Wednesday, October 31, 2018

குரளாசான்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்... .. எல்லோரும் சமமென்கிற உயர் தத்துவத்தை உலகுக்கு சொன்ன ஏற்றதாழ்வுகள் பிறப்பில் இல்லை என்ற பொது நெறியை நமக்கு தந்த குரளாசான் வள்ளுவனே.. ஒற்றுமைக்கு எடுத்துகாட்டு .. திராவிடப் பெருவுடையார் கலைஞர் சிந்தனையில் உதித்து தமிழர்களின் கட்டிட கலையோடு கூடிய அழகிய வேலைபாடுகளும் சிலையை உயிர்த்தன்மையோடு செதுக்கி வானூயர முக்கடல் சங்கமிக்கும் குமரியில் நிறுத்தியிருக்கிறார்.. இந்தியாவின் ஒற்றுமையை உலகுக்கு சொல்லும் உயிர்சிலை.. குமரியென்றாலே காவி சிந்தனையாளர் விவேகானந்தர் நினைவிற்கு வருவதை மாற்றி .. குறள் தந்த பேராசான் வள்ளுவனின் சிலையை நிறுவி தமிழர் கலை இலக்கியத்தை உலகுக்கு உணர்த்தியவர் பேரருளாளன் கலைஞர் அவர்கள்.. .. மக்களை வர்ணம் கொண்டு பிரித்து தாழ்ந்தவன் உயர்ந்தவன் என பாகுபாட்டை களையாமல் இந்திய ஒற்றுமையின் தத்துவத்தையே காவுவாங்கும் கயமைத்தனத்தை .. சாதிய நிலைபாட்டை வேரறுக்காமல் சமமான நீதியை தரமால் இந்தியாவில் ஒற்றுமை என்பதே கேலிகூத்தாகதான் இருக்கும்.. இந்தியாவை ஒருங்கிணைக்க அதிகாரம் இருந்தால் போதும் மக்களை ஒருங்கிணைக்க உயர் சிந்தனையையும் சமூகநீதியும் சமமான செயல்பாடும் ..யாரும் யாருக்குமில்லை அடிமையென்ற எண்ணமும் வேண்டும்.. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென்ற என்ற உயர்நோக்கு கொண்ட எங்கள் இன பேராசான் வள்ளுவனின் சிலை ..ஒற்றுமையின் சிலை .. ஒற்றுமை என்பதே அனைவரும் சமமென்பதிலே.. எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் தரப்பட வேண்டுமென்பதில் ஏற்றதாழ்வற்ற சமுதாயம் படைத்திட வேண்டுமென்பதில் .. சாதி மத பேதமற்ற சமூகசூழலை உருவாக்கினாலே மக்கள் மனங்களில் ஒற்றுமை ஓங்கும்.. மக்களை பிரித்து குள்ளநரித்தனம் செய்து அடுத்தவனின் உரிமையை பறித்து.. கீழே உள்ளவனின் கல்வி வேலைவாய்ப்பை தட்டிபறித்து ஒரு குறிப்பிட்ட இனத்திற்கே வழங்குவதில் இல்லை .. சமத்துவமும் மனிதநேயமும் கொண்ட விடுதலையே ஒற்றுமைக்கான திறவுக்கோல் .. ஆலஞ்சியார்

Tuesday, October 30, 2018

அறிவு திருடர்கள்

அறிவு திருடர்கள்.. அடுத்தவரின் ஆக்கத்தை அறிவை தனதென்பவன் மகா அயோக்கியன்.. அறிவின் வறட்சி அடுத்தவரின் அறிவை திருட சொல்கிறது .. அறிவுத் திருடர்கள் தங்களை திறமைசாலியென நம்பவைத்திருக்கிறார்கள் இலக்கிய திருடர்கள் நிறைய கண்டிருக்கிறோம் தனதென்று சொல்லி நம்பவைத்து பெயரும் புகழும் பணமும் சேர்த்தவர்கள் உண்டு மேட்டுக்குடி வாசனை அவர்களை காப்பாற்றியிருக்கிறது ..ஊடகங்கள் தூக்கி கொண்டாடியிருக்கிறது .. வரலாறு நெடுக இவ்வகை அறிவுத் திருடர்கள் ஆளும் வர்க்கத்தோடு அதிகாரவர்க்கத்தோடு தொடர்பில் இருப்பார்கள் .. தங்களை நல்லவராக காட்டிக்கொள்வார்கள் .. இவர்கள் புகழ் உச்சிக்கு செல்ல எதைவேண்டுமானாலும் செய்ய தயங்காதவர்கள் .. இப்போது சமூகவலைத்தளங்கள் மக்கள் கையில் இருக்கிற ஒருநொடியில் அதுகுறித்த முழு விளக்கத்தையும் பெற முடிகிற காலகட்டத்தில் கூட இந்த திருடர்கள் தங்களை நியாயபடுத்துவது தான் வேடிக்கையாக இருக்கிறது முன்பெல்லாம் மேலைநாட்டி அறிவியலை .. அறிவை கருத்தை இலக்கியத்தை மேம்பூசாச பூசி நமக்கு தந்தவர்கள் உண்டு .. இலக்கிய சுவடுகளை திருடி தன்னால் தான் ஆகிற்றென்றவரும் உண்டு .. நிறைய கதைகளை களவாடி தங்கள் பெயர்களில் வரவு வைத்த மேதைகள் உண்டு சுய சிந்தனை வறண்டு போனவர்கள் புதியதொரு கருத்தை விதைக்க தெரியாதவர்கள் ஒரு படைப்பை உருவாக்க தெரியாதவர்கள் அவசரகதியில் சமைக்கவேண்டிய நிர்பந்தத்தில் அடுத்தவன் சரக்கை உறிஞ்ச பார்ப்பார்கள் .. .. தனக்கிருக்கிற புகழை தக்கவைக்க அடுத்தவரை துணைக்கொண்டு வெற்றியை ஈட்ட நினைக்கிறவர்கள் சினிமாகாரர்கள் .. ஒருவரி கதையை முழுவடிவம் தர அங்கே கூட்டாக அமர்ந்து ஆலோசித்து செதுக்கிய பிறகு கதை திரைக்கதை என தன் பெயரை போட்டுக்கொள்வதே அயோக்கியத்தனம் தான்.. அதற்கு சப்பை கட்டுகிறவர்கள் அறிவை நீங்கள் சோதித்தால் .. திராவிட வரலாற்றை கலைஞர் இல்லாமல் எழுதிவிட முடியும் எம்ஜிஆரை விட்டுவிட்டு எழுதிவிட முடியாது என்கிற அபார அறிவாளிகள்..? தான் .. பொய் பித்தலாட்டம் பேத்தல் இவைதான் இலக்கியமென்றும் அதுதான் எழுத்தென்று நம்புகிற கயமை .. அறிவு திருடர்களாக தான் இருப்பார்கள் .. மிகப் பெரிய இயக்குனரென்பதே ஒருவகை பொய் .. சினிமா போன்ற பலரின் பங்களிப்பை தனதாக்க நினைக்கிற மோசடி செயலை நியாயபடுத்தியே வந்திருக்கிறோம் .. அதிலும் சார்வாள்களென்றால் மிக பெரிய ஆளுமைகளாக கட்டமைத்து துதிபாடியிருக்கிறோம் அதனால் தான் இன்னும் நிறைய பேர் தங்களின் படைப்பை தொலைத்துவிட்டு மௌனம் நகர்த்து போகிறார்கள்.. அங்கீகாரம் கிடைக்காமல் தெருவில் அலைகிறார்கள் .. .. வருண் ராஜேந்திரனைப்போல போராடினால் மட்டுமே #சொங்கோல் கிடைக்கும்.. அறிவுத் திருடர்கள் எச்சரிக்கை .. ஆலஞ்சியார்

Monday, October 29, 2018

சாதிமத பேதமற்ற ..

திமுக அதிமுக தவிர்த்து மற்ற கட்சிகளோடு கூட்டணி.. அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே யாரும் சீண்டவில்லை ராமதாஸ் முயன்றும் யாரும் முன்வராமல் போனது பழங்கதை.. ஏன் யாரும் பாமகவை கண்டுக்கொள்வதில்லை என்ற கேள்விக்கு விடை ராமதாஸ் என்ற வன்னியருக்கு தெரியும் தன்னை சமூகநீதிக்காரனாக .. எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தலைவராக வடிவமைக்க மறந்து போனார்.. தான் சார்ந்த சாதிய நிழலைவிட்டு வெளியே அவர் முயற்சித்ததே இல்லை .. அன்புமணியை தர்மபுரியில் நிறுத்தவேண்டும் பொன்னரகத்தில் நிறுத்த தோன்றிவருக்கு .. வன்னியர் அதிகமில்லாத ஏதாவது ஒரு தொகுதியில் நிறுத்தி தான் சாதி சங்கத்தை நம்பி இல்லை என சொல்லியிருக்கவேண்டும் .. தோற்று போயிருப்பார் ஆனாலும் சாதிய சாயலிலிருந்து மீள நினைக்கிறாரென்ற தோணல் மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கும்.. எப்போதெல்லாம் தங்கள் பலமிழக்கிறார்களோ அப்போதெல்லாம் சாதிய சண்டைகளும் மோதல்களும் கலவரமும் கொலைகளும் நடக்கின்றன் ..ஏறக்குறைய பாசிசபாஜகவின் அஜந்தா இது தான் ..எப்போது எதிரணியில் இருக்கிறதோ அப்போதெல்லாம் பாகிஸ்தான் சதி என்பார்கள்.. குண்டுவெடிப்பு நிகழும் மதமோதல்கள் நடக்கும் .. சாதிய சங்கங்களும் மதத்தை முன்னெடுக்கிற அமைப்புகளும் இதுவரை சாதித்ததென்ன .. மதரீதியாக மக்களை பிரிப்பது அல்லது மதத்திற்குள் சாதி ரீதியாக பிரிப்பது ..இவர்களால் தங்கள் வளையத்தை தாண்டி எப்போதுமே வர முடியாது இவர்கள் அடித்தளம் சாதி மதத்தால் ஆனது .. அதேபோல் இன்றைக்கு நிறைய இஸ்லாமிய அமைப்புகள் தோன்றியதன் நோக்கமும் செயலும் நிறைவேறியிருக்கிறதா என்றால் இல்லை பெரிய கட்சிகளிடம் பேரம் பேச மறுத்தால் சிறு சிறு குழுக்களாக வாக்குகளை பிரிக்க உதவியிருக்கிறதே தவிர இவர்கள் சார்ந்த சமுதாயத்திற்கோ/ சமூகத்திற்கோ பயன் ஏற்பட்டிருக்கிறதா ..இந்த நிலை இந்திய அளவில் பாசிசத்திற்கு பலனளித்திருக்கிறது .. பாஜக வெற்றிப்பெற்ற பல தொகுதிகளில் சில சாதீய மத அமைப்புகள் வாக்குகளை பிரித்து பாசிச பாஜகவிற்கு உதவி/துணை புரிந்திருக்கிறது .. .. தமிழகத்தில் சாதீய கட்சிகளை வளர்த்ததில் பெரும் பங்கு திராவிட கட்சிகளுக்கு உண்டு என்பதை மறுக்கவில்லை வாக்கு அரசியலில் இது தவிர்க்க முடியாதென்றாலும் கட்டுக்குள் வைத்திருக்கிறது .. அதனால் தான் சாதீய/ மத நிலைபாடு கொண்டவர்களால் பேரம் பேச முடியவில்லை வருங்காலங்களில் சாதீய/மத ரீதியாக செயல்படும் அமைப்புகளை புறந்தள்ளி வேண்டும் .. திமுகவின் மிகப்பெரிய சவாலாக இது இருக்குமென எண்ணுகிறேன் நிறைய எண்ணிக்கையில் போட்டியிடுதல் மிக முக்கியம் .. பேரம் பேசும் தந்திரங்களை இனங்கண்டு ஆரம்பத்திலேயே விலக்கி வைக்கவேண்டும் அதேவேளை அந்தந்த சமூக/சமுதாயத்தின் நலன்கள் அவர்கள் உரிமைகள் சம உரிமைக்கான சமூகநீதிக்கான வரைமுறைகளை கருத்தில் கொள்ளல் வேண்டும் .. அரசியல் வியாபாரிகளிடமும் சமூகத்தை அடகுவைப்போரிடமும் கவனமாக இருக்கவேண்டும் .. எல்லோருமே தங்களை சமூக/சமுதாய பிரதிநிதி என சொல்லிக்கொண்டாலும் .. வாய்ப்பளிக்க வேண்டுமெனில் திராவிட இயக்கத்திலேயே அதற்கான பிரிதித்துவம் உண்டென கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பை தரலாம் .. .. கொள்கையிலிருந்து மாறி சமரசம் என்ற பெயரில் விட்டுகொடுத்தால் அது பேரியக்கத்தின் கொள்கை வீழ்ச்சியாகவே அது முடியும் .. தமிழகத்தின் எதிர்காலத்தை நல்லதொரு சமுக சூழலுக்கானதாக சாதி மத பேதமற்றதொரு விடியலுக்கானதாக மாற்ற திமுகவால் மட்டுமே முடியும் .. .. சாதி மதம் பேசுவோரை புறந்தள்ளுவோம்.. .. ஆலஞ்சியார்

Sunday, October 28, 2018

சமுதாயம்..

இஸ்லாமிய சமூகத்திற்கு சாபமா என கேட்டார் சாபமல்ல அறியாமை என்றேன்.. ஜாக் தவ்ஹீத் அமைப்பு தொடங்கபட்டிருக்கிறது பழைய தவ்ஹீத் கூட்டாளிகள் மீண்டும் இணைகிறார்கள் ஆனால் பிரிந்ததற்கான காரணம் அறியாமலேயே.. .. தானெனும் அகந்தையும் .. தானே சிறந்தவனென்ற இருமாப்பும் தனக்கே எல்லாம் தெரியும் தான் சொல்வதே சிறந்தபாதை .. நேர்வழியை காட்டுவேன் என்ற நிலைபாட்டை ஏன் என கேட்காமலேயே சிந்திந்துணராமலேயே இடையனின் கம்பிற்கு கட்டுபடும் ஆட்டுமந்தைப்போல ஒரு கூட்டம் பின்னால் சென்றதே ஒரு சமூகத்தின் சீர்கேட்டிற்கு வழிவகுத்திருக்கிறது .. அறிவுடை சமூகமென நம்பபட்ட தமிழக முஸ்லிம்கள் சரியான தலைமையை கூட தேர்வு செய்ய முடியாத நிலைக்கு தள்ளபட்டிருக்கிறார்கள் .. எதையும் சட்டென்று நம்பிவிடும் தமிழனின் இயல்பு ஒருகாரணமாக இருக்கலாம் அதிகார போட்டி கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களுக்கு பிறகு ஒருவித தடுமாற்றமும் தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு சமமாக மதிக்காத செயலும் பன்மொழிப்புலவரை பிரித்தது .. தொடர்ந்து அரசியல் கட்சிகளை சார்ந்து மாறி மாறி சவாரி செய்ததும் IUML வீழ்ச்சியில் முடிந்தது .. இந்தியா முழுக்க வியாபத்திருந்த இயக்கம் .. விடுதலை போராட்டத்தில் களம்கண்ட முதல் இயக்கம் சுருங்கி தென்னகத்தில் ஒரு குறிப்பிட்ட நிலபரப்பிற்குள் ஒடுங்கிப்போனது .. .. தமிழகத்தின் நிலை மிக மோசம் சரியான தலைமையின்றி தடுமாறிய போது ஏகத்துவம் பேசி இளைஞர்களை மூளைச்சலவை செய்து தன்னை நிலைநிறுத்திக்கொண்ட பி.ஜே .. அதிகார பகிர்வை தரமறுத்ததும் தன்னை விட யாரும் மேல வரகூடாதென்ற நினைப்பும் தன் கட்டுக்குள் இருக்கவேண்டுமென்ற நிலைபாடு நிறைய இயக்கங்களாக உருவெடுத்தது .. சத்திய மார்க்கம் பேசி திரிந்தவர் தன்னை மகா யோக்கியன் என்று நம்பவைத்தது ..சுயரூபம் வெளிப்பட்டு மக்கள் அரங்கில் பெண்பித்தனாக காமகொடூரனாக அசிங்கபட்டு.. அடுத்தவரை அசிங்கபடுத்த எண்ணி தானே அவமானபட்டு நின்றதும் .. 2000 கோடி சொத்துக்களை விட்டு செல்ல மனமின்றி தனக்கு வேண்டியவர்களை நியமித்து கடைசியில் எதுவும் நடக்காமல் போனது .. முஸ்லிம் விழுக்காட்டை விட அதிக எண்ணிக்கையில் இயக்கங்களாகி இருக்கிறது .. எந்த இஸ்லாமிய இயக்கமும் நீண்டநாள்கள் நீடித்து நிலைக்க முடியவில்லை அதிகார பகிர்வு ..அடிக்கிற கொள்ளையில் பங்கு என தகராறாய் கடைசியில் தலைமை ஆசை தனிவலையை நோக்கி நகர்த்துகிறது.. Trade mark முத்திரையாகி பலகாலமாகிவிட்டது 20% வரை கமிஷன் என்பதெல்லாம் வேறலெவல் .. நல்ல வியாபாரமாக மாறி தனித்தனி வலை (கணக்கு) என்று சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது .. ஜாக் ..மீண்டும் உடையும் ..காரணம் பங்கு(பதவி புகழ் பணம்) எவ்வளவென்பதில் கலகம் வரதானே செய்யும் .. .. தவ்ஹீத்v/s சுன்னத் ஜமாத் பிரச்சனை காலத்திற்கும் தீராது.. ஒற்றுமையென்பது சுன்னத் ஜமாத்தை உள்ளடக்காமல் சாத்தியமே இல்லை .. தவ்ஹீத் ஒருங்கிணைப்பு என்பது பங்குபிரிப்பதில் சமாதானம் என்றே கொள்ளவேண்டுமே தவிர ..சமுதாய ஒருங்கிணைப்பாக அல்ல.. கடைசி வரை முஸ்லிம் தனிப்பட்டே கிடப்பான் .. தலைமையை உருவாக்க தெரியாமல் .. அல்லது நல்ல நேர்மையான தலைவர் கிடைக்காமல் ஒரு சமுதாயம் சீரழிகிறது .. அவரவருக்கு அவரவர் வழி... .. ஆலஞ்சியார் (புகைப்படம் P.c. Abu Haashima..)

Saturday, October 27, 2018

தளபதி.ஸ்டாலின்

தளபதி.ஸ்டாலின் தலைவராவதை தடுக்க ரஜினியால் மட்டுமே முடியும் .. கேட்கும் போது சிரிப்பு வருகிறது .. இதுவரை களமே சந்திக்காத ஒருவரை திமுகவோடு சரிக்குமே சமமாக பேசுவது கூட ஒருவகை அயோக்கியத்தனம் .. கிறுக்கன் கூட சொல்ல மறுப்பதை அரசியலில் ஆயிரம் வாக்குகள் கூட வாங்க முடியாதவர்கள் சொல்வதை கேட்டு கருத்துகேட்கிறது ஊடகங்கள் .. உண்மையான நிலவரம் மக்களின் மனநிலை என்ன என்பதை அறிந்துக்கொண்டே குட்டையை குழப்புகிறது .. .. இந்தியா டுடே கருத்துகணிப்பில் கூட கடைசி இரண்டாவது இடத்தை (6% விழுக்காடு)பிடித்திருப்பவரோடு 41% விழுக்காடு பெற்று முதல் இடத்தில் இருப்பவரோடு போட்டியாக கருதவேண்டியிருக்கிறதெனில் மூளைகோளாறை தவிர வேறேதும் இல்லை.. காந்தியின் பெயர் சொல்லி பிழைக்கும் பாஜக அனுதாபி மணியன் .. பக்கத்து வீட்டுகாரனுக்கு கூட தெரியாத ஆள் இவரையெல்லாம் கருத்து சொல்ல வைப்பதும் அதை விவாதப் பொருளாக்குவதும் மகா கேவலம் .. .. இன்றைய சூழலில் தமிழகத்தின் மிக நம்பிக்கையுடைய அரசியல் தலைவராக நேர்மையான அரசியலை அறம் சார்ந்து நிற்பதே ஜனநாயகத்தின் உயிர்நாடியென நம்பி வாய்ப்புகள் நிறைய வந்தபோதும் கூட .. மக்கள் செல்வாக்கோடு அவர்களின் நேரடி தேர்வின் மூலமே அதிகாரத்தை அடைய வேண்டுமென்ற பிடிவாதத்தோடு எல்லா நேரங்களில் மக்கள் பணியே தன் தலையாய வேலையென சுழன்றுக்கொண்டிருக்கும் தளபதி அவர்களோடு .. அரசியல் அரிச்சுவடியே தெரியாத அரிதார நம்பிக்கையோடு முகம் மாற்றி ஏமாற்று வித்தை புரிவோரை சமன்படுத்தி பேசுவதை எப்படி ஏற்க முடியும் .. எழுபதுகளில் தமிழனை ஆட்கொண்டிருந்த சினிமா மாயை / கவர்ச்சி இப்போதில்லை ஒருவித போதையோடிருந்த சினிமாவின் நிழல் ஏற்படுத்திய அழுத்தம் தமிழ் சமூகத்தில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தன் அடர்த்தியை இழந்து சுயமிழந்து .. ரசிப்போம் கைதட்டுவோம் திரையரங்கை விட்டு வெளியே வரும் போதே களைந்துவிடுமோமென்ற தெளிவு பெற்றிருக்கிறது .. சினிமாகாரர்கள் அரசியல் பேசினாலோ செயல்பட்டாலோ ஒருவகை நகைச்சுவையோடு கடந்து போக தெரிந்திருக்கிறது திரையரங்களில் அரசியல் தலைமையை தேடிய காலம் மலையேறிவிட்டது.. களம் காண வேண்டும் களப்பணிகளில் தீவிரம் காட்டவேண்டும் அரிதாரம் கலைந்து நீண்ட அரசியல் பயணம் வேண்டும் மக்கள் இன்னல்களை கவலையோடு கண்டு அதற்கான தீர்வை தர முடியுமென்ற நம்பிக்கையை விதைக்கவேண்டும் .. அதைவிட மக்களிடம் நன்மதிப்பை இவன் வந்தால் நல்லதை செய்வானென்ற நம்பிக்கை பெற்றிருக்கவேண்டும்.. இவையாவும் தளபதியை தவிர இங்கே தமிழகத்தில் யாரிடமும் இல்லை அதைதான் தமிழகத்தை ஆய்வுசெய்கிற அரசியல் விமர்சகர்கள் .. கணிப்பு நடத்துகிற ஊடகங்கள்/இயக்கங்கள் வெளிப்படையாகவே ஒருமித்த குரலில் சொல்கின்றன.. .. தமிழர்களின் ஒருமித்த குரல் தளபதி தமிழதத்தை ஆளவேண்டும் .. நடக்கும் நடந்தே தீரும் .. வெளுக்கும் விடிந்தே தீரும்.. .. ஆலஞ்சியார்

Friday, October 26, 2018

விடுதலை வேண்டும்

வரலாற்று ஆவணமாகும் இந்த புகைப்படம்.. திரு.ராகுல் கைதாகி காவல்நிலையத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இன்று உலகம் முழுதும் வைரலாகிறது .. நுணுக்கமாக இந்த படத்தின் அரசியல் அறம் பேசுகிறது பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்தில் காங்கிரஸ்காரர்கள் கைதான நிகழ்வை போல இந்நிகழ்வு வரலாற்றில் பேசபடும் .. இந்த பாசிச ஆட்சிக்கெதிராக சர்வாதிகாரத்தனத்தோடு செயல்படும் மோடி அரசிற்கெதிரான ஆயுதமாக பேசபடும் புகைப்படம் இது.. .. சிபிஐ இயக்குனரை மாற்றியதற்கும் ரஃபேல் விமான ஊழலை விசாரணையை தன் விருப்பத்திற்கேற்ப நடத்தவே இயக்குனர் மாற்றபட்டிருக்கிறாரென்று சிபிஐ அலுவலகம் முற்றுகையை அடுத்து ராகுல் கைதானர் .. உச்சநீதிமன்றம் கூட தன் கவலையை பதிவு செய்திருக்கிறது.. சிபிஐ ஒரு தன்னாட்சி புலனாய்வு அமைப்பு (நாம் அப்படிதான் நம்பவேண்டும்) இயக்குனர் நியமனத்திற்கு சில விதிமுறைகள் உண்டு ஐந்து பேர் கொண்டு கமிட்டி பரிந்துரையும் தேர்வுநிலையில் உள்ள தகுதியும் அடிப்படையாக கொண்ட பரிந்துரையை உள்துறை அமைச்சகம் பரிசிலித்து அளிக்கும் .. சிபிஐ இயக்குனரை நீக்க அரசிற்கு அதிகாரமில்லை அதையும் உள்துறை அமைச்சக பரிந்துரையும் ஐந்துபேர் கொண்ட கமிட்டி முடிவும் முக்கியம் இங்கே சர்வாதிகாரமாக இந்த முடிவை எடுத்திருக்கிறார் என சுப்ரமணிய சுவாமி கூட எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.. நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா.. .. ராகுல் மிக நிதானமாக சிறப்பாக செயல்படுகிறார் இந்த பாசிச ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதில் உறுதியோடு இருக்கிறார் இந்திய பன்முகதன்மைக்கெதிராக ஆர்எஸ்எஸ் கும்பல் நடத்தும் யுத்தத்தை வென்று காட்டவேண்டுமென்ற வேட்கையோடு .. எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பை உறுதி செய்ய சில விட்டுகொடுத்தல் என்ற நிலைக்கும் தயாராக இருக்கிறார்.. எல்லா மாநிலங்களிலும் பாஜக மீதான எதிர்ப்பை ஒருங்கிணைத்தல் அவசியமாகிறது பாஜக ஆளும் மாநிலங்களிலும் கூட மக்கள் பாசிச பாஜக அரசின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் மக்களை சுரண்டி கார்ப்பரேட் முதலாளிகளின் காலில் கொண்டுப்போய் கொட்டுகிற இந்த அரசை விரட்ட காலம்பார்த்த காத்திருக்கிறார்கள் .. பணமதிப்பிழப்பு என்ற கோமாளித்தனத்தால் இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் சிரிக்கிறது .. விலைவாசியோ விண்ணை தொடுகிறது விடுதலை இந்தியாவில் மிக மோசமான காலகட்டத்தில் இருக்கிறோம் .. .. இன்றைய ஒரே நம்பிக்கையாய் திர. ராகுல் தெரிகிறார் ..நாட்டின் நலன் கருதி சில சமரசங்களை ஏற்று விட்டுகொடுத்தாயினும் இந்த பாசிச பாஜக அரசை வீழ்த்த முனைவோம்.. .. புதிய விடுதலைப்போருக்கு தயாராவோம் .. ஆலஞ்சியார்

Thursday, October 25, 2018

இடைத்தேர்தல் வரட்டும்

ஜனநாயக நாட்சில் 20 தொகுதிகள் காலியாக இருக்கிறதென்பது ஒருவகை அநீதி..மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இருப்பது அந்தந்த தொகுதிக்கு ஆற்றவேண்டிய பணிகள் கடமைகள் காலந்தாழ்த்துவது ஏற்புடையதல்ல.. நீதிமன்றங்கள் மக்கள் பிரத்தித்துவ வழக்குகளில் நீண்டகாலம் எடுத்துக்கொள்வது சரியான நடைமுறையல்ல .. சில வழக்குகளில் வெற்றிப் பெற்றது செல்லாதென்ற தீர்ப்பு ஐந்தாண்டு முடிந்து வந்த கேலிகூத்தெல்லாம் நடந்தது .. அதுவரை அவர் அனுபவித்து வந்த பதவி செல்லாது ஆனால் சட்டமன்ற உறுப்பினராக சட்டவிரோதமாக செயல்பட்டிருக்கிறார் என்றுதான் பொருள் அவர் வாங்கிய சம்பளத்தை திருப்பி பெறுவதாலேயே அவர் முன்னாள் உறுப்பினர் இல்லையென்று அழைப்பதாலேயே அவர் செயல்பட்டது இல்லையென்று ஆகிவிடாது.. காலதாமதமான நீதி அநீதி மட்டுமல்ல தகுதியில்லாதவர்கள் கொண்டாட பட காரணமாக அமைகிறது.. ஜனநாயகத்தில் முறைகேடுகள் நடைபெறும் போது நீதிமன்றம் காக்கும்.. மீட்டெடுத்து ஜனநாயக மாண்பா நிலைநாட்டும் என்ற நம்பிக்கை பொய்க்க தொடங்கியிருக்கிறது .. சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விதிமுறைகள் சபாநாயகருக்கான அதிகாரவரம்புகள் குறித்தும் உச்சபட்ச அதிகார அமைப்பான நீதிமன்ற தீர்ப்புகள் நிறைய வழிகாட்டியிருந்தும் மத்தியில் ஆள்வோரின் கண்ணசைவிற்காக காத்திருப்பதும் காலங்கடந்து நீதி கிடைப்பதும் ஜனநாயக நெறிகளின் குரல்வலை நெறிக்கபடுவதெற்கு சமம் .. குற்றவாளிக்கு சாதமாக நீதிமன்றம் தேர்தல் ஆணையமும் நடந்துகொண்ட விதம் நாடறியும் .. இதற்கு ஜெயலலிதா வழக்கும் விசாரணையும் தீர்ப்பும் குமாரசாமி கணக்கும் தேர்தலை நடத்தாமல் காத்திருந்ததும் நாடறிந்தது தான் இவையனைத்திற்கும் ஜெயலலிதா வழக்கின் இறுதி தீர்ப்பே சாட்சியம் வகிக்கும் .. காலதாமதம் தமிழகத்தை அழிவிற்கு இட்டுசென்றிருக்கிறது .. குற்றவாளியை கொண்டாட வைத்திருக்கிறது.. தமிழகத்திற்கு அநீதி இழைத்திருக்கிறது.. .. இருபது தொகுதிகளுக்கு உடனே தேர்தல் நடத்தபடவேண்டும் ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகள் செயலிழந்து கிடக்கின்றன ... தேர்தலை சந்திக்க ஆளும்தரப்பு அஞ்சுகிறது மக்கள் பணிகள் அதிகாரிகளின் அலட்சியத்தால் நிறைவேறாமல் கிடக்கிறது .. ஒரு மினி தேர்தலைப்போல 20 தொகுதி தேர்தல் நிறைய பணம் புழங்கும் மிரட்டல்கள் .. அதிகாரகளின் துணையோடு வாக்கு இயந்திர தில்லுமுல்லு நடக்கும் .. வாக்குசீட்டுமுறையை பின்பற்றி தேர்தலை சந்திக்க எதிர்கட்சிகள் அழுத்தம் தரவேண்டும் .. தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை திரும்ப வாக்குசீட்டுமுறையே சரியானதாக இருக்கும் .. நியாயமான தேர்தலை நடத்த முயற்சிக்கவேண்டும் ஆளும்கட்சி மீதான மக்களின் வெறுப்பு ..மானமுள்ள தமிழ்சமூகத்தின் அறசீற்றத்தின் வெளிப்பாடாய் தெரியும் .. திமுக தலைவர் தளபதி அவர்கள் தேர்தலை நடத்தவேண்டுமென்று கூறியிருக்கிறார் அதுதான் சரியான அணுகுமுறை மீண்டும் வழக்கு மேல்முறையீடென காலந்தாழ்த்துவது ஜனநாயகம் கேலிகூத்தாக்கும் செயல் .. .. அரசிற்கெதிராக வாக்களித்த பன்னீர் கோஷ்டியினர் பதவியில் தொடர்வதும் அவர்கள் மீது நடவடிக்கை இல்லையென்பதும் ஏனென்ற கேள்வி எழும் .. சபாநாயகரின் நடுநிலை நமக்கு விளங்கும்.. தினகரனின் அரசியல் வாழ்வு இந்த அரசு வீழ்வதில் இருக்கிறது இல்லையெனில் சசிகலாவை போல யாரென்று கேட்கும் நிலை வரலாம் எடப்பாடி பன்னீரின் கூட்டுகட்டை பாஜக இயக்குவதும் இனியொரு வாய்ப்பு கிடைக்காதென்பதால் பாஜக இவர்களை வைத்து களியாட்டாம் ஆடுவதும் இப்போதைக்கு தொடரும்,.. இடைதேர்தல் வந்தால் மட்டும் இருபதில் யார் வெல்கிறார்கள் என்பதை பொறுத்து ஆட்சிமாற்றம் இயற்கையாக நிகழ வாய்ப்பு இருக்கிறது அதற்கு திமுக முனைப்போடு கடுமையாக கண்விழித்து உழைக்கவேண்டும்.. .. நாடு நல்லதொரு முடிவை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது .. வெல்க ஜனநாயகம் .. ஆலஞ்சியார்

Wednesday, October 24, 2018

சிபிஐ.. பாசிசத்தின் பிடியில்

அலோக் வர்மாவை மாற்றியது ஏன் காங்கிரஸ் ரஃபேல் ஊழலை விசாரிக்க தொடங்கியதே காரணமென சாடல்.. விடுதலை இந்தியாவில் முதன்முறையாக மத்திய புலனாய்வு துறையில் அரசு நேரடியாகவே தலையிடுகிறது சிபிஐ இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பி இணை இயக்குனர் நாகேஸ்வராவை பொறுப்பில் அமர்த்தியது சர்ச்சையாக வெடித்திருக்கிறது .. அலேக் வர்மா கட்டாய விடுப்பை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.. .. மோடி ஆட்சிக்கு வந்தவுடன் மக்களிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் யுத்தத்தை தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறது அவர்கள் மீது அவர்கள் தாங்கும் சக்தியை மீறிய தாக்குதல்கள் விலையேற்றம் என்ற பெயரில் நடக்கிறது .. கல்வியில் அடித்தட்டு மக்களின் எண்ணங்களில் ஆசிட் ஊற்றியதைப் போல உயர்கல்வி இனி மேட்டிகுடி மக்களுக்கு மட்டுமே என்ற அறிவிக்காத குறையாக மத்தியதர குடும்பங்களின் கனவு நசுக்கபடுகிறது ஒவ்வொரு குடிமகனும் இந்த அரசின் மீது தீராத கோபத்தில் இருக்கிறான் ..ஒரு சில கும்பல்களின் அட்டூழியம் தாங்கமுடியவில்லை 3% விழுக்காடு கூட இல்லாதவர்கள் உயர்பதவி மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இடைநிலை பணியை கூட ஆக்ரமித்திருக்கிறார்கள் .. நீதி இங்கே மூர்ச்சையாகி கிடக்கிறது .. வலுத்தவனுக்கே நீதி என்ற நிலையையும் தாண்டி நூல் மட்டுமே வாழ தகுதி அவாளுக்கு மட்டுமே விரைந்த அவர்கள் விரும்புகிற நீதி கிடைக்குமென்கிற நிலை .. மதவெறியை தூண்டுவதும் சாதி மோதலை உருவாக்குவதும் .. மக்கள் அமைதியின்றி வாழும் சூழலை உருவாக்கி போதுமடா சாமி என்கிற நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது ஊழல் எல்லாம் இழப்பாக கருத வேன்டும் ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இழப்பு கூட ஊழலென ஊர்பேச செய்யும் அநியாயம் நடக்கும் .. பெண்கள் பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி கொன்று போட்டாலும் பாரத்மாதாக்கி ஜே போட்டால் தேசபக்தனாய் வலம் வரலாம் யாரும் எதுவும் கேட்கமுடியாது.. அயோக்கியர்கள் மதவெறிபிடித்த கேடுகெட்ட ஜென்மங்கள் தேசபக்தன் வேசம்கட்டி உலாவருகிறார்கள்.. ஒவ்வொன்றாய் மாற்றி மத சாயம் மநுநீதி ஒரே கோட்பாடென்று சொல்லி திரிந்தவர்கள் அடித்த கொள்ளைகள் நாடறிய தொடங்கியதும் .. புலனாய்வு துறையையே கையிலெடுக்கிறார்கள்.. .. நாடே பாசிச கயமையிடம் சிக்கி சீரழிகிறது.. இனி இவர்களை துரத்துவதை தவிர வேறுவழியில்லை ..இந்த மண்ணின் மாண்பு காக்கபடவேண்டும் .. சாதி மத வெறிகொண்ட கேடுகெட்டவர்களின் கையிலிருந்து நாடு மீட்கபடவேண்டும் .. இல்லையேல் சர்வாதிகார நாடாய் போகும் .. எடுத்தேன் கவிழ்த்தேன் என்றாகும்.. மிச்சமுள்ள இயற்கை செல்வங்களும் கொள்ளைபோகும் .. இடுப்பில் துண்டு கட்டுகிற இழிநிலை வரும்,.. எச்சரிக்கை .. பாசிசத்தை வேரறுப்போம் .. ஆலஞ்சியார்

Tuesday, October 23, 2018

அநீதி..

வைரமுத்து காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் .. பிரபலங்கள் ஆளுமைகள் மதம் மார்க்கம் பேசுவோர் .. ஜெகத்குரு.. என வரிசைகள் நீளும் காமம் தனிமனிதனை அவன் அதுவரை போற்றி காப்பாற்றி வந்த நன்னடத்தையை கேள்விகுறியாக்கும்.. தனிமனித ஒழுக்கம் இங்கே யாருக்குமில்லை வாய்ப்பு கிட்டும்வரை யோக்கியனாய் வலம் வரலாம் .. ஆனால் தொடர் குற்றசாட்டும் திரும்ப திரும்ப மறுப்பதும் சம்பந்தபட்டவர்களின் முகத்தை தோலுரிக்கிறது.. தனிதனியே அயோக்கியன்தான் என்ற சொல் பொருந்துகிறது.. .. வைரமுத்துவை வளைக்கிற கூட்டம் அவரை போல குற்றம் சாட்டபட்ட பிராமண சங்க தலைவர் நாராயணனையைப்பற்றி பேசுவதில்லை ..இவ்வளவிற்கும் சின்மயியை .. அய்யங்கார் தேவடியா என்று வெளிப்படையாக பேசிய ஆடியோ ஆதாரம் இருந்தும்.. எந்த பெண்ணீய அமைப்பும் எதிர்க்கவில்லை குறைந்தபட்சம் .. metoo க்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் யாருமே பேசவில்லை.. அதேபோல அன்று காஞ்சி ஜெயேந்திரருக்கு எதிரான குற்றம் சாட்டிய அனுராதாரமணனை .. சோ உள்ளிட்ட பார்பன பத்திரிக்கையாளர்கள் கூட முற்போக்கு சக்திகளின் தூண்டுதலில் காஞ்சி மடத்தை கேவலபடுத்த பயன்படுகிறாரெனசொன்னார்கள்.. அவருக்கு மிரட்டல்கள் வந்தன .. யாருமே அனுராதாவின் பேச்சை கேட்கவில்லை இவ்வளவிற்கும் அவள் காலங்தாழ்த்தாமல் உடனே வெளியே சொன்னார் .. தொடர்ந்து அவரது உரிமைகள் பறிக்கபட்டன பத்திரிக்கைகள் அவரது எழுத்துகளை வேண்டாமென தள்ளிவைத்தது .. அவருக்காக பேசவே அஞ்சினார்கள் இன்றைக்கு சின்மயிக்காக பேச முன்வந்திருப்பது ஒருவகையில் நல்லமுன்னேற்றம் .. ஆனால் சம்பந்தபட்டவர் மீதான குற்றசாட்டிற்கான ஆதாரங்கள் இதுவரை தராதது கேள்வியாகிறது.. .. இருபாலாரும் விரும்பியதென்கயில் அது கள்ளஉறவென்றாலும் தகாதென்றாலும் சட்டம் ஏற்கிறது .. ஆனால் விரும்பும்வரை அமைதியாக இருந்துவிட்டு பிறகு குற்றம்சாட்டுவதை ஏற்கமுடியாது இப்போது அமைச்சர் ஜெயகுமார் விடயத்தில் கூட பெண்ணின் தாயார் சம்பந்தத்தோடு நடந்ததாக இருவரின் பேச்சில் நாம் உணரலாம் ஆனால் அதை மறுப்பதும் பிறகு மன்னிப்பு கேட்பதும் இப்போது பேஷனாகிவிட்டதால் அமைச்சரோ முதல்வரோ பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.. தினகரன் தரப்பு ஒருவகை மிரட்டல் விடுவதாகவே தெரிகிறது.. கொங்கு மண்டல ஆடியோ விரைவில் வெளிவரலாமென்கிற செய்தி ஒருவித நிர்பந்தத்தை எடப்பாடிக்கு தருவதற்காகவே என்று தெரிகிறது.. .. வைரமுத்து, காஞ்சி ஜெயேந்திரன், பி.ஜெய்னூலாபுதீன் .. நாராயணன் ஜெயகுமார்.. என பட்டியல் நீள்கிறது.. பொதுவெளியில் யோக்கியன் சாது நேர்மையானவன் வேசம்கட்டுபவர்களின் லீலைகள் .. அவர்களின் தனிப்பட்ட விடயமென்றாலும் பாதிப்பிற்குள்ளாகிறவர்களின் நிலை .. கடைசியில் வேசிபட்டம் .. எதிர்க்கிறவர்கள் மிரட்டபடுவதும், அல்லது பணம் அதிகாரம் கொண்டு மறைப்பதும் அநீதியானது.. .. பெண்கள் மோக பொருளாக பார்க்கபடுகிற நிலை மாறும்வரை அநீதியே இங்கே பேசுபொருளாகும்.. .. ஆலஞ்சியார்

Monday, October 22, 2018

மானங்கெட்ட

எச்.ராசா நிபந்தனையற்ற மன்னிப்பு.. மன்னிப்பு கடிதம் கொடுப்பதும் இல்லையென்று மறுப்பதும் அவர்கள் குல/இன வழக்கம்.. ஆனால் அது எவ்வளவு சௌகரிகமாக போய்விடுகிறது .. உயர்நீதுமன்றத்தையே மயிசு என்று சொல்லலாம் பிறகு வாய்தவறியதென மன்னிப்பு கேட்கலாமென்று புதிய பாதையை சொல்லியிருக்கிறார் .. பொதுவெளியில் பேசியதை பேசவே இல்லையென்றார் யாரோ டப்பிங் செய்து வெளியிட்டிருப்பதாக சொன்னார் .. எஸ்வி.சேகர் அந்த ஆடியோ சவுதியில் எடிட் செய்யபட்டிருக்கிறதென்று அதற்கு மத சாயம் பூசினார் இதெல்லாம் தவறென்று நீதிமன்றம் கருதவில்லை .. தேவையில்லாமல் தலையிட்டு கருத்து சொன்ன சேகரே மீது ஏன் நடவடிக்கையில்லை ..ஒருவேளே,சேகரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவாரோ.. இதேபோல் தப்பு செய்துவிட்டு நீதிமன்றம் முன் மன்னிப்பை கோரினால் மன்னிப்பு எல்லோருக்கும் கிடைக்குமா..தவறை மீண்டும் மீண்டும் செய்கிறவரை மன்னிப்பது ஏற்புடையதா..? .. வீரசர்வாக்கர் வாஜ்பாய் ஏன்.. இன்றைக்கும் மகாகவி என ஊடகங்களால் புகழப்படும் சுப்ரமணியன் பாரதி 1918ல் .. நான் தேசவிடுதலைப் பற்றி பாட மாட்டேனென தொடர்ந்து கடிதமெழுதி .. என்னை பிரான்ஸ் (பாண்டிச்சேரிக்கு) அனுப்பிவிட மண்றாடியவர்தான் நான் பிரிட்டீஷ் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியிலிருந்து வெளியேறி விடுகிறேன் என்னை சிறைக்கனுப்பாதீர்களென தொடர்ந்து கடிதம் எழுதியதெல்லாம் அனைவரும் அறிந்ததுதான்.. அவாள்களின் கேடயம் மன்னிப்பு.. .. மன்னிக்கலாம் அது நியாயமாக இருந்தால் பயத்தில் சிறைக்குச் செல்ல அஞ்சி மன்னிப்பு கேட்பதும் பிறகு சிலகாலங்கழித்து மீண்டும் வாய்கொழுப்போடு பேசுவதும் பார்பனர்களுக்கு கைவந்தகலை.. பொய் புரட்டு புராணம் இதுதான் இவர்களின் ஆயுதம் தங்களின் வளர்ச்சிக்காக எதையும் இழக்க தயாராவார்கள் .. முன்னேற்றம் மட்டுமே இவர்களின் குறிக்கோள் அதற்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள் மானம் மரியாதையெல்லாம் தேவையில்லை திறக்கபடாத கதவுகளும் மடிக்கபடாத விரிப்புகளும் ஆயுதமாய் கொண்டவர்கள் அடுத்தவனின் உரிமைகளை எடுத்துகொள்ள அவர்களுக்குள்ளாகவே குரோதத்தை பகையை வளர்த்து அவர்களை அடித்துகொள்ளவிட்டு அதில் குளிர்காய்பவர்கள் மாட்டிக்கொண்டால் மன்னிப்பை சொல்லி நழுவிவிடுவார்கள் .. மதவெறியை தூண்டுதல் ..ஜாதிவெறியை தூண்டி மோதவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள் இந்த மண் கலவரத்தோடு இருந்தால்தான் மக்கள் பீதியில் இருந்தால்தான் தங்கள் உரிமைக்காக குரல்கொடுக்கவோ போராடவோ மாட்டான் நாம் நினைத்ததை சாதித்துக்கொள்ளலாம் என திட்டம் தீட்டி செயல்படும் சூழ்ச்சியாளர்கள்.. .. பொய்யே மூலதனம்..பொய்யே இவர்கள் வாழ்வியல் பொய்யே இவர்கள் பலம்.. ஆனால் அது நீண்டநாள் கைகொடுக்காதென்று அறிவார்கள் ..அதனால்தான் மன்னிப்பென்ற கேடயத்தோடு உலா வருகிறார்கள் .. .. #மானங்கெட்ட... .. ஆலஞ்சியார்

Sunday, October 21, 2018

அதிமுக மடையர்கள்

ஆயிரம் அறிவாளிகளோடு விவாதிக்கலாம் ஆனால் ஒரு மடையனோடு போராடுவது சிரமம்.. மொத்தமும் மடையனாக இருந்தால் என்ன செய்வது .. நானும் ராஜூவும் கையெழுத்திட்டு பெரும்பாவம் செய்துவிட்டோம் உதயகுமார் கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்ய அநுமதித்தாராம்,.. ஊழல் வழக்குகள் என திமுக தொடர்ந்து அடித்தாடுவதால் என்ன பேசுகிறோமென தெரியாமல் ஏதேதோ பேச தொடங்கியிருக்கிறார்கள் இந்த மரமண்டைகள்.. மாநில அரசு மறுத்து நீதிமன்றத்தில் பார்பனர்களின் பேச்சை கேட்டு வாதாடி குருமூர்த்தி வகையறாக்களை மகிழ்விக்க எண்ணி .. கடைசியில் மானங்கெட்டு போனீர்.. நீதிமன்றம் உத்தரவிட்டு அனுமதிபெற்றோமே,தவிர யாருடைய தயவும் இல்லை .. ஆட்சி அதிகாரம் இருக்கிறதென்பதற்காக முறைபடி கேட்டோம் தர மறுத்ததும் உடனே நீதிமன்றத்தை நாடி வெற்றி பெற்று .. மரணத்திலும் போராடி பெற்றவர் என்ற பெருமையோடு ஒய்வெடுக்கிறார் கலைஞர்.. .. அரைகுறைகள் கூட சொல்லியும் கேட்டும் தங்களை திருத்திக்கொள்வார்கள் இவர்கள் அடிமடையர்களாக இருக்கிறார்கள்.. இவர்கள் யாரிடமாவது அடிமையாக இருக்கவேண்டும் ..ஜெயலலிதா சசிகலா இப்போது பாஜகவின் மோடி .. என்ன பேசுகிறோமென்று தெரியவில்லை வகிக்க பதவியின் மாண்பு புரியவில்லை நல்வாய்ப்பில் தீடீரென கிடைத்தது யாரால் என்று கூட புரியாமல் பதவியை காத்துக்கொள்ள எதையும் செய்யும் ஈனபிறவிகள் தளபதியை குறைகூறுகிறார்கள்.. திமுக ஊழல் கட்சியாம் இதுவரை திமுகவை சேர்ந்தவர்கள் யாராவது ஊழலுக்காக தண்டிக்கபட்டிருக்கிறார்களா என்றால் இல்லை ஆனால் அதிமுககாரர்கள் மருங்காபுரி பேராசிரியர் பொன்னுசாமி நாகூர்பிச்சை .. ஏன் அதிமுக தலைமை ஜெயலலிதா இருமுறை முதல்வராக இருந்தபோது நீதிமன்றத்தால் தண்டிக்கபட்டு பதவி பறிக்கபட்டார் .. முதல்வராக சென்றவர் .. நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு சென்றவர் ஜெயலலிதாதான் .. இப்போது உயிரோடிருந்திருந்தால் சிறையில் சசிகலாவோடு இருந்திருப்பார்.. .. தன்மானம் இழந்து பாசிச பாஜகவின் சொல்படி ஆடுகிற அதிமுகவினர் தங்கள் அடையாளத்தை இழப்பதோடு வெகுவிரைவில் சிறைக்கு செல்லபோகிறார்கள் .. திமுக தொடர்ந்த ஒவ்வொரு வழக்குகளும் உயர்நீதுமன்றம் ஏற்றுகொள்வதோடு .. சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டதும் எடப்பாடி செய்வதறியாது சம்பந்தி இரத்தசம்பந்தமில்லாதவர் என்று உளறி தன் உறவினருக்கு ஒப்பந்தம் வழங்கியதை அவரே ஒப்புகொள்கிறார்.. அதிமுகவின் ஒவ்வொரு அசைவும் பாஜகவின் திட்டமிடுதலோடு செல்வதை அறியாமல் அழிவின் பாதைக்கு கொண்டு கட்சியை கொண்டு செல்கிறார்கள்.. அதிமுகவை அழித்துவிட்டு பாஜக வர முயற்சிப்பது அறியாமல் இந்த அடிமைகள் தலையாட்டி பொம்மைகளாக இருக்கிறார்கள்.. .. இப்போதிருக்கிறவர்களுக்கு திமுகவையோ தலைவர் தளபதியையோ பேசவோ விமர்சிக்கவே தகுதி இல்லை.. எங்கள் எதிரியாய் இருப்பதற்கு கூட தகுதிவேண்டும் நிச்சயமாய் இன்றைய அடிமை அதிமுகவினர்க்கு இல்லை.. .. அஞ்சாமை திராவிடர் குணம்.. .. ஆலஞ்சியார்

Saturday, October 20, 2018

மதவெறி அரசியல்

நழுவல்.. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன் அதே வேளை ஐதீகத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.. ரஜினி.. உச்சநீதிமன்ற தீர்ப்பை மக்கள் ஏற்கவில்லை.. அதே வேளை நான் சபரிமலைக்கு செல்லாததால் கருத்துகூற விரும்பவில்லை கமல்... உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது பாஜக .. முஸ்லிம் பெண் ரெஹானா எப்படி வரலாம்.. .. சபரிமலையை வைத்து பாஜக காலூன்ற நினைப்பதும் அதை தேசிய அரசியலாக்க முயல்வதும் தெரிகிறது பெண்கள் நீண்டகாலமாக போராடி பெற்ற உரிமையை மதத்தை காரணம்காட்டி கலவரத்தை உண்டாக்க நினைக்கிற கேடுகெட்ட செயலை கைரளியர்கள் புரிந்துக்கொண்டிருக்கிறார்கள் அதனால் தான் மதமாறிய பெண் வீண்சர்ச்சைகளை கையிலெடுத்து வெளிச்சம் காண்கிறவரென்றும் இந்துபெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி பெற்றதை தடுக்க கருவியாக செயல்படுவதும் கேரள தொலைகாட்சிகள் விவாதித்து முகத்தை கிழித்தெறிகிறது .. .. சில நடிகர்கள் தங்கள் கருத்தை சொல்லியிருக்கிறாக்கள் போவது சரி என்கிறவரை அல்லது தவறென்கிறவரை நம்பலாம் இவர்கள் குழப்பவாதிகள் தெளிவற்றவர்கள் அடுத்தவர் நம்பிக்கை தலையிட கூடாதென்றால் அடுத்தவர் உரிமையிலும் தலையிட கூடாதென்கிற அடிப்படை அறிவுகூட இல்லாமல் கதைக்கிறார்கள் .. ஐதீகம் என்பது காலத்திற்கேற்ற வகையில் மாறுதலுக்கு உட்பட்டிருக்கிறது முன்பு பிராமணன் என்பவன் பிச்சையெடுத்துதான் உண்ணவேண்டுமென்றிருந்த ஐதீகம் மாறவில்லையா .. பிராமணனை தவிர கருவறைக்குள் யாரும் நுழைய கூடாதென்ற விதிகள் மாறவில்லையா.. ஒரு சில குடும்பங்களே நிர்வகிக்கவேண்டும் அவர்கள் தான் சாமிசிலையை தலையில் சுமக்கவேண்டுமென்ற ஐதீக நிலைபாடு மாறவில்லையா.. ஏன் விதிகளும் மரபுகளும் ஐதீகங்களும் காலம் செய்த மாற்றங்களில் மாறியே வந்திருக்கிறது .. கருவறைக்குள்ளேயே கசமுசா செய்கிற போது.. எங்கே போனது ஆச்சாரம் தீட்டென்று சொல்லி வீட்டுக்குவெளியே அமரவைத்த காலமெல்லாம் கரையேறிவிட்டது .. .. அங்கொரு காலும் இங்கொரு காலும் வைத்து அரசியலில் பயணிக்கமுடியாது ..அரிதாரங்கள் தங்களை அரசியல் அரைகுறையாக காட்டிக்கொள்கிறார்கள்.. உச்சநீதிமன்றத்திற்கு தெரியாதா.. ஆகமவிதிகள் ஆச்சாரங்கள் ஐதீகங்கள் எல்லாம் கால ஓட்டத்தில் அடித்துச்செல்லபட்டிருக்கிறதென்ற உண்மை.. மதநம்பிக்கையில் தலையிட கூடாதென்றால் அதைவைத்து அரசியல் செய்வது கூடுமா.. வாக்கு அரசியலுக்காக அதிகாரபோதைக்காக .. குறிப்பிட்ட சாதியினரை தூண்டி வேல் கம்போடு தெருவில் நிறுத்தி பதட்டத்தை உண்டாக்குகிற செயல் பக்கா அயோக்கியத்தனம் .. மதம் பேசும் அரசியல் மானிடர்க்கு ஆபத்தை தரும்.. கடவுள் பக்தி எல்லாம் வீடுகளுக்குள் உங்கள் மனங்களுக்குள் இருக்கட்டும் பன்மை முகத்தோடு பழகும் கலாச்சாரம் நம்முடையது .. மனிதம் காப்போம்,.. மடையர்கள் இனங்கண்டு புறக்கணிப்போம் .. .. ஆலஞ்சியார்

Friday, October 19, 2018

சபரிமலையில் பெண்கள்

சபரியும் ஆர்எஸ்எஸும் .. .. சபரிமலை அய்யப்பனை பெண்கள் தரிசிக்க அனுமதிக்கவேண்டுமென வழக்குபோட்டது ஆர்எஸ்எஸ்.. தீர்ப்பு வந்ததும் அதை நடைமுறைபடுத்த கேரள அரசு முயல்கிற போது .. தடுத்து ஒருவித கலவரத்தை செய்து பதட்டத்தை உருவாக்கிறது .. பாத்திமா என்ற முஸ்லீம் பெண்ணை அனுப்பி அவர் ஏற்கனவே மதம் மாறியவர் பெயரை மாற்ற தேவையில்லையென்றவர் இருமுடியோடு பயணிக்க வைத்ததின் பின் பாஜக தலைவர் சுரேந்திரனை இரண்டுமுறை சந்தித்து ஆலோசித்த பிறகு பயணபட்டிருக்கிறார்.. மன்னர் குடும்பம் கோவிலை சாத்த சொல்கிறது .. தலைமை நம்பூதிரி பூஜை செய்ய மறுக்கிறார் .. தேவசம்போர்ட் திருப்பி அனுப்புங்களென்கிறது .. நாடகம் திட்டமிட்டபடி நடக்கிறது கேரள கம்யூனிஸ ஆட்சியை கலைக்க வேண்டும் மிகப்பெரிய கலநரத்தை நடத்தவேண்டுமென்ற பாஜகவின் கனவை தோழர் பிரணாய் மிக சரியாக கணித்து தடுத்து நிறுத்தியிருக்கிறார் .. ராஜஸ்தானிலிருந்து குண்டர்கள் ஆர்எஸ்எஸ் இருக்கியிருக்கிறது நிலக்கல்லில் கைது செய்யபட்டவர்கள் ஆர்எஸ்எஸில் பயிற்சி பெற்றவர்கள் என்ற செய்திகள் வருகின்றன.. .. சில கேள்விகள்.. மன்னராட்சி ஒழித்து இத்தனை காலமாகியும் ஏன் இன்னும் சுவாமி நகைகள் அவர்கள் பாதுகாப்பில் இருக்கவேண்டும்,.. இங்கே முன்னாள் ஜனாதிபதிக்கே அதிகாரமில்லை என்கிறபோது முன்னாள் மன்னருக்கு ஏன் அதிகாரம் தரவேண்டும் .உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுகிற .. செயல்படுத்த தடுக்கிறவர்கள் மீது ஏன் வழக்குகள் பதவி செய்யபட்டு கைது நடவடிக்கை இல்லை .. காந்தியை கொன்ற கோட்சே கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி கொண்டு மதகலவரத்தை தூண்ட நினைத்தார்களே அதே வழியை பயன்படுத்தி பாத்திமா என்ற பெயரை முன்னிலைபடுத்துவது ஏனோ.., அதை ஊடகங்கள் ஏன் எடுத்து சொல்லவில்லை.. .. நாத்திகனுக்கு இங்கென்ன வேலை என்கிறார்கள் தோழர் பிரணாய் மாநில முதல்வர் அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை நடப்பிலாக்க வேண்டிய அவரது கடமை அவருக்கு நம்பிக்கையில்லை என்பதால் தலையிட கூடாதென்பதை எ ஏற்கமுடியும்,.. பண்பாடு முக்கியமென்கிறார் தமிழிசை அடுக்குமொழியில் .. பெண்பாடு பரவாயில்லையாம் எது பண்பாடு எது கலாச்சாரம் எது வழிபாடு என்று தெரியவில்லை.. மத நம்பிக்கையில் அரசு ஏன் தலையிட வேண்டும் ..நல்ல கேள்வி.. முத்தலாக் சட்டத்தில் அவசர சட்டம் கொண்டுவந்து இஸ்லாமிய பெண்களை காப்பாற்றியதாக சொன்ன பாஜக மோடியின் அரசு .. இதோ பெண்கள் சபரி ஐயப்பனை ஒரு எட்டுபார்ப்பதற்கு ..அய்யகோ எங்கள் கலாச்சாரம் என்னாவது கட்டுகாத்த ஒழுக்கம் என்னாவது .. எங்கள் மத நம்பிக்கை என்னாவதென்கிறார்கள் .. பிற மத நம்பிக்கையில் பெண்களின் உரிமை பேசலாம் ஆனால் இந்துமதத்தில் பெண்களுக்கு உரிமை இல்லையா.. ஆணும் பெண்ணும் சரிக்குநிகரென்பதை தீட்டு தடுத்திடுமா.. தீட்டு இயல்பான விடயமென்பதை எப்போது உணர்வோம்.. தீட்டான பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கஷ்டபடுகிறதென்று அருள் சொன்ன காஞ்சி சரஸ்வதிசுவாமிகளை கூற்றையே அவர் சாந்த சமூகமே குப்பையில் போட்டது .. சொத்தில் பங்கு கொடுத்தால் இந்து குடும்பம் சிதறிவிடுமென்றார் .. வேலைக்கு செல்லும் பெண்களை விபச்சாரி என்று தெய்வத்தின் குரலாய் சொன்னார் காஞ்சி பெரியவர்.. அந்த பெரியமனுஷனை புறந்தள்ளி இந்திய மங்கைகள் உயர்பதவிகள் கூட கோலோச்சுகிறார்கள் .. பெண்களை ஐயப்பன் தரிசனத்திற்கு இப்போது தடுக்கலாம் ஆனால் நீண்டகாலம் தடுத்துக்கொண்டே இருக்கமுடியாது .. இயல்பாக மாற்றம் நிகழ்ந்தே தீரும்.. .. எல்லா மதங்களுமே பெண்களை கீழடிமைத்தனத்திலேயே வைத்திருக்கிறது ஆச்சாரம், விதி,ஷரியத்,கட்டளை.. சட்டமென்று சொல்லி ஒருவித ஏற்றதாழ்வோடே நடத்துகிறது .. மதம் கடந்த மனிதமே பெண்கள் சகஜீவியாக சமமாக மதித்திடல் உரிமைகளை வழங்கிட முனைகிறது.. மதம் தவிர்த்து மனிதம் சமைப்போம் .. .. ஆலஞ்சியார்

Thursday, October 18, 2018

மனிதம் காப்போம்

லவ் ஜிஹாத் என்று ஒன்றும் இல்லை. கேரளாவில் விசாரணை செய்த பிறகு தேசிய புலனாய்வு விசாரணை குழு அமைத்த விசாரணை முடிவில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாதியா வழக்கு உட்பட 11 வழக்குகளை ஆய்வு செய்த பிறகு இந்த அறிவிப்பை தேசிய புலனாய்வு குழு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தாங்களாகவே விருப்பத்திற்குரிய ஒருவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டார்களே அல்லாமல் லவ் ஜிஹாத் போன்ற ‌எந்த ஒரு காரணமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. .. லவ்ஜிஹாத்.. கலவரத்தை உண்டாக்க மதமோதலை வெறுப்பை மக்களிடையே விதைக்க ஆர்எஸ்எஸ் என்ற மனிதகுல விரோத சக்திகள் கிளப்பிவிட்டதே லவ்ஜிஹாத்..ஒரு பெண் மதம் மாறுகிறாள் அதற்கு பிறகு தான் விரும்பியவரை திருமணம் செய்கிறார் ..இதில் இந்து முஸ்லிமாக மாறினாலோ அல்லது முஸ்லிம் இந்துவாக மாறினாலோ யாருக்கு என்ன..? சம்பந்தப்பட்டவர்கள் தெளிவாக இருந்தால் இந்த பாசிச சக்திகளால் எதுவும் செய்துவிட முடியாது .. ஹாதியா வழக்கில் அவரின் தந்தை இந்துத்துவாவை துணைக்கழைத்ததும் லவ்ஜிஹாத் என்று பெயரிட்டழைத்ததும் பெரும் சர்ச்சையை உருவாக்கி .. கேரள உயர்நீதிமன்றம் இவர்களுது திருமண உறவை ரத்து செய்தும் விடாபிடியாக தொடர்ந்து போராடி உச்தநீதிமன்றத்தில் திருமணம் ரத்துசெய்தது செல்லாதென்று தீர்ப்பை பெற்றும் அவர் மீதான விசாரணை தொடர்ந்தது .. மத்திய தேசிய புலானாய்வு துறை ஆய்வுமேற்கொள்ளவேண்டுமென உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து இப்போது அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.. .. எந்த வடிவிலாவது கலவரத்தை மததுவேசத்தை நுழைத்து இந்த மண்ணை கலவர பூமியாக்கி இந்துவும் முஸ்லிம் அடித்துக்கொண்டு இருதரப்பினரும் வழக்கு சிறையென்று சென்றுவிட்டால் நாம் சொகுசாக வாழ வழிசெய்யுமென பார்பன ஆர்எஸ்எஸ் கும்பல் தொடர்ந்து திட்டம்தீட்டி செயல்படுகிறது ..மதம் தலைக்கேறினால் என்ன செய்கிறோமென தெரியாமல் குற்றசெயலில் ஈடுபட்டு சிறையில் வாடுகிற நிலை .. குறிப்பாக இளைஞர் சமூகத்தை வழிகெடுத்து குளிர்காய்கிற கூட்டம் இந்த பாசிசம்.. தனிநபரின் விருப்புவெறுப்பில் மதமோ சாதியோ அரசியல்கட்சியோ தலையிட கூடாது மதத்தை சாதியை வைத்து அரசியல் செய்கிற கேடுகெட்டவர்களை அடையாளம் கண்டு துரத்தியடிப்போம்.. மதம் தலைக்கேறினால் மனிதம் போகும் .. #மனிதம்காப்போம் .. ஆலஞ்சியார்

Wednesday, October 17, 2018

தலித்= கம்யூனிஸம்..

தலித் என்றோ ஹரிஜன் என்றோ அழைக்ககூடாது பிரணாய் விஜயன் .. தலித் என்ற சொல்லின் பொருள் ஏழை ..ஹரிஜன் என்றுதான் அழைக்கவேண்டுமென காஞ்சிமட ஜெயேந்திர சுவாமிகள் (காஞ்சிமடம் என்பதே தவறு அது கும்பகோணம் மடம் ..இடம்பெயர்ந்து காஞ்சி சங்கரசுவாமிகள் ஆனார்).. ஹரிஜன் என்றாலி கடவுளின் குழந்தை என்றார்.. தலித் எனும் சொல் சாதியை குறிப்பதல்ல ஒடுக்கபட்டவர்களை அடையாளபடுத்த வழங்கிநின்ற சொல் .. ஹரிஜன் என்பது ஏமாற்றுவேலை.. தோழர்.பிரணாய் எண்ணம் சரியானதாக கூட இருக்கலாம் பட்டியலினத்தவர்கள் என்றழைப்பது பொறுத்தமென்று நினைத்திருக்கலாம் .. ஆனால் பொதுவுடமைவாதிகளிடையே கூட இன்னும் பட்டியலினத்தவர்கள் அங்கீகரிக்கபடாதவர்களாக இருக்கிறார்கள்.. .. இடது கம்யூனிஸ்ட் .. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ மத்திய குழுவில் தலித்துகளை இணைத்துக்கொள்ளவேண்டுமென்ற கருத்தை டாக்டர் வசந்திதேவி அவர்கள் தொடர்ந்து சொல்லி வருக்கிறார்கள்.. பொலிட்பீரோ.. இடது கம்யூனிஸ்ட் கட்சியின் உச்சபட்ச அதிகாரபீடம் .. அதில் இத்தனை ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் இடம் பெறவில்லையா என கேட்காதீர்.. .. விடுதலை இந்தியாவிற்கு பிறகு இடதுசாரிகள்..மிகப்பெரிய பலமாக நாடாளுமன்றத்தில் இருந்த போதுகூட அதில் பிராமணர்கள் தான் அதிகம் இருந்தார்கள்.. கேரளத்திலும் வங்கத்திலும் கம்யூனிஸத்தை நிலைநாட்டியவர்களில் பெரும்பாலானோர் அவர்கள்தான் நம்பூதிரிகளின் கையில்தான் இருந்தது.. வங்கத்திலும் டாங்கே தொடங்கி பிரகாஷ்காரத் வரை... அவர்களின் கை ஓங்கிதான் இருந்தது இப்போதுமிருக்கிறது.. பொலிட்பீரோவில் 95% விழுக்காடு பார்பனர்கள் என்றால் ஆச்சர்யமாக இல்லை.. இது யதேச்சையாக நடந்ததாக நாம் நம்புவோம்.. ஏனெனில் பொதுவுடைமை சித்தாந்த்தை நேசிக்கிற ஆராதிக்கிற நம்மால் வேறு எப்படி உட்கொள்ளமுடியும்.. .. தகுதியுள்ளவர்களுக்கே வாய்ப்புக்கள் அல்லது பதவிகள் என்ற நிலைபாடு கட்சியின் பிரதான கொள்கையெனில் ஏன் இதுவரை தகுதியான தலித் தலைவர்களை உருவாக்கவில்லையென்ற கேள்வி கூடவே எழும்.. தலித்களுக்காக போராடுகிற கட்சி என அடையாளபடுத்திக் கொள்கிற கட்சியின் நிலை இதுதான்.. டாக்டர். பேராசிரியை வசந்தி தேவி அவர்களின் கோரிக்கை பரிசிலிக்கபடவேண்டும்.. நிறைய பொறுப்புக்களை தலித் பிரதிநிதிகள் வகித்தாலும் நாடு விடுதலையடைந்து இத்தனை ஆண்டுகளாகியும்... உச்சநீதிமன்ற தலைமைநீதிபதியாக, குடியரசு தலைவராக நாடாளுமன்ற சபாநாயகராக கூட வரமுடிந்த நிலையில் பொலீட்பீரோவில் இடமளிக்கப்படவில்லையென்பது உண்மையில் வருந்ததக்க விடயம்.. .. இந்திய அரசியல் வரலாற்றில் நிறைய தவறுக்களுக்கு துணை போன விடயங்களை எல்லாம் ஆராய்ந்தால் (குறிப்பாக மூன்றாம் அணி போன்ற) பாசிசத்திற்கு துணை போகிற செயலைதான் அல்லது வழித்தடம் அமைத்து தந்த நிகழ்வுகள் தான் அதிகம் காணமுடியும்.. இதில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு அளப்பெரியது.. இவர்களின் பலம் தொழிலாளர் நலன் பேசுவதும்.. தலித் மக்களுக்காக போராடுவதும் என்ற கட்டமைப்பை தவிர சரிக்குமான கம்யூனிஸம் இவர்களிடத்தில் இல்லை என்பதுதான் நிஜம்.. .. #The_absence_of_Communism… .. லால்சலாம்.. ஆலஞ்சியார்

Tuesday, October 16, 2018

நேற்றை விமர்சனம் செய்யாமல், அலசி ஆராயாமல் #நல்லநாளை இல்லை.. .. அப்துல்கலாம்.. கனவுகாண் என்றார்.. கனவு மட்டுமே செயலாகாது.. கலாம் என்கிற பிம்பம் எதிர்கால சந்ததியை சோம்பேறிகளாக்கிவிடும்.. மரம் நடு என்றார்.. வனம்சார்ந்த குடிமக்களிடம் ஒருபழமொழிஉண்டு உன்னால் மரத்தை காக்கமுடியுமெனில்.. மரம் நடு அதாவது குறிப்பிட்டகாலம் வரை செடியை நன்கு பராமரிக்கவேண்டும் ஆடுமாடுகளிடமிருந்து .. இயற்கை அழிவிலிருந்து.. சரியான உரம்தந்து வளர்க்க முடியுமெனில் மரம் நடு..இதுவரை கோடிக்கணக்கான மரங்கள் நட்டும் பராமரிக்க முடியாமல் போனதுதான் மிச்சம்.. .. கலாம் என்கிற பிம்பம்.. இந்திய ஜனநாயகத்தில் இந்துத்துவா கொள்கைகளின் சார்பில், குறிப்பாக ஆர்எஸ்எஸ் ஸின் தத்துவங்களை மேலெடுக்கிற.. அவர்களின் கோட்பாட்டோடு ..ஒத்துபோகிற.. உயர்தட்டுவர்க்கத்தினரின் கவ்விசூழலில் உரையாற்றுகிற, நாட்டில் நடக்கிற அக்கிர அநியாங்களை கண்டும் காணாமல் போகிற.. குறைந்தபட்ச எதிர்ப்பை கூட பதிவுசெய்யாத. .. இந்துத்துவாவின் கைப்பாவையாக இருக்க சொல்கிற ..மாயபிம்பம் இதுகாலபோக்கில் தகர்ந்துபோகும்.. .. கலாம் என்னும் தனிமனித ஒழுக்கமும் அதிகம் ஆசைப்படாத நேர்மை, இடைவிடா உழைப்பும் ..அடையவேண்டிய லட்சியத்தை நோக்கிய பயணத்தின் தடைகளையெல்லாம் படிகளாகமாற்றி வெற்றிநடை போட உத்வேகமாய் செயலாற்றும் திறனும் எல்லோராலும் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்று.. மற்றபடி.. #கலைந்துபோகும்_கனவு... .. மன்சூர்.பக்கம்.. ..

Monday, October 15, 2018

வைரமுத்து

ஆண்டாளை பழித்த கவிஞரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறாள்.. சிறுவயதில் நானும் பாலியல் தொந்தரவை சந்தித்திருக்கிறேன் சின்மயிக்காக போராடுவேன் தமிழிசை கோவிலுக்குள் , குழந்தையை பாலியல் வன்செயல் செய்தப்போ, தேவநாதன் குருக்கள் சில்மிஷம் செய்தப்போ, சங்கர் ராமனை கொலை செஞ்சப்போ, சிலைகளை திருடினப்போ எல்லாம் சம்பந்தபட்ட தெய்வங்கள்..? என்ன செய்தன .. சின்மயி குற்றம் சுமத்திய பார்பனர்கள் மீது ஏன் இதுவரை யாரும் விவாதிக்கவில்லை அதிலும் பார்பன சங்கத்தலைவர் நாராயணன் மீதான குற்றசாட்டு குறித்து .. திடீர் பெண்ணீய போராளி தமிழிசை குரல்கொடுக்கவில்லையே .. சின்மயி உடைய கடந்த கால கசப்பான அனுபவங்களை நமக்கு வருத்தத்தை தருகிறது கணவனை பிரிந்த பெண்ணின் வாழ்க்கை போராட்டம் அவருக்கு தன் இசை ஆளுமைகளால் தரப்பட்ட பாலியல் தொந்தரவுகள் மறுக்கபட்ட வாய்ப்புகள் .. தன் வளர்ச்சிக்கான தடைகள் இதைப் பற்றியெல்லாம் பேசியவர் தன் இளமைகால வறுமையும் அதற்காக அவர் சந்தித்த கொடுமைகளையும் பட்டியலிடுகிறார் அதில் வைரமுத்துவும் ஒருவர் .. ஆனால் வைரமுத்துவை மட்டுமே target இலக்காகுவதின் பின்னில் பார்பன சமூகத்தின் கோபமும் இயலாமையுமே தெரிகிறதே தவிர வேறொன்றுமில்லை.. .. 14 வருட தாமதம் என்பது மிகப்பெரிய இடைவெளி வைரமுத்து திமுகவிற்கு நெருக்கமானவர் அதிலும் கலைஞர் பிரதமரை சந்திப்பதை கூட தவிர்த்து வைரமுத்து விழாவிற்கு வருகிறாரென்றால் எவ்வளவு பெரிய ஆள் என்கிறார் .. ஜெயலலிதா என்ற பார்பனர் கருணாநிதியையே நள்ளிரவில் கைதுசெய்ய முடிந்ததே.. அதே ஜெயலலிதாவிடம் முறையிட்டிருக்கலாமே.. நல்ல சந்தர்ப்பமாக அதை பயன்படுத்தியிருப்பாரே .. இதையெல்லாம் ஏன் செய்யவில்லையென்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. .. தாயை போல தாமும் புறக்கணிக்கபடும் சூழலில் தன் வெளியே வந்திருக்கிறார்.. .. இப்போது தனிநபர் பிரச்சனையை அரசியலுத்கு கொண்டுவர முயற்சிக்கிறார்கள் ரேவதி கூட தன் இளமைகால அனுபவங்களை பகிர்ந்து கொள்ள போவதாக எம்ஜிஆர் ஆட்சியின் போது தரப்பட்ட அழுத்தங்கள் மிரட்டல்கள் குறித்து பேசபோவதாக சொல்கிறார்..வாய்ப்பு முன்னேற்றத்திற்காக எதையும் இழக்க தயாராகிறவர்கள் பின் புகழ் பணம் வந்த பிறகு அல்லது வாழ்வில் மெச்சபட்டநிலைக்கு வந்த பிறகு நடந்துவந்த பாதையில் விழுந்த சறுக்கல்களை .. அதற்கு தாமும் உடன்பட்டதை மறந்து குற்றம் சுமத்துவது சரியல்ல எல்லாதுறையிலும் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் இப்போதும் தொடர்வது வேதனைக்குரியதுதான் .. அதை விரும்பதாவர்கள் உடனடி பதிலடி தந்தால் மட்டுமே இந்த சமூகம் நம்பும் .. ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது.. வைரமுத்து பாடல் வரிகள் .. தமிழிசை சந்தித்த தொந்தரவுகளை இனி சொல்லலாம்.. கேட்போம் .. ஆலஞ்சியார்

Thursday, October 11, 2018

பெண்குழந்தைகள்

பெண்கள் குழந்தைகள் தினம்.. தாயென்றும் மகளென்றும் தாரமெனும் இளைப்பாறும் நிழலாய் தாங்கி நிற்கும் வலிமையாய் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் சர்வம் பெண்.. .. ஒருவர் வாழ்வில் எல்லாபக்கங்களிலும் அலங்கரிக்கும் ஆப்பரிக்கும் அள்ளிதரும் ஆலோசனை தரும் அன்பைதரும் ஜீவன்.. பெண் வாழ்வின் மையம்.. பெண்களைப்பற்றி எழுதும் போது நினைவில் வந்துநிற்கிறார் பெரியார்.. கடுமையாக பார்பணீயத்தை எதிர்த்த போதும் பிராமண பெண்கள் மீது அந்த சமூகம் கொண்ட பார்வையை கடுமையாக கண்டித்தவர்.. விதவைகளை விலகிவைக்கும் செயலை கண்டித்த அவர் மறுமணத்தை வெகுவாக ஆதரித்தார். பெண்கள் கல்விப்பற்றி .. உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவையுங்கள் என்றார்.. எவ்வளவு ஆழமான சிந்தனை..கூடவே .. அதற்கான வசதி உள்ளுரில் இல்லையென்றால் வெளியூர் சென்று கூலிவேலை செய்தாவது பெண்குழந்தைகளுக்கு கல்வியை கொடுங்கள் என்றார்.. பெரியார்.. இந்த சமூகம் சீர்படவேண்டுமெனில் பெண்கள் கல்வியறிவு பெறுவது அவசியம்.. இன்றைக்கு பல்வேறு துறைகளில் பெண்கள் சிறப்பாக பங்களிக்கிறார்கள் .. ஆனாலும் பெண்கள் மீதான வன்முறை தாக்குதல் இன்னமும் தொடர்வது மிக கேவலமான ஒன்று. .. உலகளவில் கூட இன்னமும் பெண்கள் பங்களிப்பில்லாமல் எதுவும் முடியாதென்கிற நிலையில் கூட நசுக்கபடுகிறார்கள் என்பதே கவலைகுரியது.. பெண்களை இலக்கியங்களில் புகழ்ந்ததோடு சரியாகிவிட்டதாக நினைப்பதுதான் யதார்த்த நிலை மிகவும் கவலைக்குரியதாக அல்லது அவர்கள் உரிமைகளில் தலையிடுவதாகதான் இருக்கிறது.. பெண்களில் ஆளுமைகளே இல்லையா என கேட்டால் சொற்ப எண்ணிக்கையில் அடங்கிப்போகும்.. அரசியல் அதிகாரத்தில் இந்திரா, மம்தா,ஜெயலலிதா தோழர் பாலபாரதி அருள்மொழி... கனிமொழி என சிலர் இருந்தாலும் நிறைய பெண் ஆளுமைகளின் திறமைகள் அங்கரீக்கபடாமலேயே இருக்கிறது.. .. பொதுவாழ்வில் பெண்களின் பங்களிப்பை இன்னமும் நாம் அங்கரீக்கவில்லை 33% விழுக்காட்டை தருவதற்கு நீண்டகாலமாக போராடுகிற சூழல் .. சமூகவிஞ்ஞானி கலைஞர் தமிழகத்தில் உள்ளாட்சியில் பெண்களுக்கென இடஒதுக்கீடு தந்து இந்தியாவிற்கு வழிகாட்டினார்.. ஆனாலும் நாம் அங்கீகாரம் தருவதில்லை.. பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைகள் சமீபகாலங்களில் அதிகரித்திருப்பது மிகவும் கவலைக்குரிய விடயம் மட்டும் வெட்கி தலைகுனிய வேண்டியது .. பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பும் படிப்பும் சுயமாய செயல்பட அனுமதியும் அளிப்போம்.. .. ஈரானில் தூக்கிலிடப்பட்ட #ரெஹானா தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் இப்படிதான் குறிப்பிட்டார் #வெறும்_கழிவாக இந்த பூமியில் விழ விரும்பவில்லை.. ஆம் பெண் வெறும் கேளிக்கையோ கழிவோ அல்ல.. உணர்வோம் ‍.. ஆலஞ்சியார்

Wednesday, October 10, 2018

மோடி... பொய்கள்

ராஃபேல் ஒப்பந்தம் சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் படி மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட்ருக்கிறது ராணுவ ரகசியம் காக்கப்பட்ட வேண்டியுள்ளது என்று மத்திய அரசு வழக்கறிஞர்கள் வாதாடியும் சீல்வைக்கப்பட்ட கவரில் நடந்த பேச்சு வார்த்தை மற்றும் ராஃபேல் விமானங்கள் வாங்க கோடிடப்பட்ட தொகை ஆகியவை குறித்து தெளிவான அறிக்கை தரும் படி நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகலாம்.. .. நிதின் கட்கரி நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்ற நம்பிக்கையில் தான் பொய்யான வாக்குறுதிகளை தந்தோம் என்கிறார் .. சிஏஐி அறிக்கையெல்லாம் அரசியலாக்க வேண்டாம் என ஏற்கனவே நிதியமைச்சர் அருண்ஜெட்லி திருவாய் மலர்ந்தார் .. ஒன்றுமட்டும் தெளிவாக தெரிகிறது .. இவர்கள் எதிர்கட்சியாக இருக்கும் போது சிஏஜி அறிக்கையை மட்டுமே,நம்பி மிகப்பெரிய பொய்யை (2ஜி) சொல்லி நாடாளுமன்றத்தை முடக்கி காங்கிரஸ் என்றாலே கரப்ஷன் என்று கதைத்தவர்கள் ...ஆட்சிமாற்றம் நிகழ்ந்து நான்கரை ஆண்டுகளாகியும் இந்தியாவை முன்னேற்ற பாதையில் செலுத்தவில்லை .. பொருளாதாரம் வீழிச்சியை சரிசெய்ய தெரியாமல் மெல்ல உண்மையை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் .. .. ரஃபேல் ஒப்பந்தம் இந்திய பிரதமரையே திருடனாக்கி நம்மை தலைகுனிய செய்தது இன்றைக்கு உச்சநீதிமன்றம் அறிக்கையை கேட்டதும் ராணுவ ரகசியமென நழுவபார்த்தது அரசு மக்களின் சந்தேகத்தை தெளிவுபடுத்தும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது .. நிதி மற்றும் பாதுகாப்பு துறைக்கு இதுவரை இல்லாதவகையில் மிக பலவீனமான அமைச்சர்கள்.. வார்த்தை ஜாலம் மட்டுமே அரசை காப்பாற்றுமென நம்புகிற முதன்மை அமைச்சரால் யாருக்கும் பயனில்லை இந்த நான்கரையாண்டு ஆட்சியில் பார்பனர்களுக்கு மட்டுமே சட்ட பாதுகாப்பும் உயர்பதவிகளும் கிடைத்திருக்கிறது .. இங்கே இந்தியர்களென அவர்கள் மட்டுமே முன்னிறுத்தபடுகிறார்கள்.. இந்த மண்ணின் பூர்வகுடிகளுக்கு இங்கே எல்லாம் மறுக்கபடுகிறது.. இந்நிலை மாறவேண்டும் .. யாரை எங்கே வைப்பது என்று தெரியாமல் போனதால் .. இன்று அவதிபடுகிறோம் .. சிறந்த நிர்வாகிகளை வேண்டாமென வைத்ததின் பலன் நாடு மிகப்பெரிய சீரழிவை சந்திக்கிறது இப்போது கூட உண்மையை பேசுகிறவர்களை ஒடுக்குகின்ற பாசிசம் உக்ரமாக காட்சியளிக்கிறது .. சட்டம் கைது சிறை என மிரட்டல்கள் ஜனநாயகம் பேராபத்தில் இனியும் பொறுப்பதென்பது நாட்டை குட்டிச்சுவராக்கிய கதையாகி போகும்.. இவர்கள் பொய்யர்கள் விரட்டபடவேண்டியவர்கள்.. .. ஆலஞ்சியார்

Monday, October 8, 2018

கேடுகெட்ட...

வடஇந்திய தொலைக்காட்சிகள் எடப்பாடி உடனான மோடியின் சந்திப்பிற்கு பிறகு அதிமுக பாஜக கூட்டணி உருவாகுவதாக சொல்கிறது இரண்டு தினங்கள் முன்பு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் தொண்டர்கள் கூட்டம் இல்லை. ஆனால் தினகரன் கூட்டும் கூட்டத்திற்கு அதிகமாக தொண்டர்கள் வருகிறார்கள் என்று கூறியிருக்கிறார் அதிமுக தொண்டர்கள் தினகரன் பின்னால் நிற்பதாக பொன்னர் சொல்லியதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி கவர்னரை சந்தித்து நாங்க பாஜக வுக்கு விசுவாசம் மிக்க அளவில் பங்களிப்பு செய்வோம் என்று கூறியுள்ளார்.. உடனே பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கபட்டதாக செய்திகள் வருகின்றன இதனைத் தொடர்ந்து தான் இன்று அவர் அவசரமாக டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.. .. முழுவதுமாக தங்களை அடிமைசாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு வருகிறார் எதைச் சொன்னாலும் கேட்போம் என்கிற ரீதியில் செயல்படுகிறார் .. எம்ஜிஆர் காலத்திலும் சரி ஜெயலலிதா காலத்திலும் பாசிசத்தோடு கரம் கோர்த்தாலும் அதற்கொரு எல்லை வைத்து செயல்பட்டார்கள் காரணம் பாஜகவின் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் தமிழர்களால் வெறுக்கபடுவதோடு .. தமிழினத்திற்கு எதிரானதென்பதை உணர்ந்திருந்தார்கள் .. மீதமுள்ள ஆட்சி காலத்தை தக்கவைத்துக்கொள்ள எந்த இழிவையும் சுமப்பேன் எந்த இழிசெயலையும் செய்வேனென்று செயல்படுகிறார்.. அதிகாரத்திலிருந்து இறங்கிய அடுத்த நொடியே அவர் மீது வழக்குகள் பாயும் அவரது சொந்தங்கள் மீதும் நிறைய குற்றசாட்டுகள் வெளிப்படையாகவே பேசபடுவதும் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் திமுகவால் தொடரபட்டிருப்பதும் எடப்பாடியை எதற்கும் தலையாட்ட வைக்கிறது .. .. எத்தனை வீயூகம் வகுத்தாலும் இந்தமுறை மரண அடி விழும் மக்கள் கோபம் மோடி அரசின் மீது மட்டுமல்ல இந்த எதற்கும் உதவாத எடப்பாடி மீதும்தான் .. அதிமுகவில் ஒரு பகுதியினர் தினகரனை பின்துணைக்கலாம் .. இடைத்தேர்தலைப்போல ஒரு தொகுதியல்ல பொதுத்தேர்தலில் தினகரன் கூட செயல்படமுடியாது .. அதிமுகவின் சரிவு பாஜகவிற்கு பலனளிக்காது மாறாக இங்கே கொஞ்சம் மெச்சப்பட துணைபோகும் .. இதுவரை தமிழகம் கண்ட மோசமான ஆட்சி இதுதான் .. .. கவர்ச்சியை நிழலை நம்பியதன் விளைவை மக்கள் அனுபவிக்கிறார்கள்.. அறிவின் சுடரை ஏந்த மறுத்ததால் இருட்டில் நிற்கிறார்கள் .. இனியும் நம்பவோ ஏமாறவே தயாரில்லை தெளிவான பாதையை தேர்வு செய்து யாரால் எப்படி எங்ஙனம் செய்துமுடிக்குமென ஆய்ந்து அவனிடமே விடல் சரியென எண்ணி காத்திருக்கிறார்கள்.. .. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து  அதனை அவன்கண் விடல். .. ஆலஞ்சியார்

Sunday, October 7, 2018

கூட்டு களவாணிகள்

பிரதமர் மோடி மற்றும் மனோகர் பாரிக்கர் மீது ஊழல் குற்றச்சாட்டு... தமக்கு நெருக்கமான அம்பானியின் நிறுவனத்திற்கு சலுகை வழங்க முயற்சி செய்ததாக C B I இடம் புகார் மனு அளித்திருக்கிறார்கள்.. முன்னாள் பாஜக மத்திய அமைச்சர்கள் ஜஸ்வந்த் சிங் , அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் .. .. பிரதமர் மீதே நேரடியாக ஊழல் குற்றசாட்டு தனக்கு வேண்டியவருக்கு சலுகை வழங்கியதாக .. இந்த நிலையில் தனக்கு வேண்டியவருக்கு ஒப்பந்தங்கள் வழங்கிய எடப்பாடி பிரதமரை சந்திக்கிறார்.. விடுதலை இந்திய ஒன்றியத்தில் பிரதமர் மீது அடுக்குக்காக குற்றசாட்டுகளை வைப்பதென்பது புதிது .. இதற்கு முந்தைய அரசுகளில் ஊழலே இல்லையா என்றால் விடுதலை இந்தியாவில் முதல் ஊழலே ..பண்டிதர் நேரு அமைச்சரவையில் அமைச்சராக இருந்த திருவள்ளுர் தட்டை கிருஷ்மாச்சாரி TTK என்ற பார்பனன் பதவி விலகிய சரித்திரம் உண்டு .. ஆனால் பிரதமரே நேரடியாக தலையிடுவதென்பதும் யாரையும் ஆலோசிக்காமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு இந்திய பொருளாதாரத்தை ஒரு நெருக்கடியில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்.. .. ஊழல் என்றவுடன் மற்றொரு சம்பவம் பதிவுசெய்யவேண்டும் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் அவரும் பார்பனர்தான்.. ஒப்பந்தம் அளிப்பதற்கு கையூட்டு கேட்டு பேரம் நடந்து கடைசியில் ஒரு தொகை நிச்சயக்கபட்டு பகுதி இப்போதென்றும் மீதம் இருமுறை தருவதென்றும் முடிவாகி கோப்பில் கையெழுத்திட்டார்.. ஒப்பந்தகாரர் கோப்பு தான் கையெழுத்தாகிவிட்டதே என்று மீத தொகையை தர தாமத படுத்த .. ஆத்திரமடைந்த அமைச்சர் கோப்பை வரவழைத்து not approved என எழுதிவிட்டார் பதறிப்போன ஒப்பந்தகாரர் .. அமைச்சரை சந்தித்து முறையிட முழு பணத்தையும் தந்தால் பரிசீலிப்பதாக சொல்ல..நீர் தான் not approved என்று எழுதிவிட்டீரே என கேட்க பணத்தை கொடு நான் சரி செய்கிறேன் என சொல்ல பணம் முழுவதும் தரப்பட்டது .. திரும்ப கோப்பை வரவழைத்து .. not அருகில் e சேர்த்து note approved.. என எழுதிவிட்டார்.. இந்த தகவல் அப்போதைய பிரதமர் இந்திராவிற்கு புகாராக செல்கிறது.. கேட்டுவிட்டு சிரித்துகொண்டே சொன்னார் அவருக்கு கொடுத்திடுயா ..என்றார்... விடுதலை இந்திய அரசியலில் ஊழலை ஆரம்பித்துவைத்தது பார்பனர்கள் தான்.. .. பிரதமரை எடப்பாடி சந்திப்பது ஒன்றும் புதிதல்ல.. தேர்தல் நெருங்கும் வேளையில் இவர்களை வைத்து அதிமுகவோடு கூட்டணியை உறுதி செய்ய போயிருப்பதாக செய்திகள் வருகிறது ..அது அதிமுக இறுதி அத்தியாயம் ஆகிவிடும்,.. தன் மீதுள்ள குற்றசாட்டும் ஆட்சியை கலைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாலும் எடப்பாடி பதறுகிறார்.. தமிழக அரசியல் வரலாற்றில் மிக மோசமான காலகட்டமாக தகுதியில்லாதவர்கள் கையில் .. சொல்லப்போனால் கேடுகெட்ட கயவர்கள் கையில் நாடு சிக்கி சீரழிகிறது .. தங்கள் பதவிக்காக எதையும் செய்ய துணியும் நிலைக்கு இந்த களவாணி கூட்டம் செயல்படுகிறது .. இடைத்தேர்தலை அரசே பொய் காரணத்தை சொல்லி (ரெட் அலர்ட்) நிறுத்துவது கேவலமான செயல்.. இவர்கள் முற்றிலுமாக விரட்டபடவேண்டியவர்கள் .. .. எல்லா களவாணிகளும் ஒன்றுசேர்ந்து நாடகமாடுகிறார்கள்.. #எச்சரிக்கை.. .. ஆலஞ்சியார்

Friday, October 5, 2018

பேரினம்

தமிழர்கள் இந்தியர்கள் கிடையாது.. சுப்ரமணியசுவாமி.. தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைவதில்லை.. anti indian.. இப்படியெல்லாம் சொல்கிறார்கள் ஏறக்குறைய இப்போதுதான் நேர்கோட்டிற்கு வந்திருக்கிறார்கள். தமிழர்கள் தங்களை நீண்ட வரலாற்றை கொண்ட பேரினமாக கருதுகிறார்கள்.. நீங்கள் சொல்லும் இந்தியாவிற்குள் அடைத்திட முடியாது பரந்துவிரிந்து கிடக்கும் பேரினம் எங்கள் தமிழினம்.. .. இதை சொல்லகூட சுப்ரமணியன் வகையறாக்களுக்கு யோக்கிதையில்லை.. யூத வழித்தோன்றலாய் கைபர் வழியே சமவெளியைத் தேடி ஆடுமேய்க்கவந்த ஆரியர்கள் இந்திய துணைக்கண்டத்தை ஆண்ட நம்மிடம் சொல்கிறார்கள் தமிழர்கள் இந்தியர்கள் இல்லை.. உண்மையில் இந்திய துணைகண்டமே தமிழனின் பூமியாய் இருக்கவேண்டியது..இடையில் வந்தவர்களில் வழிகேட்டில் பிரிந்து கிடப்பதால் மதம் ஜாதி சொல்லி தலையென்று காலென்றும் காரணம் சொல்லி கவிழ்த்தவர்கள்.. இப்போது தமிழன் இந்தியன் இல்லையென்கிறார்கள்.. .. இந்தியாவில் வசிக்கும் பலதரப்பட்ட இனமக்களை வேறுபடுத்தி அதிலும் தங்கள் இனம் சவுரியங்களை வலியே இல்லாமல் அனுபவிக்க இவர்கள் வரைகிற திட்டமிது. தேசியநீரோட்டத்தில் தமிழர்கள் இணையவில்லையென காரணம் சொல்வார்கள்..தேசியஇனம் என்பதே ஒருவகை பொய் .. பலதரப்பட்ட இனங்களின் ஒற்றுமை.. அதாவது வேற்றுமையில் ஒற்றுமை.. ஒரு இனத்தை மட்டும் உயர்த்தி பிடிப்பதென்பது அத்தனை ரசமுள்ள விடயமில்லை மற்றொரு இனத்தின் மீது வெறுப்பும் கொள்வதும் கூட இறையாண்மையை கேள்விக்குறியாக்கும்.. சுவாமியின் கருத்தை உளறல் என கடந்துவிட முடியாது அது வேறொரு திட்டத்திற்கிற்கான காய்நகர்த்தல் .. .. தொடர்ந்து நீங்கள் கவனித்து வந்தால் பாசிசவாதிகள் ஆர்எஸ்எஸ் சிந்தாந்தம் பேசுவோர் ஆரியர் ஆரிய அடிவருடிகள் ..இவர்கள் யாவரும் இந்தியாவில் பிற மொழிபேசும் மக்களிடத்திலோ பிற இன மக்களிடத்திலோ இதுபோன்று கடும்வஞ்சகத்தை கொண்டு நடப்பதில்லை மாறாக தமிழர்களிடத்தில் மாத்திரம் பெரும்பகையோடே இருந்துவந்திருக்கிறார்கள் இப்போதுமிருக்கிறார்கள்.. காரணம் பிற இனமொழி மக்கள் அவர்களோடு ஒத்து போகிறார்கள் அல்லது கீழ்படிந்து அவர்களை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள்.. அதைவிட அவர்களின் இனத்திற்கான வரலாற்றை தொலைத்திருப்பார்கள் பிறரின் கலாச்சாரத்தோடு தங்களை ஐக்கியபடுத்திருப்பார்கள்.. ஆனால்.. இதை திராவிட இனத்தை சேர்ந்த தமிழர்கள் செய்வதில்லை காரணம் இயல்பாகவே ஆரியர்களோடு பெரும்பகையோடு இருப்பதாலோ அல்லது ஆரம்பம் தொட்டே திராவிட இனத்தை அழித்தொழிக்க எண்ணும் ஆரிய சூழ்ச்சியை அறிந்ததாலோ என்னவோ குறிப்பாக தமிழர்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.. .. பி.வி.ஜகதீஷ் அய்யங்கார் .. கிருஷ்ணா நிதியின் தென்பகுதி காவிரியின் வடபகுதியும் கர்நாடகவும் சேர்ந்ததுதான் திராவிட நாடென சுருக்கி சொன்னார் அதாவது வரலாற்றை திரித்து புனைந்தார்.. ஆனால் வரலாற்று தொல்பொருள் ஆய்வுகளின் தமிழனின் தொன்மையை பறைசாற்ற தொடங்கியதும் .. நிறைய சங்கதி வெளியில் வர இப்போது தமிழனை தனிமைபடுத்த பெரும் முயற்சியெடுக்கிறார்கள்.. சில குறிப்புகளில் மாகாராஷ்ராவும் இணைந்ததென காணமுடிகிறது.. தாகூர் கூட திராவிட நாடென்று தான் சொல்வார் .. காரணம் ஒருங்கிணைந்த தேசத்தில் திராவிடம் தனியாகதான் தெரியும் பல்முனை பண்பாட்டில் தமிழர்களின் பண்பாடு தனித்துவமாக தெரிவதால்.. உலகின் தொன்மையான நாகரீக தோன்றல் Dramica திரிமிளம் என்றறியபட்ட திராவிடர்கள்/தமிழர்கள் தனித்துவமாக தான் தெரிவார்கள்.. .. உலகின் மூத்த நாகரீகத்தை தன்னகத்தே கொண்ட திராவிட பேரினம் தன் மூலமொழி தமிழின் வளத்தோடு இன்றும் உலகமெங்கும் பரிந்து விரிந்து ஆட்சிமொழியாகவும் அலுவல்மொழியாகவும் இருப்பதை காண சகிக்காமல் இவர் போன்றவர்களின் பிதற்றல்கள் நாள்தோறும் வரும்.. கவனம் கொள்வோம்.. .. #வந்தேறிகள்அல்லநாங்கள்_நாட்டின்_பேரினம் .. ஆலஞ்சியார்

Wednesday, October 3, 2018

சன் சகோதரர்கள்..?

இவர் தான் திரையுலகின் தளபதி , தளபதி தளபதி ..அடுத்த மிகப்பெரிய கட்டத்திற்கு வரவேண்டும் ...ரஜினி சார் வந்துவிட்டார் .. கலாநிதி மாறன் .. அவர் சொல்ல வந்தது நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்கிறார் .. .. மாறன் சகோதரர்கள் வியாபாரிகள் அவர்களின் சொத்தை வளத்தை பெருக்கிக் கொள்ள ,பாதுகாக்க அவர்களுக்கு அரசியல் தேவைபடுகிறது அதற்கு அப்பன் இருந்த கட்சி துணை நிற்குமென நம்புகிறார்கள் .. எப்போது எதிரியை கூட சில நேரம் நம்பிவிடலாம் ஆனால் கூட இருந்த குழிப்பறிப்போரை நம்ப முடியாது .. .. 2ஜி வழக்கு தன் சகோதரனை அமைச்சர் பதவியிலிருந்து விடுவித்தவுடன் .. திரு.ஆண்டிமுத்து ராசா அந்த பதவியை ஏற்றதும் வன்மம் கொண்டு இவர்கள் ஆடிய ஆட்டம் .. தொடர்ந்து 2ஜியை தினம் தினம் செய்தியாக்கி மக்களிடத்தில் ராசாவின் பெயரை கெடுக்கவேண்டுமென்பதற்காக .. சாதாரணமான ஒருவன் ஒடுக்கபட்டவன் உயர்பதவியை அது தமக்கு தரப்பட்ட பதவியை அலங்கரிப்பதா என்று காழ்ப்புணர்ச்சியோடு இவர்கள் செய்த பிரச்சாரம் .. சன்டிவி எனும் செய்தி ஊடகத்தை பயன்படுத்தி இவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல.. அதையெல்லாம்,கலைஞர் பொறுத்தது முரசொலி மாறனுக்காகவே தவிர வேறில்லை .. அடுத்து யார் என தினகரனில் ஸ்டாலினா அழகிரி என பட்டியலிட்டு .. அது மதுரை தினகரன் அலுவலக எரிப்பும் கொலையுமாக திமுகவிற்கு கலங்கத்தை கொண்டு சேர்த்தது அதற்கு பிறகும் கலைஞர் மன்னித்து இவர்களை அருகில் வைத்திருந்தார் .. .. இவர்கள் யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கட்டும் அது அவர்கள் உரிமை அதை நாம் கேட்க தேவையில்லை .. ஆனால் திமுக தலைவர் தளபதியை மக்கள் முதல்வராக்க வேண்டுமென எண்ணுகிற வேளையில் அதற்கான காலசூழல் கனிந்து வரும்நேரத்தில் தங்களின் சினிமா கம்பெனியை தூக்கிநிறுத்த வேண்டி நடிகர்களை புகழ்ந்து அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு வழிவகை செய்வது திமுகவிற்கு மட்டுமல்ல .. நாட்டுமக்களுக்கும் செய்கிற கெடுதி .. திமுகவின் வளர்ச்சிக்கு இவர்கள் எந்த விதமான பங்கையும் ஆற்றியதில்லை மாறாக திமுகவை வைத்து இவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டார்கள் ..வளமானார்கள் .. .. சுப்ரமணிய அய்யரின் மகள் மல்லிகா மாறன் தன் இருமகன்களுக்கும் குடகிலிருந்து காவேரியையும் ஹிந்து குடும்பத்திலிருந்து ப்ரியாவையும் (இருவரும் பார்பனர்கள் ) கொண்டுவந்தார் அது அவரது விருப்பம் ஆனால் அவாள்களின் தலையீடு சன் குழுமத்தில் அவர்கள் தலையிட்ட பிறகு தான் கலைஞரையே தன் பங்கு 5% விழுக்காட்டை கொடுத்து வெளியே அனுப்பினார்கள் சன் டிவி வளர்ச்சியில் "கலைஞரின் மூளை" எந்தளவு பயன்பட்டதென்பதை நாமறிவோம் .. கலைஞருக்காக நாம் சகித்து கொண்டிருந்தோம் இனி இவர்களை வைக்கவேண்டிய இடத்தில் வைப்போம் .. தலைவர் தளபதியாரை மதிக்காத அல்லது அவரது வெற்றிக்கு இடையூறு செய்கிற அவருக்கு இணையாக யாரையாவது முன்மொழிகிற செயலை தொடர்ந்து செய்கிற மாறன் சகோதரர்களை நாம் மதிக்க தேவையில்லை .. புறக்கணிப்போம்.. .. ஆலஞ்சியார்

Monday, October 1, 2018

கலைஞர் தலைவர்

நேற்று எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவுவிழா காண வந்தவர்கள் மன்னிக்கவும் அழைத்துவரப்பட்டவர்கள் கலைஞர் ஓய்விடத்தை/நினைவிடத்தை காண பெருந்திரளாய் வந்தார்கள் .. இதிலிருந்தே மக்கள் தலைவர் யாரென்று தெரிந்திருக்கும்,.. எம்ஜிஆரை பிடிக்கும் அவரின் ரசிகன் ஆனால் தலைவரென்றால் அது கலைஞர்தான் என்று தங்கள் செய்கையால் உணர்த்தியிருக்கிறார்கள் .. .. தமிழகம் கண்ட மிகச்சிறந்த தலைவர் கலைஞர் பன்முக ஆளுமை ஒவ்வொன்றிலும் பேராளுமை தொட்டதில் எல்லாம் சிறந்ததாய் விளங்கியவர்/ மாற்றியவர் .. தமிழகம் தொடர்ந்து அவரை புறக்கணித்தபோதும் ஒருவித மாயையில் மயங்கி சொல்லபட்ட குற்றசாட்டில் உண்மை இருக்குமோ என நினைத்து தோல்வியை தந்தபோதும் மக்களுக்காக உழைத்தவர்.. ஈழத்து போராளிகளின் பெரும்பிழையால் வரலாற்றில் கழிவுகள் அறியணை ஏற வழிவகுத்த போதும் .. மாய எண்ணை காட்டி 2ஜி என்று ஊர் பேசிய போதும் #அறம்வெல்லும் என்று சொல்ல முடிந்ததே அந்த அரசியல் நேர்மை யாரிடத்திலும் காண முடியாதது .. கடைகோடி மக்களின் வாழ்விற்காக தொடர்ந்து சிந்தித்தும் செயல்பட்டுவந்த மாமனிதர் கலைஞர் .. கொஞ்சம் வியப்பாய்தான் இருக்கிறது .. இந்திய அரசியலில் இப்படியொரு தலைவன் இன் வருவாரா என்று கேட்க வைத்திருக்கிறது .. தினம்தினம் அவர் புகழ்பாடுகிறார்கள் ஒவ்வொரு நிகழ்விலும் புதியதாய் கலைஞரைப்பற்றி அறிய முடிகிறது அறிந்து வியக்கமுடிகிறது .. தினம் தினம் புதியதொரு செய்தியாய் கலைஞர் நம்மை ஆட்கொள்கிறார் இத்தனை சிறந்த மனிதரா இவரென்று எதிராய் நினைத்தவன் எண்ணி தலைகுனிகிறான் தன் கண்ணீரால் அஞ்சலி செலுத்த ஒய்வகம் நோக்கி வருகிறான் .. ஒவ்வொரு துறைசார்ந்தவர்கள் கலைஞரை புகழ்வது இதுவரை எந்த தலைவருக்கும் கிடைக்காதது தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் கலைஞரின் திட்டத்தால் பலன் அடைந்திருக்கின்றன தோல்வியின் போதும் உடல்நலிவுற்றிருந்த போதும் இந்த மனிதனால் எப்படி நகைச்சுவையாக கதைக்கமுடிந்ததென்று வியக்கிறேன் .. துன்பம் வரும் வேளையில் சிரிக்க சொன்னான் வள்ளுவன் இடுக்கண் வருங்கால் நகுக.. நம்மால் முடியுமா என்ன.. ஆம் நம்மோடு வாழ்ந்த வள்ளுவன் கலைஞர்பெருமகன் .. கலைஞர் செய்ததெல்லாம் தொலைநோக்கோடு காலங்கடந்தும் மக்களுக்கு பயனளிக்கும் திட்டமாய் இருந்தது .. இன்று இந்தியாவிற்கு காப்பீடு திட்டம் .. கலைஞரின் சிந்தனையில் உதித்தது .. இன்று வடமாநிலங்களிலும் மத்திய அரசும் செயல்படுத்த நினைக்கிற திட்டங்களை முப்பதாண்டுகளுக்கு முன்பே இவரால் செயல்படுத்த முடிந்ததென்றால் இந்த மக்களின் மீது சமூகத்தின் மீது கொண்டிருந்த பற்றும் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் செய்யவேண்டுமென்ற அவரின் எண்ணமும் நமக்கு விளங்கும் .. இந்திய அரசியல் கண்ட மாபெரும் தலைவர் திராவிடம் தந்த பெருந்தலைவர் இன்னும் நூற்றாண்டு பின்னிட்டாலும் கலைஞரின் புகழ் ஒலித்துக்கொண்டே இருக்கும் .. வாழ்க கலைஞர் புகழ் .. ஆலஞ்சியார்