Monday, March 25, 2019

இருள் அகலட்டும்

தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அமைப்பு என்பதை நம்பிதான் ஆகவேண்டும்.. சமீபகாலமாக அதன் நடவடிக்கைகளை நீதிமன்றமே கவலைகொள்கிற வகையில் இருப்பதை உணர்த்தியிருக்கிறது .. தமிழகத்தில் ஆளும்கட்சியின் தோழைமைக்கு கேட்கிற சின்னம் ஒதுக்கபடுவதும், எதிரணிகளுக்கு மறுக்கபடுவதும் தேர்தல் ஆணையத்தின் நேர்மையை சந்தேகம் கொள்ளவைக்கிறது .. தினகரனுக்கு கேட்ட சின்னம் வழங்கமுடியாதென கடைசி நேரத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்வது கடைந்தெடுத்த ஒருசார நிலைப்பாடு .. .. தேர்தல் களைக்கட்டியிருக்கிறது ஏறக்குறைய முக்கிய கட்சிகளின் நட்சத்திர வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார்கள் ஜோதிமணிக்கு கூடிய கூட்டம் கரூருக்கு புதியது.. கனிமொழி தமிழிசை திருமா இளங்கோவன் பழநிமாணிக்கம் ராசா என இந்த முறை பிரமிக்க வைக்கும் ஆளுமைகள் திமுகவின் தேர்வு சிறந்த நாடாளுமன்ற வாதங்களை இனி கேட்கலாம் தென்றாலாய் புயலாய் சீறிவரும் சொற்களால் அறிவாயுதம் ஏந்தி வருவார்கள் .. டெல்லியில் தமிழகத்தின் புகழ் மீண்டும் மிளிரும் .. காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் ரகத்தை சேர்ந்தவர்களை அனுப்பி அவமானபட்டது போதும் இனியேனும் அண்ணாவும்,இரா.செழியனும் நாஞ்சிலாரும் மாறனும் சிவாவும் ராசாவும் தந்த ஆளுமையை காண்போம் .. பெயருக்கு சிலரை அனுப்பி மேசையை தட்டியும் தூங்கிவழிந்தும் பாசிசத்தின் பிடியில் கிடந்து தவிக்கும் சிறகொடிந்த குருவியைப்போல தவித்து நிற்கும் பேதைகளை அனுப்பாமல் கொண்ட கொள்கையில் சமரசம் செய்துக்கொள்ளாமல் ஆணித்தரமாய் பேசும் ஆற்றலுடையோரை .. தமிழகத்தின் மானம் காப்போரை .. வடக்கின் போக்கை மாற்றி தெற்கின் திசை நோக்க செய்யும் ஆளுமைகளை பாசிச்திற்கு முடிவுகட்டும் போராளிகளை நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்வோம்,.. .. ஜெயலலிதாவால் அனுப்பட்ட விவரகேடுகளால் தமிழகம் சந்தித்த இழிநிலையை போக்கி நாடுபோற்றும் திறமையாளர்களை தேர்வு செய்து அனுப்பி இழந்த பெருமைகளை மீட்போம் .. பாசிச அடிமைகளை அவர்களுக்கு துணைபோகும் மத வெறியர்களை ..சாதிய உணர்வை தூண்டி குளிர்காய நினைக்கும் ராமதாசன்களை, மக்களை மதம் கொண்டும் பிரிக்கும் பாசிசவாதிகளை இனங்கண்டு விரட்டுவோம்,.. பன்முகம் கொண்ட இந்திய ஒன்றியத்தின் மாண்பை காண்போம் .. ஒரே மதம்,ஒரே இனம் ஒரே கலாச்சாரமென்ற பார்பனீய பாசிச பிற்போக்குதனத்தை வீழ்த்தி பன்முக கலாச்சாரத்தை கொண்ட வேற்றுமையில் ஒற்றுமையை காண்போம் .. ஜனநாயத்தின் மீது நம்பிக்கை கொண்ட நாட்டில் தேர்தலால் மட்டுமே கொடூரமான ஆட்சியை வீழ்த்த முடியும் கொலையும் கொள்ளையும் சர்வசாதாரமானமார நடத்தும் அவலம் .. முற்போக்கு சிந்தனையாளர்களை கொலை செய்யும் போக்கு .. எதை உண்ண வேண்டுமென மக்களை நிர்பந்திக்கும் சர்வாதிகார ஆட்சி வீழ்த்தபட வேண்டும் மக்கள் தன்னெழுச்சியாய் திரள்கிறார்கள் மாநிலத்தின் அடிமை ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவும் இந்த தேர்தல் பயன்படட்டும் நல்லதொரு விடியலை நாடு காணட்டும் .. உதயசூரியன் ஒளி பரவட்டும் .. காரிருள் அகலட்டும், .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment