Sunday, June 24, 2018
தமிழ்..
இந்தியை கற்றுக்கொள்ளுங்கள்..அதனால் வெளி மாநிலம் சென்று பிழைக்க முடியும்..
கவர்னர் ..
நாங்க ஏன் போகணும் .. எல்லா வளத்தையும் சுரண்டி மார்வாடியிடம் கொடுக்கவா ..
தமிழகத்திற்கு கவர்னர்தானே தவிர .. இந்தி மொழிக்கு தூதரா.. தமிழ் மொழியின் வளமும் தொன்மையும் இன்று பல்வேறு நாடுகளில் பேசும்,மொழியாக அங்கீகரிக்கபட்ட நிலையில் இந்தியாவில் செத்த மொழிக்கு சிங்காரித்து சமஸ்கிருதத்தை முன்னெடுக்கிறீர்.. தமிழ் மொழிப்போல தொன்மையான மொழி உலகில் இல்லை என்பதறிந்தும் தமிழர்களின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்தியை சமஸ்கிரதத்தை கொண்டாடுகிறீர்..பத்தாயிரம் பேர் கூட பேசாத சமஸ்கிரதம் cbsc ல் தேர்வில் இடம் பெறுகிறது 18 நாடுகளில் ஆட்சிமொழியாகவும் அங்கீகரிக்கபட்டதாகவும் உள்ள தமிழ் வேண்டாமென்கிறீர்.. இங்குள்ள சாண பயலுகள் அதை கண்டுக்கொள்ளாமல் மௌனம் காக்கிறார்கள்..
..
இந்தி..
ஆயிரமாண்டுகள் பழக்கமுள்ள உருதுமொழியின் வளத்தை அழிக்க வேண்டுமென்பதற்காக உருவாக்கபட்ட மொழிதான் இந்தி.. உருது மொழி கூட பார்சி மற்றும் அரேபிய மொழியை தழுவிய நகல் என்கிறார் மொழியியல் பேராசிரியர் கலாநிதி சீறிதரன் (இலங்கை)..
18 ம் நூற்றாண்டுக்கு முன்பு இந்தி என்ற மொழியே இல்லை..
கல்கத்தாவின் போர்ட் வில்லியம் கல்லூரியை தொடங்கியவர்களால் உருதுக்கு எதிராக தொடங்கப்பட்ட மொழி இந்தி..
இந்திமொழியில் சமஸ்கிருத சொற்கள் நிறைந்திருக்கும்..
..//
#செத்த_சமஸ்கிருதத்தை பிழைக்க வைக்கவே அது பயன்ப்படும்..
புது அறிவோ, ஆராய்ச்சிக்கோ
முற்போக்கு,சிர்திருத்ததிற்கு
ஏற்ற மொழியல்ல,#இந்தி..
என்றார்..எங்கள் பேராசான் பெரியார் ..
ஆம்
தனக்கென ஒரு இலக்கணமில்லாத, உருது இலக்கணத்தை தனதாக்கிக் கொண்ட ஒரு மொழி,..
சமஸ்கிருத ,ஹிப்ளு வின் தாக்கத்தையும்,உருது மற்றும் அரபியின் மறு வடிவத்தையும் கொண்ட மொழியால் என்ன புதிய அறிவை முற்போக்கு சீர்திருத்த சிந்தனையை தரமுடியும்..
பேச்சு வழக்குக்கெனில்.
மொழியின் அறிவு தேவையில்லை, பேச பேச பழகி கொள்ளலாம் ..
..
மொழிகளின் தலைக்கூறு தமிழ் .. அதன் வளமையும் செழுமையும் வேறெந்த மொழிக்கும் இல்லை .. மொழிகள் இலக்கணத்தின் தாய் என்று கூறலாம் அதன் சிறப்பை உணராமல் மொழியின் கலப்பை ஊக்குவித்த ஆரியர்களை தமிழர்களென அடையாளபடுத்தியதின் விளைவு தமிழின் சிறப்பை உலகமறிய செய்யாமல் தடுக்கிறது நிறைய தமிழறிஞர்கள் தொடர்ந்து மறைக்கபட்டும் மறுக்கபட்டும் சில பார்பனர்களை தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் போல காட்ட நினைத்ததின் விளைவு இன்றைக்கு தமிழ் மீதான மறைமுக தாக்குதலுக்கு பகிரங்கமாக சவால் விடுகிறார்கள்..
ஆனாலும் தமிழ் தன்னை தானே காத்துக்கௌள்ளும் இயல்புடையது மொழிகளின் தாய் தமிழ்..
..
இந்தியை பரப்புவதோ...அதற்கு எந்த பார்பனரல்லாதோர் முயற்சி எடுத்தாலோ..
ஆதரித்தாலோ அது #சமூக_துரோகம் என்றார் #பெரியார்
கூடவே இந்தி பார்பனர் மொழி என்றார்.
..
#காலம்தந்தகொடை_பெரியார்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment