Sunday, March 24, 2019

தீதும் நன்றும் பிறர்தரவாரா

ஏன் இஸ்லாமியர்களுக்கு தமிழகத்தில் பிரதான கட்சிகள் இந்தமுறை வாய்ப்பளிக்கவில்லை காரணம் என்ன என்பதை இஸ்லாமிய சமூகம் உணர்ந்ததாக தெரியவில்லை .. 5.86% விழுக்காடு (4,229,479) மக்கள் தொகை கொண்ட சமூகம் முற்றிலுமாக புறக்கணிக்கபட்டிருக்கிறது .. அதேபோல சிறுபான்மையினராக இருக்கும் கிருஸ்துவ சமுதாயத்திற்கு (6.26%) எல்லாகட்சிகளிலுமே வாய்ப்பு வழங்கபட்டிருக்கிறது .. மிக குறைவான விழுக்காடு வேறுபாடுதான் ஆனால் அவர்களால் எல்லாகட்சிகளிலும் தங்களின் உரிமையை பெற முடிகிறது ஆதிக்கம் செலுத்த முடிகிறது .. ஏன் இஸ்லாமிய சமூகத்தால் இயலவில்லை..? ஒற்றுமையின்மை .. திமுக தன் தோழமைக்கு ஒரு தொகுதியை ஒதுக்கியதோடு நிறுத்திக்கொண்டது அதிமுக அதுவும் இல்லை.. இதற்கெல்லாம் என்ன காரணம் .. ஒற்றுமை இல்லாமல் 42லட்சம் மக்களுக்கு 42 கட்சிகள் அமைப்புகளாய் பிரிந்து கிடப்பதும், ஒருவரையொருவர் காலைவாருவதும் யாருக்கு தலைமையென்பதில் தொடங்கி .. யார் பெரியவர் .. ஏன் தனக்கு உரிய மரியாதையில்லை பதவி சுகம் என காரணங்களால் மாபெரும் தலைவர்களை தந்த சமுதாயம் இன்று யாருக்கும்,வேண்டாத நிலைக்கு தள்ளபட்டிருக்கிறது .. இஸ்லாமிய இளைஞர்களை வழிகெடுத்ததில் பெரும்பங்கு மத போதகராய் வந்து காமகளியாட்ட புகழ் பி.ஜே வையே சாரும்.. தனக்கு எல்லாம் தெரியும் தான் சொல்வதே சரி என நம்பவைத்து மூளைச்சலவை செய்தது சமுதாயத்தில் பிரிவினையை உண்டாக்கி உறவின் முறைகளை பகைமையாக்கி ... அமைதி மார்க்கமென்று அறியபட்ட இஸ்லாத்தை வேறொரு கோணத்தில் பொது சமூகம் அறிய காரணமானதில் பெரும்பங்குண்டு .. அதிலிருந்து தொடங்கிய பிரிவினைகள் ஆன்மீகம் அரசியல் என மக்களை வேறுபடுத்தி .. எந்த மார்க்கம் ஒற்றுமையை வலியுறுத்தியதோ அதை மறந்து பிரிந்துகிடக்கிறார்கள் வலுவில்லாத எதுவும் வென்றிட முடியாதென்ற யதார்த்தத்தை கூட புரிந்துக்கொள்ள முடியாத சமூகம் ஒன்றுபட்டால் மட்டுமே உயர்வென்பதை அறியாமல் போனது வேதனை .. இஸ்லாமிய சமூகத்திற்கு.. அவர்களின் நலனுக்கு ,பாதுகாப்பிற்கு யார் விரோதமானவர்கள் என்பது கூட விளங்காமல் கூப்பாடு போடுகிறார்கள் .. தங்களின் சட்டைபை நிரம்பினால் போதும் என்கிற தலைவர்களை வைத்துக்கொண்டு இந்த சமுதாயம் இனி எக்காலத்திலும் எதையும் சாதித்துவிட முடியாது .. .. பல்வேறு அமைப்புகள் பல கட்சிகளோடு பயணிப்பதில் தாங்களே இஸ்லாமிய சமுக மக்களின் நலனுக்காக செயல்படுகிறவரென பேசி திரிவதில் காட்டுகிற அக்கறை .. இஸ்லாமிய இளைஞர்களின் கல்வி பொருளாதார வளர்ச்சியில் காட்டியிருக்கவேண்டும் .. யார் சரியானவர் என தெரிந்து அவர்களை ஒருங்கிணைந்து பின்துணைக்க வேண்டும் .. இன்றைக்கும் சிறையில் வாடும் முஸ்லிம்களின் நிலையென்ன யாரால் இந்த நிலைக்கு ஆளானார்கள் யார் தூண்டுதலின் பேரில் செயல்பட்டார்கள் .. அவர்களுக்கு ஏன் தொடர்ந்து வக்காலத்து வழங்கபடாததன் நோக்கம் என்ன நீதிமன்ற நடவடிக்கைகளை விரைந்து செலவு செய்து நடத்ததாது ஏன் .. பல்வேறு கட்டங்களாக நிதி திரட்டியும் வழக்கை சிறந்த வழக்கறிஞர்களை கொண்டு நடத்ததாது ஏன் .. இப்படி நிறைய கேள்விகள் .. பி.ஜே வோடு கூடவே இருந்த ஷம்சுதீன் காஸிமியின் வாக்குமூலம் சுயரூபத்தை காட்டுவதாக இருக்கிறதே .. .. தேர்தல் அரசியலில் தொடர்ந்து பாஜகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவும் செயலை சில அமைப்புகள் தொடர்ந்து செய்துவருகின்றன .. ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவிற்கு எதிரான வாக்குகளை பிரிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன .. கேரள மலப்புரத்தில் கூட இதே செயலை sdpi செய்கிறது .. தமிழகத்தில் பாஜகவின் கைக்கூலிகளோடு மறைமுகமாக / வெளிப்படையாக உதவுகிறார்கள் .. இவர்கள் இஸ்லாமிய சமுகத்தின் புரையோடிய புற்றுகள் .. இவர்களை புறக்கணிக்காதவரை இஸ்லாமிய சமூகத்தின் அரசியல் உரிமைகள் மறுக்கபடும் என்பதே நிதர்சனம் .. தீதும் நன்றும் பிறர்தரவாரா.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment