Sunday, March 3, 2019
ரபேல்...இருந்திருந்தால்
ரபேல் விமானம் இல்லாததால் தான் இந்த நிலை என்கிறார் பிரதமர் மோடி.. நாட்டின் ராணுவ அமைப்பையே பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை அவரே அறியாமலேயே சொல்லியிருக்கிறார் உண்மையில்
"தகுதியுள்ள ஒரு தலைவன்" பிரதமராக இல்லாததே இந்த நிலைக்கு காரணம் .. எதை அரசியலாக்க வேண்டுமென அறிந்திருக்கவில்லை மலிவான வாக்கு அரசியலுக்காக ராணுவ நடவடிக்கைகளை வெளியே சொல்லி புகழ்பாட நினைத்து கடைசியில் கேவலபட்டு நிற்கிறார் .. மிக புத்திசாலித்தனமாக செய்யவேண்டிய நடவடிக்கைகளை அரசியல் லாபகணக்கில் சேர்க்க கடைசியில் அது நஷ்டகணக்காக போனது ..
..
இந்திரா காந்தி காலத்திலேயே யுத்தத்தை பார்த்தது தான் ஆனால் அவரின் நடவடிக்கைகளில் இந்திய திமிர் இருந்தது வெற்றி ஒன்றே இலக்கு அதை விளம்பரபடுத்தி கட்சியை வளர்க்கவோ.. பதவியை தக்கவைக்கவோ முயற்சிக்கவில்லை கட்சிக்கும் தனக்கும் பலம்சேர்க்கும் நடவடிக்கையாக பார்க்காமல் நாட்டின் இறையாண்மை பாதுகாப்பு மட்டுமே கருத்தில் கொண்டு வீரமங்கையாய் செயல்பட்டார் .. எந்த நிலையிலும் ராணுவ நடவடிக்கைகளை வெளியே கசியவிட்டதில்லை.. ஆனால் மோடி அடுத்த நொடியே ராணுவ தாக்குதலை பாஜகவின் செயல்பாடாக மாற்ற முயற்சிப்பதும் அதை மக்கள் புறக்கணிப்பதுமாகவே இருக்கிறது ..
..
யுத்தசூழலில் கூட நாட்டின் பிரதமரோடு மக்கள் கைகோர்க்க தயாராக இல்லாதது ஏனென்று புரியவில்லையா.. இதுவரை எந்த பிரதமருக்கு இல்லாத அளவு எதிர்ப்பு நாடெங்கும் தன்னெழுச்சியாய் கிளம்பியிருப்பது பிரதமருக்கு தெரியவில்லையா.. ஏன்,..இத்தனை கசப்பு ..ஆரம்பம் முதலே பொய்யை மட்டுமே ஆயுதமாக கொண்டு அரசியலில் வலம் வந்தவர் படிப்பு பொய் செய்த தொழில் பொய் .. கல்வி சான்றிதழ் பொய் என அரசியலின் அடிப்படை நேர்மை கூட இல்லாமல் நடந்துக்கொண்டவர்.. குஜராத்தில் முதல்வராக இருந்த நடந்த கலவரமும் வன்முறையும் உயிரிழப்பும் இவரை பிரதமர் வேட்பாளராக்க ஆர்எஸ்எஸ் துணிந்தது .. அப்போது வாஜ்பாய் சொன்ன வாசகம் பிரசித்தம் .. குஜராத் கலவரத்தை பார்வையிட்ட பின் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் "அரச தர்மத்தோடு" நெறியோடு நடந்துக்கொள்ளுங்கள் என்றார் .. அந்த அரசநெறி அப்போதுமில்லை இப்போதுமில்லை ..
இந்தியா கண்ட பலவீனமான பிரதமர் மோடி .. எல்லாவற்றை அரசியலாக்கும் இழிநிலை யாருக்கும் வந்ததில்லை சொந்த நாட்டுமக்களே இவரின் நடவடிக்கையை பார்த்து எதிரிநாட்டு பிரதமரை புகழ்கிறார்களென்றால் இவர் அரசின் செயல்பாடு எவ்வளவு கீழ்தரமானதென்று விளங்கும்..
..
ராணுவ வீரனின் புகைப்படைத்து வைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறது பாஜக இதிலிருந்தே இவர்களின் பலவீனமான ஆட்சியை மக்கள் எந்தளவு வெறுக்கிறார்களென்று தெரிகிறது .. சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க வக்கில்லை .. செய்ததெல்லாம் மக்களுக்கெதிரானது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் வளர்ச்சிக்காக ஒட்டுமொத்த இந்தியருக்கு எதிரான செயலை கொஞ்சமும் அச்சமின்றி செய்துவிட்டு வாக்குகேட்க வருகிறார் செய்துமுடித்த சாதனைபட்டியலின் உண்மையறிய தகவல் உரிமையிடம் கேட்டால் இவர்களின் பொய் அம்மலமாகிறது இதுதான் பாஜகவின் நிலை .. மறந்தும் இவர்களை நம்பி வாக்களித்தால் நாட்டை வன்முறையால் தாண்டவமாடி சிதறடித்துவிடுவார்கள் ..
பாசிசவாதிகளை விரட்டிட வேண்டும் .. இன்றைய நிலையில் காங்கிரஸை .. ராகுலை பிரதமராக்க ஒரணியில் திரளவேண்டும்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment