Monday, March 4, 2019
திராவிட அடலேறுகள்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தெளிய தொடங்கியிருக்கிறது .. நாட்டின் நலன் விரும்பிகளோடு தன்மான படையாய் தமிழர்கள் விரும்புகிற கூட்டணியாய் எப்போதும் சமூகநலன் சமூகநீதி சமநீதியை தாங்கிப்பிடிக்கும் காவலர்களால் உருவாகியிருக்கிறது .. நாற்பதையும் வென்றெடுக்கவேண்டுமென்ற வேட்கையோடு தளபதி அவர்கள் மிக சாதூர்யமாய் பலவீனமானவர்களை மக்களால் வெறுக்கபட்டவர்களை ஆசைகாட்டி பேரம்பேசி கடைசியில் கதைமுடிக்கும் ராஜதந்திரத்தை ..
காட்டி ஒதுக்கியிருக்கிறார் ..மதவெறியையும் சாதிவெறியையும் கூடவே ஊழல்வாதிகளின் கையில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார் .. தெளிவாக கொள்கையற்ற பணமொன்றே பிரதானமாய் வாய்பிருக்கிறபோதே தேற்றிவிடமென்ற பேராசைபிடித்தவர்களையும் கோர்த்துவிட்டு .. கொள்கை கூட்டணியையும் கொள்ளை கூட்டணியையும் நேரெதிரே நிறுத்திய ஆளுமையை பாராட்டியே ஆகவேண்டும்.. இவர் கலைஞரின் பிள்ளையென்பதில் இப்போது கர்வம் கொள்கிறேன் .. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையின் தலைமையேற்று நடத்த தகுதியானவராய் திகழ்கிறார்..
..
காயிதெ மில்லத் பேரறிஞர் அண்ணா இரா.செழியன்
நாஞ்சிலார் முரசொலிமாறன்.. வைகோ திருச்சி சிவா என எண்ணற்ற திறமையாளர்களை
மிகச்சிறந்த ஆளுமைகளை அனுப்பிய தமிழகம் .. இன்று லாயக்கற்றவர்களை அனுப்பி அவமானப்பட்டு நிற்கிறது திமுகவின் மிகச்சிறந்த நாடாளுமன்றவாதிகளால் இடையிடையே மெச்சதகுந்த நிலை ஏற்பட்டாலும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் அனுப்பபட்டவர்கள் அறிவிலிகளாக மட்டும் இல்லாமல்
கேளிக்கை மனிதரைப்போல நடந்துக்கொண்டார்கள் .. கடைசியில் வெறும் அடிமைகளாகி மொத்த தமிழகத்தையும் தலைகுனிய வைத்தார்கள் .. தனியொரு ஆளாய் திணறடித்த காலமெல்லாம் போய் .. கிறுக்கர்களை அனுப்பியதன் விளைவு மாநில நலன்களும் மொழி கலாச்சாரத்தின் மீதான ஊடுறுவலும் தாக்குதலும் சமீபகாலமாக அதிகரித்தது .. எல்லாவற்றிக்கும் மௌனமாய் தலையாட்டும் பொம்மைகளால் தமிழகம் இழந்தது ஏராளம் .. இனியும் கோமாளிகளை கிறுக்கர்களை அடிமைகளை அனுப்பாமல் அறிவுடையாளர்கள் பகுத்தறிவும் சிந்தனையாளர்கள் தேர்வு செய்வோம்..
..
திரு.வைகோ, கவிஞர் கனிமொழி, தொல் திருமா தமிழச்சி தங்கபாண்டியன், ஆ.ராசா என வரிசையாய் வருகிறார் திராவிட தீப்பொறிகள் .. பாசிசத்தை சுட்டெரிக்க சுயமரியாதை போராளிகள் வருகிறார்கள்
சமூகநீதியை நிலைநாட்ட எதிரிகளின் வாயடைக்க வைக்கும் வல்லமை கொண்டவர்கள் நாடாளுமன்றத்தில் தமிழனின் பெருமைகளை மீட்டெடுக்க வருகிறார்கள் கலைஞரின் அடலேறுகள் ..
பாழாய்போன பகட்டுக்காரர்களால் ஏற்பட்ட இழிநிலையை போக்க .. தமிழகத்தின் மானம்காக்க வருகிறார்கள் அறிவாசானின் அடிச்சுவட்டை பின்பற்றும் பண்பாளர்கள் .. இனி தான் இருக்கிறது .. எதிரிகளே இனி திணறபோகிறீர்கள் .. வார்த்தை சித்தர்களின் அறிவாற்றலால் செய்வதெறியாது புலம்ப போகிறீர் .. தமிழ் இனம்காக்க தமிழர் நலன்காக்க வருகிறார்கள் .. பேராசான் பெரியாரின் பிள்ளைகள் பேரறிஞரின் தம்பிகள் பேரருளாளர் கலைஞரின் உடன்பிறப்புகள்..
..
இழந்த பெருமைகளை மீட்டெடுப்போம்.. இனமான உணர்வுகொள்வோம் .. புறக்கணிக்கபட்ட தமிழர் நலன் தமிழர்களின் வாழ்வாதாரம் கிடைக்க போராடும் வல்லமை கொண்டவர்களை வெற்றிபெற செய்வோம்,..
நாடு நலம் பெற நல்லவர்களை வல்லவர்களை நாணயமிக்க நா நயமிக்க சொல்லாற்றலும் .. செயலாற்றலுமிக்க சிறந்த தகுதியானவர்களை திமுக தலைமையிலான கூட்டணி தருகிறது ..
மக்கள் பெருவாரியான வெற்றியை தந்து .. தமிழகம் இழந்தவற்றை திரும்ப பெறுவோம்,..
..
எதிரிகளே எச்சரிக்கை ..
வருகிறார்கள் திராவிடப் போராளிகள்
தமிழகத்தின் மானம் காக்க
வருகிறது
தளபதியாரின் தீரர்படை..
வெல்லும்..
நிச்சயம் வெல்லும்
தளபதியாரின் பெரும்படை ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment