Wednesday, June 13, 2018
இநிதியாவின் பிரதமர்..?
நான்கு ஆண்டுகளில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருக்கிறார்.. மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர்..
..
இது குறித்து பாஜக விளக்கம் அளிக்கவேண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் விடுதலை இந்தியாவில் நாடாளுமன்றத்தை கண்டு அஞ்சுகிற 56 இன்ச் பிரதமர் இவர்தான்..
நேருவின் ஆட்சியின் போது எதிர்கட்சிகளின் கேள்வி நேரத்தில் அவை இருப்பதை வழக்கமாக்கி கொணேடிருந்தார் .. அண்ணா காயிதெமில்லத் போன்றவர்கள் பேசும் போது அவையில் இருப்பதின் அவசியம் உணர்ந்திருந்தார்.. இந்தியை ஆட்சிமொழியாக்கும் மசோதாவை எதிர்த்து பேசிய கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்களை இடைமறித்து.. நீங்களும் ஏன் எதிர்க்கிறீர்கள் என்ற போது ஆட்சிமொழியாக இருக்கும் தகுதி இந்திமொழிக்கில்லையென்றும் அதற்கான தகுதி தமிழுக்கு மட்டுமே உள்ளதென்றவர்.. சரி சமமான வாக்குகள் பெற்று தோற்கும் நிலையில் சபாநாயகர் தன் வாக்கை பயன்படுத்தியதால் இன்று இந்தி ஆட்சிமொழி.. ஏன் .. பின்வந்த எந்த பிரதமரும் லால்பகதூர், இந்திரா, மொராஜி ஏன் ராஜீவ் காந்திவரை யாரும் ஓடியொளிந்ததில்லை..
..
எதிரிக்கட்சி என்ற தகுதியை வழங்க மறுத்து யதோச்சிய அதிகாரம் தமக்கிருப்பதாய் நினைத்து எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பயந்து .. விவாதத்தில் பங்கேற்காத ஒரே பிரதமர்.. நிறைய கருத்துவேற்றுமை இருந்தாலும் அத்வானி மிக சிறந்த நாடாளுமன்றவாதியாக திகழ்ந்தவர்.. ஒரு முறை முரசொலி மாறன் எழுப்பிய வினாவிற்கு .. விடைதேடி நாடாளுமன்ற நூலகத்தில் காலையிலிருந்து மதியம் வரை குறிப்பெடுத்து கொண்டிருந்தார் அப்போது அவர் துணைப் பிரதமர்.. அந்தளவிற்கு நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கையும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த சிறந்த ஜனநாயகவாதி.. அடல்பிகாரி வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் கலந்துக்கொண்டு மறுத்தும் ஏற்றும் திருத்தங்களை கொண்டுவர ஒத்துழைத்திருக்கிறார்.. சில நேரம் தட்டிகழித்தாலும் முக்கியமான நேரங்களில் சபையில் இருந்திருக்கிறார் ..
..
மோடி நாடு தொடர்ந்து பல்வேறு துறைகளில் பின்னோக்கி செல்லும் போதும் .. பொருளாதார மந்தநிலை குறித்து பேச உறுப்பினர்கள் ஆர்வம் காட்டும் போதும்.. பணமதிப்பிழப்பின் பாதிப்பை நாடு உணர்ந்து அதன் தாக்கத்தை அனுபவிக்கும் போதும்.. தொடர்ந்து தலித்கள் சிறுபான்மையினர் தாக்குதலுக்குள்ளாகும் ..
போதும்.. மாட்டின் பெயரைச்சொல்லி மனிதனை கொல்லும் போதும்
நாட்டின் நடக்கும் மக்களின்
தன்னெழுச்சியான போராட்டங்களாகட்டும் எதைப்பற்றியும் பேச தயாரில்லை..
ஊர் சுற்றி வரவே நேரம் போதவில்லை இதில் மக்கள் பிரதிநிதிகளின் கேள்விக்கு பதிலளிக்க ஏது நேரம்..
..
பத்திரிக்கையாளர்களை சந்திக்க பயப்படுகிற பிரதமர்.. தொடர்ந்து இரண்டு கேள்வி கேட்டால் நா வறண்டு போகும்.. ஆனால் பொதுவெளியில் .. பொது மேடையில் யாரும் எதுவும் எதிர்கேள்வி கேட்க மாட்டார்களென்றால் 56 இன்ச் மார்பு புடைக்க கைகளை உயர்த்தி உரத்த குரலில் வசனம் பேச வரும்.. ஆளில்லாத மைதானத்தில் அடிச்சு ஆடுவார்.. அரசு இயல் தெரியாத .. மதவெறியின் ருத்ரதாண்டவத்தில் தலைகளை எண்ணும் தலையாரி வேசம் கட்டியதே தகுதியென்று நம் மீது திணிக்கபட்டவர் வேறென்ன தெரியும் .. ஜனநாயக மாண்புகளை பற்றியோ .. எதிர்கட்சிகளே சிறந்த ஆட்சியை வழிநடத்தும் தேரின் சக்கரம் என்றோ நாடாளுமன்றமே இந்திய அரசியலமைப்பின் அச்சாணி என்றோ அறிந்திராதவர்.. இவர் அவைக்கு வந்தால்தான் வியந்து பேசவேண்டும்..
..
#இந்திய_ஜனநாயகத்தின்_சாபகேடு…
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment