Tuesday, February 26, 2019
அறம் வெல்லும்
கொடுத்தவேலையை ஒழுங்காக செய்கிறார் நடிகர்
ஆனால் பலன்தான் இல்லாமல் போகிறது .. முதலில் ராகுலை சந்தித்தும் பேசி மய்யம் கொள்ளலாமென்றிருந்த கனவு தகர.. கம்யூனிஸ்டுகளோடு கதைக்க சென்று .. முகம் கறுத்து திரும்பும் நிலை .. திமுக வாக்கு வங்கியை சிதைக்க முடியாதென அறிந்து கூட்டணிகளை பிரிக்க பாசிச மேலிட கட்டளையை நிறைவேற்ற பாவம் படாதபாடுபட்டு நடிக்க வேண்டியிருக்கிறது .. அரசியல் இன்னும் அறிந்திருக்கவில்லை எங்கே யாரை எப்படி பலவீனபடுத்துவதென சூட்சமமெல்லாம் நிறைய கற்றதற்கு பிறகே கைகொடுக்கும்.. எதிரியை பலவீனபடுத்த மக்கள் விரும்பதாக கூட்டணி அமைய
கூட்டணி சேர்வார்கள் என்பவரோடு பேசுவார்த்தை நடத்தி எதிராளிகள் அதிக இடங்களை ஒதுக்க செய்யும் தந்திரம் இதெல்லாம் திமுகவிற்கு ஆரம்பநிலையிலேயே தெரியும் இன்றைக்கு பாமக அதிமுக கூட்டணியை கட்சிகாரர்கள் மட்டுமல்ல வன்னிய சமூகமே வெறுக்கிறதே .. அதிமுக அதிக இடங்களை ஒதுக்கியும் பலனற்று போகுமென பட்சி சொல்ல தொடங்கியிருக்கிறது .. எதிரியை பலம் கொண்டு மோதுவது மட்டுமல்ல .. மெல்ல பலவீனபடுத்தவும் அறிந்திருக்க வேண்டும் .. காங்கிரஸின் கேட்டும் அது திமுகவிடம் தான் யாரை கூட்டணிக்குள் சேர்க்கலாம் என்று தீர்மானிக்கும் உரிமை இருக்கிறதென்ற சொல்லி அனுப்பிவைத்ததும்
வேறு வழியின்றி திரிவது புரிகிறது .. திமுகவை பலவீனபடுத்தும் எண்ணம் ஈடேறாது .. காரணம் அதிமுக மற்றும் பாஜக பாமக மீதான மக்களின் வெறுப்பு மிகப்பெரிய மாற்றத்தை தரும் அதன் பலன் பிரதான கட்சிக்கு போகும் ..
..
இந்த தேர்தலில் மிகப்பெரிய நாடக அரங்கேற்றங்கள் நடைபெறலாம் எப்படியும் வெல்லவேண்டுமென்று
எதையும் செய்வார்கள்.. மானங்கெட்ட நெறிகெட்ட செயல்களை இனி பார்க்கலாம் யாரையெல்லாம் அனுப்பலாம் எப்படியெல்லாம் வாக்குகளை சிதறவைக்க முடியுமா என தினம் தினம் ஊடகங்களை வைத்து திரித்துக்கொண்டே இருப்பார்கள்.. உளவுத்துறை அனுகூலமாக சொன்னதாக கசியவிடுகிறார்கள் .. நாங்கள் பார்க்காதா உளவுத்துறை அறிக்கைகளா என்ன.. ? இதோ பாகிஸ்தானில் புகுந்து விமான தாக்குதல் நடத்தியதாக செய்த்களை வெளியிடுகிறார்கள் .. உலகளாவிய எந்த செய்தி நிறுவனமும் 300 தீவிரவாதிகளை கொன்றதை செய்தியாக்கவில்லை .. பெரியளவில் தீவிரவாதிகள் உயிரிழந்தும்..?
சர்வதேத சமூகம் கண்டுக்கொள்ளவில்லையா..? இதிலிருந்தே ராணுவ நடவடிக்கையை கூட தேர்தல் அரசியலுக்காக பயன்படுத்துகிற நிலை மோடி அரசின் மீதான வெறுப்பையே அதிகரிக்க செய்திருக்கிறது .. இங்கே எந்த அரசியல் கட்சியும் தீவிரவாதிகளுக்கெதிரான தாக்குதல் நடத்துவதை எதிர்க்கவில்லை மாறாக அனைத்து கட்சிகளும் வரவேற்றுயிருக்கிறார்கள் ஆனால் அதை யாரும் அரசியலாக்கவில்லை பாஜகவை தவிர.. திரு.பொன்னர் கன்னியாகுமரிக்கு வரும் பிரதமருக்கு கறுப்புகொடி காட்டதீர்களென வைகோவை கெஞ்சுகிறார் எங்கே வரும் நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கிடைக்கும் என்பதால் கொஞ்சமேனும் மெச்சபட்ட தோல்வியை தழுவலாமென்று கெஞ்சிக்கொண்டிருக்கிறார் ..
..
பாமக சிதறும் நிலைக்கு தள்ளபட்டிருக்கிறது .. ஒவ்வொருவராக வெளியேற தொடங்கியிருக்கிறார்கள் கோ.க.மணியும் பலமாக யோசிப்பதாக செய்திகள் வருகின்றன .. மக்கள் வெறுக்கிறவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டதும் அதை நியாயபடுத்த முயன்று தோற்றதும் அரசியலில் மிகவும் பரிதாபகரமான சூழலில் சிக்கியிருப்பது தெரிகிறது .. இந்த தேர்தல் நிறைய கட்சிகளுக்கும் அரசியலை வியாபாரமாக்க முயல்கிறவர்களுக்கும் .. பொழுதுபோகாமால் பிழைப்பைதேடி சாந்தை களைத்து மேடையில் திரைக்கதையில் இல்லாமல் நடிக்கிறவர்களுக்கும்..
மதவெறியை சாதிமோதலை தூண்டி குளிர்காய்கிற பாசிச வர்க்கத்திற்கும் பேரடியாக இருக்கும் ..
..
அறம் வெல்லும்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment