Tuesday, March 19, 2019
தேர்தல் அறிக்கை
தேர்தல் அறிக்கை ..
விடுதலை இந்தியாவில் முதன் முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதே திமுக தான் .. இன்றைக்கு உதரிகள் .. தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்காத கட்சிகள் எல்லாம் தேர்தல் அறிக்கையை தயாரிக்கிறது .. வெற்றிபெற போவதில்லை .. என்ற தைரியத்தில் அளந்துவிடுகிறார்கள் .. திமுக வென்றால் தேர்தல் அறிக்கை சட்டமாகும் .. தோற்றால் போராடியேனும் சட்டமாக்க முயலும்,..இதுதான் திமுக
ஏற்கனவே சொன்னதைப்போல திமுகவிற்கு அரசியல் சொல்லி தருவது பல்கலை கழகத்திற்கே அரிச்சுவடியை சொல்லி தருவதைப்போல.. பிரபலமான மருத்துவருக்கே வைத்தியம் சொல்லிதருவதைப்போல..ே
..
திமுக தேர்தல் அறிக்கையில்.. நீட் தேர்வு ரத்து .. எழுவர் விடுதலை ..தென்னக நதிகள் இணைப்பு .. வேளாண்மை மண்டலம், கல்வி மாநில பட்டியலில்..
கீழடி ஆய்வு தொடரும் ..என சமூகம் சார்ந்த நலன் ..மாநில நலன் மக்கள் நலன் மற்றும் உரிமைகளை மீட்க உறுதி அளிக்கிறது .. கிராமபுற பெண்களுக்கு ₹50,000 வரை நிதி உதவி... மாணவர் கல்விகடன் ரத்து .. வரிவசூலில் 60% மாநிலங்களுக்கு வழங்கல் மாணவர்களுக்கு இலவச இரயில் பாஸ்
என ..அனைத்துதரப்பையும் கவர்ந்த அறிக்கை .. திமுக தனியாக குழு அமைத்து அதில் விவாததித்து எதையெல்லாம் சேர்க்கவேண்டும் என ஆய்ந்து எது முடியும் எது தவிர்ககவேண்டும் என எது நம்மால் முடியாது வெற்று வாக்குறுதிகளை தராமல் முடியும் .. போராடி பெற முடியும் என்ற நம்பிக்கையில் தயாரிக்கபட்டது ..
..
நாட்டிற்கே தேர்தல் அறிக்கையை தந்தவர்கள் .. சின்னபையன் எல்லாம் காப்பியடிப்பதாக புலம்பிவைக்கிறார்.. நேற்றொரு பேச்சும் இன்றைக்கொரு பேச்சு பேசி திரிகிறவர்கள் மாறி மாறி வீராப்பு பேசிவிட்டு மண்டியிட்டவர்கள் உளறிவைக்கிறார்கள் ..வெற்றிபெற போவதில்லை ..அதனால் யாரும் கேள்விகேட்கமாடடார்களென்று அறிக்கையில் அளந்துவிடுகிறார்கள் .. இந்தியாவில் கொடுத்த வாக்குறுதியை முழுவதுமாக நிறைவேற்றிய கட்சியும் திமுகதான் ..திமுக தேர்தல் அறிக்கை எப்போதுமே,தொலைநோக்கோடு சமூகநீதியை காத்து மக்கள் நலன் மாநில நலன்காப்பதாகவே இருக்கும்,..
..
வலியுறுத்துவோம் எல்லாம் இல்லை நிச்சயம் நிறைவேற்றுவோம் ..இதுதான் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் வேறுபாடு..
தேர்தல் அறிக்கை தலைவர் சொன்னதைப்போல
கதாநாயகன் கதாநாயகி.. நிச்சயமாக வில்லனாக இல்லை..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment