Sunday, June 10, 2018

பொய் பேசி திரியும் பிரதமர்

பொய்.. அரசியலில் சில தவறான தகவலை தருவார்கள் அது எந்தவகையிலும் மக்களுக்கோ தேசத்திற்கோ,பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.. சில பொய்கள் உண்மையை மறைப்பதற்காக சொல்லபட்டு நாளடைவில் அது பொய்யென தெரிந்ததும் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்.. இவையெல்லாம் தமாஷாக கடந்து போயிருக்கிறது தேசம்.. ஆனால் பாஜகவின் பொய்கள் மதவெறியை சாதீய மோதலை ..கலவரத்தை ஒருவித பதட்டத்தை உண்டாக்குவதற்காக சொல்லபடுகிறது.. அதிலும் நாட்டின் பிரதமரே குஜராத் தேர்தலில் போது பாகிஸ்தான் சதி செய்வதாக குற்றம் சாட்டினார்.. அதுவும் மணிசங்கர் அய்யர் இல்லத்தில் நாடு மிகவும் மதிக்கிற டாக்டர் மன்மோகன் சிங் பாக். அதிகாரிகளோடு கலந்தாலோசித்ததாக பிரச்சாரம் செய்தார்.. மிக பெரிய கொடூரமான பொய்யை மிகப்பெரிய பொறுப்பில் உள்ள மோடி தான் வகிக்கும் பதவியின் மதிப்பு தெரியாமல் சொன்னார்.. பிரதமரே குற்றம் சாட்டுகிறாரே உண்மையாக இருக்குமோ என சாதாரண மக்கள் நினைத்தனர்.. காங்கிரஸ் கட்சியின் சாகேத் கோகலே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கீழ் பிரதமர் அலுவலத்திற்கு இது உண்மையா என கேள்வி எழுப்பினார் .. வழக்கம் போல இழுத்தடித்தது ..நீதிமன்றத்தில் மனு செய்து ..30 நாட்களுக்குள் பதில் தரவேண்டுமென நீதிமன்ற உத்தரவிட்ட பின் பிரதமர் பொய் சொல்லி இருப்பதாக பிரதமர் அலுவலகமே பதில் அளித்தது .. தான் வகிக்கும் பதவிக்கு இழுக்கை அதுவும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விடயத்தில் பிரதமரே சொல்கிறாரெனில் இதைவிட அயோக்கியத்தனமான செயல் வேறெதுவும் இல்லை.. .. மோடி என்றில்லை ஆர்எஸ்எஸ் சித்தாந்ததமே பொய்யில் விளைந்தது சுதந்திர போரில் மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு தங்களின் தேசத்தின் காவலர்களென சொல்லிக்கொள்பவர்கள் தானே வேறெப்படி இருக்கும்.. மோடியை கொல்ல சதி என்று முறையயே 2009, 2010,2013 மூன்றுமுறை 2014 இரண்டுமுறை 2018 மே மற்றும்,ஜூன் மாதம் கொலைமிரட்டல் வந்ததாக சொல்லபடுகிறது ஆனால் இதுவரை அதுகுறித்து விசாரணை நடைபெறவில்லை .. பத்துவருடங்களாக சொல்லபட்டுவரும் குற்றசாட்டிற்கு எந்த ஆதாரமும் நிரூபிக்கபடவில்லை இதுவரை யாரும் கைது செய்யபடவில்லை.. அது சரி உண்மைக்கு தான் சாட்சியங்கள் கிடைக்கும் பொய்க்கு ஏது ஆதாரம்.. .. பொய்யை மட்டுமே நம்பி ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததென்றால் அது பாஜகவாகதானிருக்கும்.. 2ஜி யை சொல்லி மக்களை நம்பவைத்து ஆட்சிக்கு வந்து சில நாட்களிலேயே பாஜக அரசு பற்றிய சிஏஜி அறிக்கையை பற்றி ஊழலென பேசிய போது.. நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கையை எல்லாம் அரசியலாக்காதீர்களென நிதியமைச்சர் அருண்ஜெட்லி சொல்லவில்லையா.. எதிலும் பொய் முறைகேடு வாய்க்குவந்ததை பேசுவது போட்டோஷாப் .. இது தான் பாஜகவின் பலம்..உண்மை அறியாதவர்கள்.. ஆம் மதமென்றும் புராணமென்று நம்பி மக்களை பிரித்து .. ஒரு சாரார் மட்டுமே உயர்ந்ததவனென சொல்லி திரியும் இவர்களிடம் வேறெதை எதிர்பார்க்கமுடியும்.. ஆனால் பொய் அறுத்துவிடும் .. நீண்டநாள் அதையே வைத்து நிலைக்கமுடியாது.. என்பதை காலம் உணர்த்திக்கொண்டுதானிருக்கிறது நான்காண்டுகளில் பொய்யில் விளைந்ததெல்லாம் வினையாற்ற தொடங்கியிருப்பதை மக்கள் திருப்பியடித்து உணர்த்துகிறார்கள்.. ஆம் பொய் வீழும்.. .. #பொய்_வீழ்த்துமென_அறியாமல் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment