Wednesday, June 20, 2018
திராவிடம்
திராவிடம்..
ஆயிரம் ஆண்டுகளாய் அடிமைபட்டு கிடந்த
இனத்தை தட்டியெழுப்பி .. சுயம் மீட்சியை கற்று தந்து.. மதம் சாதி கடந்து ஒன்றுபட கற்று தந்தது.. இனம் மொழி பாலினம் மறந்து மனித நேயத்தோடு வாழ சொன்னது
அடிமையல்ல நீ.. உன் உரிமையை யாரிடமும் அடகு வைக்காதே.. சக மனிதனை பிரித்து பார்க்காதே.. ஏற்றதாழ்வில்லை மனித குலத்தில் உயர்வென்றும் தாழ்வென்றுமில்லை என உணர்த்தியது..
சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை கலைந்து நம்மை நேர்படுத்தியது.. ஈராயிரமாண்டாய் நம்மை சுரண்டி பிழைத்த ஈனர்களை அடையாளம் காட்டியது..
உனதுரிமையை... பறித்துக்கொண்டு உன்னையே கீழானவனாய் சித்தரித்து தொடாதே .. தூர நில் பார்த்தாலே பாவம் .. நிழல் பட்டாலே தீட்டு.. கல்வி கற்க நினைத்தால் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்று.. என்றவனை அடையாளம் காட்டியது
..
தாய்மொழியில் சமஸ்கிருதத்தை கலந்து அதுதான் தமிழென காட்டி .. தமிழனின் கலாச்சார பண்பாட்டில் ஆரியத்தை புகுத்தி கடவுள் சாதி வேதமென கதைகட்டி ..ஏற்றதாழ்வை வாழும் சித்தாந்தமாக்கி .. புனையபட்ட புரட்டை ஆன்மீகமென்ற பெயரில் புராணகதையாக்கி
தமிழினத்தை சிறுக சிறக சிதைக்கும் பெருந்திட்டத்தோடு வந்த வந்தேறிகளை
தடுத்து நிறுத்தியது திராவிடம்..
..
இதோ.. உ.பி.யில் தன் கூட்டாளிகளோடு கோவிலுக்கு சென்ற தாழ்த்தபட்ட பட்டியிலின
இளம்பெண்ணை .. அம்மணமாக்கி தெருவில் நிறுத்தியிருக்கிறார்கள்.. அதை ஆளும் அரசும் கேட்கவில்லை அரசியல்கட்சிகளும் கேட்கவில்லை.. காரணம் அங்கே பெரியாரைப்போல சமூக சீர்த்திருத்தம் செய்திடவில்லை.. சமூக புரட்சியில் மக்களின் மனநிலையை மாற்றி சமமாக மதித்திட வேண்டுமென மக்களிடம் விழுப்புணர்வை ஏற்படுத்திடவில்லை.. அடித்தால் திருப்பி அடி.. உன் துண்டு உன் தோளில் போட யாரை கேட்கவேண்டும்..
என சுயமரியாதையை கற்று தர அங்கே நாதியில்லை.. பெண்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு ..சமஉரிமை சொத்தில் பங்கென சுயம் எழ நிற்க வழிசெய்தது திராவிடம்
..
இடைசாதிகாரனை கொம்பு சீவி ஆடும் ருத்ரதாண்டவம் .. இங்கேயும் சாதிய மோதல்கள் குடிசையை கொளுத்தும் மாவீரசெயல் நடக்கிறது ஆனால் மீசை வைத்தாலே கொலை செய்ய தூண்டும் ஈனச்செயல் இங்கில்லை.. சாதிய மோதலை சில பாசிசவாதிகள் தூண்டிவிடுகிறார்கள் உ.பி.யைப்போல மத்திய பிரதேசத்தைப்போல சாதிவெறி தாண்டவத்தை இங்கே நடத்திட முயல்கிறார்கள்.. இங்கே இன்னமும் ஈரம் மிச்சமிருக்கிறது .. பெரியாரும் கலைஞரும் தந்த சமூகநீதிக்கான வரையோலை எங்களிடமிருக்கிறது .. திராவிடத்தை வீழ்த்திடலாமென சிலர் கனவு காண்கிறார்கள் .. அவர்களின் கனவு உடைபடும் ..
..
திராவிடம் 2.0 இளைய தலைமுறையினிடம் திராவிடமே தந்ததைப்பற்றியும் .. இதுவரை தமிழினத்தை காத்து நிற்பதுபற்றியும் பேச தொடங்கியிருக்கிறோம் ..
என்ன செய்ததென வரலாற்று ஆவணங்களோடு கதைக்க தொடங்கியிருக்கிறோம்.. புதியதொரு விடியலை நோக்கிய நகர்வாய் மனித குலம் மேம்பட அறிவுகொண்ட பார்வையோடு சமநீதி சமமான பார்வை .. தொலைநோக்கு சிந்தனை ஏற்றதாழ்வற்ற நிலை.. நமது உரிமையை பறிக்க நினைப்போரை இருக்குமிடம் தெரியாமல் செய்து நமது நிலம் நமது உரிமை என நாமே உருவாக்குவோம்..
காட்டிகொடுத்தும் ..காட்சிதந்தும் பிடிங்கிய உரிமைகள் மீட்டோம் தொடர்ந்து காப்போம்..
திராவிடம் எமது அரண்.. ஆரியத்தை விழவைப்போம்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment