Saturday, March 2, 2019
சமுதாயத்தின் புல்லுருவிகள்
பாஜக எதிர்ப்பில் திமுகவைவிட தினகரன் பெட்டர் .. SDPI. தலைவர் நெல்லை முபாரக்
எந்தவொரு கட்சியும் தங்களுக்கான இடங்களை பெற வேண்டுமென்பதில் தாங்களும் அங்கரீக்கபட வேண்டுமென்பதில் சிரத்தை காட்டுவது இயல்பு .. எல்லாகட்சிகளுக்கும் இடம் தர இயலாமல் போவதும் அணி மாறி செயல்படுவதை கூட தேர்தல் ஜனநாயகத்தில் இயல்பாக எடுத்துக்கொள்ளலாம்,.. சிலர் வியாபார நோக்கோடு யார் அதிகம் தருகிறராரோ அவரோ சேர வேண்டுமென நினைப்பது கொள்கைகளை தாண்டி தங்கள் நிலைநிறுப்பை உறுதிசெய்ய பயணிக்கிறார்கள் என்று கூட எடுத்துக்கொள்ளலாம் .. அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை .. ஆனால் அதற்காக சொல்லபடும் காரணங்களில் நியாயம் இருக்க வேண்டும் .. திமுகவை விட தினகரன் பாஜக எதிர்ப்பாளராம் .. கேட்காமலேயே நாடாளுமன்றத்தில் ஆதரிப்பதும் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பதும் பாசிச எதிர்ப்பில் வராதா..? அதற்கு அதிமுகவிற்கு ஆதரவு தந்துவிட்டு தனியரசை போல நான் பாஜகவிற்கு வாக்கு கேட்கமாட்டேனென சொல்லியிருக்கலாம் ..
..
sdpi எங்கெல்லாம் முஸ்லிம் வாக்குகள் அதிகமிருக்கிறதோ சமுதாய மக்கள் அதிகம் வசிக்கிறார்களோ அங்கே நின்று வாக்குகளை சிதற செய்து பாசிசத்திற்கு துணைபோவதுதான் அவர்களுக்கு கொடுக்கபட்ட பணி இந்தியா முழுவதும் காங்கிரஸ் மற்றும் பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்காமல் பிரித்து பாஜகவின் வெற்றியை உறுதி செய்யும் பெரும்பணி மிக சிரத்தையோடு செய்துவருகிறார்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களின் மத்தியில் விரோதபோக்கை வளர்ப்பதில் பெரும்பங்காற்றுவதில் முன்னணி கட்சியாக திகழ்கிறார்கள் .. உவைஸியின் AIMIMம் SDPI ம் இஸ்லாமிய மக்களின் ஒற்றுமைக்கு உலைவைக்கிற கட்சியாக திகழ்கிறார்கள் .. எதிரிக்கு வேலையை சுலபமாக்கும் செயல் ..
..
யாரோடும் கூட்டு இல்லை என்றவர்கள்தான் பிறகு வாக்குவங்கியை சிதறடிக்க .. பாசிச ஏற்பாட்டின் செயல்வடிவமாய் தமிழகத்தில் முஸ்லிம்லீக் மற்றும் திமுக ஆதரவு முஸ்லிம் அமைப்புகளின் வாக்குகளை பிரிக்க அதன் மூலம் திமுக வெற்றியை தடுக்க முயலுமா என்ற நோக்கோடு செயல்படுவதை அந்த சமூக மக்கள் புரிந்துக்கொள்ளவேண்டும் .. தினகரனால் பாஜகவின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த முடியாது ஆனால் திமுகவால் அது முடியும் அதைவிட தெளிவாக தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் பாசிச பாஜகவோடு எந்த தருணத்திலும் கூட்டணி இல்லையென்று சொன்னதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து எதிர்த்தும் மோடியை திரும்பி போ என புகழ்பெற்ற வாசகத்தை மோடி வரும்போதெல்லாம் டிரண்டாக்கியும் பாஜகவிற்கு எதிர்ப்பை வெளிப்படையாக சொல்லி பாஜகவை வீழ்த்த காங்கிரஸால் தான் முடியுமென தீர்க்கமாக அறிந்து அதை இந்தியளவில் பேசவைத்து இந்த பாசிச ஆட்சி அகற்றபடவேண்டுமென்ற ஒற்றை நோக்கோடு செயல்படுகிறார் அவரை பின்துணைப்பது இஸ்லாமிய சமூகத்திற்கு மட்டுமல்ல பொது சமூகத்திற்கும் செய்கிற நற்செயல் .. தமிழகத்தில் திமுகவின் வெற்றி உறுதி செய்யபட்டதென்றாலும் எதிரிகளின் தோல்வி வரலாறு காணாதாக இருக்க வேண்டும்.. அதை நோக்கிய பயணம் அந்த சமூகத்திற்கு செய்கிற தொண்டு .. மாறாக பாஜகவின் ஊதுகுழலாக இலைமறைவில் ஆதரவை தருவதற்கு பதில் நேரடியாக அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவோமென சொன்னால் கூட அது நேர்மையான செயல்பாடாக கருதலாம் .. சொந்த சமுதாயத்தை சூழ்ச்சியால் பிரித்து முஸ்லிம் லீக் வேட்பாளரின் வெற்றியை தடுக்க நினைப்பதற்கு பெயர் துரோகம் .. அதைதான் sdpi உவைஸியின் (AIMIM)
All India Majilis -e-Ittehadul Muslimeen
போன்ற கட்சிகள் செய்கின்றன.. முஸ்லிம் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் இடம்பெற வேண்டுமென்றால் SDPI போன்ற கட்சிகளை சமுதாய மக்கள் புறக்கணிக்க வேண்டும் அது சமுதாயத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கும் செய்கிற மிகப்பெரிய நன்மை ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment