Saturday, June 16, 2018

காற்றில் விசம் பரவட்டும்

வந்துவிழும் வார்த்தையில் விசம் தடவி வீசுகிறாயா.. காற்றே அமிலமாய் போனதா.. நச்சு பொருளை சுமந்த உன் வயிறு கக்கி தள்ளிவதெல்லாம் நாற்றடிக்கும் பிணத்தின் வாடை .. சில மணி நேரத்தில் உன்னை புதைக்கவில்லையெனில் எரிக்கவில்லையெனில்.. நாற்றடித்து.. வீங்கி வெடித்து புழுக்காளாய்.. நெளிந்து வெளிவரும் .. நானெனும் திமிர்.. நானே உயர்ந்தவனெனும் நான் ஒரு படி மேலே.. தொடாதே.. தீட்டு. அய்யய்யோ பார்த்தாலே பாவம் நிழல் மீது படலாமா சாணப்பயலே.. தொடாமல் பேசு .. வந்துவிட்டு போனால் ஜலம்கொண்டு கழுவு.. .. என்ன திமிர்.. குளித்தில் குளிக்கிறான்.. ஜலத்தை எதைக்கொண்டு கழுவுவது.. அடிஉதை.. அம்மணமாக்கு ஆதிக்க திமிர் எங்கிருந்துவந்தது.. உன்னையும் சேர்த்துதான் ஒதுக்கிவைத்திருந்தானே ஒசந்தசாதி அவனிடமல்லவா உன் கோபம் வந்து வாள்வீசிக்கிறவேண்டும்.. உன்னிலும் தாழ்ந்தவனென்றவனென உன்னிலும் உயர்ந்தவன் நானென சொல்பவன் சொன்னதை..நம்பி.. தாக்குகிறாய் அவன் தாழ்ந்தவன் உன் வர்ணப்படி.. ஆனால் நீயோ.. தாழ்ச்சில் பிறந்தவன் தவறாய் பிறந்தவன் என்று அவன் சொன்னபோது எங்கே போனது உன் வீரம்.. .. செத்தால் நாறும் பிணமே.. நீ..செத்துவிழும் போது உன்னை எரிக்கவோ புதைக்கவோ யாரும் இங்கே வரவில்லையெனில் வெடித்து சிதறி.. நாறி நரங்கொழிந்து போவாய்.. .. யார் நீ.. என்னை தாழ்த்தி சொல்ல என என்றேனும் கேட்டதுண்டா.. பார்பு செய்து பிழைக்க வந்தவன் பண்டாரமாய் திரிந்தவன் மாமன் மச்சானென பழகி திரிந்தவனை பகைமூட்டி பசியாறுகிறான்.. கொலை பசி .. அவனுக்கு இன்னும் தீர்ந்தபாடில்லை நம் முன் கைக்கட்டி நின்றவன் நம்மையே ஆளும் தகுதி பெற்றதெப்படி.. நம் கீழ் உத்தியோகம் பார்த்தவன் கீழ் நாமா.. ஜோலி பார்ப்பது.. எடு வாளை .. சூழ்ச்சியெனும் வாளை அறு ..அவன் உரிமைகளை மெல்ல தளர்ந்து இறுகபிடித்திருந்த கைகள் நழுவி ஒன்றின் பின் ஒன்றாய் பறிபோகும்.. இது அறியாமல்.. தன்னிலும் எளியோனை.. தரமென்று பிரித்த தாழ்ந்தோனை கட்டிவைத்து அடிக்கிறார்.. கடைசியில்.. நூலெனும் சிறு கயிறு உன்னை வெளுக்கும்.. அப்போதறிவாய்.. .. ஏய் பிணமே.. நாற்றமடிக்காமல் இருக்க காற்று மாசுபடாமல் இருக்க மண்ணுக்குள் புதைந்து போ.. இது மனிதர்கள் வாழுமிடம்.. இங்கே .. பிணங்களுக்கு நடமாட அனுமதியில்லை.. நகரு.. நல்ல காற்று வரட்டும் மனிதனாய் ..மண்ணில் விழுந்தவன்.. நாற்றடிக்கும் நடைப்பிணமாய் மற்றவரை கடித்து குதறும் கொடூர பற்களோடு அலையாதே.. .. மண்...பொது காற்று பொது நீர் பொது.. இதில் எங்கிருந்து வந்தது தீட்டு.. இனி யாரேனும் சொல்லும் போது கொடும் வாளை நீட்டு.. அவன் சங்கறுத்து காட்டு.. .. பொறுத்தது போதும்.. அடங்க மறு அத்துமீறு திருப்பி அடி.. வலி தீரும் வரை அடி.. இனி எவனும் கை நீட்டி பேச கூடாதென சொல்லி அடி.. அடங்கியது போதும்.. அறுத்துகொண்டு வா.. இனி.. பகை நேர்நிற்கிறது.. சங்கறுப்போம்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment