Sunday, June 3, 2018
கலைஞர்95
கலைஞர் பிறந்தநாள்..
ஒரே வரியில் சொல்லுங்கள் என்றார் ..நண்பர் ..
இன்றைய இளையதலைமுறை இவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்றேன்..
ஆம்..
ஒரு தனிமனிதனாக வாழ்வில் போராட்டங்களோடு வாழ கற்றுக்கொள்ளவேண்டும்.. எதிரிகள் பகைகள் எந்த நேரத்தில் எந்த திசையில் ஏன் கூட இருந்தே கூட வரலாம் நம்மை நிலைகுலைய செய்யலாம் அதை சிறு புன்முறுவலோடு சந்திக்கும் பேராற்றல் வேண்டும்.. வெற்றியை நோக்கிய பயணத்தில் தோல்விகளால் துவண்டுவிடாத நெஞ்சுரம் வேண்டும்.. தன்னை நம்புகிறவர்களை கடைசிவரை நம்பிக்கை பொய்க்காமல் நடந்திடும் நேர்மை வேண்டும்.. தான் செய்கிற நல் காரியங்கள் சிலரின் மூர்க்கத்தனத்தால் பகைமை வெறியால் மறைத்திட்ட போதும் .. அறம் வெல்லும் என்ற அசராத நம்பிக்கை வேண்டும்..
..
எல்லோருக்கும் வாய்க்காது இந்த வாழ்வு தொட்ட துறையெல்லாம் தனி முத்திரை பதித்து வெற்றி கொடி நாட்டும் வித்தை அறிந்த மனிதர்..ஒவ்வொரு துறையிலும் தான் ஏற்ற கொள்கையை .. சத்தமே இல்லாமல் ஏற்றிவிடுவார்.. எதிரிகள் அதை அறிந்துணர்வதற்குள் அடுத்த இலக்கை அடைந்திருப்பார்.. பன்முக ஆளுமை எல்லோரிடமும் அமைவதில்லை எழுத்தாளர் படைப்பாளர்.. அரசியல்வாதி ஆட்சியாளர் ..இயக்க தலைமை.. ராஜதந்திரி.. பேச்சாளர்.. இலக்கியவாதி ..
பத்திரிக்கையாளர்... சிறந்த குடும்பத் தலைவர்.. எல்லாவற்றிலும் நெஞ்சுக்கு நீதியாய் வாழ்வதென்பது அரிது..
..
அறிந்துக் கொள்ளுங்கள் .. இளைய தலைமுறையே.. தான் வாழும் காலத்திலேயே வாழ்ந்த காலத்தை #நெஞ்சுக்கு நீதி" யோடு 4500 பக்கங்களுக்குமேல் பதிவு செய்தவர் எவருமே இல்லை.. எதையும் மறைக்காத திறந்த புத்தகமான வாழ்க்கை .. எதிரிக்கும் வாய்ப்பளிக்கும் மேன்மை .. எதையும் ஆய்ந்தறிந்து பகுத்தறிவு நிழலில் நின்று செய்து முடித்த பேராண்மை.. தனி மனித வாழ்வில் மெச்சபட்ட நேர்மை.. நல்ல குடும்பதலைவனாய் .. அதே கொள்கையா குடும்பமா என்று வந்தால் கொண்ட கொள்கைக்காக குடும்பத்தை கூட துறக்கும் வலிமை .. உடல் முழுவதும் அம்மை வந்து கொப்பளமாய் இருந்த போதும் .. பகுத்தறிவு கூட்டத்திற்கு போர்வை கொண்டு போர்த்தி வந்த கொள்கைஉறுதி.. எவராகினும் வீடுதேடி வந்தால் அவர் பகையெடுத்தே வந்தாலும் .. வாசல்வரை வந்து வழியனுப்பிவைக்கும் பெருந்தன்மை .. கூட இருந்தவனே கொலைவாளை உருவினாலும் ..அதை புன்னகையோடு எதிர்த்துநின்று வீழ்த்திய நெஞ்சுரம்.. ஆளும்காலமெல்லாம் .. ஒடுக்கப்பட்டவனை உயர்த்திட உழைத்திட்ட சமூகநீதி.. .சொல்லிக்கொண்டே போகலாம்...
ஆம் இதுவரை இப்படியொரு தலைவனை இதற்கு முன் கண்டதில்லை ..இனி வருவது அரிது..
பாடம் படி.. பகுத்தறிவு பகலவனின் கரம்பிடித்து வளர்ந்த .. பெரியாரின் சீடனிடம் இந்த தள்ளாத வயதிலும் நாடு எதிர்நோக்கி நிற்கிறதே.. இந்திய துணைகண்டம் என்றில்லை உலகமே வியந்து போற்றும் ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெருந்தலைவர். இவரே பெருந்தலைவர்.
..
இவருடைய
அரசியலில் இலக்கியத்தில் இல்லறத்தில்
இன்னமும் இந்த நாடும் நாமும் கற்றுக்கொள்ள வேண்டியவை..நிறைய இருக்கிறது..
..
எங்களுக்கு ஓர் பேராசை..
கலைஞர் பெருமானே..
உன் கரகரத்த குரலில் தமிழினெனும் வாளெடுத்து வா.. பகையறுக்க வேண்டும்..
..
வாழ்க! எம்மான்.. எங்கள் திராவிட பெருவுடையே.. வாழிய ..வாழிய .. வாழிய பல்லாண்டு..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment