நிர்மலா சீதாராமன் ..
தெலுங்கானாவில் ரேசன் கடையில் செய்த அலப்பறை ..
அவர் வகிக்கும் பதவிக்கு அழகா?
மோடி படம் ஏன் இல்லை என்ற கேள்வி அவர் தன் விசுவாசத்தை காட்ட நினைத்ததன் வெளிபாடே தவிர நடந்துக்கொண்ட விதம் அவருக்கே உரிய அகம்பாவத்தை காட்டுகிறது .. ஒருவரின் மனதை அவர் குணத்தை முகம் காட்டும் என்பார்கள்
..
என்ன செய்திருக்கவேண்டும்
மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பவதை கூட தனியாக இருக்கும் போது கேட்டிருக்கலாம்
முறைபடி துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருக்கவேண்டும்
அதை தலைமை செயலாளர் எழுத்துபூர்வமாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவார் .. அதுதானே நடைமுறை .. ஆனால்
இவையாவும் செய்யமாட்டார்கள் செய்ய முடியாது ..மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட முடியாது தலையிட்டால் வேறுமாதிரி அது அரசியலாகும் அதனால் மாவட்ட ஆட்சியரை மிரட்டி ஸ்டண்ட் செய்கிறார் ..
..
மாநில அரசின் நிதி வசூல்தான் வருவாய்தான் ஒன்றிய அரசின் சக்கரம் சுழல முக்கிய அச்சாணி என்பதை அவர் அறிவார் .. மாநிலங்களுக்கு பங்கிட்டு கொடுக்கும் "குரங்கு" வேலைதான் இப்போது நடக்கிறது .. தமிழகம் போன்ற வரி வருவாய் மாநிலங்களின் பலத்தில் தான் பெரியமாநிலங்களில் நிதி நெருக்கடி சமாளிக்கபடுகிறது
..
இங்கே எதுவும் இலவசமில்லை
மக்களின் வரிப்பணம் அவர்களுக்காக செலவு செய்ய நியமிக்கபட்ட ஊழியர் அவ்வளவுதான் .. இது முடியாட்சி அல்ல குடியாட்சி .. பொதுவாழ்வில் அடிப்படைதன்மையே இன்முகம் தான் .. எளியவர்களுக்கு இயலாதவர்களுக்கு உழைக்க வந்திருக்கிறோம் என்ற நினைப்பு வேண்டும் .. தன் தகுதிக்கு மீறி
ஆடியவர்கள் இருந்த இடம் தெரியவில்லை என்பதுதான் வரலாற்றில் நெடுக காணலாம்
..
"கடுமொழி" வலிமையை தேய்க்கும் என்றான் வள்ளுவன்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கொள்கையாய்,செயலால் எதிர்த்தாலும், நாட்டின் நிதியமைச்சர் நீங்கள் ..
உங்கள் உடல்மொழியும்,சொல்லும் முகம் சுழிக்க வைக்கிறது.. இன்முகத்தோடு கதையுங்கள் .. எதிர்கருத்தையும் உள்வாங்குங்கள் .. ஜனநாயகத்தின் மிகப்பெரிய செயல் "செவிமடுத்தல்" ..
..
உங்கள் அரசை பார்த்தால்
கோமாளி அரண்மனைக்கு சென்றால் அரசனாகிவிடுவதில்லை அரண்மனை
சர்க்கஸ் கூடாரமாகிவிடும் என்ற துருக்கியபழமொழிதான் ஞாபகம் வருகிறது நிர்வாக சீர்கேடு அதைமறைக்க மதத்தை கையிலெடுக்கும் பாதை
எதிர்த்தால் அகங்கார பதில்
..
"அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று"..
என்றான் வள்ளவன்
ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈ.டுபடுத்தக் கூடாது..
ஆம்
இந்தியா கண்ட பலவீனமான நிதியமைச்சர் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment