Saturday, March 23, 2019
கைநாட்டு
கைநாட்டு..
ஒருவரின் அடையாளமாய் அவரின் கையெழுத்தும் கைநாட்டும் உறுதிபடுத்த பயன்பட்டது ஆனால் இப்போதெல்லாம் கைநாட்டில் கூட போலிகள் உலவுகிறது .. ஜெயலலிதாவின் கைநாட்டு போலியானதென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பெழுதி .. திருபரங்குன்றம் போஸின் வெற்றியை செல்லாதென்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது .. எம்எல்ஏ மறைந்து சிலகாலம் ஆனபின் தீர்ப்பு வந்து யாருக்கு பயன் என்றெல்லாம் கேட்டால் அவமதிப்பாய் நீதிமன்றம்
கருத்தில் கொள்ளும் .. கைநாட்டு போலியானதா இல்லையா என்பதை விசாரிப்பதற்கு கூட வருடங்கள் தேவைபடுகிறது .. ஜெயலலிதா சிறை சென்ற போது அவரிடம் சிறை அதிகாரிகளால் பெறபட்ட கைநாட்டையும் வேட்புமனு தாக்கலின் போது பரிந்துரைத்த கடிதத்தில் உள்ள கைநாட்டையும் ஒப்பிட்டு பார்த்தாலே போதும் ...இருவாரங்களில் தீர்ப்பே தந்துவிடலாம் ஆனாலும் நாம் இந்திய நீதிமன்றங்கள் இன்னமும் நம்பிக்கொண்டுதானிருக்கிறோம் ..
சரி தீர்ப்பில் சில சுவாரஸியமான தகவல்களை நீதிபதி சொல்கிறார்
..
ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தார் என்பதற்கு சாட்சியம் இல்லை .. பாலாஜி செல்வதற்கு முன்பே கைநாட்டு பெற பட்டிருக்கிறது .. தேர்தல் படிவத்தில் கைநாட்டை ஒரே கடிதத்தின் மூலம் ஏற்றது சட்டவிரோதம் .. தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கட்சியின் ஊதுகுழலாக செயல்பட்டிருக்கிறார் .. தேர்தல் அதிகாரிக்கு அழுத்தம் தரபட்டிருக்கிறது .. கூடவே ஆளுநரே சந்திக்க முடியாத போது டாக்டர் பாலாஜி பார்த்தார் என்பதை ஏற்க முடியாது .. இதுதான் தீர்ப்பின் முக்கிய விடயங்கள் ..
அப்படியெனில் டாக்டர் பாலாஜி தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி மீது ஏன் நடவடிக்கைக்கு பரிந்துரைக்க கூடாது .. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே கேலிகூத்தாக்கியிருக்கிறார்கள் யாருக்காக எவர் நிர்பந்தத்தின் பேரின் செய்தார்கள் ..
ஜெயலலிதா அப்போதைய நிலை என்ன..? இவர்களை எல்லாம் உயர் அதிகார வர்க்கத்தையே ஆட்ட்வைத்தது யார் .. தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீதான குற்றசாட்டிற்கு பதில் என்ன.. ?
..
ஜெயலலிதாவின் கைநாட்டு போலி என்பதை கண்டுபிடிக்க இத்தனை வருடம் காத்திருந்ததில் யாருக்கு பயன் .. ஏற்கனவே டான்சி வழக்கில் இதேபோல் ஜெயலலிதா தான் சுயநினைவோடு இட்ட கையெழுத்தையே இல்லை என்ற கூறியவர்தான் .. கடைசியில் எங்கே மாட்டிக்கொண்டு சிறைக்கு சென்று விடுவோமோ என அஞ்சி .. டான்சி சொத்தை திருப்பி அரசுக்கே தந்துவிடுகிறேன் என உச்சநீதிமன்றத்தில் சொன்னவர்தான் .. ஜெயலலிதாவிற்காக இந்திய நீதிமன்றங்கள் வழங்கிநின்றதும் .. வாயிதாக்களுக்கு மேல் வாயிதா போட அனுமதித்ததும் .. விசாரணை முடிந்து தீர்ப்பை காலதாமபடுத்தி .. அவர் மரணிக்கும் வரை காத்திருந்து பிறகு தீர்ப்பு வழங்கியதும் .. அதனால் திருடி ஜெயலலிதா உத்தமர் போல சித்தரிக்கபட்டு .. சட்டமன்றத்தில் படதிறப்பு அரச மரியாதையோடு அடக்கம் .. அரசு செலவில் குற்றவாளிக்கு மணிமண்டபம்.. கடைசி பாரதரத்னா விருதுக்கு பரிந்துரை .. இவ்வளவிற்கும் காலதாமதமான நீதியே காரணம் ..
..
ஜெயலலிதாவிற்காக நீதித்துறை வழங்கிய சலுகைகள்
நீதித்துறை வரலாற்றில் கருப்பான பக்கங்களாகவே வரலாறு பேசும் நாட்டின் இன்றைய அவநிலைக்கெல்லாம் தாமதமான நீதியே முக்கிய காரணம்
கலைஞரின் மொழியில் சொல்லவேண்டுமெனில் ..
நல்லவனுக்கானதா நீதி.. இங்கே வல்லவனுக்கானதே நீதி..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment