Thursday, June 21, 2018

சீமான் எனும் பொய்

சீமான் சமீபத்திய உளறல்கள் .. என்ன காரணம்.. ஏமாற்றவேண்டுமென முடிவு செய்துவிட்டால் அங்கே உண்மைக்கு வேலையில்லை ஆனால் சில சுவாரஸ்யங்கள் வேண்டுமென்பதற்கு நடக்காததை நடந்ததாக சொல்லித்திரிபவர்களை காணமுடியும்.. ஆனால் வெளிப்படையாக பொய்யென்று தெரிந்தும் மடைதிறந்தாற்ப்போல அவிழ்த்துவிடுவது தம்மோடு இருக்கிற விடலைகள் அறிவுகொண்டு சிந்திக்காது என தைரியம்தான் அவரை பேச வைக்கிறது.. #அறிவு_வறட்சியும் ஒரு காரணம்.. முட்டாள்த்தனமாக சிந்தனை செயல் அறிவிற்கு தொடர்பில்லாமல் கதைப்பதென்பது கடைசியில் காட்டிகொடுத்துவிடும்.. மற்றொரு விடயம் ஒருவரைப்பற்றி ஏதேனும் சொல்லும் போது அவர் இல்லையென தெரிந்தால் நடக்காத ஒன்றை இட்டுகட்டி பேசலாம் அப்படிதான் ஆமைக்கறி ஏ.கே.47 னும் அடித்துவிட்டார்.. .. சட்டென்று உணர்ச்சிவயபடும் இளைஞர்கள் நல்ல விடயங்களை உள்வாங்கி ஆய்ந்தறியாமல் சொல்கிறவனை நம்புகிற .. சொல்லும் சொல்லின் உண்மையை கூட விளங்கிகொள்ள முடியாதவர்களாக இருப்பது கொடுமை.. வாய்தவறி பேசிவிட்டு பின் மாற்றிக்கொள்வதை கூட ஏற்கலாம் ஆனால் தொடர்ந்து அடுக்கடுக்காக ஈழத்தைப்பற்றியும் .. தன்னோடு கதைத்தவர்கள் பற்றியெல்லாம் இல்லாததை சொல்லி திரிவது ஒருவகை மனநோய் திரும்ப திரும்ப சொல்வதால் உண்மையாகிவிடுமென்கிற பழைய அயோக்கியத்தனம் இப்போதெல்லாம் செல்லாமல்போகும்.. வலைத்தளங்கள் உலகைச் சுருக்கி உள்ளங்கையில் தந்துவிட்டபிறகு சொல்லின் உண்மைதன்மை அறிவது மிக சுலபமாகிபோனது... சீமானுக்கு பதிவெல்லாம் வேண்டுமா என கேட்க தோன்றும்,.. இவரைப் போன்ற வழிகேடர்களால் இளைய சமுதாயம் ஒருவித மன அழுத்ததிற்கு ஆளாக நேரிடும் எல்லாவற்றையும் உண்மையென நம்பும் அரைவேக்காட்டுத்தனம் குடிகொள்ளும் .. உண்மையை அறிகிற போது அது காலங்கடந்த செயலாகிவிடும்.. சமூகம் வீணாய்போய்விடும் .. அரசியல்வாதிகள் என்றில்லை.. சமூகநீதி பேசுவோர்,முற்போக்காளர்கள் ..மதம் மார்க்கம் .. அறிவியல் புராணம் பேசுவோர் யாராக இருந்தாலும் அவர்களின் சொல்லில் எழுத்தில் உண்மை இருக்கிறதா என அறிந்திட வேண்டும் .. எல்லோரும் சுகமாக கதைப்பார்கள் மனம் லயிக்கும்.. மூளைச்சலவைகூட செய்யும் ஒருவித உணர்வுமேலிட சற்றென்று ஆட்கொள்ளும் அவர் மீது ஈர்ப்பை தரும் சலங்கைகட்டி மனதில் ஆடும்.. ஆனால் உண்மை கொஞ்சம் கொஞ்சமாய் தான் உள்வாங்கும் ஆனால் அது நிலைத்து நின்று காலம்கடந்தும் பேசும்.. அறிவோடு அடுத்துவா.. அறிவுகொண்டுபார்.. அறிந்ததெல்லாம் ..அறிவில் சேர்.. அது மெய்யானதா என பகுத்தாய்ந்து பார் அதுதான் நம்மை அறிவுடைச் சமூகத்தோடு சேர்க்கும்.. பித்தலாட்டக்காரன் ..சுற்றிவளைத்து கதைப்பவன்.. அடுக்கடுக்காய் பொய் பேசுபவன்.. யாரும் கேட்கமாட்டார்களென எண்ணி உண்மையோடு பொய்யை கலப்பவன்.. எதிர்நிற்பனை அற்பனாய் எண்ணி தனக்கே எல்லாம் தெரியும் தானே சரி என்பவனை நம்பாதீர்.. அது தீங்கில் போய் முடியும்.. .. சீமானிஸிமாம்.. இப்படிதான் அரைக்கிறுக்கன் எம்ஜிஆர் அண்ணாயிசம் என்றார் ..என்ன அது அண்ணாயிசமென்ற போது..கம்யூனிஸமும் பெரியாரிசமும் கலந்ததென்றார் அந்த வறட்டு அரசியல்வாதி.. அறிவின் வறட்சி இப்படிதான் கதைக்கச் சொல்லும்.. சீமானின் கதைகள் பொய்களால் ஆனது அறிவின் வறட்சி அது.. நிலைக்காது.. புரிந்துக்கொள்ளுங்கள் ;அறமே என்றும் வெல்லும்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment