Tuesday, March 26, 2019

விழலுக்கு இறைத்த நீர்

பொதுவான சின்னம் தினகரன் அணிக்கு தரலாம் என சொல்லியிருக்கிறது உச்சநீதிமன்றம் .. அது மட்டுமா சொல்லியது வென்றாலும் அவர்கள் இனி சுயேச்சைகள் தான்.. ஏன் இப்படியொரு தீர்ப்பு இதன் பொருள் ..கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இவர்கள் வரமாட்டார்கள் இவர்கள் எந்த கட்சியையும் சாராதவர்கள் கட்சிதாவல் சட்டம் பொருந்தாது என்பதால் பதவி வெறியில் பணத்தின் பாசத்தில் மாபோ பாண்டியராஜன் பண்ரூட்டி ராமசந்திரன் போல இனி ஜாலியா கட்சி தாவலாம் .. தினகரனுக்கு எந்த வகையிலும் நன்மை தராத தீர்ப்பிது உயர்நீதிமன்றம்,சில கேள்விகளை எழுப்பியது இரட்டை இலை குக்கர் இரண்டுக்கும் உரிமை கோருவதை எப்படி ஏற்பது .. இதுவரை பதிவு செய்யாத கட்சிக்கு எப்படி ஒதுக்கமுடியும் .. உண்மையில் இதுவரை அமுமுக வை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை அவர் தன் கட்சியை பதிவு செய்து அதிமுகவை விட ஒரு ஒட்டு அதிகம் வாங்கி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் ..இப்போது தினகரன் கட்சிக்கு வாக்களிப்பது என்பது .. ஒருவேளை வென்றால் கூட விலைக்கு வாங்கிட ஏதுவாக இருக்கும்.. அதைதான் பாசிச பாஜக செய்கிறது .. தினகரனும் பாஜகவோடு செல்வதற்கு தயக்கம் காட்டுபவர் அல்ல ..அழைத்தால் ஓடோடி சென்று ஆதரவு தருபவர்தான் அழைக்காமலேயே ஆதரவு தந்த வரலாறெல்லாம் உண்டு இவரை நம்பி போய் நிற்கிற சில சில்லரை பார்ட்டிகளும் கூட வந்தவர்களின் நிலைதான் அந்தோ பரிதாபம் .. வேட்புமனு முடிந்தது இரு தினங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வந்துவிடும் திமுக கூட்டணியை தவிர்த்து யாருக்கு வாக்களித்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் .. பாசிசத்தின் கைக்கூலிகளாய் இனத்தின் மொழியின் மதத்தின் பேரை சொல்லி சில உதிரிகட்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் திரிகின்றன.. திடீரென்ற அரசியல்வாதியாவரெல்லாம் கருணாநிதியின் மகன் என்பதிலிருந்து அரசியல் அரிச்சுவடியை கூட அறிந்திருக்கவில்லை ... தளபதி மிசா கொடுமையை சிறையில் அனுபவித்த போது .. திரையில் டூயிட் பாடிக்கொண்டிருந்தவருக்கு என்ன தெரியும் .. இஸ்லாமிய மதத்தின் காவலரைப்போல எண்ணிக்கொண்டு இளைஞர்களை வழிகெடுக்கும் " பாகவிகளும் .. இனத்தை,மொழியைச் சொல்லி வயிறுபிழைப்பவர்களும் .. உண்மையில் நாட்டிற்கு தீங்குவிளைவிப்பவர்கள் வாக்குகளை பிரிக்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்யபட்டவர்கள் .. இவர்கள் பாசிசத்தின் பெயர்சொல்லாத குழந்தைகள் .. நோக்கம் பாசிச பாஜகவின் அதை பின் துணைப்பவர்களின் வெற்றிக்கு சிறிய அளவிலேனும் உதவுவதுதான் இவர்களுக்கு வழங்கப்பட்ட பணி .. .. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் மொத்த உயர்பதவிகளும் பார்பனர்களுக்கென்று எழுதபடாத விதியாகி போகும் இப்போதே இணைச் செயலர் பதவிகளில் 260 பேர் ஐஏஸ் முடிக்காதவர்களை நியமித்திருக்கிறது ஆர்எஸ்எஸ்காரர்கள் அரசு பணியில் நியமனம் மிக எளிதாக வரம்புகளை மீறி நடைபெறுகிறது .. இந்திய நாட்டின் இறுதி தேர்தலாக போகும் வாய்ப்பை உருவாக்குகிறார்கள் .. நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தில் அவர்கள் ஆதிக்கம் வெளிப்படையாக எந்த வித கூச்சமுமின்றி ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைக்கும் செயல் செய்கிறார்கள் .. எங்கெல்லாம் வெற்றிபெற முடியவில்லையோ மக்கள் ஆதரவில்லையோ அங்கெல்லாம் கைக்கூலிகளை கொண்டு ஜனநாயகத்தை நரம்பை அறுக்கிறார்கள் .. சனாதன திமிர் .. நாங்கள் பார்பனர்கள் ..காவலாளியாக முடியாது எங்கள் சொல்பேச்சை கேட்பதுதான் காவலாளிகள் வேலை அதுதான் நீதி என பேசும் துணிச்சலை இந்த அரசு தந்திருக்கிறது .. இவர்களை விரட்டுவது மட்டுமல்ல இவர்களுக்கு துணைபோகும் அடிமைகளை, திரைமறைவில் உதவும் கைக்கூலிகளை உதிரிகளை இனங்கண்டு தோற்கடிப்போம்,.. .. நாடும் நலம்பெற .. நாட்டின் நலிவு நீங்கிட ஜனநாயகம் மலர்ந்திட .. தேசத்தை பாதுகாத்திட திமுக காங் கூட்டணியை வெற்றிபெற செய்வோம் .. திமுக கூட்டணிக்கு மாற்றாக யாருக்கு வாக்களித்தாலும் அது வீண்.. விழலுக்கு இறைத்த நீர்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment