Tuesday, April 30, 2019

ஆட்சிமாற்றம் வேண்டும்

ஆட்சியை கவிழ்ப்போம் என நம்பிக்கை உள்ளதால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்திருக்கிறோம் .. ஆர்.எஸ் பாரதி .. சபாநாயகரென்பவர் கட்சி அடையாளமின்றி நடுநிலையோடு செயல்படவேண்டும் எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் கூட சபாநாயகர்கள் நடுநிலையோடுதான் செயல்பட்டார்கள் .. ஆனால் ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு சபாநாயகரை தன் விருப்பத்திற்கேற்ப செயல்பட பணித்ததும் தொடர்ந்து சபாநாயகர் என்றாலே அவர் அரசுக்கு சாதகமான நிலைபாட்டை எடுக்க பயன்படும் கருவியாக இருக்கிறார் .. .. அரசுக்கெதிராக ஆளும் கட்சி உறுப்பினர்கள் செயல்பட்டார்களென சொல்லி 18 பேரை தகுதி நீ்க்கம் செய்தவர் தான் .. அதே எடப்பாடிக்கெதிராக வாக்களித்த தர்மயுத்த கும்பல் மீது நடவடிக்கை இல்லை .. ஆனால் எடப்பாடியை மாற்றவேண்டுமென்றும் வேறொருவரை கொண்டுவரலாமென்றவர்கள் மீது நடவடிக்கையை கட்சிரீதியாக எடுக்காமல் அவர்கள் நீக்கம் செய்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயன்றதும் அதே போல இடைத்தேர்தலில் படுதோல்வி வருமென்பதால் மேலும் மூவரை தகுதி நீக்கம் செய்து ஆட்சியை தொடர்ந்து தக்கவைக்கலாமென செயல்படுகிற ஆட்சியை தொடர விட கூடாதென முடிவெடுத்து திமுக .. முதலில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருகிறது .. எதிர்க்கட்சி தலைவரே இதை கொண்டுவருவது சிறப்பு .. இந்த ஆட்சி தொடர கூடாதென முடிவெடுத்த பிறகு அதற்கான ஆயத்தம் தான் இந்த சபா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் .. .. மக்களின் தலைவனாக தளபதி மிளிர தொடங்கியிருக்கிறார் .. மக்கள் ஆர்வத்தோடு தளபதியை சந்தித்து முறையிடுகின்றனர் .. நம்பிக்கையான எதிர்காலம் தளபதிதான் என மூத்த குடிமக்கள் இளைஞர்கள் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் இந்த ஆட்சி எதை செய்தாவது தூக்கியெறிய வேண்டுமென மக்கள் வெளிப்படையாகவே பேச தொடங்கியிருக்கிறார் .. ஆட்சியில் இருப்பவர்கள் தங்களின் வளத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யகூடிய மகாபாதகர்களென அறிந்து அதிர்ந்துபோய் இருக்கிறார்கள் ஏன் இதுவரை விட்டுவைத்தீர்களென தளபதியை கடிந்துக்கொள்கிறார்கள் .. மக்களின் அதிகாரத்தின் மூலம் திமுக ஆட்சியை பிடிக்க மாபெரும் வெற்றியை தர தயாராகியிருக்கிறது தமிழகம் இனியும் பொறுப்பதற்கில்லை.. இந்த மூடர்களிடம் சிக்கி தமிழகம் பட்டதுன்பங்கள் போதும் .. இங்கே அனிதாக்களுக்கு கல்வி வேண்டும் நந்தினிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் சாமானியனுக்கும் சமமான உரிமை வேண்டும் மதவெறியை தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்கவேண்டும் சாதிவெறியை இளைஞர்களிடத்தில் விதைத்து பகையோடு பலியாக்கும் கொடுமைக்கு முடிவுகட்டவேண்டும் பாசிசத்தின் அடிமையாய் கட்சியை அடமானம் வைத்து காவிதரித்து கயவராய் போன அடிமாடுகள் விரட்டிட வேண்டும் .. மாநில நலன்கள் ஒவ்வொன்றாய் பலிகொடுத்து தங்களை காப்பாற்ற்க்கொள்ளும் கொள்ளைக்கார கும்பலை கொலைகார பாவிகளை விரட்டிட வேண்டும் .. மொத்தத்தில் இந்த அடிமைகளை அதிகாரத்திலிருந்து கீழிறக்கவேண்டும் அதன் முதல் படியாய் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் .. சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்லும் மூன்றை தூக்கினால் மூன்று ப்ளஸ் பத்தை (3+10) தூக்குவோம் இனி தளபதியின் ஆட்டம் ஆரம்பம் வெல்வோம் இனி.. தளபதி படை தரணி ஆளும் .. ஆலஞ்சியார்

Monday, April 29, 2019

பெண்

அழகு பற்றி பலருக்கும் பலவிதமான கருத்து உண்டு அது அவரவர் பார்வை என்கிறார் தோழர் பானு இக்பால் .. Banu Iqbal.. .. எது அழகு தோற்றமா .. அது காலபோக்கில் மாற்றத்தை தரும் விடயம் அது ஒருவர் பார்வையிலும் அழகியலாக தோற்றமளிப்பது மற்றவர் பார்வையில் சுமாராக அல்லது முகம்சுளிக்க வைக்கலாம் புறதோற்றம் என்பது அவரது வாழ்வியலோடு அல்லது அவர் ஏற்றுக்கொண்ட கோட்பாடோடு சம்பந்தபட்டிருக்கும் .. மதம் போதிக்கிற கட்டுபாடுகளோடு கூட அலங்காரம் உடை என அவர்களின் பார்வையில் அழகாய் தோன்றும் .. மறுத்து சில தன் விருப்பத்திற்கேற்ப ஆடை அணிந்தால் கேலி அருவறுப்பு விதிமீறல் என புலம்பல்கள் கேட்கும் .. தன் குடும்பத்தில் கூட சிலர் விரும்புகிறவற்றை செய்ய அனுமதி மறுக்கபடும்.. ஏனென கேட்டால் கட்டுபாடு மீறினால் கெட்டழிந்து போவோமென வியாக்கியானம் வரும் .. .. எதுவும் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தால் அதன் மீது தனிஈர்ப்போ அல்லது அருவறுப்போ வராது தன் குடும்பத்து பெண்கள் வீட்டில் தங்கள் சௌகரியம் போல மெல்லி ஆடையணிந்தால் கூட அது அவர்களின் கண்களில் விரசமாக தெரியாது ஆனால் மற்றவர்கள் அணிந்தால் அது விரசமாகவோ காமபார்வையோடோ தான் தெரியும் ஆக உடையிலோ தோற்றத்திலோ இல்லை அவரவர் பார்வையில் தான் விரசம் அழகு எளிமை எல்லாம் .. .. ஒரு பெண் அழகாக இருந்தால் அவள் சந்திக்கும் இடையூறுகள் தொல்லைகள் அதிகமென்கிறார் .. இருக்கலாம் இந்த சமூக சூழல் பெண்களை அப்படிதான் வைத்திருக்கிறது ஆழமான நட்பை கூட கேலி பேசும் பெண் என்றாலே தன்னைவிட தாழே என்கிற மனபான்மையும் தொடர்ந்து பெண்ணா போக பொருளாக தங்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் ஆடுகிற பொம்மையாக.. எளிதில் வீழ்த்திவிடலாமென்ற நினைப்போடு பெண்ணை பலவீனமானவர்களாகவே எண்ணுகிற போக்கு நம் சமூகத்தின் பொது நியதியாக பார்க்கபடுகிறது .. இலக்கியங்களில் கூட பெண்ணை வர்ணனைக்குரிய பொருளாகவே பார்க்கிறது சங்கத்தமிழ் முதல் சமகால இலக்கியங்களில் அப்படிதான் பார்க்கிறது .. "கண்ணல்லவோ, கனியல்லவோ எழுதாத பண்ணல்லவோ விண்ணல்லவோ அதில் நீ வெண்ணிலவல்லவோ ‍‍என்றென்னை அழைத்திட்ட போது அவன் வடித்திட்ட வார்த்தைகள் அருவி தவழ் சோலை .. அழகு மலர் கூட்டம் ..(சங்கத்தமிழ் -கலைஞர்)" .. கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் !.. .. மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா.. ஒன்று வர்ணித்தோ புகழ்ந்தோ பாடி பெண்களை புகழ்ச்சிக்கு மயங்குகிறவர்களென நம்பவைத்திருக்கிறது .. பெண்கள் மீதான ஆண்களின் பார்வை உயரத்தில் எத்துவதை விரும்பாத மனநிலைதான் அது குடும்பம் வேலைசெய்யும் இடம் அரசியல் அதிகாரம் என எல்லா இடங்களிலும் அவர்கள் செய்யும் அரசியல் வெளிப்படையானது அதை பெண்களும் ஏற்றுக்கொள்வது தான் கொடுமை.. .. பெண்களின் புறத்தோற்றமல்ல அழகு .. அவர்களை சுதந்திரமாய் இயங்கவிட்டு அவர்களை சாதனையாளாக்கி .. அவர்களின் திறமையை பறைச்சாற்ற வாய்ப்பளித்து பாருங்கள் அவர் மிளிர்வார்கள் .. எல்லாதுறையிலும் அவர்களால் பிரகாசிக்கமுடியுமென நம்புங்கள் மென்மையானவர்களென நீங்களே முடிவெடுக்காதீர் .. உம்மிலும் பலமானவர்கள் எதையும் திறம்பட வகிக்கும் ஆற்றலுண்டு .. நிறத்தில் இல்லை அழகு அவர்களின் செயல்களில் திறமையில் அவர்களின் வெற்றியில் நிரம்பிக்கிடக்கிறது அழகு .. இயல்பாகவோ ஈகை குணமும் இரக்கமும் எதையும் சாதிக்க முடியுமென நம்பிக்கையும் குடும்பத்தை மட்டுமல்ல தனக்கு தரப்படும் பொறுப்பை மிக நேர்த்தியாக செய்திடும் ஆற்றலுண்டு ..வாய்ப்பை தந்து பாருங்கள் அவர்களின் அழகு தெரியும் .. .. ஆலஞ்சியார்

Friday, April 26, 2019

அல்லற்பட்டு

"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை.".. குறள் சாதாரண மக்களிடமிருந்துதான் மாற்றத்திற்கான ஒளி பிறக்கிறது .. நடந்து முடிந்த மூன்று கட்ட தேர்தல்களின் முடிவுகள் பாதகமாக தான் இருக்குமென அரசியல் அவதானிகள் கணிக்கிறார்கள் ..மெல்ல படர்ந்த பாசிசத்தை துடைத்தெறிய மக்கள் மௌன புரட்சியை செய்வதை அறிய முடிகிறது .. தன் செலவிற்கு கூட அம்மா தான் பணம் தருகிறாரென .. விலை உயர்ந்த ஆடையும் mont blanc பேனாவும் வைத்திருக்கும் இந்த "ஏழைத்தாயின் மகன்" சொன்னபோது மக்கள் நகைத்தார்கள் .. சிகை அலங்காரத்திற்கே லட்சங்கள் செலவு செய்வதாக ஊடக செய்திகள் இதுவரை அவரோ அவரின் அமைச்சகமோ மறுக்கவில்லை .. மக்கள் மீண்டும் பிரதமராக விரும்புவதாக வாரணாசில் பேசிவிட்டு சென்றவுடன் நகரை சுத்தம்செய்ய 14 லட்சம் நீர் தேவைபட்டிருக்கிறது .. இதுதான் ஏழைமகனின் செயல் .. இந்த நிகழ்வில் தர்மயுத்தம் பன்னீர் குடும்பத்தோடு கலந்துக்கொண்டார்.. மிக ஆபத்தாவனராக அடிமைகளில் நானே முதலாமவன் என பறைச்சாற்றி வருகிறார் .. நேரடியாக பாஜகவில் இணையாததுதான் ஆனால் பாஜகவின் கைப்பிள்ளையாக ஜெயலலிதா மறைவிற்கு பிறகு செயல்படுவது கண்கூடாக தெரிகிறது தன்னை காத்துக்கொள்ள எதைவேண்டுமானாலும் செய்யும் அரசியலில் மிக கேவலமானவராக மாறிவருவதை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை தமிழகத்தில் பாசிசத்தின் செயல்பாடுகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிற.. அவர் சொல்படி செயல்படுகிற ஏவல்காரனைப்போல இந்த "மானமுள்ளபிள்ளை" இருக்கிறது .. அதிமுக ஆட்சியை எப்படி தக்கவைக்க வேண்டி அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் மீறி சபாநாயகரின் நடுநிலை என்ற அதிகாரத்தை கையிலெடுத்து நான்கு உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்ய துணிகிறார்கள் .. எப்படியும் மக்களின் தீர்ப்பு பாதகமாகவே வருமென்று அறிந்து எண்ணிக்கையை குறைத்து "சதுரங்கம்" ஆட முயல்கிறார்கள் .. மூன்று பேருக்கு பதில் முப்பதை தூக்கினால் நிலை என்னாகும் என்பதை அதிமுக அரசு உணரவேண்டும் எதை எடுப்பதென்பதை எதிரியே தீர்மானிக்கிறான் .. ஆட்சிக்கெதிராக வாக்களித்த பன்னீர் வகையறாக்களின் தீர்ப்பை எத்தனை காலம் தாமதபடுத்த முடியும் உச்சநீதிமன்றத்தின் போக்கு மாறியிருக்கிறது சூழ்ச்சிகளும் சூதுகளும் நீண்டநாள் நிலைப்பதில்லை .. ஆட்சிமாற்றம் வேண்டுமென மக்கள் தீர்மானித்து வாக்களிக்க தொடங்கிவிட்டார்கள் .. இந்திய குடியரசில் மக்களின் தீர்ப்பிற்கு முன்னால் சூதுகள் நிற்காது .. தென்மாநிலங்களில் பாஜகவின் நிலை பரிதாபகரமென்பதால் தமிழகத்தில் எந்தகாலத்திலும் காலூன்ற முடியாதென்பதால் கிடைத்த அடிமைகளை வைத்து மறைமுகமாக ஆளும் நிலையை தவறவிடகூடாதென்று அதிமுக அரசிற்கு பாஜக அரசு உதவி வருகிறது பெருபான்மை இழந்த நிலையிலும் மத்தியில் ஆளும் பாசிச அரசு தூக்கிபிடித்துக்கொண்டு நிற்பதை மக்கள் உணராமல் இல்லை மக்களின் அதிகாரம் அறியாமல் இன்று ஆட்டம் போடுவோர் .. தூக்கியெறியபடும் போது வரலாற்றில் இருந்த இடமே தெரியாமல் போவார்கள் .. மத்தியல் பாசிச பாஜக மோடி அரசும் மாநிலத்தில் அடிமை அதிமுக அரசும் மக்களால் வீழ்த்தபடும் .. "அல்லற்பட்டு ஆற்றாது" .. ஆலஞ்சியார்

Wednesday, April 24, 2019

பிழைகள்

சீமானும் சீமான் தம்பிகளும் .. உள்ளக்கிடக்கில் கிடப்பதெல்லாம் அழுக்கென்றால் வந்து விழும் வார்த்தையெல்லாம் பரிசுத்தமாகவா வரும் வெறுப்பு அரசியலை மட்டுமல்ல வளர்த்தது கூடவே அசிங்கங்களையும் தான் ஆரம்பம் முதலே அவரின் பேச்சுகளை உணர்ச்சியை தூண்டி இளைஞர்களை வழிகெடுப்பதாகதான் சொன்னார்கள் உண்மையில் அவரின் செயலும் பேச்சும் வக்கிரத்தின் உச்சமாகவே இருந்தது பேரறிஞர் அண்ணாவையே மடையர் என்ற போது சீமானை புரிந்துக்கொள்ளாத இளைஞர்கள் வழிகேட்டில்தான் நிற்பார்கள் .. .. சீமானே போனை வைடா....தா என முன்பு சொன்னபோது இவர் விதைப்பதெல்லாம் சொத்தை என்று சொல்லியது நியாபகம் வருகிறது மிக மோசமான வார்த்தை பிரயோகம் நாம் தமிழர் கட்சியினர் என்றில்லை சாதிய வன்மத்தை விதைத்து வளர்க்கிற ராமதாஸ் தாசர்களிடத்திலும் காணலாம்.. ஒழுக்க நெறி அரசியல் இவர்கள் அறியாதது அதனால்தான் பிரபாகரன் இடத்தில் நானிருந்தால் ஒரு சிங்களச்சியை கூட விட்டு வச்சுருக்கமாட்டேன் என்று பேசமுடிந்தது விடுதலைப்புலிகளை இதைவிட யாரும் கேவலமாக பேசிவிட முடியாது புலிகளின் செயல்பாடுகளில் கருத்துவேற்றுமை இருந்தபோதும் ஓழுக்கநெறியை யாரும் குறைகூறியதில்லை.. .. இவர்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியுமென்ற நினைப்பு ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் காப்புரிமை வாங்கியதைப்போல பேச தொடங்கியபோது விரட்டியிருக்கவேண்டும் திராவிடத்தை வீழ்த்துவதாக சொல்லிக்கொண்டே ஜாதியத்தை வளர்த்தெடுப்பவர்கள்.. இனத்தை காட்டி பிழைக்கிற கூட்டம் கொள்கையற்ற கோமாளிகள் தங்களுக்குள் பகை வந்தால் எப்படி நடந்துக்கொள்வார்களென இன்று ஊருக்கு புரிந்தது ..சீமானை திட்டுகிறவர் தேவையில்லாமல் அவரது இணையரை வம்புகிழுக்கிறார் இதுதான் அவர்கள் கற்ற நாகரீகம் .. வெளிநாட்டு பணம் அதிகார ஆசை இவர்களை ஆட்டம் போட வைக்கிறது குறிப்பாக தமிழ்தேசியம் என்ற பெயரில் இவர்களின் கூத்து கடைசியில் கடைந்தெடுத்த அயோக்கியத்தனமென மக்களுக்கு புரிய இவர்களின் உரையாடல் உதவியது .. சீமானை நம்பி போகிறவர்கள் தகுதியை பறைசாற்றியது .. .. திராவிட அரசியல் மெத்தபடித்தவர் பள்ளிபடிப்பை கூட முடிக்காதோரென திராவிட இயக்கத்தில் பலரை கண்டிருக்கிறோம் அதிகம் படி ஆழ்ந்து படியென கல்வியை அறிவை வளர்த்தெடுத்த இயக்கத்தில் நாகரீகமான பேச்சும் சுவை குன்றாத எழுத்தும் கருத்து சுதந்திரமும் இருந்தது அனைவரையும் அரவணைத்து செல்லும் தலைமைபண்பு சிறந்திருந்தது .. கருத்து பேதம் வந்து பிரிந்தபோது கூட கடுஞ்சொல்லை கையாண்டதில்லை .. அவர்களின் குடும்பத்தினரை கேவலமாக பேசும் பழக்கத்தை கற்றுதரவில்லை நாகரீக அரசியலை எப்போதும் முன்னெடுத்த இயக்கம் திராவிடம் கடும்பகைகொண்டு பார்பனீயத்தோடு கருத்துமோதலை கொண்டிருந்த போதும் பார்பனர்களை கேவலபடுத்தியதில்லை எதிரியென்றில்லை தொடர்ந்து முதுகில் குத்தும் துரோகிகள் மீது கூட கடும்கோபம் கொண்டதில்லை கருத்தை விமர்ச்சனத்தை எதிர்கொள்ளும் போதும் எல்லை மீறாதது செயல்பட கற்று தந்தது திராவிடம் நம் மீது கடும் விமர்சனத்தை வைக்கும்போதும் எதிர்கருத்தை சொல்லும் போதும் எதிராளிகளின் கருத்து சுதந்திரத்தை காக்க எப்போதும் தவறியதில்லை .. .. அறநெறியோடு அரசியலை முன்னெடுத்த தமிழகத்தில் இன்று காதுகூசுகிறது ஏதோ பைத்தியகாரர்களிடம் மாட்டிக்கொண்ட நிலை இவர்களின் உரையாடலை கவனித்தால் கொலைக்கஞ்சா பாவிகள் என்பது தெரிகிறது நிறைய மரணங்களின் மர்மம் இவர்களின் உரையாடலில் வெளிபடுகிறது .. இனத்தை மொழியைச் சொல்லி இவர்கள் கட்டமைக்க நினைப்பவை ஆபத்தானதென விளங்குகிறது .. குறிப்பாக இளைஞர்கள் தெளிவின்றி உணர்ச்சி பெருக்கில் இணைந்திருப்பது புரிகிறது எண்ணிக்கையில் சொற்பமென்றாலும் இவர்கள் மனசிதைவிற்கு உள்ளாகியிருக்கிறார்கள் அல்லது மூளைச்சலவை செய்யபட்டிருக்கிறார்கள் ஆபத்தான போக்கு இது.. முன்பு சுப.வீரபாண்டியன் அவர்களை கொல்வேன் என சீமான் பேசிய போதே உணர்ச்சிவயபட்டு பேசியிருப்பதாக எண்ணியது தவறென்று இப்போது புரிகிறது இவர்கள் பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து கலையபடவேண்டும் ஏனெனில் இவர்கள் சுயஅறிவற்றவர்கள் இவர்கள் பின்னால் இருந்து இயக்குகிறவர்கள் இவர்களை கேலிபொருளாக்கி வேறெதையோ திட்டமிடுகிறார்கள் .. தமிழகத்தின் பொதுஅமைதியை சிதைக்க இவர்களை கொண்டு முயல்கிறார்கள் சாதாரணமாக கொலை முயற்சியெல்லாம் நடந்ததாக சொல்வதை கேட்டு கடந்து போகமுடியவில்லை இவர்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.. ஆபத்தானவர்கள் மட்டுமல்ல இவர்கள் #பிழைகள் .. ஆலஞ்சியார்

Tuesday, April 23, 2019

காயத்தை குருதியை கொண்டு கழுவாதே

காயத்தை குருதிக் கொண்டு கழுவாதே என்றார் மௌலானா ரூமி (ரஹ்).. .. நேற்றைய தினம் இலங்கை தொடர்குண்டு வெடிப்பு குறித்து மதம் ஒரு சவம் என்ற பதிவை சில நண்பர்கள் கடுமையாக விவாதித்தார்கள் சில நண்பர் தொடர்பு கொண்டு எதன் அடிப்படையில் இஸ்லாமியர்கள் மீது களங்கம் சுமத்துகிறீர்கள் யாரோ சொன்னதை நம்பி எழுதுவதா என்றெல்லாம் கதைத்தார்கள் ..இன்று இலங்கை குண்டுவெடிப்புக்கு ஐ எஸ் பொறுப்பேற்றுள்ளது இதுகுறித்த செய்தியை ஐஎஸ்ஸின் செய்தி நிறுவனமான அமாக் தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்ததற்கான எந்த ஆதாரத்தையும் ஐஎஸ் வெளியிடவில்லை.‍. மதவெறுப்பின் உச்சம் தான் இப்படிபட்ட தாக்குதல் என்பதை உணர மறுப்பதுதான் மகா கொடுமை செய்தவன் யாராக இருந்தாலும் அவனை கண்டிக்க வேண்டுமே தவிர மெல்லிய புன்னகையோடு கதைக்க கூடாது .. இன்று ஒரு இலங்கை நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது 30 மஜ்ஸித்களில் குண்டுவெடித்தபோது என்ன செய்தீர்கள் மூன்று சர்ச்களில் (கனிஸா) இடத்தில் வெடித்தற்கு பேசுகிறீர்களே என்றார் இதைபோல் தான் நிறைய நண்பர்களின் மனநிலையும் இருக்கிறது .. எந்த வழிபாட்டுத்தளத்தில் நடந்தாலும் கடுமையாக கண்டிக்கவேண்டும் .. புலிகளால் பள்ளியில் நடத்தபட்ட கொடூர தாக்குதலை கண்டித்திருக்கிறோம் .. மனிதர்களை கொத்து கொத்தாக கொல்வதை யார் செய்தாலும் ஏற்க முடியாது .. மனிதநேயமுள்ள அனைவரும் கண்டிக்கவேண்டும் .. ஆனால் தன்னை சார்ந்தவன் என்பதற்கு அவனை காக்க நினைப்பதும் அவனது செயலுக்கு ஒருவகை நியாயம் கற்பிப்பதும் தான் மிகபெரிய கொடுமை .. காயத்தை குருதிக்கொண்டு கழுவும் செயல் இது .. .. குண்டுவெடிப்பு தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்ட குறிப்பில் ஐஎஸ்ஐஎஸ் உடைய அடையாளங்களை இருந்ததாக சர்வதேச புலனாய்வு வல்லுனர்கள் சொல்கிறார்கள் இலங்கை சேர்ந்த அமைப்பு செயல்பட்டிருந்தாலும் அதன் பின்னில் ஐஎஸ் இருப்பதற்கான செய்தி வருகிறது .. intelligence sources had earlier said the attacks bore some of the hallmarks of the ISIS. International experts had said, even if a Sri Lankan group had carried out the attacks, it was likely that the ISIS were involved given the level of sophistication of the apparently coordinated bombings. .. இலங்கை இஸ்லாமிய நண்பர் ஒருவர் தன் பதிவில் சில விடயங்களைப்பற்றி பேசுகிறார் .. மதரஸாக்களின் பாடதிட்டங்களை அரசிடம் தந்து அனுமதி பெறவேண்டும் ஜூம்மா குத்பா உரையை முன்கூட்டியே சில மார்க்க அறிஞர்கள் கொண்ட குழுவின் ஒப்புதலுக்கு பிறகே பேச வேண்டும் இதை அரசு கண்காணிக்கவேண்டும் என்கிறார் .. இது கீழைநாடுகளில் நடைமுறையில் உள்ளதுதான் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் இப்போதும் சில கட்டுபாடுகளோடுதான் மதரஸா நடத்தபடுகிறது ஜூம்மா உரை கூட தணிக்கை செய்யபடுகிறதென்கிறார் .. காரணம் இளைஞர்களை மாணவர்களை தீவிரவாதத்தின் பக்கம் இழுக்க இவைகள் பயன்படுவது வெளிப்படையாக தெரிகிறது பொது சமூகமும் சந்தேகம் கொள்கிறது, எந்த ஒரு உயிரையும் காரணமின்றி கொல்வதை எம் மதமும் கோரவில்லை விரும்பவும் இல்லை இது போன்ற கொடுஞ்செயல்களை செய்கிறவனை தயைகூர்ந்து கனிவோடு பார்க்காதீ்ர்கள் ஆதரிக்காதீர்கள் செய்திருக்கமாட்டானென சப்பைகட்டாதீர்கள் அப்படி செய்வது மேலும் சிலரை தவறான பாதையில் பயணிக்க உதவிடகூடும் .. மதத்தை கடவுளை உங்கள் வழிபாட்டோடு நிறுத்துக்கொள்ளுங்கள் அடுத்தவர் மீது அடித்தமர்த்த செய்வதுதான் பிரச்சனைக்கு காரணம் என்பதை உணருங்கள் பக்கத்திலுள்ளவரை கனிவோடு பாருங்கள் மதம் மனிதனை மடையனாக்கும் என்பதை உணருங்கள் அவரவர் வழி அவரவருக்கு என்ற தெளிவிருந்தால் இது போன்று நிகழாது .. இரக்கமின்றி கொல்பவன் மனிதனே அல்ல .. ஆலஞ்சியார்

Monday, April 22, 2019

மதம் ஒரு சவம்

மதம் ஒரு சவம் என்றார் நவீன துருக்கியின் தந்தை முஸ்தபா கமால்பாட்ஷா .. .. உன் மதம் உயர்ந்ததென்று பிற மதத்தினர் மீது தாக்குதல் நடத்துகிற பேடித்தனத்தை தான் மதம் போதித்ததா..? எல்லா மதங்களும் அன்பை தானே போதிப்பதாய் சொல்லி திரிகிறீர் எப்படி வெடிகுண்டோடு மனிதர்கள் மத்தியில் வெடிக்கிறீர் தனிபட்ட பகையல்ல நீண்டநாள் திட்டமிட்டு குறிப்பிட்ட ஒரு சாராரை கொல்வது எந்தவகை நியாயம் மதம் தீவிரவாதத்தை தான் சொல்கிறதென்றால் மதம் துறந்து மனிதனாக வா.. .. நெஞ்சு பதறுகிறதே.. எப்படி இவர்களால் இப்படி செய்ய முடிகிறது .. தாக்குதலில் ஈடுபடுவோரை கவனித்தால் இளம்வயதினராக இருக்கிறார்கள் அவர்களுக்கு பணம், மதத்தின் மீதான வெறி தாக்குதல் நடத்தினால் நேரடியாக சொர்க்கத்திற்கு செல்லலாமென மூளைச்சலவை செய்து இளைஞர்களை வழிகெடுக்கிறார்கள் குறிப்பிட்ட மதம்(இஸ்லாம்) தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்களில் அதிகம் ஈடுபடுகிறது .. நான் கண்டவரை இஸ்லாம் வன்முறையை போதித்தாக அறிவில்லை .. வரலாற்றில் சில விடயங்களில் அதிகார பசிக்காக நடந்ததெல்லாம் மதத்தின் பெயரால் இல்லை .. பிறகு எங்கிருந்து வந்தது பக்கத்துவீட்டுகாரனை கூட சிநேகத்தை கொண்டு பார் என்கிற மதத்தில் அப்பாவிகளை கொன்று குவிக்க சொல்லியிருக்கிறதா .. சில மதபோதகர்கள் செய்கிற மூளைச்சலவை இ்ஸ்லாத்தின் காவலர்களாக தங்களை எண்ணிக்கொள்கிறவர்கள் உண்மையில் மனிதமற்ற மகாபாவிகள் .. .. இந்த தாக்குதலை இலங்கையில் உள்ள தேசிய தஹ்ஹீத் ஜமாத் எனும் இஸ்லாமியஅமைப்புதான் என்று சந்தேகிக்கிறோம். இந்த அமைப்புக்கு ஏராளமான வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறது கொழும்பு குண்டு வெடிப்பை நிகழ்த்திய இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கத்தின் பெயரை விசாரணைகளின் முடிவில் இலங்கை அரசு அறிவித்து இருக்கிறது.. சிலர் உடனே இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை.. சிலர் முஸ்லிம் அமைப்புகள் செய்கிற செயலுக்கு எப்படி பொறுப்பேற்க முடியுமென சப்பைகட்டாதீர்கள் இப்படிபட்ட கொடூரசெயலை செய்தவர்களை கண்டித்து பாதிக்கபட்டவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும், கொழுப்பு தாக்குதலில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டுமென்று குரலை உயர்த்தி சொல்வோம் .. வன்முறை எதற்கும் தீர்வாகாது தோக்கு (துப்பாக்கி) தூக்கியவன் தோக்காலேயே சாவான் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது இலங்கை இன பயங்கரவாதத்திலிருந்து மீண்டு மத பயங்கரவாத்தின் பிடியில் கிடக்கிறது .. பச்சிளங்குழந்தை என்ன பாவம் செய்தது தானே அறியாமல் மதத்தின் மீது நின்றது பாவமா பாவிகளே ..கடவுள் மன்னிப்பாரென்றெல்லாம் நினைக்காதீர் இல்லாத ஒன்றுக்காக இரக்கமின்றி திரியாதீர் மதம் பிடித்து அலையாதீர் .. மதம் மனிதனை மடையனாக்கும் பிற மதத்தவரின் மீது வன்மத்தை வளர்க்கும், மதம் கடந்து மனிதம் வளர்ப்போம் .. ஆலஞ்சியார்

Sunday, April 21, 2019

மோடி.V/S பிரியங்கா

குறுகிய சிந்தனையிலிருந்து நாட்டை காப்பாற்றுங்கள் பிரியங்கா .. .. 12 ஏவுகணைகளை வைத்திருந்தேன் அபிநந்தன் விடுவிக்காவிட்டால் பாகிஸ்தான் நிலை அவ்வளவுதான் மோடி . .. இரு கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு இதுதான் அபிநந்தனை பெருந்தன்மையாக நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் சொன்னபோது மறுத்து எங்கள் மிரட்டலுக்கு பயந்துதான் விடுவித்தாரென சொல்லாத பிரதமர் நாடெங்கும் மக்கள் கடுங்கோபத்தில் பாஜகவிற்கெதிராக தனக்கெதிராக வாக்களிக்கிறார்களென முதல்கட்ட தகவல் வந்தவுடன் வேறு வழியின்றி பாகிஸ்தானை இழுக்கிறார் .. நான் இதுவரை செய்தது என்ன என்றெல்லாம் பேச வக்கின்றி .. செய்ததெல்லாம் மக்கள் விரோத போக்காக இருப்பதால் கடைசி ஆயுதமாக இந்திய பாகிஸ்தான் விரோதபோக்கை கையிலெடுக்கிறார் .. பாவம் இந்த முறையும் தோற்கபோகிறார் சாது ஒருவர் பாபர் மஜ்ஸிதை இடித்ததில் பெருமை கொள்வதாக சொல்லி வாக்கு கேட்கிறார் ராமனுக்கு கோவில் கட்டியே தீருவோமென பழைய பாடலை மீண்டும் பாடுகிறார்கள் சுருதிபிழையோடு .. மக்கள் மீதான பொருளாதார தாக்குதல்கள் .. நடுத்தர குடும்பங்களின் விலைவாசி உயர்வு கேஸ்விலை ₹1000த்தை தாண்டுகிறது .. ₹400 கடந்த போது நடுரோட்டில் போராட்டம் நடத்தியவர்கள் இன்று கள்ளமௌனம் காக்கிறார்கள் .. வாக்குபதிவு சாதாகமாக இல்லையென்றவுடன் பெட்டியை திருடலாமா என பார்க்கிறார்கள் ரெக்கார்ட் ரூமிற்கு பலத்த பாதுகாப்பு.. ? மீறி சென்று வருகிற நிலை தேர்தல் ஆணையம் இதையெல்லாம் கண்டும்காணததைப்போல நடந்துக்கொள்கிறது .. இதையெல்லாம் மீறி மக்களின் மோடி எதிர்ப்பு அலை சுருட்டிக்கொண்டு போகுமென அஞ்சி தீவிரவாதம் பாகிஸ்தான் என கதையளக்க வருகிறார் மோடி .. .. குறுகிய சிந்தனைகளில் இருந்து நாட்டை காப்பாற்றுங்கள் என்கிறார் பிரியங்கா ''ஆட்சி அதிகாரத்திற்காக காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடவில்லை. நாட்டின் மிகப்பெரிய #கருத்தியலான ஜனநாயக சக்திகளின் பலத்தை பெருக்குவதற்காக போட்டியிடுகிறது. நாம் எல்லோரும் ஒருவரையொருர் நேசிக்கவும், ஒருவரையொருவர் நம்பவும் இந்த நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே இத் தேர்தல் நடைபெறுகிறது. நாம் அனைவரும் சமம், கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம், நமது மதம், நம் உணவுமுறைகள், நம் வாழ்க்கைப் பாதைகள் எல்லாவற்றிற்கும் இந்த நாட்டில் இடம் உண்டு. ஒரு குறிப்பிட்ட தலைவரின் பெயரைச் சொல்லி விமர்சிப்பதற்குக் கூட பயமாக இருக்கிறது. ஆளும் இந்த அரசாங்கத்திடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் " .. எவ்வளவு நேர்த்தியான உரைவீச்சு .. பன்முகதன்மை சிதையாமல் நாட்டின் இறையாண்மைக்கு கேடுவராமல் பயமின்றி மக்கள் வாழ எல்லா சமுகமக்களும் ஒற்றுமையோடு இந்த மண்ணில் தங்கள் உரிமையை பெற்றிட சாதிமத பேதமற்ற சமத்துவம் மலர காங்கிரஸ் ஒன்றே தீர்வு நாட்டின் நலன் கருதி மதவெறி பிடித்தவர்களிடமிருந்த நாட்டை காக்கவேண்டும் அதற்கு பாசிச பாஜகவை வீழ்த்தியே ஆகவேண்டும் இரு கட்சிகளுக்குமான நோக்கம் புரிந்திருக்கும் .. யார் தேவை என்பதை இந்திய மக்கள் உணர்வார்கள் .. மோடி ஆட்சியை வீழ்த்துவார்கள் .. ஆலஞ்சியார்

Friday, April 19, 2019

திருமா..

கலவரம் செய்ய ஒரு ரௌடி போதும் கூட்டத்தில் ஒருவன் கல்லெறிந்துவிட்டாலே அங்கே கலவரம் ஏற்படும் .. இதை செய்ய எதற்கொரு தலைவன் .. வன்முறையையும் கலவரத்தையும் தடுப்பவன்தான் தலைவன் .. தொல்.திருமாவளவன் .. திருமா மிகச்சிறந்த தலைவராக நடந்துக்கொண்டிருக்கிறார் கலவரத்தை நடத்தியவர்கள் யார் தூண்டியவர்கள் யார் என்று தெரிந்தும் திருப்பி அடிக்க நொடி போதும் உழைத்து உழைத்து வலுவேறிய கரங்கள் உண்டு ஒற்றை சொல் போதும் இருக்குமிடம் தேடி போய் அடிக்கமுடியும் ஆனாலும் கலவரத்தால் அடித்து நொறுக்குவதால் என்ன பயன் .. தன் சமூக மக்களை கல்விக்கொண்டு மேம்படுத்த வேண்டும் சமுகமக்களின் ஏழ்மையை போக்கவேண்டும் கல்வி வேலைவாய்ப்பில் உயர்த்தை எட்ட தொடர் முயற்சியும் அதற்கான பயிற்சியும் தரவேண்டும், விளிம்புநிலையில் நிற்போரை உயர்ந்த சமூக அக்கறையோடு உழைக்க வேண்டுமென எண்ணுகிற தலைவர் திருமா .. .. சாதிவெறிபிடித்தவர்கள் உங்கள் குழந்தைகளின் கையில் அரிவாளையும் கத்தியையும் தருகிறீர்கள் அவனை ஒரு அடியாளைப்போல உருவாக்குகிறீர்கள் வன்முறை அடிதடி கலவரம் என சிறுவர்களிடத்தில் விஷத்தை விதைக்கிறீர் .. நாளை கள்ளசாராயம் காய்ச்சுபவனாகவோ.. யாருக்காவது அடியாளாகவோ கூலியாகவோ தான் அவன் வருவான் .. அவனது வாழ்கையை சிறுவயதிலேயே சிதைக்கிறீர்கள் இதை நிலை தொடர்ந்தால் நாளை அவனை சிறைசாலைகளில்தான் காணநேரிடும் .. உம்மில் சாதிவெறியை தூண்டிவிடுகிறவன் வீட்டுபிள்ளைகள் உயர்ந்த மாளிகையில் உல்லாசமாய் வாழ்கிறார்கள் .. உயர்கல்வி உயர்பதவி என வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் உன்னை கலவரம் செய்ய தூண்டிவிட்டு அவன் உல்லாசமாய் வாழ்கிறான் .. நீயோ வழக்கு கைது சிறையென சட்டபோராட்டத்திலேயே காலத்தை கழிக்கவேண்டிவரும் .. வன்முறை எதற்கும் தீர்வாகாது உன்னை திருப்பி அடிக்க தெரியாமல் இல்லை .. அவன் வலி பல கண்டவன் .. அடிக்க அடிக்க கல்வியில் உயர்ந்து உன்னை அதிகாரம் செலுத்தும் பதவியில் அமர வேண்டுமென்ற வேட்கையோடு .. நீ கையெடுத்து கும்பிட வேண்டுமென்று குறிக்கோளோடு வாழ்கிறான் .. சாதிவெறிபிடித்த மடையனே .. உன் வழிநடத்துகிறவன் உன் சந்ததியின் எதிர்காலத்தையே சீரழிக்கிறான் .. அவன் சுகபோகவாழ்விற்காக உன்னை வழிகெடுக்கிறான் .. தொல் திருமா ஒரு சமூதாயத்திற்கு நல்ல தலைவன் கிடைத்துவிட்டால் போதும் அந்த சமூகமக்கள் கல்வியில் அறிவில் மிளிரலாம் வாழ்வில் நிறைய உயரங்களை அடையலாம் .. மக்களை வன்முறை கலவரமென என மடைமாற்றாமல் .. அவனை அமைதிபடுத்தி கல்வியில் சிறந்துவிளங்க செய்வதும் அதற்கான வாய்ப்புக்களை உருவாக்கி தருவதும் அவனது உரிமைக்காக தொடர்ந்து போராடி பெற்று தருவதும், சமூக முன்னேற்றம் என்ற ஒற்றை குறிக்கோளோடு செயல்படுகிற தலைவர் .. நாட்டின் அமைதி பிற சமூகமக்களிடம் நல்ல மதிப்பும் ,சமூக நீதிக்காக போராளியாக உயர்ந்து நிற்கிறார் .. இரட்டை பேச்சில்லை.. மாறி மாறி பொய் சொல்வதில்லை தன் சுயநலத்திற்காக சமூதாயத்தை அடகுவைக்கவில்லை பிற சமூகமக்களின் மீது வெறுப்பில்லை என சிறந்த தலைவனுக்குரிய இலக்கணத்தோடு இருக்கிறார் ஒடுக்கபட்ட மக்களின் உயர்விற்கு பாடுபடுவதென்பது இந்திய சமூகத்தில் என்னவெல்லாம் இன்னலை தருமென்று அறிந்து மிக நேர்த்தியாக தன் சமூகமக்களை வழிநடத்துகிற தலைவராய்,பக்குவமடைத்தவராய் நிதானமாக செயல்படுகிறவராய்.. மிக சிறந்த தலைவராக தெரிகிறார் திருமா .. .. எந்தவொரு சமூகமும் நல்ல தலைவனை தலைமுறைகள் தாண்டியும் கொண்டாடும் .. வழிகெடுத்தால் வாழும்போதே தூற்றும் .. .. ஆலஞ்சியார்

Wednesday, April 17, 2019

ஜனநாயகம் காப்போம்

தேர்தல் அதிகாரி மாவட்ட கலெக்டர்: மேடம் என் நேர்மையை சந்தேகக்கிறீங்களா? கரூர் வேட்பாளர் ஜோதிமணி: இல்ல சார் நீங்க நேர்மையா இல்லன்னு நேரா சொல்றேன்.. .. நேர்மையாளர்கள் அஞ்சுவதில்லை ..அதேபோல அறம் மீது நம்பிக்கையுள்ளவர்களும் எதற்கும் பணிந்து போவதில்லை ஆணையம் நேர்மையோடு நடந்துக்கொள்ளவில்லையென்பதை மக்களே உணர தொடங்கியிருக்கிறார்கள் .. பணபட்டுவாடா ஜோராக நடப்பது அறிந்தும் அதை வீடியோவாக (ஒளிநாடா) வெளிவந்தும், கண்டுகாணததுபோல இருப்பதை மக்கள் உணர்வர் .. நேற்று கனிமொழி வீட்டில் இரவில் சோதனை என்ற பெயரில் நடந்த கூத்து யார் சொல்லி செய்ததென்று வருமானவரித்துறையால் சொல்லமுடியுமா .. ஏதோ ஒரு அழைப்பில் (call) சொன்னதை நம்பி சோதனை செய்வதாக சொல்பவர்கள் ஊரறிந்து பணபட்டுவாடாவை தடுத்து நிறுத்த முயல்வதில்லையே ஏன் .. இதுவரை எதிர்கட்சியினரை குறிவைத்தே சோதனை செய்யபடுகிறதே ..ஆளும் தரப்பில் அவ்வளவு யோக்கியமானவர்களா .. யாரை திருப்திபடுத்த இந்த செயல் அரசியல் சாசன வரம்பிற்குள் நின்று நேர்மையோடு செயல்பட வேண்டாமா.. கலெக்டர் என்னை மிரட்டுகிறார்கள் என்கிறார் புகார் தந்தால் இரவில் வாங்க முடியாதென்று தேர்தல் அதிகாரி சொல்வது எந்தவகை நியாயம் .. இரவில் சோதனை நடத்தலாம் புகாரை மட்டும் பகலில் தான் வாங்குவோம் .. தேர்தலை நிறுத்துவேன் என மாவட்ட ஆட்சியர் பேசுவது வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது தனக்கு பாதுகாப்பில்லையென உணர்ந்தால் காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டுமே தவிர வேட்பாளரை தேர்தலை நிறுத்திவிடுவேன் என மிரட்டகூடாது அப்புறம் இவருக்கு இவர் மிரட்டியவர்களுக்கும் என்ன வேறுபாடு மிரட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டுமே தவிர வேட்பாளரை அன்பாக மிரட்ட கூடாது .. ஆட்சியர் ஜோதிமணியை அறிந்திருக்கவில்லை .. அச்சமின்றி நேர்மையோடு செயல்படும் திராவிடச்சி.. இன்னும் நிறைய தில்லுமுல்லுகளை அதிகாரிகள் துணைக்கொண்டு செய்வார்கள் .. பாஜகவை சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அகர்வால் நேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லமுடியாதென்று போட்டுடைத்துவிட்டார் எதையும் செய்ய துணிவார்கள் கவனமாக செயல்படவேண்டிய நேரமிது .. முதல்கட்ட வாக்குபதிவு நடந்த இடங்களில் பலத்த தேசம் பாஜகவிற்கு வருமென செய்திகள் வருவதாக forntline ஆசிரியர் விஜயசங்கர் சொல்கிறார் ..வடமாநில மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் தென்னகமோ பாஜகவிற்கு மரண அடியை தரும் .. தமிழகத்தில் அதிமுக மீதான வெறுப்பு .. தலையாட்டியைப்போல மத்திய அரசு சொல்லுமிடத்தில் எல்லாம் மறுப்பே இல்லாமல் கையெழுத்திட்டு தமிழர்களின் நலன்களை காவுகொடுக்கிற ஆட்சி தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி .. தமிழகத்திற்கெதிராக தொடர்ந்து செயல்படுகிற பாஜகவை கேட்காமலேயே பின்துணைக்கிற கேடுகெட்டவர்களை விரட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள் .. பாஜக அதிமுகவிற்கெதிரான வாக்குகளை பிரிக்க .. டார்ச்லைட்டை கையில் கொடுத்து ஓவராக நடிக்க சொல்ல.. முழுநீள திரைக்கதையும் கடைசியில் ப்ளாப் ஆன கதையாகி போனது .. சினிமா எடுத்து போண்டியானவர் .. யாரும் படமெடுக்க தயாரில்லை என்றவுடன் நாக்பூரின் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.. மிகப்பெரிய தோல்வி என்றறியாமல் .. சில உதிரிகட்சிகளும் இந்த தேர்தலோடு துடைத்தெறியபடும் .. மக்கள் தெளிவோடு நாளை தீர்ப்பெழுத இருக்கிறார்கள் .. இனியொரு அனிதாவை இழக்கமாட்டோம் .. மக்கள் விரோத திட்டங்களை (மீத்தேன் ஹைட்ரோ கார்பன்) செயல்படுத்த அனுமதியோம் விவசாயத்தை காப்போம் என உறுதியேற்போம்.. ஒரே நாளில் சிறுக சிறுக சேர்த்த பணத்தை செல்லாதென்று அறிவித்த அதிமடையர்களை அதிகாரத்திலிருந்து கீழிறக்குவோம் .. மதவெறியை தூண்டி மாட்டிறைச்சி அரசியலை கையிலெடுத்து கொன்று குவிக்கும் காவிகளை எம் மண்ணில் நுழைய அனுமதிக்கமாட்டோம் .. அண்ணன் தம்பிபோல் வாழ்ந்த தமிழ் சமுதாயத்தில் மதவெறியை தூண்டும் கயவர்களை இனங்கண்டு விரட்டுவோம்.. தமிழகத்தின் கலாச்சாரம் பண்பாட்டை காப்போம் அயோக்கியர்களை அடையாளம் கண்டு வீழத்துவோம் .. பாசிச பாஜகவையும் அடிமை அதிமுகவையும் அதிகாரத்திலிருந்து விரட்டிட திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்போம் .. ஆலஞ்சியார்

Tuesday, April 16, 2019

வாக்கு விற்பனைக்கல்ல

தேர்தல் பரப்புரை ஓய்ந்தது .. ஒருநாள் இடைவெளியில் நமது வாக்கை யாருக்கு அளிக்கவேண்டுமென சுயம் ஆலோசித்திருப்பீர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கும் உரிமை உமக்குண்டு ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயகத்தில் அரசன் .. மக்களாட்சியின் தத்துவம் இதுதான் .. கேரளாவில் ஒரே ஒரு வாக்கிற்காக பலமைல்கள் நடந்து சென்று மலை மேட்டில் வாக்குசாவடியை அமைக்கும் ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனின் உரிமையை/ வாக்கை எந்தளவு மதிக்கிறதென்ற உண்மை விளங்கும்,.. யார் நம்மை ஆளவேண்டுமென தீர்மானிக்கும் உரிமையை தவறான பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் கெடுதிகள் தங்களை மட்டுமல்ல தங்களின் சந்ததிகளை மட்டுமல்ல பொது சமுகத்தையும் பாதிக்கும் என்றறிந்து முடிவெடுக்கவேண்டும்.. சாதிமத பேதமற்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்கவேண்டும் இந்த மண்ணில் எக்காரணம் கொண்டும் மதவெறி தாண்டவமாடுவதையோ.. சாதிபித்து தலைக்கேறி சக மனிதனை அடித்து துன்புறுத்துவதையோ ஏற்கமுடியாது .. குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு மட்டுமே கல்வி வேலைவாய்ப்பு உயர்பதவியென அமைவதை ...ஏன் பிற பிரிவினர்களுக்கு மறுக்கபடுகிறதென்பதை அவர்கள் உயர எழ எப்படியெல்லாம் தீய பாசிச சக்திகள் தடையை ஏற்படுத்துகிறதென்பதை இந் நாட்டுமக்கள் உணர்ந்து வாக்களிக்களிக்கவேண்டும் .. இந்த தேர்தல் இரு வேறு கொள்கைகளின் இடையே நடக்கும் தேர்தல் எளிமையாக சொல்லவேண்டுமெனில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என்ற அறநெறியோடு கூடிய சமதர்ம கோட்பாட்டிற்கும் பிறப்பின் அடிப்படையில் பிரிந்து நிற்க சொல்லும் சனாதனத்திற்குமான தேர்தல் .. மக்கள் அனைவரும் சமமான நீதியை தரவேண்டும் தொழில்ரீதியாக பிரித்து அவனை கீழ்மேலென பாகுபாடுசெய்திட எண்ணும் பாசிசத்திற்கு .. அமைதியான முறையில் பதிலடி தரவேண்டும் .. நாட்டின் அமைதியை கெடுத்து அண்ணன் தம்பியாய் வாழ்ந்த பெருமக்களிடையே பகைமூட்டி வெறுப்பதை வளர்த்து சாதியென்றும் மதமென்றும் சிறுபான்மையென்றும் தீவிரவாதியென்றும் சொல்லி நஞ்சை விதைக்கிற நயவஞ்சக கூட்டத்தை நாம் புரிந்துகொண்டு .. இவர்களை இனியும் அனுமதித்தால் நாடுமட்டுமல்ல நம் குடும்பமும் நாளை அடிமைத்தனத்தில் கிடக்கவேண்டி வரும் .. உங்களிடம் ஒரு நல்வாய்ப்பை தந்திருந்திருக்கிறது ஜனநாயகம் .. அதை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதில் தான் உங்களின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது .. .. வாக்கு விற்பனைக்கல்ல .. சில நூறோ சில ஆயிரமோ உங்கள் வாக்குகளை வாங்க சிலர் வருகிறார்கள் எச்சரிக்கை ஐந்தாண்டுகளில் நீங்கள் அவர்களுக்கு அடிமைசாசனம் எழுதிக்கொடுத்ததைப்போல / அடகுவைத்துவிடாதீர்கள் .. விலைக்கு விற்றுவிட்டபிறகு உங்களின் உரிமைகளை பறித்தாலோ,நசுக்கபட்டாலோ நீங்கள் போராட கேள்விகேட்க தார்மீக உரிமையை இழக்கிறீர்கள்.. சில ரூபாய்களுக்காக தன்மானத்தை இழக்கிறீர்கள் உங்களின் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விகுறி ஆக்குகிறீர்கள் மிகவும் ஏழ்மையான மக்கள் அதிகம் வசிகிகும் பீகாரில் கூட வாக்கிற்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்குவதில்லை ஆனால் தமிழகத்தில் முன்பெல்லாம் பண்ணையார்களும் நிலகிழார்களும் தங்களின் கூலிகளுக்கு பணம் கொடுப்பார்கள் .. ஆனால் பேரறிஞர் அண்ணாவை தோற்கடிக்க காமராஜர் தொடங்கிவைத்த ஓட்டுக்கு காசு அப்போ ஐந்துரூபாய் .. இன்று பெருகி ₹500 ₹1000 என உயர்ந்திருக்கிறது தமிழன் தலைகுனிந்திருக்கிறான் .. இந்த கேடுகெட்ட நிலைக்கு எல்லா கட்சிகளுக்கும் காரணம் .. ஏன் இன்னும் எங்கள் பக்கம் வரவில்லையென தரவில்லையென மக்கள் கேட்கிற கேடுகெட்ட நிலை ஏற்பட்டிருக்கிறது இது மாறவேண்டும் எந்த சூழலிலும் வாக்கு விற்பனைக்கல்ல என்ற உறுதிபாட்டை கொள்வோம் யாருக்கு வாக்களிக்க வேண்டு விரும்புகிறோமோ அவருக்கு வாக்களிப்போம் யாரும் நம்மை தடைபோட முடியாது .. நமது வாக்கு நமது உரிமை .. "the ignorance one voter in a democracy impairs the security of all " // John.F. Kennedy .. அறியாமையில் செய்கிற தவறு அனைவரையும் பாதிக்கும் என்று உணர்ந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்.. .. நல்லதொரு விடியலை தருவோம் .., ஆலஞ்சியார்

Monday, April 15, 2019

திமுககூட்டணிக்கு வாக்களிப்போம்

இன்னும்.. சிலநாட்கள் யாருக்கு வாக்களிக்க கூடாதென்பதில் கவனமாக இருக்கும் நாம் யாரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதில் கோட்டைவிடுகிறோம்.. இங்கே சில உதிரிகள் நேற்றுவரை யாரென்று தெரியாதவர்கள் திடீரென நாட்டின் மீதும் மக்களின் மீதும் அக்கறை கொண்டவர்களைபோல நடிக்கிறார்கள்.. சில மொழியை காக்க மண்ணை காக்க எங்களை விட்டால் யாருமில்லையென பம்மாத்து செய்கிறார்கள் சிலரோ சாதிய பின்புலத்தை நம்பி நிற்கிறார்கள் .. இவர்களுக்கு வாக்களிப்பது நேரடியாக பாசிசத்திற்கு துணைபோவதற்கு சமம் .. முதலில் எதிர்க்கபடவேண்டியவர்கள் அல்லது விரட்டபடவேன்டியவர்கள் இனங்காண்போம் ..பாஜக அதிமுக நாட்டை மதத்தின் பேரில் பிரித்து பன்முகதன்மையை சிதைக்க நினைப்பவர்கள் ஜனநாயகத்தின் அத்தனை மரபுகளையும் உடைத்தெறிந்து இந்திய அரசியல் சாசனத்தையே கேள்வி கேட்பவர் .. இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையையே தகர்க்க நினைக்கிறவர்கள் .. ஷோசலிசம் மதசார்பின்மை ஜனநாயகம் குடியரசு (Socialism Secularism democracy Republic ) என்ற அடிப்படையையே தகர்க்க நினைக்கிற பார்பன மேலாதிக்க மத கோட்பாட்டை, சனாதனத்தை திணிக்க முயல்கிற பாசிச பாஜக .. ஆர்எஸ்எஸின் கண்ணசைவில் இயங்குகிற அரசு அனைத்து பதவிகளையும் பார்பன உயர்வகுப்பினருக்கு தாரைவார்க்க நினைக்கிற செய்கிற அரசை வீழ்த்த வேண்டும் அதீத பெரும்பான்மை சர்வாதிகாரத்தையே தருமென்பது ஜனநாயகத்தில் தொடர்ந்து கண்டுவருவதை வரலாறு நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.அதுதான் கடந்த ஐந்தாண்டில் கண்டது.. தான்தோன்றித்தனமாய் எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல்படுகிற மத்திய அரசு.. மாநிலத்தில் இதுவரை இல்லாத அடிமைகளாய் தமிழக நலனை கேட்பதற்கு முன்பே தாரைவார்க்கும் அடிமுட்டாள்களின் கையில் சிக்கி தவிக்கிறது .. இவர்கள் விரட்ட கீழிறக்கபடவேண்டும் .. .. யாருக்கு வாக்களிப்பது சிலர் புதியவராய் வந்திருக்கிற கமல் .. இனம்மொழி பேசும் சீமானென இவர்களுக்கு வாக்களிக்கலாமா என கேட்கிறார்கள் .. இவர்களுக்கு வாக்களிப்பது நேரடியாக பாஜக அதிமுகவிற்கு வாக்களிப்பதற்கு சமம் .. இப்போதே வெளிப்படையாக ஒருவேளை வெற்றிப்பெற்றால் (டெபாசிட்) கட்டிவச்சகாசு கிடைக்காதென்பதுதான் உண்மை) பாஜகவிற்கு ஆதரவு என்று தன் சுயத்தை வெளிபடுத்தியிருக்கிறார்..இவர்களை புறந்தள்ளுவோம் தினகரனுக்கும் இதே நிலை பொருந்தும் கூடவே வாக்கை விலைபேசும் ஈனச்செயலை கொஞ்சமும் கூச்சமின்றி அதை பெருமையாக கருதுகிறவர் இவர்களுக்கு வாக்களிப்பது விழலுக்கு இறைத்த நீர் .. .. இன்றைய நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணியை தவிர தமிழகத்தில் பலம்பொருந்திய கூட்டணி வேறில்லை பாசிசபாஜகவையும் அடிமைகளையும் வீழ்த்த பணம் அதிகாரம் மிரட்டல் சோதனை கைதென அச்சுறுத்துகிறவர்களை வீழ்த்த காங்கிரஸ் திமுக அணி ஒன்றுதான் சரி பலம் பொருந்தியவனை பின் துணைத்து சர்வாதிகாரத்தை வேரறுக்கவேண்டும் .. பலமான அணி என்பது ஒன்றுமட்டும் வாக்களிக்க தகுதியாகிவிடுமா .. ஓட்டுக்கள் சிதறாமல் அதன் மூலம் பாஜக அதிமுகவை தோற்கடிக்க வேண்டுமென்ற நியாயம் புரிகிறது அதுமட்டும் தகுதியாகி விடுமா .. என கேள்வி எழும் .. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையும் திமுகவின் வாக்குறுதியும் தொலைநோக்கோடு இந்த மண்ணின் நலன்சார்ந்து மக்களின் உணர்வுகளை மதித்து கல்வி வேலைவாய்ப்பில் நமக்கான உரிமைகளை தர உறுதியளிக்கிறது .. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதென முடிவெடுக்கிறது .. எட்டுவழிச்சாலை ஒரு கட்சி எதிர்ப்பதும் அந்த கட்சியை வைத்துக்கொண்டே மத்திய அமைச்சர் கொண்டுவந்தே தீருவோமென பேசுகிற இரட்டை வேடம் திமுக காங்கிரஸிடம் இல்லை ..நீட் தேர்வை எதிர்ப்பதாக சொல்லிவிட்டு ஆர்எஸ்எஸ்காரனை கல்வி அமைச்சராக்கி யாருக்கும் தெரியாமல் கையெழுத்திட்ட அயோக்கியத்தனம் திமுக காங்கிரஸிடம் இல்லை வாயை திறந்தால் பொய்யில்லை .. எதை செய்யமுடியுமென ஆய்ந்து அது மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுமா என அறிந்து செயல்படுகிறார்கள் .. போட்டோவிற்கு போஸ் கொடுத்துக்கொண்டு உலகம்சுற்றி திரியாமல் மக்களோடு கலந்து பயணிக்கிறவர்கள் .. மக்கள் நேசிக்கிற வெற்றி தோல்வி இரண்டிலும் மக்களை நேசிக்கிற தொண்டாற்றுகிற நேர்மை அரசியலை முன்னெடுக்கிறார்கள் .. ஏமாற்று இல்லை பித்தாலாட்டம் இல்லை எதையும் விலைக்கு வாங்கலாமென்ற திமிரில்லை .. மக்களின் ஆதரவோடு வாக்கு கேட்கிறார்கள் .. நாட்டுமக்கள் நிம்மதியாக வாழ .. ஒன்றுபட்டு பன்முகதன்மையும் .. ஒவ்வொருவரின் தனித்தன்மையும் மாறாமல் .. எதை உண்ணவேண்டும் எதை உடுத்தவேண்டும் எதை பின்பற்றவேண்டுமென்று அவரவர் தீர்மானிக்கும் சுதந்திரத்தை தரும் அரசை அமைப்போம் .. பாசிசத்தை வீழ்த்துவோம் .. உதிரிகளுக்கு வாக்களித்து பாசிசத்திற்கு மறைமுகமாக ஆதரவளிப்பது உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நீங்க வைக்கிற கொள்ளி .. ஆம் .. விழலுக்கு இறைத்த நீரைப்போல வீணாகாமல்.. திமுக காங்,கம்யூனிஸ்ட் மா.கம்யூ.இ.யூ.முஸ்லிம்லீக் விடுதலைச்சிறுத்தைகளுக்கு கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை .. நாற்பதும் நமதே நாடும் நமதே.. .. ஆலஞ்சியார்

Saturday, April 13, 2019

சாந்து கலையத் தொடங்கியிருக்கிறது

நடிகர்கள் அரசியலுக்கு வருவதும் .. பொதுவாழ்விற்கு வந்தவர்கள் நடித்துக்கொண்டிருப்பதும் நாம் அறிந்தது தான் .. ஆனால் அரசியலுக்கு வந்து கோபம் வருவதுபோல் நடித்துகாட்டி கைத்தட்டல் வாங்கலாமென்ற நினைத்தது பல்லிளித்தது ..திரையில் நடிப்பை மட்டுமே ரசிப்பவர்கள் இன்று முகம் சுளித்ததார்கள் .. நீட் தேர்வு பற்றியெல்லாம் இப்போது பேசிகிறார் முன்பு இவர் நீட் பற்றியெல்லாம் பேச திருமா போன்றவர்கள் இருக்கிறார்கள் நான் டெங்குவை பற்றிதான் பேசுவேன் என்றார் .. அனிதாவின் பெற்றோர்கள் சொல்லட்டும் என்று கேட்க .. குடும்பமே திமுக கூட்டணிக்கென்று நடித்துக்கொண்டிருப்பவரின் முகம் கிழித்துவிட்டார்கள் .. இறுதியாய் நானும் உங்கள் ரசிகன்தான் அது கலையோடு சம்பந்தபட்டதென சொல்லி "கமல்ரசிகர்களின்" நிலைபாடு இதுதான் என ஒருசோற்று பதமாய் விளக்கியிருக்கிறார் .. அனிதாவின் சகோதரர் உண்மையில் இப்போதுதான் எம் மக்களிடையே தெளிவு பிறந்திருக்கிறது .. எழுபதுகளில் சினிமா மோகம் கொண்டு திரிந்த கூட்டமாய் கவர்ச்சியை அழகை நம்பி ..இவர்கள் பொய் பேசமாட்டார்களென பின்துணைத்தவர்கள் இப்போதெல்லாம் தெளிவாய் பேசுகிறார்கள் .. நீ நடிக்கிறார் எம்மை மகிழ்விக்கும் கலைஞன் அதற்கு கைத்தட்டலும் காசும் தருகிறோம் அதோடு முடிந்தது நமது உறவு என்ற தெள்ளதெளிவாய் சொல்கிறார்கள் திடீரென்று ஒருநாள் வந்து பாசம் பொங்க பேசுவதும் இன்றிலிருந்து தேசபற்று வந்துவிட்டதாக நடிப்பதும் "வாரிசு அரசியல் " என பழைய கூப்பாட்டை சொல்லி திரிவதும் இதையெல்லாம் மக்கள் ஏற்க தயாரில்லை .. .. நேர்மை .. சினிமாநடிகரின் நேர்மை என்பது சம்பளத்தில் கருப்பு எவ்வளவு வெள்ளை எவ்வளவென்பதில் இருக்கிறது ஏறக்குறைய முன்னணி நடிகர்கள் கருப்பு வெள்ளையில் காலம் கடத்துகிறார்களென்பது எல்லோருக்கும் தெரியும் வருமானவரி ஏய்ப்பென்பது சின்மாவில் வெளிப்படையானது இதெல்லாம் எல்லோரும் அறிந்ததுதான் .. ஆனால் நாட்டுபற்றையும் நேர்மையையும் பற்றி பேசுவது தான் கொடுமை அரசியலில் அரிச்சுவடியை கூட கற்காமல் .. மக்களுக்கு எது தேவை எப்படியெல்லாம் அரசால் ஆள்வோரால் பாதிக்கபடுகிறார்கள் .. என்ற பொது அறிவு கூட இல்லை இதுவரை மக்கள் போராட்டத்தில் கலந்துக்கொண்டிருக்கிறாரா ஆளும் மத்திய அரசை இதுவரை எதிர்த்து பேசியிருக்கிறாரா .. நடப்பது மத்திய அரசிற்கான தேர்தல் தானே .. பணமதிப்பிழப்பை சரியென்று சொன்னவர்தானே .. பிறகு எதிர்ப்பு வந்தவுடன் மாற்றிக்கொண்டவர் ஆனால் அதுபற்றி வாய்திறந்து பேசியிருக்கிறாரா.. நீட் தேர்வு பற்றிய அறிவென்பது கல்வியோடு மட்டுமே சம்பந்தபட்டதில்ல அது சமூகநீதியோடும் தொடர்புடையதென்ற அறிவுண்டா .. பாமரனின் குழந்தைகளும் உயர்கல்விக்கு செல்லும்பாதையை அடைக்க கொண்டு வரபட்டது தானே நீட் அதுபற்றி விவாதிக்க முடியுமா .. யாருக்காக களமிறக்கபட்டிருக்கிறார் கடைசிபடம் வெளியிட்டு பெரும் பொருளிழப்பை சந்தித்தவர் திடீரென ஒருநாள் அரசியல் பேச தொடங்கியதின் பின்னால் கொண்டைகளின் தந்திரம் இருப்பது ஊரறிந்த ரகசியம் .. அதை மறைக்க முயன்று முயன்று ஒவ்வொருமுறையும் மூக்கறுப்பு படுவதே வேலையை போனது .. .. இப்போதெல்லாம் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் எதைப்பற்றி யாரைப்பற்றி சொன்னாலும் அது உண்மையா என்று தேடுகிறார்கள் வலைதள செயல்பாடு அதிகரித்திருப்பதின் பயன் இதுதான்‍. யார் சொன்னாலும் அது சரியானதா என சில நிமிடங்களுக்குள் கிழித்து தொங்கவிட்டுவிடுகிறார்கள் போட்டோஷாப் செய்தே பிரதமரானவரின் நிலை இப்போதெல்லாம் பரிதாபகரமாக போய்க்கொண்டிருக்கிறது பிரபலமான கட்சியின் பின்புலத்தோடு வருபவர்களையே நொடியில் சுவரை உடைத்து ஒடவிடுகிறார்கள் தமிழர்கள் .. இந்த தெளிவெல்லாம் பெரியாரும் அண்ணாவும் கலைஞரின் பாடுபட்டு வளர்த்ததால் வந்தது இந்த மண்ணில் இனியும் அரிதாரங்களுக்கு வேலை இருக்காது .. சினிமா வாய்ப்பின்றி நடிக்கும் படங்களை வாங்க ஆளின்றி போகும் போது கடைசியில் பணம் புகழுக்காக அரசியலுக்கு வந்து வெற்றி பெயரலாம் என்பதெல்லாம் பழங்கதையாகி போனது .. வேறு ஏதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்ளட்டும் நடித்தது போதும் திரையோடு போனது புகழென்ற நிலை வராமல் காத்துக்கொள்ளட்டும் .. சாந்து கலையத் தொடங்கியிருக்கிறது .. ஆலஞ்சியார்

Friday, April 12, 2019

ராகுல் நாட்டின் எதிர்காலம்

இன்றைய ராகுலின் பேச்சு நம்பிக்கையை விதைக்கிறது .. நல்ல பிரதமரை நாடு பெறுமென்ற நம்பிக்கை வருகிறது இந்திய தேசத்தின் உயிர்நாடி #உழவன் ‍..அந்த உழவன் நடுத்தெருவில் நின்று போராடிய போது கூட பிரதமர் உயர்குடிகளோடு உலாவிக்கொண்டிருந்தார் பெரும்படையாய் தலைநகர் நோக்கி .. கால்கள் ரணமாயும் நடந்தே நீதிகேட்டு வந்த உழவர் குடிமக்களை நக்ஸலைட்களோடு ஒப்பிட்டு பேசிய பாசிசத்தின் குரலாய் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் போராடியபோது .. அவர்களை கொச்சைபடுத்தி தீவரவாதிகளை போல சுட்டு கொன்ற பாசிசத்தின் ஏவலாய் ஆதிக்க திமிரோடும் அடிமைத்தனத்தோடும் செயல்படுகிற மத்திய மாநில அரசுகளை மக்களின் வாக்குகள் மூலம் நீக்கிட வேண்டுமென்ற உயர்நோக்கோடு திமுக தலைமையிலான கூட்டணி அமைக்கபட்டிருக்கிறது .. தமிழக மக்களை நாக்பூரிலிருந்து ஆட்சி செய்வதை அனுமதிக்க முடியாது என்று தெளிவாக பார்பனர்களின் திரைமறைவு ஆட்சியை விரட்டிட வேண்டுமென்கிறார் .. தமிழகத்தின் ஆட்சியை தமிழர்களே தீர்மானிக்க வேண்டுமே தவிர நாக்பூரில்லை .. கல்வி மாநில பட்டியலுக்கு வந்தால் தான் அனிதாக்களின் மரணத்தை தடுத்து நிறுத்த முடியுமென உணர்ந்து செயல்படுத்துவோம் என்கிறார் ராகுல் .. ஆம் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மத்திய பாடத்தில் வரும் கேள்வியை எதிர்கொள்ளவேண்டுமென்பதே தமிழகத்தை உயர்கல்வியில் பின்னுக்கு தள்ளவேண்டுமென்பதற்காகதானெ தவிர வேறில்லை .. உயர்கல்விகளில் தமிழர்கள் பிற மாநிலத்தவரை விட பெருமளவில் தங்கள் திறமையை நிலைநாட்டுவதை பொறுக்காததால் மருத்துவம் பொறியீயல் போன்ற படிப்புகளுக்கு நீட் தேர்வை வைக்க முயற்சிக்கிறார்கள்...,இனி மாநிலமே தீர்மானித்துக்கொள்ளலாமென்ற ராகுலின் அறிவிப்பு தமிழகத்தின் சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி .. கலைஞர் அதனால் தான் நுழைவு தேர்வையே வேண்டாமென்று வைத்தார் .. பெரியார் சொல்வார் அவன் கத்துக்கதானே படிக்கிறான் அவனுக்கு எதுக்கு நுழைவு தேர்வு .. படிக்கதானே வரான் .. பொது மதிப்பெண் அடிப்படையில் தானே இடம் ஒதுக்கவேண்டும் அதுதானே சரியான நடைமுறை .. .. நாட்டுமக்களை நேசிக்க தலைவராக ராகுல் வளர்கிறார் ..பிரதமர் மோடி ஏழைகளுக்கான பிரதமரல்ல அவர் கார்ப்பரேட்களுக்கானவர் .. பார்பனர்களுக்கானவர் பணமுதலைகளுக்கானவர் நாட்டை சுரண்டுகிற கூட்டத்திற்கானவர் ஊழல் செய்கிறவர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறவர்களுக்கானவர் பிரதமர் மோடி பொய்களால் கட்டமைக்கபட்டவர் நாக்பூரின் ஏவலாளி ஆடம்பரமாக மக்கள் வரிப்பணத்தில் ஆடையலங்காரமும் சிகையலங்காரம் செய்துக்கொள்ளும் நிஜவாழிவின் நடிகர் ..ஏழைத்தாயின் மகனென்று கண்ணீர்விட்டு அழுது நடித்து.. ஒன்னரை லட்சத்திற்கு Mont blanc பேனாவை பயன்படுத்துவார் நாடாளுமன்றத்தையே எதிரிகொள்ள பயந்த ஊடகத்தையே முழுவதுமாக சந்திக்க பயந்த ஒரு பிரதமர் உலகிலேயே திரு.மோடி மட்டும் தான் .. குஜராத் படுகொலைகள் சிறுபான்மையினர் மீதான கொடூர தாக்குதலை அரசுதர்மங்களையெல்லாம் நடத்தியதொன்றே உயர்விக்கு வழிவகை செய்தது .. நாடு கண்ட மிகவும் மோசமான முட்டாள்தனமான தான்தோன்றித்தனமான பிரதமர் .. ஒரேநாளில் பணத்தை மதிப்பிழக்க செய்து மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு புதிய இந்தியா பிறந்ததென்று உளறிகொட்டிய அறிவிலித்தனம் வேறெந்த பிரதமரும் செய்யாதது .. .. மோடிக்கு வாக்களிக்காதீர்களென .. அறிவுடை சமூகம் (முற்போக்காளர்கள்,படைப்பாளிகள்,நீதிபதிகள்,சடடவல்லுநர்கள், பொருளாதாரநிபுணர்கள்) அறிக்கை அளித்ததும் பதறிப்போய் இன்று பார்பனர்கள் (பல்துறைசார்ந்தவர்கள் 600 பேர்) மோடிக்கு வாக்களிக்க வேண்டுமென அறிக்கை தந்திருக்கிறார்கள் இதிலிருந்தே இந்த அரசு நாட்டுமக்களுக்கானதில்லை பார்பனர்கள் நலனுக்கானதென புரிந்திருந்திருக்கும் .. இந்த பாசிச பாஜக ஆட்சியை அதிகாரத்திலிருந்து அகற்றவேண்டும் ..இன்றைய சூழலில் ராகுல்காந்தி மட்டுமே மிக சிறந்த பிரதமாக கூடிய தகுதியுடையவராக இருக்கிறார் .. திமுக காங் கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வருவோம் #RahulGandhi 💛❤💙 .. ஆலஞ்சியார்

Thursday, April 11, 2019

துமுக ஆட்சி.. விரைவில்

ஜூன் 3 .. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் திமுக தலைவர் .. போகிற போக்கில் சொன்னதில்லை.. களம் தெளிவாக அறிந்து மக்கள் மனநிலை புரிந்து ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் நேர்வழி ஒன்றே நிலைத்து நிற்குமென அறத்தோடு அரசியல் செய்கிறவர் திரு.ஸ்டாலின் ..இவர் நினைத்திருந்தால் அதிமுக அடிமைகளை பெரும் விலைகொடுத்து வாங்கியிருக்கலாம் பதவி ஆசைகாட்டி பேரம் நடத்தியிருக்கலாம் ஆனால் அது நீண்டநாள்கள் நீடிக்காது .. இன்னொருவன் அதிகம் பேரம் பேசினால் ஓடிவிடுவார்கள் அது அரசியல் அறமற்ற செயல் எதுவும் மக்கள் தந்ததாக இருத்தல் வேண்டும் என்ற உயர்நோக்கு அரசியல் செய்பவர் தளபதி .. அவர் சொன்னால் சரியாகதான் இருக்கும் மக்கள் விரும்புவதும் அதுதான் .. .. இடைத்தேர்தலை எப்படியும் தடுத்த நிறுத்த எண்ணி ஆளும் மத்திய அரசை கெஞ்சி ஏறக்குறைய இரண்டாண்டுகள் நகர்த்திவிட்டார்கள் இனியும் தேர்தலை தள்ளிவைத்தால் அது தேர்தல் ஆணையத்தின் மீதான கடும் விமர்சனத்திற்கு வெளிப்படையாக ஆளாக நேரிடும் தேர்தல் ஆணையத்தை இயக்குவது பாஜக என்ற குற்றசாட்டின் குரல் எல்லா திசைகளிலிருந்தும் தொடங்கியதும் வேறுவழியின்றி ஆணையம் தேர்தலை அறிவித்திருக்கிறது .. தளபதி விரும்பியது போலவே மக்கள் இந்த ஆட்சியை அகற்றி திமுகவை அறுதிபெரும்பான்மைக்கு கொண்டுவருவார்கள் வெற்றியை தருவார்கள் என்ற நம்பிக்கையின் வெளிபாடே .. ஜூன் 3 ஆட்சி மாற்றம் என திரு. ஸ்டாலின் .. முதல் கட்ட வாக்குபதிவில் 70%முதல் 80% வரை பதிவாகியிருக்கிறது .. பொது தேர்தலில் 60% தாண்டினாலே ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் .. ஆளும் அரசை வெறுக்கிறார்கள் வீட்டுக்கனுப்ப தயாராகிவிட்டார்கள் என்றே பொருள் .. நல்ல தொடக்கம் இன் வரும் வாக்குபதிவிலும் இது தொடரும் மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசை மோடி அரசை வீழ்த்துவதே நமது நோக்கம் .. இன்று ராகுல் தலையை மீது ரேசர் குறிவைத்தது பதட்டத்தை தருகிறது பாசிசம் எதை வேண்டுமானும் நடத்தும் ..ராகுல் நாட்டுக்கு தேவை கவனத்தோடு களமாடவேண்டும் மக்கள் தன்னெழுச்சியை கணிடு என்னதான் ஊடகங்கள் துணையோடு பொய்பிரச்சாரத்தை செய்தாலும் மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள் என்பதால் மத கலவரத்தையோ ஜாதிய மோதலையோ செய்ய துணியும் பாசிசம். அதிகாரத்திற்கு வருவதற்காக 2000 உயிர்களை கொன்று பலியாக்கிய பாவிகள் எதையும் செய்ய துணிவார்கள் எச்சரிக்கை .. இன்று விகடன் கனிமொழியை கலைஞரோடு ஒப்பிட்டு கார்ட்டூன் (கருத்துபடம்) வெளியிட்டிருக்கிறது .. கலைஞரின் பன்முக தன்மைகளில் சிலவற்றை தனதாக்கி கொண்டவர் கவிதை இலக்கியம் பேச்சாற்றல் அரசியல் நாடாளுமன்றத்தில் செயல்பாடு கழகத்தவரோடு அணுகுமுறை என கலைஞரை கண்டு படித்தவர் நல்ல நிர்வாகியும் கூட .. பன்முக ஆளுமை என்பதை மறுக்க முடியாது ஆனாலும் கலைஞரின் ஆளுமையோடு ஒப்பிடவே முடியாது .. கனிமொழி என்றில்லை வேறு எவரையுமே ஒப்பிட முடியாத பேராளுமை கலைஞர் கலைஞர் பன்முக ஆளுமை ...ஆனால் ஒவ்வொரு ஆளுமையிலும் பேராளுமை அவர் .. கலைஞரின் பன்முகதன்மையில் சில கனிமொழியிடம் உண்டு சிறந்த ஆளுமையை நிரூபித்துமிருக்கிறார் மறுப்பதற்கில்லை அவரே கலைஞரோடான ஒப்புமையை ஏற்றுக்கொள்ள மாட்டார் ஆம் ஒரு சூரியன் தான் ஒரு கலைஞர் தான் .. ஆலஞ்சியார்

Wednesday, April 10, 2019

திராவிட திருமகள்

கலைஞரின் பிள்ளை .. இன்று கனிமொழியை அறிமுகபடுத்திய போது திமுக தலைவர் திரு.ஸ்டாலின் சொன்ன வார்த்தை நெகிழ்ச்சி .. ஆனால் அதுமட்டுமே கனிமொழியின் தகுதி அல்ல அவர் கவிஞர் பகுத்தறிவாளர் சமூக சிந்தனையாளர் என்பதையும்,கடந்து மிக சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் திமுக தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் மிக திறமையானவர்கள் ஏராளம் அந்த வரிசையில் இடம்பெறதக்க தகுதியுடையவர் .. பேரறிஞர் அண்ணா, நாஞ்சிலார்,இரா.செழியன் மாறன் வைகோ, ஆ.ராசா..சிவா என்ற வரிசை நீண்டுகொண்டே போகும் அந்த வரிசையில் இடம்பிடிப்பவர் கவிஞர் கனிமொழி .. உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீட்டை ஆதரித்த பேசிய இடதுசாரி ரங்கராஜனை ...என்ன பண்ணுறீங்க என்று இருக்கையிலிருந்து வந்து எதிர்ப்புகுரலை பதிவு செய்தாரே..சமூகநீதிக்கெதிராக செயல்படும் போது தீப்பிழம்பாய் கொதித்தெழுந்தாரே அது ஒன்று போதும் ..கொண்ட கொள்கை மாறாது எந்தநிலையிலும் சமரசம் செய்து கொள்ளாத போராளியாய் திகழ்கிறார். .. மனிதநேயத்தோடு பழகும் தலைவர் .. தன் பிரச்சார வேனுக்கு பின்னால் அணிவகுத்து வரும் இளைஞர்கள் ஹெல்மெட் போடாமல் வருகிறார்கள் என்பதை கவனித்து இறங்கி வந்து கண்டிப்பதும் சந்திக்கிறவர்களிடமெல்லாம் வாஞ்சையோடு அணுகுவதும் வாக்கு சேகரிக்கும் போது அவர் தருகிற உறுதிமொழிகள் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டு எதையெல்லாம் செய்திட இயலுமென்று அறிந்து கதைப்பதும் .. பெண்களின் கல்வி உரிமைகளுக்காக என்றென்றும் குரல் கொடுப்பதும் ஒரு நல்ல தலைவராக மிளிர்கிறார் .. திமுக தலைமைக்கு கட்டுபட்டு செயலாற்ற வேண்டுமென்பதில் உறுதியோடு நிதானமாக செயல்படுவதை காணமுடிகிறது .. அரசியல் நேர்மையும் தன் மீது சுமத்தபடும் குற்றசாட்டுகளுக்கு நேர்மையாக பதிலளிப்பதும், தன்மீது சுமத்தபட்ட வீண்பழியை சட்டரீதியாக வெல்லும் போர்திறனும் இயல்பாக பெற்றவர் .. கலை இலக்கியத்திலும் அரசியலிலும் புதியதொரு பார்வையை பதித்தவர் .. நளினமாக பேச்சும் அதில் அறிவுகூர்மையும் ..எதற்கும் அஞ்சா திராவிட திமிரும், சமூகநீதிக்கெதிராக பேசுவோருக்கு சிலிர்த்தெழுந்து பதிலடி தருவதும் ... எப்போதும் எதிலும் சமரசம் செய்துக்கொள்ளதா கொள்கை பிடிப்பும் இவரை உயர்த்தில் கொண்டு போகும் .. உயரும் போது பணிவு இவரோடு பிறந்தது .. இவரை சந்தித்த போது நல்லாயிருக்கீங்களா என்ற எந்தவித பகட்டுமில்லாமல் கேட்பார் .. மிக எளிமையான எந்தவிதமாக ஆடம்பரமும் பகட்டும் பேராசையும் இல்லாமல் மக்களுக்கான பணியை செய்பவர் நல்ல சிந்தனையாளர் .. எதையும் அறிவுகொண்டு வெல்ல வேண்டுமென விரும்புகிறவர் நேர்வழியில் அரசியல் அதுவும் அறத்தோடு செயல்படவேணிடுமென்று விரும்புகிறவர் .. கலைஞரின் பிள்ளை என்பது கூடுதல் பலமே தவிர ..அதுவே அவரின் தகுதியல்ல தனி அடையாளத்தோடு வரலாற்று பதிவாவார் .. .. இன்றைய அரசியல் சூழலில் இவரை போன்ற பன்முக திறமையாளர்கள் நாடாளுமன்றத்தை அலங்கரித்தால் அது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும்.. மிக பெரிய வெற்றியை தந்து முத்துநகர் மக்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பார்கள் .. பெரியாரின் பெயர்த்தியாய் கொள்கை முரசாய் இந்த கலைஞரின் பிள்ளை #தமிழர்களின்_குரலாய் நாடாளுமன்றத்தில் திகழ்வார் .. வெற்றி நிச்சயம் .. ஆலஞ்சியார்

Monday, April 8, 2019

மனிதர்கள்

சில மனிதர்கள் .. நம் வாழ்வில் சில கற்றல்களில் ஆசானாய் வந்து நம்மை செப்பனிட்டு சென்றுவிடுவார்கள் .. சிலர் நம்மை புதிய பாதையில் நம்மை அறியாமலேயே செலுத்திவிடுவார்கள் .. யாரென்று முகமறியாத சிலர் நம்மில் தாக்கத்தை உண்டாக்கி சுவடே தெரியாமல் மறைந்துபோவார்கள் அப்படி சிலர் .. வாயக்கா வாயக்கா என்று தெருவில் மழலைச்சொல்லில் வாழைக்காய் விற்றுக்கொண்டு வருவார் ..வேட்டி மேல் துண்டு அணிந்திருப்பார் அவர் பெயரெல்லாம் தெரியாது தெருவிற்கு வந்தால் அவரை பகடி செய்வதில் தான் அதிக ஆர்வம் வரும் ..கேலி கிண்டல் செய்தாலும் முகம் சுளிக்க மாட்டார் தன் வியாபாரம் முடிந்தால் திண்ணையில், அமர்ந்து நாம் பேசுவதை கவனித்து கொண்டே இருப்பார் எதுவும் பேசமாட்டார் .. சிறுவர்களுக்கு அவரை சீண்டுவதுதான் வேலை நான் கூட கிண்டல் அடித்து மகிழ்ந்திருக்கிறேன் .. ஆனாலும் அவருக்குள் ஒளிந்திருக்கும் திறமை நமக்கு தெரியாமலேயே இருந்தது .. .. ஒருநாள் தெருவில் சிலம்பம் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த போது தன் வியாபாரத்தை முடித்து விட்டு வந்து அமர்ந்தவர் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தார் .. நான் ஆடிக்கொண்டிருந்தேன் .. யார் கிட்ட கத்துகிட்டே என்றார் குறவஞ்சியை கத்துக்க தேனி கம்பம் அருகில் ஒருவரிடம் கத்துக்கிட்டேன் பெரிய ஆசான் மலைச்சாமி என்றேன் .. ஒழுங்கா கத்துகொடுக்கலையா என்றார் .. இங்கிருந்து (தஞ்சை) அங்கபோய்தான் கத்துக்கணுமா என்றார் சட்டென்று கோபம் வந்தது உஸ்தாத் ஹபீபுல்லாசா சொல்லி தான் அங்கு சென்று சிலம்பம் கத்துகிட்டேன் மிகபெரிய ஆசான் என்றதும் .. முறையாக கத்துக்கல .. அல்லது கத்துக்கொடுக்கல என்றார் .. அவரின் மெலிந்த உருவத்தையும் அவரது அழுக்கேறிய உடையும் தோற்றமும் என்னை கேலி செய்ய வைத்தது.. யோவ் போயா தஞ்சாவூரில் பஞ்சா வேடிக்கையில ஆடி பரிசெல்லாம் வாங்கிருக்கேன் என்று கர்வத்தோடு எகத்தாளமாய் சொன்னேன் ‍.. அப்ப பரிசு கொடுத்தவனுக்கும் சிலம்பம் தெரியாது போலியிருக்கு என சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே நகர்ந்து போய்விட்டார் .. .. எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை நாம சரியா கத்துக்கலையோ என்று மனம் அலைமோதியது மறுநாள் வருவார் அவரிடம் மீண்டும் விளையாடி காட்டணும் என்ற நினைப்பு .. இரண்டு மூன்று தினங்கள் ஆளை காணோம் நானும் கோபம் தணிந்து மறந்தே போய்விட்டேன் சில நாட்கள் கழித்து வீட்டில் அமர்ந்திருந்த போது வாயக்கா வாயக்கா என்ற சப்தம் .. என்னை ஏதோ செய்தது தெருவிற்கு வந்து பார்த்தேன் .. தூரத்தில் சென்றுக்கொண்டே இருந்தார் .. நான் வாழைக்கா என்றழைத்ததும் சாயங்காலம் வரேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார் .. அன்று மாலை வரை அவரைப்பற்றிய சிந்தனை மட்டுமே இருந்தது .. அன்று மாலை 6 மணி இருக்கும் வந்தார் நான் ஆடியது சரி இல்லையா என்றேன் .. ஆடுறே அதுல ஒழுங்கு இல்ல .. சொல்லிட்டு வேட்டி மடிச்சு கோவணமா கட்டிட்டு ஆடுனாரு.. பிரமிப்பா இருந்திச்சு .. இந்த மனிதருக்குள் இவ்வளவு திறமையா .. தோற்றத்தை வைத்து மதிப்பீடு செய்ய கூடாதென்று எனக்கு உணர்ந்தியது இந்த நிகழ்வு .. எதிரியை அடிக்கிறது இல்ல.. நம்ம ஆடுன அவன் அதிரணும் திணறணும் என்ன செய்ய போறான்னு முழிக்கணும் ஆடுறதிலும் அழகு இருக்கணும் .. அதே நேரம் எந்த ஒழுங்கையும் மீறாமலும் இருக்கணும் .. இது எதுவும் உன் ஆட்டத்தில இல்லைன்னாரு.. .. கண்ணு கலங்கிடுச்சு ஆசானே .. கட்டி பிடுச்சுகிட்டேன் .. ஆம் நம்மையும் அறியாமல் நம்மை சரி செய்வார்கள் சிலர்.. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சொல்லி தருவார்கள் .. நம் திமிரை உடைத்தெறிந்துவிடுவார்கள் திறமையிருந்தும் அகந்தை இல்லாமல் அமைதிகாப்பார்கள் .. வாழ்வில் இப்படி நிறைய ஆசான்கள் உண்டு ... நம்மை வழிநடத்த செப்பனிட சொல்லி தர .. எளிய மனிதர்களாய் நம்மோடு இருப்பார்கள் தற்பெருமைகொள்ளாதவர்கள் .. இவரும் என்னை செப்பனிட்டவர் தான் .. #ஆசான் .. ஆலஞ்சியார்

Sunday, April 7, 2019

ஆபத்தானவர்கள்

எத்தனை பாலியல் கொடுமைகள் நடந்தாலும் மறந்துவிட்டு பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள் விஜயகாந்த் மனைவி பிரேமலதா .. .. கேப்டன் விஜயகாந்த், தனது ஆட்சியில் ஏழை மக்களுக்கு நிறைய திட்டங்களைச் செயல்படுத்தினாரு. தம்பிதுரை நான்கு மாவட்டங்களுக்குச் சபாநாயகரா இருந்து, மக்களுக்கு நல்லது பண்ணினாரு. மோடிக்கு ஓட்டுப் போட்டு முதலமைச்சர் ஆக்குங்க.. கஞ்சா கருப்பு .. பிரேமலதாவின் பேச்சு அறியாமையில் வந்ததல்ல திமிரில் வந்தது தன் மகன் திமுக தலைவரை ஏகவசனத்தில் பேசுவதும் அதை அமோதிப்பதைப்போல பிரேமலதாவின் பேச்சும் இருக்கிறது .. கொஞ்சம் கூட இரக்கம் இல்லாதவர்கள் கூட வறண்ட மனநிலை கொண்டவர்கள் கூட பேச துணியாத பேச்சு சொந்த கட்சியை நல்ல வியாபார நோக்கில் பேரம் பேசி பெரும்தொகைக்கு அடகுவைத்த கேடுகெட்ட செயலை செய்தவர் விஜயகாந்தின் மீதான மக்களின் பரிவை கூட விலைபேச துணியும் பெண்மணி .. பணம் ஒன்றே குறிக்கோளாய் கொண்டு செயல்பட்டு விஜயகாந்தின் செல்வாக்கை சீரழித்தவர் .. விஜயகாந்தால் இனி செயல்பட இயலாதென்றெண்ணி .. இருக்கிற வரை சுருட்டிக்கொள்வோம் என்று அவர் மீதான மக்களின் ஆதரவை வைத்து இருக்கிற குறிப்பிட்ட விழுக்காடும் வரும்காலங்களில் இல்லாமல் போய்விடும் என்றறிந்து இப்போதே நாலு காசு சேர்த்து கொள்ளலாம் வருகிற வரை லாபகணக்கு எழுதுகிறவரிடம் .. வேறெதை எதிர்பார்க்க முடியும் .. ஒரு பெண்ணாய் கடுமையாக எதிர்த்திருக்கவேண்டியதை மிக சாதாரணமாக பாலியல் வன்முறைதானே என கடக்க முடிகிறதென்றால் பணம் எவ்வளவு பாடுபடுத்தியிருக்கிறது என்பது தெரிகிறது இவர்கள் அரசியலில் இருந்தே அப்புறபடுத்த படவேண்டிய அழுக்குகள் / குப்பைகள் இவர்கள் .. .. கஞ்சா கருப்பு அரசியல் அறியாமையில் ஏதேதோ பேசுகிறார் வியப்பொன்றும் இல்லை அமைச்சராக இருப்பவர்களே நாட்டிய பேரொளி சுதா என்று மேடையில் உளறியவர்கள்தாம் .. முன்னால் அமர்ந்திருப்பவர்களால் பின்னால் எழுந்து போய்விட்டார்கள் அதனால் நாற்காலிகள் காலியாக இருக்கிறதென்ற யாருக்கும் தோன்றாத தத்துவத்தை உதிர்த்தவர்கள் .. கம்பராமாயணத்தை எழுதிய சேக்கிழார் என்ற அறிய உண்மையை தந்தவர்கள்.. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல அன்றே மறப்பது நன்றன்று திருக்குறளை .. தெளிவாக ..? கற்றவர்கள் தினம் தினம் ஏதாவது உளறி நாங்களெல்லாம் கொள்கை உறுதிபாட்டிலோ அல்லது அரசியல் தெளிவிலோ வந்தவர்கள் இல்லை .. ஏதோ சினிமா கவர்ச்சியில் கட்சியை தொடங்கிய எம்ஜிஆரின் ரசிக கூட்டம் விசிலடிக்க தெரியுமே தவிர விவரங்களை கேட்டால் கட்சியை நிறுவியருக்கே கொள்கை கோட்பாடு தெரியாது என்பார்கள் உண்மையும் கூட அறியாமைதான் அவர்களின் பலம் ..இரக்கம் கவர்ச்சி பணம் இதுதான் அவர்கள் மூதலீடு பொதுசேவை நாட்டுநலன் மொழி கலாச்சாரம்.. நமது உரிமை நமது எதிரி யார் நமது சித்தாந்த எது நம்மை அடிமையாக்க நினைக்கும் பாசிசத்தைப் பற்றிய அறிவு எதை எதிர்க்க வேண்டும் என்ற தெளிவெல்லாம் இல்லாது அரசியலில் இருப்பவர்கள் இவர்களால் யாருக்கும் பலனில்லை என்பதோடு இவர்கள் அறியாமலேயே நாட்டிற்கு கேடு செய்கிறார்கள் .. .. மதமும் சாதியும் பதவி பணத்தாசையும் தலைக்கேறினால் எதை செய்கிறோம் என்றெல்லாம் கவலைபடமாட்டார்கள் .. அறிவோ தெளிவோ அவர்களிடம் வராது நாட்டிற்கு நம்மை அறியாமலேயே தீங்கு செய்கிறோமென்றெல்லாம் புரியாது செயல்படுவார்கள் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் ஜனநாயகத்தின் பலம் எதுவென்று அறியாமல் அதன் குரல்வளையை நசுக்கிவிடுவார்கள் ..ஜனநாயம் தந்திருக்கிற பொறுப்பை கடமையை உணர்ந்திராதவர்கள் இவர்களால் நாடு சீரழிவைதான் சந்திக்கும் இவர்கள் புறந்தள்ளி எழ முடியாதவாறு அரசியலில் துடைந்தெறிந்தால் தான் நாட்டிற்கும் நல்லது நமக்கும் நல்லது .. ஆலஞ்சியார்

Saturday, April 6, 2019

பாஜகவை வீழ்த்துவோம்

முற்போக்காளர்கள் படைப்பாளிகள் நீதியரசர்கள் துணைவேந்தர்கள் நாட்டின்மீது அக்கறை கொண்டவர்கள் என அறிவுடை சமூகம் இந்த தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள் இந்த நாட்டை பாசிசவாதிகளின் பிடியிலிருந்து மீட்க தன்னிச்சையாய் சார்பற்ற நிலையில் கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள் .. இந்த மோடி அரசு பதவியேற்றதிலிருந்து மாற்று கருத்தியலாளர்களை மிரட்டியும் கொலைசெய்தும் .. நீதிபதிகளை மிரட்டியும் தாங்கள் விரும்புகிற தீர்ப்பை தர வலியுறுத்தி பெற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டவிதிகளை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு தங்கள் மநுநீதியை நிலைநாட்ட குறிப்பிட்ட வர்க்கத்தினர் மட்டுமே அரசநிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி சர்வாதிகார சூழலில் நம்மை நிறுத்தியிருக்கிறார்கள் .. இந்த ஆபத்தான போக்கு தொடருமானால் நாட்டை ஜனநாயக பாதையில் மீண்டும் திருப்பமுடியாத நிலைவருமென அஞ்சி ஆன்றோர்கள் அறிவுநிறை படைப்பாளிகள் நாட்டை நேசிக்கிற நல்லவர்கள் ஒன்று கூடி பேச தொடங்கியிருக்கிறார்கள் .. .. அவ்வளவு ஆபத்தானதா ..பாஜக .. பன்முக தன்மையை நசுக்கி பார்பனீய கலாச்சாரத்தை நம்மீது திணிக்க நினைக்கும் செயல்.. பச்சிளங்குழந்தைகள் மீதான வன்புணர்வை கூட கொண்டாடி மகிழ்கிற தேசபக்தர்கள் ..மாட்டிற்கு தரும் பிராணவாயுவை பச்சிளங்குழந்தை தரமறுத்து அதை நியாயபடுத்தும் அயோக்கியத்தனம் ..உயர்கல்வி ஏழைகளுக்கில்லை இன்னும் தெளிவாக சூத்திரனுக்கில்லை என்ற சனாதன செயல்பாடு .. இந்துராஷ்டீரியம் என்ற பெயரில் அவிழ்த்துவிட படும் அராஜகம் நடுத்தர மக்களின் சேமிப்பை கூட பிடிங்கி கார்ப்பரேட்களின் கொடுக்கும் அநியாயம் ..மாநிலத்தின் சுயாட்சி மீது பகிரங்கர போர் .. விவசாயத்தை சிறுதொழில்களை அழித்து அனைவரையும் கார்ப்பரேட் அடிமைகளாக்க செயல்படும் சர்வாதிகார அரசை வீழ்த்த வேண்டும் .. மேனாள் நீதிபதிகள் துணைவேந்தர்கள் அறிக்கையில் "மத்திய அரசு அலுவலகங்களில் பாஜகவின் தலையீடு அதிகரித்துள்ளது. தற்போது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் இதற்கு முன்னால் இந்தியாவில் நடந்தவை போல் அல்ல. அரசியல் கட்சிகளுக்காகவோ கூட்டணி கட்சிகளுக்காகவோ நடக்கிற அதிகார போட்டி அல்ல. இந்தியா ஒரு குடியரசு நாடாக, ஜனநாயக நாடாக, மனித நெறிமுறைகளை காப்பாற்றிக் கொள்கிற நாடாக தொடர போகிறதா இல்லையா என்பது நம் முன்னால் உள்ள கேள்வி. இந்த கேள்வி எழுவதற்கான காரணங்கள் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை வலிமை பெற்றுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும், இந்த 5 ஆண்டுகளாக ஒரு அபாய சங்கு ஒலித்துக் கொண்டே இருந்துள்ளது. அவற்றையெல்லாம் நாம் மறந்துவிட்டு காதில் போட்டுக் கொள்ளாமல் எப்போதும் போல் பொறுப்பற்ற வகையில் நடந்து விட கூடாது என்பதற்காக ஒரு எச்சரிக்கையாக நாங்கள் இந்த அப்பீலை கொடுத்துள்ளோம்" .. 300 எழுத்தாளர்கள் 100 க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் (இயக்குநர்கள்) நீதிபதிகள் துணைவேந்தர்களென மத்திய அரசிற்கெதிராக அறிக்கை தநிது பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள் என சொல்வது வரலாற்றில் இதுவே முதல்முறை .. .. சிந்திப்பீர் வாக்களிப்பீர் திமுக காங்கிரஸ் கூட்டணி .. ஆலஞ்சியார்

Thursday, April 4, 2019

தலைவன் உருவாகிறான்

வழிநெடுக மக்கள் வெள்ளம் தங்களுக்கான தலைவன் யாரென தீர்மானித்த பெருமக்கள் இன்றைய சூழலில் தமிழகம் கேடுகெட்டவர்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருப்பதை கண்டு உன்னதமான தலைவர்களை தந்து இந்திய தேசத்தில் பெருமைமிகு தமிழராய் இருந்த நிலை மாறி வெட்கங்கெட்ட கூட்டத்திடம் மானத்தை அறிவை அடகுவைக்கும் கயவர்களிடமிருந்து மீட்க மிகப்பெரிய ஜனநாயக ஆயுதத்தை கையிலேந்தி தெளிவோடு நிற்கிறார்கள் .. ஆம் தமிழகத்தின் தலைவராய் தமிழ் மக்களின் அன்பில் அரவணைப்பில் நேசத்தில் பிரகாசிக்கிறார் தளபதி.ஸ்டாலின் .. உண்மையில் பெருமிதம் கொள்கிறோம் நேர்மையோடு நன்னெறியோடு எதையும் மக்களின் ஆதரவோடு பெறவேண்டும்.. வாய்ப்பிருந்தும் குறுக்குவழியில் அதிகாரத்தை அடைய மார்க்கமிருந்தும் மக்கள் அங்கீகாரத்தோடு மட்டுமே அதிகாரத்தில் வரவேண்டும் அந்த நல்வாய்ப்பிற்காக காத்திருப்போம் அதுவரை மக்களுக்காக உழைப்போமென்ற உயர்நோக்கத்தோடு அரசியல் செய்கிறார் .. .. எனக்கு தெரிந்தவரை இவருக்கு இணையாக யாருமில்லை ...வெற்றிடம் என்ற பிரச்சாரமெல்லாம் பொய் என்பதை மக்கள் கூட்டம் பறைச்சாற்றுகிறது எதிரில்லா தலைவராக வலம் வர தொடங்கியிருக்கிறார் இவரோடு அரசியல் செய்யும் தகுதி கூட சிலருக்கு இல்லை .. அன்புமணி போன்ற வெட்டிபேச்சு வீரர்கள் விவாதத்திற்கு தயாரா என இடைவிடாமல் கேட்கிறார் முதலில் அப்பனும் மகனும் பொதுவெளியில் சொன்னவற்றிக்கும் இப்போது பேசி திரிவதற்கும் சரியான பதிலை தர முடிகிறாதா என யோசிக்கவேண்டும் திமுகவின் கடைநிலை தொண்டனிடம் கூட உம்மால் விவாதிக்க முடியாதென்ற உண்மையை உணர்தல் நலம் .. திமுகவால் தமிழகம் கண்ட பலன் என்ன கேட்பதற்கு முன் வன்னியருக்கும் சேர்த்து இடஒதுக்கீட்டை தந்தது யாரென்று யோசித்தால் புரியும் .. மின் உற்பத்தியெல்லாம் திமுக ஆட்சியில் தொடங்கபட்டது அதிமுகவால் அல்ல என முன்பு பேசியது ஞாபகம் வரவில்லையெனில் நல்ல மருத்துவரை..? அணுகவும் .. அதுசரி எப்போது பேசியது போல் நடந்திருக்கிறார் பெற்ற தாயை கூட அரசியலுக்காக இழிவுபடுத்திய அயோக்கியருக்கு மறதி வரதான் செய்யும் .. .. எடப்பாடி பன்னீர் இருவருக்கும் மக்கள் மத்தியில் என்ன நிலை என்பதை பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம் கைகோர்த்து கூட்டிவந்த கூட்டத்தை நகரவிடாமல் செய்தும் மக்கள் எழுந்து செல்வதும் காலி இருக்கைக்கு பிரச்சாரம் செய்வதுமாக போகிறது நிலைமை.. சில உதிரிக்கட்சிகள் நிலை தேர்தலுக்கு பிறகு பரிதாபகரமாக போகுமென்பதை அறிய முடிகிறது பாசிசத்தின் குரலாய் சில பேசி நடித்தாலும் .. சொந்த சமுதாயத்தின் வாக்குகளை சில கோடாரிகளை கொண்டு வெட்டி பிரித்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் .. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை தான் ஆதரிக்க வேண்டும் .. வடமாநிலங்களிலும் காங்கிரஸின் கை ஓங்குவதாக சமீபத்திய செய்திகள் வர தொடங்கியிருக்கின்றன .. பாசிசத்தை வேரறுக்க.. நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டிட மக்களின் பன்முக கலாச்சாரத்தை காத்திட மதசார்பற்ற சோஷலிச (பொதுவுடமை) ஜனநாயக நெறிகளோடு கூடிய அரசை அமைத்திட திமுக காங் கூட்டணியை ஆதரிப்போம் வெற்றி பெற செய்வோம் .. .. தமிழகத்தின் பாசிசத்தின் ஊதுகுழலாய் பாசிசத்தின் அடிமைகளாய் தலையாட்டி பொம்மைகளாய் தமிழகத்தின் உரிமைகளை ஒன்றொன்றாய் அடகுவைக்கும் காவுகொடுக்கும் களவாணிகளை விரட்டிட ..பேராசான் பெரியாரும் பேரறிஞரும் பேரருளாளனும் கட்டி காத்த சமுகநீதியை நிலைநாட்டி தமிழகத்தின் நலன், உரிமையை காத்திட .. தமிழக மக்களின் பேராதரவை பெற்ற பெருமகன் தளபதியாரை அறியணை ஏற்றிட நல்லதொரு துவக்கமாய் .. நம்பிக்கையை விதைத்திட தமிழகத்தை சூழ்ந்த இருள் நீக்கி #உதயசூரியனின் ஒளி பரவ .. ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் .. .. நமக்கான தலைவர் தளபதி .. ஆலஞ்சியார்

Wednesday, April 3, 2019

இஸ்லாமிய கட்சிகள்..?

தியாக தலைவி ஆர்எஸ்எஸின் ஊதுகுழலாய் எங்கெல்லாம் பாஜக பலவீனபட்டுநிற்கிறதோ அங்கெல்லாம் இஸ்லாமிய வாக்குவங்கியை சிதறவைத்து அதன் நேரடி பலனை பாசிச பாஜகவிற்கு தரும் ஒற்றை வேலையோடு களம் காணுகிற அமைப்பு .. sdpi கர்நாடகத்தில் அதன் செயல்பாடு மிகப்பெரிய அளவில் பாஜகவிற்கு பலன் தந்தது .. அதேபோல தெலுங்கானாவிலும் உ.பி.யிலும் சில வடமாநிலங்களிலும் இஸ்லாமிய வாக்குகளை பிரித்து வெளிப்படையாகவே பாஜக ஆட்சிக்கு உதவிய அசதுத்தீன் உவைசியின் மஜ்லீஸ் கட்சியும் வெகுவாக பயன்பட்டது .. .. இவர்களுக்கு என்ன வேண்டும் .. இஸ்லாமியர்களுக்கான உரிமைகளா இல்லை பணம் பதவியா .. தொடர்ந்து இவர்களின் செயல்பாடுகளை கவனித்தால் அதன் பின்னில் மறைந்திருக்கும் உண்மை இஸ்லாமிய ஒற்றுமையை சிதைப்பது .. அதோ இவர்கள் தான் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தை காக்க வந்த ரட்சகனை போல பேசி திரிகிறார்கள் .. ஒரு கட்சி தொடங்கி நடத்துவதிலோ அல்லது பல பிரிவுகளாக செயல்படுவதிலோ நமக்கொன்றும் பலனில்லை ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் நடத்தலாம் ஆனால் நாட்டின் நிலை கருதி யாரை பின்துணைக்க வேண்டுமென்ற அறிவு வேண்டும் தங்களால் தனியாக எதையும் சாதித்துவிட முடியாதென்ற உண்மையை உணரவேண்டும் .. எந்த மக்களுக்காக போராட நினைக்கிறோமோ அவர்களின் மேம்பாடு கல்வி போன்ற விடயங்களில் மெச்ச தகுந்த நிலையை உருவாக்க பாடுபடவேண்டும் இன்றைய பொது எதிரி யார் என்ற அடிப்படை புரிந்திருக்க வேண்டும் .. யாரோடு சேர்ந்தால் அவர்களை வீழ்த்தலாமென்ற வியூகம் அறிதல் வேண்டும் .. தனியாகவோ அல்லது வெகுமக்கள் ஆதரவில்லாதவர்களோடோ சேர்ந்து பயனிப்பதால் தோல்வி மட்டுமல்ல எதிரியை ஒருவகையில் பலபடுத்துகிறோம் என்ற எளிய புரிதல் கூட இல்லாதவர்கள் எப்படி ஒட்டுமொத்த சமுதாய நலனை பற்றி சிந்திக்கவோ கவலைபடவோ உழைக்கவோ முடியும் .. தெளிவின்மை தோல்வி மட்டுமல்ல சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு தடைக்கல் .. தியாக தலைவி சசிகலா உண்மையில் வெட்கபடவேண்டும் ஜெயலலிதாவோடு சேர்ந்து கொள்ளையடித்து அதை நீண்ட சட்ட போராட்டத்தால் சிறப்பு நீதிமன்றத்தில் தண்டிக்கபட்டு .. உச்சநீதிமன்றமே திருடியது உண்மையென தீர்ப்பை இறுதி செய்து சிறையில் கழிப்பவர் தியாகியாம் .. அரசு நிர்வாகத்தையே தவறாக பயன்படுத்தி கொள்ளையடித்தவரை .. அரசு கஜானாவிலிருந்து மருந்திற்கு தேனை கூட சாப்பிட அனுமதி கோரிய கலீபா உமரை பின்பற்றும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தியாகி என்றழைப்பது தான் கேவலத்தின் உச்சம் .. அரசியலில் வெற்றி தோல்வி அல்ல பிரச்சனை .. கொண்ட கொள்கையில் ஏற்றுக்கொண்ட கோட்பாட்டிலிருந்து மாறி நிற்கிற அவலநிலை கேலிக்குரியது .. ஊழலுக்காக நிரூபிக்கபட்டு சிறை சென்ற தலைவியை பின்பற்றும் கட்சியோடு கூட்டு வைத்து கொள்கிறவர்களால் சமுதாயத்திற்கு நல்லதை செய்திட முடியாதென இஸ்லாமிய சமூகம் உணரவேண்டும் .. புறக்கணிக்கபடவேண்டியவர்கள் இப்படி நிறைய இஸ்லாமிய கட்சிகள் புற்றீசலைப்போல வந்துக்கொண்டே இருப்பது சமுதாயத்திற்கு கேடு .. .. "பெருமையும் சிறுமையும் தான் தர வருமே".. .. ஆலஞ்சியார்

Tuesday, April 2, 2019

காங் தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கையில் பொய் வாக்குறுதி இடம்பெறக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்..காங்கிரஸ் தலைவர் ராகுல் .. கை தட்டுகிறேன் ராகுல் இப்போதுதான் நம்பிக்கை வருகிறது ஒன்று முதல் 12 வது வரை இலவச கல்வி.. மொத்த வருவாயில் 6% விழுக்காடு கல்விக்கு .. மாநிலங்கள் விரும்பவில்லையெனில் நீட் ரத்து .. மாநிலங்களே தேர்வை நடத்திக்கொள்ளலாம் கல்வியின் புரிதல் அறிந்து கல்வி மட்டுமே நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுச் செல்லும் என்பதை உணர்ந்து செயல்படுகிறீர் தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு என்பது நீண்டநாள் எங்கள் போராட்ட கனவு .. அதை ஏற்றுக்கொண்டு அறிவித்திருக்கிறீர்.. தேசவிரோத சட்டபிரிவு 124/A ரத்து செய்வதாக அறிவித்திருப்பது உண்மையிலேயே நல்ல விடயம் ஆங்கிலேய ஆட்சியில் அரசுக்கெதிராக பேச கூடாதென்பதற்காக கொண்டுவரபட்டது தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி உட்பட இதை ரத்து செய்யவில்லை இப்போதுதான் விடிவு பிறக்கிறது உண்மையான புதிய இந்தியாவை நோக்கி சொல்லாமல் நகர்த்தும் செயலை செய்கிறார் ராகுல் .. ஆம்.. இந்த 124/A பிரிவு காழ்ப்புணர்ச்சியில் பழிவாங்கும் நடவடிக்கைக்காக பயன்பட்டதென்பதும் முற்போக்கு சிந்தனையாளர்களை சிறுபான்மையினரை மிரட்டவே இது பயன்பட்டது .. .. முதல்தலைமுறை மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் .. #ஐம்பதாண்டுகளுக்கு முன்பே எங்கள் #பேரருளாளன்_கலைஞர் கொண்டுவந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கபடும் என அறிவிப்பு செய்தார் நாங்கள் ஏன் கலைஞரை கொண்டாடுகிறோம் என்பதற்கு இதைவிட சான்று தேவையில்லை நவீன இந்தியாவின் சிற்பிகளுள் ஒருவர் .. மானிடத்தை நேசித்த ஒடுக்கபட்ட விளிம்புநிலை மக்களையும் கரைசேர்க்க வேண்டுமென்பதற்காக தொலைநோக்கோடு கொண்டுவந்தார் பேராசான் பெரியாரின் பெருஞ்சீடர் #கலைஞர் .. .. புதிய சிந்தனையோடு தொலைநோக்கோடு இன்னும் சற்று விரிவாக சொன்னால் பெரியாரியத்தை உள்வாங்கியதாய் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை Election manifesto இருப்பதில் மகிழ்ச்சி .. தளபதி அவர்கள் காங்கிரஸ்/ திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்தென்ற சொன்னபோது சிரித்தவர்கள் இன்று கலக்கத்தில் இருக்கிறார்கள் .. மாதம் ₹6000 வீதம் 12 மாதம் ₹72,000 என்ற அறிவிப்பு பொருளாதார வல்லுநர்கள் முடியும் வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்களை உயர்த்தும் என்கிறார்கள் .. விவசாய கடன் தள்ளுபடி என .. சொல்லிக்கொண்டே போகலாம் இதெல்லாம் எங்கள் பேரருளாளின் ஆட்சியில் திட்டமாகவும் சட்டமாகவும் தமிழகம் கண்டதுதான் இப்போது இந்தியாவிற்கு வழிகாட்டும் அரசியல் பாடமாக கலைஞரின் திட்டங்கள் இருப்பதை எண்ணி வியப்பளிக்கிறது .. திமுகவின் அரசியல் தான் திராவிடத்தின் சித்தாந்தம் தான் .. பெரியாரின் அரசியல்பார்வைதான் இந்தியாவிற்கு பயன்தரதக்கதாக இருக்குமென்று தேசம் உணர தொடங்கியதின் வெளிபாடுதான் இன்றைக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உணர்த்துகிறது .. விடுதலை இந்தியாவில் முதல் முதலில் தேர்தல் அறிக்கையை Election manifesto அறிமுகம் செய்ததே திமுக தான் என்பதிலும் பெருமை கொள்வோம். காங்கிரஸ் தந்த தேர்தல் அறிக்கை வரலாறு பேசும் .. .. ராகுலின் தெளிவான பார்வை எதையும் உள்வாங்கி அனைத்து தரப்பு மக்களின் நலன் சமநோக்கு சமூகநீதி ஒவ்வொரு மாநிலத்தின் நலன் மற்றும் உரிமை, பன்முக தன்மை மாறாமல் இந்தியாவை உண்மையிலேயே புதியதொரு பாதைக்கு அழைத்து செல்ல நினைக்கிறார் .. பொய்யில்லை வாய்வித்தையில்லை வார்த்தை ஜாலமில்லை தேசபக்தி என்று பொய் வேசமில்லை (பெரியார் சொன்னது நியாபகம் வருகிறது அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி).. நேர்மையாய் எது முடியுமென எது சரியென்று ஆய்ந்து தந்திருக்கிறார்கள் இந்த நாடு பாசிச கும்பல்களால் ஏற்பட்ட ரணத்தை ஆற்றி .. புதியதொரு விடியலுக்காக திமுக காங்கிரஸ் கூட்டணியை வெற்றிபெற செய்வோம் .. .. ஆலஞ்சியார்

Monday, April 1, 2019

எதிரிகள் பதறட்டும்

எதிரிகள் பதற்றத்தில் செய்யும் தவறை தடுக்காதே .. .. துரைமுருகன் வீட்டில் கட்டுகட்டாய் பணம் .. நண்பர் சீனிவாசன் வீட்டில் உதவியாளர் அலி வீட்டில் என ஆளுக்கொரு செய்தியை ஊடகங்கள் தர்மத்தை நிலைநாட்ட..? கடைசியில் அமைச்சரின் உதவியாளர் வீட்டு வீடியோ வெளியாகியிருக்கிறது .. தளபதி அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான சபேசன் வீட்டில் நடந்த ரெய்டும் பணமும் எங்கே என்று கேட்டபிறகு வீடியோவை வெளியிட்டிருக்கிறது வருமானவரித்துறை .. திமுகவின் வெற்றியை தடுத்திட எதிரிகள் பதறி செய்கிற தவறுகள் அவர்களுக்கே வினையாகிறது .. .. திமுகவின் செயல்பாடுகளை கண்டு வெற்றிபெறுவது உறுதியான பிறகு பதறுகிறார்கள் திமுகவை ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஏதேதோ காரணத்தை சொல்லி அழித்துவிடலாமென்று கங்கணம் கட்டியவர்கள்..அமைப்புகள் கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போனது/செல்லரிக்க தொடங்கியது .. ஊழல் என சொன்னார்கள் ரௌடிகளின் கட்சி என்றார்கள் பேசியே ஏமாற்றுகிறார்களென்றார்கள் குடும்பகட்சி என்று சொல்லிபார்த்தும் மக்களின் பேராதரவு நாளுக்கு நாள் கூடுவதை கண்டு அஞ்சி வேறெங்கோ எடுத்த வீடியோவை போட்டு திசை திருப்ப கடைசியில் ஊர் பெயர்வரை கண்டுபிடித்து திருப்பி அடிக்க தொடங்கியவுடன் மௌனிக்கிறார்கள் .. .. ஸ்டாலின் இந்து மதத்தை விமர்சிக்கிறார் என்றார்கள் மிக தெளிவாக நான் எந்த மதத்திற்கும் எதிரானவன் அல்ல இந்துத்துவா பாசிசத்தை தான் எதிர்க்கிறேன் .. என் மனைவி கூட தினம் கோவிலுக்கு செல்பவர்தான் நான்அவரை தடுப்பதில்லை என தெளிவாக சொல்லியிருக்கிறார் .. முன்பு இப்படிதான் கலைஞர் ராமானுஜம் தொடரை எழுதியபோது கலைஞரின் பகுத்தறிவு என்னானது என்று விஷமத்தனம் செய்தார்கள் .. ராமானுஜரை அறிந்ததினால் எங்கே உண்மை வெகுமக்களை சென்றடைந்து விடுமோ வேதமென்ற பெயரில் பார்பனர் இட்டுகட்டிதெல்லாம் அவிழ்ந்துவிடுமோ என பதறினார்கள் ஆதிசங்கரரின் #அத்வைதம் கோட்பாட்டிற்கு மாற்றுச்சொன்னவர் ராமானுஜர்.. "எவன் அறிவிற்குள் உறைபவனோ..அறிவிற்கறிவாக இருப்பவனோ..#அவன் தான் #இவ்வான்மாவை அழியாமல் உள்ளுறைப்பவன்.. என்றார் இது ஆதிசங்கரின் அத்வைதம் கோட்பாட்டிற்கு எதிரானது.. அதுமட்டுமல்ல தமிழின் பாசுரங்களை சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கில் பாடிவந்தனர்.. அதன் ஒலிஅளவில் பிழை வருவதால் அதன் பொருள் மாறுபடுகிறது என்று தமிழேயே மூலமந்திரத்தை பாடச் சொன்னவர் ராமானுஜர் .... தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த திருகச்சியை தன் குருவாக ஏற்றுக்கொண்டவர் தாழ்த்தப்பட்டவரான..உறங்காவில்லிதாசரை சீடராக ஏற்றுக்கொண்டார் .. அதுமட்டுமா திருகோஷ்யூர் நம்பியிடத்தில்.. நடையாய் நடந்து..கற்றுக்கொண்ட.. திருமந்திரத்தை...கோபுரம்மீதேறி உலகுக்கு உரக்க சொன்னார்.... குரு நம்பி யாரிடம் சொல்ல கூடாது என்றுச்சொன்னேனே என்ற போது.. இதை நிறைய பேர் அறிந்தோதி.. வைகுண்டம் செல்வார்களேயானால் நான் நரகம் செல்ல தயார் என்றவர் ராமானுஜம் அதனால் தான் பார்பனர்கள் பதறினார்கள் .. .. திமுகவின் செயல்பாடுகள் அது இலக்கிய வடிவிலாக இருந்தாலும் சரி அரசியல் சமூகம் மண் கலை கலாச்சாரம் பண்பாடு சார்ந்திருந்தாலும் நம் எதிரிகள் பதறுவார்கள் .. அவர்கள் பதறட்டும் .. நம் வெற்றியை எதிரிகளால் தடுக்க முடியாது .. .. ஆலஞ்சியார்