Monday, June 18, 2018
ஜெயலலிதா எனும் குற்றவாளி..
ஜெயலலிதா மணிமண்டபம் அமைப்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு விரும்பமில்லை ஆனால் சட்டப்படி தடுக்கமுடியாது இந்திரா பானர்ஜி..
..
ஆனால் சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்க வழக்கில் இதே சட்டப்படி தீர்ப்பை காணோமே .. அதில் நிறைய மனசாட்சி எழுந்து நின்றதே .. உயர்நீதிமன்ற நீதிபதிகளில் நிறைய சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை தந்தவராக அறியபடுகிறார் அவரின் தீர்ப்புகள் அதிக காலதாமதமாவதும் நெருடல்களை தருவதும் ஒருவித தடுமாற்றத்தை தருவதுமாக இருப்பதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியில் பேச்சு உலவுகிறது.
..
தீர்ப்பில் இயற்கைக்கு முரணான தர்மம் மீறல் இருக்கிறதே.. தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்றான பின் அவரை புகழ்வதும் அரசே கொண்டாடுவதும் சரியா என்ற கேள்வி எழவே இல்லையா .. மக்கள் வரிப்பணத்தில் குற்றவாளிக்கு மணிமண்டபமென்பது அனைத்தும் சட்டம்/ நியாயம் ..மீறிய செயலென புரியவில்லையா .. இது ஒரு முன்மாதிரியாக கொண்டு வரும் காலங்களில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை அரசு கொண்டாட ஏதுவாக அமையுமென்பது புரியவில்லையா..
..
ஏற்கனவே டான்சி வழக்கில் மனசாட்சிப்படி நடந்துக்கொள்ளுங்களென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது .. ஜெயலலிதாவிற்கு நீதிமன்றங்கள் எந்தளவிற்கு சலுகை வழங்கியதென்பதை நாடறியும் .. விசாரணை நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டவுடன் விரைந்து உயர்நீதிமன்றம் பிணை வழக்கை எடுத்துக்கொண்டதும் .. வரலாற்றில் அதிவேகமாக உச்சநீதிமன்றம் பிணை வழங்கியதும்.. மூன்று மாதத்திற்குள் விசாரித்து முடிக்கவேண்டுமென உத்தரவிட்டதும் ..அதுவரை நிகழாத ஒன்று.. உயர்நீதிமன்றத்தில் வெளிப்படையான கணக்குப்பிழையை /அநீதியை தெரிந்திருந்தும் உச்சநீதிமன்றம் விசாரித்து காலம்தாழ்த்தி .. ஜெயலலிதா மரணிக்கிறவரை காத்திருந்து சசிகலா முதல்வர் வேட்பாளரென்றவுடன் நீதி வழங்கியதும் இந்திய நீதித்துறை வரலாற்றில் மறக்கமுடியாத பக்கங்களாயின
..
ஏன் காலகாதமென நீதிமன்றத்தை யாரும் கேட்க முடியாது கூடாது தாமதிக்கிற நீதி அநீதியின் துவக்கமென அறிந்திருந்தும் நீதியரசர்கள் மௌனம் காப்பது இந்திய நீதிகள் மீதான பார்வை பரிகசிக்கும் நிலைக்காளாகிறது
நீதிகள் இயற்க்கைக்கு முரணாக ..அல்லது ஒருவித சாயலோடு/சார்போடிருப்பது ஒருவகையில் வெட்ககேடானது .. ஜெயலலிதாவிற்கு காட்டும் பரிவை அதே அளவுகோலை மற்றவர்களுக்கு காட்ட மறுப்பதும் கூட அக்கிரமசெயல்.. நீதிபதி கர்ணன் வெளிப்படையாகவே இந்திய நீதிமன்றங்களில் புரையோடி போயிருக்கும் ஊழலை சொன்னதும் .. உச்சநீதிமன்ற நீதிபதிகளே மக்களிடத்தில் நீதிமன்றத்தில் நடக்கும் விரும்பதகாத செயல்களை சொன்னதும் மறு சீரமைப்பு செய்யவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.. தொடர்ந்து வழங்கபடும் தீர்ப்புகளில் மீதான மக்களின் நம்பிக்கை பொய்த்து போகிறது.. ஒரு வழக்கில் இரு தீர்ப்புகள் ஒன்று சட்டத்தை தெளிவாக சொல்லியும் இன்னொன்று மழுப்பியும் வழங்குகிற சூழல்..
..
ஜெயலலிதா எனும் நபர் மீது நமக்கு கோபமில்லை மாறாக ஜெயலலிதாவிற்காக ..தர்மங்கள் மீறப்படுவதும் .. சட்டம் வளைத்தொடிக்கபடுவதும் .. நீதியை பெற காலதாமதமாவதும்.. நீதியில் சலுகையை தருவதும் நியாய தர்ம சட்டபடி ஏற்கமுடியாததாகிறது..
எல்லோருக்கும் ஒரே நீதி .. பாகுபாடில்லாத சட்டத்தின் நீதி.. எங்கும் எவரும் உயர்ந்தோரில்லை சட்டம் முன் சமம் என்கிற நிலை வரவேண்டும்..
அதுவரை ..
அண்ணா சொன்னதைப்போல
இருட்டறையாக தான் இருக்கும்...
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment