Thursday, June 14, 2018

கலைஞரெனும்..ஆலம்

ஜெய் பீம் தோழியின் வீடியோ பார்த்திருப்பீர். அதீமேதாவித்தனமாக எண்ணி கலைஞர் மீது சேற்றை இறைக்கபார்க்கிறார் அதற்கு இந்தமுறை சத்தியவாணிமுத்துவின் அம்பேத்கர் கல்லூரி தொடர்பான விடயங்கள் கை கொடுத்திருக்கிறது.. முதலில் சத்தியவாணி முத்து என்ன செய்தாரென்று அறிந்திருக்கவில்லை.. சட்டகல்லூரி ஒன்று அமைக்கவேண்டுமென்ற நிலைப்பாட்டை அமைச்சரவை எடுக்கிறது அப்போது அமைச்சராக இருந்த சத்தியவாணிமுத்து அவர்கள் தன் தொகுதியான பெரம்பூருக்கு வேண்டுமென்கிறார் கலைஞரும் அதை அமோதித்து முன் தொகை செலுத்தவேண்டுமென்ற சரத்துப்படி சிறிய தொகையை வசூலித்து செலுத்துங்களென அந்த பொறுப்பை சத்தியவாணிமுத்துவிடமே,தருகிறார் முன்பணமாக ₹5000 த்தை ஏ எல் சீனிவாசனிடம் பெற்று தந்தார்.. அதை தான் சத்தியவாணி முயறிசியில் வந்ததை கருணாநிதி சொந்தம் கொண்டாடுகிறார் என சகோதரி சொல்லியிருக்கிறார்.. ஒரு மந்திரிசபையில் சக மந்திரியின் கோரிக்கையை ஏற்று நடைமுறைபடுத்துவது மிக பெரிய ஜனநாயகம்.. எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் எல்லாம் இதெல்லாம் பார்க்கவே முடியாது.. மற்றொரு விடயத்தை மறைத்திருக்கிறார் புத்தக ஆசிரியர் .. முதலில் போதிய பணம் வசூலாகவில்லை அன்றைக்கு முரசோலியில் கலைஞர் எழுதிய கடிதம் மிக முக்கியம் வாய்ந்தது ₹5 லட்சம் சேருவதற்கு பெரும் துணையானது.. ஒரு ஆய்வென்று வருகிறபோது எல்லா விடயங்களும் ஆய்விற்கு உட்படுத்தவேண்டும்.. சத்தியவாணி அவர்கள் கட்சியில் மிகப்பெரிய செல்வாக்கோடு இருந்தவர் போல கட்டமைக்கிறார்.. அது குறித்து அவரின் கட்சி செயல்பாடுகள் குறித்தும் முடிவெடுக்கும் அதிகார மையத்தில் இருநிததைப்போல எண்ணி கொண்டு .. அல்லது மக்களின் செல்வாக்குடையவர் போல ஒரு பிம்பம் தோற்றுவைக்கபடுகிறது.. இது நாவலர் விடயத்திலிருந்தே தொடங்கி பார்பனர்கள் பரப்பி வரும் சூழ்ச்சிமிகு தந்திரம்... .. இவர்கள் நோக்கம் இதுதான் .. கலைஞரின் குறிப்பாக திமுகவின் வெற்றியை தடுக்க வேண்டும் அதற்கு எந்தந்த வழிகள் உண்டோ அதையெல்லாம் பயன்படுத்துவார்கள் இந்த பாசிசவாதிகள்.. விசிகவின் வளர்ச்சியை ஜெய்பீம் காரர்கள் விரும்பவில்லை என்பதும் இவர்களின் செயலில் தெரிகிறது.. சரி .. சத்தியவாணிமுத்துவை தூக்கி பிடிப்பதாக சொல்லி ஏதோ கருணாநிதி துரோகம் இழைத்ததைப்போல இவர்கள் சொல்கிறார்கள் .. உண்மையில் அண்ணா மறைவிற்கு பிறகு நாவலரா கலைஞரா என்று வந்தபோது.. கலைஞரை மதியழகன் முன்மொழிய.. வழிமொழிந்தவர் சத்தியவாணிமுத்து... இவர்கள் நோக்கம் கலைஞர் கொண்டுவந்த திட்டங்களை .. அமைச்சரவை சகாக்களோடு கலந்தாலோசித்து தான் நடைமுறை படுத்துவார்.. எப்போதுமே எனது ஆட்சியென்ற எனது திட்டமென்றோ அகந்தையோடு சொல்லிக் கொண்டதில்லை.. கலைஞரை கீழமைபடுத்துவதாக எண்ணி இவர்கள் தாங்கள் முன்னெடுக்கும் நபர்களை அசிங்கபடுத்துகிறார்கள்.. சரி இதுவரை தாழ்த்துபட்டவர்களுக்காக இவர்கள் செய்தது என்ன என்றால் பதிலில்லை.. .. நாவலர் .. தனித்துநின்று மயிலாப்பூரில் எஸ்விசேகரைவிட குறைவாக வாக்கு வாங்கியது தெரியுமா.. எதுவும் எங்கே இருக்கிறது யாரோடு இருக்கிறார்கள் என்பதில் தான் சிறப்பு இருக்கிறது.. கலைஞரை தரம் குறைந்து விமர்சிப்பதாக எண்ணி திமுகவின் வெற்றியை தடுக்க பாசிசத்தின் கைகூலிகளாய் நிறைய பேர் வந்துகொண்டே இருப்பார்கள்.. அதற்கு நிறைய தரவுகளை கட்டி சமைப்பார்கள் ஆழ்ந்தறிந்தால் அதன் உண்மை விளங்கும் நுனிப்புல் மேய்ந்து .. சத்தியவாணிமுத்துவிற்கு கலைஞர் துரோகம் செய்துவிட்டதாக கூப்பாடு போடுவோருக்கு 2010 ல் சத்தியவாணி வீட்டு திருமணம் கலைஞர் தலைமையில் தான் நடந்தது..என்பது தெரியுமா.. கலைஞர் தலித் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லையென்ற கூப்பாடு போடுவோர் சரியாக கலைஞரை படிக்கவில்லை என்றே பொருள்.. .. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்-வேண்டாத விமர்சனங்களை மறப்போம் என்பார் கலைஞர்.. ஆம்.. இவர்களால் திமுகவின் வெற்றியையோ அல்லது வளர்ச்சியையோ தடைபோட முடியாது .. .. ஆலம் விழுதுகள் ஆயிரமுண்டு விழாது தாங்கி நிற்கும்.. ஆனாலும் வேராக கலைஞர் நின்றார்.. நிற்பார்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment