Monday, June 11, 2018

ஊடகதர்மம்

ஊடகங்கள் மீண்டும் மீண்டும் ஒரு பொய்யை கட்டிமையக்க முயல்கின்றன.. 10 விழுக்காடு வாக்கு வங்கியோடிருந்த விஜயகாந்த்தின் நிலையை மறந்து ..ரஜினிக்கு எத்தனை விழுக்காடு என தெரியாமல் 21 விழுக்காடு ஆதரவென பொய் பிரச்சாரம் செய்கின்றன.. வெளிப்படையாகவே திமுகவை வீழ்த்த ரஜினியை தூக்கிபிடிக்கும் பாசிசத்தின் துணை நிற்கும்படி ஊடகங்கள் மிரட்டபடுவதாக செய்திகள் வருகின்றன.. ஒருவித மாய தோற்றத்தை உருவாக்க முயல்வதின் பின்னில் .. ஆர்எஸ்எஸ் மற்றும் சங்கிகள் மிகப்பெரிய திட்டத்தோடு வருகிறார்கள்.. .. தமிழ் தேசியம் பேசுவோர் மீது தேசபாதுகாப்பு மிரட்டல் கைது சிறையென சின்ன பசங்களை தொடர்ந்து அச்சுறுத்த தொடங்கியிருக்கிறார்கள் .. சில அபத்தங்களை பேசி திரிந்தாலும் மிரட்டலுக்கு பயந்து ரஜினிக்கு வால்பிடிக்க தமிழ் தேசியம் தயாராகலாம்.. ஆனால் அது அத்தனை வலுலில்லாத கட்சியென்பது சிறிய ஆறுதல்.. ஸ்டாலின் வீட்டை கொளுத்துவோமென்ற இந்துமுன்னணி பரதேசியை இதுவரை கைது செய்யவில்லை இதை சிறிய சம்பவமாக கடந்து போனால் நாளை மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும் .. கருத்தை எதிர்கொள்ள திராணியற்றவர்கள் பொதுவெளியில் கலாட்டா செய்கிற துணிவு எப்படி வந்தது புதிய தலைமுறை நிகழ்ச்சியில் தமிழிசை நடந்து கொண்டவிதம் அருவருப்பானது கம்யூனிஸ்ட்களை தரம் குறைவாக பேசுவதாக நினைத்து அவமானப்பட்டு நின்றார்.. உண்டியல்களை கேவலமாக எண்ணினால்.. கோவில்களிலும் வழிபாட்டுத்தலங்களிலும் உண்டியல் வைத்து வசூல் செய்வதை என்ன கண்ணோட்டத்தில் பார்க்கிறார்.. .. பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்தால்.. கடுமையாக மிரட்டினால்.. தேசபாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி அடக்குமுறையை கையாண்டால் மிரண்டுவிடும் தமிழகம் என கருதினால்.. அது தவறானதென கடைசியில் பாடம் புகட்டும்.. தலையாட்டிகளை வைத்துக்கொண்டு நீண்டநாள் ஆடிக்கொண்டே இருக்கமுடியாது .. ஆட்டம் நிற்கிற வேசம் கலைந்த கதையாகும் எச்சரிக்கை.. .. தொடர்ந்து பொய்யை சொல்லி கொண்டிருப்பதால் அது உண்மையாகிவிடாது மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள்.. பாஜகவின் பித்தலாட்டத்தை நன்கு அறிந்தவர்கள் எந்தெந்த வடிவில் வருகிறார்களென அறியாதவர்களில்லை .. மௌனமாக கவனித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் சில விவரகேடுகளின் சுயரூபம் வெளிப்பட்டதில் உண்மைதன்மையை அறிய முடிந்தது .. எழுபதுகளில் எம்ஜிஆரெனும் சினிமா கவர்ச்சியை களமிறக்கி .. அதில் வெற்றி கண்ட பாசிசம் இப்போது கருப்பை முன்னிறுத்தி கதை சொல்ல வருகிறது ஆனால் பாருங்கள் .. கவர்ந்திழுக்கும் சக்தி இழந்த மாய மானாய் நிற்பதுதான் பரிதாபம்.. சினிமாவின் வெளிச்சம் இனி இருட்டறையோடு முடிந்தது ‍..இனி வெளியில் அரிதாரம் எடுபடாது .. முகமூடியை கழற்றி கரிபூசி விடுவார்கள் .. இது அறியாமல் குருக்களும் சில கோடாரிகளும் கொக்கரிக்கின்றன்.. அவர்களுக்கு இது எழுபதல்ல என்பதோடு.. இது திராவிடம்2.0 என்பதை உணர்த்துவோம்.. .. இனி சாயபூச்சிற்கு வேலையில்லை.. .. ஆலஞ்சியார்..

No comments:

Post a Comment