Wednesday, March 13, 2019
உதயசூரியன்
தஞ்சாவூர்..
எங்க மண்ணில விளைச்ச நெல்ல அளக்கும் போது முதல் மரக்காயை
லாபம் என்று தான் அளப்போம் .. அதே போல தஞ்சாவூரை வாசனுக்கு தந்து திமுகவிற்கு லாபத்தை வரவு வைத்திருக்கிறார்கள் இந்த முறை திமுகவின் வெற்றியை எதிரிகளே வசப்படுத்துவார்கள் ..
..
பொய்யும் புரட்டும் சூதும் வஞ்சனையும் கொள்ளையும், சேர்ந்து வருகிறது சிரித்துக்கொண்டே.. கொஞ்சமும் கூச்சமின்றி நேற்றுவரை ஒருவரை ஒருவர் திட்டியும் பழித்தும் குறைகூறியும் வந்தவர்கள் பணமொன்றே பிரதானமாய் கொண்டு ஒன்று சேர்ந்து பொய்யாய் சிரித்து நம்மை கேலியாக்குகிறார்கள் .. எதையும் வாங்கிவிடலாமென்ற திமிரும் ஆளும் நாட்டை ஆளும் பாசிச அரசின் தயவும் இருப்பதால் தங்கள் தலைக்குமேலே தொங்கும் ஊழல்வழக்குகள் குற்றங்கள் எல்லாவற்றையும் மறைத்து விடலாமென்ற ஆணவத்தில் ஒன்று சேர்ந்து வருகிறார்கள் அவர்களோடு வாசன் ..ஏற்கனவே சொந்த ஊரில் கட்டிவச்ச காசை இழந்த தமாகா .. இப்போது இருக்குமிடமே தெரியாமல் இருக்கிறது இந்நிலையில் தஞ்சையில் போட்டியிட்டு கட்டிவச்சதும் போகபோகிறது கூடவே மூப்பனாரின் பெயரும் புகழும் மானமும்..
..
தமிழகத்திலிருந்து சென்றவர்களால் மதிப்பிழந்து மரியாதை போய் தமிழர்களென்ற கர்வத்தோடு திரிந்ததெல்லாம் பழங்கதையாய் போனது கடந்த முறை தேர்வாகி சென்றவர்களால் .. அதை மீட்கவேண்டும் இம்முறை அறிவுடையோரை ஆக்கபூர்வமாய் செயல்படுவோரை தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டோரை அனுப்பிவைப்போம்.. தமிழர்களுக்கெதிராய் செயல்படும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட இம்முறை உதயசூரியனின் ஒளியில் மிளிரும் தோழமைகளை வெற்றி பெற செய்வோம் ..
#ராகுல் நம்பிக்கைக்குரியவராய் வருகிறார் எதையும் துணிவோடு எதிர்க்கொள்ளும் ஆற்றல் இயல்பாகவே பெற்றிருக்கிறார் ..பகட்டில்லா எளிமை பொய்யில்லா தூய்மை அறநெறியோடு அரசியல் எதையும் உள்வாங்கும் தெளிவு குறிப்பாக புதிய வாக்காளர்களிடையே நன்மதிப்பு .. அரசியலில் இவரை போன்ற இளைஞர்கள் கையில் நாடு இருந்தால் எதையும் வெல்லலாம் ..புதிய இந்தியாவை உருவாக்குவதாக கூறி நம்மை பின்னோக்கி இழுத்து சென்றவர்கள் .. மதமோதலையும் சாதியவெறியையும் புராணம் புரட்டு மநுநீதி என நம்மை இழிநிலைக்கு ஆளாக்கி நிறுத்தியிருக்கிறார்கள் .. தூய்மையான இந்தியா என்று சொல்லி நம்மை ஒன்றுமில்லாமல் துடைத்ததுதான் மிச்சம் ..
ராகுலை ஏன் வேண்டுமென்கிறோம்
”நீட்” தேர்வை பற்றி ராகுல் காந்தி :
எங்களுக்கு பிரச்னை புரிகிறது. அது இந்த மாநில இளைஞர்களுக்கு பாகுபாடு காட்டுகிறது. நாங்கள் திறந்த மனம் உள்ளவர்கள், இது கண்டிப்பாக சரிசெய்ய முடியும். இதற்கு தீர்வு எட்டப்படும் 😍 ❤
Rahul Gandhi on NEET :
We understand the issue, its discriminatory against youngsters in this state. we are flexible people, we can work it out. It's resolvable. 😍
..
வெறுப்போடு இருப்பவர்கள் மீது அன்போடு இருங்கள்
எல்லா மதங்களும் அன்பைதான் போதிக்கின்றன, அன்புதான் அடிப்படை அன்பு மூலமாகத்தான் கோபத்தை குறைக்கமுடியும். நமக்கு கற்றுக்கொடுப்பவர்களை நாம் வெறுக்கமுடியுமா? அதனால் அவரை (மோடியை) அணைத்துக்கொண்டேன். நரேந்திர மோடியின் மீது அன்பு செலுத்த நபர்கள் இல்லாததால்தான் அவர் வெறுப்போடு இருக்கிறார்என்று எண்ணுகிறேன். உங்களை தாக்குபவர்கள்தான் உங்களின் ஆசிரியர்கள் என்று நீங்கள் கருதவேண்டும். வெறுப்போடு இருப்பவர்கள் மீது அன்போடு இருங்கள். இதுதான் இந்திய நாட்டின் குணம், குறிப்பாக #தமிழ்மக்களின் குணம்,''
உயர்ந்த பேச்சு மிக சரியான நபராக மிளிர்கிறார் ராகுல்
..
ராகுலை பிரதமராக்க தமிழகத்திலிருந்து பெருவாரியான தொகுதிகளை திமுக கூட்டணி வெற்றிபெறுவது அவசியம் நிச்சயம் நடக்கும் தெளிவோடு ஒருமுறை சிந்தித்து திமுக கூட்டணியை வெற்றிபெற செய்வோம் ..
..
#உதயசூரியன்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment