Saturday, June 9, 2018
ஏன் அய்யா என்றழைக்கிறோம்
பெரியாரியவாதிகள் சிலர் ஏன் சுயமரியாதை கொஞ்சம் கூட இல்லாம ஈவேராவை ஐயானு கூப்பிடுறாங்க.. என்னத்த கத்துக்கிட்டாங்களோ அவர்கிட்ட!
..
கூடவே தேவதாசி குலத்தில் பிறந்த கருணாநிதி முதல்வராகவில்லையா என்கிறார்.. நவீனவாதி பிருந்தா..
..
முதலில் அய்யா அவர்களைப்பற்றி .. இப்போதும் எரிச்சலோடு பேசிகிறாரே அதிலிருந்தே அவரின் மனரீதியான தாக்குதலுக்கு உள்ளான பெண்மணியென புரிந்துக்கொள்ள முடிகிறது.. என்ன செய்தார்
பார்பன பெண்களை தாலியறுத்தால் மொட்டையடித்து அதோடு முடிந்ததென்ற நிலையை மாற்றியவர் அதுவும்.. ராஜாஜி போன்ற வைஷ்ணவ குடும்பத்திலேயே புரட்சியை செய்தவர் .. ராஜாஜி மகளை இளம் விதவையாய் வீட்டிலிருந்ததை கண்டு .. ராஜாஜியிடம் குழந்தையை ஏன் இப்படியே வச்சிருக்கே என கேட்ட போது அவளோட பிராப்தம் அவ்வளவு தான் என்ற ராஜாஜி மனதை மாற்றி ... கல்வி பயில அனுப்பி அதோடு மறுமணமும் செய்துவைக்க கடும் முயற்சி செய்து காந்தியின் மகனுக்கே மணமுடித்து வைத்து.. ராஜாஜி குடும்பத்திலேயே விதவை (கைம்பெண்) திருமணத்தை செய்து வைத்தாரே .. அவரை பார்பன சமூகம் தானே அய்யா என்று அழைக்க வேண்டும்..
நாங்கள் ஏன் அழைக்கிறோம் தெரியுமா..
முற்போக்கு பேசும் பாப்பான் ஆபத்தானவன் என்று எங்களுக்கு சொல்லி தந்ததால்.. எவனுக்கும் நீ அடிமையில்லை ..தோளில் துண்டை போடு.. ஆண்டே என்றெல்லாம் அழைக்க தேவையில்லை உணர்த்தி.. நமஸ்காரம் என்ற ஆதிக்க திமிரையும் கும்புடுறேன்வசாமி என்ற அடிமைத்தனத்தையும் அகற்றி மரியாதையாக வணக்கமென்றே சொல் என்றாரே அதற்காக அவரை அய்யா என்றழைக்கிறோம்.. இதுவரை எங்கள் வீட்டு பெண்கள் பொட்டிகட்டி தெய்வத்தொண்டு ஆற்றிவிட்டோம் .. இனி பிருந்தா போன்றவர்கள் அந்த தெய்வத்தொண்டை ஆற்றலாமென என சொல்ல சொன்னதற்காக அவரை அய்யா என்றழைக்கிறோம்..
..
கலைஞரை ஜாதி பெயரைச் சொல்லி தாழ்த்திவிடலாமென்று நினைக்கிறார் அதில் கூட போதிய அறிவின்மையை காட்டுகிறார்..
கலைஞர் இசைவேளாளரில் சின்னமேளம் பிரிவை சேர்ந்தவர்.. பெரியமேளம் மரபினர் தான் தெலுங்கை தாய்மொழியாக அல்லது வழிபாடு மொழியாக கொண்டவர்கள் ..சின்னமேளம் பிரிவினர் தமிழ் மரபினர் .. பெரியமேளம் பிரிவினரில் தான் தேவதாசி முறை இருந்தது .. அவர்களை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம் அவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் தந்தையின் பெயரை போடமாட்டார்கள் தாயின் பெயரை தான் போடுவார்கள்.. உதாரணமாக நான் மிகவும் மதிக்கும் இசைமேதை .. எம்.எஸ். சுப்புலெட்சுமி.. அதாவது மதுரை சண்முகவடிவு சுப்பு லெட்சுமி என தன் தாய் பெயரான சண்முகவடிவை போட்டுக்கொள்வார்.. தன் வாழ்நாள் முழுவதும் பிராமண அடிமையாகவே வாழ்ந்தவர் அந்த இசைக்குயில் ..
கருணாநிதியோ தன் தந்தை பெயரை ..அதாவது முத்துவேலர் கருணாநிதி என போட்டுக்கொள்வார்..
விவரபோதாமை யாரிடமாவது கேட்டு தெரிந்து போட்டிருக்கலாம்..
..
கலைஞரை பெரியாரை சிறுமை படுத்துவதாக எணணி அந்த பெண்மணி சிறுமையாகி நிற்கிறார்.. அக்ரஹார சூழலில் அடிமைபட்டு கிடந்த சமூக பின்னணி .. உயரத்தை அடைவதற்காக எதையும் இழக்கலாமென்ற லட்சியபாதையில் செல்பவருக்கு.. மானம் சுயமரியாதை பற்றியெல்லாம் என்ன தெரியும்..
விடுங்கள் கழுதையை..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment