Tuesday, June 19, 2018

வாய்த்த நல்ல அடிமைகள்

அம்மா கொள்ளையடித்த பணத்தை தினகரன் சுருட்டிக்கொண்டு போய்விட்டார்.. ஜெயலலிதாவை விமர்சித்த அவரது நேர்மைக்கு பாராட்டு.. சில நேரம் சிலர் உளறும் போது உண்மை தானறியாமலேயே வந்து விழும் அப்படிதான் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதும்..ஆனால் அதிகார போட்டியில் இப்போதைய எஜமானின் கருணை இருக்கும் போது எதுவேண்டாலும் பேசலாம்.. அருகதையில்லாதவர்கள் உயர்பதவியில் அமரும் போது நல்ல ரசமாக இருக்கிறது.. எடப்பாடியை தாண்டி யாரென்ற தெரியாதவரெல்லாம் தளபதியை செயல்தலைவரா செயல்படாத தலைவரா என கேட்கிறாரென்றால் இருக்கிற கோவணம் அவிழ்ந்துவிடாமல் எச்சரிக்கையோடு இருப்பதற்கு இதுபோன்ற உளறல்கள் வரும்.. சசிகலா தன் குடும்பத்திலிருந்து ஒருவரை முதல்வராக நியமித்திருந்தால் இன்றும் மன்னார்குடி முன் மண்டியிட்டு நின்றிருப்பார்கள்.. விசுவாசமானவன் யாருமே இல்லை ஜெயலலிதாவிற்கோ அவரின் நிழலாய் திரிந்த சசிகலாவிற்கோ .. இவர்கள் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் கெட்டிக்காரர்கள்.. திறமையோ தகுதியோ இல்லாமல் .. ஜெயலலிதா/சசியின் கருணைபார்வை பட்டால் போதும் மோட்சம் கிடைக்குமென .. போலிஸ் தடுப்புக்கு பின்னால் கைகூப்பி நின்றவர்கள்.. வானத்தை பார்த்து கும்பிடு போட்டவர்கள்.. இவர்கள் நோக்கம் பதவி வேண்டும் பதவி இருக்கிற வரை சம்பாதிக்க வேண்டும் அந்த பதவிக்கு ஆபத்துவராமல் .. யாரால் வருமென அறிந்து அவருக்கு சேவகம் செய்ய தயாரானவர்கள்.. அதனால் தான் பாஜகவிற்கு அனுசரணையாக நடந்துக்கொள்கிறார்கள்.. .. மக்களை சந்திக்க பயம் எதை சொல்லி தேர்தலை சந்திப்பது அடிப்படையில் இங்கே பாஜகவை வேரறுத்துவிடுவார்கள்.. குறிப்பாக பார்ப்பனர் எதிர்ப்பை கொண்டே தமிழகத்தில் அரசியல் களம் அமைக்கபட்டிருக்கிறது என்னசெய்தாலும் கட்டிவச்ச காசை திரும்ப கிடைக்காதென்பதைவிட நோட்டாவை தாண்ட முடியாதென தெரிந்து கிட்டிய வாய்ப்பை செமயாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.. இங்கே யாருக்கும் வெட்கமில்லை .. சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையைப்போல ..வராத வந்த மாமணியைப்போல .. நல்வாய்ப்பாய் வாய்த்த அடிமைகளை வைத்து நினைத்ததை சாதித்துக்கொள்கிறார்கள்.. மோடி ஆட்சிக்கு வந்த போது எழுதியதுதான். இவர்கள் இந்த ஐந்து வருடத்திற்குள் தங்கள் ஆட்களை உயர்பதவிகளில் நிரப்பிவிடுவார்கள் .. அதை சுத்தம் செய்ய ஐம்பதாண்டு தேவைப்படும்.. என்ன நினைக்கிறார்களோ எந்த திட்டமோ எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நடந்தேறுகிறது..இந்த பொம்மைகளை வைத்து கூத்து காட்டுகிறார்கள் .. எட்டுவழிச்சாலைக்கு கருத்து கேட்பே நடத்தாமல் மரங்கள் வெட்டபடுவதும் விளைநிலங்களை முள்வேலி இடுவதும் .. எந்த அறிவிப்புமில்லாமல் சத்தமில்லாமல் மாவட்ட ஆட்சியர் அனுமதியென நடந்தேறுவதாக ஊடகங்கள் சொல்கின்றன.. நீட் தேர்வு காவிரி என எல்லாம் கைவிரிக்கபடும் அவலம் கேட்போரை பாதுகாப்பென்ற பெயரில் அச்சுறுத்தல்.. படுகிழவியை கூட கைது செய்து தங்கள் எஜமானிய விசுவாசத்தை காட்டும் அடிமைக்கூட்டம்.. .. அடிமைபட்டு கிடப்போரிடமும் சிலநேரம் உணர்வு வெளிப்படும்.. சற்றென்று வெளிப்பட்டு அவரை அறியாமலேயே உண்மையை உரக்க சொல்லி தொலைக்கும்.. என்ன இருந்தாலும் அவன் மூலத்தில் கொஞ்சமேனும் மானமுள்ள தமிழின் மரபு இருக்கும் ..அதனால் இடையிடையே உளறல் என்ற பெயரில் உண்மையை கக்குகிறார்கள்.. பணத்தாசை பதவிஆசை பித்தனாக்கி வைத்திருக்கிறது அறிவு விழிக்கும் போது .. இந்த அடிமைக்கூட்டம் முகவரியில்லாமல் போகும்.. .. பாஜகவிற்கு வாய்த்த அடிமைகள் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment