Sunday, June 17, 2018

அவசர சிகிக்சை

மத்திய அரசை எதிர்பவர்களை நக்சலைட் என முத்திரை குத்துவது சாதாரணமாக நிகழ்கிறது.. டெல்லி முதல்வரை நக்சலைட் என்கிறார் பார்பன அரசியல்தரகர் சு.சுவாமி.. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராடிய மக்களை சமூக விரோதி என்றார்கள்.. மாணவர்களை தேசிய பாதுகாப்பென்ற பெயரில் கைது.. பாசிசத்தை எதிர்ப்போரை மிக கடுமையாக விமர்சிப்பது .. அதுவும் உதிரி கட்சிகளென்றால் கேட்கவே வேண்டாம் .. மிரட்டல் தேசிய பாதுகாப்பு IT ரெய்ட் .. மாட்டுக்கறி தின்பவனிலிருந்து மறுத்து பேசுகிறவன் வரை.. இந்திய தேசத்தில் சமூகவிரோதியாக சித்தரிக்கபடுகிறார்கள்.. சென்னையிலிருந்து ஈரோடுவரை கிராமங்களில் மாவோயிஸ்ட்கள் என்கிறார் ஒரு அரை கிறுக்கன்.. .. அப்பப்பா.. இந்த தேசத்தில் 3% விழுக்காடு தவிர..அல்லது மூன்றுக்கு முட்டுகொடுப்போர் தவிர அனைவருமே சமூகவிரோதிகளாய் தேசவிரோதகளாய் அறிவிக்கபடுவார்கள் போலியிருக்கிறது.. யார் தேச துரோகிகள் .. விடுதலைபோரில் ஆங்கிலேயனிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தவனும் காட்டிகொடுத்து .. கூ.. கொடுத்தவனும் இங்கே தேச தியாகிகளைப்போல கட்டமைக்கபடுகிறார்கள்.. இந்த நாடு மிக ஆபத்தான போக்கில் சென்று கொண்டிருக்கிறது .. எதிர்த்து பேசுகிறவனை அவசரநிலை காலத்தில் கூட இப்படி சித்தரித்ததில்லை.. எழுத்து சுதந்திரம் தணிக்கை செய்யபட்டாலும் எழுத்தும் அதன் தாக்கமும் மக்களிடம் சென்றடைய ஊடகங்கள் தங்கள் கடமைகளிலிருந்து மாறவில்லை.. இப்போது ஊடகங்கள் மிரட்டபடுகின்றன்.. ஊடகவியலாளர்கள் கொலைச் செய்யபடுகிறார்கள்.. முற்போக்கு சிந்தனையாளர்கள் ..கொலைச் செய்யபடுவதும் அதை யாருமே கண்டுக் கொள்ளாமல் நகர்வதும் ..இந்த தேசத்தின் பேராபத்து .. ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிறார்கள்.. அடிமை தேசத்தில் கூட எழுத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் மறுக்கபடவில்லை.. இப்போதெல்லாம் வழக்கு கைது .. சிறையென ஒருவித அராஜகபோக்கை ஆளும் அரசு செயல்படுத்துவது நல்லதில்லை.. .. தமிழகத்தில் தலையாட்டும் அரசும் அதைவைத்து சோலியாடுகிற மத்திய அரசும் தமிழக உரிமைகள் பறிக்கப்படுவதோடு.. தமிழகத்திற்கென்று இருந்த மரியாதை...இன்று பிற மாநிலங்களில் கேலி பேசபடுகிற அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம்.. செய்த வினையை அறுவடை செய்கிறோம்.. செய்யாத குற்றத்திற்காக (2ஜி) திமுகவை மறுத்து குற்றம் நிகழ்த்தி தண்டிக்கபட்டவரை பதவியில் அமர்த்தியதால் இன்று படும்பாடு.. அப்பாடா தாங்கொண்ணா துயரம்த்தில் மக்கள்.. கேடுகெட்டவர்கள் கையில் அதிகாரம்.. அதைவிட தமிழினப் பகைவர்கள் கையில் பொம்மலாட்ட கயிறு .. ஆடும் பொம்மைகளாய் ஆட்சியாளர்கள்.. .. இனியும் காத்திருப்பது.. நேர்மை பேசி நேரத்தை வீணாக்குவது.. சட்டமும் நீதியும் மயக்கநிலையில் என்கிறபோது கொஞ்சம் விசைகூட்டி ஆடவேண்டும்.. எதிரிகளே தீர்மானிக்கிறார்கள் நாம் எதை தேர்வு செய்வதென்பதை.. விரைந்து சரியான நடவடிக்கையை திமுக எடுக்கவேண்டும்.. அது கட்சிக்கு என்றில்லை இயக்கத்திற்கென்றில்லை...ஒட்டுமொத்த நாட்டிற்கே செய்யும் நன்மையாக அமையும்.. .. முள்ளை முள்ளால் எடுப்போம்.. புரையோடிவிட்ட புண்ணை கழும்பு கொண்டு ஆற்றிட முடியாது.. கீறி சீழை வெளியாக்கிடவேண்டும்.. அப்போதுதான் புண் ஆறும்.. இல்லையெனில் சீழ் துளைத்துக்கொண்டே போய் முழுவதுமாக அரித்துவிடும்..பிறகு வெட்டியெறி நேரிடும்.. தேவை அறுவைச் சிகிக்சை..அதுவும் அவரச சிகிக்சை.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment