Wednesday, June 27, 2018
காலம் தந்த தலைமை
திரும்பவும் அதே இடத்திற்கு வருகிறேன் என சிலர் எண்ண கூடும்.. ஆம்.. சிலர் தங்கள் தகுதியை மறந்து ஏதோ தாங்கள் தான் காப்பாத்த வந்த ரட்சகன் போல பேசி திரிகிறார்கள்.. அரசியலில் சிலர் மிக திறமையாளர்களாக தன்னை எண்ணி படுகுழியில் விழுந்த கதைகள் ஏராளம்..
ம.பொ.சி.. சி.பா.ஆதித்தன் .. சம்பத்..
ஏன் நாவலர்.என பட்டியல் நீளும்.. ...இவர்களெல்லாம் ஏதோவொரு வகையில் தங்கள் திறமைகளை பறைசாற்றினார்கள்.. ஆனால் அது மட்டுமே போதுமானதாக இல்லை .. மிக சிறந்த தலைவர்கள் வரிசையில் இடம்பெற முடியாததுமட்டுமல்ல வெகுமக்களின் ஆதரவில்லாமல் போனார்கள்.. குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களில் சிலர் கொண்டாடபட்டாலும் தொடர்ந்து தங்களின் திறமையை நிலைநாட்ட அவர்களால் இயலவில்லை..சிலர் அடிபணிந்து போனார்கள் .. உதிர்ந்த ரோமங்களாய் போனவர்களும் உண்டு.. உருப்படாமல் போனவர்களும் உண்டு.. இதை ஏன் இப்போது சொல்கிறேனெனில்.. இன்றைக்கு திடீர் திடீரென முளைக்கும் போராளிகள் முதல்நாள் சமூகசேவை செய்துவிட்டு மறுநாள் கட்சி தொடங்கும் தலைவர்கள்..?
தங்களால் மட்டுமே முடியுமென சொல்லி திரிவதை பார்க்கிற போது நமக்கு நகைக்க தோன்றுகிறது.. உடனே ஜனநாய நாட்டில் யார் வேண்டுமானாலும் வரலாம் என கேள்வி எழும்.. வரவேண்டும் அதற்குமுன் மக்களோடு மக்களாக இணைந்து போராட கலந்து காரியமாற்றவேண்டும்..
..
சிலர் தனக்கே தகுதியென கருதி எதைவேண்டுமானாலும் பேசலாம் என எண்ணுவது .. தூரத்தில் இருந்து சூரியன் ஒளிபட்டு இலையில் தங்கிவிட்ட நீர் மின்னும்.. அது தன்னால்தான் ஒளி பிறந்ததென நினைப்பதைப் போல சிலர் தங்களால் தான் என எண்ணுகிறார்கள் ஏதோ தாங்கள் மட்டுமே சிறந்த தலைமையை தருவோமென உளறுகிறார்கள்.. சீமான் அன்புமணி .. தமிழிசை எடப்பாடி தினகரன்..ரஜினி கமல் என.. இந்த கூட்டம் எண்ணிக்கையில் அதிகம் எதற்கும் உதவாதவர்கள் .. இவர்களின் பலம் சாதி மதம் மொழி.. கவர்ச்சி சினிமா.. இதைதாண்டி இவர்கள் பூஜ்யம் ஒரு குறிப்பிட்ட சமூகமோ ..மதமோ.. கவர்ந்தழுக்கும் கலையோ.. இவர்களை பின்துணைக்கலாம் அது நீடிக்காது காரணம் அந்தந்த சமூகமே அவர்களை தூக்கியெறிந்துவிடும் காரணம்.. அந்த சமூகத்திற்கு கூட அவர்களால் கெடுதியே இவர்களால் வந்து சேர்ந்திருக்கும் .. தலைவர்கள் உருவாக வேண்டும் காலம் ஒவ்வொருமுறையும் தனக்கான தலைவனை தேர்வு செய்திருக்கிறது மக்கள் நலன்.. ஓயாத உழைப்பு சமூக சிந்தனை நற்செயல் இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கிற நேர்மை.. சாதி மதம் இனம் மொழி கடந்த மனிதாபிமானம் .. சமூகநீதியில் உரத்து நின்று அதை சமன் செய்கிற வல்லமை.. எள்ளளவும் ஜனநாயக மரபுகளை மீறாமை..
எதிர்கருத்தையும் உள்வாங்கும் அரசியல்
தான் ஏற்ற கொள்கையை .. நிமர்ந்துநின்று பறையும் பேராற்றல் ..துணிந்து செயல்படுதல் ..வேகத்தோடு கூடிய விவேகம்
அனைவரையும் இணைத்து/இணைந்து செல்லும் தலைமை ...இவையெல்லாம் கணக்கில் கொண்டு நல்ல தலைவனை காலம் தேர்வு செய்து தரும்.. தற்குறிகளை அரைகுறைகளை தான்தோன்றித்தனமாய் பேசிதிரியும் அபத்தங்களை தானெனும் மமதையோடு திரியும் வெத்துவேட்டுக்களை காலம் கைவிட்டுவிடும் மட்டுமல்ல மறந்துபோகும்.. ஆழ குழிதோண்டி புதைத்துவிடும்..
..
ஆம்..
காலம் தந்த தலைவர்களாய்.. காலம் செதுக்கியவர்கள் .. பெரியார் பேரறிஞர் அண்ணா ..கலைஞர்...அந்த வரிசையில்
காலம் தனித்துவத்தோடு மெல்ல மெல்ல செதுக்கி தருகிறது.. தங்கமாய் தனிநிகர் தளபதியாய் காலம் தந்த கொடையாய் நிமிர்ந்து நிற்கிறார்.. தளபதி.ஸ்டாலின்.. நான் சொல்வது இன்றைக்கு இது மிகையாக தோன்றும் .. ஆனால் காலம் நமக்கு உணர்ந்தும் ..அரசியலில் நேர்மையும்.. கொண்ட கொள்கையில் உறுதியும் அரவணைத்து செல்லும் தலைமையும்.. நிதானமும் எதையும் நேர்வழியில் பெறவேண்டும் மக்கள் தரவேண்டுமென என எண்ணுகிற உயர்குணமும் .. அதையெல்லாம் மக்களின் நம்பிக்கையும் சொல்லும் .. காலம் செதுக்கிய தலைவன் என்று .தளபதி தமிழகத்தின் தலைவன்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment