Tuesday, March 12, 2019

பொள்ளாச்சி

பொள்ளாச்சி .. தொடர்ந்து அதிமுகவை ஆதரிக்கும் கொங்குவின் இன்றைய நிலை மிக பரிதாபம்.. கொங்கு மக்களின் வாழ்வாதாரத்தில் கைரளியரின் பங்கு குறிப்பிடதக்கவகையில் உண்டு கைரளியரான மகோராவின் மீதான இனம்புரியாத பாசம் அதிமுகவிற்கு தொடர்ந்து கைக்கொடுத்தது .. இடையில் பாசிசத்தின் கரம் மெல்ல ஊடுருவியதும் மத சாதிய வெறி தாண்டவமாடியது .. சாதிய திமிர் என்று கூட சொல்லலாம் வளமான வாழ்வும் செழிப்பும் அரசியல் கட்சிகளை மீறி ஊர்கட்டுபாடு என்ற பெயரில் சாதிய அடக்குமுறைகள் நடந்ததுண்டு பெண்களுக்கெதிரான தாக்குதல் தொந்தரவுகள் பெரியளவில் பேசபடாமல் அடைக்கபடும்.. ஊர் கட்டுபாடென்ற பெயரில் அல்லது சாதி குல பெருமையை காப்பதாக சொல்லி நிறைய தவறுகளை மூடி மறைப்பதும் சர்வசாதாரணமாக நடப்பதுதான் .. இப்போது நக்கீரனால் வெளிவந்திருக்கிற பாலியல் குற்றங்கள் மிரட்டல்கள் ஏறக்குறைய ஆறாண்டுகளாக நடந்துவந்திருக்கிறது ஆனால் யாருமே மானத்திற்கு அஞ்சி அல்லது குலபெருமையை காக்க மிரட்டலுக்கு பயந்து மூடி மறைத்திருக்கிறார்கள் .. கடைசியில் வேறுவழியின்றி புகார் அளிக்க ...கடைசியில் பூதாகாரமாய் விசயம் வெளிவந்திருக்கிறது .. ஆனால் இதை ஊடகங்கள் கள்ளமௌனம் காத்ததும் ...எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆளும் அரசின் மூடிமறைக்க பார்ப்பதாக சொல்ல விஸ்வரூபம் எடுத்தது .. சமூகவலைத்தளங்களில் மிக வேகமாக பரவியதும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் என் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பில்லை என பேட்டி தந்து அதிமுககாரர்கள் இதில் சம்பந்தபடவில்லையென சொன்னதும் ஏன் பூனைக்குட்டி வெளியே வருகிறதென சந்தேகம் வர தொடங்கியது .. .. பெண்குழந்தையின் கதறல் நம் செவிகளை கிழிக்கிறது காம கொடூரன்கள் ..மிரட்டி பணம் பறிப்பதும் தர வசதியற்றவர்களை பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துவமாக மிக கேவலமாக நடந்துக்கொண்டிருக்கிறார்கள் .. இவர்கள் கடுமையான முறையில் தண்டிக்கபடவேண்டுமென்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது ஆனால் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்க ஆளும்தரப்பு முயற்சிக்க கூடாது .. இன்றைக்கு தோழர்.கனிமொழி ஆர்ப்பார்ட்டம் நடத்தி கைதானார் .. ஏன் அரசியலாக்குகிறீர்கள் என கேட்கிறார்கள் .. அரசியலாக்க மனமில்லை தான் ஆனால் அரசியலாக்கினால்தான் தீர்வு கிடைக்குமெனில் அரசாங்கம் கவனிக்குமெனில் செய்வதில் தவறில்லை .. பாதிக்கபட்ட பெண் பற்றிய தகவலை தர கூடாதென்கிறது சட்டம் ஆனால் காவல்துறையே பாதிக்கபட்ட பெண் பற்றி தகவலை தந்தது ஏன் .. இனி இதுபோன்ற தவறுகள் நடக்காதென்கிறார் காவல்துறை கண்காணிப்பாளர் .. விசாரித்தது யாரென்று பார்த்தால் பெண்களை நடுரோட்டில் அறைந்தவர் .. இவர்களை எப்படி நம்புவது .. எழாண்டுகளாக நடந்த கொடூரமான செயலில் நான்கு பேருக்குதான் தொடர்பென்றல் நம்புவதாக இருக்கிறதா.. அரசியல்வாதிகளுக்கு இதில் தொடர்பில்லை என காவல்துறை அதிகாரி .. அரசியல்கட்சி கொள்கைபரப்பு செயலாளர் போல அவசர அவசரமாக பேசியது யாரை காப்பாற்ற.. என கனிமொழி அரசிற்கெதிராக ஆணியடித்தார்.. .. நக்கீரன் ஆசிரியர் கோபால் .. வெளிப்படையாகவே பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களை குற்றம்சாட்டுகிறார் .. இதெற்கெல்லாம் தீர்வு கிடைக்கவேண்டுமெனில் .. இதை அரசியலாக்கினால் தான் உண்மை வெளிவரும் .. தேர்தல் நேரத்தில் அரசியலாக்காதீர்களென தமிழிசை புலம்புகிறது .. ஏன் கலக்கம் சம்பந்தபட்டவர்கள் அதிமுகவினர்கள் என்பதாலா அது மிகப்பெரிய சரிவை தருமென்பதாலா.. இந்துக்களுக்கென்றால் காவி புரட்சி வெடிக்குமென்றவர்தானே .. இதோ இப்போது வாய்மூடி மௌனிப்பதேன் .. அரசியலுக்காக சொல்லவில்லை விரட்டபடவேண்டியவர்கள் சங்கிகள் .. .. திமுகவிற்கு அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நடந்துகொள்ள வேண்டிய கடமை இருக்கிறது பாதிக்கபட்ட பெண்களுக்காக மட்டுமல்ல இனிமேல் யாரும் பாதிக்ககூடாதென்ற அக்கறை இருக்கிறது .. இந்த கேவலமான காமகொடூரன்களை பெண்களை மிரட்டி சீரழித்த கயவர்களை சட்டத்தின் கொண்டுவரவேண்டிய பெரும் பொறுப்பு திமுகவிற்கு உண்டு அதைநிச்சயம் செய்யும் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment