Friday, March 29, 2019
வாக்கு விற்பனைக்கு அல்ல
வெளிப்படையாக வாக்குகளை விலைபேசுகிறார்கள்
தேனியில் ஒரு பள்ளியில் பேரம் பேசபட்டு மொத்தமாக விலைபேசி பணம் தரபட்டிருக்கிறது ஒட்டுமொத்த சமுதாயத்தின் நிலை இதுவல்ல எனினும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது .. இவர்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தின் அல்லது அந்த ஜமாத்தின் நிலைபாட்டை உறுதி செய்பவர்களா ..இவர்களுக்கு முஸ்லிம்களை விலைபேசி விற்கும் அதிகாரத்தை யார் தந்தது .. வாக்குகளை ஒட்டுமொத்தமாக வாங்க நினைப்பவர்களையும் .. விற்க துணிபவர்களையும் கைது செய்ய வேண்டும் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தபடவேண்டும் .. ஒபிஎஸ் மகனுக்காக இந்த விலைபேசல் நடந்திருக்கிறது ஏற்கனவே தபால் வாக்குகளுக்காக துணை முதல்வரே விலைபேசும் விடியோ வெளியாகி இருந்தது அதன் உண்மைதன்மையை ஆராய வேண்டும் உண்மையெனில் வேட்பாளர் தகுதி நீக்க செய்யவேண்டும் .. தேர்தல் ஆணையம் நடுநிலை தவறிய செயல்பாடுகளால் ஜனநாயகம் கேலிகூத்தாகவே பார்க்கபடுகிறது நம்பிக்கையின்மை தேசத்தின் குரல்வளையை நெறித்துவிடும்,..
..
தேர்தல்
இன்னமும் நேர்மையாக நடப்பதாக நம்பிக்கொண்டிருப்பது வாக்குகளை விலைபேசுவோருக்கு வெற்றியை வாங்கும் சக்தி உள்ளவனோடு சமானியன் எதிர்த்துநிற்கவே முடியாத சூழல் சமீபகாலமாக தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது .. பேரறிஞர் அண்ணாவை தோற்கடிக்க ₹5 ஐந்துரூபாய் கொடுத்து காமராஜர் தொடங்கி வைத்தது இன்று ஆயிரம்கணக்கில் என உயர்ந்து நிற்கிறது தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது ..
மிகவும் வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்கள் அதிகம் வசிக்கும் பிகாரில் கூட இவ்வளவு அநியாயம் இல்லை பக்கத்து மாநிலத்தில் கேரளம் பணம் கொடுத்தால் கொசுத்தவன் கைது செய்து சிறையில் அடைக்கிற வரை போராடுவார்கள் .. எனது வாக்கு எனது உரிமை என்று போர்கொடி உயர்த்துவார்கள் .. ஆனால் தமிழகத்தில் எல்லா மக்களுமே குறிப்பிட்ட சமூகம் சமுதாயம் ஏழை பணக்காரன் என்றில்லை எவ்வளவு தருவீர்கள் என கேட்கும் கேவலமான மனநிலைக்கு வந்திருக்கிறார்கள் இது மாற வேண்டும் ..
..
யாருக்கு வாக்களித்தால் இந்த நாடு நல்லநிலையில் வரும்.. அனைத்து தரப்பு மக்களின் உரிமைகள் பாதுகாக்கபடும் .. ஒடுக்கபட்ட விளும்புநிலை மக்களின் உயர்வுக்கு வழிவகை செய்யும் .. அனைவருக்கும் சமமான நீதியை நிலைநாட்டும் சமூகநீதியை காத்திடும் பல்வேறு இன கலாச்சாரம் கொண்ட நாட்டில் அவரவர் பண்பாட்டை காத்திட.. மாட்டிற்காக மனிதனை கொல்லும் கொடூரத்தை தடுத்திடவும் .. நாட்டின் வளத்தை பணமுதலைகளுக்கு தாரைவார்க்கும் பாசிச சிந்தனையை வீழ்த்தவும் யாரால் முடியுமென ஆராய்ந்து .. இந்த நாடு இனியும் இந்த பாசிச கோமாளிகளை விவரகேடுகளை பொய்யர்களை .. மதகலவரத்தையும் சாதிய மோதலும் தூண்டி குளிர்காயும் பிற்போக்குவாதிகளை ஆட்சியில் தொடரவிட்டோமானால் நாடு சுடுகாடாகும் என்பதை உணர்ந்து ..
ஜனநாயத்தின் மூலம் இழந்த பெருமையை மீட்க நல்லதொரு விடியலை தர வல்லவர்களுக்கு வாக்களிப்போம்..
..
வாக்கு விற்பனைக்கல்ல
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment