Friday, June 29, 2018

மோடி ஆட்சி படிப்பினை

முற்றிலுமாக தோல்வியடைந்த மத்திய அரசு.. காரியம் தப்பா கணக்கன் தப்பா .. இங்கே இரண்டுமே தப்பாகி போனது. வாய்சொல் வீரரின் உணர்ச்சி மிகு உரையை நம்பி சிறந்த தலைமையை வீட்டுக்கு அனுப்பியதன் விளைவை அனுபவிக்கிறோம்.. காங்கிரஸ் ஆட்சியை (மன்மோகன் ஆட்சி என்பதே சரி) வேண்டாமென கூற நம்மிடையே சொன்ன பிரதான காரணம் 2ஜியில் இந்தியா அதுவரை கண்டிராத ஊழலென ஊடகமும் பார்பனீயமும் சேர்ந்து ஒருவித மாயதோற்றத்தை நிறுத்தி.. மோடியால் மட்டுமே நாட்டை சீர்படுத்த முடியும் குஜராத்தை முன்னேற்றியதைப்போல இந்தியாவும் நவீனமாகுமென நம்பவைத்தார்கள்... அதுவரை குஜராத்தின் உண்மைநிலையை நாடு அறிந்திருக்கவில்லை.. 2ஜி என்பது கட்டிசமைத்த பொய் என்பதை அறிய நிறைய இழக்க வேண்டியதாயிற்று நம்பி மோசம்போனோம் என்பதைப்போல இன்று நாடு சீரழிவில்.. எல்லாதுறையிலும் சரிவை நோக்கி போய்கொண்டிருக்கிறது.. .. சுவிஸ் பேங்கில் இந்தியர்கள் பதுக்கிவைத்திருக்கும் பணத்தை மீட்டு ஒல்வொரு இந்தியன் கணக்கிலும் ₹15 லட்சம் வரவு வைப்பேன் என்றார்.. பணமதிப்பிழப்பை செய்து இதோ கருப்புபணத்தை ஒழித்துவிட்டேன் இனி கருப்பே இல்லை என்றதை பொய்யாகி எப்போதுமில்லாத அளவு சுவிஸ் பேங்கில் 50% கூடுதலாக கருப்புபணம் .. பணத்தை மீட்பேன் என்றதை நாம் தான் தவறாக புரிந்து கொண்டுவிட்டோம்.. நம்மிடமுள்ள பணத்தை மீட்டு சிலருக்கு வழங்கி அதை கருப்பாய் கொண்டு சேர்த்திருக்கிறார்.. ஒரே வாரத்தில் 8000 கோடிவரை அமிர்ஷா மாற்றி கொடுத்திருக்கிறார்.. அவர் தலைவராக உள்ள கூட்டுறவு வங்கியில் மட்டும் 749 கோடி கருப்பு வெள்ளையாகியிருக்கிறது.. டாலர்க்கு இணையான இந்திய ரூபாய் ₹69 ... .. ₹480 ரூபாய்க்கு கேஸ் இருந்தபோது போராடிய பாஜக ‍.. மோடி ஆட்சியில் ₹800 ஆக உயர்த்தியிருக்கிறது.. .. கல்வியில் ஒரு சிலரை மட்டுமே கற்பிக்க வைக்கும் நிலையை உருவாக்கி குலத்தொழிலை நோக்கி நகர்த்த திட்டம் .. மக்கள் வேண்டாமென்கிற திட்டங்களை வம்படியாய் திணிக்கும் செயல்.. நாடாளுமன்ற ஜனநாயகம் படுகேவலமாய்.. என்ன நடந்தாலும் 41 நாடுகளை சுற்றி வருவதில் எந்த வருத்தமும் இல்லை மக்கள் வரிப்பணத்தில் இன்பசுற்றுலா..செலவு ₹356 கோடி.. எதை அணிய வேண்டும் எதை உண்ண வேண்டும் என்ன படிக்கவேண்டுமென்று கூட தீர்மானிக்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை.. தீண்டாமை தலைவிரித்தாடுகிறது.. வடமாநிலங்களில் நிர்வாணமாய் நிற்கிறது எமது தேசம்.. குடியரசு தலைவரையே வெளியே பிடித்து தள்ளுகிற கொடுமை.. அதிகாரிகள் கூட தாழ்த்தபட்டவரென்பதால் வணக்கம் சொல்ல மறுக்கிற அவலம்.. நாட்டின் முதல் குடிமகனுக்கே இந்த நிலை.. பிரதமர் அமைச்சர்கள் எல்லாம் அதிகார தொனியில் பேசுகிறார்கள் .. சுவிஸில் பணமிருந்தால் அது கருப்புபணம்தானா என்கிறார் அமைச்சர்.. முறையாக பணபரிவர்த்தனை செய்திருந்தால் அதை வெளிகாட்டி தங்களின் புனிததன்மையை நிரூபிக்கலாமே.. .. மொத்தத்தில் நாடு கேடுகெட்டவர்கள் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கிறது.. இவர்களுக்கு தெரிந்தது ஒன்றுதான்.. ஒரே குடும்ப ஆட்சி ராகுலுக்கு என்ன தெரியும்.. பாகிஸ்தான் ஊடுறுவல்.. ராமர்கோவில்.. போ்டோஷாப்.. இதைவைத்து இனி நடக்காது காரணம் மக்கள் உணர தொடங்கிவிட்டார்கள்.. பார்பனபுரட்டை தெளிவற்ற வறட்டு சிந்தனையை நம்ப தயாரில்லை.. டீக்கடையும், படித்தாக சொல்லி போலி சான்றிதழையும் தாண்டி இவர்கள் சாதனையென்று ஏதுமில்லை..ஒருவகையில் இவர்களை மக்கள் புரிந்துக்கொள்ள பேருதவியாக இருந்தது மோடியின் ஆட்சி.. .. வீழ்த்தபடவேண்டும் விரட்டபடவேண்டும் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment