Tuesday, March 5, 2019
நேர்கொண்ட பார்வை
மிக திறமையான கையாண்டு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்திருக்கிறார் தலைவர் ..வாழ்த்துகள்
சலசலப்பின்றி நிதானமாக சரியான முறையில் எத்தனை தொகுதிகள் என்று அறிவித்து தேர்தல்களத்தில் படையோட்டம் நடத்தி எதிரிகளுக்கும் திமுகவை சதா விமர்சிப்போருக்கும் பதிலை தந்து தலைவராய் உயர்ந்துநிற்கிறார் ..
"நேர்கொண்ட பார்வை" ..
..
இன்னமும் சிலர் குறை சொல்லவேண்டுமென்பதற்காக மதிமுகவிற்கு ஒரு தொகுதி தானா ... மமகவை ஏன் சேர்க்கவில்லை என்றெல்லாம் புலம்புகிறார்கள் .. வைகோவை மாநிலங்களவைக்கு அனுப்பவேண்டும் .. போர்குணம் கொண்ட சிம்மகுரல் மாநிலங்களவையில் ஒலிக்கவேண்டுமென தலைவர் விரும்புகிறார் .. மதிமுகவிற்கு ஒரு தொகுதி மாநிலங்களவைக்கு ஒதுக்கியதுமே.. உண்மையில் எனக்கு கலைஞர்தான் நியாபகம் வந்தார் யாரை எங்கே அனுப்பவேண்டுமென அறிந்து செயல்படுதல் கலைஞரின் குணம் .. அதேபோல் செயல்படுகிறார் தலைவர் .. நீண்டகாலமாய் நம்மோடு இணைந்து செயல்படும் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட்டுகள் .. எப்போதும் நம்மோடே பயணிக்கும் முஸ்லிம்லீக் என அனைவரையும் அரவணைத்து அதேவேளை உதயசூரியனின் சின்னத்தை முன்னிறுத்தி மக்களின் பேராதாரவை பெற தலைவர் வகுத்த திட்டம் திமுகவை மிக சிறப்பாக வழிநடத்துகிறவர் மட்டுமல்லாமல் கூட்டணிக்கும் தலைமையேற்கும் பண்பை பெற்றவராய் தலைவர் மிளிர்கிறார்..
..
ஏன் மமகவிற்கு தொகுதியை ஒதுக்கவில்லையென சிலர் கவலைபடுகிறார்கள் குறிப்பாக முஸ்லிம்கள் .. முதலில் கட்சிக்குள் யார் பெரியவரென்ற போட்டியையெல்லாம் கலைந்துவிட்டு வந்திருக்கவேண்டும் எனக்கு 29 மாவட்டம் ஆதரிக்கிறதென்ற உட்கட்சி பூசலையெல்லாம் கொண்டுவந்து தேர்தல் நேரத்தில் பேசி திரிந்தால் எப்படி இடம் கிடைக்கும் .. உண்மையில் இஸ்லாமிய இயக்கங்கள் தமிழகத்தைப்போல வேறெந்த மாநிலத்திலும் இத்தனை எண்ணிக்கையில் இல்லை .. பிரிந்துகிடந்தால் எப்படி நமக்கான விகிதத்தை பெறமுடியுமென்ற அடிப்படை தெளிவுகூட இல்லாமல் அதிகார பகிர்வில்/போட்டியில் மொத்த சமுதாயத்தையும் கேவலபடுத்தி நிறுத்தியிருக்கிற சூழல் கவலைக்குரியது .. (IUML) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற இயக்கத்தோடு பிற அமைப்புகள் இணைந்து ஒரே குடையின் கீழ் செயல்பட்டிருந்தால் ஏறத்குறைய நான்கு தொகுதிகளை கூட கேட்க முடியும்
ஆனால் பதவி ஆசையும் யார் பெரியவரென்ற போட்டியும் தானென்ற அகந்தையும் தாங்கள்தான் எல்லாம் அறிந்தவர்களென்ற இறுமாப்பும், ஒரு சமுதாயத்தையே மிகவும் பின்னோட்டு செலுத்தியிருக்கிறது ..
..
இப்போதைய பொது எதிரி யாரென்று அறிந்தால் .. இந்த நாடு பாசிசத்தின் கையில் சிக்கி ..சின்னாபின்னமாகி கிடப்பதறிந்தால் மதவெறியும் சாதிய வெறியும் பித்தலாட்டமும் கைகோர்த்து மக்களை பணத்தால், விலைபேசலாமென்ற நினைப்பில் மக்களை ஏமாற்ற வருவதறிந்தால் யாருக்கு வாக்களிக்கவேண்டுமென்று புரிந்திருக்கும் .. நாட்டின் நலனில் சமூகநலனில் அக்கறைகொண்டோர் இந்த பாசிச பாஜக ஆட்சியை விரட்டிட அணிவகுப்பர் .. பாஜகவை வீழ்த்த காங்கிரஸின் கரத்தை வலுபடுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை .. தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை வெற்றி பெற வைப்பதில் தான் நம் "நேர் கொண்ட பார்வை" இருக்கிறது ..
..
வெற்றி ஒன்றே நமது இலக்கு
வெல்வோம்..
நாற்பதையும் வெல்வோம்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment