Saturday, June 30, 2018

நாத்திகம்

ஸ்ரீரங்கம் கோவில் தீட்டாகிவிட்டதாம் அதற்கு கோவிலுக்கு பரிகாரம் செய்யவேண்டும் அதாவது தீட்டுகழித்து சுத்தம் செய்யவேண்டும்.. சொல்வது யார்.. மந்திரியென்றும் பாராது மந்தியைப்போல காலடியில் அமர்ந்து .. சென்றவுடன் பழைய கும்பகோணமடமாகிய காஞ்சி மடத்தை சுத்த செய்து தீட்டு கழித்தார்களே அந்த பொன்னர் சொல்கிறார்.. ஆதிதிராவிட சகோதரன் கை பட்டால் தான் தீட்டு ஆனால் பார்த்தாலே தீட்டென்று .. பனைமரத்தில் ஏறி நிற்கிறவனின் நிழல் கூட படகூடாதென்று அந்த வழியே அந்தணன் (பாப்பான்) போனால் மட்டை தட்டி ஓசை எழுப்பவேண்டும் இவர் சொல்கிறார்.. ஸ்டாலினால் நாத்திகன் வந்து போனதால் ஸ்ரீரங்கம் கோவிலை சுத்தம் செய்யவேண்டும்.. .. ஆத்திகர்களின் அயோக்கியத்தனங்கள் மதமென்ற பெயரில் ..இந்து கிருஸ்துவ இஸ்லாமிய மத குருக்களின் காமலீலைகள் நாடு கண்டு சிரிக்கிறது.. துறவி வேசம் போடுகிறவன் மத போதகன் வேசம் கட்டி சோக்காலி வாழ்க்கை வாழ்கிறான்.. இதில் சங்கராச்சாரியார் ஜகத் குரு என்று சொல்லி ஜெயேந்திரர் ஆடிய ஆட்டத்தை அந்த சமூகத்து எழுத்தாளரே ..பகிரங்கமாக குற்றம்சாட்டியதும்.. பி.ஜே எனும் நவீன இஸ்லாமிய போதகன் காமகளியாட்ட ஒலிநாடா வும்..பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை தந்ததும்.. ஆன்மீகத்தின் உண்மைதன்மையை .. ஆன்மீகம் என்ற பெயரில் அடிக்கிற கூத்திற்கு license உரிமம் வழங்கபட்டதைப்போல நாடே காரி உமிழ்கிறது.. மதபோதை மக்களின் சிந்தனை திறனை மழுங்கடித்து செய்யும் கேடுகெட்ட செயல்களை நியாயபடுத்த வைக்கிறது.. பி.ஜேவின் அடிவருடிகள்.. தனிநபரின் தவறுக்காக அவரின் தவறிய நிலையில் முன் போதித்த நல்லவகைகளை மறக்க கூடாதென்று பேசுகிற நிலை இதுவொருவகை மூளைச்சலவை ...நம்பியவரின் நடத்தைகளை நியாயபடுத்தி சுக்கான் பிடிக்கும் அயோக்கியத்தனம்.. அது ஜெயேந்திரர் விடயத்திலும் நடந்தது.. ஒருசிலரின் தவறை எப்படி ஆன்மீகத்தோடு சேர்ப்பதென்ற கேள்வி எழாமல் இல்லை.. அவர்களை பின்தொடர்கிற கூட்டத்தையும் சேர்த்து வழிகெடுப்பதைதான் எதிர்க்கிறோம்.. .. ஸ்டாலின் பொட்டை அழித்தாரென்று புலம்பி தீர்க்கும் பொன்னர்.. இந்தியாவின் முதல் குடிமகனை காவலாளி கைப்பிடித்து கோவிலுக்கு நுழையவிடாமல் தடுத்தது குறித்து பேச மறுக்கிறார்.. தொடர்ந்து ஸ்டாலினைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் மோடியின் எட்டுவழிச்சாலை துரோகத்தை மக்கள் மறந்துவிடுவாரென நினைக்கிறார்.. இதே கோவிலுக்கு யாரென்றே தெரியாத ஒரு பாப்பான் பூணூலோடு வந்தால் காலலாளி தள்ளிவிடுவானா..? .. தேசத்தின் முதல் குடிமகனுக்கே இந்த நிலை.. இங்கே நீயாராக இருந்தாலும் பூணூல் இல்லையென்றால் அதுவும் தாழ்த்தபட்டவனென்றால் அடி உதை மிதிதான்.. எந்த கொம்பனாக இருந்தாலும் .. இதுதான் மதம் ஆன்மீகம்.. இவர் வேண்டாமென்கிற நாத்திகம் .. மனிதனை சகமனிதனாக பார்க்க சொன்னது ஏற்றதாழ்வில்லை.. உன்னைப்போலவே அவனுக்கு சகலஉரிமைகளும் உண்டு.. அதேபோல பாலின வேறுபாட்டைச்சொல்லி கூடுதல் குறைவென்று பிரிப்பதை எதிர்த்தது.. பொன்னரும் எச்சையும் சமமானவர் என்றது.. எல்லோருக்கும் கல்வி ... அவனவன் விருப்பபடி உண்ண உடுத்த .. வாழ உரிமை ஒரே வார்த்தையில் சொன்னால் நல்லதை சொல்லும் நாத்தீகம்.. .. பொய் புரட்டு ஏமாற்று ஏற்றதாழ்வென ஆன்மீகத்தோடு வாழ்வதைவிட.. நாத்திகன் எனும் சொல் நல்லது பொன்னரே.. .. ஆலஞ்சியார்

Friday, June 29, 2018

மோடி ஆட்சி படிப்பினை

முற்றிலுமாக தோல்வியடைந்த மத்திய அரசு.. காரியம் தப்பா கணக்கன் தப்பா .. இங்கே இரண்டுமே தப்பாகி போனது. வாய்சொல் வீரரின் உணர்ச்சி மிகு உரையை நம்பி சிறந்த தலைமையை வீட்டுக்கு அனுப்பியதன் விளைவை அனுபவிக்கிறோம்.. காங்கிரஸ் ஆட்சியை (மன்மோகன் ஆட்சி என்பதே சரி) வேண்டாமென கூற நம்மிடையே சொன்ன பிரதான காரணம் 2ஜியில் இந்தியா அதுவரை கண்டிராத ஊழலென ஊடகமும் பார்பனீயமும் சேர்ந்து ஒருவித மாயதோற்றத்தை நிறுத்தி.. மோடியால் மட்டுமே நாட்டை சீர்படுத்த முடியும் குஜராத்தை முன்னேற்றியதைப்போல இந்தியாவும் நவீனமாகுமென நம்பவைத்தார்கள்... அதுவரை குஜராத்தின் உண்மைநிலையை நாடு அறிந்திருக்கவில்லை.. 2ஜி என்பது கட்டிசமைத்த பொய் என்பதை அறிய நிறைய இழக்க வேண்டியதாயிற்று நம்பி மோசம்போனோம் என்பதைப்போல இன்று நாடு சீரழிவில்.. எல்லாதுறையிலும் சரிவை நோக்கி போய்கொண்டிருக்கிறது.. .. சுவிஸ் பேங்கில் இந்தியர்கள் பதுக்கிவைத்திருக்கும் பணத்தை மீட்டு ஒல்வொரு இந்தியன் கணக்கிலும் ₹15 லட்சம் வரவு வைப்பேன் என்றார்.. பணமதிப்பிழப்பை செய்து இதோ கருப்புபணத்தை ஒழித்துவிட்டேன் இனி கருப்பே இல்லை என்றதை பொய்யாகி எப்போதுமில்லாத அளவு சுவிஸ் பேங்கில் 50% கூடுதலாக கருப்புபணம் .. பணத்தை மீட்பேன் என்றதை நாம் தான் தவறாக புரிந்து கொண்டுவிட்டோம்.. நம்மிடமுள்ள பணத்தை மீட்டு சிலருக்கு வழங்கி அதை கருப்பாய் கொண்டு சேர்த்திருக்கிறார்.. ஒரே வாரத்தில் 8000 கோடிவரை அமிர்ஷா மாற்றி கொடுத்திருக்கிறார்.. அவர் தலைவராக உள்ள கூட்டுறவு வங்கியில் மட்டும் 749 கோடி கருப்பு வெள்ளையாகியிருக்கிறது.. டாலர்க்கு இணையான இந்திய ரூபாய் ₹69 ... .. ₹480 ரூபாய்க்கு கேஸ் இருந்தபோது போராடிய பாஜக ‍.. மோடி ஆட்சியில் ₹800 ஆக உயர்த்தியிருக்கிறது.. .. கல்வியில் ஒரு சிலரை மட்டுமே கற்பிக்க வைக்கும் நிலையை உருவாக்கி குலத்தொழிலை நோக்கி நகர்த்த திட்டம் .. மக்கள் வேண்டாமென்கிற திட்டங்களை வம்படியாய் திணிக்கும் செயல்.. நாடாளுமன்ற ஜனநாயகம் படுகேவலமாய்.. என்ன நடந்தாலும் 41 நாடுகளை சுற்றி வருவதில் எந்த வருத்தமும் இல்லை மக்கள் வரிப்பணத்தில் இன்பசுற்றுலா..செலவு ₹356 கோடி.. எதை அணிய வேண்டும் எதை உண்ண வேண்டும் என்ன படிக்கவேண்டுமென்று கூட தீர்மானிக்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை.. தீண்டாமை தலைவிரித்தாடுகிறது.. வடமாநிலங்களில் நிர்வாணமாய் நிற்கிறது எமது தேசம்.. குடியரசு தலைவரையே வெளியே பிடித்து தள்ளுகிற கொடுமை.. அதிகாரிகள் கூட தாழ்த்தபட்டவரென்பதால் வணக்கம் சொல்ல மறுக்கிற அவலம்.. நாட்டின் முதல் குடிமகனுக்கே இந்த நிலை.. பிரதமர் அமைச்சர்கள் எல்லாம் அதிகார தொனியில் பேசுகிறார்கள் .. சுவிஸில் பணமிருந்தால் அது கருப்புபணம்தானா என்கிறார் அமைச்சர்.. முறையாக பணபரிவர்த்தனை செய்திருந்தால் அதை வெளிகாட்டி தங்களின் புனிததன்மையை நிரூபிக்கலாமே.. .. மொத்தத்தில் நாடு கேடுகெட்டவர்கள் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கிறது.. இவர்களுக்கு தெரிந்தது ஒன்றுதான்.. ஒரே குடும்ப ஆட்சி ராகுலுக்கு என்ன தெரியும்.. பாகிஸ்தான் ஊடுறுவல்.. ராமர்கோவில்.. போ்டோஷாப்.. இதைவைத்து இனி நடக்காது காரணம் மக்கள் உணர தொடங்கிவிட்டார்கள்.. பார்பனபுரட்டை தெளிவற்ற வறட்டு சிந்தனையை நம்ப தயாரில்லை.. டீக்கடையும், படித்தாக சொல்லி போலி சான்றிதழையும் தாண்டி இவர்கள் சாதனையென்று ஏதுமில்லை..ஒருவகையில் இவர்களை மக்கள் புரிந்துக்கொள்ள பேருதவியாக இருந்தது மோடியின் ஆட்சி.. .. வீழ்த்தபடவேண்டும் விரட்டபடவேண்டும் .. ஆலஞ்சியார்

Thursday, June 28, 2018

காதல் செய்வோம்

அடை மழையில் நனைந்து வயல்வெளியில் .. வரப்பில் நின்று கூத்தாடி மரத்தடியில் ஒதுங்கி.. மழை நின்று போகலாம்.. சின்ன பெருமூச்சு.. சூடாய் தோள்பட்டு கிளர்ந்தெழும்.. காமம்.. மழை நின்று.. இலை சிந்தும் நீர்பட்டு உடல் சிலிர்க்க.. இறுக அணைத்து கதைப்பதெல்லாம்.. வெறும்காமம் இல்லை.. .. தை குளிரில்.. எழ எண்ணும் போது இழுத்தணைத்து இதழ் முத்தம் தந்து இன்னுமொரு முறை மெல்லிய ஒலியில் காதில் கிசுகிசுத்து களவாணிபயலே.. எழுந்திருடா.. என்பதெல்லாம்.. பேரமுதம்.. .. ஒரு மழைகால காலைநேரத்தில். சுட சுட தேநீர் கோப்பையோடு டவல் சுற்றிய தலை.. கொஞ்சம் ஈரத்தோடு புடவை மெல்லிய கொலுசொலியில் அருகில் வந்து நின்று மயக்கும் விழியால் பேசி புன்னகைக்கும் பேரரசி.. இதைவிட காணாத சொர்க்கம் பெரிது .. காதல்.. தேன் தடவிய பலா அல்ல திகட்டாத தேனமுது அல்ல.. தித்திக்கும் தெள்ளமுதல்ல.. கசப்பும் வியர்ப்பும்.. துன்பநிலையும் ஆழ முழ்கி அர்த்தம் பொதிந்து. நின்று நிலைத்து.. அன்பெனும் பெருமழையிலும் அமைதியாய் ஓடும் நதிப்போல.. விழும்போது கைகொடுத்து.. விழாதிருக்க துணைநின்று.. கலந்துநின்று காக்கும் பேரருள்.. காமம் கலவி கருணை கலந்த பேரூற்று.. அன்பெனும் வற்றாத ஊற்று.. #காதல்.. .. ஆலஞ்சியார்

கனிமொழி

ஆர்எஸ்எஸை தமிழகத்தை விட்டு ஒழிந்தாலே மதவாதம் ஒழியும் ..திமுக ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸை அகற்றிவிடுவோம்.. #மானமிகு_கனிமொழி.. .. இப்போதுதான் சரியான பாதையில் செல்கிறது மிகவும் ஆபத்தான தேசத்தின் ஒருங்கிணைப்பை வெட்டி சாய்க்கும் இயக்கமாய்.. இந்தியர்களின் ஒற்றுமைக்கு இடைஞ்சலாய் .. ஒருசாரார் வெளிப்படையாகவே சொல்ல வேண்டுமெனில் பார்பனர்களின் இயக்கமாய் .. சாதிய வெறியை தூண்டி மக்களை கலவரத்தோடு வைத்து ...மதவெறியை தூண்டி அதில் தங்கள் மட்டுமே பயனடைய வேண்டுமென்ற நோக்கோடு செயல்படும் இயக்கம்.. தொடங்கபட்ட காலத்திலிருந்தே.. அது இடைசாதி கடைசாதியினருக்கெதிராக இருந்தது.. சூத்திரன் கல்வியை கேட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என வெளிப்படையாகவே சொல்லி திரிந்தவர்கள்.. ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்காக .. இந்த மண்ணின் பூர்வகுடிகளை தாழ்ந்தவனாய் காட்டி சமுக ஏற்றதாழ்வை மனதில் ஆழமாக பதித்ததில் ஆர்எஸ்எஸின் பங்கு அதிகம்.. .. ஆரியம் அஞ்சுகிற ஒரே சொல் திராவிடம்.. ஆரியத்தை வேரறுக்க நீங்கள் எதை கொண்டுவந்தாலும் அதை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிந்துவிடுவார்கள் அல்லது முனை மழுங்கிய கதையாகும் ..இன்றைக்கு நடக்கிற அவலங்களுக்கெல்லாம் காரணியான பாசிசத்தை நம் மீது திணிக்க நாமே காரணமென்றால் அது உண்மையும் கூட.. மதம் சாதி என மெல்ல கடித்து குதறும் விடயங்களில் ஆரியர்கள் அடிக்கடி அரவணைத்து நம் குரல்வளையை கடித்து குதறுகிற போது நம்மவரை கொண்டே நம் கைகளை கட்டி போடுகிறார்கள்.. கல்வியில் நமக்கான உரிமையை பறித்து .. நாமே நமக்காக உண்டாக்கிய மருத்துவ கல்லூரிகளில் அவர்களினி குழந்தைகள் படிக்க வைக்க நம்மை கொண்டே சொல்லவைத்திருக்கிறார்.. இன்னும் நிறைய வரும் வராதுவந்த வாய்ப்பினை மிக கெட்டியாக பிடித்துக்கொண்டு இனியொரு வாய்ப்பு கிடைக்காதென்பதால் அரியகிட்டிய அடிமைகளை வைத்து கூத்தாட்டம் நடத்துகிறார்கள்.. அது தப்பாட்டம் என தெரிந்தும் காலம் கடத்த வேண்டியிருக்கிறது.. .. அளவிற்கு அதிகமாக பார்பனர்கள் பொதுவெளியில் ..விவாதங்களில் திமிரோடு பேச தொடங்கியிருக்கிறார்கள்.. மௌனமாய் இருந்ததால் நம்மீது கத்திவீச தொடங்கியிருக்கிறார்கள்.. எங்கு அடித்தால் இவர்களின் ஆட்டம் அடங்குமென அறிந்து வீசியடிக்கிறார் கனிமொழி.. .. என்வீட்டில் எல்லோருமே திமுக ..கனிமொழி மட்டும் திராவிடர் கழகம் .. ஆசிரியரின் மாணவியாய் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி என்றார் கலைஞர் .. ஆம் இந்த துணிவு பெரியார் திடலோடான தொடர்பில் வந்தது ஆரியத்தை வீழித்த பார்பனர்களின் ஆட்டத்தை அடக்க திராவிடத்தை ..அதன் சித்தாந்தத்தை பற்றிபிடித்து கொள்ளுங்கள்.. வெல்லலாம்.. நிச்சயமாக பாசிசவாதிகள் அஞ்சுகிற ஒற்றைச் சொல் .. திராவிடம்.. குலைநடுங்க செய்கிற ஒரு பெயர் உண்டெனில் இது பெரியார் தான்.. பெரியாரை முன்னெடுக்கிற.. பெரியாரை கொண்டு நடந்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும் அதுவே .. தமிழகத்திற்கு விடிவை தரும் தமிழர்க்கு நிம்மதியை தரும்.. வாழ்த்துகள் கனிமொழி.. .. சரியான பாதையில் .. ஆலஞ்சியார்

Wednesday, June 27, 2018

காலம் தந்த தலைமை

திரும்பவும் அதே இடத்திற்கு வருகிறேன் என சிலர் எண்ண கூடும்.. ஆம்.. சிலர் தங்கள் தகுதியை மறந்து ஏதோ தாங்கள் தான் காப்பாத்த வந்த ரட்சகன் போல பேசி திரிகிறார்கள்.. அரசியலில் சிலர் மிக திறமையாளர்களாக தன்னை எண்ணி படுகுழியில் விழுந்த கதைகள் ஏராளம்.. ம.பொ.சி.. சி.பா.ஆதித்தன் .. சம்பத்.. ஏன் நாவலர்.என பட்டியல் நீளும்.. ...இவர்களெல்லாம் ஏதோவொரு வகையில் தங்கள் திறமைகளை பறைசாற்றினார்கள்.. ஆனால் அது மட்டுமே போதுமானதாக இல்லை .. மிக சிறந்த தலைவர்கள் வரிசையில் இடம்பெற முடியாததுமட்டுமல்ல வெகுமக்களின் ஆதரவில்லாமல் போனார்கள்.. குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களில் சிலர் கொண்டாடபட்டாலும் தொடர்ந்து தங்களின் திறமையை நிலைநாட்ட அவர்களால் இயலவில்லை..சிலர் அடிபணிந்து போனார்கள் .. உதிர்ந்த ரோமங்களாய் போனவர்களும் உண்டு.. உருப்படாமல் போனவர்களும் உண்டு.. இதை ஏன் இப்போது சொல்கிறேனெனில்.. இன்றைக்கு திடீர் திடீரென முளைக்கும் போராளிகள் முதல்நாள் சமூகசேவை செய்துவிட்டு மறுநாள் கட்சி தொடங்கும் தலைவர்கள்..? தங்களால் மட்டுமே முடியுமென சொல்லி திரிவதை பார்க்கிற போது நமக்கு நகைக்க தோன்றுகிறது.. உடனே ஜனநாய நாட்டில் யார் வேண்டுமானாலும் வரலாம் என கேள்வி எழும்.. வரவேண்டும் அதற்குமுன் மக்களோடு மக்களாக இணைந்து போராட கலந்து காரியமாற்றவேண்டும்.. .. சிலர் தனக்கே தகுதியென கருதி எதைவேண்டுமானாலும் பேசலாம் என எண்ணுவது .. தூரத்தில் இருந்து சூரியன் ஒளிபட்டு இலையில் தங்கிவிட்ட நீர் மின்னும்.. அது தன்னால்தான் ஒளி பிறந்ததென நினைப்பதைப் போல சிலர் தங்களால் தான் என எண்ணுகிறார்கள் ஏதோ தாங்கள் மட்டுமே சிறந்த தலைமையை தருவோமென உளறுகிறார்கள்.. சீமான் அன்புமணி .. தமிழிசை எடப்பாடி தினகரன்..ரஜினி கமல் என.. இந்த கூட்டம் எண்ணிக்கையில் அதிகம் எதற்கும் உதவாதவர்கள் .. இவர்களின் பலம் சாதி மதம் மொழி.. கவர்ச்சி சினிமா.. இதைதாண்டி இவர்கள் பூஜ்யம் ஒரு குறிப்பிட்ட சமூகமோ ..மதமோ.. கவர்ந்தழுக்கும் கலையோ.. இவர்களை பின்துணைக்கலாம் அது நீடிக்காது காரணம் அந்தந்த சமூகமே அவர்களை தூக்கியெறிந்துவிடும் காரணம்.. அந்த சமூகத்திற்கு கூட அவர்களால் கெடுதியே இவர்களால் வந்து சேர்ந்திருக்கும் .. தலைவர்கள் உருவாக வேண்டும் காலம் ஒவ்வொருமுறையும் தனக்கான தலைவனை தேர்வு செய்திருக்கிறது மக்கள் நலன்.. ஓயாத உழைப்பு சமூக சிந்தனை நற்செயல் இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கிற நேர்மை.. சாதி மதம் இனம் மொழி கடந்த மனிதாபிமானம் .. சமூகநீதியில் உரத்து நின்று அதை சமன் செய்கிற வல்லமை.. எள்ளளவும் ஜனநாயக மரபுகளை மீறாமை.. எதிர்கருத்தையும் உள்வாங்கும் அரசியல் தான் ஏற்ற கொள்கையை .. நிமர்ந்துநின்று பறையும் பேராற்றல் ..துணிந்து செயல்படுதல் ..வேகத்தோடு கூடிய விவேகம் அனைவரையும் இணைத்து/இணைந்து செல்லும் தலைமை ...இவையெல்லாம் கணக்கில் கொண்டு நல்ல தலைவனை காலம் தேர்வு செய்து தரும்.. தற்குறிகளை அரைகுறைகளை தான்தோன்றித்தனமாய் பேசிதிரியும் அபத்தங்களை தானெனும் மமதையோடு திரியும் வெத்துவேட்டுக்களை காலம் கைவிட்டுவிடும் மட்டுமல்ல மறந்துபோகும்.. ஆழ குழிதோண்டி புதைத்துவிடும்.. .. ஆம்.. காலம் தந்த தலைவர்களாய்.. காலம் செதுக்கியவர்கள் .. பெரியார் பேரறிஞர் அண்ணா ..கலைஞர்...அந்த வரிசையில் காலம் தனித்துவத்தோடு மெல்ல மெல்ல செதுக்கி தருகிறது.. தங்கமாய் தனிநிகர் தளபதியாய் காலம் தந்த கொடையாய் நிமிர்ந்து நிற்கிறார்.. தளபதி.ஸ்டாலின்.. நான் சொல்வது இன்றைக்கு இது மிகையாக தோன்றும் .. ஆனால் காலம் நமக்கு உணர்ந்தும் ..அரசியலில் நேர்மையும்.. கொண்ட கொள்கையில் உறுதியும் அரவணைத்து செல்லும் தலைமையும்.. நிதானமும் எதையும் நேர்வழியில் பெறவேண்டும் மக்கள் தரவேண்டுமென என எண்ணுகிற உயர்குணமும் .. அதையெல்லாம் மக்களின் நம்பிக்கையும் சொல்லும் .. காலம் செதுக்கிய தலைவன் என்று .தளபதி தமிழகத்தின் தலைவன்.. .. ஆலஞ்சியார்

Tuesday, June 26, 2018

நெரிக்கபடும் ஜனநாயகம்

அவசரநிலை இருண்டகாலமென்கிறார் மோடி.. மறுப்பதற்கில்லை ஆனால் அப்போது கூட பத்திரிக்கைகள் சுதந்திரமாய் முழு வலிமையோடு எதிர்த்தன .. கட்டுபாடுகள் விதித்த போதும் மறைமுக தாக்குதல் தர தயங்கியதில்லை.. எந்த ஊடகத்தையும் இந்திராவால் தடுத்திட முடியவில்லை கெடுபடிகள் கடுமையான போதும் ஊடகம் அறத்தை மீறி செயல்படவில்லை சில ஊடகங்கள் கட்சி சார்பில் இந்திராவை பின்துணைத்தபோதும் அடிமைசாசனம் எழுதி தரவில்லை.. சட்டத்தை கடுமையாக்கி கைது மிரட்டல் சிறை என்று MISA வில் ஜனநாயக குரல்வளையை நெரித்தார்.. அதற்கும் சற்றும் குறைவில்லாமல் இருண்டகாலமாக ஜனநாயக மரபுகளை குழித்தோண்டி புதைத்துவிட்டு தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது மோடி அரசு.. .. மிசா நாட்கள் இந்தியாவின் கருப்புபக்கங்கள் தான் அதற்கு சற்றும் குறையாத கருப்பு நாட்களாய் இப்போதைய ஆட்சி நடக்கிறது.. எதை உண்ணவேண்டுமென அவசரநிலையில் கூட யாரையும் கொன்றதில்லை .. கருத்து சுதந்திரத்திற்கான தடை ஏறக்குறை மிரட்டபடுகிற அவலநிலை .. தனக்கு பிடிக்காதவர்கள் தன் கருத்தில் கொள்கையில் உடன்படாதவரை அச்சுறுத்தும் நிலை.. இந்தியர்களின் கடைசி நம்பிக்கை என நம்படுகிற நீதிமன்றங்களில் நேரடியாக தலையீடு.. நீதிபதிகளை மிரட்டல் கொலை .. சிறையென ஒருவித பீதியோடு இந்திய நீதிமன்றங்கள் .. மனசாட்சியோடு கதைப்பதாக சட்டத்தை காவு கேட்கின்ற நிலை.. தேர்தலில் இந்திராவையே தோற்கடித்த ஜனநாயக நாட்டில் வாக்குபதிவு இயந்திர தில்லுமுல்லுகள்.. தணிக்கத்துறை..புலனாய்வுத்துறை என எல்லாவற்றிலும் காவிய சிந்தனை.. யாரை கும்பிட வேண்டுமென கட்டளையிடாததுதான் பாக்கி.. தனிமனித சுதந்திரத்தை மதமென்று சொல்லி தலையிடும் அயோக்கியத்தனம்.. இதையெல்லாம் விட பணமதிப்பிழப்பு என்று அறிவிகெட்டத்தனமாக நடுஇரவில் மக்களை நடுத்தெருவில் நிறுத்தி கருப்புபணத்தை ஒழித்தேன் பாரென்று கடைசியில் 480 % விழுக்காடு அதிகமாக கருப்புபணம் புழங்கியதும்.. ஒரே வாரத்தில் அமிர்ஷா 470 கோடி கருப்பை வெள்ளையாக்கியதும் தான் இதெல்லாம் மிசாவில் இல்லை .. ஒரு சிலரின் நலனுக்காக 97% விழுக்காடு இந்தியர்களையும் சமூகவிரோதியென கொக்கரிக்கும் திமிர்.. கல்வியில் குறிப்பாக ஒரு சமூக நலனுக்காக மற்றவர்கள் மீது தொடுக்கபட்ட போர்.. எளியவர்களின் உயர்கல்வி இனி எட்டாக்கனியாக்கி.. இயற்கை வளங்களை யாரையும் கேட்காமல் சுரண்ட.. ஒரு சில முதலாளிகளுக்காக சாமானியனின் உயிரை உடைமையை எடுக்கிற சர்வாதிகாரபோக்கு ..மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதம மந்திரி நாடாளுமன்றதிதில் நான்காண்டுகளில் 29 நாட்களே கலந்து கொண்டிருப்பதும்.. அதுவும் எதிர்கட்சிகளின் கேள்விக்கு பயந்து கோர்வையாக பேசிவிட்டு விவாதத்தில் கலந்துக்கொள்ளாமல் போவதும் .. ஊடகவியலாளர்களை சந்திக்காத பிரதமர் என்ற நிலை.. .. தன்னை சர்வாதிகாரியைப்போல நினைத்த இந்திரா தன் தவறுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.. கொலை கலவரம் எரிப்பு என புதியதொரு பாதையை வகுத்தவர்களைால் மதவெறியை தூண்டி இடைசாதி கடைசாதிகார்களை மோதவிட்டு ஒருவித பதட்டத்தோடு தேசத்தை வைத்திருப்பவர்கள் .. அவசரநிலைப்பற்றி கவலைபடுவது வேடிக்கையாக இருக்கிறது .. ஜனநாயக நாட்டின் பட்டியலில் 17 இடத்திலிருந்து 42 வது இடத்திற்கு கொண்டுபோனது தான் (ஐநாஅறிக்கை) இவர்களின் லட்சணம்.. காங்கிரஸ் ஐம்பதாண்டுகளில் செய்யாத சாதனையாக பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்.. உலகிலேயே அதிக GST வசூலுக்கும் நாடு.. இதுதான் மோடி அரசின் சாதனை.. ஜனநாயக நெறிமுறைகளை மதிக்காத அரசு.. வீழ்த்தபடவேண்டியது அவசியம்.. .. ஆலஞ்சியார்

Monday, June 25, 2018

இன்றைய கூத்து..

தமிழிசை.. அபசுரமாய் பேசிக்கொண்டு திரிந்தவர் இன்று மணியாட்டிவிட்டார்.. அவரின் கருத்தோடோ கொள்கையோடு நமக்கு உடன்பாடில்லை எனினும் சில விடயங்களுக்கு அவரை ஆமோதிக்கலாம்.. பெண் அரசியல்வாதி ஆண் அரசியல்வாதி என்றெல்லாம் இல்லை எதையும் சந்திக்க தயார் என்ற துணிவை பாராட்டியே ஆகவேண்டும்.. பெண்கள் அரசியலுக்கு வருவது மிகவும் குறைந்த விழுக்காடெனினும் அதில் ஆணாதிக்க திமிர் தடைபோடுவதும்.. கிண்டல் கேலி என பாலினத்தை குறித்து பேசுவதும் தொடர்ந்து அங்கீகாரம் தர மறுப்பதும் .. தடைகளை மீறி வந்தால் ஆணோடு சரிசமமாக அரசியல் செய்ய முடியாது என ஏளனம் செய்பவர்களுக்கு மத்தியில் தொடர்ந்து துணிவோடு பேசியும் அது ஏற்புடையதல்ல எனினும் தைரியமாக போராடுகிற துணிவை பாராட்டுவோம்.. தமிழிசை அவர்களே ..இதைதான் பெரியார் சொன்னார் பெண்கள் அடுப்படிக்கு என்ற நிலை மாறி ஆணுக்கு நிகராக வேலைவாய்ப்புகளில் பொதுவாழ்வில் வரவேண்டும்.. இன்று உங்களை போன்றோர் அரசியல் பிழையாய் நிற்கும் போதும் (ஜெயலலிதாஉட்பட) வரவேற்கிறோம் சில அபத்தங்களை கூட மௌனமாய் கடந்து போகிறோம்.. .. அன்புமணி.. தன் அரசியல் வரலாற்றை சாதிய தீயில் வளர்த்தவர் அவரும் அவரது தந்தை ராமதாஸூம் சமூகநலன் என்ற பெயரில் சாதீய மோதலை .. குறிப்பாக இளைஞர்களை வெறியோடு போராட தூண்டியவர்கள் என்ற தமிழிசையின் குற்றசாட்டை சட்டென்று மறந்து கடந்து போய்விட முடியாது.. அப்படி என்ன சொன்னார் மரம் வெட்டுவதைப்பற்றி அன்புமணி பேச கூடாதென்றார்.. அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.. இன்றைக்கு கூட சமூக வலைதளங்களில் மருத்துவர் ராமதாஸை மரம்வெட்டியாக தான் பார்க்கிறார்கள் .. தன் சமூக மக்களின் பிரச்சனைக்காக நாடே திரும்பிபார்க்க வைக்க அவருக்கு அப்போது தேவைபட்டது .. தொடர்ந்து அரசியல் தொய்வு ஏற்படுகிற போதெல்லாம் தன் சமூக மக்களை உணர்வோடு விளையாடுவார்.. சாதியை தாண்டிய அரசியலை அன்புமணியால் செய்ய முடியாது அதேபோல தமிழிசையும் பாஜகவின் அடிப்படை சித்தாந்தத்தை மீறி .. சாதிய மோதலை மதவெறியை தூண்டி அதில் குளிர்காய்வார்கள் அதிலிருந்து மீண்டுவர முடியாமல் ஒத்தூதுவது மட்டுமே நடக்கும்.. .. போகிற போக்கில் பாஜகவை நாட்டிற்கு நல்லது செய்வதைபோல பேசிவிட்டு போகிறார்.. மத்தியரசிற்கு எதிராக போராடுபவர்களை சமூக விரோதியைப் போல சித்தரிக்க முயலும் பாசிசத்தின் குரலாக ஒலிக்கிறார் .. தொடர்ந்து கைது செய்யபட்டுவரும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களை பயங்கரவாதிகள் போல பேசிவிட்டு போவதை ஏற்க முடியாது.. இதில் ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது .. சிறு சிறு உதிரிகளாக செயல்படுவோர் அல்லது குறுகிய வட்டத்திற்குள் நிற்போரை பயமுறுத்தும் எச்சரிக்கை இது ..எந்தவொரு போராட்டமும் பெரிய அரசியல் கட்சிகளின் துணையோடு இன்றி செயல்பட்டால் கடைசியில் பிசுபிசுத்துபோகும் அல்லது மிரட்டல் கைது போன்ற நடவடிக்கை காட்டி எச்சரிப்பார்கள் .. தொடர்ந்து போராட வலுவில்லாமல் போகும்.. இல்லையெனில் சீமானை போல சரண்டர் ஆகி அந்தர்பல்டி அடிக்கும் வித்தை தெரிந்திருக்கவேண்டும்.. பாசிசம் மிக இலகுவாக இருபிரிவினருக்கிடையே மோதலை உருவாக்க பார்க்கிறது இன்று வலைதளங்களில் அதை காண முடிகிறது.. சாதியை மதத்தை கொண்டாடுகிறவர்கள் கடைசி புகலிடம் ஆயுதம் ..தாக்குதல் அது நடந்தேற தொடங்கியிருப்பது ஆபத்தானது.. .. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்களே .. தாக்குதலுக்கு வருவார்கள் .. தமிழிசையை தாக்க முயற்பட்ட செயல் கண்டிக்கதக்கது .. அவரின் சொல்லில் செயல்பாடுகளில் நமக்கு சலிப்பை தந்தாலும் அவரின் மீதான தனிப்பட்ட விமரிசனம் ஏற்புடையதே அல்ல.. யார் அறிவாளியென விவாதிக்க தயாரா என தமிழிசை கேட்பது சிறுப்பிள்ளைதனமானது.. அதையை அன்புமணிக்கு சொல்வோம்.. எல்லாம் தெரிந்தவரை போல பேசி திரிவதும்..சில மாவட்டங்களில் சிறியதொரு ஆதரவை வைத்துகொண்டு தம்மை உயர்ந்தவனென காட்டிக்கொள்ள நினைப்பதும்.. ஆட்சியில் இருக்கிறோமென்ற தைரியத்தில் பேசும் பேச்சில் ஏகத்தாளமிடுவதும் திமிரோடு நடந்து கொள்வதும் இருசாரருக்கும் நல்லதில்லை... தன் பலம் அறியாது உளறுவோர் கரை சேர்வதில்லை .. ஆலஞ்சியார்

Sunday, June 24, 2018

கலைஞரைப் பற்றி

கலைஞரைப் பற்றி கவிஞர் ----------------------------------------------- நிதான புத்தி நேரிய பார்வை நின்று கண்டறிந்து நெடுவழி செல்லல் சதாவ தானத் தனிப்பெருந் திறமை தன்னை யறிந்து பிறர்உளம் நோக்கல் நதியென ஓடி நாளெலாம் உழைத்தல் நாடும் மக்களும் நலம்பெற நினைத்தல் அதிசயச் சொற்றிறன் ஆய்வுறு கூர்மதி அன்பர் நலத்திலும் அக்கறை செலுத்துதல் மதியுறு மாண்தகை மந்திரிக் கிவையே இலக்கண மென்றால் இலக்கியம் அவரே! கருணா நிதியின் தனித்தமிழ் அரசு பலநாள் நிலைக்கப் பக்குவம் பெற்றது வாழிய நண்பர்! வாழிய அமைச்சர்! வாழிய கலைஞர்! வாழிய தமிழர்! – -கவிஞர் கண்ணதாசன்

தமிழ்..

இந்தியை கற்றுக்கொள்ளுங்கள்..அதனால் வெளி மாநிலம் சென்று பிழைக்க முடியும்.. கவர்னர் .. நாங்க ஏன் போகணும் .. எல்லா வளத்தையும் சுரண்டி மார்வாடியிடம் கொடுக்கவா .. தமிழகத்திற்கு கவர்னர்தானே தவிர .. இந்தி மொழிக்கு தூதரா.. தமிழ் மொழியின் வளமும் தொன்மையும் இன்று பல்வேறு நாடுகளில் பேசும்,மொழியாக அங்கீகரிக்கபட்ட நிலையில் இந்தியாவில் செத்த மொழிக்கு சிங்காரித்து சமஸ்கிருதத்தை முன்னெடுக்கிறீர்.. தமிழ் மொழிப்போல தொன்மையான மொழி உலகில் இல்லை என்பதறிந்தும் தமிழர்களின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்தியை சமஸ்கிரதத்தை கொண்டாடுகிறீர்..பத்தாயிரம் பேர் கூட பேசாத சமஸ்கிரதம் cbsc ல் தேர்வில் இடம் பெறுகிறது 18 நாடுகளில் ஆட்சிமொழியாகவும் அங்கீகரிக்கபட்டதாகவும் உள்ள தமிழ் வேண்டாமென்கிறீர்.. இங்குள்ள சாண பயலுகள் அதை கண்டுக்கொள்ளாமல் மௌனம் காக்கிறார்கள்.. .. இந்தி.. ஆயிரமாண்டுகள் பழக்கமுள்ள உருதுமொழியின் வளத்தை அழிக்க வேண்டுமென்பதற்காக உருவாக்கபட்ட மொழிதான் இந்தி.. உருது மொழி கூட பார்சி மற்றும் அரேபிய மொழியை தழுவிய நகல் என்கிறார் மொழியியல் பேராசிரியர் கலாநிதி சீறிதரன் (இலங்கை).. 18 ம் நூற்றாண்டுக்கு முன்பு இந்தி என்ற மொழியே இல்லை.. கல்கத்தாவின் போர்ட் வில்லியம் கல்லூரியை தொடங்கியவர்களால் உருதுக்கு எதிராக தொடங்கப்பட்ட மொழி இந்தி.. இந்திமொழியில் சமஸ்கிருத சொற்கள் நிறைந்திருக்கும்.. ..// #செத்த_சமஸ்கிருதத்தை பிழைக்க வைக்கவே அது பயன்ப்படும்.. புது அறிவோ, ஆராய்ச்சிக்கோ முற்போக்கு,சிர்திருத்ததிற்கு ஏற்ற மொழியல்ல,#இந்தி.. என்றார்..எங்கள் பேராசான் பெரியார் .. ஆம் தனக்கென ஒரு இலக்கணமில்லாத, உருது இலக்கணத்தை தனதாக்கிக் கொண்ட ஒரு மொழி,.. சமஸ்கிருத ,ஹிப்ளு வின் தாக்கத்தையும்,உருது மற்றும் அரபியின் மறு வடிவத்தையும் கொண்ட மொழியால் என்ன புதிய அறிவை முற்போக்கு சீர்திருத்த சிந்தனையை தரமுடியும்.. பேச்சு வழக்குக்கெனில். மொழியின் அறிவு தேவையில்லை, பேச பேச பழகி கொள்ளலாம் .. .. மொழிகளின் தலைக்கூறு தமிழ் .. அதன் வளமையும் செழுமையும் வேறெந்த மொழிக்கும் இல்லை .. மொழிகள் இலக்கணத்தின் தாய் என்று கூறலாம் அதன் சிறப்பை உணராமல் மொழியின் கலப்பை ஊக்குவித்த ஆரியர்களை தமிழர்களென அடையாளபடுத்தியதின் விளைவு தமிழின் சிறப்பை உலகமறிய செய்யாமல் தடுக்கிறது நிறைய தமிழறிஞர்கள் தொடர்ந்து மறைக்கபட்டும் மறுக்கபட்டும் சில பார்பனர்களை தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் போல காட்ட நினைத்ததின் விளைவு இன்றைக்கு தமிழ் மீதான மறைமுக தாக்குதலுக்கு பகிரங்கமாக சவால் விடுகிறார்கள்.. ஆனாலும் தமிழ் தன்னை தானே காத்துக்கௌள்ளும் இயல்புடையது மொழிகளின் தாய் தமிழ்.. .. இந்தியை பரப்புவதோ...அதற்கு எந்த பார்பனரல்லாதோர் முயற்சி எடுத்தாலோ.. ஆதரித்தாலோ அது #சமூக_துரோகம் என்றார் #பெரியார் கூடவே இந்தி பார்பனர் மொழி என்றார். .. #காலம்தந்தகொடை_பெரியார் .. ஆலஞ்சியார்

Saturday, June 23, 2018

எதிரியே நீயே தீர்மானி.. நான் எதை தேர்வு செய்ய வேண்டுமென

அரசியலில் எதிரி எதை நகர்த்துகிறோனே அதன்படியே எதிர்வினை தேவைபடும்.. களம் தெளிவாக இருக்கிறது பகை யாரென்று தெரிகிறது .. பகைவர் நேர்நிற்க பயந்து சில அடிமைகளை முன் நிறுத்துகிறார்கள் ..சொல்படி ஆடும் குரங்கைப்போல குட்டிகரணம் போடுகிறார்கள் எங்கிருந்து இயக்கபடுகிறதென தெளிவாய் தெரிகிறது.. அவர்களின் இயக்கத்திற்கேற்ப இங்கே நாடகம் நடக்கிறது.. .. நாம் மட்டும் நேர்மை பேசி திரிகிறோம்.. கொஞ்சமேனும் அரசியல் நேர்மையோடு நடப்பவரோடு .. ஜனநாயக மரபுகளை மதிக்க தெரியாமல்.. தான் தோன்றித்தனமாக என்ன பேசுகிறோம் என்றறியாமல் வார்த்தைகளில் விசம் தடவி வீச்சுகிற கயவர் கூட்டத்தை .. வாசலில் நின்று போரிடலாமென காத்திருக்கிறோம் .. அவன் புறவாசல் வழியே நம் புறமுதுகை குறிபார்த்து அம்பு எய்கிறான்.. இப்போதும் நாம் நேர்மை பேசுவோம்.. .. தன்னிகரில்லா தலைவனை வசைபாடிய போதே நாவறுத்து வீசியிருந்தால் .. அல்லது நாவடக்க செய்திருந்தால் அடுத்த முறை பேச அச்சம் கொள்வான்.. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கொச்சையாய் பேசுவதும்.. அரசியலென்ற பெயரில் நம்மை அம்மணமாக்கி சிரிக்கிற போதும் நாம் நேர்மை தவறாமல் களம் காண்போம்.. அதீத நேர்மை அரசியலுக்கு உதவாது .. நாம் 2018 அரசியல் செய்கிறோம்.. இங்கே கருத்தில்லாதவன்.. அறிவின் வறட்சியில் சொல்லின் பொருளறியாது ..வாய்க்கு வந்ததை பேசி திரியும் போதும் ..நாம் வாய்மையை போற்றி நின்றால் .. நாம் பைத்தியக்காரன் பட்டம் வாங்க வேண்டிவரும்.. மக்களை துன்புறுத்துகிற .. மக்களை தினம் தினம் கொல்கிற.. மக்களை சித்ரவதை செய்கிற .. மக்கள் விரும்பாத ஆட்சியை.. மக்கள் வாக்களிக்காத ஆட்சியை.. கட்டிவச்ச காசை கூட திரும்ப பெற முடியாமல் செவிட்டில் அறைந்து விரட்டபட்ட மதவெறியர்களின் கைப்பாவையின் ஆட்சியை .. ஏன் இன்னும் விரட்டாமல் பார்வையாளராக இருக்கிறாரென நம்மை பார்த்து மக்கள் கேட்க தொடங்கிவிட்டார்கள் .. காரணம் அந்தளவு நொந்துப் போய்விட்டார்கள்.. பாசிசத்தின் கோரப்பிடியில் மக்கள் சிக்குண்டு இருக்கும் போதும் நாம் நேர்மை பற்றி பேசி நேரான வழியில் வரவேண்டுமென என்னும் உயர்ந்த எண்ணம் நம்மை மக்கள் முன் கேலிப்பொருளாக்கி விடுமோ என அஞ்ச வேண்டியிருக்கிறது.. .. எந்த வாசலில் எந்த ஆட்டத்தை ஆடவேண்டுமென அறிந்திருக்கிற வேண்டும் இல்லையெனில் ஆட்டம் தெரியாதவரென எண்ணுவார்கள் .. காலதாமதமும் அதீத நேர்மையும் தற்கால அரசியலுக்கு வேண்டாதவைகள் .. அரசியலில் நேர்மை முக்கியம் .. அது நேர்மையானவரோடு மோதுகிற போது மட்டுமே.. சூழ்ச்சிவலைப்பின்னி. சூதுவால் நம்மை வீழ்த்த நினைக்குமம கபடதாரிகளுக்கு அவர்கள் மொழியில் வழியில் பதில் சொல்வதே சரி .. இவர்கள் அரசியல் செய்ய வரவில்லை மக்கள் பணி செய்யும் மாண்பு அறிந்திடாதவர்கள்.. இனம் மொழி கலாச்சாரத்தின் மீதான தாக்குதலை .. நம்மவர்களை கொண்டே நடத்தும் நயவஞ்ச தந்திரமிக்கவர்.. நோக்கம் தங்கள் இனத்தவனின் மேம்பாடு மட்டுமே அதற்காக எதையும் செய்வார்கள் பேசுவார்கள். .. நம்மிடம் நெஞ்சுறுதி உண்டு நேர்மை உண்டு வாய்மை உண்டு ..எனினும் அதை இவர்களிடம் எதிர்பார்ப்பது நமது அறியாமை எதிரியே என்ன ஆயுதம் எடுக்க வேண்டுமென்பதை தீர்மானிக்கிறான்.. .. இனி.. எதிரி நிலைகுலைய செய்யும் ஆட்டம் மட்டுமே தேவை.. இலக்கணம் மீறியதாக இருப்பினும்.. ஆம் ஆடவேண்டிய நேரத்தில் ஆடவேண்டும்.. .. ஆலஞ்சியார்

Friday, June 22, 2018

நவீன சிற்பி

கலைஞர் என்ன செய்தார்.. .. ஒரு சமூகம் மேம்பட வேண்டுமெனில் அது கல்வியறிவில் தன்னிறவை பெற்றிருக்கவேண்டும்.. கல்விப்புரட்சியின் துவக்கம் திராவிட சிந்தனையில் வந்தது.. காமராஜர் பள்ளிகளை திறந்தாரென இன்று புகழ்கிறோமே .. அதற்கு முன் நாம் சிந்திக்கவேண்டிய,கேட்க வேண்டிய கேள்வி யாருமே பேசாமல் கடந்து போகிறோம்.. பள்ளிகளை மூடியது யார்.. மூதறிஞர் என்று சொல்லி திரிந்த ராஜாஜி பள்ளிகளை மூடி.. குறிப்பிட்ட சமூக பின்ணணி உள்ளவர்கள் மட்டுமே படிக்கவேண்டும் பொருளாதாரத்தில் கொஞ்சம் மெச்சபட்டவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலையை நோக்கி தமிழகத்தை தன் நயவஞ்சகத்தால் தள்ளினார்.. அதனால் தான் தந்தை பெரியார் ராஜாஜியை வீழ்த்தவேண்டுமென்பதற்காகவே காமராஜரை பின்துணைத்து முதல்வராக வர வழிசெய்தார்.. முதல்வராக வந்தவுடன் பெரியார் ராஜாஜி பள்ளிகளை மூடிவிட்டார் தொறந்து பிள்ளைகள் படிக்க ஏற்பாடு பண்ணுய்யா என்றார்.. காமராஜர் துவக்கப் பள்ளிகளை திறந்து குறிப்பாக ஏழை மற்றும் கிராமபுற குழந்தைகள் கல்வி கற்க செய்தார் அவர் ஆட்சியில் தான் எட்டாவது படித்தவர் துவக்கப்பள்ளி ஆசிரியர் ஆகலாமென்ற சட்டம் வந்தது ஆனால் பின் வந்த பக்தவச்சலம் அதை கண்டுக்கொள்ளவே இல்லை.. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதுவும் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் தான் ஆரம்ப பாடசாலை ஆசிரியர் நியமனம் அதிகரித்தது.. .. விடுதலை இந்தியாவில் கல்வியில் புரட்சியை தந்தது தமிழகம் தான் கல்விக்கான சலுகைகள் நன்றாக படிக்கிற பிள்ளைகளுக்கு scholarship உதவிதொகையை அதிகரித்தார்.. பள்ளி இறுதியை முடித்திருந்தால் ஆசிரியராகமுடியும் என்ற நிலையை கொண்டுவந்தார்..அவர்கள் பணி நியமனத்தை உறுதி செய்தார் கிராமங்கள் தோறும் நடுநிலைகளை உயர்நிலைகளாக உயர்த்தினார்.. மாவட்ட தலைநகரங்களில் மட்டுமே இருந்த அரசு கலைக்கல்லூரிகளை அதிகரித்து மாவட்டதின் பிற நகரங்களும் என விரிவுபடுத்தினார்.. மருத்துவக்கல்லூரிகள் மாவட்டம் தோறுமென புரட்சியை செய்தார் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவ இடங்களென்ற புதியதொரு வரலாறு படைத்தார்.. முதல் பட்டதாரிக்கு கல்வி கட்டணத்திலிருந்து விலக்கு அளித்தார்.. கிராமபுற மாணவர்களுக்கு மருத்துக்கல்லூரியில் இடம் ஒதுக்கினார்.. கற்பிக்கும் செயல் கடவுளின் செயல் என்ற உணர்நோக்கோடு பணியாற்றும் ஆசிரியர்கள் ஊதியத்தை உயர்த்தினார் .. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமிர்த்தியா சென் தமிழகம் தனி நாடாக இருந்திருந்தால் அது வளர்ச்சியில் ஐரோப்பிய நாடுகளோடு போட்டி போடும் என்றார் ..அதை மேலைநாடுகளோடு தான் ஒப்பிட வேண்டுமே,தவிர தமிழக வளர்ச்சியை பிற இந்திய மாநிலங்களோடு ஒப்பிட கூடாதென்றார்.. ஆம் இது திராவிடத்தால் சாத்தியமானது.. இன்னும் குறிப்பறிந்து சொல்லவேண்டுமெனில் கலைஞரால் சாத்தியமானது.. கல்வி விவசாயம் வேலைவாய்ப்பு இந்த மூன்றையும் மிக சரியாக கையாண்டார் விவசாய மக்களின் இன்னல்களை களைய .. கடன் ரத்து இலவச மின்சாரம் இவை இரண்டுமே போதும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நிலத்தடி நீரை பெற மின்சாரம் பெருமளவு உதவியது விவசாய கடன் ரத்து விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை தந்தது .. கல்வியிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் தமிழகம் புதியதொரு இலக்கை எட்டியிருந்தது.. இடையிடையே ஆட்சி மாற்றம் நிகழ்ந்த போதும் கலைஞர் பயணித்த சுவட்டிலேயே சமூக நீதியோடு பயணிக்க வேண்டிய கட்டாயம் பின் வந்தவர்களுக்கு வந்தது.. எம்ஜிஆர் இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை கொண்டுவந்த போது மக்கள் பெரும் தோல்வியை நாடாளுமன்ற தேர்தலில் தந்தார்கள் உடனே விழித்துக்கொண்டு பொருளாதார அளவுகோலை ரத்து செய்தார்.. இடஒதுக்கீட்டில் தமிழகத்தில் தான் உள் ஒதுக்கீடு செய்துகாட்டினார் (BC) பிற்படுத்தபட்டவர்களில் மிகவும் பின் தங்கிய சமூகத்தை மிகவும் பிற்படுத்தவரென (MBC) அதிலும் சிறுபான்மை சமுதாயம் அதிகம் பயன்பெறவில்லை என்றவுடன் (BCM) என்ற உள் ஒதுக்கீட்டை கொண்டுவந்தார்.. ஆந்திராவில் உயர்நீதி மன்றம் ரத்து செய்ததை கணக்கில் கொண்டு பிற்படுத்தபட்ட ஆணயத்தின் அறிக்கையை பெற்று தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு உள்ஒதுக்கீட்டை கொண்டுவந்தார் பட்டியனித்தில் Sc/St பிரிவில் உள் ஒதுக்கீட்டை அருந்ததியனருக்கு ஒதுக்கி உண்மையான புரட்சி செய்தார்.. .. பெருங்கிழவன் உண்மையான சீடனாய் பெருந்தொண்டாற்றிவிட்டு மூப்பின் காரணமாய் மௌனமாய் ஓய்வில் இருக்கும் இந்த சூரியன் தான் தமிழகத்தின் சிற்பி.. ஏன் இன்னமும் கோபம் தீராமல் பார்பன கும்பல் தொடர்ந்து சூழ்ச்சி செய்து திமுகவை மட்டுமே வேட்டையாட நினைக்கிறது காரணம் இதுதான் திமுக இருக்கிறவரை இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது..எவ்வளவு தீங்கிழைத்தாலும் பொய் குற்றசாட்டுகளை கட்டிசமைத்தாலும் அறம் வெல்லும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து மக்கள் பணியாற்றும் பேரியக்கம் திமுக.. கலைஞர் இந்த நூற்றாண்டு கண்ட தமிழகத்தின் நவீன சிற்பி.. ஆம் அவரது திட்டங்களை தான் இன்று இந்திய துணைகண்டமே கடன் வாங்கி பின்பற்றுகிறது .. .. #தமிழகத்தின்_சிற்பி.. .. ஆலஞ்சியார்

Thursday, June 21, 2018

சீமான் எனும் பொய்

சீமான் சமீபத்திய உளறல்கள் .. என்ன காரணம்.. ஏமாற்றவேண்டுமென முடிவு செய்துவிட்டால் அங்கே உண்மைக்கு வேலையில்லை ஆனால் சில சுவாரஸ்யங்கள் வேண்டுமென்பதற்கு நடக்காததை நடந்ததாக சொல்லித்திரிபவர்களை காணமுடியும்.. ஆனால் வெளிப்படையாக பொய்யென்று தெரிந்தும் மடைதிறந்தாற்ப்போல அவிழ்த்துவிடுவது தம்மோடு இருக்கிற விடலைகள் அறிவுகொண்டு சிந்திக்காது என தைரியம்தான் அவரை பேச வைக்கிறது.. #அறிவு_வறட்சியும் ஒரு காரணம்.. முட்டாள்த்தனமாக சிந்தனை செயல் அறிவிற்கு தொடர்பில்லாமல் கதைப்பதென்பது கடைசியில் காட்டிகொடுத்துவிடும்.. மற்றொரு விடயம் ஒருவரைப்பற்றி ஏதேனும் சொல்லும் போது அவர் இல்லையென தெரிந்தால் நடக்காத ஒன்றை இட்டுகட்டி பேசலாம் அப்படிதான் ஆமைக்கறி ஏ.கே.47 னும் அடித்துவிட்டார்.. .. சட்டென்று உணர்ச்சிவயபடும் இளைஞர்கள் நல்ல விடயங்களை உள்வாங்கி ஆய்ந்தறியாமல் சொல்கிறவனை நம்புகிற .. சொல்லும் சொல்லின் உண்மையை கூட விளங்கிகொள்ள முடியாதவர்களாக இருப்பது கொடுமை.. வாய்தவறி பேசிவிட்டு பின் மாற்றிக்கொள்வதை கூட ஏற்கலாம் ஆனால் தொடர்ந்து அடுக்கடுக்காக ஈழத்தைப்பற்றியும் .. தன்னோடு கதைத்தவர்கள் பற்றியெல்லாம் இல்லாததை சொல்லி திரிவது ஒருவகை மனநோய் திரும்ப திரும்ப சொல்வதால் உண்மையாகிவிடுமென்கிற பழைய அயோக்கியத்தனம் இப்போதெல்லாம் செல்லாமல்போகும்.. வலைத்தளங்கள் உலகைச் சுருக்கி உள்ளங்கையில் தந்துவிட்டபிறகு சொல்லின் உண்மைதன்மை அறிவது மிக சுலபமாகிபோனது... சீமானுக்கு பதிவெல்லாம் வேண்டுமா என கேட்க தோன்றும்,.. இவரைப் போன்ற வழிகேடர்களால் இளைய சமுதாயம் ஒருவித மன அழுத்ததிற்கு ஆளாக நேரிடும் எல்லாவற்றையும் உண்மையென நம்பும் அரைவேக்காட்டுத்தனம் குடிகொள்ளும் .. உண்மையை அறிகிற போது அது காலங்கடந்த செயலாகிவிடும்.. சமூகம் வீணாய்போய்விடும் .. அரசியல்வாதிகள் என்றில்லை.. சமூகநீதி பேசுவோர்,முற்போக்காளர்கள் ..மதம் மார்க்கம் .. அறிவியல் புராணம் பேசுவோர் யாராக இருந்தாலும் அவர்களின் சொல்லில் எழுத்தில் உண்மை இருக்கிறதா என அறிந்திட வேண்டும் .. எல்லோரும் சுகமாக கதைப்பார்கள் மனம் லயிக்கும்.. மூளைச்சலவைகூட செய்யும் ஒருவித உணர்வுமேலிட சற்றென்று ஆட்கொள்ளும் அவர் மீது ஈர்ப்பை தரும் சலங்கைகட்டி மனதில் ஆடும்.. ஆனால் உண்மை கொஞ்சம் கொஞ்சமாய் தான் உள்வாங்கும் ஆனால் அது நிலைத்து நின்று காலம்கடந்தும் பேசும்.. அறிவோடு அடுத்துவா.. அறிவுகொண்டுபார்.. அறிந்ததெல்லாம் ..அறிவில் சேர்.. அது மெய்யானதா என பகுத்தாய்ந்து பார் அதுதான் நம்மை அறிவுடைச் சமூகத்தோடு சேர்க்கும்.. பித்தலாட்டக்காரன் ..சுற்றிவளைத்து கதைப்பவன்.. அடுக்கடுக்காய் பொய் பேசுபவன்.. யாரும் கேட்கமாட்டார்களென எண்ணி உண்மையோடு பொய்யை கலப்பவன்.. எதிர்நிற்பனை அற்பனாய் எண்ணி தனக்கே எல்லாம் தெரியும் தானே சரி என்பவனை நம்பாதீர்.. அது தீங்கில் போய் முடியும்.. .. சீமானிஸிமாம்.. இப்படிதான் அரைக்கிறுக்கன் எம்ஜிஆர் அண்ணாயிசம் என்றார் ..என்ன அது அண்ணாயிசமென்ற போது..கம்யூனிஸமும் பெரியாரிசமும் கலந்ததென்றார் அந்த வறட்டு அரசியல்வாதி.. அறிவின் வறட்சி இப்படிதான் கதைக்கச் சொல்லும்.. சீமானின் கதைகள் பொய்களால் ஆனது அறிவின் வறட்சி அது.. நிலைக்காது.. புரிந்துக்கொள்ளுங்கள் ;அறமே என்றும் வெல்லும்.. .. ஆலஞ்சியார்

Wednesday, June 20, 2018

திராவிடம்

திராவிடம்.. ஆயிரம் ஆண்டுகளாய் அடிமைபட்டு கிடந்த இனத்தை தட்டியெழுப்பி .. சுயம் மீட்சியை கற்று தந்து.. மதம் சாதி கடந்து ஒன்றுபட கற்று தந்தது.. இனம் மொழி பாலினம் மறந்து மனித நேயத்தோடு வாழ சொன்னது அடிமையல்ல நீ.. உன் உரிமையை யாரிடமும் அடகு வைக்காதே.. சக மனிதனை பிரித்து பார்க்காதே.. ஏற்றதாழ்வில்லை மனித குலத்தில் உயர்வென்றும் தாழ்வென்றுமில்லை என உணர்த்தியது.. சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை கலைந்து நம்மை நேர்படுத்தியது.. ஈராயிரமாண்டாய் நம்மை சுரண்டி பிழைத்த ஈனர்களை அடையாளம் காட்டியது.. உனதுரிமையை... பறித்துக்கொண்டு உன்னையே கீழானவனாய் சித்தரித்து தொடாதே .. தூர நில் பார்த்தாலே பாவம் .. நிழல் பட்டாலே தீட்டு.. கல்வி கற்க நினைத்தால் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்று.. என்றவனை அடையாளம் காட்டியது .. தாய்மொழியில் சமஸ்கிருதத்தை கலந்து அதுதான் தமிழென காட்டி .. தமிழனின் கலாச்சார பண்பாட்டில் ஆரியத்தை புகுத்தி கடவுள் சாதி வேதமென கதைகட்டி ..ஏற்றதாழ்வை வாழும் சித்தாந்தமாக்கி .. புனையபட்ட புரட்டை ஆன்மீகமென்ற பெயரில் புராணகதையாக்கி தமிழினத்தை சிறுக சிறக சிதைக்கும் பெருந்திட்டத்தோடு வந்த வந்தேறிகளை தடுத்து நிறுத்தியது திராவிடம்.. .. இதோ.. உ.பி.யில் தன் கூட்டாளிகளோடு கோவிலுக்கு சென்ற தாழ்த்தபட்ட பட்டியிலின இளம்பெண்ணை .. அம்மணமாக்கி தெருவில் நிறுத்தியிருக்கிறார்கள்.. அதை ஆளும் அரசும் கேட்கவில்லை அரசியல்கட்சிகளும் கேட்கவில்லை.. காரணம் அங்கே பெரியாரைப்போல சமூக சீர்த்திருத்தம் செய்திடவில்லை.. சமூக புரட்சியில் மக்களின் மனநிலையை மாற்றி சமமாக மதித்திட வேண்டுமென மக்களிடம் விழுப்புணர்வை ஏற்படுத்திடவில்லை.. அடித்தால் திருப்பி அடி.. உன் துண்டு உன் தோளில் போட யாரை கேட்கவேண்டும்.. என சுயமரியாதையை கற்று தர அங்கே நாதியில்லை.. பெண்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு ..சமஉரிமை சொத்தில் பங்கென சுயம் எழ நிற்க வழிசெய்தது திராவிடம் .. இடைசாதிகாரனை கொம்பு சீவி ஆடும் ருத்ரதாண்டவம் .. இங்கேயும் சாதிய மோதல்கள் குடிசையை கொளுத்தும் மாவீரசெயல் நடக்கிறது ஆனால் மீசை வைத்தாலே கொலை செய்ய தூண்டும் ஈனச்செயல் இங்கில்லை.. சாதிய மோதலை சில பாசிசவாதிகள் தூண்டிவிடுகிறார்கள் உ.பி.யைப்போல மத்திய பிரதேசத்தைப்போல சாதிவெறி தாண்டவத்தை இங்கே நடத்திட முயல்கிறார்கள்.. இங்கே இன்னமும் ஈரம் மிச்சமிருக்கிறது .. பெரியாரும் கலைஞரும் தந்த சமூகநீதிக்கான வரையோலை எங்களிடமிருக்கிறது .. திராவிடத்தை வீழ்த்திடலாமென சிலர் கனவு காண்கிறார்கள் .. அவர்களின் கனவு உடைபடும் .. .. திராவிடம் 2.0 இளைய தலைமுறையினிடம் திராவிடமே தந்ததைப்பற்றியும் .. இதுவரை தமிழினத்தை காத்து நிற்பதுபற்றியும் பேச தொடங்கியிருக்கிறோம் .. என்ன செய்ததென வரலாற்று ஆவணங்களோடு கதைக்க தொடங்கியிருக்கிறோம்.. புதியதொரு விடியலை நோக்கிய நகர்வாய் மனித குலம் மேம்பட அறிவுகொண்ட பார்வையோடு சமநீதி சமமான பார்வை .. தொலைநோக்கு சிந்தனை ஏற்றதாழ்வற்ற நிலை.. நமது உரிமையை பறிக்க நினைப்போரை இருக்குமிடம் தெரியாமல் செய்து நமது நிலம் நமது உரிமை என நாமே உருவாக்குவோம்.. காட்டிகொடுத்தும் ..காட்சிதந்தும் பிடிங்கிய உரிமைகள் மீட்டோம் தொடர்ந்து காப்போம்.. திராவிடம் எமது அரண்.. ஆரியத்தை விழவைப்போம்.. .. ஆலஞ்சியார்

Tuesday, June 19, 2018

வாய்த்த நல்ல அடிமைகள்

அம்மா கொள்ளையடித்த பணத்தை தினகரன் சுருட்டிக்கொண்டு போய்விட்டார்.. ஜெயலலிதாவை விமர்சித்த அவரது நேர்மைக்கு பாராட்டு.. சில நேரம் சிலர் உளறும் போது உண்மை தானறியாமலேயே வந்து விழும் அப்படிதான் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதும்..ஆனால் அதிகார போட்டியில் இப்போதைய எஜமானின் கருணை இருக்கும் போது எதுவேண்டாலும் பேசலாம்.. அருகதையில்லாதவர்கள் உயர்பதவியில் அமரும் போது நல்ல ரசமாக இருக்கிறது.. எடப்பாடியை தாண்டி யாரென்ற தெரியாதவரெல்லாம் தளபதியை செயல்தலைவரா செயல்படாத தலைவரா என கேட்கிறாரென்றால் இருக்கிற கோவணம் அவிழ்ந்துவிடாமல் எச்சரிக்கையோடு இருப்பதற்கு இதுபோன்ற உளறல்கள் வரும்.. சசிகலா தன் குடும்பத்திலிருந்து ஒருவரை முதல்வராக நியமித்திருந்தால் இன்றும் மன்னார்குடி முன் மண்டியிட்டு நின்றிருப்பார்கள்.. விசுவாசமானவன் யாருமே இல்லை ஜெயலலிதாவிற்கோ அவரின் நிழலாய் திரிந்த சசிகலாவிற்கோ .. இவர்கள் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் கெட்டிக்காரர்கள்.. திறமையோ தகுதியோ இல்லாமல் .. ஜெயலலிதா/சசியின் கருணைபார்வை பட்டால் போதும் மோட்சம் கிடைக்குமென .. போலிஸ் தடுப்புக்கு பின்னால் கைகூப்பி நின்றவர்கள்.. வானத்தை பார்த்து கும்பிடு போட்டவர்கள்.. இவர்கள் நோக்கம் பதவி வேண்டும் பதவி இருக்கிற வரை சம்பாதிக்க வேண்டும் அந்த பதவிக்கு ஆபத்துவராமல் .. யாரால் வருமென அறிந்து அவருக்கு சேவகம் செய்ய தயாரானவர்கள்.. அதனால் தான் பாஜகவிற்கு அனுசரணையாக நடந்துக்கொள்கிறார்கள்.. .. மக்களை சந்திக்க பயம் எதை சொல்லி தேர்தலை சந்திப்பது அடிப்படையில் இங்கே பாஜகவை வேரறுத்துவிடுவார்கள்.. குறிப்பாக பார்ப்பனர் எதிர்ப்பை கொண்டே தமிழகத்தில் அரசியல் களம் அமைக்கபட்டிருக்கிறது என்னசெய்தாலும் கட்டிவச்ச காசை திரும்ப கிடைக்காதென்பதைவிட நோட்டாவை தாண்ட முடியாதென தெரிந்து கிட்டிய வாய்ப்பை செமயாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.. இங்கே யாருக்கும் வெட்கமில்லை .. சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையைப்போல ..வராத வந்த மாமணியைப்போல .. நல்வாய்ப்பாய் வாய்த்த அடிமைகளை வைத்து நினைத்ததை சாதித்துக்கொள்கிறார்கள்.. மோடி ஆட்சிக்கு வந்த போது எழுதியதுதான். இவர்கள் இந்த ஐந்து வருடத்திற்குள் தங்கள் ஆட்களை உயர்பதவிகளில் நிரப்பிவிடுவார்கள் .. அதை சுத்தம் செய்ய ஐம்பதாண்டு தேவைப்படும்.. என்ன நினைக்கிறார்களோ எந்த திட்டமோ எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நடந்தேறுகிறது..இந்த பொம்மைகளை வைத்து கூத்து காட்டுகிறார்கள் .. எட்டுவழிச்சாலைக்கு கருத்து கேட்பே நடத்தாமல் மரங்கள் வெட்டபடுவதும் விளைநிலங்களை முள்வேலி இடுவதும் .. எந்த அறிவிப்புமில்லாமல் சத்தமில்லாமல் மாவட்ட ஆட்சியர் அனுமதியென நடந்தேறுவதாக ஊடகங்கள் சொல்கின்றன.. நீட் தேர்வு காவிரி என எல்லாம் கைவிரிக்கபடும் அவலம் கேட்போரை பாதுகாப்பென்ற பெயரில் அச்சுறுத்தல்.. படுகிழவியை கூட கைது செய்து தங்கள் எஜமானிய விசுவாசத்தை காட்டும் அடிமைக்கூட்டம்.. .. அடிமைபட்டு கிடப்போரிடமும் சிலநேரம் உணர்வு வெளிப்படும்.. சற்றென்று வெளிப்பட்டு அவரை அறியாமலேயே உண்மையை உரக்க சொல்லி தொலைக்கும்.. என்ன இருந்தாலும் அவன் மூலத்தில் கொஞ்சமேனும் மானமுள்ள தமிழின் மரபு இருக்கும் ..அதனால் இடையிடையே உளறல் என்ற பெயரில் உண்மையை கக்குகிறார்கள்.. பணத்தாசை பதவிஆசை பித்தனாக்கி வைத்திருக்கிறது அறிவு விழிக்கும் போது .. இந்த அடிமைக்கூட்டம் முகவரியில்லாமல் போகும்.. .. பாஜகவிற்கு வாய்த்த அடிமைகள் .. .. ஆலஞ்சியார்

Monday, June 18, 2018

ஜெயலலிதா எனும் குற்றவாளி

ஜெயலலிதா மணிமண்டபம் அமைப்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு விரும்பமில்லை ஆனால் சட்டப்படி தடுக்கமுடியாது இந்திரா பானர்ஜி.. .. ஆனால் சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்க வழக்கில் இதே சட்டப்படி தீர்ப்பை காணோமே .. அதில் நிறைய மனசாட்சி எழுந்து நின்றதே .. உயர்நீதிமன்ற நீதிபதிகளில் நிறைய சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை தந்தவராக அறியபடுகிறார் அவரின் தீர்ப்புகள் அதிக காலதாமதமாவதும் நெருடல்களை தருவதும் ஒருவித தடுமாற்றத்தை தருவதுமாக இருப்பதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியில் பேச்சு உலவுகிறது. .. தீர்ப்பில் இயற்கைக்கு முரணான தர்மம் மீறல் இருக்கிறதே.. தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்றான பின் அவரை புகழ்வதும் அரசே கொண்டாடுவதும் சரியா என்ற கேள்வி எழவே இல்லையா .. மக்கள் வரிப்பணத்தில் குற்றவாளிக்கு மணிமண்டபமென்பது அனைத்தும் சட்டம்/ நியாயம் ..மீறிய செயலென புரியவில்லையா .. இது ஒரு முன்மாதிரியாக கொண்டு வரும் காலங்களில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை அரசு கொண்டாட ஏதுவாக அமையுமென்பது புரியவில்லையா.. .. ஏற்கனவே டான்சி வழக்கில் மனசாட்சிப்படி நடந்துக்கொள்ளுங்களென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது .. ஜெயலலிதாவிற்கு நீதிமன்றங்கள் எந்தளவிற்கு சலுகை வழங்கியதென்பதை நாடறியும் .. விசாரணை நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டவுடன் விரைந்து உயர்நீதிமன்றம் பிணை வழக்கை எடுத்துக்கொண்டதும் .. வரலாற்றில் அதிவேகமாக உச்சநீதிமன்றம் பிணை வழங்கியதும்.. மூன்று மாதத்திற்குள் விசாரித்து முடிக்கவேண்டுமென உத்தரவிட்டதும் ..அதுவரை நிகழாத ஒன்று.. உயர்நீதிமன்றத்தில் வெளிப்படையான கணக்குப்பிழையை /அநீதியை தெரிந்திருந்தும் உச்சநீதிமன்றம் விசாரித்து காலம்தாழ்த்தி .. ஜெயலலிதா மரணிக்கிறவரை காத்திருந்து சசிகலா முதல்வர் வேட்பாளரென்றவுடன் நீதி வழங்கியதும் இந்திய நீதித்துறை வரலாற்றில் மறக்கமுடியாத பக்கங்களாயின .. ஏன் காலகாதமென நீதிமன்றத்தை யாரும் கேட்க முடியாது கூடாது தாமதிக்கிற நீதி அநீதியின் துவக்கமென அறிந்திருந்தும் நீதியரசர்கள் மௌனம் காப்பது இந்திய நீதிகள் மீதான பார்வை பரிகசிக்கும் நிலைக்காளாகிறது நீதிகள் இயற்க்கைக்கு முரணாக ..அல்லது ஒருவித சாயலோடு/சார்போடிருப்பது ஒருவகையில் வெட்ககேடானது .. ஜெயலலிதாவிற்கு காட்டும் பரிவை அதே அளவுகோலை மற்றவர்களுக்கு காட்ட மறுப்பதும் கூட அக்கிரமசெயல்.. நீதிபதி கர்ணன் வெளிப்படையாகவே இந்திய நீதிமன்றங்களில் புரையோடி போயிருக்கும் ஊழலை சொன்னதும் .. உச்சநீதிமன்ற நீதிபதிகளே மக்களிடத்தில் நீதிமன்றத்தில் நடக்கும் விரும்பதகாத செயல்களை சொன்னதும் மறு சீரமைப்பு செய்யவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.. தொடர்ந்து வழங்கபடும் தீர்ப்புகளில் மீதான மக்களின் நம்பிக்கை பொய்த்து போகிறது.. ஒரு வழக்கில் இரு தீர்ப்புகள் ஒன்று சட்டத்தை தெளிவாக சொல்லியும் இன்னொன்று மழுப்பியும் வழங்குகிற சூழல்.. .. ஜெயலலிதா எனும் நபர் மீது நமக்கு கோபமில்லை மாறாக ஜெயலலிதாவிற்காக ..தர்மங்கள் மீறப்படுவதும் .. சட்டம் வளைத்தொடிக்கபடுவதும் .. நீதியை பெற காலதாமதமாவதும்.. நீதியில் சலுகையை தருவதும் நியாய தர்ம சட்டபடி ஏற்கமுடியாததாகிறது.. எல்லோருக்கும் ஒரே நீதி .. பாகுபாடில்லாத சட்டத்தின் நீதி.. எங்கும் எவரும் உயர்ந்தோரில்லை சட்டம் முன் சமம் என்கிற நிலை வரவேண்டும்.. அதுவரை .. அண்ணா சொன்னதைப்போல இருட்டறையாக தான் இருக்கும்... .. ஆலஞ்சியார்

ஜெயலலிதா எனும் குற்றவாளி..

ஜெயலலிதா மணிமண்டபம் அமைப்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு விரும்பமில்லை ஆனால் சட்டப்படி தடுக்கமுடியாது இந்திரா பானர்ஜி.. .. ஆனால் சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்க வழக்கில் இதே சட்டப்படி தீர்ப்பை காணோமே .. அதில் நிறைய மனசாட்சி எழுந்து நின்றதே .. உயர்நீதிமன்ற நீதிபதிகளில் நிறைய சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை தந்தவராக அறியபடுகிறார் அவரின் தீர்ப்புகள் அதிக காலதாமதமாவதும் நெருடல்களை தருவதும் ஒருவித தடுமாற்றத்தை தருவதுமாக இருப்பதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியில் பேச்சு உலவுகிறது. .. தீர்ப்பில் இயற்கைக்கு முரணான தர்மம் மீறல் இருக்கிறதே.. தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்றான பின் அவரை புகழ்வதும் அரசே கொண்டாடுவதும் சரியா என்ற கேள்வி எழவே இல்லையா .. மக்கள் வரிப்பணத்தில் குற்றவாளிக்கு மணிமண்டபமென்பது அனைத்தும் சட்டம்/ நியாயம் ..மீறிய செயலென புரியவில்லையா .. இது ஒரு முன்மாதிரியாக கொண்டு வரும் காலங்களில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை அரசு கொண்டாட ஏதுவாக அமையுமென்பது புரியவில்லையா.. .. ஏற்கனவே டான்சி வழக்கில் மனசாட்சிப்படி நடந்துக்கொள்ளுங்களென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது .. ஜெயலலிதாவிற்கு நீதிமன்றங்கள் எந்தளவிற்கு சலுகை வழங்கியதென்பதை நாடறியும் .. விசாரணை நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டவுடன் விரைந்து உயர்நீதிமன்றம் பிணை வழக்கை எடுத்துக்கொண்டதும் .. வரலாற்றில் அதிவேகமாக உச்சநீதிமன்றம் பிணை வழங்கியதும்.. மூன்று மாதத்திற்குள் விசாரித்து முடிக்கவேண்டுமென உத்தரவிட்டதும் ..அதுவரை நிகழாத ஒன்று.. உயர்நீதிமன்றத்தில் வெளிப்படையான கணக்குப்பிழையை /அநீதியை தெரிந்திருந்தும் உச்சநீதிமன்றம் விசாரித்து காலம்தாழ்த்தி .. ஜெயலலிதா மரணிக்கிறவரை காத்திருந்து சசிகலா முதல்வர் வேட்பாளரென்றவுடன் நீதி வழங்கியதும் இந்திய நீதித்துறை வரலாற்றில் மறக்கமுடியாத பக்கங்களாயின .. ஏன் காலகாதமென நீதிமன்றத்தை யாரும் கேட்க முடியாது கூடாது தாமதிக்கிற நீதி அநீதியின் துவக்கமென அறிந்திருந்தும் நீதியரசர்கள் மௌனம் காப்பது இந்திய நீதிகள் மீதான பார்வை பரிகசிக்கும் நிலைக்காளாகிறது நீதிகள் இயற்க்கைக்கு முரணாக ..அல்லது ஒருவித சாயலோடு/சார்போடிருப்பது ஒருவகையில் வெட்ககேடானது .. ஜெயலலிதாவிற்கு காட்டும் பரிவை அதே அளவுகோலை மற்றவர்களுக்கு காட்ட மறுப்பதும் கூட அக்கிரமசெயல்.. நீதிபதி கர்ணன் வெளிப்படையாகவே இந்திய நீதிமன்றங்களில் புரையோடி போயிருக்கும் ஊழலை சொன்னதும் .. உச்சநீதிமன்ற நீதிபதிகளே மக்களிடத்தில் நீதிமன்றத்தில் நடக்கும் விரும்பதகாத செயல்களை சொன்னதும் மறு சீரமைப்பு செய்யவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.. தொடர்ந்து வழங்கபடும் தீர்ப்புகளில் மீதான மக்களின் நம்பிக்கை பொய்த்து போகிறது.. ஒரு வழக்கில் இரு தீர்ப்புகள் ஒன்று சட்டத்தை தெளிவாக சொல்லியும் இன்னொன்று மழுப்பியும் வழங்குகிற சூழல்.. .. ஜெயலலிதா எனும் நபர் மீது நமக்கு கோபமில்லை மாறாக ஜெயலலிதாவிற்காக ..தர்மங்கள் மீறப்படுவதும் .. சட்டம் வளைத்தொடிக்கபடுவதும் .. நீதியை பெற காலதாமதமாவதும்.. நீதியில் சலுகையை தருவதும் நியாய தர்ம சட்டபடி ஏற்கமுடியாததாகிறது.. எல்லோருக்கும் ஒரே நீதி .. பாகுபாடில்லாத சட்டத்தின் நீதி.. எங்கும் எவரும் உயர்ந்தோரில்லை சட்டம் முன் சமம் என்கிற நிலை வரவேண்டும்.. அதுவரை .. அண்ணா சொன்னதைப்போல இருட்டறையாக தான் இருக்கும்... .. ஆலஞ்சியார்

Sunday, June 17, 2018

அவசர சிகிக்சை

மத்திய அரசை எதிர்பவர்களை நக்சலைட் என முத்திரை குத்துவது சாதாரணமாக நிகழ்கிறது.. டெல்லி முதல்வரை நக்சலைட் என்கிறார் பார்பன அரசியல்தரகர் சு.சுவாமி.. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராடிய மக்களை சமூக விரோதி என்றார்கள்.. மாணவர்களை தேசிய பாதுகாப்பென்ற பெயரில் கைது.. பாசிசத்தை எதிர்ப்போரை மிக கடுமையாக விமர்சிப்பது .. அதுவும் உதிரி கட்சிகளென்றால் கேட்கவே வேண்டாம் .. மிரட்டல் தேசிய பாதுகாப்பு IT ரெய்ட் .. மாட்டுக்கறி தின்பவனிலிருந்து மறுத்து பேசுகிறவன் வரை.. இந்திய தேசத்தில் சமூகவிரோதியாக சித்தரிக்கபடுகிறார்கள்.. சென்னையிலிருந்து ஈரோடுவரை கிராமங்களில் மாவோயிஸ்ட்கள் என்கிறார் ஒரு அரை கிறுக்கன்.. .. அப்பப்பா.. இந்த தேசத்தில் 3% விழுக்காடு தவிர..அல்லது மூன்றுக்கு முட்டுகொடுப்போர் தவிர அனைவருமே சமூகவிரோதிகளாய் தேசவிரோதகளாய் அறிவிக்கபடுவார்கள் போலியிருக்கிறது.. யார் தேச துரோகிகள் .. விடுதலைபோரில் ஆங்கிலேயனிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தவனும் காட்டிகொடுத்து .. கூ.. கொடுத்தவனும் இங்கே தேச தியாகிகளைப்போல கட்டமைக்கபடுகிறார்கள்.. இந்த நாடு மிக ஆபத்தான போக்கில் சென்று கொண்டிருக்கிறது .. எதிர்த்து பேசுகிறவனை அவசரநிலை காலத்தில் கூட இப்படி சித்தரித்ததில்லை.. எழுத்து சுதந்திரம் தணிக்கை செய்யபட்டாலும் எழுத்தும் அதன் தாக்கமும் மக்களிடம் சென்றடைய ஊடகங்கள் தங்கள் கடமைகளிலிருந்து மாறவில்லை.. இப்போது ஊடகங்கள் மிரட்டபடுகின்றன்.. ஊடகவியலாளர்கள் கொலைச் செய்யபடுகிறார்கள்.. முற்போக்கு சிந்தனையாளர்கள் ..கொலைச் செய்யபடுவதும் அதை யாருமே கண்டுக் கொள்ளாமல் நகர்வதும் ..இந்த தேசத்தின் பேராபத்து .. ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிறார்கள்.. அடிமை தேசத்தில் கூட எழுத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் மறுக்கபடவில்லை.. இப்போதெல்லாம் வழக்கு கைது .. சிறையென ஒருவித அராஜகபோக்கை ஆளும் அரசு செயல்படுத்துவது நல்லதில்லை.. .. தமிழகத்தில் தலையாட்டும் அரசும் அதைவைத்து சோலியாடுகிற மத்திய அரசும் தமிழக உரிமைகள் பறிக்கப்படுவதோடு.. தமிழகத்திற்கென்று இருந்த மரியாதை...இன்று பிற மாநிலங்களில் கேலி பேசபடுகிற அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம்.. செய்த வினையை அறுவடை செய்கிறோம்.. செய்யாத குற்றத்திற்காக (2ஜி) திமுகவை மறுத்து குற்றம் நிகழ்த்தி தண்டிக்கபட்டவரை பதவியில் அமர்த்தியதால் இன்று படும்பாடு.. அப்பாடா தாங்கொண்ணா துயரம்த்தில் மக்கள்.. கேடுகெட்டவர்கள் கையில் அதிகாரம்.. அதைவிட தமிழினப் பகைவர்கள் கையில் பொம்மலாட்ட கயிறு .. ஆடும் பொம்மைகளாய் ஆட்சியாளர்கள்.. .. இனியும் காத்திருப்பது.. நேர்மை பேசி நேரத்தை வீணாக்குவது.. சட்டமும் நீதியும் மயக்கநிலையில் என்கிறபோது கொஞ்சம் விசைகூட்டி ஆடவேண்டும்.. எதிரிகளே தீர்மானிக்கிறார்கள் நாம் எதை தேர்வு செய்வதென்பதை.. விரைந்து சரியான நடவடிக்கையை திமுக எடுக்கவேண்டும்.. அது கட்சிக்கு என்றில்லை இயக்கத்திற்கென்றில்லை...ஒட்டுமொத்த நாட்டிற்கே செய்யும் நன்மையாக அமையும்.. .. முள்ளை முள்ளால் எடுப்போம்.. புரையோடிவிட்ட புண்ணை கழும்பு கொண்டு ஆற்றிட முடியாது.. கீறி சீழை வெளியாக்கிடவேண்டும்.. அப்போதுதான் புண் ஆறும்.. இல்லையெனில் சீழ் துளைத்துக்கொண்டே போய் முழுவதுமாக அரித்துவிடும்..பிறகு வெட்டியெறி நேரிடும்.. தேவை அறுவைச் சிகிக்சை..அதுவும் அவரச சிகிக்சை.. .. ஆலஞ்சியார்

Saturday, June 16, 2018

காற்றில் விசம் பரவட்டும்

வந்துவிழும் வார்த்தையில் விசம் தடவி வீசுகிறாயா.. காற்றே அமிலமாய் போனதா.. நச்சு பொருளை சுமந்த உன் வயிறு கக்கி தள்ளிவதெல்லாம் நாற்றடிக்கும் பிணத்தின் வாடை .. சில மணி நேரத்தில் உன்னை புதைக்கவில்லையெனில் எரிக்கவில்லையெனில்.. நாற்றடித்து.. வீங்கி வெடித்து புழுக்காளாய்.. நெளிந்து வெளிவரும் .. நானெனும் திமிர்.. நானே உயர்ந்தவனெனும் நான் ஒரு படி மேலே.. தொடாதே.. தீட்டு. அய்யய்யோ பார்த்தாலே பாவம் நிழல் மீது படலாமா சாணப்பயலே.. தொடாமல் பேசு .. வந்துவிட்டு போனால் ஜலம்கொண்டு கழுவு.. .. என்ன திமிர்.. குளித்தில் குளிக்கிறான்.. ஜலத்தை எதைக்கொண்டு கழுவுவது.. அடிஉதை.. அம்மணமாக்கு ஆதிக்க திமிர் எங்கிருந்துவந்தது.. உன்னையும் சேர்த்துதான் ஒதுக்கிவைத்திருந்தானே ஒசந்தசாதி அவனிடமல்லவா உன் கோபம் வந்து வாள்வீசிக்கிறவேண்டும்.. உன்னிலும் தாழ்ந்தவனென்றவனென உன்னிலும் உயர்ந்தவன் நானென சொல்பவன் சொன்னதை..நம்பி.. தாக்குகிறாய் அவன் தாழ்ந்தவன் உன் வர்ணப்படி.. ஆனால் நீயோ.. தாழ்ச்சில் பிறந்தவன் தவறாய் பிறந்தவன் என்று அவன் சொன்னபோது எங்கே போனது உன் வீரம்.. .. செத்தால் நாறும் பிணமே.. நீ..செத்துவிழும் போது உன்னை எரிக்கவோ புதைக்கவோ யாரும் இங்கே வரவில்லையெனில் வெடித்து சிதறி.. நாறி நரங்கொழிந்து போவாய்.. .. யார் நீ.. என்னை தாழ்த்தி சொல்ல என என்றேனும் கேட்டதுண்டா.. பார்பு செய்து பிழைக்க வந்தவன் பண்டாரமாய் திரிந்தவன் மாமன் மச்சானென பழகி திரிந்தவனை பகைமூட்டி பசியாறுகிறான்.. கொலை பசி .. அவனுக்கு இன்னும் தீர்ந்தபாடில்லை நம் முன் கைக்கட்டி நின்றவன் நம்மையே ஆளும் தகுதி பெற்றதெப்படி.. நம் கீழ் உத்தியோகம் பார்த்தவன் கீழ் நாமா.. ஜோலி பார்ப்பது.. எடு வாளை .. சூழ்ச்சியெனும் வாளை அறு ..அவன் உரிமைகளை மெல்ல தளர்ந்து இறுகபிடித்திருந்த கைகள் நழுவி ஒன்றின் பின் ஒன்றாய் பறிபோகும்.. இது அறியாமல்.. தன்னிலும் எளியோனை.. தரமென்று பிரித்த தாழ்ந்தோனை கட்டிவைத்து அடிக்கிறார்.. கடைசியில்.. நூலெனும் சிறு கயிறு உன்னை வெளுக்கும்.. அப்போதறிவாய்.. .. ஏய் பிணமே.. நாற்றமடிக்காமல் இருக்க காற்று மாசுபடாமல் இருக்க மண்ணுக்குள் புதைந்து போ.. இது மனிதர்கள் வாழுமிடம்.. இங்கே .. பிணங்களுக்கு நடமாட அனுமதியில்லை.. நகரு.. நல்ல காற்று வரட்டும் மனிதனாய் ..மண்ணில் விழுந்தவன்.. நாற்றடிக்கும் நடைப்பிணமாய் மற்றவரை கடித்து குதறும் கொடூர பற்களோடு அலையாதே.. .. மண்...பொது காற்று பொது நீர் பொது.. இதில் எங்கிருந்து வந்தது தீட்டு.. இனி யாரேனும் சொல்லும் போது கொடும் வாளை நீட்டு.. அவன் சங்கறுத்து காட்டு.. .. பொறுத்தது போதும்.. அடங்க மறு அத்துமீறு திருப்பி அடி.. வலி தீரும் வரை அடி.. இனி எவனும் கை நீட்டி பேச கூடாதென சொல்லி அடி.. அடங்கியது போதும்.. அறுத்துகொண்டு வா.. இனி.. பகை நேர்நிற்கிறது.. சங்கறுப்போம்.. .. ஆலஞ்சியார்

Friday, June 15, 2018

திராவிடம்..

சேவல்கள் எண்ணிக்கொள்ளுமாம் தாங்கள் கூவுவதால் தான் பொழுது விடிகிறதென்று.. சில அரைகுறைகள் திராவிடத்தை மேம்போக்காக அறிந்துக்கொண்டு.. பெரியாரை கலைஞரை விமர்சிக்கின்றன.. எதற்கெடுத்தாலும் முன்பே இந்த புரட்சி நடந்திருக்கிறது.. கலைஞர் வந்து தான் செய்தாரென்பதை ஏற்கமுடியாது.. பெரியார் இல்லாவிட்டாலும் படித்திருப்போம்.. இன்றைக்கும் சாதி ஒழிந்துவிட்டதா .. சாதியை வளர்ப்பதே திராவிடம் தான் என்றெல்லாம் பேசுகிறார்கள்... பேசுங்கள் எதையும் அறிந்துக்கொண்டு அறிந்ததை ஆய்ந்து உண்மைதானா என விளங்கி பின் விமர்சனம் செய்யுங்கள்.. .. சாதியை பார்த்துதானே தேர்தலில் ஆளை நிறுத்துகிறார்கள் என கேட்போருக்கு மறுக்கவில்லை.. அந்தந்த பகுதியில் வாழும் சமுதாய மக்களின் பிரதிநிதியாய் அதே சமுதாயத்தை சேர்ந்தவரை நிறுத்துவதென்பது இயல்பான ஒன்று ‍.அதில் கூட சில இடங்களில் பிற சமூகத்தவரை நிறுத்தியிருக்கிறது.. ஆனால் தேர்தல் அரசியலில் வெற்றி முக்கியம் என்பதும் அதே வேளை கொள்கை சார்ந்தவர்களை நிறுத்தவேண்டியதும் அவசியம்.. குறைகளே இல்லையா என கேட்டால் உண்டு ஆனாலும் பிற கட்சிகளை விட திமுக மிக நேர்மையாக நடந்துவந்திருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.. .. இனம் மொழி கலாச்சாரத்திற்கு திமுக செய்ததைப்போல வேறு எந்த கட்சியும் செய்ததில்லை காரணம் அடிப்படையிலிருந்து மாறாத கொள்கைப்பிடிப்பே காரணம்.. தமிழ்மொழியை செம்மொழியாக்கியதொன்றே போதும்.. வள்ளுவனுக்கு சிலை வடித்து வானுயர புகழ் சேர்த்தது .. தமிழ்ப்புத்தாண்டை தை மாதமென்ற சட்டமேற்றியது ..பின் வந்த ஆரியமங்கை தான் சார்ந்த இனத்தின் கலாச்சார திணிப்பை மீண்டும் கொண்டுவந்தார்.. தமிழனின் பண்பாட்டை கட்டிகாப்பதில் எப்போதும் திமுக பின்வாங்கியதில்லை.. .. எந்தவொரு திட்டமானாலும் உடனே சில அறிவுஜீவி..? கள் நாங்கள் ஏற்கனவே சிந்தித்தது நாங்கள் சொல்லிதான் செய்தது திமுக என உளற தொடங்கியிருக்கிறார்கள் ஏன் அதற்கு முன் இருந்த ராஜாஜி பக்தவச்சலம் போன்றவர்களின் காங்கிரஸ் ஆட்சியில் செய்திருக்கவேண்டியதுதானே.. அல்லது மகோரா ‌மற்றும் ஜெயா ஆட்சியில் கேட்டு பெற்றிருக்கவேண்டியதுதானே என்றால் பதில் இல்லை .. பதில் வராது.. ஏனெனில் இவர்களையெல்லாம் அருகில் அண்டவிடுவதே இல்லை அல்லது இவர்களை ஒரு பொருட்டாக மதித்ததில்லை.. அது எந்த சாதி மதத்தினராக இருந்தாலும் கலைஞரை தவிர மற்றவர்கள் நடத்திய விதம் அப்படிதான்..காரணம் சிநிதிக்கும் திறனற்ற எடுப்பார்கைப்பிள்ளையை போல அடுத்தவரின் நிழலில் அறிவில் குளிர்காய்கிறவர்களாக இருந்தார்கள் .. அல்லது அவர்களிடம் கேட்க ஒருவித பயமிருந்தது.. ஆனால் கலைஞர் எல்லோரையும் கடுமையாக எதிர்க்கிறவர்களின் கருத்தையும் உள்வாங்கியகிறவராக அவர்களின் கருத்தை கோரிக்கைகளை ஏற்கிறவராக அதில் நியாமிருந்தால் நடைமுறைபடுத்த தயங்காதவராக இருந்தார்.. இந்திய வரலாற்றில் உச்சபட்ச ஜனநாயகவாதியாக திகழ்ந்தவர் கலைஞர் மட்டும்தான் .. .. பெரியார் இல்லையென்றாலும் படித்திருப்போம் .. சரி.. ஆராயிரம் பள்ளிகளை மூடினாரே மூதறிஞர்..? என நம்பபட்ட ராஜாஜி அப்போது அவருக்கெதிராக ஏன் யாரும் அசையவில்லை .. குலக்கல்வி கொண்டுவந்து அவனவன் சாதி தொழிலை செய்யுங்களென சொன்னபோது என்ன பிடிங்கி கொண்டிருந்தீர்கள் .. காமராஜரை நிறுத்தி ராஜாஜியை புறமுதுகிட்டு ஓட செய்தது பெரியார் தானே .. ஆராயிரம் பள்ளியை மூடிவிட்டார் நீயாவது திறந்து எம்ம பிள்ளைகள் படிக்க ஏற்பாடு செய் என்ற கோரிக்கைதானே .. ஊரெங்கும் துவக்கப்பள்ளி வர காரணமாக இருந்தது.. பள்ளி திறந்தும் யாரும் வர மாட்டேங்கிறாங்கய்யா என்ற போது மதிய சோறு போட்டாவது பசங்களை படிக்க வைத்தது திராவிடம்தானே.. மதிய உணவிற்கு போதிய நிதி ஆதாரம் இல்லையென்ற போது பணக்காரர்கள் செல்வந்தர்கள் ..என கையேந்தி.. கடைசியில் விவசாயிகளிடம்.. முதல் மரைக்காய சாமிக்கும் இரண்டாவது மரைக்காய ஊர்கோவிலுக்கும் தரிங்க மூணாவது மரைக்காய எனக்கு தாங்க பிள்ளைகளுக்கு சோறு போடுறேன் என்றாரே .. இதற்கெல்லாம் மூலகாரணமாக ராஜாஜியை வீழித்தி காமராஜரை கொண்டுவந்து குழந்தைகள் படிககணுமென்ற பெரியாரை .. இவர் இல்லாவிட்டாலும் படிச்சிருப்போமென்பது எவ்வளவு பெரிய கயமைத்தனம்.. பெரியாரின் வழிவந்த கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதானே நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்தி..படிப்படியாக உயர்நிலை மேல்நிலையென கிராம்தோறும் கொண்டு சேர்த்தார் ..மாவட்டம் தோறும் கலைக்கல்லூரி .. தொழில்நுட்ப கல்லூரியென ..செய்து இந்தியாவிலேயே மாவட்டம் தோறும் மருத்துவக்கல்லூரியை நிறுவியது இந்த பெரியாரின் நேரடி சீடர் கலைஞர் தானே.. பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மகளிர் கல்லூரி மாவட்டம்தோறும்.. ஏன் முதல்பட்டதாரிக்கு கல்விக்கட்டணம் இல்லை. அடுக்கிகொண்டு போகலாம்.. கல்வியில் புரட்சியை செய்தது திராவிடம்தான்.. .. இவையெல்லாவற்றையும் அனுபவித்து கொண்டே என்ன செய்தது திராவிடம் என்பவர்களை எப்படி அழைப்பது ஈத்தரபயலுகளா.. .. ஆலஞ்சியார்

Thursday, June 14, 2018

கலைஞரெனும்..ஆலம்

ஜெய் பீம் தோழியின் வீடியோ பார்த்திருப்பீர். அதீமேதாவித்தனமாக எண்ணி கலைஞர் மீது சேற்றை இறைக்கபார்க்கிறார் அதற்கு இந்தமுறை சத்தியவாணிமுத்துவின் அம்பேத்கர் கல்லூரி தொடர்பான விடயங்கள் கை கொடுத்திருக்கிறது.. முதலில் சத்தியவாணி முத்து என்ன செய்தாரென்று அறிந்திருக்கவில்லை.. சட்டகல்லூரி ஒன்று அமைக்கவேண்டுமென்ற நிலைப்பாட்டை அமைச்சரவை எடுக்கிறது அப்போது அமைச்சராக இருந்த சத்தியவாணிமுத்து அவர்கள் தன் தொகுதியான பெரம்பூருக்கு வேண்டுமென்கிறார் கலைஞரும் அதை அமோதித்து முன் தொகை செலுத்தவேண்டுமென்ற சரத்துப்படி சிறிய தொகையை வசூலித்து செலுத்துங்களென அந்த பொறுப்பை சத்தியவாணிமுத்துவிடமே,தருகிறார் முன்பணமாக ₹5000 த்தை ஏ எல் சீனிவாசனிடம் பெற்று தந்தார்.. அதை தான் சத்தியவாணி முயறிசியில் வந்ததை கருணாநிதி சொந்தம் கொண்டாடுகிறார் என சகோதரி சொல்லியிருக்கிறார்.. ஒரு மந்திரிசபையில் சக மந்திரியின் கோரிக்கையை ஏற்று நடைமுறைபடுத்துவது மிக பெரிய ஜனநாயகம்.. எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் எல்லாம் இதெல்லாம் பார்க்கவே முடியாது.. மற்றொரு விடயத்தை மறைத்திருக்கிறார் புத்தக ஆசிரியர் .. முதலில் போதிய பணம் வசூலாகவில்லை அன்றைக்கு முரசோலியில் கலைஞர் எழுதிய கடிதம் மிக முக்கியம் வாய்ந்தது ₹5 லட்சம் சேருவதற்கு பெரும் துணையானது.. ஒரு ஆய்வென்று வருகிறபோது எல்லா விடயங்களும் ஆய்விற்கு உட்படுத்தவேண்டும்.. சத்தியவாணி அவர்கள் கட்சியில் மிகப்பெரிய செல்வாக்கோடு இருந்தவர் போல கட்டமைக்கிறார்.. அது குறித்து அவரின் கட்சி செயல்பாடுகள் குறித்தும் முடிவெடுக்கும் அதிகார மையத்தில் இருநிததைப்போல எண்ணி கொண்டு .. அல்லது மக்களின் செல்வாக்குடையவர் போல ஒரு பிம்பம் தோற்றுவைக்கபடுகிறது.. இது நாவலர் விடயத்திலிருந்தே தொடங்கி பார்பனர்கள் பரப்பி வரும் சூழ்ச்சிமிகு தந்திரம்... .. இவர்கள் நோக்கம் இதுதான் .. கலைஞரின் குறிப்பாக திமுகவின் வெற்றியை தடுக்க வேண்டும் அதற்கு எந்தந்த வழிகள் உண்டோ அதையெல்லாம் பயன்படுத்துவார்கள் இந்த பாசிசவாதிகள்.. விசிகவின் வளர்ச்சியை ஜெய்பீம் காரர்கள் விரும்பவில்லை என்பதும் இவர்களின் செயலில் தெரிகிறது.. சரி .. சத்தியவாணிமுத்துவை தூக்கி பிடிப்பதாக சொல்லி ஏதோ கருணாநிதி துரோகம் இழைத்ததைப்போல இவர்கள் சொல்கிறார்கள் .. உண்மையில் அண்ணா மறைவிற்கு பிறகு நாவலரா கலைஞரா என்று வந்தபோது.. கலைஞரை மதியழகன் முன்மொழிய.. வழிமொழிந்தவர் சத்தியவாணிமுத்து... இவர்கள் நோக்கம் கலைஞர் கொண்டுவந்த திட்டங்களை .. அமைச்சரவை சகாக்களோடு கலந்தாலோசித்து தான் நடைமுறை படுத்துவார்.. எப்போதுமே எனது ஆட்சியென்ற எனது திட்டமென்றோ அகந்தையோடு சொல்லிக் கொண்டதில்லை.. கலைஞரை கீழமைபடுத்துவதாக எண்ணி இவர்கள் தாங்கள் முன்னெடுக்கும் நபர்களை அசிங்கபடுத்துகிறார்கள்.. சரி இதுவரை தாழ்த்துபட்டவர்களுக்காக இவர்கள் செய்தது என்ன என்றால் பதிலில்லை.. .. நாவலர் .. தனித்துநின்று மயிலாப்பூரில் எஸ்விசேகரைவிட குறைவாக வாக்கு வாங்கியது தெரியுமா.. எதுவும் எங்கே இருக்கிறது யாரோடு இருக்கிறார்கள் என்பதில் தான் சிறப்பு இருக்கிறது.. கலைஞரை தரம் குறைந்து விமர்சிப்பதாக எண்ணி திமுகவின் வெற்றியை தடுக்க பாசிசத்தின் கைகூலிகளாய் நிறைய பேர் வந்துகொண்டே இருப்பார்கள்.. அதற்கு நிறைய தரவுகளை கட்டி சமைப்பார்கள் ஆழ்ந்தறிந்தால் அதன் உண்மை விளங்கும் நுனிப்புல் மேய்ந்து .. சத்தியவாணிமுத்துவிற்கு கலைஞர் துரோகம் செய்துவிட்டதாக கூப்பாடு போடுவோருக்கு 2010 ல் சத்தியவாணி வீட்டு திருமணம் கலைஞர் தலைமையில் தான் நடந்தது..என்பது தெரியுமா.. கலைஞர் தலித் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லையென்ற கூப்பாடு போடுவோர் சரியாக கலைஞரை படிக்கவில்லை என்றே பொருள்.. .. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்-வேண்டாத விமர்சனங்களை மறப்போம் என்பார் கலைஞர்.. ஆம்.. இவர்களால் திமுகவின் வெற்றியையோ அல்லது வளர்ச்சியையோ தடைபோட முடியாது .. .. ஆலம் விழுதுகள் ஆயிரமுண்டு விழாது தாங்கி நிற்கும்.. ஆனாலும் வேராக கலைஞர் நின்றார்.. நிற்பார்.. .. ஆலஞ்சியார்

Wednesday, June 13, 2018

இநிதியாவின் பிரதமர்..?

நான்கு ஆண்டுகளில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருக்கிறார்.. மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர்.. .. இது குறித்து பாஜக விளக்கம் அளிக்கவேண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் விடுதலை இந்தியாவில் நாடாளுமன்றத்தை கண்டு அஞ்சுகிற 56 இன்ச் பிரதமர் இவர்தான்.. நேருவின் ஆட்சியின் போது எதிர்கட்சிகளின் கேள்வி நேரத்தில் அவை இருப்பதை வழக்கமாக்கி கொணேடிருந்தார் .. அண்ணா காயிதெமில்லத் போன்றவர்கள் பேசும் போது அவையில் இருப்பதின் அவசியம் உணர்ந்திருந்தார்.. இந்தியை ஆட்சிமொழியாக்கும் மசோதாவை எதிர்த்து பேசிய கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்களை இடைமறித்து.. நீங்களும் ஏன் எதிர்க்கிறீர்கள் என்ற போது ஆட்சிமொழியாக இருக்கும் தகுதி இந்திமொழிக்கில்லையென்றும் அதற்கான தகுதி தமிழுக்கு மட்டுமே உள்ளதென்றவர்.. சரி சமமான வாக்குகள் பெற்று தோற்கும் நிலையில் சபாநாயகர் தன் வாக்கை பயன்படுத்தியதால் இன்று இந்தி ஆட்சிமொழி.. ஏன் .. பின்வந்த எந்த பிரதமரும் லால்பகதூர், இந்திரா, மொராஜி ஏன் ராஜீவ் காந்திவரை யாரும் ஓடியொளிந்ததில்லை.. .. எதிரிக்கட்சி என்ற தகுதியை வழங்க மறுத்து யதோச்சிய அதிகாரம் தமக்கிருப்பதாய் நினைத்து எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பயந்து .. விவாதத்தில் பங்கேற்காத ஒரே பிரதமர்.. நிறைய கருத்துவேற்றுமை இருந்தாலும் அத்வானி மிக சிறந்த நாடாளுமன்றவாதியாக திகழ்ந்தவர்.. ஒரு முறை முரசொலி மாறன் எழுப்பிய வினாவிற்கு .. விடைதேடி நாடாளுமன்ற நூலகத்தில் காலையிலிருந்து மதியம் வரை குறிப்பெடுத்து கொண்டிருந்தார் அப்போது அவர் துணைப் பிரதமர்.. அந்தளவிற்கு நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கையும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த சிறந்த ஜனநாயகவாதி.. அடல்பிகாரி வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் கலந்துக்கொண்டு மறுத்தும் ஏற்றும் திருத்தங்களை கொண்டுவர ஒத்துழைத்திருக்கிறார்.. சில நேரம் தட்டிகழித்தாலும் முக்கியமான நேரங்களில் சபையில் இருந்திருக்கிறார் .. .. மோடி நாடு தொடர்ந்து பல்வேறு துறைகளில் பின்னோக்கி செல்லும் போதும் .. பொருளாதார மந்தநிலை குறித்து பேச உறுப்பினர்கள் ஆர்வம் காட்டும் போதும்.. பணமதிப்பிழப்பின் பாதிப்பை நாடு உணர்ந்து அதன் தாக்கத்தை அனுபவிக்கும் போதும்.. தொடர்ந்து தலித்கள் சிறுபான்மையினர் தாக்குதலுக்குள்ளாகும் .. போதும்.. மாட்டின் பெயரைச்சொல்லி மனிதனை கொல்லும் போதும் நாட்டின் நடக்கும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களாகட்டும் எதைப்பற்றியும் பேச தயாரில்லை.. ஊர் சுற்றி வரவே நேரம் போதவில்லை இதில் மக்கள் பிரதிநிதிகளின் கேள்விக்கு பதிலளிக்க ஏது நேரம்.. .. பத்திரிக்கையாளர்களை சந்திக்க பயப்படுகிற பிரதமர்.. தொடர்ந்து இரண்டு கேள்வி கேட்டால் நா வறண்டு போகும்.. ஆனால் பொதுவெளியில் .. பொது மேடையில் யாரும் எதுவும் எதிர்கேள்வி கேட்க மாட்டார்களென்றால் 56 இன்ச் மார்பு புடைக்க கைகளை உயர்த்தி உரத்த குரலில் வசனம் பேச வரும்.. ஆளில்லாத மைதானத்தில் அடிச்சு ஆடுவார்.. அரசு இயல் தெரியாத .. மதவெறியின் ருத்ரதாண்டவத்தில் தலைகளை எண்ணும் தலையாரி வேசம் கட்டியதே தகுதியென்று நம் மீது திணிக்கபட்டவர் வேறென்ன தெரியும் .. ஜனநாயக மாண்புகளை பற்றியோ .. எதிர்கட்சிகளே சிறந்த ஆட்சியை வழிநடத்தும் தேரின் சக்கரம் என்றோ நாடாளுமன்றமே இந்திய அரசியலமைப்பின் அச்சாணி என்றோ அறிந்திராதவர்.. இவர் அவைக்கு வந்தால்தான் வியந்து பேசவேண்டும்.. .. #இந்திய_ஜனநாயகத்தின்_சாபகேடு… .. ஆலஞ்சியார்

Tuesday, June 12, 2018

பெரியார்

பெரியாரை ஏற்றுக்கொள்கிறோம்.. நீங்கள் ஜெய்பீம் என சொல்ல தயாரா என்கிறார் இளம் இயக்குனர் ரஞ்சித்.. .. ஏன் அண்ணலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.. அண்ணல் அம்பேத்கர் மீது மரியாதை உண்டு .. ஒடுக்கபட்ட சமூகத்திலிருந்து உயர்ந்த பதவிகளை தன் திறமை மூலம் பெற்றவர்.. தான் பிறந்த மதத்தின் இழிவுகளை போக்க தன் சார்ந்த மக்களை புத்தமதம் தழுவ செய்தால் புனிதராகிவிடலாமென்ற நினைத்து மாறியவர் .. அதிலிருந்தே தான் தாழ்ந்தவர் என்ற எண்ணம் கொண்டிருந்தாரென அறிய முடிகிறது.. தான் சார்ந்த சமூக பின்னணியில் இருந்து மிகப்பெரிய மாற்றத்தை வடமாநிலங்களில் குறிப்பாக மராட்டியத்தில் அவரால் கொண்டுவர முடியவில்லையே.. வெகுமக்களை ஒருங்கிணைக்காத ..அல்லது வெகுமக்கள் ஆதரவில்லாத எதுவும் எந்த மாற்றத்தையும் தர முடியாது.. ஆனாலும் அம்பேத்கர் வாழ்க என்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.. ஆனால் பெரியாரை நாங்கள் ஏற்கவேண்டுமெனில் ஜெய்பீம் என அழைக்க வேண்டுமென்ற நிபந்தனை நிச்சயமாக தலித் மக்களை வெகு தூரத்தில் வைக்கவே பயன்படும்.. இப்போது மெச்சபட்டிருக்கிற நிலை பெரியாரின் கைத்தடி தந்தது என்பதை உணரவேண்டும்.. தோளில் துண்டை போட கூட அனுமதிக்காத சமூக சூழலை மாற்றி .. பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தது திராவிடம்.. வாடா முனியா என்றழைத்த காலத்தில் மேடை போட்டு முனியாண்டி அவர்களே என விளித்து பழக சொன்னது திராவிடம்.. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றமில்லாமல் நாடும்,இனமும் முன்னேறாதென்ற நம்பிக்கையில் உரத்து நின்றது பெரியாரும் திராவிடமும் தான்.. .. தெளிவு போதாமை அல்லது சிறிய வெற்றியின் மமதை இவ்வாறு பேச வைத்திருக்கிறது.. இதே இப்போது இந்த துணிவோடு தமிழகத்தில் கதைக்க முடிகிறதே ..அதற்கு காரணம் பெரியார் திராவிடம்.. இதே போல் மகாராஷ்ட்ராவில் பேசிவிட்டு நடமாட முடியாது .. அந்தளவிற்கு மிக கொடூரமான மனபோக்கை தலித்கள் மீது கொண்டிருக்கிறார்கள்.. குடியரசு தலைவரையே வெளியே நிறுத்துகிற சூழல்.. இங்கே 52 லேயே பரமேஸ்வரனை அறநிலையத்துறை அமைச்சராக்கியவர் பெரியார் .. திலகர் உடலை தொட கூட காந்தியை அனுமதிக்காத வரலாறெல்லாம் படியுங்கள் ரஞ்சித்.. இரண்டு சினிமாவில் தலித்திய சிந்தனையை படமாக்கிவிட்டால் எல்லாம் அறிந்தவரென்றோ போராளியென்றோ நினைத்துக்கொண்டு களம் இறங்குகிறீர் ஒடுக்கபட்ட மக்களுக்காக கால்நூற்றாண்டுக்கு மேலாக பாடுபடும் போராடும் தோழர்.திருமாவிடம் கேட்டுபாருங்கள் பெரியார் யாரென்று தெரியும் பெரியாரை முன்னெடுக்காவிடில் பெரியாருக்கல்ல இழுக்கு .. பெரியாரை முதன்மைப்படுத்த இவர் வேண்டுமென்பதில்லை.. தமிழகத்தில் பெரியாரை திராவிடத்தை கலைஞரை தாக்கினால் பெரிய ஆள் ஆகிவிடலாமென்ற பழைய வறட்டு சிந்தனையின் விளைந்தது தான் இந்த பெரியாரை ஏற்கிறோம் ஜெய்பீம் என சொல்ல தயாரா.. என கேட்பது.. .. பாசிசம் அஞ்சும் ஓரு பெயருண்டு.. இந்த பெயரை கேட்டாலே பாசிசத்தின் குலைநடுங்கும் ..அந்த பெயர் பெரியார்.. ஆனால் ஜெய்பீம் என சொல்லி பாருங்கள் கடித்து குதறிவைக்கும் .. அண்ணல் அம்பேத்கர் அறிவாளி என்பதில் மாற்றுகருத்தே இல்லை ஆனால் .. நல்ல அரசியல் தலைவராகவோ.. தொலைநோக்கு சிந்தனையாளராகவோ.. மக்களின் நாடிதுடிப்பை அறிந்து அவர்கள் மனதை மாற்றியவரில்லை.. ஆனால் பெரியார் .. பிராமணீயத்தின் (ஆரியத்தின்) ஆணிவேரையே அசைத்தவராக.. சமூகநீதிக்காக.. சமநீதிக்காக.. ஒவ்வொரு விடயத்திலும் தொலைநோக்கோடு சிந்தித்து கல்வி வேலைவாய்ப்பு கருத்து சுதந்திரம் பெண்கள் கல்வி அவர்களின் உரிமை என எல்லா படித்தளங்களிலும் கவனம் செலுத்தி புதியதொரு விடியலை தந்தவர்.. நாடு விடுதலை அடைந்ததையே கறுப்புநாளென்றவர்.. சமூகவிடுதலை இல்லாமல் நாடு விடுதலை அடைந்து பயனில்லை என்றவர்.. பெரியார் தொலைநோக்கி.. .. எங்களுக்கு பெரியார் போதும்.. நீங்கள் ஜெய்பீமையே முன்னெடுங்கள்.. அப்போது தெரியும் .. பெரியாரின் மேன்மை தளர்ந்து விழும் போது தூக்கி நிறுத்த ..ஆம்.. கடைசியில் பெரியார் தான் வந்து நிற்பார் .. ஆலஞ்சியார்

Monday, June 11, 2018

ஊடகதர்மம்

ஊடகங்கள் மீண்டும் மீண்டும் ஒரு பொய்யை கட்டிமையக்க முயல்கின்றன.. 10 விழுக்காடு வாக்கு வங்கியோடிருந்த விஜயகாந்த்தின் நிலையை மறந்து ..ரஜினிக்கு எத்தனை விழுக்காடு என தெரியாமல் 21 விழுக்காடு ஆதரவென பொய் பிரச்சாரம் செய்கின்றன.. வெளிப்படையாகவே திமுகவை வீழ்த்த ரஜினியை தூக்கிபிடிக்கும் பாசிசத்தின் துணை நிற்கும்படி ஊடகங்கள் மிரட்டபடுவதாக செய்திகள் வருகின்றன.. ஒருவித மாய தோற்றத்தை உருவாக்க முயல்வதின் பின்னில் .. ஆர்எஸ்எஸ் மற்றும் சங்கிகள் மிகப்பெரிய திட்டத்தோடு வருகிறார்கள்.. .. தமிழ் தேசியம் பேசுவோர் மீது தேசபாதுகாப்பு மிரட்டல் கைது சிறையென சின்ன பசங்களை தொடர்ந்து அச்சுறுத்த தொடங்கியிருக்கிறார்கள் .. சில அபத்தங்களை பேசி திரிந்தாலும் மிரட்டலுக்கு பயந்து ரஜினிக்கு வால்பிடிக்க தமிழ் தேசியம் தயாராகலாம்.. ஆனால் அது அத்தனை வலுலில்லாத கட்சியென்பது சிறிய ஆறுதல்.. ஸ்டாலின் வீட்டை கொளுத்துவோமென்ற இந்துமுன்னணி பரதேசியை இதுவரை கைது செய்யவில்லை இதை சிறிய சம்பவமாக கடந்து போனால் நாளை மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும் .. கருத்தை எதிர்கொள்ள திராணியற்றவர்கள் பொதுவெளியில் கலாட்டா செய்கிற துணிவு எப்படி வந்தது புதிய தலைமுறை நிகழ்ச்சியில் தமிழிசை நடந்து கொண்டவிதம் அருவருப்பானது கம்யூனிஸ்ட்களை தரம் குறைவாக பேசுவதாக நினைத்து அவமானப்பட்டு நின்றார்.. உண்டியல்களை கேவலமாக எண்ணினால்.. கோவில்களிலும் வழிபாட்டுத்தலங்களிலும் உண்டியல் வைத்து வசூல் செய்வதை என்ன கண்ணோட்டத்தில் பார்க்கிறார்.. .. பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்தால்.. கடுமையாக மிரட்டினால்.. தேசபாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி அடக்குமுறையை கையாண்டால் மிரண்டுவிடும் தமிழகம் என கருதினால்.. அது தவறானதென கடைசியில் பாடம் புகட்டும்.. தலையாட்டிகளை வைத்துக்கொண்டு நீண்டநாள் ஆடிக்கொண்டே இருக்கமுடியாது .. ஆட்டம் நிற்கிற வேசம் கலைந்த கதையாகும் எச்சரிக்கை.. .. தொடர்ந்து பொய்யை சொல்லி கொண்டிருப்பதால் அது உண்மையாகிவிடாது மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள்.. பாஜகவின் பித்தலாட்டத்தை நன்கு அறிந்தவர்கள் எந்தெந்த வடிவில் வருகிறார்களென அறியாதவர்களில்லை .. மௌனமாக கவனித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் சில விவரகேடுகளின் சுயரூபம் வெளிப்பட்டதில் உண்மைதன்மையை அறிய முடிந்தது .. எழுபதுகளில் எம்ஜிஆரெனும் சினிமா கவர்ச்சியை களமிறக்கி .. அதில் வெற்றி கண்ட பாசிசம் இப்போது கருப்பை முன்னிறுத்தி கதை சொல்ல வருகிறது ஆனால் பாருங்கள் .. கவர்ந்திழுக்கும் சக்தி இழந்த மாய மானாய் நிற்பதுதான் பரிதாபம்.. சினிமாவின் வெளிச்சம் இனி இருட்டறையோடு முடிந்தது ‍..இனி வெளியில் அரிதாரம் எடுபடாது .. முகமூடியை கழற்றி கரிபூசி விடுவார்கள் .. இது அறியாமல் குருக்களும் சில கோடாரிகளும் கொக்கரிக்கின்றன்.. அவர்களுக்கு இது எழுபதல்ல என்பதோடு.. இது திராவிடம்2.0 என்பதை உணர்த்துவோம்.. .. இனி சாயபூச்சிற்கு வேலையில்லை.. .. ஆலஞ்சியார்..

Sunday, June 10, 2018

பொய் பேசி திரியும் பிரதமர்

பொய்.. அரசியலில் சில தவறான தகவலை தருவார்கள் அது எந்தவகையிலும் மக்களுக்கோ தேசத்திற்கோ,பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.. சில பொய்கள் உண்மையை மறைப்பதற்காக சொல்லபட்டு நாளடைவில் அது பொய்யென தெரிந்ததும் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்.. இவையெல்லாம் தமாஷாக கடந்து போயிருக்கிறது தேசம்.. ஆனால் பாஜகவின் பொய்கள் மதவெறியை சாதீய மோதலை ..கலவரத்தை ஒருவித பதட்டத்தை உண்டாக்குவதற்காக சொல்லபடுகிறது.. அதிலும் நாட்டின் பிரதமரே குஜராத் தேர்தலில் போது பாகிஸ்தான் சதி செய்வதாக குற்றம் சாட்டினார்.. அதுவும் மணிசங்கர் அய்யர் இல்லத்தில் நாடு மிகவும் மதிக்கிற டாக்டர் மன்மோகன் சிங் பாக். அதிகாரிகளோடு கலந்தாலோசித்ததாக பிரச்சாரம் செய்தார்.. மிக பெரிய கொடூரமான பொய்யை மிகப்பெரிய பொறுப்பில் உள்ள மோடி தான் வகிக்கும் பதவியின் மதிப்பு தெரியாமல் சொன்னார்.. பிரதமரே குற்றம் சாட்டுகிறாரே உண்மையாக இருக்குமோ என சாதாரண மக்கள் நினைத்தனர்.. காங்கிரஸ் கட்சியின் சாகேத் கோகலே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கீழ் பிரதமர் அலுவலத்திற்கு இது உண்மையா என கேள்வி எழுப்பினார் .. வழக்கம் போல இழுத்தடித்தது ..நீதிமன்றத்தில் மனு செய்து ..30 நாட்களுக்குள் பதில் தரவேண்டுமென நீதிமன்ற உத்தரவிட்ட பின் பிரதமர் பொய் சொல்லி இருப்பதாக பிரதமர் அலுவலகமே பதில் அளித்தது .. தான் வகிக்கும் பதவிக்கு இழுக்கை அதுவும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விடயத்தில் பிரதமரே சொல்கிறாரெனில் இதைவிட அயோக்கியத்தனமான செயல் வேறெதுவும் இல்லை.. .. மோடி என்றில்லை ஆர்எஸ்எஸ் சித்தாந்ததமே பொய்யில் விளைந்தது சுதந்திர போரில் மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு தங்களின் தேசத்தின் காவலர்களென சொல்லிக்கொள்பவர்கள் தானே வேறெப்படி இருக்கும்.. மோடியை கொல்ல சதி என்று முறையயே 2009, 2010,2013 மூன்றுமுறை 2014 இரண்டுமுறை 2018 மே மற்றும்,ஜூன் மாதம் கொலைமிரட்டல் வந்ததாக சொல்லபடுகிறது ஆனால் இதுவரை அதுகுறித்து விசாரணை நடைபெறவில்லை .. பத்துவருடங்களாக சொல்லபட்டுவரும் குற்றசாட்டிற்கு எந்த ஆதாரமும் நிரூபிக்கபடவில்லை இதுவரை யாரும் கைது செய்யபடவில்லை.. அது சரி உண்மைக்கு தான் சாட்சியங்கள் கிடைக்கும் பொய்க்கு ஏது ஆதாரம்.. .. பொய்யை மட்டுமே நம்பி ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததென்றால் அது பாஜகவாகதானிருக்கும்.. 2ஜி யை சொல்லி மக்களை நம்பவைத்து ஆட்சிக்கு வந்து சில நாட்களிலேயே பாஜக அரசு பற்றிய சிஏஜி அறிக்கையை பற்றி ஊழலென பேசிய போது.. நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கையை எல்லாம் அரசியலாக்காதீர்களென நிதியமைச்சர் அருண்ஜெட்லி சொல்லவில்லையா.. எதிலும் பொய் முறைகேடு வாய்க்குவந்ததை பேசுவது போட்டோஷாப் .. இது தான் பாஜகவின் பலம்..உண்மை அறியாதவர்கள்.. ஆம் மதமென்றும் புராணமென்று நம்பி மக்களை பிரித்து .. ஒரு சாரார் மட்டுமே உயர்ந்ததவனென சொல்லி திரியும் இவர்களிடம் வேறெதை எதிர்பார்க்கமுடியும்.. ஆனால் பொய் அறுத்துவிடும் .. நீண்டநாள் அதையே வைத்து நிலைக்கமுடியாது.. என்பதை காலம் உணர்த்திக்கொண்டுதானிருக்கிறது நான்காண்டுகளில் பொய்யில் விளைந்ததெல்லாம் வினையாற்ற தொடங்கியிருப்பதை மக்கள் திருப்பியடித்து உணர்த்துகிறார்கள்.. ஆம் பொய் வீழும்.. .. #பொய்_வீழ்த்துமென_அறியாமல் .. .. ஆலஞ்சியார்

Saturday, June 9, 2018

ஏன் அய்யா என்றழைக்கிறோம்

பெரியாரியவாதிகள் சிலர் ஏன் சுயமரியாதை கொஞ்சம் கூட இல்லாம ஈவேராவை ஐயானு கூப்பிடுறாங்க.. என்னத்த கத்துக்கிட்டாங்களோ அவர்கிட்ட! .. கூடவே தேவதாசி குலத்தில் பிறந்த கருணாநிதி முதல்வராகவில்லையா என்கிறார்.. நவீனவாதி பிருந்தா.. .. முதலில் அய்யா அவர்களைப்பற்றி .. இப்போதும் எரிச்சலோடு பேசிகிறாரே அதிலிருந்தே அவரின் மனரீதியான தாக்குதலுக்கு உள்ளான பெண்மணியென புரிந்துக்கொள்ள முடிகிறது.. என்ன செய்தார் பார்பன பெண்களை தாலியறுத்தால் மொட்டையடித்து அதோடு முடிந்ததென்ற நிலையை மாற்றியவர் அதுவும்.. ராஜாஜி போன்ற வைஷ்ணவ குடும்பத்திலேயே புரட்சியை செய்தவர் .. ராஜாஜி மகளை இளம் விதவையாய் வீட்டிலிருந்ததை கண்டு .. ராஜாஜியிடம் குழந்தையை ஏன் இப்படியே வச்சிருக்கே என கேட்ட போது அவளோட பிராப்தம் அவ்வளவு தான் என்ற ராஜாஜி மனதை மாற்றி ... கல்வி பயில அனுப்பி அதோடு மறுமணமும் செய்துவைக்க கடும் முயற்சி செய்து காந்தியின் மகனுக்கே மணமுடித்து வைத்து.. ராஜாஜி குடும்பத்திலேயே விதவை (கைம்பெண்) திருமணத்தை செய்து வைத்தாரே .. அவரை பார்பன சமூகம் தானே அய்யா என்று அழைக்க வேண்டும்.. நாங்கள் ஏன் அழைக்கிறோம் தெரியுமா.. முற்போக்கு பேசும் பாப்பான் ஆபத்தானவன் என்று எங்களுக்கு சொல்லி தந்ததால்.. எவனுக்கும் நீ அடிமையில்லை ..தோளில் துண்டை போடு.. ஆண்டே என்றெல்லாம் அழைக்க தேவையில்லை உணர்த்தி.. நமஸ்காரம் என்ற ஆதிக்க திமிரையும் கும்புடுறேன்வசாமி என்ற அடிமைத்தனத்தையும் அகற்றி மரியாதையாக வணக்கமென்றே சொல் என்றாரே அதற்காக அவரை அய்யா என்றழைக்கிறோம்.. இதுவரை எங்கள் வீட்டு பெண்கள் பொட்டிகட்டி தெய்வத்தொண்டு ஆற்றிவிட்டோம் .. இனி பிருந்தா போன்றவர்கள் அந்த தெய்வத்தொண்டை ஆற்றலாமென என சொல்ல சொன்னதற்காக அவரை அய்யா என்றழைக்கிறோம்.. .. கலைஞரை ஜாதி பெயரைச் சொல்லி தாழ்த்திவிடலாமென்று நினைக்கிறார் அதில் கூட போதிய அறிவின்மையை காட்டுகிறார்.. கலைஞர் இசைவேளாளரில் சின்னமேளம் பிரிவை சேர்ந்தவர்.. பெரியமேளம் மரபினர் தான் தெலுங்கை தாய்மொழியாக அல்லது வழிபாடு மொழியாக கொண்டவர்கள் ..சின்னமேளம் பிரிவினர் தமிழ் மரபினர் .. பெரியமேளம் பிரிவினரில் தான் தேவதாசி முறை இருந்தது .. அவர்களை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம் அவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் தந்தையின் பெயரை போடமாட்டார்கள் தாயின் பெயரை தான் போடுவார்கள்.. உதாரணமாக நான் மிகவும் மதிக்கும் இசைமேதை .. எம்‍‍.எஸ். சுப்புலெட்சுமி.. அதாவது மதுரை சண்முகவடிவு சுப்பு லெட்சுமி என தன் தாய் பெயரான சண்முகவடிவை போட்டுக்கொள்வார்.. தன் வாழ்நாள் முழுவதும் பிராமண அடிமையாகவே வாழ்ந்தவர் அந்த இசைக்குயில் .. கருணாநிதியோ தன் தந்தை பெயரை ..அதாவது முத்துவேலர் கருணாநிதி என போட்டுக்கொள்வார்.. விவரபோதாமை யாரிடமாவது கேட்டு தெரிந்து போட்டிருக்கலாம்.. .. கலைஞரை பெரியாரை சிறுமை படுத்துவதாக எணணி அந்த பெண்மணி சிறுமையாகி நிற்கிறார்.. அக்ரஹார சூழலில் அடிமைபட்டு கிடந்த சமூக பின்னணி .. உயரத்தை அடைவதற்காக எதையும் இழக்கலாமென்ற லட்சியபாதையில் செல்பவருக்கு.. மானம் சுயமரியாதை பற்றியெல்லாம் என்ன தெரியும்.. விடுங்கள் கழுதையை.. .. ஆலஞ்சியார்

Friday, June 8, 2018

தவ்ஹீத்..

TNTJ.. நாற்றமடிக்கிறது.. தெளிவற்ற கொள்கை முழக்கமும்.. அதீத நம்பிக்கையும் ஒருநாள் பொய்த்து போகிறபோது.. அதுவரை நடத்திவந்த செயல்களின் நம்பகதன்மை இழந்துவிடுகிறது.. தனிமனித ஒழுக்கம் அவரின் தனிப்பட்ட விடயமாய் கருத்தில் கொண்டாலும் வெளியில் தூய்மை பேசி திரியும் பொய் முகத்தை கிழித்திவிடுகிற போது .. நிஜம் பல்லிளிக்கும்.. .. இவர்களின் கொள்கை ஒரிறை .. அதில் மாற்றத்தையா சுன்னத்வல் ஜமாத் செய்தது இல்லை .. சில கலாச்சார நிகழ்வுகளை அந்தந்த மண் சார்ந்த விடயங்கள் சிலவற்றை தவிர்க்கமுடியாது செய்ததை இவர்கள் .. இறைமறுப்பென்றும்.. இதே ஷரியத்திலிருந்து பிரிந்து ஷிர்க்கில் போய்விட்டதாகவும் மிகப்பெரிய பிரச்சாரத்தை தொடுத்து சமுதாய மக்களை பிரித்ததில் பெரும் பங்காற்றியது.. அது உறவின் விரிசல் வரை கொண்டு சேர்த்து ஒரே குடும்பத்தில் பகைமையை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்காற்றியது.. ஒற்றுமையை சிதைக்கிற எந்தவொரு இயக்கமும் காலசக்கரத்தில் தானாக கழட்டிவிடப்படும்.. அதற்கான காரணவிடயங்களை காலம் செய்து கொண்டே இருக்கும்.. .. தனிநபர் புகழ்பாடல் இங்கில்லை என்றவர்கள்.. ஒவ்வொருவரின் சங்கதிகள் வெளியே வர நாற்றமடித்த நிலை.. பி.ஜே எனும் கயமையை தாண்டி.. தொடர்ந்து அல்தாபி.. இப்போது ..சையத் இபுராகிம் ..போலி பெயரில் இருந்து நிகழ்த்தியது வெளியாகியிருக்கிறது.. இன்னும் வரும்.. .. இதற்கிடையில்.. பி.ஜே வின் தூண்டுதலாலேயே .. முஸ்லிம் சமூகத்தில் பல இளைஞர்கள் தவறிழைத்து சிறைக்கு செல்ல இவர் காரணமாக இருந்ததாகவும் அதாவது P. ஜெய்னுல் ஆப்தீனின் தவறான போதனைகள் தான் காரணமாக இருந்ததாக நாம் ‌அறியமுடிகிறது. ( கோவை குண்டு வெடிப்பு மற்றும் ‌அதனை தொடர் சம்பவங்கள்) இது சாதாரண விடயமாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. என்று ஊடகவியலாளர் Sa Sufiyan தன் முகநூல் பக்கத்தில் பதறியிருக்கிறார்.. பல அப்பாவி இளைஞர்கள் பாதிப்பு அடைந்ததற்கு பி. ஜெய்னுல் ஆப்தீன் தான் காரணமாக இருந்ததாக இஸ்லாமிய சமூகத்தில் இருந்தே குரல்கள் ஒலிக்க தொடங்கி உள்ளது. ஒருவேளை இது தேசவிரோத நடவடிக்கை சம்பந்தப்பட்ட ஒன்றாக கூட இருக்கலாம். பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் முஸ்லிம்கள் தான் என்றும் சம்பந்தப்பட்ட பலர் குற்றச்சாட்டுகளை வைத்து வருவதைக் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது.. இந்த குற்றசாட்டு பொய்யாக கூட இருக்கலாம் அப்படியெனில் குற்றம் சுமத்தியவர்கள் தண்டிக்கபடவேண்டும்.. உண்மையெனில் பி.ஜே தண்டிக்கபடவேண்டும்.. .. இஸ்லாமிய இளைஞர்களில் வழிகெடுத்ததில் பெரும்பங்கு இந்த தவ்ஹீத் ஜமாத்திற்குள்ளதென்ற குற்றசாட்டு தொடர்ந்து இஸ்லாமிய சமூக மக்களாலேயே தொடர்ந்து சொல்லபட்டுவருவதை கவனத்தில் கொள்ளவேண்டும்.. .. தவ்ஹீத் ஜமாத் கலைக்கபடவேண்டிய அமைப்பு.. .. ஆலஞ்சியார்

Thursday, June 7, 2018

சிவகுமார்

சிவகுமார்.. சாதிவெறியன் எனச் சொல்வ் கடந்துவிடலாம் ஆனால் முன்பு பேசியதை மீண்டும்,கதைப்பதிலிருந்தே இந்த சமூகத்தில் வாழும் சில விசகிருமிகளில் தானும் ஒருவராக சொல்கிறார்.. .. ஆண்களும் பெண்களும் சேர்ந்து வேலை செய்தால் தவறு நடக்குமென சொல்வதிலிருந்து அது பழைய சங்கராச்சாரியர் வேலைக்கு போகும் பெண்களை விபச்சாரி என்றாரே அதையை இவர் மீண்டும் மொழிகிறார்.. சினிமா பின்னணியில் வாழ்ந்தவரிடம் தான் சார்ந்த துறையில் பெண்களை இவர் எந்தளவிற்கு மதித்திருப்பாரென நமக்கு புரிகிறது.. யோக்கியனாக தன்னை காட்டிக்கொள்ளும் இவரின் சாதிய பின்புலம் அதனோடு கொண்ட வெறி ஏற்கனவே நமக்கு தெரிந்ததென்றாலும்.. ஒரு பொதுவெளில் குறிப்பிட்ட அதிலும் IT துறை சார்ந்த பெண்களை கண்ணிய குறைவாக தரம்தாழ்த்தி பேசுவதென்பது இவரின் மனதின் கசடை நமக்கு உணர்த்துகிறது.. நாமும் அவரைப் போல இறங்கி கதைக்க தேவையில்லை.. அவரின் பிறவி கோளாறென கருதுவோம்.. .. சினிமாவில் நாயகன் வேசம் கட்டினால் நாலும் தெரிந்தவன் போல் பேச இங்குதான் முடிகிறது .. தெளிவற்ற வறட்டு சிந்தனையை கொண்டுவந்து இங்கே கொட்டுகிறார்கள்.. தங்களை யோக்கியர்கள் போலவும் .. மிக சிறந்த பண்பாளர்கள் போலவும் காட்டிக்கொள்ள நினைக்கும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் தொடர்ந்து வருகிறது.. அரசியல் ஆன்மீகம் என பழைய நடிகர்கள் பொழுது போகாமல் எதையாவது பேசி சர்ச்சையில் மாட்டிக்கொள்கிறார்கள்.. மிக மோசமான விமர்சனபார்வையை சிவகுமார் வைத்துள்ளார்.. என்ன ஆச்சர்யம் .. IT துறையில் அதிகளவில் மேட்டுக்குடியினரே இருந்தும் யாரும் அவருக்கெதிராக கருத்தை கண்டத்தனத்தை சிறு எதிர்ப்பை கூட பதியவில்லை.. .. பெண்கள் பல்வேறு துறைகளில் தங்களின் திறமையை பறைசாற்றும் காலகட்டத்தில் பழைமைவாதம் பேசி திரியும் இப்படிபட்ட மூடர்களை புறந்தள்ளவேண்டும் .. பெண்கள் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது .. பிற்போக்குவாதிகளில் வெற்று கூச்சலை கடந்து வெற்றி பெறுவோம் .. பெண்களை இழிவு செய்யும் மடையர்களை விரட்டியடிப்போம்.. சிவகுமார் போன்ற பிற்போக்குவாதிகளின் குடும்ப பெண்களுக்கு ஆறுதலை சொல்வோம்.. .. பெண்களை இழிவாக பேசும் சிவகுமார் நாவடக்குவது நல்லது.. .. ஆலஞ்சியார்

Wednesday, June 6, 2018

திருச்சி சிவா

#திருச்சிசிவா.. சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்.. நண்பரின் திருமணத்தை நடத்திவைக்க 89ல் பாபநாசம் வந்திருந்த போது நீண்டநேரம் பேசுகிற வாய்ப்பு கிடைத்தது.. தளபதி மீது தனிபிரியம் கொண்டிருந்தார்.. திரு.வைகோவைப்பற்றி பேச்சு வந்தபோது.. அப்போது திமுகவில் இருந்தார் வைகோ மௌனமாக.. கடந்தார்.. நிறைய அர்த்தம் பொதிந்த சிரிப்பை தந்து மிகவும் எச்சரிக்கையோடு தவிர்த்தார் ஒரு கட்டத்தில் .. நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது நான் கொஞ்சம் அதிகபிரசங்கியாக .. தஞ்சை பெரியாரென அழைக்கப்பட்ட மன்னை அவர்கள் .. அவன் நடிகன் நம்பமுடியாதவன் என்று ஒருமுறை சொன்னதை சொன்னபோது.. பெரியவருக்கு தெரியாததா நமக்கு தெரிந்துவிட போகிறதென்றார்.. .. இங்கே ஒப்பீட்டை கொண்டுவர நினைக்கிறேன்.. சிறந்த நாடாளுமன்றவாதியாக அடிக்கடி தன்னை சொல்லிக்கொள்கிற வைகோவின் நாடாளுமன்ற பேச்சுகளை சற்று கூர்ந்து கவனித்தால் .. அனைத்து வெத்துவேட்டாக தெரியும்.. தமிழகம் சிறந்த தலைவர்களை தந்திருக்கிறது.. காயிதெமில்லத், அறிஞர் அண்ணா .. தொடங்கி இரா.செழியன் மாறன்.. என சொல்லிக்கொண்டே போகலாம் அந்த வரிசையில் இடம்பெற தகுதியானவர் திருச்சி சிவா.. நிச்சயமாக அந்த வரிசையை வைகோ இன்னும் தொடவில்லை என்பதுதான் நிதர்சனம்.. வைகோவின் உரைவீச்சு உணர்ச்சி பிழம்பாய் இருக்குமே தவிர .. மிகப்பெரிய மாற்றத்தையோ ..அல்லது வெற்றி இலக்கையோ அடைந்திடவில்லை .. இடைமறித்து விவாதம் செய்வதென்பதோ அல்லது உணர்ச்சிவயப்பட்டு விவாதிப்பதோ நல்ல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழகல்ல.. வேகமாக பேசுவதால் மட்டும் சாதித்துவிட முடியுமா என்றால் வைகோவே பதிலாக இருக்கிறார்.. எந்தவொரு தனிநபர் மசோதாவை இதுவரை கொண்டுவந்ததாக என் அறிவில் இல்லை.. அப்படியே கொண்டுவந்திருந்தாலும் அதில் வெற்றியை பெற்றதில்லை.. 18 ஆண்டுகள் நாடாளுமன்ற மேலவையில் இருந்தார் என்பதை தவிர.. எந்தவொரு மசோதாவின் போக்கை மாற்றியதாகவோ அல்லது தோல்வியடைய செய்ததாகவோ திருத்தங்களை கொண்டுவந்ததாகவோ தெரியவில்லை காரணம் மாறன் அந்தவேலைகளை சிறப்பாக செய்துவந்தார் அவரை மீறி செயல்படமுடியாமை ஒரு காரணமென்றாலும் எப்படி செயல்பட வேண்டுமென கலைஞர்தான் இங்கிருந்து இயக்கிக்கொண்டிருந்தார்.. சில நேரங்களில் வைகோவின் உரை அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கிறது.. சங்கர்தயாள் சர்மா பற்றி தவறாக பேசியவரை சங்கர்தயாள் சர்மாவே பெரிதாக எடுத்துக்கொள்ளாத போது .. எங்கள் சேர்மனை பற்றி தவறாக பேசியவரை இழுத்துவர வேண்டுமென முழங்கியவர்.. அதே போல எம்ஜிஆரை கேவலபடுத்தியபோதும் வெகுண்டெழுந்து எங்கள் முதல்வர் அவர்.. கருத்து/கொள்கைவேறுபாடு என்பது வேறு என பதிவு செய்தவர் வைகோ.. இது போன்ற உணர்ச்சி மேலிடும் பிரச்சனைகளை கையாள்வதில் வல்லவர் .. .. திருச்சி சிவா மேற்சொன்ன பட்டியலில் இடம்பெற கூடிய தகுதியுடையவர்.. ஆவேசமாக பேசி தள்ளாமல் ..ஆழமாக அளவோடு .. எல்லோரையும் ஈர்க்கிற வித்தை தெரிந்தவர். மக்களவையில் திமுகவிற்கு உறுப்பினரே இல்லாத காலகட்டத்திலும் மாநிலங்களவையில் தனிநபர் தீர்மானத்தை கொண்டுவந்து சிறப்பாக பேசி அதில் உள்ள நியாயத்தை எடுத்துச்சொல்லி வெற்றிபெற செய்திருக்கிறார்... திருநங்கை மசோதா ஒன்று போதும் அதேபோல் நரிகுறவர்கள் மசோதா மீதான பேச்சும் சிறப்புவாய்ந்தது.. .. நல்ல பார்லிமென்டேரியனாக தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார். வீணான கூச்சல் இடாமல் உணர்ச்சி வயப்பட்டு கத்தி தீர்க்காமல்.. சொல்ல வந்ததை தெளிவாக எல்லோரும் ஏற்கும்படி செய்பவர்.. நல்ல அரசியல்வாதியாய்.. எல்லோருக்கும் பிடித்தவராய் கொண்ட கொள்கையில் உறுதியும் கலைஞர் மீதும் தளபதி மீதும் பற்றும் கொண்டவர் இன மொழிக்கு ஆபத்தென்கில் பாய்ந்திடும் புலியாய்.. எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாய்.. திகழ்கிறார்.. .. நிச்சயமாக சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் (பார்லிமென்டேரியன்)வரிசையில் இவர் இடம் பெறுவார் மாற்றுகருத்துடையோர் கூட இதை ஏற்பார்கள்.. .. ஆலஞ்சியார்

Tuesday, June 5, 2018

பெரியார்.. கரை சேர்த்திடும் திடல்

பெரியாரை மறுத்து அம்பேத்கரே போதும் என்கிறார் ஒரு இளம் இயக்குனர்.. அது தொடர்ந்து வந்த இடைசாதி அழுத்தத்தால் ஏற்பட்டதென எண்ணுகிறேன்.. தொடர்ந்து புறக்கணிக்கபடும் போது ஏற்படும் வலி அது எதனால் என்பதையெல்லாம் ஆராய்வதில்லை மாறாக ஏதோ ஒன்றை பற்றிப்பிடித்துக்கொள்ளவேண்டுமென்ற நிலை .. இப்படி பேச வைக்கிறது .. .. பெரியாரை மறுத்த ஜெய்பீம் எடுபடுமா.. என்ற கேள்விக்கு பதில் வடநாடுகளில் தலித்துகளின் நிலை ஒன்றே போதும்.. மீசை முறுக்கினாலே உயிர் ஊசலாடும் .. தலித்களின் வாழ்வாதாரம் எந்த நிலையில் என்பதும் நாம் ஆராய வேண்டும்.. தென்னகத்தில் குறிப்பாக தமிழகத்தில் தலித் சமூகம் மேம்பாடடைந்ததென சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு மெச்சபட்ட கொஞ்சம் சுயமரியாதையோடு வாழ .. இன்னும் கொஞ்சம் அடங்கமறு அத்துமீறு என முழங்க முடிகிறதென்றால் அது பெரியார் தந்தது.. இது ஒப்பீடல்ல மாறாக ஒடுக்கப்பட்ட சமூக மேம்பாட்டில் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் நின்று போராடினார் அண்ணல் அம்பேத்கர்.. ஆனால் பெரியாரின் எல்லை விரிவடைந்திருந்தது .. ஒவ்வொரு அசைவிலும் எதிர்மறையை கொண்டு .. குறிப்பாக பிராமணீயத்திற்கெதிராக அவர் நடத்திய போரில் அதிக பயனை ஒடுக்கபட்ட சமூகத்திற்கானதாக மாற்றியிருந்தார்.. இடைசாதிக்காரனை கொம்பு சீவும் பாசிசத்தை போட்டுடைத்து.. உன்னையும் தேவடியாள் மகனென்கிறானென சொல்லும் தைரியம் பெரியாருக்கு மட்டுமே இருந்தது.. .. அம்பேத்கர் பார்வை செயல் போராட்டம் ..மெத்த படித்த மேதாவித்தனத்தில் விளைந்ததாகவும்.. அது குறிப்பிட்ட வரையறைக்குள் அல்லது எல்லைக்குள் நின்று போராடியது.. ஆனால் பெரியாரிய பார்வை ..பாசிசத்தை உலுக்கியது.. அதன் ஆணிவேரை அசைத்தது காரணம் அவர் மக்களோடு கலந்திருந்தார்.. செருப்பு வீசினாலும் மலத்தை அள்ளி எறிந்தாலும் அவனிடமே சென்றார்.. அவன் அறிவோடு கதைத்தார் .. அவனை தட்டியெழுப்பி கூர்தீட்டி போராட வைத்தார்.. உனக்காக தான் போராடிகிறேன் என புரியவைத்தார்.. கல்வியை எக்காரணம் கொண்டும் விட்டுவிடாதே அதை உன்னை கரைசேர்க்குமென சொன்னார்.. உனதுரிமைக்காக நீ தான் போராட வேண்டுமென சொன்னார்.. அதாவது பாமரனோடு அவன் பாதையில் பயணித்து வெற்றிக்கண்டார்.. ஆனால் அம்பேத்கர் அதில் தான் வேறுபடுகிறார்.. அவரின் பணிகள் சட்ட போராட்டமாக.. அதிபுத்திசீவிகளோடான போராட்டமாக சட்டமியற்றுதல் நாடாளுமன்ற செயல்பாட்டில் மூலம் தன் இனத்திற்கான விடியலை அடைந்துவிடலாமென்றிருந்தது .. அது பெரிய மாற்றத்தை தராமல் போனது என்பது நிதர்சனம்.. வடமாநில தலித் சமூகம் பெரியளவில் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்பாடடைய முடியவில்லை.. தமிழகத்தில் ஒடுக்கபட்ட சமூகத்தின் நிலை .. தந்தை பெரியாரும் அவர் வழியில் பயணித்த கலைஞரின் முயற்சியால் ஒரளவு மெச்சபட்டிருப்பதை மறுக்க முடியாது முழுமையாக இல்லையென்றாலும் ..மறுக்கமுடியாத உயரத்தை அடைந்திருக்கிறார்கள்.. .. அதற்கெல்லாம் தந்தைபெரியாரின் பங்கு அளப்பரியது.. இவர்கள் ஏற்றுக்கொண்டாலும் அல்லது மறுத்தாலும் அது தான் உண்மை .. பெரியார் இல்லாமல் போயிருந்தால் ..கடைசாதி மட்டுமல்ல இடைசாதியினர் கூட மரியாதை இழந்த நிலையில் தான் திரிய வேண்டியிருக்கும்.. பெரியாரை இவர்கள் மறுத்தாலோ அல்லது மறைக்க முற்பட்டாலோ வேண்டுமன்றே தவிர்த்தாலோ ...இழப்பு அவர்களுக்குதானே தவிர..பெரியாருக்கில்லை.. இன்றைக்கு எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியத்தை தந்ததே திராவிடம் தான்.. பெரியாரை விடுத்து பீமை தூக்கிக்கொண்டலைந்தாலும் கடைசியில் கரைசேர்த்திடும் #திடலாய் இருப்பார் பெரியார்.. .. ஆலஞ்சியார்

Monday, June 4, 2018

கமல் ரஜினி..

காவிரி பிரச்சனையை இரு மாநிலங்களும் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும் அரைமெண்டல் கமல்... ஏற்கனவே நிறைய முறை பேசி பேசி பயன் இல்லையென்றானவுடன்.. சட்டரீதியாக போராடி.மிகப் பெரிய சட்ட போராட்டம் நடத்தி.. காவிரி நடுமன்றம் அமைத்து .. அதை தொடர்ந்து ஜெயலலிதா உட்பட கர்நாடகமும்,எதிர்த்து .. உச்சநீதிமன்றம் காவிரி மன்றத்தை செயல்பட அனுமதித்து .. இடைக்கால மற்றும் இறுதி தீர்ப்பை பெற்று...அதிலும் மேல்முறையீடு செய்து நமதளவை குறைத்து குறைத்து கடைசியாக உச்ச நீதி மன்றமும் இறுதியை வரையறுத்து .. அதை மேலாண்மை வாரியம் அமைத்து கண்காணிக்க முடிவான வேளையில் இந்த பார்பன நாய் மீண்டும் பேச்சு வார்த்தை என கர்நாடகாவில் ரஜினி படம் வெளியிட முடியாமல் தடுமாறும் போது வக்காலத்து வாங்கிறார்.. இந்த காட்டிக்கொடுக்கும் சினிமாக்காரனை எதால் அடிப்பது.. .. காவிரியைப் பற்றி என்ன தெரியும் இந்த நடிகனுக்கு .. படவாய்ப்பு இல்லையென்றானபின் ..டிவியில் நடித்தோமா ..அல்லது நிகழ்ச்சி நடத்தி பிழைப்பு நடத்தினோமா என்றில்லாமல் .. மக்கள் சேவையாற்ற வந்திருக்கிறாராம் .. முதலில் காவிரியின் வரலாறு தெரிந்திருக்கவேண்டும்.. காவிரி பிரச்சனை பூதாகாரமாய் இருந்த போதெல்லாம் .. கவுதமியோடு காதல் டூயிட் பாடிக்கொண்டிருந்தவருக்கு அடிப்படை புரியாது.. .. நடுவர் மன்றத்தை அமைத்தபோது ஜெயலலிதாவிற்கு கூட அதன் அருமை புரியாமல் எதிர்த்தார்.. கருணாநிதி ஏமாந்து போனார் ..காவிரி இனி அவ்வளவுதானென்றார் இடைக்கால தீர்ப்பை பெற்றபோது.. குறைந்துபோய்விட்டதென கூப்பாடு போட்டார்.. கடைசியில் இறுதி தீர்ப்பு பெற்று தந்தவுடன் .. ஆட்சி மாற அதை கெஜட்டில் போட்டுவிட்டு காவிரித்தாயானார்.. .. காவிரி பிரச்சனை முடிந்துபோனது .. இனி மேலாண்மை மட்டுமே தீர்வு .. உச்சநீதிமன்றமே இனி தலையிடாது .. பேசி தீர்க்கலாமென தங்களின் பட வியாபாரத்திற்காக தரங்கெட்ட செயலை செய்யவேண்டாம் .. ரஜினியின் முகம் கருக்க செய்தவர்களால் கமலையும் விரட்ட வேண்டிய நிலை உருவாகும் .. வாய்ப்பில்லாமல் போய் .. வேறுவழியின்றி சின்னத்திரையை கட்டி அழுகிற வேளை ..அதிகபிரசங்கித்தனத்தை கமல் விடவேண்டும் .. .. ரஜினி கமல் இருவரையும் களமிறக்கியவர்கள் தமிழர்களுக்கு எதிரான மனபோக்கை கொண்டவர்கள் .. தமிழர் நலன்,தமிழகத்தின் எதிர்காலம்.. தமிழர் பண்பாடு கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள்.. நெடும்பகையோடு எம்மை பல நூற்றாண்டாய் எதிர்ப்பவர்கள்.. அவர்கள் சித்தாந்தத்தை குழித்தோண்டி புதைத்த திராவிடத்திற்கு எதிரானவர்கள் என்பதை அறிவோம்.. .. கமல் நல்ல சினிமாகலைஞனாக இருந்தால் போதும் இல்லையேல் அசிங்கபடவேண்டிவரும் .. தன் படத்திற்கு இதே போல் தடை வந்துவிட்டால் ஏற்கனவே படத்தை வாங்க ஆளில்லாமல் அலைகிற சுழலில் தற்காத்துக் கொள்ள தமிழரின் தலையாய பிரச்சனையை எடுத்து சொரிந்துக் கொள்கிறார்.. அது கங்கு என தெரியாமல்.. எரிந்து போவீர் எச்சரிக்கை.. .. ஆலஞ்சியார்

Sunday, June 3, 2018

கலைஞர்95

கலைஞர் பிறந்தநாள்.. ஒரே வரியில் சொல்லுங்கள் என்றார் ..நண்பர் .. இன்றைய இளையதலைமுறை இவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்றேன்.. ஆம்.. ஒரு தனிமனிதனாக வாழ்வில் போராட்டங்களோடு வாழ கற்றுக்கொள்ளவேண்டும்.. எதிரிகள் பகைகள் எந்த நேரத்தில் எந்த திசையில் ஏன் கூட இருந்தே கூட வரலாம் நம்மை நிலைகுலைய செய்யலாம் அதை சிறு புன்முறுவலோடு சந்திக்கும் பேராற்றல் வேண்டும்.. வெற்றியை நோக்கிய பயணத்தில் தோல்விகளால் துவண்டுவிடாத நெஞ்சுரம் வேண்டும்.. தன்னை நம்புகிறவர்களை கடைசிவரை நம்பிக்கை பொய்க்காமல் நடந்திடும் நேர்மை வேண்டும்.. தான் செய்கிற நல் காரியங்கள் சிலரின் மூர்க்கத்தனத்தால் பகைமை வெறியால் மறைத்திட்ட போதும் .. அறம் வெல்லும் என்ற அசராத நம்பிக்கை வேண்டும்.. .. எல்லோருக்கும் வாய்க்காது இந்த வாழ்வு தொட்ட துறையெல்லாம் தனி முத்திரை பதித்து வெற்றி கொடி நாட்டும் வித்தை அறிந்த மனிதர்..ஒவ்வொரு துறையிலும் தான் ஏற்ற கொள்கையை .. சத்தமே இல்லாமல் ஏற்றிவிடுவார்.. எதிரிகள் அதை அறிந்துணர்வதற்குள் அடுத்த இலக்கை அடைந்திருப்பார்.. பன்முக ஆளுமை எல்லோரிடமும் அமைவதில்லை எழுத்தாளர் படைப்பாளர்.. அரசியல்வாதி ஆட்சியாளர் ..இயக்க தலைமை.. ராஜதந்திரி.. பேச்சாளர்.. இலக்கியவாதி .. பத்திரிக்கையாளர்... சிறந்த குடும்பத் தலைவர்.. எல்லாவற்றிலும் நெஞ்சுக்கு நீதியாய் வாழ்வதென்பது அரிது.. .. அறிந்துக் கொள்ளுங்கள் .. இளைய தலைமுறையே.. தான் வாழும் காலத்திலேயே வாழ்ந்த காலத்தை #நெஞ்சுக்கு நீதி" யோடு 4500 பக்கங்களுக்குமேல் பதிவு செய்தவர் எவருமே இல்லை.. எதையும் மறைக்காத திறந்த புத்தகமான வாழ்க்கை .. எதிரிக்கும் வாய்ப்பளிக்கும் மேன்மை .. எதையும் ஆய்ந்தறிந்து பகுத்தறிவு நிழலில் நின்று செய்து முடித்த பேராண்மை.. தனி மனித வாழ்வில் மெச்சபட்ட நேர்மை.. நல்ல குடும்பதலைவனாய் .. அதே கொள்கையா குடும்பமா என்று வந்தால் கொண்ட கொள்கைக்காக குடும்பத்தை கூட துறக்கும் வலிமை .. உடல் முழுவதும் அம்மை வந்து கொப்பளமாய் இருந்த போதும் .. பகுத்தறிவு கூட்டத்திற்கு போர்வை கொண்டு போர்த்தி வந்த கொள்கைஉறுதி.. எவராகினும் வீடுதேடி வந்தால் அவர் பகையெடுத்தே வந்தாலும் .. வாசல்வரை வந்து வழியனுப்பிவைக்கும் பெருந்தன்மை .. கூட இருந்தவனே கொலைவாளை உருவினாலும் ..அதை புன்னகையோடு எதிர்த்துநின்று வீழ்த்திய நெஞ்சுரம்.. ஆளும்காலமெல்லாம் .. ஒடுக்கப்பட்டவனை உயர்த்திட உழைத்திட்ட சமூகநீதி.. .சொல்லிக்கொண்டே போகலாம்... ஆம் இதுவரை இப்படியொரு தலைவனை இதற்கு முன் கண்டதில்லை ..இனி வருவது அரிது.. பாடம் படி.. பகுத்தறிவு பகலவனின் கரம்பிடித்து வளர்ந்த .. பெரியாரின் சீடனிடம் இந்த தள்ளாத வயதிலும் நாடு எதிர்நோக்கி நிற்கிறதே.. இந்திய துணைகண்டம் என்றில்லை உலகமே வியந்து போற்றும் ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெருந்தலைவர். இவரே பெருந்தலைவர். .. இவருடைய அரசியலில் இலக்கியத்தில் இல்லறத்தில் இன்னமும் இந்த நாடும் நாமும் கற்றுக்கொள்ள வேண்டியவை..நிறைய இருக்கிறது.. .. எங்களுக்கு ஓர் பேராசை.. கலைஞர் பெருமானே.. உன் கரகரத்த குரலில் தமிழினெனும் வாளெடுத்து வா.. பகையறுக்க வேண்டும்.. .. வாழ்க! எம்மான்.. எங்கள் திராவிட பெருவுடையே.. வாழிய ..வாழிய .. வாழிய பல்லாண்டு.. .. ஆலஞ்சியார்

Saturday, June 2, 2018

பொன்னர்

திரு.பொன்னர் எப்போது ரஜினிபட விநியோகஸ்தர் ஆனார்.. மகா கேவலம்.. அதுசரி கேவலமானவர்களின் வழிதோன்றலாய் நிற்கும் போது சுயமரியாதையற்று சொரணையற்று திரியும் போது தாம் வகிக்கிற பதவியின் பெருமை தெரியாமல் தரைடிக்கட் லெவலுக்கு பேசுகிறார்.. அதுவும்,ஸ்டாலின் திரு.குமாரசாமியிடம் பேசவேண்டுமாம்.. கூடவே தமிழுக்குதான் ஏதுமே செய்யவில்லையென்று சொல்லி அரிப்பை சொரிந்துக்கொள்கிறார்.. .. திமுக தமிழுக்கு செய்ததென்ன என்போரே எம் மொழிக்கு பாஜக அரசால் மறுக்கபட்ட செம்மொழி தகுதியை பெற்று தந்ததே திமுக தான்.. அதைப்பற்றியெல்லாம் அரைடவுசர் போட்டுக்கொண்டு சொரிந்து கொண்டு நிற்கும் பொன்னருக்கு தெரியாமல் இல்லை.. சரி.. ஏன் ரஜினி படத்திற்கு வக்காலத்து வாங்க வேண்டும்.. தனி மனிதரின் வியாபாரத்திற்காக மத்திய அமைச்சர் ஏன் (புரோக்கர்) தரகு வேலை பார்க்கவேண்டும்.. மத்திய அமைச்சராக வேறு ஏதும் பணி இல்லையென்றால் ராஜினாமா செய்யவேண்டியது தானே.. ஏற்கனவே மக்கள் செல்வாக்கில்லாத பாப்பாத்திக்கு காபினெட் பதவி தந்துவிட்டு .. பார்த்தாலே தீட்டென்று ஒதுக்கிவைத்த சமூகத்தவரென்பதால் .. ஒன்றுக்கும் உதவாத இ.அமைச்சராக்கியது மானமுள்ளவராக இருந்தால் வெளியேறி இருக்கவேண்டும் .. அது ரஞ்சித் படம் எனவே ஏன் எதிர்க்கிறீர் என கேட்டு பார்த்து .. அதற்கு தக்கபதிலை .. ரஞ்சித் எனும் கலைஞனின் திறமை வேறு படங்களில் வெளிபடுத்தலாம் அவரின் படமாக இது இருக்காது ரஜினியை முன்னெடுக்கும் படமென்பதும்.. திடீரென புறப்பட்டு பாஜகவின் குரலாய் ஒலித்தவரின் திமிருக்கு திருப்பி அடி கொடுக்கவேண்டுமென்பதற்காக காலாவை தோல்வியுற செய்வது அவசியமாகிறது.. என்றவுடன் .கர்நாடகாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் திரையிட மறுப்பதும், மிக பெரிய பின்னடைவை தரும் அதனால் தான் .. ரஜினியின் பழைய இயக்குனர்கள் இப்போது களம் இறங்கி அவர் போராட்டமே வேண்டாமென சொல்லவில்லை என சப்பை கட்டுகிறார்கள்.. எதுவாகினும் அதற்கான விளக்கத்தை ரஜினி தரவேண்டுமே,தவிர மற்றவர்கள் அல்ல.. எம் மக்களை பார்த்து சமூகவிரோதி என்று சொன்ன பரதேசி (பரதேசி என்றால் பிழைக்க வந்தவன் என பொருள்) பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.. .. குமரி மக்கள் குறிப்பாக நாடார் சமுகம் பொன்னரை வெற்றிப் பெற வைத்தது அவரோடிருந்த மரியாதை காரணமாகவே தவிர வேறில்லை அதை அவரே கெடுத்துக் கொள்கிறார்.. தன் சமூக மக்களின் உயிருக்கு உலையாக வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட அவரே முன்னின்று போராடி இருக்க வேண்டும் அதைவிடுத்து போராடிய மக்களை சமூகவிரோதியென்ற சாக்கடைக்கு வக்காலத்து வாங்குவது கேடுகெட்ட நெறிகெட்ட செயல் .. பாஜகவில் இருப்போரிடம் சுயமரியாதையை மனித தன்மையை எதிர்பார்க்க முடியாது கொஞ்சமேனும் ஈரமிருந்திருந்தால் ரஜினிக்கு பரிந்து பேச வந்திருக்கமாட்டார்.. இதிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது .. ரஜினிக்காக பேசிகிற எல்லோருமே பாஜகவினராக பார்பனனாக .. அல்லது சுயமரியாதை இழந்தவராக இருக்கிறார்கள்.. ஸ்டாலினை பார்த்து .. ஒரு சினிமாவிற்காக பேச சொல்லும் இவர் .. 13 பேர் சுட்டுக் கொல்லபட்டார்களே அதற்காக .. ஏன் இரங்கலை தெரிவிக்கவில்லையென பிரதமர் மோடி பார்த்து கேட்க துப்பில்லை .. ஜனநாயக கடமையை திமுக ஆற்றவேண்டுமாம்.. இந்தியாவிலேயே மிக சிறந்த ஜனநாயகத்தை கொண்ட இயக்கம் திமுக தான் .. அதிகபட்ச ஜனநாயக நெறிமுறைகளை கொண்ட கட்சி.. திமுக குறைகூற இங்கே பொன்னருக்கென்றில்லை எவனுக்குமே அருகதை இல்லை.. .. கலைஞர் எனும் மிகச் சிறந்த ஜனநாயகவாதி .. தலைமைக்கே தனித்துவம் சொல்லும் பேராற்றல் அரசியலுக்கே இலக்கணத்தை கற்பிற்கும் ஆசான் தலைமைப் பண்பின் இலக்கணமாய் திகழும் ஒப்பாரற்ற தலைவர் கலைஞரின் தலைமையில் தொடர்ந்து இயங்கும் .. ஜனநாயக பேரியக்கம் திமுக.. அதை குறைச்சொல்ல கூட ஒரு தகுதி வேண்டும் அது சொரணையற்ற பொன்னருக்கு இல்லை .. ஆலஞ்சியார்..