Thursday, June 28, 2018
காதல் செய்வோம்
அடை மழையில் நனைந்து
வயல்வெளியில் ..
வரப்பில் நின்று கூத்தாடி
மரத்தடியில் ஒதுங்கி..
மழை நின்று போகலாம்..
சின்ன பெருமூச்சு..
சூடாய் தோள்பட்டு
கிளர்ந்தெழும்.. காமம்..
மழை நின்று.. இலை சிந்தும் நீர்பட்டு
உடல் சிலிர்க்க.. இறுக அணைத்து கதைப்பதெல்லாம்.. வெறும்காமம் இல்லை..
..
தை குளிரில்..
எழ எண்ணும் போது
இழுத்தணைத்து
இதழ் முத்தம் தந்து
இன்னுமொரு முறை
மெல்லிய ஒலியில்
காதில் கிசுகிசுத்து
களவாணிபயலே..
எழுந்திருடா..
என்பதெல்லாம்..
பேரமுதம்..
..
ஒரு மழைகால
காலைநேரத்தில்.
சுட சுட தேநீர் கோப்பையோடு
டவல் சுற்றிய தலை..
கொஞ்சம் ஈரத்தோடு புடவை
மெல்லிய கொலுசொலியில்
அருகில் வந்து நின்று
மயக்கும் விழியால் பேசி
புன்னகைக்கும் பேரரசி..
இதைவிட காணாத சொர்க்கம் பெரிது
..
காதல்..
தேன் தடவிய பலா அல்ல
திகட்டாத தேனமுது அல்ல..
தித்திக்கும் தெள்ளமுதல்ல..
கசப்பும் வியர்ப்பும்.. துன்பநிலையும்
ஆழ முழ்கி அர்த்தம் பொதிந்து.
நின்று நிலைத்து..
அன்பெனும் பெருமழையிலும்
அமைதியாய் ஓடும் நதிப்போல..
விழும்போது கைகொடுத்து..
விழாதிருக்க துணைநின்று..
கலந்துநின்று காக்கும் பேரருள்..
காமம் கலவி கருணை கலந்த பேரூற்று..
அன்பெனும் வற்றாத ஊற்று..
#காதல்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment