Friday, June 22, 2018
நவீன சிற்பி
கலைஞர் என்ன செய்தார்..
..
ஒரு சமூகம் மேம்பட வேண்டுமெனில் அது கல்வியறிவில் தன்னிறவை பெற்றிருக்கவேண்டும்.. கல்விப்புரட்சியின் துவக்கம் திராவிட சிந்தனையில் வந்தது..
காமராஜர் பள்ளிகளை திறந்தாரென இன்று புகழ்கிறோமே .. அதற்கு முன் நாம் சிந்திக்கவேண்டிய,கேட்க வேண்டிய கேள்வி யாருமே பேசாமல் கடந்து போகிறோம்.. பள்ளிகளை மூடியது யார்.. மூதறிஞர் என்று சொல்லி திரிந்த ராஜாஜி பள்ளிகளை மூடி.. குறிப்பிட்ட சமூக பின்ணணி உள்ளவர்கள் மட்டுமே படிக்கவேண்டும் பொருளாதாரத்தில் கொஞ்சம் மெச்சபட்டவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலையை நோக்கி தமிழகத்தை தன் நயவஞ்சகத்தால் தள்ளினார்.. அதனால் தான் தந்தை பெரியார் ராஜாஜியை வீழ்த்தவேண்டுமென்பதற்காகவே காமராஜரை பின்துணைத்து முதல்வராக வர வழிசெய்தார்.. முதல்வராக வந்தவுடன் பெரியார் ராஜாஜி பள்ளிகளை மூடிவிட்டார் தொறந்து பிள்ளைகள் படிக்க ஏற்பாடு பண்ணுய்யா என்றார்.. காமராஜர் துவக்கப் பள்ளிகளை திறந்து குறிப்பாக ஏழை மற்றும் கிராமபுற குழந்தைகள் கல்வி கற்க செய்தார் அவர் ஆட்சியில் தான் எட்டாவது படித்தவர் துவக்கப்பள்ளி ஆசிரியர் ஆகலாமென்ற சட்டம் வந்தது ஆனால் பின் வந்த பக்தவச்சலம் அதை கண்டுக்கொள்ளவே இல்லை.. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதுவும் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் தான் ஆரம்ப பாடசாலை ஆசிரியர் நியமனம் அதிகரித்தது..
..
விடுதலை இந்தியாவில் கல்வியில் புரட்சியை தந்தது தமிழகம் தான் கல்விக்கான சலுகைகள் நன்றாக படிக்கிற பிள்ளைகளுக்கு scholarship உதவிதொகையை அதிகரித்தார்.. பள்ளி இறுதியை முடித்திருந்தால் ஆசிரியராகமுடியும் என்ற நிலையை கொண்டுவந்தார்..அவர்கள் பணி நியமனத்தை உறுதி செய்தார்
கிராமங்கள் தோறும் நடுநிலைகளை உயர்நிலைகளாக உயர்த்தினார்.. மாவட்ட தலைநகரங்களில் மட்டுமே இருந்த அரசு கலைக்கல்லூரிகளை அதிகரித்து மாவட்டதின் பிற நகரங்களும் என விரிவுபடுத்தினார்.. மருத்துவக்கல்லூரிகள் மாவட்டம் தோறுமென புரட்சியை செய்தார் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவ இடங்களென்ற புதியதொரு வரலாறு படைத்தார்.. முதல் பட்டதாரிக்கு கல்வி கட்டணத்திலிருந்து விலக்கு அளித்தார்.. கிராமபுற மாணவர்களுக்கு மருத்துக்கல்லூரியில் இடம் ஒதுக்கினார்.. கற்பிக்கும் செயல் கடவுளின் செயல் என்ற உணர்நோக்கோடு பணியாற்றும் ஆசிரியர்கள் ஊதியத்தை உயர்த்தினார்
..
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமிர்த்தியா சென் தமிழகம் தனி நாடாக இருந்திருந்தால் அது வளர்ச்சியில் ஐரோப்பிய நாடுகளோடு போட்டி போடும் என்றார் ..அதை மேலைநாடுகளோடு தான் ஒப்பிட வேண்டுமே,தவிர தமிழக வளர்ச்சியை பிற இந்திய மாநிலங்களோடு ஒப்பிட கூடாதென்றார்..
ஆம் இது திராவிடத்தால் சாத்தியமானது.. இன்னும் குறிப்பறிந்து சொல்லவேண்டுமெனில் கலைஞரால் சாத்தியமானது.. கல்வி விவசாயம் வேலைவாய்ப்பு இந்த மூன்றையும் மிக சரியாக கையாண்டார் விவசாய மக்களின் இன்னல்களை களைய .. கடன் ரத்து இலவச மின்சாரம் இவை இரண்டுமே போதும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நிலத்தடி நீரை பெற மின்சாரம் பெருமளவு உதவியது விவசாய கடன் ரத்து விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை தந்தது .. கல்வியிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் தமிழகம் புதியதொரு இலக்கை எட்டியிருந்தது.. இடையிடையே ஆட்சி மாற்றம் நிகழ்ந்த போதும் கலைஞர் பயணித்த சுவட்டிலேயே சமூக நீதியோடு பயணிக்க வேண்டிய கட்டாயம் பின் வந்தவர்களுக்கு வந்தது.. எம்ஜிஆர் இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை கொண்டுவந்த போது மக்கள் பெரும் தோல்வியை நாடாளுமன்ற தேர்தலில் தந்தார்கள் உடனே விழித்துக்கொண்டு பொருளாதார அளவுகோலை ரத்து செய்தார்..
இடஒதுக்கீட்டில் தமிழகத்தில் தான் உள் ஒதுக்கீடு செய்துகாட்டினார் (BC) பிற்படுத்தபட்டவர்களில் மிகவும் பின் தங்கிய சமூகத்தை மிகவும் பிற்படுத்தவரென (MBC) அதிலும் சிறுபான்மை சமுதாயம் அதிகம் பயன்பெறவில்லை என்றவுடன் (BCM) என்ற உள் ஒதுக்கீட்டை கொண்டுவந்தார்.. ஆந்திராவில் உயர்நீதி மன்றம் ரத்து செய்ததை கணக்கில் கொண்டு பிற்படுத்தபட்ட ஆணயத்தின் அறிக்கையை பெற்று தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு உள்ஒதுக்கீட்டை கொண்டுவந்தார் பட்டியனித்தில் Sc/St பிரிவில் உள் ஒதுக்கீட்டை அருந்ததியனருக்கு ஒதுக்கி உண்மையான புரட்சி செய்தார்..
..
பெருங்கிழவன் உண்மையான சீடனாய் பெருந்தொண்டாற்றிவிட்டு மூப்பின் காரணமாய் மௌனமாய் ஓய்வில் இருக்கும் இந்த சூரியன் தான் தமிழகத்தின் சிற்பி.. ஏன் இன்னமும் கோபம் தீராமல் பார்பன கும்பல் தொடர்ந்து சூழ்ச்சி செய்து திமுகவை மட்டுமே வேட்டையாட நினைக்கிறது காரணம் இதுதான் திமுக இருக்கிறவரை இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது..எவ்வளவு தீங்கிழைத்தாலும் பொய் குற்றசாட்டுகளை கட்டிசமைத்தாலும்
அறம் வெல்லும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து மக்கள் பணியாற்றும் பேரியக்கம் திமுக.. கலைஞர் இந்த நூற்றாண்டு கண்ட தமிழகத்தின் நவீன சிற்பி.. ஆம் அவரது திட்டங்களை தான் இன்று இந்திய துணைகண்டமே கடன் வாங்கி பின்பற்றுகிறது ..
..
#தமிழகத்தின்_சிற்பி..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment