..
சின்னவர் என்ற அடைமொழி சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது .. மக்கள் திலகத்தை தானே அப்படி அழைத்தார்களென சிலர்.. சில நெடிய பயணத்திற்கான முன்னுரையென சிலர் .. வாரிசு™ ஆக நிலைநிறுத்த முயற்சி என சிலர் .. ஒன்றும் மட்டும் உறுதி ..
எதுவும் எளிதில் கிடைக்காது அப்படி கிடைத்தால் நிலைக்காது ..
உழைப்பு ,கடும் உழைப்பு வேண்டும்
மக்கள் நம்பிக்கையை பெறவேண்டும் இவன் இதை செய்து முடிப்பானென மக்கள் நம்பவேண்டும் .. சரியானவன் இவனென மக்கள் மனதில் இடம் பெற வேண்டும் ..அப்போதுதான் பெயருக்கும் பெருமை பெற்றோர்க்கும் பெருமை ..
..
தஞ்சை சில இடங்களில் கொடியேற்றியும் சில கூட்டங்களில் பங்கெடுத்தும் வரும்வேளையில் சின்னவர் சத்தம் கேட்கிறது.. தஞ்சை வரலாறு கலைஞரின் அரசியல் பாதையில் மிக முக்கியமானது .. தஞ்சை தேர்தல் மிகப்பெரிய சாதனைக்கு இட்டு சென்றது .. தஞ்சை மிராசுகளின் (நிலக்கிழார்) கட்டுபாட்டில் பண்ணையார்களின் ஆதிக்கத்தில் இருந்ததை ஒற்றை மனிதனாக திமுக பக்கம் கொண்டுவந்து சரியான அடித்தளம் அமைத்து தந்தவர் கலைஞர் .. அன்றைய மாவட்ட செயலாளர் நீலமேகம் இங்கே எல்லாரும் "ஆண்ட" சொன்னதான் கேட்பார்கள் இங்கே கட்சியை வளர்ப்பது அவ்வளவு எளிதல்ல என்றபோது மக்களிடத்தில் சென்றவர் கலைஞர் .. ஊர் ஊராக சென்று கூட்டம் போட்டும் தெருமுனை பிரச்சாரம் அந்திவேளையில் கடைவீதிகளில் பரப்புரை என கட்டியமைத்தார் கலைஞர் ..
..
1962 தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது .. 57 ல் 15 பேர் வெற்றிபெற்று சட்டமன்றம் சென்ற போது இந்த 15 பேரையும் தோற்கடித்து காட்டுகிறேன் என "பெருந்தலைவர்" சொன்னார் ஆனால் கலைஞரை தஞ்சையில் தோற்கடிக்க முடியவில்லை .. கலைஞரை எதிர்த்து யாரை நிறுத்துகிறீர்கள் என கேட்டு பரிசுத்தநாடாரை பரிந்துரைத்து பெரியாரே காமராஜரை ஆதரித்து பிரசாரம் செய்யவந்தும் கலைஞரின் வெற்றி கலைஞரின் மகுடத்தில் சாதனையானது ..
பெரியார் பிரச்சாரம் செய்கிறார் .. கருணாநிதி கடும் உழைப்பாளி ஒரு வேலையை ஏற்றுக்கொண்டால் அதை முடிக்கும் வரை ஓயமாட்டான் என் நேரடி சீடன் என முதல் பத்துநிமிடம் புகழ்ந்து பேசினார் .. அருகில் இருந்த தேர்தல் பனிமனையில் அமர்ந்து கேட்டுக்கொண்டே குறிப்பெடுத்து பெரியார் தன் சீடனுக்கு பாராட்டு என துண்டு சீட்டை அச்சடித்து கூட்டம் முடிவதற்குள் அதை விநியோகம் செய்தார் .. பெரியார் மேடையில் அமர்ந்திருக்கும் போதே துண்டு பிரசுரம் அவரது கைக்கு போகிறது படித்துவிட்டு சிரித்துக்கொண்டே தன் அறைக்கு சென்றவர் ..மீண்டும் அதை எடுத்து படித்துவிட்டு கருணாநிதியை தோற்கடிக்க முடியாதென்றார் ..
..
கலைஞரிடத்தில் இருந்த உழைப்பு எதையும் முடித்துக்காட்டவேண்டுமென்ற வேட்கை,.கொண்ட கொள்கையில் உறுதியோடு மக்கள் பணியில் தொய்வின்றி பேராசான்கள் பெரியார் பேரறிஞர் பாதையில் வெற்றிகண்டவர், பகையறிந்து படையோட்டம் நடத்தியவர், எதிரிகள் துரோகிகள் வழிநெடுக நேர்நின்றும் புறம்நின்றும் தாக்கியபோதும் தளராது மக்களோடு இணைந்து ஜனநாயகத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டு இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டும் ஒளிவிளக்காய் திகழ்கிறார் ..
..
திராவிடப் பேராசான்களில் கரம்பிடித்து அறம் நின்று உழைப்பு உயர்வு தரும் நேர்மையும் நன்னெறியும் நிலைத்துநிற்கும் மக்கள் தொண்டில் எந்த வீழ்ச்சியும் இல்லாமல் தொடர்ந்து உழைத்தால் உயரத்தை எட்டலாம் அது நிலையானதென நமக்கு உணர்த்தி உயர்ந்து நிற்கிறார் தளபதியார் @Mkstalin
.. எதிரிகளே இல்லையென்றவர்கள் இருக்குமிடம் தெரியாமல் அழிவை நோக்கி நகர்கிறார்கள் ..இதோ தெளிவான கொள்கை தன்னலமற்ற சேவை ஓயாத உழைப்பு உயரத்தில் நிறுத்தியிருக்கிறது ..
..
மக்களிடம் செல்
மக்களோடு உறவாடு
மக்களோடு கலந்திரு ..
மக்களுக்காக உழை
உயரம் வசம் படும் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment