி சாத்தியமாயிற்று.. இதோ இப்போது உடல்நிலை பாதிப்பின் போதும் .. கட்சிகாரனை .. கதறவிடாமல் சாமிக்கு மண்சோறு தின்னச் சொல்லாமல்.. இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு என்று ஒலிப்பெருக்கி கட்டி அலறவிடாமல்.. சொத்து வரி உயர்த்திய அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் போராட்டமென அரசை அலறவிடுகிறது திமுக இதுதான் கலைஞர் சொல்லி தந்த நடத்தி காட்டிய அரசியல்பாடம்.. யாருமே எதிர்பார்க்காத .. இனி முடிந்தது திமுக என கொட்டை எழுத்துக்களில் தலையங்கம் போட்டு முதல் நாள் மகிழ்வான் மறுநாள் மக்களுக்கான போராட்டம் உடன்பிறப்பிற்கு கடிதமென தட்டியெழுப்பி.. புதிய கரைவேட்டியை கட்டிக்கொண்டு கடைத்தெருவில் திமுககாரன் நிற்கவைத்துவிடுவார் .. அரசியலை அறிந்த ஞானி..
..
இன்றைக்கும் வசைபாடுவோர் அரைகுறைகளை கருத்தோடு இவர்மரணத்தை நேக்கி நிற்கிறார்கள் ..ஒன்று தெரியுமா மரணம் அழகு.. அது எல்லோருக்கும் வரும் அதிலும் புகழோடு வழ்ந்தவனுக்கு .. பேரின்பத்தோடு அணைத்துக்கொள்ளும் .. அவன் இறப்பதில்லை மாறாய் காலமாய் நம்மோடு நிலைத்து நிற்பான்.. கோழைக்குதானடா மரணம்.. வீரனுக்கு விவேகிக்கு நாற்றமெடுத்த சமுதாயத்தை நன்னீராய் மாற்றியவனுக்கு ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏதோவொன்றை நல்லதாய் அவன் வாழ்விற்கு விளக்கேற்ற செய்தவனுக்கு.. பசி போக்கியவனுக்கு.. எல்லோருக்கும் கல்வியென்ற இலட்சியவெற்றியை கண்டவனுக்கு.. இந்த சமுதாயத்தில் அழுக்கை அள்ளுகிறவனின் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றத்தை தந்து உயர்த்திவிட்டவனுக்கு .. ஒவ்வொரு செய்கையையும் இந்த சமுதாயம் மட்டுமல்லாது.. உலகமே ஏற்கும் திட்டமாய் செய்த தொலைநோக்கிற்கு.. வரலாறாய் வாழ்ந்தவனுக்கு ...மரணமில்லை கோழைகளே..
இவரை கண்டுபடிக்காமல் இவரை தந்ததை சுவைக்காமல்.. இவரின் காலடிச்சுவட்டை பின்பற்றாமல்.. இவர் செய்துவிட்டு போன சொல்லிவிட்டு போனதை பின்பற்றாமல் யாருமே இயங்கவே முடியாதென்ற சூழலை உருவாக்கியவருக்கு மரணமில்லை.. காலம் எப்போதும் சொல்லும் கலைஞரே தமிழகத்தின் சுழற்சி.. அந்த சுழற்சியின் அச்சாணி.. கலைஞரே
தமிழகத்தின் வரலாறு ..
..
அறிந்துக்கொள்ளுங்கள் மூடர்களே..
இந்தியாவின் வழிகாட்டி..
அரசியல் பல்கலைகழகம்..
வாழ்வியல் அற்புதம்
தொண்டர்களின் மூச்சு..
..
கலைஞர் தமிழனின் வரம்.
தமிழ் செய்த தவம்..
இனத்தின் முத்து
மானமுள்ள தமிழரின் சொத்து..
..
#எம்இனத்தின்_பெருவுடைப்பெருவேந்தன்
..
ஆலஞ்சியார்
Thursday, July 26, 2018
கலைஞர் 50... ஆண்டு தலைவராக..
திமுகவின் தலைவராக கலைஞர் பொறுப்பேற்று இன்றோடு 49 ஆண்டுகள் முடிவடைகிறது. நாளை 50ஆவது ஆண்டு தொடக்கம்.
இந்திய அரசியலில் தலைவர் கலைஞருக்கு மட்டுமே தனித்துவமான சாதனைகள் உண்டு, அதில் ஒன்று ஐம்பதாண்டு தொடர்ந்து ஒரு இயக்கத்தின் தலைவராக இருப்பது.. அண்ணா மறைவிற்கு பிறகு ஆட்சியும் கட்சியும் கலைஞரை தேடி வந்தது .. யார் முதல்வர் என்ற வினா எழுந்த போது நாவலர் பெயரும் கலைஞர் பெயரும் மட்டுமே இருந்தது.. கட்சி சட்டமன்ற உறுப்பினர் தேர்வு செய்கிறவர் முதல்வராக வரவேண்டுமென முடிவு செய்யபட்டபோது .. கலைஞரை மதியழகன் முன்மொழிய சத்தியவாணிமுத்து வழிமொழிந்தார்.. போட்டி என வந்துவிட்டால் நான் பின்மாறிக்கொள்கிறேன் என்று நாவலர் சொல்ல கலைஞர் ஏகமனதாக தேர்வானார்.. அப்போது பேசிய கலைஞர் நாவலரும் தன் ஆட்சியில் பங்குபெற வேண்டுமென்றார் ஆனால் நாவலர் அமைச்சராக விருப்பமில்லை என்று சொல்லிவிட்டார் .. பிறகு அமைச்சரானது வேறு கதை..
..
பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு திமுகவின் தலைவர் யாரென்ற கேள்வி எழுந்தபோது, பெரியாரின் ஆதரவோடு தலைவரானவர் கலைஞர்!
அதுவரை கட்சிக்கு பொதுசெயலாளர் பதவிதான் இருந்தது கலைஞர் தான் சட்டவிதிகளை மாற்றி தலைவர் பதவியை உருவாக்கி போட்டியிட்டார் அன்று முதல் இன்று வரை ஐம்பதாண்டுகள் ஒரு இயக்கத்தின் தலைவராக .. கடும் சோதனையான காலகட்டத்திலும் அரசியல் புயல்வீசிய நேரத்திலும் .. தொடர் தோல்விகளின் போதும் .. ஆட்சி அதிகாரத்தை ஏற்ற போதும்.. தொடர்ந்து தலைவராக இருந்துவருகிறார்.. இதுவரை யாரும் நிகழ்த்திராத சாதனை..
..
ஒரு ஜனநாயக இயக்கத்தை .. அதிகம் விமர்சனம் செய்யபடுகிற .. அடிதட்டுமுதல் தேர்தலை சந்திக்கிற.. கிளைகழக செயலர் முதல் தலைவர் பதவி வரை தேர்தலை சந்திக்க வேண்டுமென்ற விதிகளுக்குட்பட்டு இந்தியாவிலேயே ஒரு கட்சி உட்கட்சி ஜனநாயகத்தோடு செயல்படுகிறதென்றால் அது திமுக மட்டுதான் என அன்றைய தேர்தல் ஆணையர் டி.என்.ஷேசன் சொன்னார்.. தேர்தல் ஆணைய விதிகளின் படி திமுக மட்டுமே அரசியல் கட்சியாக இருக்கும் யோக்கியதை இருக்கிறதென்றார்.. அந்தளவு ஜனநாயகதன்மை உடைய கட்சி திமுக.. இதெல்லாம் கலைஞர் பெருமகன் ஜனநாயத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை காரணமாக சாத்தியமாயிற்று
..
ஒருகட்சியின் தலைவனுக்கான இலக்கணம் எதுவென கேட்டால் கலைஞர் கைகாட்டலாம்.. பல்வேறு கருத்துடையவர்கள் கடும் விமர்சனங்களை பொதுக்குழுவில் பேசலாம் இது எந்த கட்சியிலும் காணகிடைக்காத நிகழ்விது வீரபாண்டி ஆறுமுகம் நெல்லிகுப்பம் கிருஷ்ணமூர்த்தி...மதுராந்தகம் ஆறுமுகம் கோ.சி.மணி ..நிறைய பேர் மிக கடுமையாக கட்சி நடவடிக்கை விமர்சனம் செய்திருக்கிறார்கள் ..சிலவற்றை கலைஞர் ஏற்று தீர்மானத்தில் திருத்தங்களை செய்திருக்கிறார்.. பல விடயங்களில் பொதுக்குழு உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து அவர்களை ஏற்றுக்கொள்ள செய்திருக்கிறார்.. இதெல்லாம் பொதுவுடை இயக்கத்தில் கூட கிடையாது..
கலைஞர் முழுமையான ஜனநாயகவாதி..
மிக சிறந்த தலைவர் .. ஒரு தலைவன் எப்படி கட்சிகாரர்களிடையே ஏற்படும் பிணக்கங்களை சரிசெய்து இருவரையும் சமமாக நோக்கி வழி நடத்தவேண்டுமென்பதில் கலைஞரின் திறமை வெளிப்படும்..
..
ஐம்பதாண்டுகள் ஒருவர் தலைவராக கட்டுகோப்போடு ஒரு இயக்கத்தை அதுவும் ஜனநாயகத்தில் என்பது வியப்பூட்டும் செய்தி..
எதிர்த்தவன் இடம் தெரியாமல் போனான்..
சதி செய்தவன் சகலமும் இழந்தான்..
விமர்சித்தவர்களே பாராட்டுகிறார்கள்..
இன்று வசை பாடுவோர்.. நாளை வாழ்த்தி வணங்கலாம்.. அதுதான் கலைஞர்..
..
பொன் விழா ஆண்டு..
பொன்னாய் மின்னும் பொதுத்தொண்டு..
பொன் எழுத்தால் பொறிக்கபடும் உனது வரலாறு..
தமிழே வாழிய..வாழிய.. நூற்றாண்டு..
..
ஆலஞ்சியார்
Wednesday, July 25, 2018
தர்மயுத்தம்
தர்மயுத்தம் ..
பன்னீர் தான் என்ன செய்கிறோமென்று அறியாமல் பாதுகாப்பு அமைச்சரை கோர்த்துவிட்டு போய்விட்டார்..
இராணுவ ஹெலுகாப்கடரை தனி நபருக்கு பயன்படுத்த அனுமதித்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது..
பன்னீர் பரம அயோக்கியரென்று சசிகலாவை எதிர்த்தபோதே அறிந்ததுதான் அரசியலில் முதுகில் குத்தும் வழக்கம் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் செய்ததுதானே அதை தொடர்ந்து ஜெயலலிதாவும் எம்ஜிஆரை பதவிலிருந்து நீ்க்கி தம்மை முதல்வராக்க உதவுங்களென ராஜீவ்காந்திக்கு கடிதம் எழுதியதும் ..துரோகங்களின் தொடர்தானே
அதிமுக அதனால் பெரிதாக யாரும் கட்சிக்காரன் கூட அலட்டிக்கொள்ளவில்லை
தான் காலில் விழுந்து பெற்ற வாய்ப்பை மறந்து யாரென்று கேட்கும் எடப்பாடி ..இவர்களெல்லாம் நிச்சயமாக வசமாக சிக்குவார்கள்.. நன்றி மறந்தவர்கள்..
யாருக்கும் தெரியாமல் தனக்கு உதவிய நிர்மலாவை காட்டி கொடுத்துவிட்டார்
காட்டிகொடுப்பது அதிமுகவினருக்கு கைவந்தகலைதானே ..
..
பன்னீர் தர்மயுத்தமென்று ஊரை ஏமாற்றி சசியை வீழ்த்த நினைத்து கடைசியில் தன்னோடு யாரும் வர மறுத்ததும் சசியை வீழ்த்த முடியாமல் பார்பன சூழ்ச்சியில் விழுந்து செய்வதறியாது நிற்கிறார்.. தன் மீதும் தன் குடும்பத்தார் மீதும் எழும் ஊழல் குற்றசாட்டிலிருந்து தன்னை காத்துக்கொள்ள இதுவரை தம்மை இயக்கிய பார்பன கும்பலிடம் மண்டியிட்ட போது கைவிரித்துவிட்டதால் எதையும் தாங்கும் இதயம் என்றெல்லாம் உளற ஆரம்பித்துவிட்டார்..
..
எந்த பதவியும் வகிக்காத பெரியாருக்கு அரசு மரியாதை செய்யவில்லையா என ஒரு கூமுட்டை தொலைகாட்சி விவாதத்தில் பேசுகிறது அதே போல பன்னீர் சகோதரருக்கு
ராணுவ ஹெலிகாப்டரை வழங்கியதில் என்ன தவறென்கிறார் .. முதலில் இந்த ஒப்பீடே தவறு தனிமனித உயிரை காக்க வேண்டுமென்பதில் தவறில்லை ..ஆனால் பன்னீர் சகோதரர் போன்ற குற்றவாளிகளுக்கு அனுமதித்ததை தான் கேட்கிறோம் அதைவிட கடலில் சென்று எங்கிருக்கிறார்களென தேட சொன்ன போது நிர்மலா சொன்ன வாசகம் சமரசம் போன்றோருக்கு மறந்து போயிருக்கலாம்..
பெரியாருக்கு அரசு மரியாதையென்பது நீண்டகால அரசியல் சமூக தொண்டின் காரணமாக எப்படி அரசு பதவியை வகிக்காத காந்திக்கு அரசு மரியாதை வழங்கியதோ அதேபோல் தான் பெரியாருக்கு அவர் செய்த சமூக புரட்சிக்கு அரசியல் சாசனத்தையே மாற்றிய புரட்சியாளரோடு சமூகவிரோதியை பார்பதென்பது ..சமரசத்தின் அறிவு கோளாறு..
..
பன்னீர் மட்டுமல்ல நாளை எடப்பாடிக்கும் இதே நிலை வரும் காரணம் நேர்மையின்றி நெஞ்சில் உரமின்றி திடீரென்ற வாய்ப்பு உயரத்தில் கொண்டுபோய் சேர்த்தது அதுவும் பார்பனர்கள் தங்கள் நலனுக்காக இனி இப்படியொரு வாய்ப்பு கிடைக்காதென்பதால் இவர்களை வைத்து கள்ள ஆட்டம் ஆடுகிறார்கள் .. தேவையில்லையென்கிற போது தூக்கியெறிவார்கள் ..
..
இன்னும் அசிங்கபடுவார்கள்
..
ஆலஞ்சியார்
Tuesday, July 24, 2018
பன்னீரெனும் கயமை
நீ.. என்னதான் வளைந்து கும்பிடு போட்டு நின்றாலும் சூத்திரன் தான் என்கிறார் உறுகாய் மாமி.. குறுக்குவழியில் மக்களை சந்திக்காமல் வேண்டியவர்களுக்கு வேண்டியதை செய்து பதவிக்கு வந்தவர்கள் .. அவர்கள் காலம்காலமாய் நடைமுறைபடுத்தும் வழிகள் அறிந்திருந்தும் தேவையென்கிற போது எந்த அளவிற்கு கீழிறங்கி வருவார்கள் ..கிடைத்தவுடன் யார் நீ என்கிற வகையை சார்ந்தவர்கள்..
..
பன்னீர் ஒன்றும் யோக்கியர் இல்லை ஆனால் தமிழ்நாட்டின் அமைச்சராய்.. மக்களால் தேர்வு செய்யபட்டு .. கொள்ளைபுறமாக வராமல் தேர்தலை சந்தித்து வந்தவர் எந்த கோரிக்கையாக இருக்கட்டும் அழைத்து பேசி முடியாதென்று சொல்வது கூட நாகரீகம்தான்.. அதெல்லாம் இந்த மானங்கெட்டவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .. நிர்மலாவால் மக்கள் செல்வாக்கை பெறுவது இருக்கட்டும்.. அவர் கட்சி பாஜக தமிழக மக்கள் என்றைக்குமே ஏற்கமாட்டார்கள் .. ஆனால் இந்த அடிமைகள் தரங்கெட்டு கிடப்பதால் எட்டி உதைத்தாலும்
காலில் விழுகிறவர்களாக இருப்பதால் .. நிர்மலா போன்றவர்கள் இறுமாப்போடு சந்திக்க மறுக்கிறார்கள்.. ஆனால் மயிலை மைத்ரேயனை சந்திக்க முடிகிறது ..யாரிந்த மைத்ரேயன் அதிமுகவின் அடிமட்ட தொண்டனா எம்ஜிஆரை தெரியுமா ஜெயலலிதா எனும் பாப்பாத்தி தன் இனத்தவரை உள்ளே புகுத்தவேண்டுமென்பதற்காக தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அழுத்தத்தின் காரணமாக கொண்டுவந்தார் ஆனால் ஏதோ அதிமுகவிற்கே அடிதளமிட்டவரை போல எம்ஜிஆர் காலத்தில் யாரென்றே ரசிகர்களுக்கெல்லாம் தெரியாத மயிலாப்பூர் மாமா முன்னிலைபடுத்துகிறார்கள்.. காரணம் நூல்..
துணை முதல்வரை விட மயிலை மாமா முக்கியமானவரா..? ஆர்எஸ்எஸ் திட்டமிட்டே மைத்ரேயனையும் மாஃபா பாண்டியனையும் அனுப்பி அதிமுகவை நிர்மூலமாக்கியது .. ஜெயலலிதா மரணம் தொடர்ந்து ஆர்எஸ்எஸின் சொல்படி ஆடும் இவர்களை வைத்து தாங்கள் நினைத்ததை சாதித்தார்கள் தேவையில்லையென்ற நிலை வந்தால் தெருவில் நிறுத்திவிடுவார்கள் அதன் தொடக்கம் தான் பன்னீரை அவமானபடுத்தியது..
..
திரு.பன்னீர் அவர்களே.. மானத்தோடு வாழ்ந்த சமூகத்திலிருந்து .. பணம் பதவி புகழ் பேராசை.. தரங்கெட்ட செயலையும் செய்ய தூண்டுகிறது.. மானம் ஒன்றே பெரிதென கொண்டு வாழ்ந்த சமுதாயமென கவியரசு கண்ணதாசன் பாடினானே .. அங்கிருந்து வந்து தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறீர்.. யாரிந்த நிர்மலா எதற்காக சென்று பார்க்கவேண்டும் தமிழகத்தின் யாரென்றே மக்கள் அறிந்திராதவரை சென்று பார்க்கவேண்டிய அவசியமில்லையே.. தேவைபட்டால் வந்து பார் என்கிற நிலை ஏற்படுத்திருக்கவேண்டாமா.. அவர்கள் தயவில் ஆட்சி அதிகாரம் நடத்துவதால் வந்தது இந்த கேவலம்.. ஜெயலலிதாவின் கால்களை நக்கிய போதே மானங்கெட்டு போய்விட்டீர்.. இப்போது உரைக்கவா போகிறது
தனிப்பட்ட பன்னீரை பார்க்கவில்லை என்பதல்ல ..எங்கள் மாநிலத்தின் துணை முதல்வரை பார்க்கவில்லை என்பதால் தான் கோவபடுகிறோம்.. வகிக்கிற பதவிக்கென்ற மரியாதையை கெடுக்காதீர்..
..
ஒரு உண்மையை பன்னீர் சொல்லியிருக்கிறார்..துணை முதல்வரின் சகோதரர்கள் அதாவது (குற்றவாளிகள்) ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்தியிருக்கிறார்.. பாஜக ஆட்சியில்
குற்றவாளிகள் சுகமாக வலம் வருகிறார்கள்..
பாவம் மக்கள்..
..
தெற்குசீமை ஆண்ட.. மன்னர்குலம்..?
..
ஆலஞ்சியார்
Monday, July 23, 2018
தளபதி கையில் தமிழகம்
மோடியின் கைகளில் இரத்தக் கறை படிந்துள்ளது... மோடி இந்துத்துவா தாலிபான் கொள்கைகளை பரப்பி வருகிறார். மோடியின் நடவடிக்கைகள் ஹிட்லர் மற்றும் மூசோலினை பின்பற்றி அமைந்துள்ளது. அவர் தம்மை மிகப் பெரிய சர்வாதிகாரியாக முன்னெடுத்து செல்ல முயன்று வருகிறார். எனவே பாஜக தனது பாரம்பரிய கூட்டாளியான சிவசேனா கட்சியை இழந்து விட்டது.
2019 ல் பாஜக 100 இடங்களில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை.. என்கிறார்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி..
..
ஏற்கனவே மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி செய்வது யார் என்ற போட்டி பாஜக , சிவசேனா ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிவசேனா சம்னா பத்ரிகை மூலம் மிகவும் கடுமையாக பாஜக வை விமர்சனம் செய்து வருகிறது. பாஜக தொடர்ந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டு வந்தபோதும் சிவசேனா தொடர்ந்து விமர்சனம் செய்த காரணத்தினால்
2019 ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டமன்ற இடத்திலும் , 48 நாடாளுமன்ற தொகுதியிலும் பாஜக தனித்து போட்டியிடுவதென பாஜக முடிவு எடுத்திருக்கிறது ..
தெலுங்கு தேசத்திலும் ஆந்திராவிலும் தங்கள் கூட்டாளிகளை இழந்து நிற்கிறது.. ஆந்திராவில் மிக கடுமையான எதிரியாக பாஜகவின் முன்னாள் நண்பர் சந்திரபாபு நாயுடு மாறிவிட்டார்.. பீகாரிலும் நிதிஷ் நிறம் மாறலாம்
பாஜக தென்னகத்தில் காலூன்றவே முடியாத நிலை இந்நிலையில் தான் தமிழகத்தில் பாஜகவை மக்கள் நேசிப்பதாக பொன்னர் சிரிக்காமல் சொல்லிவிட்டு போகிறார்..
..
அவர்களுக்கு இருக்கிற ஒரே ஆதரவு கேட்காமலே வளைந்து நிற்கும் அதிமுக தான் இந்த அடிமை கூட்டம் மக்கள் மனதிலிருந்து தூக்கியெறிபட்டு வெகுநாளாகிறது அதிகாரத்திற்காக எதையும் செய்வார்கள் அது தேர்தல் வரைக்கும் தான் பிறகு இருக்குமிடம் தெரியாமல் போவார்கள்... 60 லட்சம் அதிமுக உறுப்பினர்கள் புதுபிக்கவில்லையென செய்திகள் வருகிறது நிறைய பேர் எம்ஜிஆருக்காக ஜெயாவிற்காக இருந்தவர்கள் இப்போது நடக்கும் அறிவுடை அமைச்சர்களின் ..? கூத்தால் வெட்கி வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள் .. இந்த நிலையில் தான் சிலர் இடம் காலியாகிறதென்று எண்ணி ஏதாவது கிடைக்காதா என அரிதாரத்தோடு அலைகிறார்கள்..
..
பாஜக ஆட்சியின் இறுதி அத்தியாயத்தை மக்கள் எழுத தொடங்கிவிட்டார்கள் ..நாடெங்கும் எதிர்ப்பு மெல்ல கிளர்ந்தெழுந்து பெரும் சுவாலையாய் தெரிகிறது .. பாஜகவிற்கு தமிழகத்தின் நண்பனாக அப்படி சொல்வது கூட தவறு அடிமைகளாக இருக்கும்
அதிமுகவினர் ஒரு சில இடங்களில் வெல்வதுகூட பெரிய பலனை தருமென நம்புகிறார்கள்.. 39 அடிமைகளால் எந்தவொரு நல்லதும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை மாறாக தலையாட்டி தமிழகத்திற்கு தீங்கை மட்டுமே வரவழைத்திருக்கிறார்கள்..
..
2019 ல்
எந்த நிலையிலும் அதிமுகவோ அதற்கு துணை போகிறவர்கள்..பாஜகவிற்கு ஆதரவளிப்பவர்கள் வீழ்த்தபடவேண்டும் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் மம்தா சொன்னதைப்போல தளபதி மிகப்பெரிய ஆளுமையாக வருவார்..
ஆம்.. தளபதி கைகளில் தமிழகம் வரவேண்டும் அப்போதுதான் தலை நிமிர முடியும்..
அதற்காக இப்போதிலிருந்து அருகில் இருப்போரிடம் கதையுங்கள் .. தெரிந்தவர்களிடம்.. நண்பர்களிடம்.. தெருமுனையில் .. சந்திப்போரிடம் பிரச்சாரத்தை தொடங்குங்கள்.. ஆம் மிகப்பெரிய வெற்றி.. தலைகனத்தோடு திரிபவர்களையும் முதல்வர் கனவோடு சினிமாவை விட்டவர்களையும் .. சாதிமதவெறி மடையர்களையும் கால் பிடறி ஓட ..வைப்போம் . திமுக ஒன்றுமட்டுமே தமிழக நலனுக்கானதென்று முழங்குவோம்..
..
நல்லதை விதைப்போம்
..
ஆலஞ்சியார்
Sunday, July 22, 2018
தீதும் நன்றும்..
சென்னை சேலம் எட்டுவழிச்சாலை அமைந்தபின் மக்களுக்கு பிடிக்கவில்லையென்றால் பூட்டு போட்டு பூட்டிவிடுவோம் அறிவார்ந்த அமைச்சர்பெருந்தகை உதயகுமார்
..
தப்பு அவர் மீதில்லை நாம் தான் தகுதியானவர்களின் கையில் நாட்டை ஆள தராமல் அறிவிலிகளின் நீலிக்கண்ணீரை நம்பி.. நான் பெண் பாவமென்ற பகட்டு வார்த்தைக்கு இளகி .. என்ன செய்கிறோமென தெரியாமல் .. ஐந்தாண்டுகளுக்கு ஆள போகிறவன் அடிப்படை தகுதியை கூட ஆராயாமல் வெற்றியை தந்ததின் பலன் இது..
..
திராவிட அரசியலின் தொடக்கம் அறிவை தட்டியெழுப்பி.. சுயமரியாதை ஊட்டி யாரை தேர்வு செய்ய கூடாதென்ற தெளிவை தந்து .. சுயமாய் எடைபோடும் ஆற்றலை வளர்த்தெடுத்தது.. அந்தந்த தொகுதியில் கட்சிகளை கடந்த நல்லவர்களை நாணயமானவர்களை தேர்வு செய்த தமிழகம்..
ஆரிய சூழ்ச்சி அறியாமல் அரிதார கவர்ச்சியில் மயங்கி மகோராவை (எம்ஜிஆரை) தேர்வு செய்ததலிருந்தே அறிவு சிதைவின் தொடக்கம் வந்தது.. வருமானவரிக்கு பயந்து கட்சியை தொடங்கி.. மிரட்டலுக்கு பயந்து காட்டி கொடுத்து மத்தியில் ஆள்வோருக்கும் அதிகாரம் பெற்றவர்களுக்கும் மயிலை குயிலையும் மயிலையும் தந்து ஆட்சியை காப்பாற்றி.. நியாய தர்மங்கள் மீறபட்டு பொய் புரட்டில் நடத்தி அறிவை மழுங்க செய்யும் கவர்ச்சி அரசியலை முன்னெடுத்து தமிழகத்தின் இன்றைய அடிமைத்தனத்தின் தொடக்கம் அன்றே தொடங்கியதுதான்..
..
அறிவார்ந்த விவாதங்கள் பேச்சின் தெரியும் மேதமை .. அரசியலின் சூட்சமமறிந்த செயலாற்றல் எதிரியும் மயங்கும் சொல்வன்மை .. எதிரியை திணறடிக்கும் அரசியல் ..தெளிவாய் அறிவாய் .. எல்லோரும் வியக்கும் அரசியல் ஆளுமை ..இவையெல்லாம் கண்ட தமிழகம்தான் இன்று கிறுக்குதனத்தை .. மற்றவர்கள் நம்மை கேவலமான பார்க்கும் விதத்தில் பேசிதிரியும் அடிமைகளின் பேச்சை நாடே காரி துப்புகிறது.. எனக்கு தெரிந்து ஒருவர் கூட சரியாக இல்லை எதிலும் தெளிவற்றவர்களாக பெரும் முட்டாள்களாக எதைப்பற்றிய அறிவுமில்லாதவர்களாக இருக்கிறார்கள்.. இவர்களை இப்படியே வைத்திருந்திருக்கிறார் ஜெயலலிதா .. யாரையும் சுயமாய் சிந்திக்கவிடாமல் அடிமைத்தனத்தை ஊறிப்போனவர்களாய் .. எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடித்து கொள் ஆனால் பேச கூடாது .. பேசினால் மானம் போய்விடும் என்றறிந்து செருப்பைவிட கேவலமாக வைத்திருந்தார் இப்போதுதான் அதன் ரகசியம் நமக்கு புரிகிறது..
..
எவ்வளவு திறமையானவர்களை தந்த தமிழகம் .. இன்று இந்தியாவின் முன் தலைகுனிந்து நிற்கிறது அதிமுகவில் ஒருவன் கூட அறிவோடு பேசுவாரா என தேடிபார்த்தாலும் கிடைக்கவில்லை.. காரணம் அங்கே எவரும் கொள்கை ஈர்ப்பாலோ.. அல்லது அரசியல் அறிவுடையோரின் பின்பற்றியதாலோ
சமூகநீதிக்கான களம் இது என்பதாலோ.. நமக்கான உரிமையை பெற இதுவே சரியான கட்சி என்பதாலோ இணையவில்லை மாறாக ஒருவித மாய கவர்ச்சியில் மயங்கி தன்னை இழந்தவனை .. காலம் காசு பார்க்க தகுந்த இடமென நம்பவைத்ததால் அங்கு வந்தான் .. அறிவு சுயமரியாதை மானமெல்லாம் அவனுக்கு தேவைபடவில்லை..
..
தம் மக்களுக்காக போராட திமுக போன்ற இயக்கங்கள் இருக்கிறது அது எதை செய்தாலும் அது சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டதாக இருக்கும்
தொலைநோக்கு திட்டங்கள் .. சமூகநலன் சமூகநீதி மக்கள் நலன் இவையெல்லாம் திமுக ஆட்சியில் மட்டுமே கிடைத்தது அதை வேண்டாமென பொய் பிரச்சாரத்தை நம்பி.. சில பாசிச சக்திகளின் தந்திரத்தில் நம்மை அறியாமலேயே விழுந்ததால் இன்று நம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்வி குறியாய் .. மண்ணும்,கலாச்சாரமும் மக்களும் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கிறார்கள்..
இந்த மடையர்களை தேர்ந்தெடுத்ததின் பலன் நமது உரிமையும் உடைமையும் பறிபோகிறது.. நாமே தேடிகொண்ட வினை..
வெளியில் தலைகாட்ட முடியவில்லை தமிழகத்தை சேர்ந்தவனென்றாலே பூயுட்டிபுல் காஷ்மீர் பாடுகிற லெவலில் தான் நினைக்கிறார்கள் .. திறமையானவர்களை சிலரே நம்மை காத்துநிற்கிறார்கள் ..அவர்களை கவனித்தால் அது திராவிடம் தந்ததவர்களாக இருப்பார்கள் திருச்சி சிவாவைப்போல ஒரு சிலரால் தான் தமிழகம் மானம் காப்பாற்ற படுகிறது.. தமிழகம் இனியேனும் விழித்துக் கொள்ளவேண்டும்.. நமக்கான இயக்கம்,திமுகதான் என்பதை உணரவேண்டும்.. அப்போது விடியும் இழிவு நீங்கும்..
..
தீதும் நன்றும் பிறர்தரவாரா..
..
ஆலஞ்சியார்
Saturday, July 21, 2018
ஏழைத்தாயின் மகன்
ஏழைத்தாயின் மகன்..
ஏதோ சினிமா டைட்டில் போல இருக்கிறதா..
ஆம் நாம் "ஒருதாய் மக்களை" எல்லாம் பார்த்தவர்கள் தாம் ..
இந்த அழுகை .. பதைபதைப்பு .. கண்ணீர் .. சாவு சோகம்.. இரக்கம் இதெல்லாம் அரசியலில் பேசுகிற செய்கிறவர்கள் தங்கள் மீதே நம்பிக்கையில்லாதவர்கள்.. நான் பெண் என்பதால் .. கைகாசை செலவு செய்து மூக்குத்தியை அடமானம் வைத்து என்றெல்லாம் கதைத்தவரை நம்பியதால் தமிழகம் படுகிற அல்லல்கள் சொல்லி மாளாதவை..
..
என்ன பேசியிருக்கவேண்டும் பிரதமர் அடுக்கடுக்கான குற்றசாட்டிற்கு ஆதாரத்தோடு பதிலளிக்காமல்
காங்கிரஸை ஆட்சியை பிடிக்க எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கிறது. பதவி ஆசையால் பேசிகிறார் என்றெல்லாம் உளறுவதிலிருந்தே சரியான விளக்கம் தர முடியவில்லையென தெரிகிறது .. எல்லா அரசியல் தலைவர்களும் பதவிக்கு வரதான் ஆசைபடுவார்கள் ..ஆனால் அதை ஊர்சுற்றி பார்க்க ஒரு வாய்ப்பாக கொள்ளாமல் மக்களுக்கு ஏதேனும் நம்மால் செய்திட முடியுமென்ற நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள்
ஏழைமகன் அதனால் ராகுலின் கண்களை பார்க்க முடியவில்லையென்பது ஒருவகை தாழ்வுமனபான்மை.. நெஞ்சில் நேர்மையிருந்தால் நேர்கொண்ட பார்வை தானாக வரும் .. இதில் ஏழை எங்கிருந்து வந்தது நாட்டின் உயர்பதவியை வகிப்பவர்., நான்கு வருட விமானப் பயண செலவு 1484 கோடி ரூபாய் செலவுசெய்தவர்.. பத்துலட்சத்திற்கு நரேந்திர மோடியென பெயரிட்ட கோட் அணிந்தவர்.. இந்தியாவின் முதன்மை பணக்காரரின் நண்பர் எப்படி ஏழையாக முடியும்..
..
ரபேல் விமான பேரத்தில் ரகசியம் காக்கபடவேண்டுமென கூறியதற்கு அப்படியொரு ரகசியகாப்பே அதில் இல்லையென சம்பந்தபட்ட நாடு பிரான்ஸ் சொல்லிவிட்டதென்பது என்றால் பதிலில்லை..
கருப்பு பணம் மீட்பென்றீர்களே அது படுதோல்வி என்றால் கருப்புபணம் மீட்பு தொடர்ந்து நடக்கும் என்கிறார்.. இந்தியா விடுதலை அடைந்ததலிருந்து கருப்புபண மீட்பு நடந்துகொண்டுதானிருக்கிறது ..
உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைகிறது இந்தியாவில் மட்டும் ஏறுகிறது அந்த பணம் மோடி பணக்கார நண்பருக்கு போகிறது என்றால் ..அது குறித்து வாயைதிறக்கவில்லை
மதவெறி சாதிவெறி தாண்டவமாடுகிறதே என்றால் .. இந்தியவரலாற்றில் முதல் முறையாக பெண்களுக்கு சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறதென்றால்..
பிரதமரின் நண்பர்கள் பத்து இருபது பணக்காரர்களுக்கு 2.5 லட்சம் கோடி தர முடிகிறது.. விவசாயிகள் சிறுதொழில் செய்வோர் நிலை என்ன வென்றால் பிரதமர் வாய் திறப்பதில்லை.. அமிர்ஷாவின் மகன் மூன்றே மாதத்தில் 16000 மடங்கு சொத்து சேர்த்திருக்கிறாரே என்றால் பிரதமர் மௌனம் சாதிக்கிறார்..
..
ஏழைத்தாயின் ஆட்சி செய்த குஜராத்தில் பிணகுவியலும் இரத்தவாடையும் .. கண்ணீரோடும் பயத்தோடும் கலங்கிநின்ற பெண்கள் முதியவர்களும் சிறு குழந்தைகளும்.. எதிர்வினையாற்றதான் செய்வார்களென்ற திமிர் பேச்சே,காரணம் என்பதை.. அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களே தங்களிடம் #அரசதர்மத்தோடு நடத்துகொள்ளுங்கள் என்றதெல்லாம் ஏழைத்தாயின் மகன் செவிகளை அடையாததால் ..இன்றைக்கு அதே பொய் பேசும் வித்தை உணர்ச்சியை தூண்டி மத சாதி மோதலை கையிலெடுத்து காரியம் சாதித்ததால் .. பொய்யும் புரட்டும் போட்டோஷாப்பும் .. பந்தலிட்டு பதவிக்கு வரமுடிந்தது ..
மெல்ல வெளுத்தது சாயம் ..இன்று பதிலளிக்க முடியாமல் அதே பழைய வசனத்தை திரும்ப திரும்ப பேசுகிறார்
..
ஆனால் இப்போது சொந்த மாநில மக்களே விழிப்போடு இருக்கிறார்கள் அழுகாச்சி காவியத்தை பார்க்கவோ கேட்கவோ தயாரில்லை ..குஜராத் வளர்ச்சியென்ற மாயை பல்லிளிக்கிறது .. காரணம் எதிலும் உண்மையில்லை ..பொய் சலங்கைகட்டி ஆடும் ஆனால் ஆட்டம் முடியும் போதுதான் தெரியும் அது கள்ள ஆட்டமென்று .. அதனால் தான் பிரதமரால் விழிபிதுங்கி நிற்கும் நிலை..
காங்கிரஸ் 60 ஆண்டுகளில் என்ன செய்ததென்று எதிர்கேள்வி கேட்டு திசை திருப்புகிறார்..
நாடு மோடியின் ஆட்சியில் எல்லா நிலையும் துறையிலும் நலிந்து போய்விட்டது எல்லாதரப்பு மக்களும் சொல்லண்ணா துயரத்தில் .. ஒரேயொரு சமூகம் பயனடைகிறது..
..
நாடு எதிர்ப்பார்த்து நம்பிக்கையோடு காத்துநிற்கிறது..
பாராளுமன்றத்தில் ஒலித்தது என் குரலல்ல.120 கோடி மக்களின் மனக்குமுறல் என்றார் ராகுல் ...ஆம் அதுதான்
ஒவ்வொரு இந்தியனின் மனதில் இருந்தது..
#Rahul2019..
..
ஆலஞ்சியார்
Friday, July 20, 2018
ராகுல்...
ராகுல்..
ஐந்து வருடங்களுக்கு முன்பு இதே பாஜகவினரால் பப்பு என கேலிசெய்யபட்டவர்..
மிக நிதானமாக அதிலும் தெளிவான ஆதாரங்களோடு .. செவியில் அறைகிற மாதிரி கேள்விகளை தொடுக்கிறார்.. பாவம் பதில் சொல்ல வாய்ப்பு வழங்கபடுமென சபாநாயகர் எழுந்துநின்று சொல்லியும் எங்கே தொடர்ந்து பேசினால் இருப்பதையும் கழட்டி நிர்வாணபடுத்திவிடுவாரோ என அஞ்சி சில அறிவிலி அமைச்சர்களும் ஊறுகாய்களும்
கூச்சலிட்டு சபையை நடத்தவிடவில்லை..
சரக்கிருக்கிவன் என்ன பேசினாலும் அதற்கு தகுந்த பதிலை நமக்கான வாய்ப்பு வரும் போது பதிலிளித்து விடுவான் பொய்களால் கட்டமைக்கபட்டவர்கள் அடிதளம் வலுவிழப்பது கூட தெரியாமல் கூச்சல் ரகளையில் ஈடுபட்டு திசைதிருப்புகிறார்கள்..
..
பாஜகவினர் எப்போதுமே நேர்மையான விவாதத்திற்கு வருவதில்லை 2ஜி விவாதத்தில் கூட பொய்யென்று தெரிந்தும் சிஏஜி அறிக்கை அனுமானம் என்றறிந்தும்.. தொடர்ந்து கூச்சல் ரகளை செய்து பாராளுமன்றத்தை முடக்கியவர்கள் ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதே சிஏஜி அறிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாதென்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி நாடாளுமன்றத்தில் பேசுவார்.. எப்போதுமே விவாதத்தில் கலந்து கொள்வதில்லை கலந்துகொண்டாலும் உண்மையை பேசுவதில்லை..
..
நிச்சயம் நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்று போகுமென்று அறிந்தும் ஏன் கொண்டுவந்தார்கள் .. அரசின் செயல்களை கையாலாகாததனத்தை .. பணக்காரனுக்காக ..காப்ரேட்களுக்காக அரசு செயல்படுவதை, மதமோதலை செயற்கையாக உருவாக்கி குளிர்காயும் அயோக்கியதனத்தை,தாழ்த்தபட்ட மக்கள் நாட்டில் வேட்டையாடபடுவதை.. இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து எழமுடியாமல் தவிப்பதை .. பணமதிப்பிழப்பென்ற பெயரில் மக்களை நடுதெருவில் நிறுத்தி கருப்புபணத்தை ஒழிக்கிறேன் பேர்வழியென்று .. 480 % விழுக்காடு கருப்புபணம் புழங்கல் அதிகரிப்பதை..சுவிஸ் பேங்கில் இருக்கும் கருப்புபணத்தை மீட்டு மக்கள் வங்கி கணக்கில் ஒவ்வொருவருக்கும் #15 லட்சம் வரவு வைப்பேன் என்றதை.., நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ள அஞ்சி ஓடியொழிகிற பிரதமரை அடையாளம்காட்ட..
சமூகநலன் சமநீதியற்ற அரசை தோலூறித்து காட்ட நீதிமன்றங்களை மநுநீதி மன்றங்களாக்கிய கொடுமையை விளக்க.. தொடர்ந்து புறக்கணிக்கபடும் மாநில நலன்களை பட்டியலிட்ட காட்ட வாக்கெடுப்போடு கூடிய நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரபட்டது.. இன்னும் சிலமாதங்களே இந்த அரசின் பதவிகாலம் உள்ள நிலையில் .. மக்களுக்கு இவர்களின் யோக்கியதையை சொல்லவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம்.. எங்கே முழுவதும் கிழித்து தொங்கவிட்டுவிடுவார்களோ என அஞ்சி..
கூச்சலிட்டு அரசை எதிர்ப்பவர்களின் குரலை நசுக்கி மக்களுக்கு தெரியாமல் செய்துவிடலாமென நினைத்தால் அதைவிட அறிவிலித்தனம் வேறில்லை ..
காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்யாததை நான் நான்கே ஆண்டுகளில் செய்துமுடித்திவிட்டேனென பொதுகூட்டங்களில்
குரல் உயர்த்தும் பிரதமர் சின்னபையனின் ( அவர்தான் சொன்னார்) கண்களை பார்த்து பேச கூட அஞ்சம் கொள்கிறாரென்றால் 56 இன்ச் சுருங்கிவிட்டதா..? ஐந்தாண்டுகளில் 20 தடவைக்குமேல் பாராளுமன்றத்திற்கு வராத பிரதமர்.. வாய்திறந்தால் பொய் பேசி திரியும் பிரதமர் சொன்னதை செய்ய வக்கில்லாத பிரதமர் காப்ரேட்களும் பிரதமர் .. சாமானியனுக்கு தேவையில்லை.. இவர் தோற்கடிக்கபடவேண்டும்.. ஜனநாயக முறைப்படி தேர்தலில் .. நாட்டை நாசமாக்கி இரத்தம் சிந்திய நம் மண்ணை சுத்தபடுத்திட ..
இந்த காவுகேட்கும் காவிகளை முகத்திரையை கிழித்து இனி எப்போதும் வரமுடியாதவாறு மாபெரும் தோல்வியை தருவோம்..
அதற்காக முதல் குரலாய் ராகுல் குரல் நாடாளுமன்ற ஒலித்ததாகவே எண்ணுகிறேன்..
..
இந்தியாவின் நம்பிக்கை ராகுல்..
..
ஆலஞ்சியார்
Thursday, July 19, 2018
பாஜக நாட்டின் சாபகேடர
இந்தியாவில் 1 நிமிடத்திற்கு 4 பெண்கள் கற்பழிக்கபடுகிறார்கள்... 4 ஆண்டுகளில் 1,10, 333 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள்.
மத்திய பாஜக அரசு அதிர்ச்சி தரும் வகையில் அறிவிப்பு !!
2014 ம் ஆண்டு 36,735
2015 ம் ஆண்டு 36,735
2016 ம் ஆண்டு 38,947
2017 ----- ம் ஆண்டு அரசு அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில்
மத்திய பாஜக அரசின் இந்த தகவலை மத்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் Kiren Rijiju கிரன் ரிஜிஜூ அறிவித்திருக்கிறார்..
இது இல்லாமல் 19 லட்சம் கடும் குற்றங்கள் நடந்திருப்பதாக கூறுகிறார் .. இது அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. எனில் பதிவு செய்யபடாத குற்றங்கள் கொலைகள் கற்பழிப்புகள் 50% விழுக்காடுகளுக்கு மேல் வரும்.. இது விடுதலை இந்தியாவில் எந்த ஐந்தாண்டு ஆட்சியிலும் இல்லாத அதிகம் குற்றங்கள் நடந்திருக்கிறது .. கொலை கொள்ளைகளை மதத்தின் பெயரில் செய்தால் தங்கள் சிந்தாந்தத்தை சொல்லி செய்தால் அமைச்சரே வரவேற்று பரிசுகள் தரும் நிலை..
..
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் குற்ற எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன அதுவும் தலித் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்திருக்கிறது பெண்குழந்தைகள் பாலியல் தொல்லை தருவது முன்னெப்போதுமில்லாத அளவில் தொடர்ந்து தலைப்பு செய்தியாக்கபடுகிறது கடுமையான சட்டங்கள் இல்லை.. சிறுமிகளை வன்புணர்வு செய்யும் மிருகங்களுக்கும் கருணை காட்ட சொல்லும் முற்போக்குவாதிகளின் பிற்போக்கு ..
மீண்டும் மீண்டும் இதே தவறுகள் அதிகரிக்க ஒரு காரணமாகிறது.. தூக்குதண்டனைக்கு எதிரான கருத்துடையவன் தான் ஆனால் இது போன்ற மகாபாவிகளை விட்டுவைப்பது கூட சமுகத்திற்கு கேடு.. அரசியல்ரீதியான சாதி மத மோதல்களில் ஏற்படும் சட்டென்ற உணர்ச்சியில் செய்துவிடும் குற்றங்களோடு இது போன்ற வன்கொடுமைகளை ஒப்பிட முடியாது..
..
ஆட்சியாளர்கள் மதவெறி சாதிவெறியை தூண்டுதல் ஒருவித பதட்டத்தோடு மக்களை வைத்திருப்பதும்.. மதத்தின் பெயரை சொல்லி அராஜகம் செய்ய தூண்டுவதும் ..அப்படி கலவரத்தில் ஈடுபடுவோரை .. கைது செய்தாலும் விடுவித்து மரியாதை செய்வதும்.. அதை மத்திய அமைச்சரே செய்வதும் இதுவரை நாடு கண்டிராதது .. குற்றவாளிகளுக்கு அமைச்சரே பாதுகாப்பளிப்பது அரசியல் சாசன விதிமீறல் மட்டுமல்ல வகிக்கிற பதவியை தவறாக பயன்படுத்தலும் ஆகும் .. ஆனால் இதை மத்திய அரசோ மோடியோ.. அவர்களின் தலைமையோ கண்டிப்பதில்லை மாறாக மறைமுகமாக ஆதரவை தருகிறார்கள் ..
அதனால் தான் இந்த நான்காண்டில் குற்றங்களின் எண்ணிக்கை அதுவும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.. ஒருவேளை இதுவும் சாதனை என்று தமிழிசை வகையறாக்கள் சொல்லி திரியலாம்..
..
பாஜக நாட்டின் சாபகேடு
..
ஆலஞ்சியார்
Wednesday, July 18, 2018
அதிமுக அரசு அகற்றபட வேண்டும்
அதிமுக அரசை கலைக்க திட்டம் திருமா.
..
மத்திய அரசு வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்தி கோடிக்கணக்கில் பணமும் கிலோ கணக்கில் நகையும் கைப்பற்றியிருக்கிறது.
எடப்பாடியின் நெருக்கிய உறவினர் செய்யாதுரையிடமிருந்து
163 கோடி ரூபாய் ரொக்கம் , 150 கிலோ தங்கம் கைப்பற்றியிருக்கிறது S R & Co பெயரில் நிறுவனத்தை நடத்தியவர் தான் இவர். முன்பு ஒரு சாதாரண ஆட்டு வியாபாரியாக இருந்தவர் பின்னர் ஆடுகளை வெட்டும் கசாப்புகடை நடத்தி வந்தார். தற்போது 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை , நெல்லை பைஃபாஸ் காண்ட்ராக்ட் எடுத்துள்ளார். எடப்பாடி முதல்வராக பதவியேற்ற உடன் இவரது நிறுவனம் அசுர வேகத்தில் வளர்ந்தது. இவர் ராமநாதபுரம் மாவட்டம் கடைக்கோடி கிராமத்தில் பிறந்தவர். கையெழுத்து கூட போடத் தெரியாதவர் என்பது கூடுதல் சிறப்பு..
வருமான வரி துறை செயயாத்துரை யை எதற்காக ரெய்டு செய்தது என்ற காரணம் இப்போது புரிகிறதா ..
பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள் எடப்பாடியின் சம்பந்திக்கு தொடர்ந்து வழங்கபடுகிறது மிக பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அதனால் எடப்பாடி சம்பந்தியை கைது செய்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன..
பிரதான எதிர்கட்சி தலைவர் திரு.ஸ்டாலின் இனியும் எடப்பாடி ஆட்சியில் தொடர்வது விசாரணையை பாதிக்குமென்றும் லஞ்ச ஒழிப்புதுறை வழக்கை கையிலெடுக்க வேண்டுமென்று கூறிவரும் நிலையில்..
திருநாவுகரசரும் திருமாவும் ஆட்சியை கலைக்க சதி என்கிறார்கள்..
..
முதலில் அவர்கள் தெளிவுபடுத்தவேண்டும்..
தொடர்ந்து கொள்ளையடிப்பதும் கோடிக்கணக்கில் அமைச்சர்கள் உறவினர் நண்பர்கள் வீடுகளில் கண்டெடுப்பதும் .. கண்டெய்னர்களில் பணி இடமாற்றம் நடப்பதும்.. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் நடைபெறுகிறதே இவை குறித்து திருமா வின் பதில் என்ன.. மத்தியரசு மிரட்டுகிறதென்றும் அமிர்ஷா வருகைக்கு பிறகே ரெய்டுகள் நடப்பதாகவும் கூறுவதை ஏற்றாலும் .. நிச்சயமாக அதிமுக ஆட்சி அகற்றபடவேண்டுமென்பதில் மாற்று கருத்தில்லை.. இந்த அடிமைகளுக்கு முன்பே தெரியும் நம்மை காரியம் முடிந்தவுடன் கழுவேற்றுவார்களென அறிந்திருந்தும் தலையாட்டியாய் மாநில நலன்களுக்கெதிராக மத்தியரசு நடத்திட்ட திட்டங்களுக்கு ஒப்பதல் வழங்கியதும்.. அரசு அதிகாரிகள் கூட அதிகாரம் செலுத்துகிற நிலையில் கைகட்டி நிற்கிற கேவலமான செயல்களை செய்தும்.. முதல்வரென்றும் பாராது இருக்கையில் அமராமல் எழுந்துநின்று கைகட்டி பாஜகவினருக்கு சேவகம் செய்ததும் தமிழகத்தை ஒட்டுமொத்தமாக கூனிகுறுகி நிற்கவைத்த இந்த கேடுகெட்ட இழிவானவர்களை இன்னமும் ஆட்சியில் தொடரவிடவேண்டுமா.. இப்போது கூட குரலை உயர்த்த அஞ்சி திராவிடத்தை துணைக்கழைக்கிறார்கள் இந்த தொடை நடுங்கிகள்.. இவர்கள் இன்னும் விட்டுவைத்திருப்பது.. நாட்டிற்கு தமிழக மக்களுக்கு இனத்திற்கு செய்கிற கேடு..
..
ஜனநாயக மரபுகள்,குறைந்தபட்ச நேர்மை.. நீதி,நியாயம்,அரசியல் மாண்பு , ஒழுக்கம், சுயமரியாதை, இவை எதுமே இல்லாத கேடுகெட்ட ஆட்சியை நடத்தும் மக்கள் விரும்பாத மக்கள் தேர்வு செய்யாத கொள்ளைப்புறமாக பாசிசம் நுழைய.. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஆட்சி இனனமும் தொடர வேண்டுமா என திருமா பதில் சொல்ல வேண்டும்.. மத்தியரசு மிரட்டுகிறதென்ற ஒரே காரணத்திற்காக இவர்களுக்கு பரிதாப படுவது மக்களுக்கு/நாட்டிற்கு செய்கிற துரோகம்..
..
தகுதியற்றவர்களை துரத்தி நேர்மையான.. மக்கள் விரும்புகிறவர்கள் ஆட்சிக்கு வர தேர்தல் சந்திப்பதே சிறந்தது..
..
ஆலஞ்சியார்
Tuesday, July 17, 2018
ஆழம்தெரியாமல் காலைவிடாதே
தரணி ஆள வா தலைவா!..
தளபதியே வருக! தரணி ஆள வருக!!
தளபதியை வருக என வரவேற்கும் #WelcomeStalin அதிர்கிறது.. பாவம் சங்கிகள் ஆழம் தெரியாமல் காலைவிட்டு மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள் இதுவரை டிவிட்டர் கணக்கை தொடங்காதவர்கள் கூட புதிய தொடங்கத்தை குறிக்க இது உதவியது..சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையா.. யாருக்குமே, தெரியாதிருந்த தளபதி வருகை உலகளவில் பிரபலமானது..சொந்த விசயமாக வெளிநாடு சென்றவரை உலகமே ஒருசேர வரவேற்கிறது ..
..
goback என்று சொன்னால் விட்டுவிடுவோமா .. கத்துகொடுத்த எங்ககிட்டயே வித்தையை காட்ட நினைச்சா முடியுமா.. மோடிக்கு சொன்னீர்களே என சிலர் வக்காலத்து வாங்குகிறார்கள் அரசியல் ரீதியாக இந்த மண்ணை பழிவாங்க நினைக்கிறவரை ..எதிர்ப்பதற்கு சொந்த வேலையை முடிச்சிட்டு சொந்த ஊருக்கு வருகிறவரும் ஒன்னா.. மோடிக்கு go back சொன்னப்ப என்ன செய்திருக்கணும் welcome சொல்லி புதிய டிரண்டை செய்திருக்கணும் .. இப்ப திரும்பி போ என்றவுடன் வரவேற்று சமூகவலையில் புதிய சாதனையை செய்றோமே அதைப்போல செய்திருக்கணுமா இல்லையா.. அதுக்கெல்லாம் மூளை வேணும் சங்கீஸ்..
மாட்டு மூத்திரத்தை குடிக்கிறவனுக்கும்.. அவன் காலை நக்கி திரியுற சாதிவெறி பிடிச்ச மாங்கா மடையன்களுக்கும் கத்துகுட்டிகளுக்கும் இதெல்லாம் தெரியாது...
..
யாரெல்லாம் திரும்ப போ என சொன்னார்களென்று பார்த்தால் சாதிவெறிபிடித்து திரியும் மரமண்டைகளும் பாசிசத்திற்கு வால் பிடிக்கும் சொம்புகளும் தான் .. சிலர் நடுநிலையென்று சொல்லி திரிந்தவர்கள் முகம் இன்று தெரிந்தது.. தம்பிகளே நீங்களெல்லாம் அரசியல் அரிச்சுவடி படிக்க தொடங்குகிறீர்கள்.. நாங்களெல்லாம் அரசியல் பல்கலைகழகத்தில் .. பயிற்சியெடுத்தவர்கள்.. வேறெதாவது யோசிங்கடா.. எங்களை எதிர்ப்பதற்கும் எதிர்நின்று அரசியல் செய்வதற்கும் முதலில் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள்.. உங்களையெல்லாம் அரசியல் நாகரீகம் கருதி கருத்து சுதந்திரத்தை மதிப்பதால் நாங்கள் மௌனமாக கடந்தால் அதிகம் துள்ளுகிறீர்கள்..
எழுந்தடித்தால் ஆழ புதைந்து போவீர்..
..
திராவிட திருமகனை நாடே எதிர்பார்த்து காத்துநிற்கும்..தலைமகனை.. தமிழகத்தின் நம்பிக்கையை.. தமிழர்களின் தெம்பை திமிரை வரவேற்று வரலாறு படைத்திருக்கிறது..
தமிழகத்தை பிடித்த பிணியை விரட்ட..
கொள்ளைப்புற வழியில் கோலேச்சுகிற கயவர்களை விரட்ட நேர்வழியில் நின்று போராடும் தளபதியே வருக!
..
தளபதி தாய் நாடு திரும்புவதை நாடே கொண்டாட வைத்த சங்கிகளுக்கு நன்றி!..
வானத்தில் பறந்தோ ..சுவரை இடித்து கள்ளத்தனமாகவோ வரவில்லை ..காரணம் எமது மண் எமது நாடு..
திராவிட நாடே இன்று வரவேற்று மகிழ்கிறது..
எரிகிறதா எரியட்டும்.. இனியாவது பலம் தெரிந்து மோதுங்கள்
..
#ஆழம்தெரியாமல்_காலைவிடாதே
..
ஆலஞ்சியார்
Monday, July 16, 2018
பெரியாரின் கருத்தியல்
பெரியாரும் , திராவிடமும் இன்று மிகவும் அதிகமாக தேவைப்படுகிறது.. மானமிகு கனிமொழி..
இந்து இந்தியா மற்றும் இந்தி இந்தியை என்ற நோக்கத்திற்காக மட்டுமே இன்று ஒரு அரசும் , அமைப்பும் செயல்படுகிறது. அவர்களுக்கு கருத்துக்களம் காணத் தெரியாது , விவாதத்தை முன்னெடுத்து செல்லவும் தெரியாது , முன்னால் வந்து பேசவும் தெளிவாக தெரியாது. ஏனெனில் அவர்களிடம் எதுவும் கிடையாது என்பதே உண்மையாகும்.
பத்திரிகையாளர்கள் நசுக்கப்படுகிறார்கள். நான் உனக்கு வேலை தருகிறேன். பணம் தருகிறேன். நான் கூறுவதை மட்டுமே நீங்கள் எழுத வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்படுகிறது ஏமெர்ஜென்ஸியை( அவசரநிலை) விட இது பலமடங்கு ஆபத்தானது . இவர்கள் இன்று அமல்படுத்த நினைக்கும் சித்தாந்தம் உயிருக்கு உலை வைத்து விடும். ஆகவே பெரியாரின் கருத்தியல் கண்டிப்பாக தேவைப்படுகிறது
..
ஆம்
விவாததிற்கு வந்தால் கத்தி கூச்சலிட்டு விவாதபொருளையே மாற்றிவிடுகிறார்கள்.. எந்தவிதமான ஆதாரமும் இன்றி பேசுகிறார்கள்
காரணம் கேட்டால் பதில் இல்லை தொடர்ந்து பாஜகவிலிருந்தோ அல்லது சமூகஆர்வலரோ..? ஒருவர் இல்லாமல் எந்த விவாத மேடையும் இல்லை அறிவுகொண்டு நல்ல எதிர் கருத்தை கூற கூட அவர்களிடம் சரக்கில்லை.. மதம் பேசி திரிகிறவர்களிடம் வேறெதையும் எதிர்பார்க்க முடியாது..
..
ஒரே இந்தியா ஒரே மொழி ஒரே மதமென்பது சாத்தியமில்லாத ஒன்றென்று அறிவார்கள் அவர்கள் நோக்கம் ஒருவித பதட்டத்தோடு தேசத்தை வைத்திருந்தால் அவர்கள் செய்கிற தகிடுதித்தம் பற்றி யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.. இந்த நான்காண்டில் குறிப்பாக பார்பனர்கள் எல்லா முக்கிய பதவிகளைுக்கு சத்தமில்லாமல் வந்துவிட்டார்கள் அவர்களை கீழிறக்க ஐந்துபத்தாண்டுகள் தேவைபடும்.. அவர்கள் எதிர்ப்பார்பது அதுதான் .. அவர்களை நக்கி பிழைக்கிற சூத்திரர்கள் இதையெல்லாம் உணர்வதற்குள் அவனின் ஒருதலைமுறை பழிவாங்கபட்டிருக்கும்.. மிக ஆபத்தானவர்கள் அவர்களிடமுள்ள இன உணர்வோ ஒற்றுமையோ நம்மவர்களிடம் இல்லை இருந்திருந்தால் இந்நேரம் அவர்கள் இருக்குமிடம் தெரியாமல் அமைதியாகி இருப்பார்கள் ..
..
கனிமொழி சொன்னதைப்போல இந்தியாவிற்கே இன்று திராவிட சித்தாந்தம் தேவைபடுகிறது .. சமூக ஒற்றுமை .. யாரும் தாழ்வென்று எண்ணாத நிலை.. சம நீதி அதுவும் சமூகநீதியாய் ஒடுக்கபட்ட மக்களுக்குரிய அங்கீகாரத்தோடு அவர்களும் இந்த தேசத்தின் எல்லோரையும் போல வாழ .. கல்வியில் வேலைவாய்ப்பில்லை, பெண்ணுரிமையில் ..
தமிழகத்தைப்போல இந்தியா முழுவதும் பெற்றிட திராவிடம் தேவைபடுகிறது.. சுயமரியாதையோடு வாழ.. எதையும் அறிவுக்கொண்ட பார்வையில் ..
ஏற்றதாழ்வற்ற சாதி சமயமற்ற மதவெறியற்ற நேரான பாதையில். நமக்கான உரிமையை பெற்றிட
உயர்பதவிகளை ஒரு சில சமூகமே அனுபவிப்பதை மாற்றி அதிலும் எமக்கான இடஒதுக்கீடை பெற.. நீதிமன்றங்களில் மநுநீதியற்ற மனித நீதியை (இயற்கையான நீதி) பெற்றிட திராவிடம் தேவை ..
..
ஆபத்தான காலகட்டத்தில் அதிகாரம் இருக்கிறதென்ற தெம்பில் மனிதகறியை கேட்கிற மதவெறி கூட்டத்தை விரட்டிட. தாழ்த்தபட்டவரை.. நிர்வாணமாக்கிய தெருவில் நிறுத்துகிற கொடுஞ்செயலை தடுத்திட.. பணக்காரனுக்காக மக்கள் வரிப்பணத்தை செலவு செய்கிற, மக்களை சூழ்ச்சியால் பிரித்து பகையோடு நிறுத்தியிருக்க கேடுகெட்ட கயமையை ,
பொய் சொல்லி ஒரு அரசை நடத்தலாம் என்ற போக்கிரித்தனத்தை வீழ்த்திட
மாட்டுக்கு தரும் முக்கியத்துவம் மனிதனுக்கில்லையென்ற ..பிஞ்சு உயிர்களை காவு கேட்கிற காவிகளை விரட்டிட மத,சமய சாதியற்ற அரசு அமைந்திட
இன்றைய தேவை பெரியாரின் கருத்தியல் தான்..
..
இன்றைக்கு.. இந்தியா முழுவதும் பெரியாரை தேடுகிறார்கள் ..
கிழவன் தொலைநோக்குபார்வை தமிழகத்தில் செய்துகாட்டிய பரிணாம வளர்ச்சி .. விழிப்புணர்வு, மதம் கடந்த மனிதநேயம்.. எப்போதெல்லாம் மதவெறியும் சாதிவெறியும் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் கிழவனின் #கைத்தடி பதில் சொல்கிறது.. இன்னமும் இங்கே ஈரமிருக்கிறதென்று பறைசாற்றுகிறது..
ஆம்..
இந்தியாவிற்கு இன்றைய தேவை
#பெரியாரும்_திராவிடமும்தான் …
..
ஆலஞ்சியார்
Sunday, July 15, 2018
பகை முடிப்போம்
#இந்துத்துவா..
கொஞ்சம் ஆழ்ந்தோசித்தால் அவர்களின் அஜந்தா பிடிப்படும்.. மெல்ல மெல்ல ஊடகங்களை ஆக்கரமிக்கிறார்கள் .. கருத்துசுதந்திரம் என்ற பெயரில் வன்மங்களை கொட்டிதீர்க்கிறார்கள்..
அவர்கள் மிக தெளிவாக சிறுபான்மையினர் மற்றும் தலித்விரோத போக்கை கையிலெடுத்து ஆடுகிறார்கள்..
அவர்கள் நோக்கம் திராவிடம் என்ற சொல்லை தமிழ்மண்ணிலிருந்து அகற்றவேண்டும் கொஞ்சம் கடினமான பணி ஆனால் அதற்கான துவக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள் ..
இரண்டுமூன்று ஆண்டுகளுக்கு முன் சமூகஆர்வலர்கள் என்ற பெயரில் வலமம்வந்த கருத்துரையாளர்கள் முகமூடியை கழட்டிவிட்டு நேரடியாகவே தலித்விரோத போக்கை இஸ்லாமியர் மீதான குரோதத்தை வெளிபடையாகவே காட்டியிருக்கிறார்கள்..
ஊடகங்கள் வேண்டுமென்றே நடுநிலையாளர்களை, சமூகநீதியாளர்களை, புறக்கணிக்கிறது இதுநல்லபோக்கல்ல.. இவவை எல்லாவற்றிக்கும் பின்னால் ஆர்எஸ்எஸ் எனும் இந்து தீவரவாத அமைப்பு பின்னில் இருப்பதும் அதை இயக்கும் பார்பனகும்பல் என்பது தெளிவாகதெரியும்..
எந்தவொரு விவாதமாக இருந்தாலும் பாப்பனன் / அல்லது பார்பன அடிவருடி இல்லாமல் நடத்தபடுவதில்லை
..
திராவிட இயக்கங்கள் இன்னும் அதிகமாக பார்பன எதிர்ப்பை காட்டவேண்டிய நேரம்வந்துவிட்டது ..
முழுமூச்சாக எதிர்ப்பை ..மிகசத்தமாக கையிலெடுக்கவேண்டும் வெறுமனே பெரியார்மண் என்று சொல்லிக்கொண்டிருந்தால் காலம்கடந்த ஞானோதயமாக முடியும்..
..
இந்துத்துவாசக்திகள் குறிப்பாக இடைசாதிகாரர்களை தூண்டிவிட்டு அவர்கள் பின்னால் நின்று வேடிக்கைப்பார்பார்கள்..
இதை நீங்கள் கண்கூடாகவே காணலாம் எந்த பிராமணனைவது காவிதுண்டோடு ஊடகத்தில்/ வெளியில் தெரிவார்களா என்றால் இல்லை ஆனால் இடைசாதிகாரன் காவிதுண்டோடுதான் வருவான் ..
அவர்கள் மிக சதூர்யமாக நகர்ந்துக்கொள்வார்கள் ..
தலித்மீதான வன்மத்தை தன் சகோதரன் மீதே இவன் கொட்டிதீர்ப்பான்.. மதமோதல் இந்த தமிழ் மண்ணில் நிகழ்த்த முடியாதென்றறிந்து சாதி ரீதியான பிரிவினையை முன்னெடுக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக அமிர்ஷா வருகை அதை உணர்த்துவதாக சில ஊடகவியலாளர்கள் கூறரகிறார்கள்..
..
திராவிட இயக்கங்கள் மிக சத்தமாக செயல்படவேண்டிய தருணம்..
தொடர்ந்து தாக்குதலை ..தமிழர்களின் தொலைகாட்சிகளில் ஆரியர்கள் புகுந்துக்கொண்டு நடத்திக்கொண்டிருக்கிறார்கள் குறிப்பாக ஆதித்தனைரின் தந்தி படும்பாடு நமக்கெல்லாம் கண்கூடாக தெரிகிறது..
இனியும் காலதாமதமின்றி எதிர்ப்பை அதிகதிகமாக வேகமாக,விவேகத்கோடு எடுத்தியம்பியவேண்டும்.. அதுமட்டுமல்ல.. இன்றைக்கு தி.மு.கழகத்தை தூக்கிபிடிக்கவேண்டிய கட்டாயம் ஒவ்வொரு தமிழனுக்கு ஏற்பட்டிருக்கிறது.. எல்லா வழிகளிலும் சூழ்ச்சி வலைப்பின்னி தமிழகத்தை சூறையாட பார்க்கிறார்கள் தமிழரிகளின் சிறு தொழில்களை மார்வாடிகளிடம் அடகுவைத்தாக வேண்டிய சூழல் .. இயற்கை வளங்களை நம் கண்முன்னே கார்பரேட்டுகளுக்கு வழங்குகிறார்கள்.. எதிர்கருத்தை பேசுகிறவர்கள் மிரட்டபடுகிறார்கள்.. சிறையில் அடைக்கபடுகிறார்கள் உதிரிக்கட்சிகள் விலைபேசபடுகின்றன.. இதையெல்லாம் மீறி மக்களின் ஆதரவு திமுகவை நோக்கி திரும்புவது கண்டு .. ஊடகங்கள் மூலம் கட்டுகதைகளை அவிழ்த்துவிட்டு நடிகனுக்கு ஆதரவு பெருகுவதைப்போல பேசி திரிகிறார்கள்.. இவனில்லையெனில் அவன் என்று தொடர்ந்து அழுத்தம் தர பார்க்கிறார்கள்.. ஆட்சி செய்கிறவன் வாய் திறப்பதே இல்லை அதைவிட பாசிசத்தின் குரலாய் இவனே ஓங்கி ஒலிக்கிறான்..
..
கவனம்.. இனி எழவே முடியாதவாறு இந்த பொய்யர்களை ஆழ புதைத்திட வேண்டும் அதற்கு 2019 தேர்தல்பணியை இப்போதே தொடங்கவேண்டும்..
..
பேராசான் தந்த அறிவெனும் ஆயுதம்கொண்டு பகை முடிப்போம்
..
ஆலஞ்சியார்
Saturday, July 14, 2018
காமராஜர்..
#காமராஜர்
காமராஜரை எல்லோரும் காங்கிரஸ்காரர் என்று தான் அறிந்திருப்பார்கள் .. ஆனால் திராவிட கருத்தியலை சார்ந்தவர் அவரென்பது அவரின் அரசியல் வாழ்வியல் உணர்த்தும்..
..
தேசிய நீரோட்டத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தார் King maker of India ..என்று அவரை சொன்ன காலமும் உண்டு.. திரு.சத்தியமூர்த்தியின் சீடராக அரசியலில் நுழைந்தாலும் மிகப்பெரிய அங்கீகாரம் அவருக்கு ஆரம்பத்தில் கிடைக்கவில்லை ராஜாஜியின் ஆதிக்கத்தின்/ஆளுமையின் முன்பு அறியபடாதவராக அல்லது அதிகம் பேசபடாதவராகவே இருந்தார்.. ராஜாஜியின் வரலாற்றுப்பிழை இவருக்கு பிரகாசமான அரசியல் வாழ்வை தந்தது .. குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி அறிமுகபடுத்திய போது வெகுண்டெழுந்த பெரியார் .. கிரேசின் தீப்பெட்டியுமாக காத்திருங்கள் ..எப்போது நான் சொல்கிறோனே அப்போது அக்ரஹாரத்தை கொளுத்தலாம் என்றார் பெரியார் இவ்வளவு கடுமையாக நடந்துக்கொண்டதில்லை.. சூழிநிலை மிக மோசமாவது கண்டு ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கைவிட்டார்..
..
ராஜாஜியை மாற்றிய தீரவேண்டும் அந்த இடத்திற்கு மீணிடும் பார்பனன் வந்துவிட கூடாது என்பதிலே பெரியார் மிக எச்சரிக்கையாக காய் நகர்த்தினார்.. காமராஜரை முன்னிலைப் படுத்தினார் ஆதரிப்பதாக அறிக்கை வந்தது.. காமராஜரை குடியாத்ததில் நிற்க சொன்னார்.. அப்போது காமராஜர் நான் மிகவும் பின்தங்கிய வகுப்பை சார்ந்தவன் குடியாத்ததில் முதலியார்களும் முஸ்லீமான்களுமே அதிகம் வசிக்கிறார்கள் என்ற போது உன்னை எப்படி ஜெயிக்கவைப்பதென்று எனக்கு தெரியும் எனகூறி பச்சை தமிழனை நிறுத்தியிருக்கிறேன் அவரை தமிழர்கள் எல்லோரும் ஆதரிக்கவேண்டுமென்றார்...
தி.கழகத்திலிருந்து பிரிந்து திமுகவை நிறுவிய அண்ணாவும்.. காமராஜரை அந்த தேர்தலில் ஆதரித்தார்.. குணாளா மணாளா குலக்கொழுந்தே ..சென்றுவா குடியாத்தம் வென்று வா கோட்டைக்கு என்றார்.. கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்தும் ஆதரித்தார்.. காமராஜர் வென்றார்..
..
காமராஜர் முதல்வரான போது அப்போதைய காங்.தலைவர் U.N. தேவரை சந்திக்கவில்லை நேராக பெரியாரை சந்தித்து என்ன செய்யவேண்டுமென்ற போது .. ராஜாஜி 6000 பள்ளியை மூடிட்டார் அதை திறந்து நம்ம பிள்ளைங்களை படிக்க வைங்க .. என்றார்..
பள்ளிகளை திறந்தும் குழந்தைகளை படிக்கவைக்க பெற்றோர்கள் அனுப்ப மறுத்ததை அறிந்து சோறு போட்ட அனுப்பிவைப்பாய்ங்க..
என்ற போது அதற்கான போதிய நிதி அரசிடமில்லை என்றவுடன் செல்வந்தர்கள் தொழில் அதிபர்களிடம் நன்கொடை வசூலித்து மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார் காமராஜர்.. பணம் போதவில்லை என்றவுடன் விவசாயிகளிடம் முதல் மரக்காய் சாமிக்கும் இரண்டாவது மரக்காய் ஊர்கோவிலுக்கு கொடுக்குறீங்க மூணாவது மரக்காய் எனக்கு கொடுங்க நான் பிள்ளைகளுக்கு சோறு போடுறேன் என்று எம் பிள்ளைகளின் பசியை போக்கினார்..
..
இரட்டைமலை சீனிவாசன் பேரன் பரமேஸ்வரனை அறநிலையதுறை அமைச்சராக்க பெரியார் கோரினார் அதையும் ஏற்று சமூகநலத்துறை (அப்போது சமூகநலத்தில் தான் அறநிலையம் இருந்தது) அமைச்சராக்கினார்.. அண்ணல் அம்பேத்கர் .. குளத்தில் குளிக்கவும் குனிந்து அள்ளி தண்ணீர் குடிக்கவும் மறுக்கிறான் ஆனால் தமிழகத்தில் என் இனத்தை சேர்ந்தவன் கோவிலுக்குள் நுழையும் அதிகாரம் பெற்றான் என்றார்..
பரமேஸ்வரன் வருகை கண்டு தில்லை நடராஜரும் ஸ்ரீரங்கத்து ரங்கநாதரும் பதறும் காட்சி கண்டேன் அந்த மாட்சி கண்டேன் என்றார் பேரறிஞர் அண்ணா..
..
காமராஜர் மிக சிறந்த நாத்திகர்.. எதுவும் உழைப்பால் வரவேண்டுமென்றும் மூடநம்பிக்கையால் எந்த பலனுமில்லை என்றார்.. ஆர்எஸ்எஸ் அவரை கொலை செய்ய முயற்சித்த போதும் என்னை கொல்லலாம் ஆனால் என் கருத்தை செயலை இதனால் தடுத்துவிட முடியாது என்றார்.. பெரியார் மிகவும் மதித்த தலைவர்.. பெரியார் கருத்துகளுக்கு சிந்தனைகளுக்கு செயல்வடிவம் தந்த சிற்பி..
நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் காமராஜரின் ஆட்சியை .. திராவிட சிந்தாந்ததின் அல்லது திராவிட கருத்தியல் ஆட்சியின் தொடக்கமாகவே கருதவேண்டும் ..
நல்ல தலைவராக திமுக அவரை மதித்து கொண்டாடி இருக்கிறது.. அவசரநிலையின் போது ஆட்சியே போனாலும் காமராஜரை கைது செய்யமுடியாதென்று உறுதியோடி இருந்தவர் கலைஞர்.. தாயார் அஞ்சுகம் அம்மையார் மறைந்த போது முதல் ஆளாய் கோபாலபுரத்திலே கலைஞர் வருவதற்குமுன் வந்து நின்றவர் அதே போல காமராஜரின் மறைவின் போது சகோதரனைப்போல முன்னின்று எல்லா காரியங்களையும் கலைஞர் செய்தார்..
முன்பு எழுதிய கவிதையொன்று ஞாபகம் வந்தது..
..
என்ன..
சொல்லிவிட போகிறேன்
எளிமை..
எப்போதும்..
சொல்லில்
இனிமை..
துணிவு..
செயல்திறன்..
அஞ்சாமை
ஆளுமை,
இரக்கம்..
நேர்மை.
பொதுவாழ்வில்
தூய்மை..
கல்வி
#எல்லோருக்கும்_கல்வி ..
..
எங்கள் அறிவாசான்
#பெரியார்
பள்ளியில்
கடவுள் வாழ்த்துக்கு பதில்
காமராஜர் வாழ்த்தை பாடவேண்டுமென்றார்
இதைவிடவா
சொல்லி விட போகிறோம்..
..
காமராஜர் பிறந்தநாள் ஜூலை15
..
ஆலஞ்சியார்
Friday, July 13, 2018
தமிழன் கலைகள்
#தெருகூத்து..
..
ஒரு அந்திபொழுதில்
பாபநாசம் கீழவீதியில்..
சிலர் நடனமாடிக்கொண்டிருந்தார்கள் சிறிய வேன்..அதில் இரண்டு ஒலிப்பெருக்கிகள்..
ஒருவர் எம்ஜிஆர் போலவும்.மற்றொருவர் சிவாஜி போலவும் அலங்கரித்துக் கொண்டு கூட ஒரு பெண்
..இசைத்தட்டிற்கு ஏற்ப..நடனம் சிலநேரம் நளினமாயும் சிலநேரம் விரசமாயும்..
விரித்து வைத்த துண்டில் தான்..காசு விழுந்தபாடில்லை.
நேரம் ஆக ஆக விரசம் கொஞ்சம் தூக்கலாய்..
ஒருபுண்ணியவான் சில்லறைகாசை போட
துவங்கியது வசூல்..
எதிர்பார்த்து இல்லையெனினும்..
ஆட்டம் முடிந்த பிறகு அவர்களை அழைத்து..
தேநீர் கொடுத்து நானும் அருந்திக்கொண்டே அவர்களோடு பேச ஆரம்பித்தேன்..
முன்பு போல் இல்லை..
அப்போதெல்லாம் திருமண நிகழ்ச்சிகளில் ரிக்கார்ட் டான்ஸ்(இசைத்தட்டுநடனம்)
வைப்பார்கள் இப்போதெல்லாம் அழைப்பதில்லை .. என்றார்
நீங்கள் ஆடுவது எந்தவகையில் சேரும் என்றேன்..
#தெருகூத்து..என்றார்..
தெருகூத்து.
அழகியகலை..
புராணக்கதைகளை மட்டுமல்ல சமூகம் சார்ந்த.விடயங்களை,மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்பட்டது..
தெருமுனைக்கூத்து.. நல்ல விடயங்கள் விடியவிடிய மக்கள் பார்த்து ரதித்தார்கள் தஞ்சை போன்ற நெல் விளையும் மண்ணில் கோடைக்காலத்தில் காய்ந்த நிலங்களில் கொட்டகையிட்டு கூத்து நடக்கும்.. பிரபலமானவர்கள் முதல் அறியபடாத கலைஞர்கள் வரை நாடகம் வில்லுபாட்டு தெருகூத்து என .. தூள்கிளப்பும்.. மக்கள் வெயில்கால இரவுகளை இப்படி இன்பமாய் கழித்தார்கள் கலையை மதித்தார்கள்..
நற்சிந்தனைகள் பாமரனை சென்றடைய மிகவும் உதவிய ஒரு அற்புதமான கலை..
அதை நீங்கள்..
தெருமுனையில் இசைத்தட்டிற்கேற்ப நடனமாடி..சிதைக்கிறீர்கள் என்றேன்.
அவர் விழியோரம்..நீர்..
அவரைச்சொல்லி குற்றமில்லை எம்ஜிஆர் வேசம் கட்டினால் தான் மானம்கெட்ட தமிழன் பார்ப்பான் என்கிற நிலையை..தமிழகம் செய்து விட்டது சினிமா மோகம் .. அரிதாரம் வெள்ளித்திரை நடிக்கிறவனை மட்டுமே கலைஞனாய் அங்கீகரித்ததும் அவன் பின்னால் சென்றதும்.. மண்ணின் கலைகள் கலைசார்ந்த நாடகம் இசை இவையெல்லாம் வேண்டாததாயிற்று..
சினிமா மோகம் அந்தளவிற்கு மக்கள் மனதில்..புறையோடிருக்கிறது...
இயல் இசை நாடக வாரியம் இதற்காக எந்த கவலையும் பட்டதாக தெரியவில்லை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு #கலைமாமணி கிடைத்தால் போதும் .. தமிழர் திருவிழாக்களில் பண்டிகைகளில் அரசே கிராம கலைகளை நடத்த அதற்கான முயற்சியை செய்யலாம்.. கலைஞர் ஆட்சியின் போது சென்னையில் #மானமிகு_கனிமொழி பொங்கல் விழாவை நடத்தினார் ..நிறைய கலைஞர்கள் பங்குபெற்றார்கள்.. திராவிடர் கழகம் தொடர்ந்து கலை இரவுகளை தமிழர் திருநாளில் நடத்துகிறது.. எனினும் இது போதாது .. அரசு விழாக்களில் பார்பன கூத்தாடிகளை பரதம் என்ற பெயரில் ஆடவிட்டு ரசிப்பதை விட தமிழர் கலைகளை ..தமிழ் கலைஞர்களை பயன்படுத்தலாம் ..
இன்றைக்கும் தஞ்சை அருகே திட்டை போன்ற கிராமங்களில்..வெயில்காலங்களில்..தெருகூத்தும்..நாடகங்களும்.நடப்பதுண்டு.. இன்னமும் மாலைவேளையில் தெருமுனை பிரச்சாரம் தெருமுனை கூத்து நடப்பதுண்டு ஆனால் மக்கள் தங்கள் கலையை இசையை மறந்து ...சினிமா போன்ற வெளிச்சத்தை நாடியதன் விளைவு ..நிறைய கலைஞர்கள் பிற தொழிலை தேர்ந்தெடுத்து சென்றுவிட்டார்கள்..
அரிதாரம் பூசி வந்த உரத்த குரலில் கம்பீரமாய் ..ஆனமேல வரான் பாரு..என்றாலே உள்ளம் துள்ளுமே.. கரைந்து/ மறைந்து போனது தமிழனின் மரபு வழி கலைகள்
..
#கூத்து..
இன்னும் சில காலம் கழித்து இதுகூட..
இல்லாமல் போகும்..
..
#தெருகூத்து_தெருவில்.
..
ஆலஞ்சியார்
Thursday, July 12, 2018
நான்..யார்
நான் யார்..
தெரிந்தால் சொல்லுங்களேன்..
போகும் பாதையெல்லாம்
பொய்களால் விளைந்திருக்க
போகுமிடம் தெரியாமல்
தவிக்கிறேன்...
போய் சேர நேரமாகும் ..
அதுவரை ..
வந்ததை பற்றி தெரிந்துக்கொள்ள ஆசை..
..
நான்யாரென நானறியேன்..
நஞ்சுண்டு வந்தவனா
நஞ்சை கக்க வந்தவனா..
வழிநெடுக வினை விதைக்க வந்தவனா..
பூச்செண்டு தொடுத்து
மயக்கும் வித்தையறிந்தவனா..
சொல்லில் சுவை கூட்டி
சொல்லவந்ததை உன் மூளையில் ஏற்றி
மழுங்கடிக்க வந்தவனா..
பேராசை பிடித்து பித்தனாய்..
எல்லாம் எனக்கென்று..
எல்லாம் எனக்காதென்று..
விடாமல் பொறுக்கும் எச்சனா..
அடுத்தவர் உரிமையை அபகரித்து
அலங்கோலபடுத்தி ..
சிரித்துமகிழ்ந்து சீரழிக்க வந்தவனா..
எல்லாம் அறிவேனென்று எகத்தாளம்பேசி
ஏனெயர் சிந்தனையில் சிறுமைபட்டவனா..
நானறியேன்.. நான்யாரென்று
..
பொய்யும் புரட்டும்
புகழ்ச்சியும் போதையும்
நீடித்திருக்காது..
வஞ்சனை கொண்ட நெஞ்சம் வாழாது..
நெஞ்சில் கசடும்.. நேர்மையில் பிறளும்..
அடுத்தவனை கெடுத்து வாழும் வாழ்வும்..
வக்கனையாய் சூது செய்து வீழ்த்தினாலும்
அறமே வெல்லும் இனிதாய் இறுதியில்
பண்பில் உயர்ந்தோர் சொல்லில்
பெரியவர் தம் செயலில்
பகட்டில்லா வாழ்வில்
பக்கத்து மனிதனை நேசித்தலில்
முகம் பார்த்து.. குலம்பார்த்து
ஈயாத மனதில்..
யாரென்ற அகந்தை கொள்ளாத நெஞ்சில்
வாழ்கிறேனா.. நான்..
..
இதுவரை..
சூழ்ச்சியால் யாரையும் வீழ்த்தியதில்லை
யாசிப்பவனை .. முற்றத்திலிருந்து விரட்டியதில்லை..
கை கவளம் சோறாயினும் ..பசியென்று வந்தவனுக்கு தராமல் விட்டதில்லை
அடுத்தவர் உரிமையை அபகரித்ததில்லை
பங்காளியோடு பகைமை பாராட்டியதில்லை
பக்கத்துவீட்டுகாரனின் காற்றை நான் சுவாசித்ததில்லை
பகட்டுகாட்டி பெருமை கொண்டதில்லை
இல்லையென்ற போதும் யாரிடமும் யாசித்ததில்லை..
பேராசை கொண்டு அலைந்ததில்லை..
புகழுக்கஞ்சி போர்வைக்குள் அடைந்ததுண்டு
அதிகம் பேசாமல் ..
தனிமையில் திரிந்ததுண்டு..
ஆன்றோர் சொல்லாயினும் அறமில்லையேல்
சினம் கொண்டதுண்டு..
இனம் மொழி கலையென்றால்
இருப்பதையும் இழப்பதுண்டு..
யார் நான்..
..
பிழைக்கதெரியாதவன்
அகம்பாவத்தில் அலைகிறான்
வாழதெரியாதவன்.. வக்கற்றவன்..
அதிகம் பேசும் கழனி பானை ..
திமிரால் அழிந்தவன் ..
வளைந்து நெளிந்து..
விட்டுகொடுக்க தெரியாது..
அடிப்படையையே தகர்க்கிறவன்..
புதுமை.. பேசும் பைத்தியம்..
நாத்திகன்.. இன்னும் இன்னும்
நிறைய சொன்னார்கள்..
உண்மையில் நான்..யார்..
யாமறியேன் பாரபரமே..
..
ஆலஞ்சியார்
Wednesday, July 11, 2018
தஞ்சை
தஞ்சாவூர் ..
தஞ்சை திமுக.. பிற மாவட்டங்களை விட இங்கே திராவிடத்தின் வேர் ஆழ ஊடுறுவியிருக்கும்..காரணம் அதிகம் அடிமைபட்டுகிடந்த மக்களை விழுப்புணர்வை ஊட்டி சுயமரியாதைக்காரர்களாக்கியது திராவிடம்
தஞ்சை என்றாலே நிலகிழார்கள் மட்டுமே நினைவுக்கு வருவார்கள் .. ஆயிரம் ஏக்கர் நஞ்சை ஆயிரத்துஐநூறு ஏக்கர் புஞ்சை என ஒரு சில குடும்பங்களே ஆட்சி செலுத்தியது.. கபிஸ்தலம் மூப்பனார் உக்கடை தேவர்.. பூண்டி வாண்டையார் என கொடிகட்டி ஆட்சிசெய்தார்கள்.. அவர்கள் வைத்தது தான் எழுதபடாத சட்டம் .. அவர்களை மீறி எதுவுமே நடக்காது .. யாரும் எதிர்க்க முடியாது அவர்களது அரசியல் காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமே..
அதோடு சிறு சிறு நிலக்கிழார்கள்.. அதாவது ஐம்பது அறுபது ஏக்கர் வைத்திருப்போர்.. சிலரிடம் நூற்றுக்கணக்கில் இருக்கும் ..சில இஸ்லாமிய குடும்பங்களும் நிலகிழார்களாக இருந்தன .. பார்பனர்கள் காவிரிக்கரைகளில் இனாமா பெற்ற நிலங்கள் மற்றும் கோவில் நிலங்களோடு ஏறக்குறைய ஆட்சி செய்தார்கள்
அவர்களும் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார்கள்.. சிறு சிறு முதலாளிகள் கூட விவசாயத்தை பிரதானமாக கொண்டவர்கள் கூட பெரும் "ஆண்டைகளின்"அருகில் தான் இருந்தார்கள்.. இவர்களையெல்லாம் மீறி சரியாக சொல்லவேண்டுமெனில் எதிர்த்து கட்சியை வளர்த்தெடுத்தில் பெரும் பங்கு கலைஞருக்கு மட்டுமே உண்டு ..
..
ஏதாவது பேராட்டம் பொது கூட்டமென்றால் காங்கிரஸ்காரர்களை மீறி தஞ்சை மாவட்டத்தில் எதுவுமே செய்ய முடியாது மீறினால் அவர்கள் நிலங்களில் வேலையில்லை குத்தகை இல்லை.. குடும்பம் அந்த ஊரில் குடியிருக்கவே முடியாது.. எந்தவொரு போராட்டமும் ஆரம்பத்திலேயே ஒடுக்கபடும் ..
ஒருங்கிணைந்த தஞ்சையின் பழைய மாவட்டத்தின் செயலாளராக இருந்த நீலமேகம் எங்கண்ணே நம்ப கூப்பிட்டா வரவா போறானுக என்ற பேச்சை கேட்காமல் கிராமம் கிராமமாக மக்களை சந்தித்து .. திராவிட கொள்கைகளை ..யாருக்காக திமுக துவங்கபட்டதென்பதை.. யாருக்கும் அடிமையாக இருக்க தேவையில்லை என சுயமரியாதை தட்டியெழுப்பி .. மரியாதையோடு நடத்தாதவர்களோடு நமக்கென்ன வேலை என கூறி.. மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தவர் கலைஞர் .. பிற மாவட்டங்களை விட தஞ்சை மீது கலைஞருக்கு தனி கவனமிருக்கும்.. சொந்த மாவட்டமென்பதால் மட்டுமல்ல சொந்த மண்ணில் எப்படி புறக்கணிக்கபடுகிறோம்.. ஒரு சில குடும்பங்களும் ..சில பார்பனர்களும் மட்டுமே ஆட்சி செய்கின்ற நிலையை நேரில் கண்டு படித்தவர்.. மண்ணின் நிறம் அறிந்தவர்
மக்களின் மனதறிந்தவர்..
தஞ்சை திமுக என்றாலே மன்னையும் மணியும் நினைவுக்கு வந்தாலும் அடித்தளமிட்டது கலைஞர்தான்..
..
அண்ணன் கோ.சி.மணியை பற்றி சொல்லவேண்டும் இன்றைக்கு மூன்று மாவட்டங்களாக இருக்கும் ஒருங்கிணைந்த தஞ்சையில் ஒற்றை ஆளாய் சுற்றி திரிந்து கட்சியை வளர்த்தவர் கலைஞருக்கு பிறகு ஒவ்வொரு கிராமத்திலும் கட்சிகாரனை பெயர் சொல்லி அழைத்து அவனோடு நெருக்கம் காட்டியவர்.. அண்ணனோடு பழகி அந்த நாட்கள் இன்னமும் பசுமையாய்..
..
கலைஞர் கட்டியெழுப்பிய கோட்டை தஞ்சை
ஒடுக்கபட்ட சமூக பின்னணியில் இருந்த உயரத்தை எட்டியவர் .. அதனால் தான் எந்த கோவிலில் ஓரமாய் நின்று கதைக்க இசைக்க வேண்டுமென்றார்களோ அதே கோவிலில் பட்டு சட்டையோடு நாற்காலியில் அமர்ந்து பார்ப்பன கூத்தாடியின் நடனத்தை ரசித்ததெல்லாம் நமக்கு நிறைய உணர்த்தும்.. சுயமரியாதை விட்டுகொடுக்காத.. யாரால் எதற்காக புறக்கணிக்கபட்டோமே அவர்களை கொண்டே சிறப்பு பெறுவது.. அவர்களின் வினைக்கு எதிர்வினையாற்றுவது.. பல்லக்கில் நீ மட்டும்தான் செல்வாயா ..நாங்களும் செல்வோம் சாரட்டில்
என்று சொல்லாமல் வினையாற்றும்..
காவிரிக்கரை பிராமணர்கள் ஜமீன்கள் நிலக்கிழார்கள் மிராசுகள் தங்களை குறுநில மன்னர்களைப்போல நினைத்தார்கள் இது பிற மாவட்டங்களில் அதிகமில்லை..
இவர்களை எதிர்த்து பேசவோ.. அவர்கள் முன் அமரவோ.. ஏன் உரக்க பேச கூட முடியாத சூழலை மாற்றியது திராவிட இயக்கம் அதில் பெரும்பங்கு கலைஞருக்குண்டு.. கலைஞர் தன் எழுத்து நாடகம் பேச்சு என மக்களை தினம் தினம் சந்தித்து இன உணர்வை சுயமரியாதையை ஊட்டினார்..
தஞ்சை சுயமரியாதை மண்ணாக மாற்றியதில்
திராவிட உணர்வாளர்களை அதிகம் உருவாக்கியதும் கலைஞரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி..
கோடைகாலங்களில் வயல்வெளிகளில் கலை நாடகம் இசையென கூத்து நடக்கும். அதில் புராணங்களும் மத பிரசங்கங்களும் நடக்கும்.. அங்கும் பகுத்தறிவு நாடகங்களை .. கொள்கை முழக்கும் தெருமுனை கூத்துகளை.. செய்து தஞ்சையில் திமுகவை வளர்த்தவர் கலைஞர் பெருமகன்.. அதனால் தான் எல்லோரையும் தோற்கடிக்க முடிந்த காமராஜாரால் கலைஞரை தோற்கடிக்க இயலவில்லை
தஞ்சை கலைஞரின் மண்.. எனது மண்ணும் கூட..
..
ஆலஞ்சியார்
Tuesday, July 10, 2018
இது தமிழ்நாடு
விருந்தாளிகளை வரவேற்றால் தான் சொர்க்கம் கிடைக்கும்..அமித்ஷா..
விருந்தாளி என்ற பெயரில் விஷம் கொண்டு வருகிறவனிடம் பாசம் காட்ட முடியாது பகைதான் காட்டமுடியும்.. வாயை திறந்தாலே பொய் .. ஊழலற்ற ஆட்சியாம்... சொல்கிறவரின் மகன் ஒரே வருடத்தில் 10000 மடங்கு பணம் சம்பாதித்த கதை தெரியாமல் இல்லை.. சொல்கிறவர் தலைமையில் செயல்படும் கூட்டிறவு வங்கியில் ஒரே வாரத்தில் ₹740 கோடி கருப்புபணம் முதலீடு செய்யபட்டதே அதற்கென்ன பெயர்...ஒருவன் ₹2000 கோடி பணத்தோடு பிடிபடுகிறான் .. மக்கள் ₹2000 ரூபாய்க்கு தெருவில் அல்லாடியபோது இவனுக்கு மட்டும் எங்கிருந்து வந்தது.. கரூரில் ₹500 கோடி கண்டெய்னர் பணம் .. எங்கிருந்து வந்தது போலீஸ் பாதுகாப்பில்லாமல் ₹10 கோடிக்கு மேல் பண இடமாற்றம் செய்யகூடாதென்ற விதி இருக்கும் போது .. போலியான வாகன எண்ணில் பணம் கடத்தபட்டதே யாருடையது இதெல்லாம் ஊழலில் சேராதா.. இந்தியா கண்ட மிக மோசமான ஆட்சி மோடி உடையதென்று விவரம் தெரிந்தநவர்கள் கதைக்கிறார்களே ஏன் பதிலில்லை.. மாட்டிறைச்சி விற்றதாக மனிதனை அடித்து கொன்ற மிருகத்தை சிறையிலிருந்து வெளியே எடுத்து மாலை மரியாதை செய்கிற மத்திய அமைச்சர்.. இதற்கு பெயர் நல்லாட்சியா.. தமிழகத்தில் ஊழல் அதிகமாகிவிட்டதென்கிற அமிர்ஷா மகன் ₹5 முதலீடு செய்து ஒரே வருடத்தில் ₹500கோடி சம்பாதித்த கதையெல்லாம் தமிழக மக்கள் அறிவார்கள்.. மோடி அருண்ஜெட்லி கூட்டணியால் மூன்று லட்சத்து எழுபதிதைந்தாயிரம் கோடி (₹375,0000000000) இழப்பு என்கிறார் பாஹகவின் யஷ்வந்த் சின்ஹா ..இதெற்கெல்லாம் என்ன பதில்
..
பாஜக ஆட்சிகள் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக இங்கு வந்து பொய் சொல்கிறார்.. இன்றைய times of india வில் கூட பெண்களுக்கெதிரான குற்றங்கள் 2014 க்கு பிறகு அதிகரித்திருப்பதாக எழுதியிருக்கிறது..
தாம்சன் ராய்டர் நிறுவனம் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களில் இந்தியா முதலிடம் என்ற ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது
பச்சிளம் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி கொலை செய்யபடுகிறார்கள்.. மனித உயிர்களைவிட மாடு முக்கியமாக போனது.. இதெல்லாம் வேறு மாநிலத்தில் பேசயிருந்தால் ஒருவேளை பயத்தில் கைதட்டு கிடைத்திருக்கலாம்.. இது ஏன் எப்படி என்று கேட்கும் நாடு... வேறெங்காவது புளுகுவதை வைத்துக்கொள்ளுங்கள்..
..
வரவேற்பது தமிழனின் பண்புதான்.. நல்லவனை நாகரீகம் தெரிந்தவனை நல்லதை விதைக்க வந்தவனை நாணயமானவனை வரவேற்போம்.. நெஞ்சில் நஞ்சை கொண்டு சாதி மத மோதலை உருவாக்க வஞ்சகத்தோடு வலம் வர எண்ணினால் இந்த இழிநிலைதான் வரும் .. விரட்டுவது மட்டுமல்ல வீழ்த்தும் வரை ஓயமாட்டோம்.. இது தமிழ் மண்..
இங்கே இஸ்லாமியனுக்கும் இந்துவுக்கும் கிரிஸ்துவனுக்கும் இடையில் கலகமூட்டலாமன்று எண்ணி வந்தால் வாசலில் வெளக்கமாறோடு நிற்போம் இங்கே தமிழனாய் சாதி மதம் மறந்து ஒன்றிணைந்து நிற்போம்..
..
திமுகவை தவிர மற்ற கட்சிகளோடு கூட்டணி சேர விருப்பமென்கிறார் அதாவது தயாராக இருக்கிறார்களாம்.. வக்கற்றவன் வகையற்றவனோடு கூட்டு சேருவது தானே சரி..
சாதிவெறிக் கொண்டு இளைஞர்களை வழிகெடுக்கும் மாங்காய் மடையர்கள் எப்போது அழைப்பாரென காத்திருப்பது தெரிகிறது .. வேறுவழியேயின்றி அடிமைகளும் சேரலாம்.. நவீன பார்பனீய அடிமைகள் தங்களை புனிதராக்கிக்கொள்ள நாடலாம் பிறகு தான் தெரியும் மதியாதவர் வாசல் வந்து அவமானபட போவதை காலம் கடந்து தெரிந்து கொள்வர்..
ஒன்றுமட்டும் உறுதியாய் தெரிகிறது இருக்கிற மரியாதையும் இழந்து முகமிழந்து போக போகிறார்கள் பாஜகவோடு கூட்டு சேர நினைப்பவர்கள் .. திமுக சரியான பாதையில் செல்வதை இன்றைக்கு பாஜக தலைவரின் பிரசங்கம் உணர்த்தியிருக்கிறது.. பெரியாரின் வழியில் அண்ணாவும் கலைஞரும் செப்பனிட்ட பாதையில் பாசிசத்தை வேரறுக்க தளபதி தலைமையில் களம் காண்போம் ..
..
இனி வெற்றி ஒன்றே நமது இலக்கு
..
ஆலஞ்சியார்
Monday, July 9, 2018
சாரட்...
சாரட் வண்டியில் ஆசிரியர் பவனி வந்தது கண்டு சிலர் எரிச்சல் அடைகிறார்கள்.. பல்லக்கில் வருவதை சுயமரியாதை இழுக்கென்றீர்கள் இப்போது சாரட் பவனி சரிதானா என்கிறார்கள்..
..
எரிச்சல் அடையுங்கள்..
பாப்பான் பல்லக்கில் போகலாம் சத்ரியன் தேரேறலாம் என்றால் .. நாங்கள் பரிவட்டமும் கட்டுவோம்.. சாரட் வண்டியில் குடையில் கீழமர்ந்தும் வருவோம்.. 1948 லேயே பெரியாரை சாரட் வண்டியில் அழைத்துவந்த வரலாறு உண்டு.. இவர்கள் கோவம் அதுவல்ல..
குடந்தையில் நடந்த மாணவர் எழுச்சி பேரணியை கண்டு வயிறெரிகிறார்கள் .. அடுத்த தலைமுறைக்கு பெரியாரை கொண்டு சேர்த்திருக்கிறார் ஆசிரியர் என்ற கோபம் அவர்களின் பேச்சில் எழுத்தில் தெரிகிறது..
ஒரு இயக்கத்தின் வளர்ச்சி சரியான பாதையில் பயணிக்க வேண்டுமெனில் அது இளைஞர்களிடத்தில் கொண்டு சேர்க்கவேண்டும் குறிப்பாக மாணவர்களிடத்தில் கொள்கையை ..சித்தாந்தத்தை, பகை எது என்பதை பகைவர்களின் சூழ்ச்சிகளை .. எப்படி எங்கிருந்து எங்ஙனம் வருவார்கள் அவர்களை எதைகொண்டு வீழ்த்த வேண்டும்.. அறிவாயுதம் கொண்டு பரந்த சிந்தனையோடு ...தெளிவாக.. எதிர்ப்பை பகைவர் எழவே முடியாதவாறு செய்தல் எப்படியென பயிற்சியளிக்கவேண்டும்..
நாளைய சமூகம் விழிப்புணர்வோடு .. எதிரிகளின் சூழ்ச்சியை வீழ்த்த இதுபோன்ற பயிலரங்கங்கள் அடிக்கடி அமைத்திட வேண்டும்..
..
எதிரிகள் பதறுவதிலிருந்தே தமது கடமையை சரியாக செய்துவருகிறார் ஆசிரியரென தெரிகிறது.. சமீபகாலமாக ஆரியர்கள் மீடியாக்களில் அதிகளவில் பங்கெடுப்பதும் .. ஊடகங்கள் ஒரு பாப்பான் இல்லாமல் எந்த விவாத நிகழ்வையும் நடத்துவதில்லை என்ற எழுதபடாத விதி .. செயல்படுத்தபடுகிறது இந்நிலையில் திராவிடம்.2.0 திராவிட சிறகுகள் ..திராவிடம் அன்றும் இன்றும் என ..பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் கருத்தரங்கள் சொற்பொழிவுகள் நிறைய நிகழ்த்தபடுகிறது.. அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் ஆர்வமாக கலந்து கொள்கிறார்கள்.. நாளைய தலைமுறையின் நலன் காக்க.. இன்றைய இளைஞர்களிடம் திராவிடம் என்றால் என்ன..,அதனால் அடைந்த பயன், பலன், என்ன என்பதை விரிவாக சொல்லி புரியவைக்கவேண்டும்.. எப்படியெல்லாம் பார்பனர்கள் நமது உரிமைகளை பறிக்க நமக்கெதிராக நம்மவர்களையே பேசவைத்து.. மிக சாதூர்யமார காய் நகர்த்தும் வேளையில்.. நாம் சூறையாடபடுகிறோம் எமது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விகுறியாகிறது என்றறியாமல் நாம் மௌனமாய் இருப்பதுதான் கொடுமை.. நம்மிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து மக்களிடையே பேசியும் கலந்துரையாடியும் நமது நிலம் நமதுரிமை இனம் மொழி கலாச்சாரம் எதையும் வந்தேறிகளுக்காக விட்டுகொடுக்க முடியாது என்று பிரச்சாரம் செய்வோம்..
..
சிலர் எரிச்சலைடவது இயலாமையில் வருவது .. என்னதான் ஆரியக்கூத்தாடினாலும் தமிழினம் காரியத்தில் கண்ணாயிருக்கிறதே என்ற எரிச்சல் .. இங்குள்ளவனுக்கு எவனுக்கு தகுதியில்லை என எண்ணி பெரிய பூச்சாண்டி காட்டி அழைத்துவந்தால் .. #Goback சொல்லி கதிகலங்க வைக்கிறானே என்ற எரிச்சல்.. சுயமரியாதையோடு மானத்தோடு வாழச் சொன்னால் .. நமது வழி நமது இனம் நமது சமூகம் மானத்தில் விளைந்ததென்று சொன்னால் சிலர் நக்கிதான் குடிப்பேன் என்கிறார் அதையும் நல்லதென்கிறார் என்ற பாவேந்தரின் வரிகளுக்கு ஒப்ப நிற்கிறார்..
..
அறிவெனும்,ஆயுதம் கொண்டு அறம் சமைப்போம் வீணர்களை வீழ்த்துவோம் ..எத்தனை ஆண்டானாலும் என்னதான் முயன்றாலும்.. பெரியாரின் பெயரன்கள் .. வீறுகொண்டு எழுந்து நிற்கும் போது ஆரியம் வீழும்.. எழவே முடியாதவாறு வீழும்.. வீழ்த்துவோம்
..
பகைவர்கள் கதி கலங்குகிறார்கள் ..
..
ஆலஞ்சியார்
Sunday, July 8, 2018
மாநில சுயாட்சி மாநாடு
மாநில சுயாட்சி மாநாடு
State Autonomy conference..
..
திராவிட நாடு கோரிக்கையை திமுக ஒத்திவைத்தபிறகு எடுக்கபட்ட மிக முக்கிய கோரிக்கை மாநில சுயாட்சி.. இது குறித்து #கலைஞர் ..மாநில சுயாட்சி என்பது இந்தியாவை துண்டுதுண்டாக வெட்டுவதற்கான கொடுவாளென்றோ இந்திய ஒருமைபாட்டிற்கு குந்தகம் விளைக்க வைக்கபடும்வெட்டு என்றோ எண்ணாதீர்.. என்றார்
மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்டதாக அரசியல் சட்டம் திருத்தபட வேண்டுமென்பதே எமது கோரிக்கை என்றார் #பேரறிஞர்_அண்ணா...
..
ஆம் பல்வேறு மொழி கலாச்சார பின்னணியை கொண்ட ஒரு நாட்டில் நாடென்பது கூட சரியான சொல் இல்லை துணைகண்டத்தை அதாவது ஒருங்கிணைந்த இந்திய நாட்டில் அதிகாரம் ஒரே இடத்தில் குவிதல் சமமான நீதியை தராதென்பதோடு .. ஒரு சில அதிகார அமைப்பே ஆட்சி செலுத்த வகைசெய்யும் .. அது ஒரே இடத்தில் அதிகாரத்தை வைத்தல் சர்வாதிகாரத்தை கொண்டதாக மாற்றும்..
..
இந்திய ஒன்றியமாக இருந்தாலும் இங்கே
இரு கூட்டமைப்பாக தான் செயல்படுகிறது..
இங்கே இரண்டு அரசுகள் உண்டு: மத்திய அரசு, மாநில அரசுகள்... இவ்விரு அரசுகளுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. ஈரவை முறை (ராஜ்யசபா & லோக்சபா, சில மாநிலச் சட்டமன்றங்களிலும் கீழவை உண்டு) அரசியல் சாசனத்தின் உச்ச ஆதிக்கம்.. அரசியல் சாசனத்தின் பகுதி உறுதித்தன்மை.. சுதந்திரமான நீதி அமைப்பு..
ஆனால் மத்திய அரசு ஒரு திட்டத்தை / செயலை செய்துவிட்டால் அதை எதிர்க்கும் அதிகாரமோ அல்லது அதை ஏற்காத சட்டவரைவோ கொண்டு வந்தாலும் அதற்கு ஒப்புதலை மத்திய அரசுதான் வழங்க வேண்டும்.. குறிப்பாக
நீட் தேர்வு தமிழகம் வேண்டாமென்கிறது ..ஆனால்
மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு என்ற விஷயம் கல்வி என்ற தலைப்பின் கீழ் வருகிறது கல்வி அரசியல் சாசனத்தின் பொதுப்பட்டியலில் உள்ளது. அதாவது மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுமே அதில் சட்டம் இயற்றலாம். ஆனால் மத்திய அரசு பாராளுமன்றத்தில் நீட் சட்டம் இயற்றி விட்டதால் தமிழக அரசு சட்டசபையில் அதை மறுதலித்துச் சட்டம் இயற்றினாலும் அதை அமல்படுத்த ஜனாதிபதி ஒப்புதல் தேவையாகிறது அதை ஜனாதிபதி செய்யமாட்டார் காரணம் மத்திய கேபினெட் பரிந்துரைத்தால் மட்டுமே அவரால் அனுமதிக்கமுடியும்.. இங்குதான் மாநில உரிமை பறிபோகிறது..
..
இது ஒரு விடயம்தான் பல்வேறு துறைகளில் மாநிலத்தின் உரிமைகள் மெல்ல மெல்ல பறிக்கப்பட்டு அது மத்தியரசின் கைகளுக்கு போகிறது இந்த சூழலில் தான் அதிகார பரவல் என்பது அதாவது அந்தந்த மாநிலங்கள் சுயமாக சட்டமியற்றிக்கொள்ள..மாநிலங்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் .. ஆனால் மத்தியரசு மாநிலஉரிமைகளை தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு செல்லவே ஆர்வம்காட்டுகிறது.. சமீபகாலமாக பாதுகாப்பை காரணம் காட்டி ..வளர்ச்சி என கூறி மாநிலங்களின் அதிகாரத்தை குறைப்பதும் .. பல்வேறு மக்களின் சுயத்தை இழக்க செய்து பொதுதன்மை என்ற போலியை திணிக்க முயல்வதும் நடந்துவருகிறது .. இந்நிலையில் .. சமூகநீதி..மாநில சுயாட்சியை கொள்கையாக கொண்ட பேரியக்கம் திமுக ..
மாநில சுயாட்சியை வலியுறுத்தி மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கிறது.. வழக்கம் போல் ஊடகங்களும் பாசிசமும் .. இது நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமென சுயாட்சி கோஷத்தை நீர்த்து போக செய்ய முனையும் தளபதி சரியான நேரத்தில் மாநில சுயாட்சி குறித்து இந்தியளவில் கவனத்தை ஈர்க்க மாநாட்டை நடத்த திட்டமிட்டிருப்பது சிறந்த தலைவராக தன்னை நிலைநிறுத்தி நிறைய கேள்விகளுக்கு பதிலை தன் செயல்மூலம் தந்திருக்கிறார்..
கூட்டாட்சி என்பதன் தர்க்கப்பூர்வ நீட்சியே மாநில சுயாட்சி (State Autonomy) .. மாநில சுயாட்சி விடயத்தில் தமிழகமே மற்ற இந்திய மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது..
சுயமரியாதைகாரன் என்ற முறையில் எமது நன்றியை பதிவு செய்கிறேன்..
..
தொடர்ந்து மாநில சுயாட்சிக்காக முரசு கொட்டுவோம்..
..
"The Federation is a Union because it is indestructible"..... B.R. Ambedkar..
..
ஆலஞ்சியார்
Saturday, July 7, 2018
ஊடக அறம்
தமிழகத்தில் ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சொல்கிறார் ..ஹிந்து ராம்..
தாங்கள் பலவீனமான அரசு அல்ல என்பதை காண்பிக்கவே இது போன்ற அத்துமீறல்கள் கையாளப்படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் கூட அவதூறு தண்டனை சட்டம் வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்படும்...ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் 153A , 505 போன்ற மக்களிடையே பிரிவினை ஏற்படுத்த முயற்சி செய்வதாக கூறி வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர்..
தமிழ்நாட்டில் தொலைக்காட்சிகள் ஊடகங்கள் மீதான தாக்குதல் கடுமையாக்கபட்டிருக்கிறது
குறிப்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி 489 ம் இடத்திற்கு தள்ளப்பட்டது அதற்கான காரணம் சொல்லபடவே இல்லை
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போது News 7 சிறிது காலத்திற்கு அரசு கேபிள்களில் இருந்து நீக்கபட்டிருந்தது
சத்யம் மதிமுகம் தொலைகாட்சிகள் அரசை எதிர்த்து செய்திகள் வெளியிடுவதால் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது
தூத்துக்குடி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தை ஒலிபரப்பு செய்த NEWS 18 தொலைகாட்சி தொடர்ந்து
12 மணி நேரம் அரசு கேபிளிலிருந்து நீக்கபட்டது
டாஸ்மாக்கிற்கு எதிராக நடந்த போராட்டத்தை ஒளிபரப்பு செய்ததால் சன் நியூஸ் முழுமையாக இருட்டடிப்புச் செய்யப்பட்டது.
..
தினகரன் வெற்றி பெறுவார் என்று கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டதால் காவேரி நியூஸ் நீக்கினார்கள் அது வழக்கு தொடர்ந்து இப்போது நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது
அரசுக்கு எதிராக ஊழல் வழக்கு செய்திகளை வெளியிட்டதற்காக தந்தி டிவி 8 நாட்கள் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டது.
பொன் ராதாகிருஷ்ணன் , ஹெச் ராஜா போன்றவர்கள் தமிழ் நாட்டில் மலை பகுதிகளில் நக்ஸல்கள், மாவோயிஸ்டுகள் பயிற்சி பெற்று வருவதாக பொய் சொல்லி வருகிறார்கள்.. இதுபோன்ற செய்திகளை குறிப்பாக பாஜகவினர் சொல்லும் செய்திகள் அதிகளவில் மக்களை சென்றடைய அரசு கேபிள் பயன்படுகிறது..
MSO செயல்பாடு முழுவதும் எழில் என்பவர் கட்டுபாட்டில் உள்ளது. சில நேரங்களில் அமைச்சர்கள் இயக்கும் நிலை உள்ளது. குறிப்பிட்ட செய்திகளை தடை செய்ய நினைத்தால் பட்டனை over gain Mode. ல் மாற்றி விடுவார்கள். உடனே செய்திக் தெளிவாக தெரியாமல் போய்விடும்...
..
இதுபோன்ற அத்துமீறல் நிறைய பார்த்தாயிற்று ஊடகங்களும் அறம் தவறி செயல்படுகின்ற என்பதை மறுக்க முடியாது .. ஊடகங்களில் பாஜகவிற்கு வேண்டியவர்கள் அல்லது விரும்புகிறவர்களை அடிக்கடி அழைத்து பேச விவாதிக்க அழுத்தம் தரபடுகிறது அதையும் வாய்மூடி ஏற்கிறது ஊடகங்கள் .. அதையும் மீறி செய்திகள் வந்தால் உடனே அரசு கேபிளிலிருந்து நீக்கம் அல்லது தடை செய்கிறது அரசு..
..
எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் கூட இப்படி கருத்து சுதந்திரம் நசுக்கபடவில்லையே எடப்பாடியால் முடிகிறதே .. என நாம் நினைத்தால் அங்குதான் பாசிசத்தின் பிடி நமக்கு புரியும் அதன் பின்னில் பாஜக இருப்பது தெரியும் .. இந்த எடப்பாடி அரசு எங்களின் கண்ணசைவில் இயங்குகிறது கேனச் சிரிப்பை சிரிக்கும் எடப்பாடி எங்களின் தலையாட்டி .. மக்கள் எதிர்ப்பு வரும் போது பழியை இந்த கேனயன்கள் மீது சுமத்திவிட்டு தப்பித்துக்கொள்வோம் .. ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து எழுப்படும் குற்றசாட்டுகளை வெகுமக்கள் கண்டுகளிக்கும் ஊடகம் மூலம் மட்டுமே சென்றடையுமென்று எண்ணுவது மடமை.. சமூகவலைதளங்கள் நாளேடுகள்.. என இந்த மத்திய மாநில அரசின் கேலலமான கேடுகெட்ட ஆட்சியை பார்த்து, விமர்சித்து கொண்டுதானிருக்கிறார்கள் ..
..
ஊடகங்களை முழு சுதந்திரத்தோடு செயல்பட அனுமதிக்கவேண்டும் அதேவேளை
ஊடகங்கள் அறத்தோடு செயல்படவேண்டும்..
..
ஆலஞ்சியார்
Friday, July 6, 2018
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழும் சமஸ்கிருதமும் இரு கண்கள்.. கவிபேரரசு..
சமஸ்கிருதம் வேதமொழியென்றும் அது கடவுளுக்கான மொழியென்று பண்டைய இந்தியாவில் பேசபட்ட மொழியென்றும் சொல்லி வருகிறவர்கள் ஏன் வழக்கொழிந்து போனதென்பதை சொல்லமுடியவில்லை.. சமஸ்கிருத மொழி இந்திய துணைக்கண்டத்தில் மொழி அல்ல ஆரியர் வருவிற்கு பிறகே வந்ததென்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் அதற்கு அவர்கள் கூறும் தரவுகள் /காரணிகள் ஈரான் நாட்டிலிருந்து நம்மிடைய வந்தது வேதகால வடமொழியானது
ஈரானின் #அவெஸ்தன் மொழியை ஒத்தது. இதன் இலக்கணமும் சொல்லாக்கமும் அவெஸ்தன் மொழி கூறகளை கொண்டது.. அதற்கான இலக்கணங்கள் ஏதுமில்லை.. மாறாக பார்ஸீய மற்றும் யூதமொழி வடிவங்களை கொண்டது .. தனித்துவ அடையாளங்கள் ஏதுமில்லாத மொழிகளின் வரிசையில் சமஸ்கிருதம் அடங்கும் ..
..
அதோடு தமிழை இணையாக ஆக்குவதென்பது ஒருவகை அத்துமீறல் அயோக்கியத்தனம்.. செம்மொழிக்கான படித்தரங்கள் எவை..?
தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர், செம்மொழியாவது யாது? என்ற வினாவுக்கு விடையளிக்கும் போது, "திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய மொழியே செம்மொழி" என்று கூறியுள்ளார்.. இவை சமஸ்கிருதத்திடமில்லை..
..
செம்மொழிக்கான தகுதிகளில்,
தொன்மை,பிறமொழித் தாக்கமில்லாத் தனித்தன்மை, தாய்மைத்தன்மை,தனித்தன்மை கொண்ட
இலக்கியவளம், இலக்கணச் சிறப்பு
பொதுமைப் பண்பு ,நடுநிலைமை
பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு
உயர்சிந்தனை ,கலை, இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு இவை அனைத்தும் வேண்டும் இது தமிழுக்கன்றி சமஸ்ருதத்திடம் இல்லை ..காரணம் சமஸ்கிருதம் தனித்தன்மை கொண்டதல்ல பிறமொழி கலப்பும் .. பிறமொழிகளின் மீது கலந்தும் இருக்கிறது.. தாய்மைதன்மை முற்றிலுமில்லாத அதாவது அதன் கிளைமொழிகளை உருக்காகவோ /கொண்டதாகவோ இல்லை..
ஆனால் தமிழின் கிளைமொழியாக அல்லது பிரிந்ததாக கைரளியர் பேசும் மலையாளமும், தெலுங்கும், கன்னடமும் துளுவும் உண்டு இதுபோன்ற மொழியின் கிளைகள் சமஸ்கிருதத்திற்கு இல்லை..
..
இலக்கிய பழைமைதன்மை என்பது தமிழைப்போல இவர் கூறும் மற்றொரு கண்ணுக்கு இல்லை.. வேதமொழி என அறியபட்டு .. 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 12400 பேர் மட்டுமே பேசுகிற மொழி ஈரானிய மொழி கலப்பை கொண்ட மொழி குறைவானவர் பேசுகிறார்கள் அழிந்துவரும் மொழி என்பதை தவிர தமிழோடு இணைந்து பேசுவதற்கு சரியான காரணிகளை தரவில்லை.. வரலாற்று நோக்கில் சமஸ்கிருதத்திற்கு எழுத்துவடிவம் இருந்ததில்லை முன்பு லத்தீன் வரிவடிவங்களே பயன்படுத்தபட்டன இப்போது இந்தி வரிவடிவங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன ..
மொழி வளமோ பொதுதன்மையோ வரிவடிவமோ இலக்கண சிறப்போ ..இல்லாத செத்த மொழியோடு .. தமிழை இணைத்து பேசுவது.. தமிழாய்ந்த தமிழ்கவி என்று சொல்லிக்கொள்ளும் வைரமுத்து .. சருக்கல் வரும் .. இது பதாளத்தில் விழுந்ததைப்போல கிடக்கிறார்..
..
அரிதாக பேசுகிறார்கள் என்பதற்காக அதை தமிழோடு இணைப்பது தமிழுக்கு செய்யும் துரோகம்.. பார்பனர்களில் கூட யாரும் இதை தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதில்லை தமிழுக்கு இணையான மொழி ஏதுமில்லை..
எல்லா தகுதியும் ஒருங்கேப்பெற்ற வழக்கில் பெருபான்மை மக்கள் பேசும் தொன்மையான இலக்கிய சான்றுகளும் தரவுகளும் கூடிய உலக மொழிகளின் தாய் தமிழ்.. பதவி விருது புகழ் தேவைதான் அதற்காக பெற்றவளை இழிவாகவோ தரங்தாழ்த்தி இணைவைத்தோ பேசுவதை ஏற்க முடியாது..
#தமிழ்_எங்கள்_உயிருக்குநேர்..
..
ஆலஞ்சியார்
Thursday, July 5, 2018
பெருமாள்..பிரசாதம்
ரமண தீட்சதலு..
தலைமை அர்ச்சகர் திருப்பதி ஏழுமலையான் பேட்டியில் லட்டு பற்றியும் நீண்ட வரிசை பற்றியும் மிகப்பெரிய ஊழல்/ முறைகேடு நடக்கிறது என்று சொன்னவுடன் நம்ம ஆட்கள் பார்த்தாயா .. தீட்சகரே உண்மையை சொல்லிவிட்டாரென பரவசமடைகிறார்கள்.. முழு பேட்டியையும் பார்த்தேன் அவர் சொல்ல வருவது இதுதான் ..
அதாவது அறநிலையத்துறை முழுகட்டுபாட்டில் கோவில் போனவுடன் ஆகமவிதிகள் மீறபடுவதாகவும் நகைகள் கொள்ளை போனதாகவும், விஐபிகளுக்காக வெங்கடாஜலபதியே காத்திருக்கவேண்டியிருக்கிறதென்று சொல்கிறார்..
..
1996 க்கு பிறகு தெலுங்குதேசம் ஆட்சியில்தான்
கோவிலுக்கு வரும் பணம் நகைகள் சில குறிப்பிட்டவர்களின் ஆளுமையில் கொண்டு சேர்க்கபடுகிறது அதற்கான எந்த குறிப்போ ஆதாரமோ இல்லாமல் கணக்கில் வராமல் இருப்பதாக காங்கிரஸ் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியது அதுவரை ஒரு சில குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களின் பொறுப்பில் இருந்த நகை ஆபரணங்களை அரசே நிர்வகிக்க அதாவது தேவஸ்தானம் முழுகட்டுபாட்டிற்குள் என்ற முடிவு அரசு எடுத்தது.. அப்போதே அரசு கோவில் விடயத்தில் தலையிட்டால் சில ஆகமவிதிகளை சுட்டிகாட்டி காலகாமதாக நடத்தபட்டுவரும் ஆராதனைகள் .. தடைபடும் குறிப்பிட்ட பிரிவினரே அதை செய்யவேண்டுமென உயர்நீதிமன்றத்தை நாடினர் மிராசிகள்.. இடைகால தடைவிதிக்க மறுத்து பொருட்கள் சொத்துகள் நகைகளை கணக்கெடுப்பதிலோ நிர்வகிப்பதிலோ அரசு தலையிடுவதை தடுக்கமுடியாதென்றது ..அன்றிலிருந்தே இந்த பனிப்போர் தொடங்கியது.. இடையில் ஒன்றை சொல்லவேண்டும் சிதம்பரம் கோவில் நிர்வாகத்தை அரசு எடுத்து நடத்தியதற்கு எதிரான வழக்கில் தீட்சதர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகுதான் அதையே காரணம் காட்டி தொடர்ந்து மிராசிகளான நாங்கள் தான் கோவில் வரவு செலவுகளை பார்பதோடு திருப்பதி கோவில் நகைகள் எங்களிடமே இருக்கவேண்டும் எப்போது எந்த நகையை சிலைக்கு(பெருமாளுக்கு) சாத்தவேண்டுமென்ற ஆகமம் எங்களுக்கு தான் தெரியும் என்றார்கள் .. நாயுடு சர்க்கார் அவர்களுக்கு வழங்குவதாக இல்லை மீண்டும் இதை பாஜக தூண்டுதலில் துணையோடு பேச தொடங்கியிருக்கிறார்கள்..
..
லட்டுக்கான டிமாண்ட வரிசையில் நாள்கணக்கில் காத்திருப்பதெல்லாம் 96 க்கு முன்பும் இருந்தது .. அப்போதும் விஐபிக்களுக்கான தனிவரிசையும் தரிசனமும் நடந்தது அப்போதும் அதிகாரிகளும் ஆட்சியினரும் பணக்காரர்களுக்கு சிறப்பு வழிபாடு தரிசனம் லட்டு சலுகையென நடத்திக்கொண்டுதான் இருந்தார்கள்.. அப்போதெல்லாம் இதே அர்ச்சகர்களும் பணக்காரர்களுக்கு வால்பிடித்ததும் உயர் அதிகாரிகளை ஆட்சியாளர்களை திருப்திபடுத்தியதும் நடந்துகொண்டுதான் இருந்தது .. ஆனால் அரசு கட்டுபாட்டிற்கு வந்த பிறகுதான் வருவாய் இரட்டிபாக அல்ல ஒவ்வொரு வருடமும் பன்மடங்கு அதிகரித்ததாக சட்டமன்றத்திலேயே பேசியது பதிவாகியிருக்கிறது..
..
கோவில்களை இந்துக்களிடம் ஒப்படையுங்கள் என்ற கோஷம் சமீபகாலமாக ஒலிக்க தொடங்கியிருக்கிறது அரசு அலுவலகராக சீனிவாச ராஜூலு நியமிக்கபட்ட பிறகு தான் உணவு குறைபாடை கண்டுபிடித்து எச்சரித்தார்
புதிய அதிகாரியாக சென்ற ஆண்டு வடஇந்தியாவை சேர்ந்த அனில்குமார் சிங்வால் பதவிக்கு வந்த பிறகு தான் ரமணா நிறைய பேச தொடங்கினார் ..
நேர்மையான அதிகாரியென பெயரெடுத்த அனில்குமார் சிங்வால் அங்கிருப்பதை தீட்சதகர்கள் விரும்பவில்லை.. அறநிலையத்துறையில் பிற மதத்தை சேர்ந்த அலுவலர்கள் சிலர் இருந்தார்கள் அவர்கள் கோவில் விடயத்தில் பங்குகொள்ளவதில்லை .. வரவு செலவினங்களை கணக்கிடும் பணியில் இருந்தார்கள் அதையும் இதே அர்ச்சகர்கள் தான் இந்துக்கள் மட்டுமே,பணிபுரியவேண்டுமென கூறி அழுத்தம் தந்தார்கள் 42 அலுவலர்கள் பணிமாற்றம் செய்யபட்டார்கள்.. ஆனால் குறிப்பாக ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களை விடாமல் பிற சாதியினரும் அலுவல் பணிக்கு வந்ததை ஏற்க மறுத்த போராட்டம் தான் இன்று வேறு பரிணாமம் அடைந்திருக்கிறது.. அவாள்களிடத்தில் தரவேண்டுமென்ற கோரிக்கையை தான் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள் ஆகமவிதிகளை காரணம் காட்டி ..அரசு செவிசாய்ப்பதாக இல்லை
அரசு நிர்வாகத்திலிருந்து அவாள்கள் நிர்வாரத்திற்கு வரவேண்டும் அதுதான் அவர்கள் விருப்பம்.. தெலுங்க தேசம் கட்சி இப்போது பாஜகவோடு நல்லுறவில் இ்ல்லையென்றவுடன் வெளிவந்து கதைக்க தொடங்கியிருக்கிறார்..
..
ஆலஞ்சியார்
Wednesday, July 4, 2018
அஞ்சுவதில்லை எவர்க்கும்..
2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பல தொகுதிகளில் தோற்குமென மத்திய அரசின்
உள்துறை தெளிவான அறிக்கையை மத்திய அரசிடம் கைசாத்தியிருக்கிறது.. இதனால் பாஜக எதிர்கட்சிகள் ஒருங்கிணைவதை தடுக்க குறிப்பாக காங்கிரஸோடு இணைந்து போட்டியிடுவதை தடுக்க முயல்கிறது
தமிழகத்தில் திமுக காங்கிரஸோடு இணைந்து போட்டியிட்டால் சில தொகுதிகளை காங்கிரஸ் வெல்லும் என்பதால் அது பாஜகவிற்கு பின்னடைவை தரும்.. இதுகுறித்து திமுக செயல்தலைவரிடம் பாஜக மேலிடம் பேசுவதாகவும்..காங்கிரஸை தவிர்க்க வேண்டுமென்று கோரிக்கை வைப்பதாக செய்திகள் வருகின்றன.. எங்களோடு கூட்டணி அமைத்து போட்டியிடாவிட்டாலும் பரவாயில்லை காங்கிரஸோடு கூட்டணி அமைக்க கூடாது ..ஏனெனில் காங்கிரஸ் சிலதொகுதிகளை தமிழகத்தில் வெல்லும் என்ற உள்துறை தகவலால் பாஜக பதறுகிறது.., தளபதி.ஸடாலின் பிடிகொடுக்கவில்லையென்றும் தெரிகிறது..
கவர்னரை வைத்து நெருக்கடியை தர முயற்சிப்பாக செய்தி கசிகிறது..
சில மாநில எதிர்கட்சிகளை மிரட்டவும்..சிபிஐ ரெய்டு ஆய்வென காய்நகர்த்த திட்டமிட்டு செயல்படுவதாக பத்திரிக்கையாளர் ஒருவர் நம்மிடம் சொன்னார்..
..
நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிர்ப்பு பலமாகி இறுக பிடி விழும் என்ற நிலையில் எதிர்கட்சிகளை ஒரு குடையின் கீழ் வராதவாறு பார்த்துக்கொண்டால் அதன் பலன் பாஜகவிற்கு வருமென அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் அது உண்மையும் கூட .. அதிகார அமைப்பு ஏறக்குறைய பாசிச சிந்தனையுடையவர்களிடம் கொடுக்கபட்டுவிட்டது தனி அதிகாரம் என்ற போர்வைக்குள் இவர்கள் புகுந்து.. பலகால திட்டமிட்டு செயல்படுகிறார்கள் .. தேர்தல் ஆணைய அமைப்பு நம்பிக்கைதன்மையை இழந்து நிற்கிறது.. இந்தியா ஜனநாயகத்தில் மாபெரும் கருப்பு நாட்களாக பாஜக ஆட்சி அமைந்தது .. மக்கள் நேரடியாகவே பாதிப்பிற்குள்ளாகினர்.. மறைமுகமாக அவர்கள் மீது ஏற்றபட்ட பெரும்சுமையை தாங்கமுடியாது தவிக்கின்றனர் அவர்களின் உரிமைகள் பறிக்கபடுகிறது.. அதைகூட அறிவிப்பின்றி அதிகாரம் தமக்கிருக்கிறதென்ற திமிரில் செய்கிறார்கள் .. இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய சரிவில் சிறுதொழில்கள் நசுக்கபட்டு வாழ்வாதாரம் பாதித்தவர்கள்.. செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்...
இந்திய மக்களின் வாழ்வுரிமை சர்வாதிகாரதிதில் நிழலில் ஒருவித பதட்டத்தோடு.. அவசரநிலையை விட மிக மோசமான காலசூழல்..
இந்நிலையில் தான் பாஜக தன் தந்திரத்தால் வெல்லலாமென சூழ்ச்சி செய்கிறது..
..
தெலுங்கானாவில் சந்திரசேகர ராவை ஆசைகாட்டி இழுக்க முயற்சிக்கிறார்கள்... ஏறக்குறைய காங்கிரஸ் ஆளாத எல்லா மாநிலங்களிலும் பாஜகவை யாருமே வேண்டாமென ஒதுக்கியதால் வாக்கை பிரிக்கும் தந்திரம் .. தமிழகத்தை பொறுத்தவரை தனித்து நின்றாலும் திமுக பெருவாரியாக இடங்களை கைப்பற்றும் இதை சொல்லி கூட்டணிகளை பிரித்து ..ஒருசில இடமேனும் அதிமுக பெறுவதற்கு திட்டமிடுகிறார்கள்.. அதிமுக ஒரு இடம் வெற்றிபெற்றால் கூட அது பாஜகவிற்கு ஆதரவாக அமையும் அதனால்தான் செயல்தலைவரோடு சிலரை தூது அனுப்பி காங்கிரஸை கூட்டணியில் சேர்க்ககூடாதென்ற கோரிக்கை வைக்கிறார்கள்..
..
திராவிடத்தின் பிரதான எதிரி ஆரியம் தான் ..அது எந்தவடிவில் வந்தாலும் அதை ஏற்பது அல்லது துணைநிற்பது கூட்டணி அமைப்பதென்பது அடிப்படை கொள்கை கோட்பாட்டையே வெடிவைத்து தகர்ப்பதைப்போல.. பாஜகவோடு கூட்டு அல்லது புரிந்துணர்வென்பது தீண்டதகாத செயல்.. வரலாற்றுப் பிழையாகி போகும்..
நமது சித்தாந்தத்தை தகர்க்க வேண்டுமென கங்கணம் கட்டி செயல்படும் எதிராளி.. சமூகநீதிக்கெதிரான கொடுவாளை நீட்டும் பாசிசத்தை அரவணைப்பதென்பது நமக்குநாமே தீ வைத்துக் கொள்வதைப்போல.. நாசமாக்கிவிடும் ஏற்கனவே மாறனின் பேச்சை கேட்டு செய்த பிழையால் இயக்கம் மீண்டுவர அதிகம் விலைகொடுக்க/இழக்க வேண்டியிருந்தது.. இனி எக்காலத்தில் பாஜகவோடு கூட்டு இல்லை என்ற சொல்லில் உரத்து நிற்கவேண்டும்.. அதுவே இயக்கத்திற்கு..தமிழகத்திற்கு தமிழர்நலனுக்கு நல்லது..
அஞ்சுவதில்லை எவர்க்கும்..
அறம் வெல்லும் எப்போதும்..
நம்பிக்கையோடு களம் காண்போம்..
ஆரியத்தை வேரோடு சாய்போம்..
..
ஆலஞ்சியார்
Tuesday, July 3, 2018
தமிழிசை
மீம்ஸ்களை பொருத்தவரை என்னை பரட்டை என்று எழுதுவது , எனது நிறம் மற்றும் முடி குறித்து கேவலமான முறையில் விமர்சனம் செய்வது கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி என்னை தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்வது இதெல்லாம் என்ன நாகரீகம். எனது குடும்பத்தினர் மற்றும் கணவர் , சுற்றத்தார் இது குறித்து மிகவும் வருத்தமாக பேசுவது உண்டு. சில நேரங்களில் என்னிடம் கூறுவார்கள். நான் எதையும் கேட்க மாட்டேன் என்று அவர்களுக்கு தெரியும். நான் தமிழிசை அல்ல...டூமிழிசையாக தற்போது மாறிவிட்டேன்...!
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ..பாஜக மாநிலத் தலைவர்..
..
நிச்சயமாக கண்டனத்திற்குரியது ..குறிப்பாக இதை திமுகவினர் பெருமளவில் செய்கிறார்கள் என்பது வெட்ககேடானது.. ஒருவரின் உடல்மொழி உடை, நாகரீகம் பற்றி பேசுவதென்பது தனிநபர் தாக்குதலே இதை என்ன காரணம் சொன்னாலும் ஏற்கமுடியாது
அவரின் கொள்கையோடு கருத்தியலோடு நாம் சண்டை கூட போடுவோம்.. அவரின் அரசியலை கேடுகெட்ட நிலை என்பதும் அவரை போன்ற மிகவும் பின்தங்கிய இன்னும் சொல்லபோனால் வர்ணாசிரம கோட்பாடுகளால் மிகவும் பாதிக்கபட்ட சமூக பின்னணியில் இருந்து வந்தும் இன்னமும் ஆரியர்களின் அடிவருடியாக இருக்கிறாரே என ஆதங்கம் படுவோம்.. அவர் ஏற்றுகொண்ட கொள்கை தமிழுக்கு தமிழனினத்திற்கு .. எதிரான போக்கை கொண்டதென்பதால் அவரை அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்ப்போம்..அதில் மாற்றுகருத்தே இல்லை.. ஆனால் அவரின் உடல்மொழியை செய்கைகளை .. அவரின் தலைமுடியை கிண்டல் செய்வதை ஏற்கமுடியாது..
..
திராவிடம் பேசுகிற நாம் பெண்களை மதிக்க தெரிந்திருக்கவேண்டாமா.. அரசியலில் பெண்கள் வரவேண்டும் .. ஆண்களுக்கு நிகரான பதவிகளை அலங்கரிக்கவேண்டும் ஆண் பெறுகிற உரிமைகள் அனைத்தும் மகளிருக்கு வேண்டும்.. கரண்டியை பிடிங்கிக் கொண்டு புத்தகத்தை கொடுங்கள் என்ற பெரியாரின் பின்பற்றுகிற நாம் .. பெண்களை கேலி செய்தும் அதை நியாயபடுத்துவதும் சகிக்கவில்லை.. தமிழசையின் அரசியலோடு கடும் விவாதங்களை விமர்சனங்களை வைப்போம்.. எல்லாதுறைகளிலும் பெண்களின் பங்கை உறுதி செய்கிற .. அதற்காக போராடுகிற இடத்தில் நாம் இருக்கிறோம்.. பெண்கள் மதம் சாதி குடும்பம் என பல்வேறு நிலைகளில் அடிமைபடுத்தபட்டு அல்லது ஒதுக்கிவைத்து இதெல்லாம் ஆண்களுக்கானதென்ற மனபான்மையோடு வாழ்கிற சமூகசூழலில் ஒரு சிலரே பொதுவாழ்விற்கு வருகிறார்கள்.. முன்பிருந்ததைவிட பெண்கள் பொதுவாழ்விற்கு வர தொடங்கியதற்கு நாம்தான் காரணம் எனினும் அவர்களை வரவிடாமல் செய்கிற செயலுக்கும் நாமே துணைபோகிறோம்.. திராவிட கருத்தியிலை ஏற்றுக்கொண்டவர்கள் ..நகைச்சுவைக்காக கூட கேலி கிண்டல் செய்வதை தவிர்க்க வேண்டும்..
தமிழிசையின் பேச்சுகள் அவரின் அரசியல் அறியாமையை முழுமைபெறாமையை முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.. தமிழக மக்கள் இப்போதே பாஜக ஆட்சிக்கு தயாராகிவிட்டார்கள் என்றதையெல்லாம் நகைச்சுவை எடுத்துகொண்டு போய்விடவேண்டும்..
..
பெண்களுக்கு 33% விழுக்காடு வேண்டுமென கேட்கிற காலகட்டத்தில் பெண்களின் அரசியல் பேசபட போற்றபட... கைதட்டி வரவேற்கபட வேண்டியது அவசியம்.. எதிர்கருத்தாளர்களை கருத்தை கொண்டு தெளிவை கொண்டு உறுதியாக எதிர்ப்போம் கொள்கையில் விட்டுவீழ்ச்சியில்லை.. பாசிசத்திற்கு துணைபோகும் யாராகினும் அவர் நம் இனத்தானாயினும் எதிர்ப்போம்..
..
தமிழிசை தன் குடும்பத்தார்கள் மிகவும் வருந்துவதாத சொல்கிறார்..
நாமும் வருந்துவோம்..
தனிநபர் விமர்சனத்தை தவிர்ப்போம்..
..
ஆலஞ்சியார்
Monday, July 2, 2018
மதம் மனிதனை அழுக்காகிறது
தனிவாழ்க்கையில் பரிசுத்தமானவராக இல்லாதபட்சத்தில் அவரின் கடந்த கால போதனைகள் கொள்கைகள் கோட்பாடுகள் குப்பை என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்..
ஆம்..
தனிமனித ஒழுக்கம் அவன் சார்ந்த கொள்கையை பாதிக்கிறதோ இல்லையோ அவனை பின்தொடர்பவர்களை .. நிச்சயமாக பாதிக்கும் அதுவும் மதபோதகர்கள் எனில் சொல்லவே வேண்டாம்.. ராம்ரஹீம்,ஆசிராம்பாபு பி.ஜெய்லுலாபுதீன்.. கிருஸ்துவ பாதிரிகள்.. எல்லோருமே காம இச்சைக்கு பலியானதோடு அதை திரும்ப திரும்ப செய்து.. யாரும் கவனிக்காதவரை தவறில்லை தூயவன் வேசம் கட்டலாமென்ற அயோக்கியத்தனத்தை செய்தார்கள்.. இவர்கள் பொருள் ஈட்ட மதம் அவர்களுக்கு பயன்பட்டதே தவிர இந்த சமூகத்தில் நல் மாற்றத்திற்கு வழிவகுக்கவில்லை பிரிவினையை மதமோதலை.. தீண்டாமையை ஒருவித மூளைச்சலவை செய்ததே தவிர இந்த சமூக மேம்பாடிற்கோ ..அல்லது அவரை பின்தொடர்கிற ஆட்டுமந்தைகளை நல்வழிபடுத்தவோ இல்லை ..
..
மதம் என்பது ஒருவகை போதை ..பிறக்கிறபோதே ஒவ்வொரு மனிதனின் மீதும் திணிக்கபடுகிற அல்லது இயல்பாக ஒட்டிக்கொள்கிற விடயம்.. இதில் யாரும் மீறமுடியாதவாறு செய்திருக்கிறது.. அவன் தானாக சிந்தித்து மறுப்போ அல்லது மாறவோ முடியுமே தவிர இயல்பாக ஒட்டிக்கொண்ட மதம் அவனை ஆட்டிவைக்கும்.. இதில் கொடுமை என்னவென்றால் அதில் உட்பிரிவுகள் ..எல்லை மதத்திலும் இந்த அடுக்குமுறை உண்டு.. அது சாதியாகவோ அல்லது வழிபாட்டுமுறையில் மாறுபட்ட பிரிவாகவோ இருக்கும்.. அது அப்படி இருந்துவிட்டால் இங்கே எந்த விளைவுகளும் ஏற்பட போவதில்லை.. மாறாக நான் சரி அல்லது எங்கள் பிரிவே உயர்ந்தது .. மற்றவர்கள் வழிகேட்டில் அல்லது எங்களை விட தாழ்ந்தவர்கள் என்கிற போதுதான் பிரச்சனை வருகிறது அதைதான் இந்த மண்ணாங்கட்டிகள் (மதபோதகர்கள்) பயன்படுத்தி கொள்கிறார்கள்.. தங்கள் சமூக மக்களை அறியாமையாக வைத்திருப்பது ஒருவகை .. மற்றொன்று ..பேசி பேசி வளைத்து திரித்து வலைப்பின்னி தலையாட்டி பொம்மையை போல எல்லாவற்றிக்கும் எதிர் கேள்வி கேட்காமல் .. சொல்வதெல்லாம் உண்மை என்ற நிலைக்கு சுய சிந்தனையற்றவர்களாக ஆக்குவது.. இதில் மிகவும் ஆபத்தானது இரண்டாவது வகை..
முதலில் கருத்துகளை சொல்லி பின் சலனபடும்போது பொருள் ஆசைகாட்டி .. அதை மீறுகிற போது கடவுள் பெயரில் பயமுறுத்தி ஒருவகை அடிமையைப்போல நிலைநிறுத்தி வைத்திருக்கிறார்கள்..
..
எந்தவொரு மனிதனும் தன் ஆசைகளை விருப்பங்களை தன் உணர்வுகளை கட்டுபடுத்தி வைத்திருக்கிறேன் என்று சொன்னால் அதாவது துறவறம்/ மிக யோக்கியன் என்றால் அவனிடம் எச்சரிக்கையாக இருங்கள். எந்தவொரு போதகனும் தான் சொல்வது மட்டும் சரியென்கிறானா அவனிடம் எச்சரிக்கையாக இருங்கள் .. சொல்லவந்ததை சுற்றிவளைத்து பேசுகிறானை அவனை நம்பாதீர்கள்.. ஏனெனில் மிகவும் ஆபத்தானவர்கள் இவர்கள்..
மதத்தை சாதியை துணைக்கழைத்தால் எதுவேண்டுமானாலும் செய்யலாமென்ற எண்ணம் ..எப்படியும் தன் மதமோ சாதியோ இனமோ கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இவர்கள் துள்ளுகிறார்கள்.. அதுதான் இவர்களை ஆடவைக்கிறது..
..
கடவுளும் மதமும் நன்மைக்கான ஏற்பாடு என்றால் கூட அது தேவையில்லை ஒழிக்கபட வேண்டியதென்றார் #பேராசான்_பெரியார்.. ஆம்..
மதங்கள் மனிதநேயத்தை போதிப்பதில்லை அது ஒரு போதையை தந்து வெறியோடு பிற மத சாதியினரை பகை கொள்ளவே செய்கிறது.. அது உழைக்காமல் உண்ணும் பிரசங்கிகளை .. வேதம் சொல்லும் போதகனாக்கி .. இயல்புகளை மீறிய பொய்யான கட்டமைப்பை செய்கிறது.. பித்தலாட்டம் பொய் புரட்டு மூளைச்சலவை .. காமலீலை அடுத்தவர் உரிமையில் தலையிடுதல்.. கொள்ளை கொலையென..
மக்களின் மனதில் ஒருவித அழுத்தத்தை தந்து அவனை அழுக்காக்கிறது ..
உண்மையில் மனிதம் தொலைகிறது மனதை பாழ்படுத்துகிறது..
..
#மதம்_தவிர்த்து_மனிதம்_காப்போம்
..
ஆலஞ்சியார்
Sunday, July 1, 2018
சிலைதிருட்டு...
சாதி சான்றிதழை கிழித்தால் சாதி ஒழியுமென்ற அதிமேதாவிக்கு.. மநுவை ஒழித்தால் தான் சாதி ஒழியுமே,தவிர சான்றிதழை அல்ல.. சாதி சான்றிதழை கிழிக்க சொல்வதின் பின்ணணியை பார்க்க வேண்டும் மிகவும் ஒடுக்கபட்ட சமூகத்தின் அடித்தட்டிலிரு்து மேலே வர முடியாமல் சுழன்று திரியும் எம் மக்களை .. மிகவும் பிற்படுத்தபட்டவராய்.. சமூகத்தில் தொடர்ந்து புறக்கணிக்கபட்டு கல்வி வேலைவாய்ப்பில் ..உயர்சாதியினரோடு போட்டியிட முடியவில்லை.. பொருளாதாரம்..கட்டமைப்பு வசதி அதற்கான வாய்ப்புகள் மறுக்கபட்டவர்களையும் .. உயர்கல்விகளுக்கு வருவதற்கு .. அவர்களுக்கான விகிதாசாரத்தை தருவது தானே சரி .. அவர்களை எப்படி இனங்காண்பது..
இன்றைக்கும் உயர்பதவிகளில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரே ஆதிக்கம் செலுத்துகிற அவலம்.. உச்சநீதிபீடம் முதல் .கவர்னர்...அரசு அதிகாரிகள் ..செயலர்கள் என அதிகார அமைப்பையே பார்பனர்கள் வைத்திருக்கிறார்கள்.. இடைநிலை கடைநிலை பணிகள் தான் ..பிற்படுத்தபட்ட தாழ்த்தபட்ட மக்களுக்கு கிடைக்கிறது அதையும் ஒழித்துகட்ட சாதி சான்றிதழ் மறுப்பு பயன்படுமே தவிர...அவர்களை ஒருபோதும் தூக்கிவிடாது..
..
சாதியை ஒழிக்க வேண்டாமா என கேட்பவருக்கு .. முதலில் 3% விழுக்காடு பார்பானுக்கு அவன் விகிதாசாரப்படி 1.5 % விழுக்காடு கொடுத்துவிட்டு மீதமுள்ளதை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க சொல்லுங்கள்..
இடஒதுக்கீட்டின் படி முழுவதுமாக நிரப்பபடாமல் இருக்கிறது..
அப்படியே எம் குழந்தைகள் உயர்கல்வியை தகுதி இடஒதுக்கீட்டின்படி பெற்று வந்தால் அவர்களை கொலை செய்து தற்கொலையென கதைகட்டி.. அந்த இடத்தை அபகரிக்கும் செயல் ..
இந்தியாவில் இடஒதுக்கீடில்லாமல் உயர்பதவி அதிகாரங்களில் பார்பனர்கள் எப்படி இத்தனை பதவிகளில் என எப்போதாவது கேட்டதுண்டா.. சாதி சான்றிதழை ஒழித்தால் எல்லாவற்றையும் பொதுவாக்கினால் மொத்தமும்,கொள்ளை போகும்.. இப்போதே நீட்டென்ற பெயரில் மருத்துவத்தில் எம் குழந்தைகளின் உரிமைகள் பறிபோகிறது
இதெல்லாம் திடீர் அரசியல்வாதிக்கு புரியாது..
இந்த மண்ணின் மக்களை ..அவர்தம் உரிமைகளை தடுக்க நினைக்கும் செயல் இது..
***********************************
சிலைகள் கடத்தபடுவது குறித்து ஏதேனும் கருத்து சொல்லியிருக்கிறாரா... கதவை உடைத்தோ சுவரை உடைத்தோ சிலைகள் திருடபடவில்லை .. கருவறைக்குள் நுழையும் அதிகாரம் பெற்ற திருடர்கள்.. அதேபோல் பித்தளை சிலையை வைத்துவிட்டு ஐம்பொன்சிலையை கடத்துவதாகவும்.. தமிழக கோவில்களில் 7000 கோவில்களில் டூப்ளிகேட் சிலைகள் தான் உள்ளன என்கிறார்
பொன். மாணிக்கவேல்.. இதற்காகதான் அறநிலையத்துறையை நாங்களே நிர்வகிப்போமென எச்.ராசா சொல்லி வருகிறாரா.. சிலைதிருட்டில் பாஜக தேசிய பொறுப்பில் உள்ளவருக்கு தொடர்பு இருப்பதாகவும் ..அதனால் தான் பொன்.மாணிக்கவேல் அவசர அவசரமாக ரயில்வேதுறைக்கு மாற்றபட்டதாகவும் செய்திகள் வருகின்றன ..இது குறித்து திமுக போராட்டத்தை நடத்த வேண்டும்.. சட்டமன்றத்தில் முதல்வர் சொன்ன பதிலுரை திருப்தியாகவே இல்லை வழக்கம் போல நீதிமன்றத்தில் இருக்கிறது.. பொன்.மாணிக்கவேல் அரசுக்கு ஒத்துழைக்கவில்லையென்கிறார்.. ஆம் அரசுக்கு ..ஒத்தூதவில்லை அவர்..சிலை திருட்டிற்கு காரணமாக உள்ள பாப்பான்களை காப்பாற்ற அரசு முயல்கிறது
திருசெந்தூர் முருகனின் வேல் காணமல் போனதற்காக .. நீதிகேட்டு நெடும்பயணம் நடத்திய வரலாறெல்லாம் உண்டு.. இந்த சிலை கடத்தலில் தொடர்புடையவர்கள் டெல்லி வரை செல்வாக்கு பெற்றியிருப்பதாக சொல்லபடுகிறது..
எதற்காக நாங்களே நிர்வகிக்கிறோமென சொல்கிறார்கள் என்பதன் பொருள் இப்போது விளங்கும்.. சிலை திருடர்களை அடையாளம்காண வேண்டும்..
..
கோவில் கூடாதென்பதல்ல கொடியவரின் கூடாரமாய் ஆககூடாது..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Posts (Atom)