Friday, September 9, 2022

இருவரும் 96 வயதில் மறைந்த ஆளுமைகள்  என இணையத்தில் கருத்து பேசபடுகிறது .. கருத்திற்கு மதிப்பளிக்கிறேன் .. 
ஆனால் 
இருவரையும் ஒப்பிடுவதே தவறு ..
..
#மகாராணிஎலிசபெத்
அரச குடும்பத்தில் பிறந்து  70 ஆண்டுகள் மகாராணியாக இருப்பதென்பது சதாரணவிடயமல்ல பல்வேறு நிகழ்வுகள், அவரின் தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் அவரை அலட்டியிருக்கிறது .. ஜனநாயக பரவல் அதிகரித்தபோதும் குடும்ப உறவுகளின் சதிராட்டமும் அவரை மேலும் பலம் பொருந்தியவராக மாற்றியதும் அவர் வந்த வழி எளிதானதால் முடிந்தது .. அதற்காக அவரின் ஆளுமையை அவரின் ஜனநாயகத்தின் நம்பிக்கையை மறுக்கவியலாது ..
..
அரசர்கள் மட்டுமே வரி வசூலித்த காலம் போய், அரசாங்கத்திற்கு அரச குடும்பம் வரி செலுத்தும் முறையையும் நடைமுறைப்படுத்தினார்  அதுமட்டுமல்ல தனது மாளிகைக்கு உட்பட்ட பகுதியை தனி நாடாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்தபோதும் கூட அதை பொது வாக்கெடுப்பு மூலம் எதிர்கொண்டார் உலகமே வியந்தது 
வானளாவிய அதிகாரங்கள் இருந்தும் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிக்கு தலை வணங்கினார் எல்லோரையும்/எல்லாவற்றையும் ஜனநாயகப்படுத்தும் அவரது அணுகுமுறை  உலகம் வியந்து பாராட்டியது ..
..
#கலைஞர் சுயம்பு ..
மிகவும் பின்தங்கிய சமூகத்திலிருந்து , போக்குவரத்து வசதிகூட சரியாக இல்லாத கிராமத்திலிருந்து கிளம்பிய வந்த சூரியன் .. மிகப்பெரிய பின்னணியோ பலமோ, உயர்சாதி பெருமையோ இல்லாமல், எதுவும் எளிதில் கிடைக்காத சூழலில் தானே சுயம்புவாய் வெளிவந்த மாமனிதர் .. தன் வாழ்நாளில் என்பதாண்டுகள் வெற்றி தோல்வி எல்லாம் தானே தேடியது .. எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும், புதிய பாதையை சமைத்தது.. தான் சார்ந்த சமூகமும் தன் இனமும் தன் மக்களுக்கும் உயரத்தில் ஏற்றிய ஏணி..
..
சுற்றி இனப்பகைவரின் சூழ்ச்சியும் தொடர்ந்து வேட்டையாடபட்ட போதும் தமிழினத்தை காத்து நின்ற சாமி .. ஒவ்வொரு ஊரும் இவரின் 
பாதம் பட்டிருக்கிறது .. எந்த ஊரில் எப்படிபட்ட வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் இவரின் பங்கு அதில் உண்டு .. துரோகத்தால் தாழே கிடந்த தமிழ்சமூகத்தை பகுத்தறிவு கொண்டு நவீன கட்டமைப்பை உருவாக்கி உயரத்தில் நிறுத்திய பெருமைக்குரியவர் .. இந்திய அரசியலில் பெருமைக்குரிய தகுதிக்குரிய நம்பிக்கையான மக்கள் பணியாளர் ..
..
துயரங்களும், சோதனைகளும், துரோகங்களும், தொடர் இன்னல்களை தந்த போதும்  
நெருப்பில் மின்னும் பொன்னாய் திகழ்ந்த பெருமகன் .. வாழ்நாள் முழுதும் "மக்கள் தொண்டு" எனும் கடமையாற்றிய பேரருளாளன் ..
விழும்பில் நின்று தவித்தோரை கரை சேர்த்தவன் .. 
"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலாய் " வாழ்ந்த ஞானி ..
இனம் மொழி பண்பாட்டிற்கு கேடுவந்தால் சுழன்றடித்த போர்வீரன் ..  
..
கலைஞர் ஆகசிறந்த ஜனநாயகவாதி .. 
ஆசிரியர் வீரமணி நம்மை விமர்சித்து விடுதலையில் எழுதியிருக்கிறாரே என்ற போது .. விமர்சித்தால் தான் அவர் வீரமணி இல்லையென்றால் அவர் ஈரமணி என்றார் .. கலைஞர் ..
ஆக சிறந்த அரசியல்வாதி எதிர்கருத்துகளுக்கு செவிமடுப்பவனாக இருக்கவேண்டும் .. 
சிறந்த தலைவனுக்கு அழகு தொண்டர்களின் உள்ளத்தை அறிந்தவனாக இருக்கவேண்டும் ..
சிறந்த ஆட்சியாளனுக்கு அழகு 
வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்தே சிந்திப்பவனாக செயல்படுபவனாக இருக்கவேண்டும் ..
கலைஞர் 
ஜனநாயகத்தின் இலக்கணம் 
கலைஞர் 
தலைமையின் இலக்கணம் 
கலைஞர் 
அரசியலின் இலக்கணம் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment