Monday, March 11, 2019

ஆட்சி மாற்றம்

தேர்தல் ஜனநாயக நாட்டில் நம்பிக்கையோடு காத்திருந்து நாம் விரும்புகிறவரை அல்லது கட்சியை ஆட்சியில் அமர்த்த நடக்கிற திருவிழா .. .. அனைத்து மரபுகளையும் தூக்கிபோட்டு மிதிக்க சர்வாதிகார சிந்தனையுடய ஆட்சியை கீழிறக்க .. பாசிச சிந்தனையை பரவலாக மக்கள் மீது திணிக்க துணிகிற .. பல்வேறு மொழி இன கலாச்சாரத்தை அழித்து பார்பனீய கலாச்சாரத்தை திணிக்க முயல்கிற ..சாமானிய மக்களை சுரண்டி .. பண முதலாளிகளுக்கு வெண்சாமரசம் வீசுகிற .. சிறுதொழில்களை நசுக்கி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழிவகை செய்கிற .. எல்லாவற்றிலும் பொய் பேசி திரியும் மூடர்கள் கூட்டத்தை அஞ்சாமல் ஆவணங்கள் திருட்டு போவதாக உச்சநீதிமன்றத்திலேயே வாக்குமூலம் தருகிற .. பாதுகாப்புத்துறைக்கே பாதுகாப்பில்லாத நிர்வாகத்தை தந்து இந்தியாவை தலைகுனிவை ஏற்படுத்திய கல்வியை பணமுள்ளவனுக்கென்று மாற்றி ஏழைகளின் உயர்கல்விக்கு வேட்டுவைத்த நாட்டுமக்கள் எதிர்ப்பை மீறி கனிமவளத்தை கொள்ளையடித்த .. எதிர்த்த மக்களை சுட்டுகொன்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிக்கிற .. ஒரே நாளில் மக்களை நடுத்தெருவில் நிறுத்தி பணமதிப்பிழப்பென்ற பெயரில் கருப்பு பணத்தை வெள்ளையாக்க துணைநின்ற .. மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் கோடிக்கணிக்கை மக்களிடம் பிடித்த பணத்தை பணமுதலைகளிடம் கொடுத்து அவர்களை வழியனுப்பிவைத்த.. மாட்டுக்காக மனிதனை கொன்று ருத்ரதாண்டவமாடிய .. மாட்டுக்கு தரும் மதிப்பை பச்சிளங்குழந்தைக்கு தராமல் ஆகிஜிஸன் இல்லாமல் கொன்று குவித்த .. பாசிச ஆட்சியை விரட்டிட தேர்தல் திருவிழா வருகிறது .. .. தமிழகத்தில் அடிமைகளாய் இனமானமற்று .. கண்டவனுக்கும் விலைபோகிற அடிமைகள் .. சொந்தமார நிற்க முடியாதவனை தூக்கிபிடிக்கிற அவலம் நோட்டோவோடு போட்டிபோடுகிறவர்களுக்கு விசிறி வீசும் கேடுகெட்ட கயவர்களை மத்திய அரசு செய்ய நினைக்கிறதை எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் .. தமிழக நலனுக்கெதிரானதென்றாலும் உடனே தலையாட்டி சம்மதம் தெரிவித்து ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிராக செயல்படுகிற .. எங்கே தாங்கள் செய்த ஊழல்களால் கொள்ளைகளால் ..சிறை செல்ல நேரிடுமோ என அஞ்சி பாசிச கூட்டத்திற்கு அடிமையாய் .. மானமிழந்து நிற்கும் மடையர்களின் ஆட்சியை வீழ்த்த இடைத்தேர்தல் வருகிறது தமிழினத்தை வீழ்த்த நினைக்கிற தமிழர்களை அடக்கி ஆள நினைக்கிற .. தமிழர் நலனுக்கெதிராக செயல்படுகிற .. மிக சிறந்த தலைவர்களை தந்த தமிழகத்தின் அழியாத பழியை தந்து நம்மை கேவலபடுத்திய ஆட்சியை.. கொலை கொள்ளை என்ற பட்டியலில் .. இதோ பெண்குழந்தைகளின் கதறல் .. இனியும் இந்த அதிமுக ஆட்சி தொடரவேண்டுமா தமிழகம் இழந்த பெருமைகளை மீட்க அதிமுகவை வீட்டுக்கும் அனுப்ப தேர்தல் வந்திருக்கிறது .. .. நாட்டின் நலன் கருதி .. பேயாட்டம் ஆடும் பாசிச ஆட்சியை வீழ்த்தி .. காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் .. தமிழகத்தில் திமுக ஆட்சியை நேர்மையான ஜனநாயக முறையில் அமைத்திட 18 தொகுதிகளிலும் வெற்றியை தருவோம்,.. நாடாளுமன்றத்திலும் 40 தொகுதிகளில் வெற்றியை தந்து அமைதி புரட்சியை செய்வோம்,.. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் கொலை கொள்ளை ஊழலுக்கெதிராக மட்டுமல்ல பொள்ளாச்சி பெண்களை சீரழித்த குற்றவாளிகளையும் தண்டிக்கமுடியும் .. ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment