Friday, March 22, 2019
தீதும் நன்றும் பிறர்தரவாரா..
இந்த தேர்தலுக்கு பிறகு சில கட்சிகளை தங்கள் அடையாளத்தை இழக்கும் ..சில கரைந்து காணாமல் போகும் .. ஒஹோ என புகழ்ந்து ஊடகங்கள் எல்லாம் பின்னால் சென்ற தினகரன் .. பணத்திற்காக எதையும் இழக்க தயாராகி நிற்கிற ராமதாஸ் .. தன் மனைவியாலேயே கெட்டு குட்டுசுவராகி போன விஜயகாந்த்..ௌ தன் நிலையறியாது போன மாளிகை மலர்ந்த வாசன் ..இவர்களெல்லாம் ஒதுக்கபட வேண்டியவர்கள் மட்டுமல்ல அரசியலிலிருந்தே அகற்றபட வேண்டியவர்கள் ..
..
தன் சொந்த குடும்பத்தை சேர்ந்த மூவர் ஊழலுக்காக தண்டனைப் பெற்று சிறையில் வாழ்வை கழிக்கும் போதும் .. ஏதோ தியாகம் செய்துவிட்டு ஜெயிலுக்கு போனதைப் போல பேசி திரிந்து அதிமுகவை கைக்குள் கொண்டுவர திட்டம் தீட்டி கடைசியில் .. ஸ்லிப்பர் செல் என்று யாருமில்லை தன்னோடு இருப்பவர்கள் தான் ஸ்லிப்பர் செல் என்பதை அறியாமல் .. ஒவ்வொருவராய் தினகரனை விட்டு பிரிகிறார்கள் .. செந்தில் பாலாஜி தொடங்கி இப்போது ஒரத்தநாடு வி.பி.கலைராஜன் .. அதிலும்,கலைராஜன் உறவின் முறை கூட.. பணத்தை வீசி விலைபேசி வென்றுவிட்ட திமிரில் ஆடியது கடைசியில் ஒவ்வொருவராக இழக்க நேரிடுகிறது திருவண்ணாமலைக்கு ஆளே கிடைக்காதது தான் மிச்சம் ..யாரும் நிற்கவே அஞ்சுகிற சூழல் .. தோல்வி உறுதியென்றவுடன் ஏன் நிற்பானேன் செலவு செய்வானேன் என்று ஓடியொளிகிறார்கள் .. எதையும் விலைபேசி விடலாமென்ற திமிர் ஒடுக்கபடவேண்டும்
..
ராமதாஸ் தன் சுயநலத்திற்காக சொந்த சாதியினரையே ஏமாற்றி விலைபேசி விற்க துணிந்தவர் .. நேற்றுவரை எடப்பாடியை அந்த ஆளெல்லாம் ...என வாய்க்குவந்தபடி பேசு திரிந்தவர்கள் .. தமிழகத்திலேயே தாங்கள் தான் அறிவாளிகள்போல எடப்பாடிக்கெல்லாம் நிர்வாகம் என்றால் என்னென்ன தெரியுமா என எகத்தாளம் பேசியவர்கள் டயர் நக்கியென கிண்டல் செய்தவர்கள் காசுக்கு காலை நக்குகிற இழிசெயலை செய்கிறார்கள் இந்த கேடுகெட்டவர்களை அந்த சமுதாய மக்களே ஓட..ஓட விரட்டவேண்டும்.. காசு கொடுத்தால் பெற்ற தாயை கூட விலைபேசிவிடுவார்கள் இந்த மகாபாதகர்கள் இதுவரை இப்படியொரு மோசமான கேவலமான கேடுகெட்ட அரசியல் வாதியை நாடு கண்டதில்லை மாறி மாறி சவாரி செய்து பிழைத்துக்கொண்டிருந்தவர்கள் முகமூடி கழன்று விழுந்துவிட்டது வன்னிய சமூக மக்களே இவர்களை வெறுக்க தொடங்கிவிட்டார்கள் சொந்த நலனுக்காக தங்களின் அபரிதானமான வளர்ச்சிக்காக எதையும் செய்ய துணிவார்களென சமுதாய மக்கள் அறிந்து விரட்டிட தயாராகிவிட்டார்கள் .. இந்த தேர்தலோடு இறுதி அத்தியாயம் தொடங்கும் முடிவுரையை எட்டும்
..
விஜயகாந்த் ..
மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க வேண்டியவர் ஜெயலலிதாவோடு கூட்டணி அமைத்து வரலாற்றுப் பிழையை செய்தார் .. இவரை வழிகெடுத்ததில் பெரும்பங்கு சோ.ராமசாமி அய்யருக்கு உண்டு தொடர்ந்து தனித்து களம் கண்டிருந்தால் மெச்சபட்டநிலையை அடைந்திருக்கலாம் .. தேமுதிகவை உடைத்து 10 பேரை ஆர்எஸ்எஸ் கைக்கூலி மாபியா பாண்டியராஜன் உள்பட ஜெயலலிதா தனியாக இயங்க அனுமதித்தபோதே கட்சி உடைய தொடங்கியதை கவனிக்க மறந்தார் .. பழம் நழுவி பாலில் விழவேண்டியது .. தன் மனைவியின் பேராசையால் சாக்கடையில் விழுந்து விஜயகாந்தே கட்டிவச்சகாசு(டெபாசிட்) இழக்க வேண்டியிருந்தது .. உடல் நலியுற்றவுடன் தன் மனைவியின் கட்டுபாட்டில் கட்சியை கொண்டுபோய் .. அணி மாறி மாறி வியாபாரம் பேச கடைசியில் அழிவின் விளிம்பில் நிற்கிறது ..
..
வாசன் மூப்பனாரின் மகன் என்ற ஒற்றை தகுதி மட்டுமே அவரை மத்திய மந்திரியாக்கியது திறமையின்மையும் கட்சியை வளர்ப்பதில் பண்ணையார் மனப்பான்மையும் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்து கேவலபட்டு நிற்கிறார் சொந்த தொகுதியில் பத்தாயிரம் வாக்குகள் கூட பெற முடியாத நிலைதான் சொந்த செல்வாக்கும் கைவிட்டநிலையில் கட்சியை நடத்துவதென்பது அறிவிலித்தனமாகவே போகும் காங்கிரஸிலேயே இருந்திருந்தால் சில இடங்களில் கூட ஆதரவாளர்களை நிறுத்தியிருக்கலாம்.. தீதும் நன்றும் பிறர்தரவாரா..
கடைசியில் அரசியல் வாழ்வு முடிவுக்கு வரும்
..
தமிழக அரசியலிலிருந்தே ஒதுக்கபடவேண்டியவர்கள்
இவர்களுக்கு அளிக்கும் வாக்கு தேச நலனுக்கு ஊறுவிளைவிக்கும் .. தமிழகத்தையே அடகுவைக்க தயங்காதவர்கள் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளை இனங்கண்டு .. புறக்கணிப்போம் அரசியலை விட்டே விரட்டியடிப்போம் ..
..
நாற்பதும் நமதே உதயசூரியன் உதிக்கட்டும்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment