Friday, March 1, 2019
விழித்தெழுவோம்
அத்தனை ராஜதந்திரங்களும் வீணாய் போனதே..
பாவம் அபிநந்தன் உயிரோடு திரும்புவாரென பாசிசவாதிகள் எதிர்பார்க்கவில்லை எத்தனை அழகாய் திட்டம் தீட்டினாலும் மக்களின் விழிப்புணர்வு கதற வைக்கிறது .. தேர்தலுக்காக நாட்டு மக்களின் மீது ஒரு யுத்தத்தை திணிக்க நினைத்ததும் அதை எதிரி மிக லாவகமாக திசை திருப்பி உலகநாடுகளின் பார்வையில் உயர்ந்து நிற்பதும் எத்தனை அவமானம் இந்த மோடி அரசிற்கு .. இதுவரை இந்தியாவில் இந்தளவு எதிரிநாட்டின் பிரதமரை புகழ்ந்ததாய் வரலாறில்லை அதேவேளை இவ்வளவு இளக்காரமாய் தன் நாட்டு பிரதமரை வெறுத்து பேசியதும் இல்லை .. என்ன காரணம் வேறொன்றும் இல்லை தங்களின சுயநலத்திற்காக எதையும் செய்ய துணியும் கொடுஞ்செயல் .. பொய்யும் புரளியும் துணைக்கொண்டு நாட்டுமக்களை தொடர்ந்து ஏமாற்றியதும் .. கையிருப்பில்லாதவன் கனவுகண்டதைப்போல சொல்லும் செயலும் தொடர்பில்லாதநிலையும் .. மக்களின் எதிர்ப்பையெல்லாம் மீறி சில பணக்கார முதலாளிகளுக்காக பயன்பட்டதும் திடீரென ஒருநாள் நள்ளிரவில் நடுத்தெருவில் நிறுத்தியதும், மனத உயிரைவிட மாட்டிறைச்சியை புனிதமென கருதியதும்,
நடுதட்டு மக்களின் கல்வி கனவில் மண் அள்ளிபோட்டதும் .. சிறுதொழிலை நாசம் செய்து கார்ப்பரேட்டுகளின் நிழலாய் அரசு செயல்பட்டதும் மதத்தை அரசில் புகுத்தி கொலைப்பசி தீர்த்ததும் நாடகநடிகனைப்போல தினமொரு அவதாரமெடுத்தாடியதும் .. மோடியை மக்கள் வெறுக்க காரணம் .. நடிகை ரோகினி "தயை கூர்ந்து தேர்தலில் போட்டியிடாதீர்கள் மோடி" என்கிறார் .. இனியும் இந்த நாடு இழப்பதற்கு தயாரில்லையென்கிறார்.. இந்துத்துவாவிற்கெதிரா பேசுகிறவர்கள் மிரட்டியும் கொலைசெய்தும் கொடூர தாண்டமாடுகிற ஆட்சி தேவையில்லை..
..
முற்போக்காளர்களை கொலை செய்வதும் .. கொலைசெய்தவனை அமைச்சரே நேர்சென்று சிறையில் மாலையோடு வரவேற்பதும் .. தேசபிதாவின் உருவபொம்மையை துப்பாக்கியால் துளைத்து பாரத்மாதாக்கி ஜே போட்டவர்கள் கையில் தேசத்தை நிறுத்தியதும் கொடுமை .. எதில் அரசியல் செய்யலாமென்று கட்சிகள் நினைப்பது இயல்பாக நடப்பதுதான் தாங்கள் தோற்றுபோவோமென அறிந்தவுடன் நாட்டையே யுத்தமுனையில் நிறுத்த துணியும் கேடுகெட்டவர்களை நாடு இனங்கண்டு கொண்டது எதற்கும் துணிந்த மகாபாவிகளாய் பாசிச கூட்டம் மக்கள் முன் வேசம்கலைந்து நிற்கிறார்கள் .. ஒட்டுமொத்த திட்டத்தையும் வெளிகொணர்ந்து எதிரிநாடு நம் தேசத்திற்கு துணைபுரிந்திருக்கிறது .. முன்பெல்லாம் கழுத்தறுத்தும், கயமைகள் புரிந்தும் வெறிக்கொண்டு அலைந்தவர்கள் .. இப்போது சமாதான பேசுகிறார்கள் அகிம்சையை போதித்த அண்ணலின் வழிவந்தவர்கள் ஆயுதமெந்தியனின் அறிவுரையை கேட்கிற நிலையில் நிற்கிறோம் .. குஜராத் தான் காந்தியையும் தந்தது மோடியையும் தந்தது .. மண்ணில் நெற்கதிர்களுக்கு நடுவே களையைப்போல.. நல்ல செடிகளை விளைவிக்கும் மண்ணில் தான் சில விஷசெடியும் வளரும் ..
..
பாஜக நாட்டிற்கு கேடு.. குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கான கட்சி மதமும் சாதியும் சனாதனமும் இந்நாட்டின் வளர்ச்சிக்கு கேடுவிளைவிக்கும் .. முற்றிலுமாக துடைத்தெறியபடவேண்டியவர்கள் .. இனியும் இவர்களை அனுமதித்தால் எண்ணிபார்க்கவே பயங்கரமாக இருக்கிறது .. நாடெங்கும் கலவரமும் கொலையும் மதவெறியாட்டமும் சாதியமோதலும் சர்வசாதாராணமாக நடக்கும் .. இந்த பாசிசபாஜகவின் ஐந்தாண்டு ஆட்சி ஐம்பதாண்டுகள் நம்மை பின்னோக்கி இட்டுசென்றிருக்கிறது ..
இனியேனும் விழித்தெழுவோம்..
பாசிசத்தை துடைத்தெரிவோம் ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment