Sunday, March 31, 2019

பெண் ஆளுமைகள்

பெண் ஆளுமைகள் பொதுவாழ்விற்கு வருவதற்கு மிகவும் தடையாக இருக்கிற சமூகசூழலிலும் சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மின்னி கொண்டுதானியிருக்கிறார்கள் அரசியல் பின்புலம் கொண்ட குடும்பங்களில் கூட பெண்களை தங்களோடு சேர்ந்து பயணிக்கவோ அல்லது தனித்து செயல்படவோ விடுவதில்லை பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு நிறைய தடைகற்களை சமூகம் குடும்பம் நட்புவட்டம் என எல்லாபக்கங்களிலிருந்தும் கூர்தீட்டிய ஈட்டியை புன்னகையோடு எறிவார்கள் .. நமக்கெல்லாம் செட்டாகாது .. ஆண்கள் நிறைந்த அரசியலில் ஒரு எல்லைவரைதான் பயணிக்க முடியும் என தடைகளை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்கள் அவர்களின் அசௌகரியங்களை சுட்டிகாட்டுவார்கள் பெண்களை குலசாமி என்ற புகழ்ந்து அழுத்திவைக்கவே இந்த சமூகம் விரும்பும் அரசியல் என்றில்லை இலக்கியங்களில் கூட புகழ்ந்தே உயர எழ முடியாமல் செய்வார்கள் மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்றெல்லாம் பிதற்றி .. வாய்ப்பை தரமறுத்து மங்கையரை அவர்கள் விரும்புகிற விடயங்களில் பிரகாசிக்க விடுவதேயில்லை .. .. 33% விழுக்காடு கேட்டுகேட்டு தளர்ந்து போனதுதான் மிச்சம் இந்திய ஜனநாயகம் உலகில் பேசபடுகிற சிறந்துவிளங்கிற நிலையில் கூட பெண்களுக்கான உரிமையை தர மறுக்கிறோம் அத்திபூத்தாற்ப்போல சிலர் வருகிறார்கள் அப்படி வருகிறவர்களை நாம் கொண்டாட வேண்டும் அரசியலில் சில பெண்களின் வரவால் இந்த நாடும் சமூகமும் பின்னடைவை சந்தித்தபோதும் சில பெண் ஆளுமைகளை நாம் கொண்டாட மறுத்ததாலேயே பிரேமலதா போன்றவர்களில் வியாபார உக்தியை கையிலெடுத்து திரிகிறார்கள் .. ஒரு சிலரின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லையென்பதால் பெண்களின் வரவில் அதிகம் அக்கறை காட்டுவதில்லை மாறாக கடுமையான விமர்சனங்கள் எழுகிறது இது பாலியனத்தால் வருவதல்ல என்பதை உணரவேண்டும் நிறைய தடைகள் இருந்தபோதும் மிகசிறந்த ஆளுமைகளாக இந்திரா பிரியதர்ஷினி போன்ற பிரமாண்ட ஆளுமைகளை நாடு கண்டிருக்கிறது .. .. இந்த தேர்தலில் சில பெண் ஆளுமைகள் பளிச்சென்று தெரிவது மகிழ்வை தருகிறது .. கனிமொழி கருணாநிதி ஜோதிமணி தமிழச்சி .. போன்றவர்கள் தமிழகத்தின் ஒளியாய் பிரகாசிக்க வருகிறார்கள் இவர்கள் சிறந்த பண்பாளர்களாய் பேராளிகளாய் கொள்கையில் தெளிவும் சுயமரியாதையும் கொண்டவர்களாய் இருப்பது பெருமைக்குரிய விடயம் இவர்களின் வெற்றி என்பது தமிழகம் எப்போதும் சுயமரியாதைக்கும் பெண்ணுரிமைக்கும் போராடும் களம் என்பதை உறுதிபடுத்துவதாக அமையும் .. நிறைய பெண்கள் களத்தில் உண்டென்றாலும் திறமையானவர்களாக தெளிவான சிந்தனையுடையவர்களாக .. இந்த மண்ணின் பெருமையறிந்தவர்களாக.. பாசிசத்திற்கெதிரானவர்களாக.. மண்சார்ந்த பண்பாட்டை மதிக்கிறவர்களாக இவர்கள் இருப்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது .. இவர்கள் வெற்றி பெற வைப்பது நமது கடமையாகும் .. நம் இனத்தின் சுருதிபிழைகள் சில வந்து நிற்கும் ஆனால் வெறுக்கதக்க கோட்பாட்டோடு பேரிறிச்சலை தருவார்கள் அவர்கள் பேராப்பத்துகள் .. பிரேமலதாவை போல சில ஆபத்துகள் இசை வடிவிலும் வரும் அவர்கள் புறக்கணிக்கபடவேண்டியவர்கள் .. .. நம்மோடு பயணிக்கிற.. நல்லதொரு சமூகபார்வையும் அரசியல் நெறிசார்ந்த அறமும் கொண்டவர்களை வெற்றிபெற வைப்போம் அதுவே நாட்டிற்கும் இனத்திற்கும் நல்லது .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment