Monday, June 25, 2018

இன்றைய கூத்து..

தமிழிசை.. அபசுரமாய் பேசிக்கொண்டு திரிந்தவர் இன்று மணியாட்டிவிட்டார்.. அவரின் கருத்தோடோ கொள்கையோடு நமக்கு உடன்பாடில்லை எனினும் சில விடயங்களுக்கு அவரை ஆமோதிக்கலாம்.. பெண் அரசியல்வாதி ஆண் அரசியல்வாதி என்றெல்லாம் இல்லை எதையும் சந்திக்க தயார் என்ற துணிவை பாராட்டியே ஆகவேண்டும்.. பெண்கள் அரசியலுக்கு வருவது மிகவும் குறைந்த விழுக்காடெனினும் அதில் ஆணாதிக்க திமிர் தடைபோடுவதும்.. கிண்டல் கேலி என பாலினத்தை குறித்து பேசுவதும் தொடர்ந்து அங்கீகாரம் தர மறுப்பதும் .. தடைகளை மீறி வந்தால் ஆணோடு சரிசமமாக அரசியல் செய்ய முடியாது என ஏளனம் செய்பவர்களுக்கு மத்தியில் தொடர்ந்து துணிவோடு பேசியும் அது ஏற்புடையதல்ல எனினும் தைரியமாக போராடுகிற துணிவை பாராட்டுவோம்.. தமிழிசை அவர்களே ..இதைதான் பெரியார் சொன்னார் பெண்கள் அடுப்படிக்கு என்ற நிலை மாறி ஆணுக்கு நிகராக வேலைவாய்ப்புகளில் பொதுவாழ்வில் வரவேண்டும்.. இன்று உங்களை போன்றோர் அரசியல் பிழையாய் நிற்கும் போதும் (ஜெயலலிதாஉட்பட) வரவேற்கிறோம் சில அபத்தங்களை கூட மௌனமாய் கடந்து போகிறோம்.. .. அன்புமணி.. தன் அரசியல் வரலாற்றை சாதிய தீயில் வளர்த்தவர் அவரும் அவரது தந்தை ராமதாஸூம் சமூகநலன் என்ற பெயரில் சாதீய மோதலை .. குறிப்பாக இளைஞர்களை வெறியோடு போராட தூண்டியவர்கள் என்ற தமிழிசையின் குற்றசாட்டை சட்டென்று மறந்து கடந்து போய்விட முடியாது.. அப்படி என்ன சொன்னார் மரம் வெட்டுவதைப்பற்றி அன்புமணி பேச கூடாதென்றார்.. அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.. இன்றைக்கு கூட சமூக வலைதளங்களில் மருத்துவர் ராமதாஸை மரம்வெட்டியாக தான் பார்க்கிறார்கள் .. தன் சமூக மக்களின் பிரச்சனைக்காக நாடே திரும்பிபார்க்க வைக்க அவருக்கு அப்போது தேவைபட்டது .. தொடர்ந்து அரசியல் தொய்வு ஏற்படுகிற போதெல்லாம் தன் சமூக மக்களை உணர்வோடு விளையாடுவார்.. சாதியை தாண்டிய அரசியலை அன்புமணியால் செய்ய முடியாது அதேபோல தமிழிசையும் பாஜகவின் அடிப்படை சித்தாந்தத்தை மீறி .. சாதிய மோதலை மதவெறியை தூண்டி அதில் குளிர்காய்வார்கள் அதிலிருந்து மீண்டுவர முடியாமல் ஒத்தூதுவது மட்டுமே நடக்கும்.. .. போகிற போக்கில் பாஜகவை நாட்டிற்கு நல்லது செய்வதைபோல பேசிவிட்டு போகிறார்.. மத்தியரசிற்கு எதிராக போராடுபவர்களை சமூக விரோதியைப் போல சித்தரிக்க முயலும் பாசிசத்தின் குரலாக ஒலிக்கிறார் .. தொடர்ந்து கைது செய்யபட்டுவரும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களை பயங்கரவாதிகள் போல பேசிவிட்டு போவதை ஏற்க முடியாது.. இதில் ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது .. சிறு சிறு உதிரிகளாக செயல்படுவோர் அல்லது குறுகிய வட்டத்திற்குள் நிற்போரை பயமுறுத்தும் எச்சரிக்கை இது ..எந்தவொரு போராட்டமும் பெரிய அரசியல் கட்சிகளின் துணையோடு இன்றி செயல்பட்டால் கடைசியில் பிசுபிசுத்துபோகும் அல்லது மிரட்டல் கைது போன்ற நடவடிக்கை காட்டி எச்சரிப்பார்கள் .. தொடர்ந்து போராட வலுவில்லாமல் போகும்.. இல்லையெனில் சீமானை போல சரண்டர் ஆகி அந்தர்பல்டி அடிக்கும் வித்தை தெரிந்திருக்கவேண்டும்.. பாசிசம் மிக இலகுவாக இருபிரிவினருக்கிடையே மோதலை உருவாக்க பார்க்கிறது இன்று வலைதளங்களில் அதை காண முடிகிறது.. சாதியை மதத்தை கொண்டாடுகிறவர்கள் கடைசி புகலிடம் ஆயுதம் ..தாக்குதல் அது நடந்தேற தொடங்கியிருப்பது ஆபத்தானது.. .. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்களே .. தாக்குதலுக்கு வருவார்கள் .. தமிழிசையை தாக்க முயற்பட்ட செயல் கண்டிக்கதக்கது .. அவரின் சொல்லில் செயல்பாடுகளில் நமக்கு சலிப்பை தந்தாலும் அவரின் மீதான தனிப்பட்ட விமரிசனம் ஏற்புடையதே அல்ல.. யார் அறிவாளியென விவாதிக்க தயாரா என தமிழிசை கேட்பது சிறுப்பிள்ளைதனமானது.. அதையை அன்புமணிக்கு சொல்வோம்.. எல்லாம் தெரிந்தவரை போல பேசி திரிவதும்..சில மாவட்டங்களில் சிறியதொரு ஆதரவை வைத்துகொண்டு தம்மை உயர்ந்தவனென காட்டிக்கொள்ள நினைப்பதும்.. ஆட்சியில் இருக்கிறோமென்ற தைரியத்தில் பேசும் பேச்சில் ஏகத்தாளமிடுவதும் திமிரோடு நடந்து கொள்வதும் இருசாரருக்கும் நல்லதில்லை... தன் பலம் அறியாது உளறுவோர் கரை சேர்வதில்லை .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment