Monday, February 27, 2017

சாவில் சந்தேகம்..

ஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கிறார்.. மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதே அரைஉயிரோடுதான் இருந்திருக்கிறார் என்கிறார் பொன்னையன்.. இவர்தான் ஜெயலலிதா இட்லி சாப்பிடுகிறார் என்று சொன்னவர்.. இப்போது நீதிவிசாரணை வேண்டுமென கேட்கிறார்.. சசிகலாவோடு இருந்தபோது சந்தேகம் வரவில்லை வெளியேறி ஓபிஎஸ்ஸோடு இணைந்தபிறகு வந்த சந்தேகம்.. சொல்பவர் நம்பிக்கைக்குரியவர் இல்லை.. திரு.பன்னீர் கூட சசிகலாவோடு இருந்தபோது அமைதிகாத்துவிட்டு இப்போது கூக்குரலிடுகிறார்.. இவர்கள் நம்பகதன்மை இல்லாதவர்கள்.. .. ஆனால் ஆரம்பம் முதலே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே எழுந்த சந்தேகங்களை தெளிவிப்படுத்த அரசு முன்வரவேண்டுமென #கலைஞர் அவர்கள் புகைப்படத்தை வெளியிட சொன்னார் .. ஊடகங்களும் அதிமுகவினரும் பெண் என்றும் பாராது போட்டோ கேட்பது நியாயமா என ஒப்பாரிவைத்தார்கள்.. ஏற்கனவே சட்டசபையில் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியேறியவர் மருத்துவமனையில் இருந்தபோது புகைப்படமெல்லாம் எடுத்து செய்திதாள்களில் வெளிவந்ததை சுட்டிகாட்டினோம்.. ஆனால் யாரும் செவிமடுக்கவில்லை.. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு மக்கள் மனதில் சந்தேகம் எழ தொடங்கியதும் திமுக நீதிவிசாரணைவேண்டுமென்று கேட்டது முரணான தகவலை தந்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதால் மக்கள் உண்மையை அறிந்துக்கொள்ளவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தியது திமுக தான்.. அன்றைக்கு அதிமுகவினர் கேட்கமறுத்து இப்போது கேட்கிறார்கள் இப்போதாவது விசாரணை கேட்கிறார்களே .. .. ஆரம்பம் முதலே நிறைய சந்தேகங்கள் அப்போலோ அறிக்கையில் முரண்.. பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு கருத்தை சொன்னது.. இறந்தே வந்தார் என சிலர் சந்தேகங்களை எழுப்பியது.. இறுதியாக உயர்நீதிமன்றத்தில் அப்போலோ தாக்கல் செய்த அறிக்கை சந்தேகத்தை மேலும் வலுவடைய செய்கிறது.. செயற்கைசுவாச கருவிகள் தானாக அகற்றப்பட்டதால் ‍‍‍‍‍ .. என அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது..செயற்கை சுவாச கருவி தானாக எப்படி விலகும்.. அகற்றப்பட்டதென்றால் யார் அகற்றியது.. மருத்துவர் பரிந்துரையா.... அல்லது வேறு யாரேனும் அகற்றினார்களா.. அறிந்து கொள்வது தமிழக மக்களின் உரிமை.. ஜெயலலிதாவை பிடிக்காமல் கூட இருக்கலாம்.. ஆனால் தமிழகத்தினி முதல்வர் அவரின் சாவில் உள்ள சந்தேகம்/மர்மம் தெரியவேண்டியது அவசியம்.. .. பன்னீரும் பொன்னையனும் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல.. சந்தர்ப்பவாதிகள் மறுப்பதற்கில்லை.. ஆனால் திமுக கேட்கிறது.. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி கேட்கிறது அதற்கு உரிமையும் தகுதியும் இருக்கிறது.. திமுக மக்களின் உணர்வை சந்தேகதத்தை கேட்கிறது சாவில் என்ன நடந்தது .. உண்மை வெளிவரவேண்டும்.. .. #உண்மை_நீண்டநாள்உறங்காது…… .. தோழர் ஆலஞ்சி...

Sunday, February 26, 2017

வாழ்த்துகள் பேராசிரியரே..

பேராசிரியர்.. பெருந்தகை காதர்மொய்தீன் அவர்கள் அகிலஇந்திய IUML தலைமைக்கு தேர்வாகி இருக்கிறார். வாழ்த்துகள் பேராசிரியர் அவர்களே. நீண்டகாலம் கழித்து கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களுக்கு பிறகு தலைமை பதவி தேடிவந்திருக்கிறது.. #மகிழ்ச்சி .. இருவருக்குமே ஒரு ஒற்றுமை உண்டு மிக எளிமையானவர்கள் பொதுவாழ்வில் மிக தூய்மையானவர்கள் வரிசை இடம்பெற்றவர்கள்.. மெத்தபடித்தவர்கள் அதை வெளிகாட்டி மேதமையை பறைச்சாட்டாத பண்பாளர்கள்.. இருவருமே #திராவிடர்கள்.. .. இடைப்பட்டகாலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கில் அதிகாரபகிர்வில் சில சலசலப்புக்கள் வந்ததுண்டு.. இபுராகிம்சுலைமான் சேட் காலத்தில் ஏற்பட்ட பிளவு அதன் பிறகு அது சில மாநிலங்களில் கூட எதிரொலித்தது.. பனாத்வாலாவை ஏற்றுக்கொள்ள மறுத்து கைரளியர்கள் பிடியில் சொல்லப்போனால் குறிகிய வட்டத்திற்குள் சுருங்கிவிடுமோ என என்னைப்போன்றவர்கள் அஞ்சிய வேலையில்தான் மேதகு காதர்மொய்தீன் அவர்கள் தலைமை பொறுப்பிற்கு தேர்வாகி இருக்கிறார்.. முஸ்லீம் லீக்.. குறிப்பாக இஸ்லாமிய சமுதாயம் சோதனையான காலகட்டத்தை கடந்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்திய தலைமையை ஏற்கிறார்.. சிறந்த கல்வியாளராக.. சிறந்த நாடாளுமன்றவாதியாக தன்னை நிரூபித்தவர்.. மென்மையான போக்கும் கொள்கை உறுதியும் அதைவிட எளிமையும் நேர்மையும் கொண்டவர்.. எவர் வேண்டுமானாலும் எப்போதுவேண்டுமானாலும் அணுகமுடிகிற தலைமை பதவியை ஒருபோதும் நாடியதில்லை சிலரை போல தனக்குதான் வேண்டுமென அடம்பிடிக்காதவர் தனக்கு தரப்பட்ட எம்பி தேர்தலுக்கான வாய்ப்பை கூட மற்றவர்களுக்கு விட்டு கொடுத்தவர்..எனக்கு தெரிந்து இஸ்லாமிய இயக்கங்களில் மிகவும் மரியாதைக்குரியவராக எல்லோரும் விரும்புகிறவராக இருக்கிறார்.. முந்தையகாலக்கட்டங்களில் அதிகார பகிர்வாக ஏற்பட்ட விரிசல்களைப்போல இல்லாமல் தனக்கு பதவிவேண்டுமென்பதற்காக தன்மானத்தை இழந்து நிற்காமல் இவருடைய அரசியல் பயணம் தன்மானம் மிகுந்த நேர்மையானதாக கொள்கை உறுதியோடு கூடிய அரசியலாக இருந்திருக்கிறது.. சில இஸ்லாமிய தலைவர்கள் விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கிறார்கள்.. ஆனால் பேராசிரியர் எதையும் மிக சரியாக செய்கிறவராக/செயல்படுகிறவராக இருந்திருக்கிறார்.. நீண்டகாலத்திற்கு பிறகு ஒரு நல்லதேர்வு.. வாழ்த்துக்கள் IUML நிர்வாகிகளுக்கு.. .. #Congratulations_Professor.. வாழ்த்துகள் பேராசிரியர் காதர்மொய்தீன் சாப் .. தோழர் ஆலஞ்சி

அறிவிலிகள்

ஜெயலலிதா மறைவிற்கு காரணம் கருணாநிதிதான்.. அறிவுலகமேதை தம்பிதுரை.. ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பியதால்தான் செத்தார் என்கிறார்.. ஒரு மனிதருக்கு மரணம் என்பது தவிர்க்கமுடியாதது.. ஆனால் ஒருவர் மறைந்தபின் எதிரிகளை விட கூட இருந்தவர்கள் இவ்வளவு அசிங்கப்படுத்துவார்கள் நான் எண்ணியதில்லை.. நிரந்தர பொதுசெயலாளரென சும்மாதான் சொன்னோம் என்பதில் தொடங்கி இரும்பு பெண்மணி என ஊடகங்கங்ள் கட்டமைத்த போலியான பிம்பத்தை சுக்குநூறாக்கி ஜெயலலிதா கோழை என சொல்லாமல் சொல்கிறார்கள்.. கருணாநிதி தொடர்ந்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்றதால் மனஉளைச்சலுக்கு ஆளாகி மரணத்தை தழுவினார் எனும் பொருட்பட பேசியிருக்கிறார்.. இந்த தம்பிதுரை.. ஜெயலலிதா இருந்தபோது அருகில் குனிந்து நின்று கூழைகும்பிடு போட்டவர்.. இப்போது சசிகலாவை உயர்த்தி பிடிக்கவேண்டுமென்பதற்காக ஜெயலலிதாவை கேவலப்படுத்தியிருக்கிறார்.. .. .. உண்மையில் ஜெயலலிதா பயந்தவர்தான் ஆனால் இவர்கள் சொல்கிற அளவிற்கு வலிமையில்லாதவர் இல்லை வழக்கில் சிக்கவைத்துவிட்டார்களே என கூடயிருந்தே குழிப்பறித்துவிட்டார்களே என்ற மனநிம்மதியில்லாமல் கடைசிகாலத்தை கழித்திருக்கிறார்.. உடல் ஒத்துழையாமையும் தொடர் சிகிக்சையும் யாரையும் நம்ப முடியாமல் போன இறுதிகாலம் பாவம் பகைவருக்கும் வரகூடாது.. எங்கள் எதிரிதான் எங்கள் இன பகைவர்தான் மறுப்பதற்கில்லை.. அதனால் தான் மறைந்தபோதே சொன்னோம்.. நீங்கள் ஆளகூடாதென்றுதான் நினைத்தோம்.. வாழகூடாது என்றல்ல என இரங்கல்பா எங்களால் பாட முடிந்தது.. .. ஒவ்வொன்றாக வெளிவருகிறது ஜெயலலிதா மரணம் குறித்த சேதிகள் அதை திசைதிருப்ப கருணாநிதியை திமுகவை பழிச்சொன்னால் நம்பிவிடுவார்கள் என எண்ணி தம்பிதுரை உளறியிருக்கிறார்.. இவரது பேச்சை அதிமுககாரனே நம்பதயாரில்லை என்பதைதான் அதிமுக சசிதரப்பு எம்எல்ஏக்களை விளக்குமாறு கொண்டும் செருப்பை வீசியும் அமைச்சரென்று பாராது சீனிவாசன் வேட்டியை உருவியும் அதிமுககாரனே எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்.... .. பாவம் தம்பிதுரைகள் இப்படி ஏதேனும் உளறிவைத்தால்தான் இருக்கிற காலத்தில் ஏதாவது தேறும்.. #பரிதாபகரமானநிலை..

Saturday, February 25, 2017

தோழர்களில் ஒரு கருப்பு ஆடு

அதிமுக ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் மறைமுகமாக முயற்சி செய்கிறார்.. தா.பாண்டியன்.. யாரென்று தெரிகிறதா.. சசிகலாவிற்கு ஜெயிலில் கறிசோறு போடணும்ன்னு சொன்ன பேரறிவாளர்.. காம்ரேட்களில் கருப்பாடு இந்த தாபா.. மறைமுகமாக அல்ல நேரடியாகவே இந்த ஆட்சி அகற்றப்படவேண்டும் கிரிமினல் சசிகலாவின் ஆலோசனையின் பெயரில் நடைபெறும் ஆட்சியிது இது ஜனநாயகத்திற்கு விரோதமானது என வெளிப்படையாக சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்தில் போராடுவதோடு இல்லாமல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருப்பவர்.. எதையும் நேரடியாக நெஞ்சம் நிமிர்த்தி போராடுவதுதான் திமுகவிற்கு தெரியுமே தவிர தா.பா.போல கம்யூனிஸ்ட் என்ற போர்வையில் திரைமறைவு அரசியல் செய்கிற கேடுகெட்டத்தனம் திமுகவிற்கு எப்போதும் இருந்ததில்லை.. .. முதலில் இந்த கம்யூனிஸ்ட்காரர் ( கம்யூனிஸிட்காரர்தானா என்பது வேறுவிடயம்) என்ன சொல்ல வருகிறார் கிரிமினல் என்று உச்சநீதிமன்றத்தால் இறுதியிட்டு அடையாளம் காட்டபட்ட சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் கையில் அதிமுக இயங்குவதை விரும்புகிறாரா.. கிரிமினல் சசிகலா ஆலோசனையின் பேரில் நடத்தப்படும் ஆட்சி தொடரவேண்டுமென்று நினைக்கிறாரா.. எத்தனையோ கைதிகள் சிறையில் கழி தின்கிற போது சசிகலாவிற்கு மட்டும் கறிசோறு போடவேண்டுமென்பது ஏன் ..சிறை கைதிகள் அனைவருக்கும் மூன்று வேளையும் வடை பாயசத்தோடு விருந்துவைக்கவேண்டு கோரிக்கை வைக்கவேண்டியதுதானே..மக்களிடம் திட்டம் போட்டு திருடி சிலரை அதிகாரத்தை காட்டி மிரட்டி 210 சதவிகிதத்திற்கு மேல் கணக்கில் வந்தது இவ்வளவுதான் வராதது எவ்வளவென்று தெரியவில்லை கொள்ளையடித்த கொள்ளைக்காரியை ஆதரப்பது எந்தவகை ஜனநாயக அரசியல்.. ஒருவேளை சாதிபாசமா என தெரியவில்லை அப்படியிருந்தாலும் அது வெட்ககேடானது இல்லையா.. தோளில் கிடக்கும் சிவப்பு துண்டை தூக்கியெறிந்துவிட்டு வந்து பேசியிருக்கலாம்.. .. தோழர்கள் மீது இருக்கும் மரியாதை இவரை போன்ற சில கருங்காலிகளால் சிதைந்து போகிறது.. முதல் குற்றவாளி ஜெயலலிதாவையும் அவருக்கு துணையாய் இருந்த இரண்டாவது குற்றவாளி சசிகலாவையும் ஆதரிப்பதென்பது அயோக்கியத்தனமான செயல்.. அதிமுகவினர் போன்ற விவரகேடர்களிடமிருந்து வந்திருந்தால் கூட கண்டுகொள்ளாமல் புறம்தள்ளிவிடலாம் .. பொதுவுடமை பேசும் தங்களை அறிவுஜீவிகளாக காட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்ட்களிடமிருந்து இதுபோன்ற கருத்துக்கள் வருவது அரசியல் களங்கம் Political stigma.. Comrade T. Pandian a black sheep தோழர் தா.பாண்டியன், ஒரு கருப்பு ஆடு.. .. #அரசியல்களங்கம்_Political_stigma… .. தோழர் ஆலஞ்சி

தலைமை செயலரின்.. செயல்

எதிர்க்கட்சி தலைவர் மாண்பிமை ஸ்டாலின் அவர்கள் தலைமைசெயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி எனஇறுதிதீர்ப்பில் சொல்லப்பட்ட.. ₹100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட செல்வி ஜெயலலிதாவின் படங்கள் அரசு விளம்பரங்களிலோ அல்லது அவர் பெயரில் திட்டங்கள் நடைமுறை படுத்துவதோ இந்திய அரசிலமைப்பு சட்டத்திற்கு எதிரானது..அவரது பிறந்தநாளை அரசே கொண்டாடியது சட்டப்படி குற்றம் ..அதை தலைமைசெயலரின் பெயரில் விளம்பரம் செய்ததும் குற்றம்.. என நேரில் விளக்கி கடிதம் அளித்திருக்கிறார்.. அதோடு இதுபோன்ற இனி நடக்குமெனில் சட்டரீதியாக வழக்கு தொடரப்படும் என எச்சரித்திருக்கிறார்.. .. தலைமைசெயலராக இருக்க திருமதி கிரிஜா வைத்தியநாதன் அருகதையை இழக்கிறார்.. உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என தெரிந்தும் அவரது படத்தை தன் கையில் தூக்கிக்கொண்டு நிற்பது தவறு என தோன்றவில்லையா.. இந்திய அரசிலமைப்புக்கு எதிராக செயல்படுபவர் உயரிய பதவில் இருக்க தார்மீகமாகவும் சட்டப்படியும் தகுதியிழக்கிறார்.. தனிப்பட்ட முறையில் கிரிமினல் ஜெயலலிதாவோடு கரிசனம் தோன்றியிருக்கலாம் அது மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்து ஆர்ப்பார்ட்டமாய் விழா எடுப்பது எந்த விதத்தில் நியாயம்.. திருமதி கிரிஜா அவர்களை பதவிநீக்கம் செய்வதுதான் சரி.... .. அரசை இயக்குபவர்கள் அறிவிழந்து ஏதோவோரு ஆசையில் சட்டத்தை அறியாமல் செய்கிறார்கள் என்றால் இந்திய அரசுப்பணியில் நீண்டகாலம் அனுபவம் கொண்டிருக்கும் தலைமைசெயலராக பதவி உயர்வை குறுகிய காலத்தில் பெற்றிருக்கும் கிரிஜா அவர்கள் அரசுக்கு விளக்கியிருக்கவேண்டாமா..அல்லது எனது பேச்சை கேட்கவில்லை இந்த அரசு என விளக்கம் அளித்திருக்கவேண்டாமா.. அப்படி அறிக்கையை உள்துறைக்கு அனுப்பியிருந்தால் இந்த அரசு செயல்பட ஒரு நொடி கூட அனுமதியில்லை.. இதையெல்லாம் ஆலோசித்துதான் எதிர்க்கட்சி தலைவர் நேரடியாகவே தலைமைசெயலரை சந்தித்து அவரின் தவறுகளை கவனித்திற்கு கொண்டுவந்திருக்கிறார்.. இது தெரியாத கூமுட்டைகள் அரசியல் அறிவிலிகள் .. மறைந்த ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக கூச்சலிடுகின்றன.. முதலில் கிரிமினலை புகழ்ந்து கொண்டிருந்தாலே சட்டப்படி கட்சியின் அங்கீகாரத்தை கூட ரத்து செய்யவேண்டுமென தேர்தல் ஆணாயத்திடம் கேட்கலாம்..ஏனெனில் கிரிமினல்கள் போட்டியிட இந்திய தண்டனைச்சட்டம் கடுமையான விதிகளை தந்திருக்கிறது.. கிரிமினலை புகழ்ந்து கட்சி நடத்துவதும்கூட தவறு என முறையிட எதிர்க்கட்சிகளுக்கு உரிமையும் கடமையும் உள்ளது.. .. கிரிமினல் ஜெயலலிதாவின் பெயரோ புகைப்படமோ அரசிதழ்களிலோ அரசு விளம்பரங்களிலோ இடம்பெறுவது சட்டப்படியான குற்றம்.. என்பதை புரிந்துக்கொண்டு ..சிலர் தளபதியை பார்த்து குரைப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.. ஏனெனில் தளபதி #சூரியபுத்திரன்.. .. #எச்சரிக்கை.. .. தோழர் ஆலஞ்சி

Friday, February 24, 2017

அரசியல் கேலிகூத்து..

தமிழகத்தில் மட்டும்தான் நினைத்த நேரத்தில் சட்டென்று ஒரு கட்சியை துவங்கிவிடமுடியும்.. அவரை சுற்றி பத்துபேர் கைதட்டி உசுப்பேற்றி குட்டிசுவராக்கி தெருவில் நிற்கவைக்கமுடியும்.. இது சாபகேடு.. .. பொதுவாழ்விற்கு யார்வேண்டுமானாலும் வரலாம் என்பதை தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள்..ஆரம்பகாலங்களில் பண்ணையார்களும் படித்தவர்களும் வசதியுள்ளவர்களும் அரசியலை தங்களின் கௌரவமாக கருதியதால் சாமானியர்கள் பங்களிப்பு என்பது அரசியலில் குறிப்பாக அதிகார அரசியலில் இல்லாமலே போனது.. நீதிக்கட்சியின் வரவிற்கு பிறகுதான் அது சாமானியர்கள் பங்களிப்பு வேண்டுமென்றும்.. அதுவும் குறிப்பாக மிகவும் பின்தங்கிய சமூகத்திலிருந்தவர்கள் தொண்டுள்ளத்தோடு சமூகசேவையை தொடங்கவேண்டுமென்பதற்காக அனைவரையும் அரவணைத்து செல்லவேண்டுமென்பதற்காக அரசியலில் அனைவரும் பங்கேற்கவேண்டுமென சொல்லப்பட்டது.. இந்தியா விடுதலை அடைந்த போது கல்வியறிவு இல்லாதவர்களுக்கு ஓட்டுரிமை தரகூடாது என்று ஆங்கிலேயர்கள் சொன்னபோது அவர்களின் பங்களிப்பும் சேர்ந்தது தான் ஜனநாயகம் என்றார் நேரு.. .. அரசியலுக்கு யாருவேண்டுமானாலும் வரலாம் கல்வியறவு பணம் அந்தஸ்து வேண்டுமென்பதில்லை ஆனால் மக்களின் பிரச்சனைக்காக போராடியவராக மக்களின் எண்ணவோட்டங்களை பிரதிபலிப்பவராக .. மக்களுக்கு சிறியளவிலேனும் சேவை செய்கிறவராக இருக்கவேண்டும்.. தனக்கு ஏதேனும் இழப்பு ஏற்படுகிறது என்பதற்காக தன் சொந்த பிரச்சனையை தீர்த்துக்கொள்ள அரசியலுக்கு வருவது .. கடைசியில் முகம் கவிழ்ந்து குப்புறவிழவேண்டிவரும்.. திரு.விஜயகாந்த் தன் சொந்த கட்டிடம் இடிக்கப்படுகிறது என்பதற்காக அரசை எதிர்த்து ..பின் கட்சி தொடங்கி கடைசியில் கரைந்து போய் நிற்கிறார்.. .. அரசியலில் சுயநலமே இல்லையா கூடாதா என கேட்டால் இருக்கிறது அது பொதுநலன் சார்ந்தும் இருக்கவேண்டும்.. கலைஞரின் வசனம் நியாபகத்திற்கு வந்தது ..தன் உணவிற்காக அழுக்கை தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன் அதைப்போல.. பொதுவாழ்வில் வருகிறவர்கள் .. இருக்கவேண்டும்.. .. நினைத்தநேரத்தில் கட்சி துவங்கி .. பேரம் முடிந்ததும் கடைசியில் கம்பெனியை காலி செய்வதுபோல களைத்துவிட்டு எதுவுமே நடக்காததுப்போல இருப்பார்கள்.. கொள்கைக்காக இனம் மொழி சமூகநீதிக்காக தொடங்கபடுகிற இயக்கங்கள் மட்டுமே காலத்தை கடந்தும் நிலைத்து நிற்கும் எவ்வளவு எதிர்ப்பிருந்தாலும் எத்தனையோ துரோகிகளை கண்டாலும் அத்தனையும் மீறி காலம் வழிநடத்த சிறந்த தலைமையை காட்டும்.. .. இடையிடையே சிலகட்சிகள் தோன்றி மறையும்.. அவையாவும் சொந்தநலனுக்காக தொடங்கப்பட்டவைகள்.. இப்போதுகூட புதிதாய் பேரவை வந்திருக்கிறது.. அதிக காலம் நீடிக்காது காரணம் அதற்கென்று எந்த கொள்கையும் இல்லை.. வேறென்ன சொல்ல.. இதெல்லாம் காலக்கொடுமை.. .. #mad.. .. தோழர் ஆலஞ்சி

Thursday, February 23, 2017

அரசியல் மையம்

சற்று கூர்ந்து கவனியுங்கள்.. தமிழக அரசியல் தளபதி.திரு.ஸ்டாலினை சுற்றியே நகர்கிறது முன்பு கலைஞரை மையப்படுத்தி இயங்கி கொண்டிருந்த அரசியல் .. தளபதி செயல் தலைவரான பிறகு அவரை மையப்படுத்தி இயங்க தொடங்கியிருக்கிறது.. இனி அரசியலில் சிலரின் பிழைப்பு தளபதியால் தான் அவரை எதிர்த்தோ பாராட்டியோ,விமர்சனம் செய்தோ காலம் கடத்த வேண்டும் இல்லையெனில் அவர்கள் அரசியல் பிழைப்பு அஸ்தமனமாகிவிடும்.. .. வைகோ முதல் இன்றைக்கு வாய் திறக்கும் சிங்கப்பூர் தினகரன் வரை.. பாவம் வேறுவழியின்றி ஸ்டாலின் பெயரை உச்சரித்தால்தான் மக்கள் நியாபகம் வைத்திருப்பார்கள் இல்லையென்றால் யாரென்றே தெரியாமல் போய்விடுவார்கள்.. என்பதாண்டுகால பொதுவாழ்வில் ஏறக்குறைய அறுபதாண்டுகாலம் தன்னைச்சுற்றி அரசியல் காலச்சக்கரத்தை இயங்கவைத்த #ஆண்டவன் கலைஞர் அவர்கள்.. இதோ இப்போது தன்னைச்சுற்றி அரசியலை இயங்கவைத்து திமுகதான் தமிழக அரசியல் திமுகதான் தமிழ்சமூகம் திமுகதான் மொத்ததில் தமிழ்நாடு என பொட்டில் அடித்தாற்ப்போல் தன் செயல்பாட்டால் மிளிர்கிறார் தளபதி.. .. வீண் போகவில்லை கலைஞரின் வார்ப்பு .. திராவிட இயக்கம் தன் நான்காவது சுற்றை சுற்ற ஆரம்பித்திருக்கிறது.. ஆரம்பத்திலேயே சிலர் பித்துபிடித்து அலைகிறார்கள்..இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டினால் இருக்குமிடம் தெரியாமல் ஞானிகளும் நடனராஜாக்களும் அழித்தொழிக்கப்படுவார்கள்.. ஆனால் நிதானமாய் ஒவ்வொரு அடியும் எதிர்களுக்கும் துரோகிகளுக்கும் ஆழ குழித்தோண்டி புதைக்க ஏதுவாக இருத்தல் வேண்டும்.. ஆம் மரண அடி.. .. தமிழகத்திற்கு எப்போதும் சரியான தேர்வு திமுகதான் இனம் மொழி சமூகபாதுகாப்பு சமூகநீதி... இவையெல்லாம் காக்கபடவேண்டுமெனில் அறிவுடை சமூகமாய் தமிழ் சமூகம் மிளிர வேண்டுமெனில்.. அரசியலில் துர்நாற்றத்தை போக்க வேண்டுமெனில் கிரிமினல்கள் கைகளிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டுமெனில் ... தளபதியின் தலைமை அவசியம் அதுவும் அவசர அவசியம்.. .. செயல்படும் தலைவராக வலம் வருவதால்தான் எதிரிகள் தளபதியை மையப்படுத்துகிறார்கள்.. பாவம் தளபதி பெயரை உச்சரித்தால் மட்டுமே அரசியல்வாழ்வு.. இல்லையெனில் காலுடைந்த நடராஜனைப்போல அரசியலில் ஆடமுடியாது.. அரசியல் பிழைப்பிற்காக ஏதேதோ உளறுகிறார்கள்..எதிரிகள் சொல்லும் செயலும் தளபதி சரியான பாதையில் பயணிக்கிறார் என்பதும் நாட்டிற்கு விடிவு விரைவில் வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.. நல்லகாலம் பொறக்குது என நம்பலாம் .. #நல்லகாலம்பொறக்குது_நல்லகாலம்பொறக்குது.. .. தோழர் ஆலஞ்சி

சிதறும்..

சிலநேரம் கூத்து ரசிக்கும்படியாக இருக்கிறது.. அதிமுக வலுவிழந்து வருவது மகிழ்ச்சி தந்தாலும் சங்கடத்தை வருவதை மறுப்பதற்கில்லை..எல்லோரும் பூஜ்யங்கள் என்று ஒருமுறை ஜெயா சொன்னது சரியென்றே தோன்றுகிறது.. அப்போதுகூட திருநாவுகரசு அதை ஆமோதித்தார்.. ஒன்றோடு சேரும் பூஜ்யம் மதிப்பை கூட்டும் என்றார்.. ஒன்று போனபின் பூஜ்யங்கள் பூஜ்யங்களாகவே இருக்கிறது.. சுதந்திர போராட்டத்தில் சிறை சென்றவர்களோடு கொள்ளயடித்து தண்டனைப்பெற்ற கிரிமினல் ஜெயலலிதா ஒப்பிட்டு பேசும் போதும்..எத்தனைமுறை காரி உமிழ்ந்தாலும் காசு ஒன்றே குறிக்கோளாய் நடக்கும்,இந்த நடைபிணங்களால் தமிழகம் மரியாதை இழந்து நிற்கிறது.. .. நீண்டநாட்கள் உண்மையை மறைக்க முடியாது.‍. அதேபோல் எல்லோரையும் பணம்கொண்டு வாங்கிவிட முடியாது பணத்திற்காக மௌனமாக இருப்பவர்கள் அல்லது வளைந்து கொடுப்பவர்கள் தமக்கு சேரவேண்டியது சரியாக கிடைக்காத பட்சத்தில் எதிராவார்கள்.. தீபக் அப்படிதான் என்று நினைக்கிறேன்.. நேற்றுவரை மௌனமாய் இருந்தவர் தினகரனை காரணம் காட்டி வசனம் பேசுகிறார்.. இதுவரை செய்ததை சரியென்கிறாரா.. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இப்போது வருவது ஏன்.. நேற்றுவரை #சசிஅத்தையாக இருந்தவர் இன்று என்ன ஆனார்.. ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதைபற்றி அறிய தீபக்கிற்கு முழு உரிமையும் இருக்கிறது ஆனால் இதுவரை காலம் தாழ்த்தியது ஏன்.. எது இப்போது தூண்டியது.. ஜெயலலிதா இருந்தபோது கட்சியில் சேராதது ஏன்.. கட்சி விடயங்களில் பங்குபெறாதது ஏன்.. .. இப்போது கூட காலம்கடந்துவிடவில்லை.. அத்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சிபிஐ விசாரணை கேட்டு உயர்நீதிமன்றத்தை அணுகலாம்.. இரத்தசொந்தம் என்பதால் நீதிமன்றமும் கணக்கில் கொள்ளும்.. மாறாக வழக்குதேவையில்லையென நினைப்பாரேயானால் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து அது சசிகலாவிடமிருந்து கிடைக்காமல் போனதால்தான் என மக்கள் நினைக்ககூடும்..,இப்போதுகூட வாய்திறந்திருப்பது கிடைக்கவேண்டியது கிடைக்கவில்லை என்பதால்தான் என பேச்சு அடிபடுகிறது.. .. அதிமுக சிதைவது மகிழ்ச்சியென்றாலும் எங்கள் எதிரியின் மரணம் குறித்த கவலை எங்களுக்குமுண்டு.. நிச்சயமாக காலம் உண்மைகளை வெளிக்கொணரும்.. .. #காத்திருப்போம்_என்றைக்கும்உண்மைஉறங்காது.. .. தோழர் ஆலஞ்சி

Monday, February 20, 2017

எனது களம்..

நான்... .....எனது களம்.. சிலநேரம்.. சூடாவேன்.. சுவை தருவேன். மழையாவேன்.கவி .. மழையாவேன்.. சுடர் ஆவேன். சுட்டெரிப்பேன். ஆர்பரிப்பேன்.. அடங்கா..திமிராவேன் அலை ஆவேன்..சில நேரம்..கலையாவேன்.. ஆடும் மயிலாவேன்.. தமிழ் பாடும் குயிலாவேன். எதிரியை..கண்டால்..சிலம்பெடுப்பேன்.. தமிழ்..சிலம்பெடுப்பேன். எனை தாக்கினால்.. பொறுத்தருள்வேன் என் தமிழையெனில் .. தலை கேட்பேன். தமிழ் என்றால்.. வேழம் மீதேறி வருவேன் வெற்றிக் கொடி நாட்ட #எனதுகளம் தமிழாய்..தேனாய்.. சுவைக்கும்.. சிலநேரம்.. துவர்க்கும்.. வேம்பாய்.. ஆனாலும்..மருந்தாய். ஆரிய எதிர்ப்பாய் அமைதி கடலாய். அலங்கார திமிராய்.. அடங்கும் அன்பாய் தமிழ் தேராய். தாலாட்டும்..இசையாய் கதை பேசும் . காமம் சொல்லும் கவி தரும். காவியம் சொல்லும் இயல்பாய் எதிரிகளை.. சூறையாடும் தமிழ் வேலாய்.. எனது களம்.. தேடலின்..தொடர்.. முடிவில்லா நெடுந்தொடர் .. .. தோழர் மன்சூர்

தளபதி...

தளபதி.. மிக பக்குவப்பட்ட பேச்சு.. மிக தெளிவாக மிகவும் நாசூக்காகவும் பேசினார் கிரிமினல்களின் கையில் நாடு போயிருக்கிறது அதை எல்லோரும் சேர்ந்து எதிர்க்கவேண்டும் என்ற போதே அவருக்குள்ள அக்கறையை பார்க்கமுடிந்தது.. ஆசிரியர் பற்றிய கேள்விகளுக்கு நான் மதிக்கிற ஒருதலைவர் என்ற சொன்னதின் மூலம் உயர்ந்துநிற்கிறார்.. அதைவிட வைகோவை ஞானி என்றழைத்து யாரை எங்கே வைக்கவேண்டுமென்று தெரிந்துவைத்திருக்கிறார்.. தன் கட்சியை சார்ந்தவர்கள் சபாநாயகர் இல்லாத போது அவரின் #சிம்மாசனத்தில் அமர்ந்ததை கண்டித்ததோடு இதுபோன்று இனி நடக்ககூடாது என எச்சரித்திருக்கிறேன்..என்றார்.. ஒருதலைமை எப்போது கண்டிப்போடு நடந்துக்கொள்ள வேண்டுமென்று அறிந்து தலைவராக உயர்ந்து நிற்கிறார். .. சட்டசபையில் நடந்ததைப் பற்றி விளக்கும் போது ஒன்றை சொன்னார்... அதிமுக மந்திரி ஒருவரே எங்களை செருப்பால் அடித்தாலும் நாங்கள் எந்தவித எதிர்ப்பையோ கோவத்தை காட்டாமல் அமைதியாகதான்,இருந்திருப்போம் என்று சொன்னதை மேற்கோள் காட்டினார்.. இதிலிருந்தே அவர்கள் எப்படியேனும் என்னநடந்தாலும் அமைதியாக இருக்கவேண்டுமென்பதில் குறிப்பாக உணர்வற்ற பிண்டத்தைப்போல எஜமானின் விசுவாசமாக வாங்கிய காசிற்கு சரியாக நடந்துக்கொண்டிருக்கிறார்கள்..இந்துராம் சொன்னதைப்போல எதற்கெடுத்தாலும் துள்ளிகுதிப்பவர்கள் அமைதியாக இருந்தார்கள் கோடிகணக்கில் பணமும் தங்கமும் வாயடைத்திருக்கிறது.. .. திமுக இனி சட்டபோரட்டத்தை கொள்வதும் மக்களிடையே இந்த கிரிமினல் சசிகலாவின் ஆலோசனையில் நடைபெறும் ஆட்சியை எடுத்து சொல்லவேண்டும் மக்கள் மனதில் சசிகலா மீதான வெறுப்பை அதிமுக மீதான மக்களின் எரிச்சலை மங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்..சட்டரீதியான போராட்டத்தை .. அறவழி போராட்டத்தை மிக வேகமாக கையிலெடுக்கவேண்டும்.. இன்னொன்றுமிருக்கிறது.. கிரிமினல் ஜெயலலிதா படத்தை அரசு அலுவலங்களில் பயன்படுத்த தடைவாங்கவேண்டும்.. சசிகலாவையும் ஜெயலலிதாவையும் இனி கிரிமினல் என்ற அழைக்கவேண்டும் அதுதான் சட்டப்படியானதும் கூட..சரியும்கூட.. .. இனிதான் ஆட்டமே இருக்கிறது.. #சலங்கைகட்டிஆடுவோம்.. .. தோழர் ஆலஞ்சி

Sunday, February 19, 2017

பெரியாரை..நேசிக்கிறோம்

கீ.வீரமணி குற்றச்சாட்டுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது . அதை அவருக்கிட்டயே போயி கேளுங்க . மானமிகு தளபதி ஸ்டாலின்.. இதை படிக்கிற போது கொஞ்சம் கோபம் கூட தோன்றலாம்.. ஆசிரியரை சசிகலாவிற்கு சமமாக வைத்திருக்கிருக்கிறாரோ என்று கூட தோணும்.. ஆனால் புறமிருந்து அம்பு வந்து தாக்குகிறபோது வரும் வலி பாருங்கள் அந்த வேதனை மனதில் ரணத்தை தீராத வலியை ஏற்படுத்தி மாறாத வடுவாகும்.. .. எல்லோரும் திமுகவை குறைகூற ஆசிரியரின் விமர்சனம் ஒரு காரணியாக அமைந்தது.. இரகசிய வாக்கெடுப்பு மற்றொன்று ஒருவாரகாலம் கழித்து நடத்தலாம்.. முதல்முறை ஒத்திவைத்தபிறகு திரு.ஸ்டாலின் காங்கிரஸ் உறுப்பினர் முஸ்லீம்லீக் அபுபக்கர் எல்லோரும் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை திரும்பபெற்றுக்கொள்கிறோம்.. ஆனால் சிலதினங்கள் கழித்து சபையை நடத்துங்கள் என்றதை வசதியாக ஊடகங்கள் கூட மறைத்து திமுக மீது பழியை போட முயற்சிக்கிறது.. முதலில் சமூகஆர்வலர்கள் ஊடகத்துறையினருக்கு ஒரேயொரு கேள்வி குற்றவாளியை வானுயுர புகழ்ந்து அவரின் வழிகாட்டுதல் படி அரசு இயங்குமென்றால் அதைவிட நேரடியாக சசிகலாவிற்கே பதவியை தந்திருக்கலாமே.. முதல்வர் முதல் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் வரை இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக ஏன் இறையாண்மைக்கு எதிராக குற்றவாளிக்களுக்கு வக்காலத்து வாங்குவது உங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா.. அறுதிப் பெரும்பான்மை இருக்கிறது என்பது தண்டனை கைதியை அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதை ஜனநாயகம் என்பீர்களேயானால் இந்த நாட்டிற்கு சர்வாதிகாரமே தேவை.. .. ஆசிரியருக்கு சிறிய தகவல் தயை கூர்ந்து சமூகப்பணிகளை மட்டும் பாருங்கள் சசிகலாவை ஆதரித்தபோதே .. அதற்கு தாங்கள் சொன்ன காரணம் பார்பனர்கள் ஓபிஎஸ்ஸை ஆதரிக்கிறார்கள் என்பதால் நாம் எதிர்க்கவேண்டும் என்ற பெரியாரின் சொல்லை பயன்படுத்தினீர்கள். பெரியார் சசிகலா போன்ற கிரிமினல்களுக்கு துணைபோக மாட்டார்.. சமூகநீதிக்கெதிரான பார்பனர்களின் பார்வையைதான் கடுமையாக எதிர்தாரே தவிர.. இது போன்ற செயல்களை பெரியார் எப்போதும் விரும்பியதில்லை.. சசிகலாவிற்கு பெரும்பான்மை இருப்பதாலோ.. அல்லது அவர் இடைசாதிகாரர் என்பதாலோ ஆதரிக்கவேண்டுமென்பதில்லை.. திமுகவின் நடவடிக்கைகளில் சில தவறுகள் ஆர்வமிகுதியில் ஏற்பட்டது சபாநாயகரின் நாற்காலியில் அமர்ந்ததெல்லாம்.. விமர்சனத்திற்குரியதென்றாலும் சசிகலாவெல்லாம் அமர்ந்த நாற்காலி என்கிற போது அது பெரியவிடயமாக தெரியவில்லை.. ஆர்வகோளாறில் சிலர் செய்தவற்றிக்கு ஸ்டாலின் சபாநாயகரிடம் வருத்தம் தெரிவித்தபிறகும் விமர்சிப்பது நாகரீகமானதல்ல.. மரம்தரும் கனிகளில் ஒன்றிரண்டு சுவை குறையலாம் ஆனால் அது மரத்தின் தவறில்லை.. சீதோஷ்ணநிலை, நீர்,காலம்,பருவம்.., இவைகளே பழத்தின் சுவையை தீர்மானிக்கிறது.. .. திமுக செயல்பாட்டை குறைகூறுவதாக எண்ணி ஜனநாயக படுகொலையை Democratic Massacre நியாயபடுத்துவது மகா கேவலம்.. .. பெரியாரை நேசிப்பதால் சொல்கிறோம் தங்களில் செயல் வெறுப்பை தருகிறது #disgusting.. .. தோழர் ஆலஞ்சி

Saturday, February 18, 2017

ஜனநாயகத்தின் கருப்புதினம்..

இன்றைய சபை நிகழ்வுகள் ஏற்புடையதாக இல்லை.. சபாநாயகர் அனைத்துக்கட்சிக்கும் சமமானவராக இருக்கவேண்டுமென்ற அடிப்படை கூட தெரியாதவராக இருக்கிறார்.. தன் செயலை நியாயபடுத்த தன்னை ஜாதி சொல்லி கேலிசெய்ததாக சொல்கிறார்.. சாதி தனக்கு கவசமாகும் என நம்புகிற தாழ்வுமனபான்மை தனபாலுக்குண்டு.. தன் கட்சி தலைமையிடமே இதை முறையிட்டுதான் தொடர்ந்து எம்எல்ஏவானார்.. .. எதிர்க்கட்சி சட்டமன்றத்தில் /நாடாளுமன்றத்தில் சபாநாயகரை சுற்றி நின்று கோசம் எழுப்புவது புதிதல்ல மாண்பிமை மம்தா பானர்ஜி கூட காதிகத்தை கிழித்து நாடாளுமன்றத்தில் எறிந்துவிட்டு சென்ற வரலாறு உண்டு.. சபாநாயகர் ஆரம்பம் முதலே ஏறக்குறைய 100 மேற்ப்பட்ட உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பை கேட்கிறபோது ஏறக்குறைய பாதிபேர் கேட்கிறபோது நடத்துவதுதானே முறை.. அதைவிடுத்து கட்சிகாரர் போல நடந்துக்கொண்டது மிக கேவலம்..அதுவும் தன் சட்டை கிழிக்கபட்டதாக சொன்னார் ஆனால் ஜெயா டிவி ஒளிப்பரப்பிய கிளிப்பில் கூட அவரை காவலர் அழைத்து செல்வது மிக அழகாக பதிவாகியிருக்கிறது ஆனால் அதில் சட்டை கிழியவில்லை.. கிழிந்ததாக பொய்யான தகவலை சபாநாயகர் சபையில் பதிவு செய்தது மட்டுமல்லாமல்.. தன் செயலை நியாயபடுத்த சாதியை துணைக்கழைக்கிறார்.. இது மிகவும் கீழ்தரமான செயல் இவர் சமுகத்திற்காக 3.5 % இடஒதுக்கீட்டை கொண்டுவந்தபோது மலத்தை சுமக்கும் இவர்களுக்கான இடஒதுக்கீட்டை கொண்டுவந்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறேன் என்றவர்.. இவரின் குற்றசாட்டில் துளியும் உண்மையில்லை.. ஜனநாயக படுகொலைக்கு பட்டியல் இனத்தவனே காரணமாய் இருந்தான் என்ற அவப்பெயர் வரலாற்றில் பதிந்துவிட்டது.. .. முழுவதுமாக எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு அதிமுகவினர் மட்டுமே சபையில் இருந்து சபையை நடத்தி வெற்றிபெற்றதாக அறிவிப்பது ஜனநாயகவிரோதம்.. ஜனநாயத்தில் ஒரு கரும்புள்ளி.. சபாநாயகரின் துணைக்கொண்டு ஜனநாயக படுகொலையை நிகழ்த்திருக்கிறார் இந்த அரசை ஜெயிலில் இருக்கும் கைதி இயக்கபோகிறாரா..இப்போது கூட முதல்வர் சின்னம்மாவின் புகழ்பாடுகிறார்.. அரசின் ரகசியங்கள் ஜெயலில் இருக்கும் கைதி அறிந்துக்கொள்வதும்.. ஒரு தண்டனை பெற்ற கைதி அரசை வழிநடத்துவதும் தான் ஜனநாயகம் எனில்.. அது #வீழ்ந்தேபோகட்டும்.. தேவை கவர்னர் பரிந்துரை.. dissolve the tn govt.. .. தோழர் ஆலஞ்சி

Friday, February 17, 2017

மிக மோசமான அரசியலில்

திமுகவின் நிலைப்பாடு.. ஜனநாயகமான முடிவு இது.. இங்கே நிறைய கருத்துக்கள் பரிமாற விவாதிக்கபடுகின்றன.. வாக்களிக்க தேவையில்லை என பேராசிரியர் சொல்கிறார்.. புறக்கணிப்போம் என்கிறார் மகளிர் அணி தலைவர் கனிமொழி.. சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் இரண்டும் விவாதிக்கபடுகிறது.. எதிர்த்து வாக்களித்தால் என்ன என செயல்தலைவர் கேட்கிறார்.. அதை வெகுவான உறுப்பினர்கள் ஏற்கிறார்கள்.. எதிர்ப்பை பதிவு செய்வோமென முடிவாகிறது.. மாற்றுகருத்தும் பரிசிலனை செய்கிற அதே நேரம் சரியானதை முடிவு செய்கிற மிக பெரிய இயக்கமாக /கட்சியாக திமுக திகழ்கிறது அடைத்து வைத்து கையெழுத்து வாங்கி கொண்டு மந்தையைப்போல இங்கே கட்சி நடத்தமுடியாது கலைஞர் காட்டிய வழி இதுதான். என்று பொட்டில் அடித்தாற்ப்போல் சொல்லியிருக்கிறது திமுக .. .. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக பழனிசாமி அரசை எதிர்த்து வாக்களுக்கும் இந்திய யூனியன் முஸ்லீம்லீக்கும் எதிர்க்கும் காங்கிரஸ் நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கலாம் .. அதிமுக யாரிடமும் ஆதரவு கோராததால் காங்கிரஸ் எதிர்க்கலாம்.. ஆனாலும் தங்கள் கட்சியினரின் வாக்கே போதுமென்கிறார்.. ஓஎஸ் மணியன்.. ஒன்றுமட்டும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் நாடு நல்ல தலைமையை எதிர்பார்க்கிறதென்று பொருள்..மாறாக வெற்றிபெற்றால் சிறைகதவுகள் இந்த ஆட்சியை இயக்கும்.. நிச்சயமாக மிகப்பெரிய அசிங்கம் இது.. ஒரு குற்றவாளி அதுவும் ஊழலுக்காக திருடியதாக அல்லது கொள்ளையடித்தாக.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோடு சேர்ந்து ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தவறாக சொத்து சேர்ததற்காக தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் கையில் ஆட்சி இருக்கும்.. அவரின் ஆட்கள் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு மிரட்டுவார்கள்.. இதுதான் நடக்கும்.. .. நம்பிக்கை வாக்கெடுப்பில் Trust vote.. மனசாட்சிப்படி சமஉறுப்பினர்கள் வாக்களிப்பார்களா என்பது சந்தேகம் தான் ஏனெனில் முதலில் மிரட்டலும் மூன்று தவணையாக பெருமளவில் பணம் தரப்படுவதாக செய்திகள் வருகின்றன.. இனி நமக்கு எப்படியும் வாய்ப்பு வரபோவதில்லை இருக்கிற வாய்ப்பை ஏன் கெடுத்துக்கொள்வானேன் என எண்ணுகிற மனநிலைக்கு வந்துவிட்டதாலும் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டால் பதவி போகும் என்பதால் #யாராண்டால் என்ன என்கிற மனோநிலையில் இருக்கிறார்கள்.. .. இறுதிகட்ட பேச்சும் மிரட்டலும் குற்றவாளி கையில் சாரட் வண்டியின் கயிறு அந்த கயிறின் அசைவிற்கேற்ப இந்த அரசு செயல்படும் .. ஆனால் காலம் இவர்களை மன்னிக்காது.. தமிழகம் கண்ட மிக மோசமான, அரசியல்நெருக்கடியான காலம் நம்மை கடந்துக்கொண்டிருக்கிறது.. நாமோ கையாலாகாதவர்களாய் .. சின்ன சின்ன ஆசைகளுக்காக உரிமையை தொலைத்ததால்.. சிற்றின்பதற்கு ஆசைபட்டு வாழ்வை தொலைத்தவர்களை போல தமிழகம்..இன்று.. .. விடியுமா.. என ஏக்கத்தோடு.. .. தோழர் ஆலஞ்சி

Thursday, February 16, 2017

முதல்வர் கனவு..

எடப்பாடி.. நெடுங்குளம் நிகழ்வு நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அதை சொல்வதற்கு முன் திருமதி சசிகலாவின் ஆள் அரசாள வந்திருக்கிறார்.. திரு.பன்னீரின் அரசியலை கடந்து பார்பனர்கள் ஒன்று கூடி ஒரே சுருதியில் எதிர்த்தும்.. ஆர்எஸ்எஸ் பாஜக என பாசிச சக்திகள் எப்படியாவது விதையை இந்த மண்ணில் தெளித்து முளைக்க செய்துவிடலாமென எண்ணி காய் நகர்த்தியும்.. தன்னிடமுள்ள பணத்தாலும் தங்களுக்கே உரிய மிரட்டல் பாணியையும் கொண்டு சட்டமன்ற உறுப்பினர்களை.. பட்டியில் அடைத்து வைத்து தனக்கு தரபடாமல் போனாலும் தான் யாரை கை காட்டுகிறேனோ அவரே முதல்வர் என்று அதிக அடிமைகளை அடைத்து வைத்திருக்கிறேன் பார் என எக்காளமிட்டு முதல் சுற்றில் வென்றிருக்கிறார்.. .. சரியா தவறா என்பது இங்கே பார்க்கபடமாட்டாது இந்திய ஜனநாயகம் எண்ணிக்கையிலானது இங்கே எப்போதும் பெரும்பான்மையினர் எதிர்க்கிறவர்.. ஆட்சியில் அமரலாம்.. ஒருவர் 32% விழுக்காடு பெற்றிருந்தாலும் மீதமுள்ள 68% விழுக்காடு வாக்கு பலரும் பங்கிட்டு கொள்கிறார்கள்.. கட்சிகள் வாங்குகிற சதவிகிதத்திற்கு தகுந்தாற்ப்போல் பிரதிநிதிகளை நாம் அனுப்புவதில்லை.. இங்கே எண்ணிக்கை மட்டுமே பேசும் ஜெயிக்கும்.. அதனால் தான் இங்கே பலமுறை தகுதியில்லாத தலைமை வந்துவிடுகிறது.. .. சரி நெடுங்குளத்தை பற்றி பேசுவோம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர்கள் வெட்டபடுகிறார்கள்.. ஈட்டியால் குத்தி குடல் சரிந்து கிடக்கிறது.. வெட்டி குத்தி கிழித்தவர்கள் பங்காளிகள்.. எட்டுப்பட்டியும் கலவரம் பற்றிக்கொள்கிறது.. குத்தி கொன்ற இரண்டுபேர் தலைமறைவாக மேற்கு தொடர்ச்சி மலையில் .. வழக்கு விசாரணை பஞ்சாயத்து என அல்லோலப்படுகிறது.. அப்போது எம்ஜிஆர் அமைச்சரவையில் மந்திரியாக இருந்த முத்துசாமி சமாதானம் செய்து வைக்கிறார்.. பிரச்சனை தீர்க்கப்பட்டு ஒளிந்திருந்த இளைஞரகள் ஊருக்குள் வருகிறார்கள்.. அந்த இளைஞரில் ஒருவர்தான்.. இன்று தமிழகத்தை தலைமேற்று வழிநடத்த வந்திருக்கும்.. நமக்கெல்லாம் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் .. எடப்பாடி பழனிசாமி அவர்கள்.. .. #மான்புமிகு.. .. தோழர் ஆலஞ்சி

Wednesday, February 15, 2017

திராவிட பேரியக்கம்..

திரும்பி பார்.. ஒரு கோமாளி மக்களை மகிழிவிப்பவன் ராஜாவேடமெல்லாம் கட்டியவன்.. மக்களை மயக்கத்திலேயே வைத்திருந்து சின்ன..சின்ன நல்லவைகளை தந்து ரசிகனை தெளிவடைய செய்யாமல் கவர்ச்சியெனும் ஆயுதம் கொண்டு கீழடக்கி வைத்திருந்த வரலாறு முடிகிறது.. மருதூர் கோபாலமேனன் ராமசந்திரன் எனும் எம்ஜிஆர் தொடங்கிய கட்சி இனி.. .. மானமிகு வாலியை மறைந்து நின்று தாக்கிய மாண்புமிகு ராமசந்திரனை மாவீரன் என்று.. மகாகவி கம்பனே ஏற்கவில்லை.. என்ற கலைஞரின் கவிதையோடு தொடங்கலாம்.. சின்ன சின்ன வேடம் கட்டியவரை மார்டன் தியேட்டர் முதலாளி சுந்தரத்திடம் அறிமுகம் செய்து தாடையில் குழியிருக்கிறது வேண்டாமென்ற முதலாளியை தாடி ஒட்டி நடிக்கவைக்கலாமென சொல்லி வாய்ப்பு தந்தவனை.. எதிர்த்து அரசியலை தொடங்கியபோது ஊழலுக்கெதிரான கட்சி என்றார்கள்.. கமிஷனெல்லாம் அமைத்து பார்த்தார்கள்.. விசாரித்தவன் விஞ்ஞான ஊழல் என்றான் நிரூபிக்கவேண்டியதானே என்றால் ஆளையே காணோம்.. இன்றுவரை நெருங்கவே முடியவில்லை.... ஆனால் எம்ஜிஆரின் கட்சியினர் ஊழல் செய்ததாக மருங்காபுரி பொன்னுசாமி தொடங்கி அதன் பொதுசெயலாளர் ஜெயலலிதாவரை ஊழல் வழக்குக்காக தண்டனை பெற்றிருக்கிறார்கள்.. .. கொள்கை எதுவுமின்றி ஆடம்பரம் ஆர்ப்பார்ட்டம் கவர்ச்சியை நம்பி தன் அரசியல் வாழ்வை தொடங்கிய மகோரா.. மெல்ல ஆர்எஸ்எஸ் பிடிக்குள் வந்தார்.. திராவிட இயக்கத்தை சிதைக்க கங்கணம் கட்டி செயல்படுவோரின் வலையில் விழுந்து இந்துமுண்ணனி எல்லாம் அனுமதி தந்து மெல்ல படரவிட்டார்.. அரசியலில் அவருக்கு பிறகு வெற்றிடமாய் போய்விடுமென அஞ்சியவர்கள் ஆரியமாயையை உட்புகுத்தி தங்களின் எண்ணங்களுக்கு வழங்கி நிற்கவைத்தனர்.. எவ்வளவோ முயற்சித்தும் அவர்களுக்கே உரிய சாணக்கியதனத்தை பிரயோகபடுத்தியும் ஆட்சியை கலைத்தும் தனிமைபடுத்தியும் பார்த்தார்கள் திமுக எனும் சுயமரியாதை இயக்கத்தை அழிக்க முடியாமல் போனது.. காரணம் ஒற்றை போர்வாளாய் தளபதியாய் தலைவனாய் #எம்_கலைஞர் காத்து தந்தார்.. .. இதோ திமுகவை அழிக்க ஆரியர் சூழ்ச்சியால் துவங்கப்பட்ட அதிமுக எனும் கட்சி இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாய் சிதைய தொடங்கியிருக்கிறது.. கொள்கை உறுதியும் இனமானமும் பற்றும்..அறிவும் எதையும் பகுத்தாயும் திறனும் சமூகநீதியின்பால் அக்கறையும் கொண்டவர்களை கொண்ட பேரியக்கத்தை.. யார்வரினும் உடைத்திடவோ சிதைத்திடவோ முடியாது.. இங்கே தலைவர்களை காலம் தீர்மானிக்கிறது.. துரோகங்களால் வீழ்த்திட முடியாது.. .. #காக்கையின்_எச்சமா_ஆலமரத்தை_அழித்துவிடும்…… .. தோழர் ஆலஞ்சி..

Monday, February 13, 2017

ஜெயா எனும் மாயை

சசிகலா வாய் திறந்தார்.. ஜெயலலிதா எனும் பிரமாண்டமாக கட்டமைக்கபட்டவை எல்லாம் வெறும் மாயதோற்றம் என்றானது.. நான் தான் எல்லாம் ஜெயலலிதா என்று இதுவரை நீங்கள் பார்த்தது சாட்சாத் நானேதான்.. ஜெயலலிதா அரசியலே வேணாம் சசி என்ற ஒளிந்தோடிய போது நான் தான் அவரை கொண்டுவந்தேன்.. கட்சிகாரர்களின் கோரிக்கைகள் நான் படித்துபார்த்துவிட்டுதான் எதை முதலில் செய்யவேண்டுமென தீர்மானித்து அடுக்கி வைப்பேன்.. கூட்டணி விசயத்தில் கூட நான் தான் பேசினேன்.. அடுக்கடுக்காய் .. ஆனால் உண்மைகளை உளறிக்கொட்டிவிட்டு போய்விட்டார்.. .. நீங்கள் இதுவரை #எஃகுமனுஷி என்று புகழ்ந்து கொண்டிருந்தீர்களே உண்மையில் அவர் பொத்தை மரம் .. நான் தான் உண்மையான சூத்ரதாரி ... என் ஆட்டத்திற்குதான் ஜெயலலிதா ஆடினார் என் முடிவைதான் ஜெயலலிதாவின் சொல்லில் கேட்டீர்கள்.. ஜெயலலிதா வெத்துவேட்டு .. என்கிற ரீதியில் தன் தொண்டர்களை வைத்துக்கொண்டு வெளிபடையாகவே பேசியிருக்கிறார்.. .. உண்மையில் ஊடகங்கள் ஜெயலலிதாவை தூக்கி வைத்து கொண்டாடும் அளவிற்கு தகுதியானவர் இல்லை.. ஒருமுறைக்கு இருமுறை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டும் அவரை புனிதர் ரேஞ்சுக்கு உயர்த்தி பிடித்தன .. இதே இடத்தில் வேறுயாராவது இருந்திருந்தால் அவரின் புகழை தரைமட்டமாக்கியிருக்கும் இப்படி அளவிற்கு மீறி கொண்டாடியிருக்காது.. அவர் #அவாளாக இல்லாமல் இருந்தால் முன்பே அரசியலில் குழிதோண்டி ஆழ புதைத்திருப்பார்கள்..ஊடகங்களும் அரசும்.. உண்மையில் பயந்தாங்கொள்ளி என்ற அளவிற்கு ஜெயலலிதாவைப்பற்றி சசிகலா பேசுகிறார் என்று சொன்னால்.. சிலவை மிகைப்படுத்தபட்ட வார்த்தைகளாக கூட இருக்கலாம் ஆனாலும் ஓரளவிற்கு உண்மை இல்லாமல் இல்லை.. .. சசிகலா எத்தனை பேர் வந்தாலும் ஒருகை பார்ப்பேன் என்கிற ரீதியில் அகந்தையோடு பேசுகிறார்.. ஆற்றாமை ..வாய்ப்பு தள்ளிபோகிறதே என்கிற கோபம், தான் வளர்த்த/எடுத்த கொள்ளி தன்னையே காயபடுத்துகிறதே என்கிற இயலாமை அவரின் பேச்சின் நெடுக தெரிகிறது.. தாம் பேசுகிற வார்த்தைகள் இதுவரை நீங்கள் பார்த்த,ரசித்த ஜெயித்த ஜெயலலிதாவே நான் தான் என்கிற தொனி .. அதிமுக அடிமைகளுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டதுதான்.. .. அதிமுகவினருக்கு ஜனநாயக நெறிமுறைகளோ வழிமுறைகளோ பரிச்சயமில்லை மாறாக அடங்கிப்போய் எல்லாவற்றிக்கும் தலையாட்டுகிற கைதட்டுகிற பழக்கம் அதுதான் கட்சி நடத்துகிறமுறையென நீண்டகாலமாக நம்பியிருக்கிறார்கள் .. அதனால்தான் சசிகலாவால் இப்படி அகந்தையோடு ஆணவத்தோடு பேசமுடிகிறது.. .. அதுசரி.. #அடிமைகளுக்கு_வேறென்ன_வாய்க்கும்…… .. தோழர் ஆலஞ்சி...

Saturday, February 11, 2017

ஆசிரியர் வீரமணி..

ஆசிரியர் அவர்களின் கருத்தோடு முரண்படுகிறேன். அவரது கவலையும் ஆதங்கமும் கவனித்தில் கொள்ளவேண்டியதுதான் மறுப்பதற்கில்லை பன்னீரின் பின்னில் பாஜக அப்பட்டமாக செயல்படுவதும் அறியாமல் இல்லை அதற்காக சசிகலாவை ஆதரிப்பதென்பது மண்ணை வாரி போட்டுக்கொள்வதற்கு சமம்.. சசிகலா ஆட்சியமைத்தால் பாஜகவோடு அவர்களின் அஜந்தாவிற்கு ஒப்பவே செயல்படுவார்..அதனாலும் பாசிசத்தின் செயல்பாடுகள் மெல்ல வெளிவரும்.. .. இன்றைய நிலையில் இருவரையும் ஆதரிக்காமல் நடுநிலையாக செயல்பட்டாலே போதும் அவர்களின் சண்டை நிச்சயமாக நல்லதொரு விடியலை தமிழகத்திற்கு தரும்.. திமுகவே அடுத்த விருப்பமாக மக்கள் மனதில் தோன்றியிருக்கிறது அதை நோக்கிய நகர்வு ஒன்றுதான் சரியான பாதையாக இருக்கும்.. அதிமுக அழிந்தால் பாஜக வளர்ந்துவிடுமென்ற பூச்சாண்டி வேண்டுமென்றே பரப்பபடுகிறது.. நிச்சயமாக எதிர்வரிசையில் அதிமுகதான் வரும் இல்லையெனில் அந்த இடத்தை நோக்கி காங்கிரஸ் வரலாம் இரண்டு தவிர மூன்றாவதாக வேறெதுமில்லை .. தேமுதிக பாமக வை தாண்டி பாஜக வளர்ந்துவிடாது .. .. ஆசிரியர் வீரமணி அவர்கள் கவலைகொள்ள தேவையில்லை.. மாறாக அமைதியாக வேடிக்கை பார்த்தாலே போதும்.. ஜெயலலிதா இருந்த போது கூட பாஜகவின் முகமாகதான் நிறைய விடயங்களில் இருந்தார்.. அவருக்கே தெரியும் திராவிட முகமூடி இல்லாமல் இங்கே எதுவும் வேலைக்காகாது என அறிந்திருந்ததால் தான் அளவோடு காய் நகர்த்தினார்.. ஆசிரியர் குழப்பமடைய தேவையில்லை .. மேலும் குழப்பாமல் வேடிக்கை பாருங்கள் அது போதும்.. உண்மையான திராவிட இயக்கத்தை ஆட்சியில் அமரவைக்கும்.. .. காலம் கனிந்து வருகிறது தேவையில்லாத விமர்சனங்களை தவிர்த்து மக்களின் மனதில் நல்ல நம்பிக்கையை திரு.ஸ்டாலின் விதைத்து வருகிறார் ஆடம்பரமில்லாத எளிமை.. எல்லோரையும் அரவணைக்கும் அழகு.. தீர்க்கமான சிந்தனையும் செயலும் பதட்டப்படாத தெளிவும்.. உயரத்தில் கொண்டு நிறுத்தும். #செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். .. என்ற குறளுக்கொப்ப செயல்படுகிறார் தளபதி.. .. ஆசிரியர் அவர்கள் #வாயைமூடி_பேசவும்…… .. தோழர் ஆலஞ்சி

Tuesday, February 7, 2017

அரசியல் அரங்கம்..

முதல்வர் மிரட்டபட்டிருக்கிறார்.. திருமதி சசிகலா புஷ்பா தன்னை கார்டனில் வைத்து மன்னார்குடி கும்பல் அடித்ததென நாட்டின் மிக உயர்ந்த சபையில் சொன்னபோது நாம் மௌனமாய் இருந்ததின் விளைவு இன்றைக்கு முதல்வரையே மிரட்டுகிற அளவிற்கு வந்திருக்கிறது..எந்த பதவியிலும் இல்லாமல் திவாகரனால் அமைச்சர்களுக்கு கட்டளையிட முடிகிறது முதல்வரை கண்காணிக்க முடிகிறது இவையாவும் சர்வாதிகார ஆட்சியின் தோற்றத்தை தருகிறது.. முதல்வரை மிரட்டியவரை செயல்படவிடாமல் தடுத்தவர் மீது குண்டர் சட்டம் பாயவேண்டாமா.. முதல்வரே நேரடியாக குற்றம் சாட்டிய பிறகு இன்னும் ஏன் தாமதம்.. இது கட்சிக்குள் நடந்த விடயம் என புறந்தள்ளிவிட முடியாது.. கட்சியின் சட்டமன்ற தலைவருக்கு தெரியாமல் கூட்டம் கூட்டப்பட்டது செல்லதக்கதல்ல .. திமுகவின் ஸ்டாலினோடு நெருக்கம் காட்டினார் சிரித்தார் என்றெல்லாம் சொல்வது ஒன்னாங்கிஸாஸ் குழந்தை பெனிசிலை எடுத்து வச்சுகிட்டான் என்னைபார்த்து முறைக்கிறான் என்பதை போல இருக்கிறது.. திமுக பின்னில் என்ற குற்றசாட்டை மக்கள் நம்ப தயாரில்லை..பிரதான எதிர்க்கட்சி தனது வேலையை செய்கிறது.. மக்களி நலன் சார்ந்த பிரச்சனைகளில் கைரோர்க்கிறது என்பதற்காக முதல்வரை மாற்றுவேன் என்பது சரியான ஜனநாயக அணுகுமுறையல்ல.. .. எழுபது நாளும் பன்னீரை முதல்வரை பார்க்க அனுமதிக்காததில் நிறைய மர்மங்களும் சந்தேகங்களும் எழுகிறது.. முதல்வரையே மிரட்டுகிறவர்களால் எம்எல்ஏக்கள் உயிருக்கும் அவர்கள் உறவினர்கள் உயிருக்கும் கூட பாதுகாப்பற்ற சூழல் உருவாகலாம்.. முதல்வருக்கு உச்சகட்ட பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.. இந்த மன்னார்குடி மாபியாக்களிடமிருந்து நாட்டை காப்பாற்ற.. கவர்னர் தேர்தலை நோக்கி நகர்த்துவது மட்டும்தான்.. இப்போதே மூன்று எம்எல்ஏக்கள் முதல்வருக்கு வெளிப்படையான ஆதரவை அல்லது சசிகலா எதிர்ப்பை சொல்லியிருக்கிறார்கள்.. இது கூடலாம்.. நேற்றைய தினம் மனம் திறந்ததிலிருந்து மக்கள் மத்தியில் பன்னீர்செல்வம் உயர்ந்துநிற்கிறார்.. மிகப்பெரிய மனஅழுத்தத்தோடு இருந்திருக்கிறார் என்பது அவரின் பேச்சு நமக்கு உணர்த்தியது.. அதைவிட வெகுமக்களின் உணர்வை பிரதிபலித்தார்.. .. இருள் சூழ்ந்த மெல்லதாய் ஒளிகீற்று.. விடியும்.. #We_need_re_election…… .. தோழர் ஆலஞ்சி

Sunday, February 5, 2017

கள்ளத்தனம்

கள்ளச்சி.. இந்த வார்த்தை பிரயோகம் சமுகத்தின் குறியீடல்ல தமிழக அரசியலில் நேர்மையான ஜனநாயக பாதை ஜெயலலிதாவால் மெல்ல கொல்லப்பட்டபோது நாம் எப்படி உள்வாங்கினோமோ அப்படிதான் இதையும் உள்வாங்கவேண்டும்..வினையை விதைத்து விட்டு தினையை தேடினால் எப்படி கிடைக்கும்.. மக்கள் நெடுக சசியின் வரவை ஏற்கவில்லை ஆனால் இந்திய அரசியலமைப்பு தந்த வழிமுறையையே பின்பற்றி வருகிறார்.. மக்களால் தேர்வு செய்யபடாதவர் பதவி வகிக்க தகுதியில்லையென்பதெல்லாம் இங்கே எடுபடாது.. .. மிக சாதூர்யமாக ஜெயலலிதாவை விழுங்கி அவரின் இடத்தை பிடித்திருக்கிறார்.. அவருக்கு ஆரம்பம் முதலே பன்னீர் என்ற விசுவாசி .. சொன்னதை செய்யும் வளர்ப்பு நாயைப்போல .. சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையைப்போல வாய்த்தார்.. ஜெயலலிதாவையே விழுங்க தெரிந்த மன்னார்குடி வகையறாவிற்கு.. அதிகாரத்தில் எத்துவதென்பது மிக சுலபமாகிப்போனது.. சசிகலா வெளிப்படையாகவே கள்ளாட்டம் தான் ஆடுகிறார்.. அதை ஊடகங்கள் கூட புகழ்கிறது பாருங்கள் அங்குதான் சசி போன்றவர்களின் வெற்றி அடங்கியிருக்கிறது.. இனி பொய்யே சொல்லமாட்டேன் என்று சொன்ன பாண்டே மக்கள் செல்வாக்குள்ள தலைவர் என்கிறார்.. எந்த மக்களை சந்தித்து அவர்களோடு பேசி அவர்கள் பிரச்சனைகளை காதுகொடுத்து கேட்டாரென தெரியவில்லை.. பணம் இது ஒன்றுதான் சசிகலாவின் பலம்.. ஊடகங்களை விலைபேசமுடிந்த அவரால்.. மக்களையும் விலைபேசிவிட முடியும்.. இதோ அதிமுககாரன் தரும் இனிப்பை கைநீட்டி வாங்க அடித்துக்கொள்கிறார்கள்.. சிலர் கோவப்படுவது புரிகிறது.. மக்கள் திரும்பவும் சரியான ஜனநாயக பாதையை தேர்தெடுக்காமல் சில்லறைகளுக்கு விலைபோனால் இவரை போன்றவர்கள் வருவார்கள்.. .. அதிமுகவின் உ்கட்சி விவகாரமென இதில் ஒதுங்கி கொண்டால் தமிழக நலனில் சிறிதும் அக்கறையில்லாத ஆகும் .. ஜெயலலிதாவிற்குதான் வாக்களித்தார்கள் அவர்களில் வீட்டில் பணியாளுக்கில்லை என்ற திரு.ஸ்டாலின் கருத்து கவனிக்கதக்கது.. மிக சிறந்த தலைவர்களை வேண்டாமென்று வைத்த தமிழகம் தலைகுனிந்துதான் ஆகவேண்டும்.. .. சசிகலா சரியான முறையில் கள்ளாட்டம் ஆடுகிறார்.. தன்னிடமுள்ள தலையாட்டிகளை வைத்துக்கொண்டு .. நமக்கு நாடகம் காட்டுகிறார்..பணமெனும் கயிறு அவர் கையில் பாவம் பொம்மைகள் ஆடுகிறது.. ஆனால் அது ரசிக்கும் பொம்மலாட்டமாய் இல்லை.. மாறாக இது கள்ளாட்டம் #கள்ளத்தனம்... .. தோழர் ஆலஞ்சி...

நிர்மலா...பெரிய...

நந்தினி.. மிக கொடூரமாக சிலரால் வன்புணர்வு செய்து யோனியை கிழித்து கற்பத்தை வெளியெடுத்து கொன்று வீசியிருக்கிறார்கள்.. இந்த சமூகத்தின் பார்வையில் இது பெண்ணின் குற்றமாக்கப்படும் அவலம்.. வேறெங்கும் நிகழ்ந்திராதது.. பெண்ணை யாரென்று பார்த்து பிறகு விமர்சிக்கிற பொங்குகிற போக்கு மிகவும் ஆபத்தானது.. சென்னை ரெயில்வே பிளாட்பாரத்தில் கொல்லப்பட்ட பெண்ணிற்காக தாமாக முன்வந்த நீதிமன்றம் இப்போது பத்தோடு பதினொன்று என வழக்கை கையாள்கிறது.. ஊடகங்கள் திசைதிருப்ப முயற்சிக்கின்றன.. அரசியல்கட்சிகள் கள்ளமௌனம் காக்கிறது.. .. நேற்றைய தினம் நிர்மலா பெரியசாமி.. பேசுகையில் காண்டம் உபயோகித்திருக்கவேண்டாமா.. 16 வயதில் பிள்ளையோடு வந்திருக்கிறார் பெற்றோரின் வளர்ப்பு சரியில்லை என்ற ரீதியில் பேசுகிறார்.. அதே பாணியில் எங்களாலும் பதில் தர முடியும்.. நிர்மலாவிற்கும் நந்தினி வயதொத்த அவரது...குழந்தைகளுக்கு.. தெரிந்த ஆணுறைப்பற்றி விழிப்புணர்வு .. பாவம் நந்தினிக்கு தெரியாமல் போனது திருமதி நிர்மலா அவர்களே.. தங்கள் தலைவி going study என்றாரே அவரும் வளர்ப்பு சரியில்லையென்று சொல்ல வருகிறீரா.. பொதுவில் அமர்ந்து பேசும் நாகரீகமாக பேசவேண்டுமென்ற தெரியவில்லை.. முதியவரை வேட்டியை உருவிவிடவா போகிறோம் என்றெல்லாம் பேசுகிறவரை மீண்டும் அழைத்து விவாதித்ததில் பங்கேற்க செய்கிறார்களே ஏன். .. இதே பாணியில் வேறெங்கும் பேச மறுப்பதேன் இங்கே கேள்விகேட்க மாட்டார்கள்..தாழ்த்தப்பட்டவர்களுக்காக நீதிமன்றம் கூட வாய்மூடி நிற்கும் என்பதாலேயே இவரை போன்றவர்கள் தொடர்ந்து இதைப்போல் துணிந்து பேசுகிறார்.. நிர்மலா பெரியசாமி போன்றவர்களுக்கு பெண் என்று பார்த்து வாய்மூடியிருந்தால் மேலும் மேலும் இதேபோல் நிறைய கதைப்பார்கள்..அதனால்தான் அவர்கள் மொழியில் நாம் மறுபடி தரவேண்டியிருக்கிறது..அவரை இழிவுபடுத்தவேண்டுமென்ற நோக்கம் நமக்கில்லை.. இனியும் இதுபோல் தொடர்ந்து வேறுவகையான மறுபடி தரவேண்டிவரும்.. .. எச்சரிக்கை.. .. தோழர் ஆலஞ்சி

Saturday, February 4, 2017

தப்பாட்டம்..

முதல்வர் பதவி.. சசிகலா முதல்வராக போவதாக வரும் செய்திகளில் எந்தளவு உண்மையென தெரியவில்லை.. அப்படி முதல்வரானால் ஒரு வகை ரப்பர்ஸ்டாம்பாகதான் ஆட்சி நடத்துவார்.. .. பீகாரில் நாம் ஏற்கனவே பார்த்ததுதான்.. லல்லுபிரசாத் யாதவ் தன்மனைவி ரப்ரிதேவியை முதல்வராக்கினார்.. headlines today என்று நினைக்கிறேன் ஆங்கில சேனல் அவரிடத்தில் பிகாரி மொழியில் பேட்டிக்கண்டது நேரலையில் சில நிமிடங்களே நடந்த உரையாடல் முடிந்தவுடன் செய்தியாளர் சொன்ன வாசகம் இதுதான்.. Clearly, she is a rubber stamp..அது பெரிய அதிர்வலையை /தாக்கத்தை பிகார் அரசியலில் தந்தது.. அதே போல் எந்தயொரு அரசியல் அனுபவமும் இல்லாமல் ஒரு அரசியல்கட்சியின் தலைவரின் வீட்டை பாராமரித்துக்கொண்ட ஒருவர் அதிகார மையத்திற்கு வர முடிகிறதென்றால் கட்சி அரசியல் இயக்கமாகவோ/ கட்சியாகவோ இல்லை மாறாக கம்பெனியைப்போல் நடத்தப்பட்டிருக்கிறதென்றே பொருள்.. .. உள்ளாட்சி கேர்தலில் நீங்கள் பார்த்திருக்கலாம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை நிறுத்தி .. அவர்களை பொம்மையாக்கி அதிகாரம் செய்தார்கள்..அதேபோல் மன்னார்குடி வகையறாக்கள் சசிகலாவை முதல்வராக்கி அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறது.. இதை அனுமதிக்ககூடாது.. சிலநேரம் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு சதுரங்கத்தை நடத்தலாம்.. சிலர் கள்ளாட்டம் என்றால் கூட கவலையில்லை.. ஏனெனில் நாட்டுமக்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து செயல்படவேண்டிய கடமையும் எதிர்க்கட்சிக்குண்டு.. .. நேர்மையற்ற முறையிலான எதையும் எதிர்க்கலாம் மக்கள் எதிர் களத்தைதான் தந்திருக்கிறார்கள்.. அரசின் எதிர்‍.. அரசு செயல்கள் மக்கள் விரோதமெனில் அதற்கெதிராய் போராடவே மக்கள் பணித்திருக்கிறார்கள்.. புறவழியில் தகுதியில்லாத ஆட்டுமந்தைகளில் ஒரு கருப்பாடு தலையமடுக்க முற்பட்டால் அதை எதிர்த்து எந்த ஆட்டமும் ஆடலாம் சில நேரம் தப்பான ஆட்டம் கூட சரியான முடிவை தரும்.. இதே சசிகலா மக்களை சந்தித்து வந்தால் ஒருவேளை அவரை மக்கள் ஏற்றால் அவரை எதிர்த்து அரசியல் செய்யலாம்.. அதை மக்கள் தீர்மானிக்கட்டும்.. #இனி_சலங்கைகட்டிஆடவேண்டும்.. .. தோழர் ஆலஞ்சி...

Friday, February 3, 2017

தலைவர் ..

இதை எழுதும் போது கண்ணில் நீர்கோர்க்கிறது. என்பதாண்டுகாலம் தன் கரகரக்குரலால் கரிஜித்தவர்.. தமிழர்நலம் மட்டும் சிந்தையில் கொண்டவர்... என் உயிரினும் மேலான உடன்பிறப்பே என்று ஊரெல்லாம் முழங்கியவர்.. சிலவாரங்களாய் பேசமுடியாமல் வயதுமூப்பின் காரணம் மெல்ல மறைகிற ஞாபகசக்தி.. தன்னைச்சுற்றியே தமிழக அரசியலை ஏன் இந்திய அரசியலைகூட சிலகாலம் இயங்கசெய்த மாபெரும் அரசியல் தலைவர்..தோல்விகண்டு துவழாமல் மறு வினாடியே எழுந்து நின்று உடன்பிறப்பே என முழங்கும் ஆளுமை..அரைநூற்றாண்டுகால மாபெரும் இயக்கத்தின் தலைமை... கட்சி துரோகிகளால் வளைக்கப்பட்டபோதெல்லாம் தனியொரு போர்வீரனை மீட்டெடுத்த தளபதியாய் பலதலைமுறை தலைவர்களோடும் அரசியல் செய்ய காலம் தந்த வாய்ப்பை மிகச்சரியாக கையாண்டு அரசியல் எதிரிகளை விழிபிதுங்க வைக்கும் ஆற்றலாய்.. சுழன்று சுழன்று தமிழகத்தின் அரசியல் அடையாளமாய் இருந்த எம் பெருமகன் .. முடியாமல் கிடக்கிறார்.. .. இதில் கூட திமுக நேர்மையை கடைப்பிடிக்கிறது பாருங்கள்.. அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை ஊருக்கு சொல்கிறது.. மறைத்து வைத்து இட்லி சாப்பிட்டாரென பொய் சொல்லி மக்களை முட்டாளாக்க விரும்பவில்லை.. ஒரு மாயதோற்றத்தை தந்து ஏமாற்றவில்லை.. அரசியலில் உண்மையை சொல்வதுதான் சிறந்தது என்பதை ஆரம்பம் தொட்டே செயலில்காட்டிவரும் இயக்கம் திமுக.. எதுவாக இருந்தாலும் அதை மக்கள் அறிந்துக்கொள்ளவேண்டும் என்பதில் கலைஞர் கவனமாக ஏன் பிடிவாதமாக இருப்பார்.. அதைதான் தளபதி ஸ்டாலின் செய்கிறார்.. திமுக எப்போதுமே வெளிப்படையான அரசியலை செய்தே வந்திருக்கிறது.. .. கலைஞர் பெருமகனின் மனோதிடம் நிச்சயமாக மீட்டுதருமென நம்பிக்கையிருக்கிறது நமக்கு.. எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் இயல்பாகவே கலைஞரிடத்தில் காணலாம் .. மனம் ஒத்துழைக்கும் உடல் வயோதிகத்தால் ஒத்துழையாமை செய்கிறது. இயற்கையின் நீதியை யாரும் வென்றிட முடியாது அறிவோம்.. பழுத்தபழம் விழும் என்றாவது விழும் என்பதும் அறிவோம்.. ஆனால் இந்த பெருங்கிழவனை மீண்டும் காண.. அந்த காந்த கரகரக்குரலை கேட்க.. தேன் தமிழ் ரீங்காரத்தை காதோர்க்க.. நின்றாடும் அரசியலை மௌனமாய் ரசிக்க.. என்உயிரினும் மேலான என கேட்க ஆவல் மீறுகிறது..மனம் வேண்டி விழைகிறது இயற்கை தரும் அந்த வலிமையை.. விரைந்து வா தலைவா.. காத்திருக்கிறோம்.. .. உன் எழுத்தையே கடன்வாங்கி சொல்கிறேன் #விரைந்து_நலம்பெற_வேண்டிவிழைகிறேன்…… தோழர் ஆலஞ்சி...

Thursday, February 2, 2017

நாடாளுமன்றம்

யாரை தேர்தெடுத்திருக்கிறோம்.. நாடாளுமன்றத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா ஜெயலலிதா வெ‌ண்கலசிலை பற்றி பேசுகிறார்.. திமுகவின் கனிமொழி எண்ணூர் எண்ணை கசிவைப்பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புகிறார்.. மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி விளக்கம் கேட்கிறார் .. .. தமிழகத்திலிருந்து தலைசிறந்தவர்களை மேலவைக்கும் மக்களவைக்கும் அனுப்பி அழகுபார்த்தது.. அண்ணா தொடங்கி இரா செழியன் ,நாஞ்சிலார் ..மாறன் திருச்சிசிவா வரை.. ஆளுமைகள் தங்கள் திறமையை/முத்திரையை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் பதிந்திருக்கிறார்கள்.. கலைஞர் அவர்கள் நாடாளுமன்ற மேலவைக்கு அனுப்பும் போது அவர்களின் திறமையை கணக்கில் கொள்வார்.. கலைஞர் அனுப்பிய யாருமே சோடை போனதில்லை.. சில சோபிக்க முடியாமல் போயிருக்கலாம் ஆனால் தங்கள் கொள்கையை நிலைநிறுத்துவதில் மிக தெளிவாக இருந்தார்கள் என்பதும்.. அதே நேரம் சபையின் மாண்பை கேலிக்கூத்தாக்காமல் நாகரீகமாக நடந்துக்கொண்டார்கள் மாநில நலன் என்று வருகிறபோது கட்சியை தாண்டி ஒருமித்த குரலாய் ஒலித்திருக்கிறார்கள்.. .. ஆனால் ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு அதிமுக உறுப்பினர்களின் செயல்கள் கண்ணியமிக்கதாகவோ அல்லது சபை நாகரீகத்தை காப்பதாகவோ இல்லை மாறாக ஜெயலலிதா புகழ்பாடும் பஜனை கோஷ்டிகளாக மாறியது நாளடைவில் யார் அதிகம் புகழ்கிறார்கள் என்பதிலேயே அவர்களுக்குள் போட்டி நடத்தும் அளவிற்கு மாறி கடைசியில் சம்பந்தமே இல்லாமல் பேசி நேரத்தை வீணடிக்கிற வேலை மட்டுமே நடந்தது நடக்கிறது.. .. திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள்.. அறிவு செறிந்த உரையாடல்கள் மாநில நலன் சமூகநலன் சமூகநீதி.. எதிர்கருத்துடையோர் கூட பதில் சொல்லமுடியாமல் திணறடிக்கும் திறமை.. அதேநேரம் கொள்கை உறுதியாய் தமிழ்நாட்டுக்கு தேவையானதை பிடிவாதமாக பெற்றுதர பெருமுயற்சி .. பிரதமர் அமைச்சர் யாராக இருந்தாலும் துணிவோடு எதிர்க்கும் ..அதேவேளை சரியானதெனில் வரவேற்று .. எத்தனை அழகாய் சோபித்தார்கள்.. ஆனால்.. அதிமுக உறுப்பினர்களில் செயல்களால் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது சிலநேரம் பிற மாநில உறுப்பினர்கள் கேலிசெய்து சிரிக்கின்றனர்.. அறிவுடையோரை அனுப்பிய தமிழகம் அறிவிலிகளையும் அனுப்பி தாழ்ந்து நிற்கிறது.... .. மக்களவையில் அனுப்பியவர்களில் ஒருவர்கூட தன் முத்திரையை பதிக்கவில்லை இதுவரை தமிழகத்திற்காக குரல் கொடுக்கவில்லை.. மாறாக ஜெயலலிதா புகழ்பாட மட்டுமே அனுப்பியதாக எண்ணுகிற அவலம். . ஏய் தாழ்ந்த தமிழகமே.. என்றார் அண்ணா அண்ணாவின் மொழியை கடன் வாங்கி ..சொல்கிறேன். #ஏய்_தாழ்ந்ததமிழகமே இனியேனும் திறமையானவர்களை.. தமிழகத்தின் மானம் காப்போரை ..அறிவால் சபையை அலங்கரிப்போரை.. அனுப்புங்கள் #அடிமாடுகளை_அல்ல.. .. தோழர் ஆலஞ்சி..